Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜூன் 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ)க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று புதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்கள் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுரை மேலூரைச் ச…

  2. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பாரதீய ஜனதாவின் தலைமையை விமர்சித்ததற்காக மூத்த வழக்கறிஞரும், பாரதீய ஜனதா எம்பியுமான ராம் ஜெத்மலானி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராம்ஜெத்மலானி கூறியதாவது:- சமூக விரோதிகளிடம் உள்ள கருப்பு பணம் குறித்து பேசுவதற்கோ, அதை திரும்ப பெறுவதற்கோ பாரதீய ஜனதா கட்சியில் சிலர் விரும்பவில்லை. கட்சிக்குள்ளே சில விரும்பத்தகாத சக்திகள் இருக்கின்றன. அவர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றவே நான் விரும்புகிறேன். அந்த விரும்பத்தகாத சக்திகள் தான் நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம். அவர்களை வெளிக்காட்டும் வரை நான் ஓயப்போவதில்லை. நான் தொடங்கிய கருப்பு பண விவக…

    • 0 replies
    • 363 views
  3. பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனர் நியமனம் குறித்த பாஜகவின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியை விமர்சித்தது ஆகியவற்றுக்காக அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கடந்த நவம்பர் மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்படி இருந்தும் அவர் இந்த மாத துவக்கத்தில் நடந்த பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு வந்து ஊழல் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வன்மையாக ஏன் எதிர்க்காமல் உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவரை கட்சியில் நீக்கிவிட தலைவர்கள் நினைத்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் காரணத்தைக் …

  4. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் லெபனான், துருக்கி போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். சிரியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதம் நடத்த வேண்டும் என அமெரிக்கா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகள் கடந்த 24ம் தேதி கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து, ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் நாளை (29ம் தேதி) கூடுகிறது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் உயர் ஆணையாளர் நவி பிள்ளை கூறியதாவது:- சிரியாவில் அரசு தரப்பில் இருந்து மட்டுமல்ல... போராளிகள் தரப்பிலும் மனித உரிமைக…

    • 2 replies
    • 490 views
  5. இந்தியாவில் சத்தீஷ்கார் (Chhattisgarh) மாநிலத்தில் மாவேஸ்டுக்கள் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த மாநில காங்கிரஸ் உள்ளூர் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளதோடு.. மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மகன் கடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரடி என்று காங்கிரஸ் தலைவர் சோனியா இத்தாக்குதலை கண்டித்துள்ளார். காங்கிரஸார் இச்செய்தி கேட்டு இடிந்து போயுள்ளார்களாம். http://www.bbc.co.uk/news/world-asia-india-22667020

  6. இந்தியாவுக்கு எதிராக 3 முறை பாகிஸ்தான் போர் தொடுத்திருக்கும், ஆனால் பாகிஸ்தான் நாட்டின் அணுசக்தி, அணு ஆயுதத் திறமைகளைக் கண்டு அந்தப் போர்கள் தவிர்க்கப்பட்டன என்று பாகிஸ்தானை ஒரு சக்தி வாய்ந்த அணுசக்தி நாடாக உருவாக்கியதாகக் கூறப்படும் விஞ்ஞானி டாக்டர். சமர் முபாரக்மன்ட் தெரிவித்துள்ளார். இவர் ஒரு மூத்த அணு விஞ்ஞானி ஆவார். பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறியதில் இவரது பங்கு அபரிமிதமானது என்று தெ நேஷன் என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது. நேஷன் பத்திரிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: டாக்டர் முபாரக்மன்ட் சமீபத்தில் தி நேஷன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் 3 முறை இந்தியாவுடன் போர் தடுக்கப்பட்டதற்கு காரணம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு சரிசமமான அணுசக்தி நாடாக இருந்த…

