உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்! இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 90 பாலஸ்தீனியர்களின் சிதைந்த உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்னை இஸ்ரேல் காசாவிற்கு அனுப்பியுள்ளது எனினும் கொள்கலன்னில் உள்ளவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்களை இஸ்ரேல் முறையாக வெளியிடாத காரணத்தினால் அவற்றை பெறுப்பேடுப்பதற்கு ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சு மறுத்து விட்டது. இது குறித்து காசா சுகாதார அமைச்சின் ஊடக அதிகாரியான இயாத் கதீஹ் தெரிவிக்கையில் அடையாளம் தெரியாத சடலங்களுடன் ட்ரக் வண்டி காசாவுக்குள் வந்தமை இது ஐந்தாவது சந்தர்ப்பமாகும் என்றும் இனிமேல் சுகாதார அதிகாரிகள் எந்த ஒரு உடலையும் அடையாளம் காணாத நிலையில் ஏற்றுக்கொ…
-
- 0 replies
- 386 views
-
-
சென்னை: தற்போது சில புதிய கட்சிகள் (விஜய்காந்த், சரத்குமார் கட்சிகள்) புற்றீசல் போல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பற்றியெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. மக்களும் அக்கட்சிகளை பற்றி பொருட்படுத்தவும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என கூறியுள்ளார். எம்ஜிஆரின் 91வது பிறந்த தின விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். பக்தர்களும், அதிமுகவினரும் கொண்டாடுகின்றனர். ஊர்கள் தெரும், தெருக்கள் தோறும் எம்.ஜி.ஆர் படங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர். இனிப்புகள் வழங்கியும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், எம்ஜி…
-
- 0 replies
- 921 views
-
-
போதைப்பொருள் கடத்தலின் புகலிடமாக வெனிசூலா [23 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க அதிகாரிகள் கடும் குற்றச்சாட்டு போதைப்பொருளான கொகேய்ன் வர்த்தகத்திற்கு வெனிசூலா ஜனாதிபதி ஹியுகோ சாவேஷ் பெரிதும் உதவுவதாக அமெரிக்க போதைப்பொருள் தடுப்பிற்கான உயர்மட்ட அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அயல்நாடான கொலம்பியாவில் உற்பத்தி செய்யப்படும் கொகேய்னை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புகலிடமாக வெனிசூலா விளங்குவதாக அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள வெனிசூலா போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் ப…
-
- 0 replies
- 636 views
-
-
வெனிசுவேலாவில் விமான விபத்து- 46 பேர் பலி வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2008 காரகஸ் (வெனிசுவேலா): வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 46 பயணிகள் பலியாயினர். நேற்றிரவு வெனிசுவேலாவின் மெரிடா நகரில் தலைநகர் காரகஸ்சுக்கு புறப்பட்ட சாண்டா பார்பரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் திடீரென மாயமானது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணி தொடங்கியது. இந் நிலையில் அந்த விமானம் ஆண்டஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது உறுதியாகியுள்ளது. இந்த ஏடிஆர்-42 ரக விமானத்தில் மொத்தம் 43 பயணிகளும், 3 விமான சிப்பந்திகளும் இருந்தனர். விபத்தில் அனைவரும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. விபத்து நடந்துள்ள பகுதி கடும் குளிர் பிரதேசம் என்பது குறி்ப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 717 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹுசம் அசல் பதவி, பிபிசி அரபு சேவை, அமான் நகரிலிருந்து சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், ஜோர்டானியரான பஷீர் அல்-படாய்னே, 38 ஆண்டுகளாக சிரியாவில் காணாமல் போன தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி சரிந்த பிறகு, ஜோர்டானின் இர்பிட்டை சேர்ந்த 83 வயதான பஷீர் அல்-படாய்னே, தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். கடந்த 1986ஆம் ஆண்டு, ஒசாமா தனது பள்ளியின் கடைசி ஆண்டைத் தொடங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் ஒரு வாரம் சிரியாவுக்கு சென்றிருந்தார். …
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
சீனவோடு நெருங்கிய உறவுகளைப் பேண விரும்பும் எதிர்க்கட்சி வேட்பாளர் தாய்வானின் ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். கடசி நேரத்தில் திபெத் நிகழ்வுகளை வைத்து ஆளும்கட்சியின் வேட்பாளர் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த போதும் தாய்வான் தேர்தல் முடிவுகள் மேற்குலகிற்கு சிறு ஏமாற்றத்தை தருவதாக இருக்கும். http://www.nytimes.com/2008/03/23/world/asia/23taiwan.html http://www.nytimes.com/2008/03/21/world/asia/21taiwan.html
-
- 0 replies
- 755 views
-
-
மாற்றியளிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ்! 2 நிமிடம் மட்டும் பிரபஞ்ச அழகியான கொலம்பியா அழகி! 2015-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் செய்த தவறால், கொலம்பியா நாட்டை சேர்ந்த அரியட்னா குடியர்ரெஸ், வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே பிரபஞ்ச அழகியாக இருந்தார். முதலில் தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, கொலம்பிய அழகியை பிரபஞ்ச அழகியாக அறிவித்து விட்டார். அவரும் மகிழ்ச்சியில் திளைக்க, சற்று சுதாரித்த தொகுப்பாளர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டு, தான் தவறாக அறிவித்து விட்டதாகவும், உண்மையிலேயே பட்டம் வென்றது ஃபிலிபைன்ஸ் சேர்ந்த பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச்தான் என அறிவிக்க, உர்ட்ஸ்பட்ச் சற்றுநேரம் செய்வதறியாமல் திகைத்தார். பாவம் அரியட்ன…
-
- 8 replies
- 1.7k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுஅலூஃப் பதவி, பிபிசி செய்திகள் 14 ஜனவரி 2025 காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தம் செய்பவர்கள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர். இஸ்ரேலும் ஹமாஸும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி நன்கு அறிந்த பாலத்தீன அதிகாரி ஒருவர், இஸ்ரேல் – பாலத்தீன போரில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் ஒரே கட்டடத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பிபிசியிடம் கூறினார். …
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
பெல்ஜியம்: புத்தாண்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேக நபர்கள் கைது புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது முக்கியச் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் இரண்டு சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிறு மற்றும் திங்களள் ஆகிய நாட்களில் இவர்களை பிடித்து, தடுத்து வைத்துள்ளதாக அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பயங்கரவாத செயல்களுக்காக ஆட்களை சேர்த்தது மற்றும் தாக்குதல்களுக்கு திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பயங்…
-
- 0 replies
- 517 views
-
-
அமெரிக்கவில் மாற்றுமொரு விமான விபத்து அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நொடிகளில் இந்த விபத்து எற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர் எம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் எம்புலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர் உடன் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப…
-
- 1 reply
- 267 views
- 1 follower
-
-
பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி (Zozibini Tunzi) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நேற்று இடம்பெற்றது. இதில் இறுதி சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 7 பெண்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டார். பிலிப்பைன்சின் முன்னாள் உலக அழகியான கேட்ரினா கிரே துன்சிக்கு பிரபஞ்ச அழகிக்கான கீரிடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகியாக துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர் மேடையில் அவரது பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. ‘என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அழகானவர்கள்…
-
- 0 replies
- 337 views
-
-
ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு! ஹவுத்தி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் வழங்கும் இந்த மூலத்தை அகற்றவும், அவர்களின் சட்டவிரோத வருவாயை இழக்கச் செய்யவும் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. எனினும், வடமேற்கு ஏமனை ஆளும் ஹவுத்தி தலைமையிலான அரசாங்கம், அந்த முனையம் ஒரு பொதுமக்களை கொண்ட பகுதி என்றும், அந்தத் தாக்குதல் “முழும…
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