  7. மேற்கு வங்கத்தில் ஹௌரா பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலை ஒட்டி திரிணாமுல் காங்கிரசின் தலைவரும் முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி அங்கு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது மத்திய அரசு குறித்து மம்தா கூறியதாவது:- மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. எங்களுக்கு எதிராக சி.பி.ஐ-யை ஏவி விட்டு மிரட்டல் விடுத்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறிய பிறகு எங்கள் மீது பழிவாங்கும் போக்கை காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்து வருகிறது. எனது அரசுக்கு எதிராக காங்கிரசும், சி.பி.ஐ-எம் கைகோர்த்து செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களின் சதித்திட்டம் செல்லுபடியாகது. கடந்த 34 வருடங்களாக நான் மிரட்டப்ப…

    • 0 replies
    • 412 views
  8. இந்திய எல்லைப் பகுதிக்குள் மீண்டும் சீனப்படைகள் அத்துமீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லடாக் பகுதியில் முகாம் அமைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சை இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உதம்பூர் அருகே உள்ள சிரி ஜாப் பகுதியில் தற்போதைய எல்லைக்கோடு பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் செல்லும் போது சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனப்பிரதமரின் இந்திய வருகைக்கு இரு நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் லடாக் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் 14 கம்பெனிகள் உத்தேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தங்கள் பணிகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப…

    • 5 replies
    • 680 views
  9. Financial bubbles creating conditions for new crash உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் முழுமையான நிலைமுறிவிற்கு உறுதியான அடையாளமாக நெருக்கடியை தடுக்க கொண்டுவரப்பட்ட அதே நடவடிக்கைகள்தாம் 2008 இன் அளவை விட அதிகமாக ஒரு நிதியக்கரைப்பிற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக உலகின் பெரிய மத்திய வங்கிகள் 7 டிரில்லியன் டாலர்களை நிதியச் சந்தைகளில் உட்செலுத்தியுள்ளன. அதன் நோக்கம் பொருளாதார மீட்சிக்கு அது தூண்டுதல் கொடுக்கும் என்பதாகும். ஆனால் உலகெங்கிலும் இருந்து வரும் பொருளாதாரத் தரவுகள் இது ஒரு தோல்வி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதை குறிக்கின்றன. விலைவாசி அளவுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் மிகவும் முக்கியமானவை. இவை “சாதாரண” சூழலில் மீட்பிற்கு அடையாளமான விலை …

  10. மும்பை: மும்பை எரவடா சிறையில் நடிகர் சஞ்சய் தத்துக்கு பைண்டிங், கோப்புகளை (ஃபைல்) பராமரிக்கும் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தண்டனைப் பெற்று மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார் பிரபல நடிகர் சஞ்சய் தத். அங்கு இவருக்கு சமையல் செய்யும் வேலை ஒதுக்கப்பட்டது. ஆனால் உயிருக்கு ஆபத்து என்று கூறி வேறு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும், வேறு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சஞ்சய் தத் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து சஞ்சய் தத் எரவடா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இங்குதான் அவர் அடுத்த 42 மாதங்கள் இருக்க வேண்டும். இந்தச் சிறையில் சஞ்சய் தத்துக்கு மிகவும் பாதுகாப்பு மிகுந்த இடத்தில், அறைக்குள் அமர்ந்…

  11. பாதுகாப்பு படையினர் மீது பெருந் தாக்குதல்களை நடத்தி வந்த மாவோயிஸ்டுகள் இப்போது காங்கிரஸ் தலைவர்களை இலக்கு வைத்து இருக்கின்றனர். இதற்கு காரணம் காங்கிரஸ் உருவக்கிய சல்வா ஜூதும் என்ற அமைப்புதான்! ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா என விரிந்து பரந்து கிடக்கும் தண்டகாருண்ய காடுகளும் பழங்குடி மக்களும்தான் மாவோயிஸ்டுகளின் வலிமை வாய்ந்த பிரதேசம்.. இதில் குறிப்பாக சத்தீஸ்கரின் தண்டேவடா, பஸ்தர் பிரதேசங்கள் மாவோயிஸ்டுகளின் கொடி பறக்கும் கோட்டை... இதேபோல்தான் இதர மாநிலங்களிலும் பழங்குடி இன மக்கள்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதார பலம்.. இந்த ஆதார பலத்தை சிதைக்கும் முயற்சியாகத்தான் 1991ல் உருவானது ஜன் ஜாக்ரன் அபியான்... அதாவது நிலமற்ற பழங்குடி மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கும் இயக…