[size=4]சிரிய தலைநகரில் மோதல்கள் உக்கிரம் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு இதுவரை சிரியாவில் 19,000 பொதுமக்கள் பலி[/size] [size=2] [size=4]டமாஸ்கஸ்: சிரியாவின் இரு பாரிய நகரங்களான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் இடம்பெறும் மோதல் சம்பவங்களினால் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்து அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சிதரும் நிலையில் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை தேடிச் செல்கின்றனர். [/size] [size=4]ஹெலிகொப்டர்கள் கனரக போர் வாகனங்கள் மூலம் அரச படையினர் போராளிகளின் இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையேயும் மிகமோசமான மோதல்கள் இடம்பெற்றுள்ளது. இருதரப்பிலும் கணிசமானளவில் இழப்புகள் ஏற்பட்…
-
- 0 replies
- 582 views
-
-
சென்னை: கூட்டணி முறிந்ததாக திமுக அறிவித்ததை பாமகவினர் இனி்ப்பு வழங்கி கொண்டாடினர். அதே போல திமுகவினரும் பாமக போனதை வெடி போட்டு கொண்டாடினர். 'இனிமேல்தான் நம் அரசியல் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கப் போகிறது' என்று கூறியபடி பாமகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகமாய்க் கூறியபடி ஆடினர். சிலர் உற்சாக மிகுதியில் கிலோ கிலோவாக இனிப்புகளை வாங்கி சக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர். சென்னையிலிருந்து வெளியூர் சென்ற பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அண்ணா அறிவாலயத்துக்கு எதிரிலுள்ள தெருக்கள் மற்றும் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தேனாம்பேட்டையின் பெரும்பாலான பகுதிகளில் பாமக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன. சி…
-
- 2 replies
- 1k views
-
-
துருக்கியின் மிகப் பெரிய பத்திரிகையான Zaman (ஜமான்), அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படுவதாக, நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் காவல்துறையினர் அந்தப் பத்திரிகை அலுவலகத்தை சோதனையிட்டுள்ளனர்.காவல்துறையினர் Zaman பத்திரிகை அலுவலகத்தை சோதனையிட்டுள்ளனர்அந்த ஊடகம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வெள்ளிக்கிழமையைன்று பத்திரிகை அலுவலகத்தின் வெளியே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீச்சியடித்தும் அவர்களைக் கலைப்பதற்கு காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர், `தாம் ஊடக சுதந்திரத்திற்காக சண்டையிட போவதாக' எழுதப்பட்ட பதாகை ஒன…
-
- 0 replies
- 289 views
-
-
சோமாலியாவில் அல்- ஷபாப் தீவிரவாதிகள் மீதான தாக்குதல்களில், சோமாலிய துருப்பினரோடு இணைந்து அமெரிக்க படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பில் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவித்த சோமாலிய உளவுத் துறை அதிகாரி, சோமாலிய துருப்பினரோடு இணைந்து அமெரிக்க படையினர் நேற்று முன்னெடுத்த தாக்குதலானது, அல்-ஷபாப் தீவிரவாதக் குழுவின் உயர்நிலை அதிகாரி ஒருவரை இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.இது தொடர்பில் முன்னர் செய்தி வெளியிட்டிருந்த அல்-ஷபாப் தீவிரவாத குழு, வெளிநாட்டு படைகள் நடத்திய தாக்குதலுக்கு தாம் பதில் தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட குறித்த தாக்…
-
- 0 replies
- 208 views
-
-
[size=2]தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகி வாதாடி வரும் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா திடீரென இந்த வழக்கில் இருந்து விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=2]முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.[/size] [size=2]கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் ஆச்சார்யா. கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜரானதால் தலைமை வ…
-
- 0 replies
- 602 views
-
-
Image copyrightRIA Novosti சிரியாவிலிருந்து வெளியேறும் ரஷ்ய போர் விமானங்களின் முதல் தொடரணி ரஷ்யாவை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்ய தலையீட்டின் முக்கிய நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா தமது படைகளை வெளியேற்றத்தொடங்கியுள்ளது என்றும் அதிபர் புட்டின் நேற்று திடீரென அறிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இன்று விடியற்காலை இராணுவ உபகரணங்கள் சரக்கு விமானங்களில் ஏற்றப்படுவதை ரஷ்ய அரச ஊடகம் ஒளிப்பரப்பியுள்ளது. அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மோதலின் அலையை திசை திருப்பியுள்ளன என்று தெரிவித்த அதிபர் புட்ட்டின், தற்போது அமைதி பேச்சுக்கள் ஆரம்பிக்க ஏ…
-
- 0 replies
- 371 views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்! ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதன்போது குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அம்புலன்ஸ்களையும் பொலிஸ் ஹெலிக்கொப்டர் ஒன்றையும் காணமுடிவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபானசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸார் இனந்தெரியாத எண்ணிக்கையானவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பி…