  12. அமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம், எங்கிருந்தோ வந்த செல்கள் விழா நடந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தன. ஜனாதிபதி தீவிரவாதிகளை ஒழிக்க காடுகளுக்குப் போக முன்னர் அவர்களாகவே தலைநகருக்கு வந்துவிட்டனர். இது நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. தலைநகரின் மத்தியில் பணக்காரக் குடும்பங்கள் தமது ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை நடத்தும் மண்டபம் குண்டுவெடிப்பில் சேதமாகியது. இன்னொ…

  13. கொலம்பியாவில் அரசாங்கத்திற்கும் இடதுசாரி ஃபார்க் இயக்கத்தினருக்கும் இடையில் கடந்த 6 மாத காலத்துக்கும் அதிககாலம் நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, இரு தரப்பினருக்கும் இடையே நில சீர்திருத்தம் தொடர்பான இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. 'கிராமப்புற கொலம்பியாவின் அதிரடி மாற்றத்துக்கு இந்த உடன்பாடு வழிவகுக்கும்' என்று இருதரப்பும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பொருளாதார மற்றும் சமூக ரீதியான அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டுவரவும் ஏழை விவசாயிகளுக்கு காணிகளை வழங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கோரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்கும் அதிக காலமாக தொடர்ந்த உள்நாட்டு மோதலை முடித்துவைத்துள்ள அமைதிப் பேச்சுக்களில் பெர…

  14. அக்னி நட்சத்திர வெயில் வடமாநிலங்களில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் அனல் காற்றை கக்கி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 108 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியது. ஆனால் ஆந்திராவில் குறைந்த பட்சமாக 115 டிகிரி வெயில் அடிக்கிறது. கம்மம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று 118 டிகிரி வெயில் பதிவானது. இதற்கு அடுத்தப்படியாக விசாகப்பட்டினத்தில் 116 டிகிரி வெயில் அடித்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே அனல் காற்று வீசுகிறது. இரவு வரை வெப்பம் குறையவில்லை. வெயிலின் கொடூர தாக்குதலுக்கு 3 நாளில் 443 பேர் பலியானார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 544 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர். அதிகப…

  15. புதிய உலக ஒழுங்கும், வூலிச் தாக்குதலும், நிறவெறியும் : நிவேதா நேசன் ஆங்கிலேயர் பாதுகாப்புக் கழகம் (English Defence League -EDL) என்ற நிறவெறி அமைப்பு பிரித்தானியாவில் வெவ்வேறு பகுதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பலர் கலந்துகொண்டுள்ளனர். வூலிச் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமிய மசூதிகள் மீதாதான தாக்குதல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. நியுகாசில் என்ற பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1500 இலிருந்து 2000 வரையானவர்கள் கலந்துகொண்டதாக போலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்லாமியர்களுக்கு எதிரான சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன, ‘யாருடைய தெருக்கள், எங்களுடையது’ என்ற சுலோ…

  16. ஜன்தந்ரா' என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான ரதயாத்திரை செய்து வரும் அன்னா ஹசாரே, தனது 2ம் கட்ட யாத்திரையை உத்தராகாண்ட் மாவட்டத்தில் உள்ள ருத்ரபூரில் நேற்று நிறைவு செய்தார். ருத்ரபூரில் கூடியிருந்த தொண்டர்களிடையே அன்னா ஹசாரே பேசியதாவது:- இன்றைய ஆட்சி அதிகாரம் எல்லாம் கரைபடிந்தவர்களின் கையில் உள்ளது. நமது எம்.பி.க்களில் 163 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும். இந்த ஊழல் ஆட்சி முறையை மாற்றியமைக்க நீங்கள் சபதமேற்க வேண்டும். நேர்மையானவர்களுக்கு ஓட்டு போட்டு சீர்கெட்டு போன ஜனநாயகத்தை நாம் தூய்மைப்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இளைஞர்கள் பெரிய அளவில் பங்கேற்க வேண்டும். ஊழலை எதிர்த்து நான் போராடி வர…

    • 0 replies
    • 540 views
  17. இந்தியரான டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46) என்பவர் தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக் வைத்திருந்தார். இவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெறவந்த இளம்பெண் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார். அவருடைய கிளினிக்கை போலீஸார் சோதனையிட்டபோது பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்ம உறுப்புகள் ஆகியவற்றை டாக்டர் பரிசோதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் அவரது கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தன. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதைப்போல வாட்ச் கேமராவில் இந்த ஆபாச காட்சியகளை வீடியோவாக பதிவு செய்தது கண்டுபிடிப்பு. பகலில் பதிவு செய்த வீடியோ காட்சிகளை, இரவில் தனிமையில் ரசித்து பார்ப்பாராம். இவரா…

  18. புதுடெல்லி: கட்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வோரை ஒருபோதும் நான் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இது விஷயத்தில் சோனியா காந்தி போன்று மென்மையான நடந்துகொள்ள மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு எம்.எல்.ஏக்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடிவரும் ராகுல் காந்தி, டெல்லி பகுதியைச் சேர்ந்த சட்டப் சஐ உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசுகையில் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்த அவர்," கட்சியில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.…

  19. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் முன்னதாக மூடப்பட்டிருந்தன. தற்போது தெற்கு- ஓடுபாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு- ஓடுபாதை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது. BA762- ஹீத்ரோ- ஆஸ்லோ ( நார்வே) விமானம் ஹீத்ரோவுக்கு மீண்டும் திரும்பியழைக்கப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. விமானம் புறப்பட்டு சற்று நேரத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த அவசர தரையிறக்கம் நடந்துள்ளது. 75 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்றும் இது தொடர்பில் முழுமையான விசாரணை இடம்பெறும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நேரப்படி, காலை 9 மணியள…

    • 2 replies
    • 629 views
  20. வான்வெளியில் பாகிஸ்தான் விமானத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து இருவர் கைது' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 மே, 2013 - 13:39 ஜிஎம்டி பிரிட்டனின் வான்பரப்புக்குள் வந்த பயணிகள் விமானமொன்றுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை அடுத்து, அதனை வழி மறித்த போர் விமானங்கள் அவசரமாக வேறு விமான நிலையத்தில் தரையிறக்கின. பிரிட்டனின் வான்பரப்புக்குள் பறந்த பாகிஸ்தான் இண்டர்நாஷனல் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமொன்றுக்குள் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை அடுத்தே அதனை வழி மறித்து பாதுகாப்பு வழங்க பிரிட்டிஷ் விமானப்படைக்குச் சொந்தமான டைபூன் ஜெட் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. பாகிஸ்தானில் லாகூரில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர் விமானநிலையத்துக்கு சென்று கொண்டிருந்த இந்த விமானம் இந்த விவகாரத்தை அடுத்த…

  21. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பாண்டிங் நகரில் என்.பத்மநாபன் (வயது 44) என்ற தமிழ் வக்கீலுக்கு சொந்தமான பண்ணை உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி அங்கு சென்ற அழகுக்கலை பெண் தொழில் அதிபர் சோசிலாவதி (வயது 47) உள்ளிட்ட 4 பேரை காணவில்லை. சில நாட்கள் கழித்து அவர்களின் எலும்புகள் அந்த பண்ணையில் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து ரத்த மாதிரியும் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பத்மநாபனும், அவருடைய பண்ணை ஆட்களும், தமிழர்களுமான டி.தில்லையழகன் (22), ஆர்.மதன் (23), ஆர்.காத்தவராயன் (33) ஆகியோரும் சேர்ந்து, காணாமல் போன 4 பேரையும் கொலை செய்து எரித்து இருப்பது தெரிய வந்தது. 4 பேரின் உடல் பாகங்களையும் அங்குள்ள நீரோடையில் வீசி உள்ளனர். சோசிலாவதியுடன் கொல்லப்பட்டவர்க…