-
- 9 replies
- 1.5k views
-
-
பெங்களுரில் 7 தொடர் குண்டு வெடிப்பு: 5 பலி! 20 பேர் காயம் வெள்ளி, 25 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] இந்தியாவின் பெங்களுர் மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை அடுத்து அடுத்து வெடித்த 7 குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 20 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முதலாவது குண்டு பெங்களுரில் மதியம் 1.45 மணியளவில் ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா சோதனைச்சாவடி அருகே உள்ள போரம் மால் என்ற இடத்தில் முதல் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளிகளில் நாயந்தஹள்ளி, சிவாஜி நகர், கோரமங்களா-ஆடுகோடி, லாங்போர்ட்டவுன் உள்ளிட்ட 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. pathivu.co
-
- 9 replies
- 1.3k views
-
-
பிரித்தானியாவும் அடுத்த சில வாரங்களில் இத்தாலி போன்று முழுமையாக இழுத்து மூடப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிரித்தானியா தற்போது வட இத்தாலியின் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள பேராசிரியர் பிரான்கொய்ஸ் பலொக்ஸ் குறிப்பிட்டுள்ளார். வட இத்தாலியின் நிலைமை பிரிட்டனின் நிலைமையை விட மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இத்தாலி முற்றாக முடங்கியுள்ள நிலை போன்று பிரித்தானியாவிலும் உருவாகலாம் என தெரிவித்துள்ளார். இதேவேளை பிரித்தானியாவின் அரச வைத்தியர் ஒருவர் ஆயிரக்கணக்கான மக்கள் வைரசிஸ் தொற்றிற்கு உள்ளாகலாம் என தெரிவித்துள்ளார். எழுத்தாளரும் மருத்துவருமான அடம் கே இரண்டு வாரங்களில் பிரித்தானியா இத்தாலியின் நிலையை…
-
- 0 replies
- 407 views
-
-
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் - 23 பேர் பலி 29 Aug, 2025 | 08:48 AM உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரேன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் அலுவலகங்கள் சேதமடைந்தன. https://www.virakesari.lk/article/223650
-
- 0 replies
- 169 views
-
-
புதுடெல்லி: அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய் அரசுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் விலகல், அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் மத்திய அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, பரபரப்பான அரசியல் சூந்நிலைகளுக்கு ம்த்தியில் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டிக் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் அவரது தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங்,மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி,குலாம் நபி …
-
- 3 replies
- 391 views
-
-
கொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா! கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறிவிட்டதாலும் அதைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி வேண்டும் என்பதாலும் ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை விட்டுவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, தனக்குத் தேவையான முகக் கவசங்கள் உள்ளிட்ட 50 சதவிகித தனிநபர் பாதுகாப்பு உபகரணங்ளுக்கு சீனாவை நம்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் அடிக்கடி பயன்படுத்தும் ‘வுஹான்’ வைரஸ் என்ற சொல் அமெரிக்காவின் அகராதியில் இருந்து மறைகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இடையில் மிகுந்த ஒத்துழைப்பு தேவை என்பதால் சீனாவை குறிவைத்து பேசப்பட்ட குறித்த அ…
-
- 0 replies
- 295 views
-
-
வீரகேசரி நாளேடு 9/28/2008 - சென்னை, இலங்கைத் தமிழருக்கு எதிராக மத்திய அரசு செயற்படுகின்றது. இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்ட கருணாநிதி, இனிமேலாவது தனது தவறை உணரவேண்டும் என பா.ஜ.க.பொதுக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சேலத்தில் பா.ஜ.க. பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன. அவற்றின் விபரம் வருமாறு: மத்தியில் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகிறது. இப்பிரச்சினை குறித்து கவலைப்படாமல் தமிழக முதல்வர் கருணாநிதி மௌனம் காக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இப்பி…
-
- 4 replies
- 1.4k views
-