  22. கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று ஆபரேஷன் செய்து போலந்து டாக்டர்கள் சாதனை போலந்து நாட்டின் ரஸ்லா பகுதியை சேர்ந்தவர் கிரஸ்கோர்ஸ் (33). கல் உடைக்கும் ஆலையில் வேலைசெய்யும்போது, எதிர்பாராதவிதத்தில் அவருடைய முகத்தை டிரில்லிங்கி மெஷினின் கூரிய முனைகள் பதம் பார்த்தன. முகம் சின்னாபின்னமாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக க்ளிவைஸ் நகரில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டு வரப்பட்டார். வேறொருவரின் முக தோலை பொருத்தி முகம் மாற்று ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவரை பிழைக்க வைக்க முடியும் என்ற நிலை உருவானது. புதிய முகத்தை’ ஒரு போர்வை போல கிரஸ்கோர்சின் முகத்தில் டாக்டர்…

  23. டொரண்டோவில் உள்ள Lake Ontarioவில் ஒரு இளம்பெண்ணின் பிணம் பிளாஸிக் பேக் ஒன்றில் அடைத்து மிதந்து கொண்டிருந்ததை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். Lake Ontarioவில் நேற்று பக, 12 மணியளவில் ஒரு பிளாஸ்டிக் பேக் ஒன்று மிதந்து கொண்டிருந்ததை பார்த்த டொரண்டொ போலீஸார் அதை கைப்பற்றி திறந்து பார்க்கையில் அதில் ஒரு இளம்பெண்ணின் பிணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த பிளாஸ்டிக் பேக் Yonge Street and Queen’s Quay என்ற பகுதியில் சுமார் 30 மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்ததாக Const. Victor Kwong அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதோடு அந்த பெண்ணின் பிணம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறினார். மேலும் ப…

    • 0 replies
    • 323 views
  24. நைஜீரிய தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் பலி இராணுவ பாசறை மற்றும் பிரான்ஸ் அரசால் நடத்தப்படும் யுரேனியம் சுரங்கத்தின் மீது நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தற்கொலை படை நேற்று நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் பிரெஞ்சு படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முஜ்வா தீவிரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் அகாடேஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மற்றும் அர்லிட் பகுதியில் உள்ள அரேவா யுரேனியம் சுரங்கம் ஆகிய இடங்களில் முஜ்வா இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 16 வீரர்கள் படு…

    • 0 replies
    • 406 views
  25. லண்டணில் அப்பாவில் ராணுவ வீரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ராணுவ முகாமிற்கு காரில் சென்று கொண்டிருந்த இராணுவ வீரரை வழிமறித்த பயங்கரவாதிகள் இருவர், அவரை கீழே இழுத்து போட்டு ஆட்டின் கழுத்தை அறுப்பது போல் அறுத்து கொன்றனர். இதை நேரில் பார்த்த இங்கிரிட் லோயா - கென்னட் என்ற பெண், பயங்கரவாதிகளிடம் சென்று எதற்காக இப்படிச் செய்தீர்கள்?'' என, கோபமாக கேட்டார். ஆப்கன் முஸ்லீம் இளைஞர்கள் சாவுக்கு காரணமான இங்கிலாந்து ராணுவ வீரர்களை கொல்வதே தங்கள் லட்சியம் என பதிலளித்தனர் பயங்கரவாதிகள். இதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டதால், பயங்கரவாதிகள் துப்பாக்கியை காட்டி கூட்டத்தினரை மிரட்டினர். அப்பொழுது அங்கு வந்த போலீஸார் பயங்கரவாதிகளின் காலில் சுட்டு, சுற்ற…

    • 1 reply
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.