Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=3] சோனியா காந்திக்கு நினைவு தினம் என்று செய்தி வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கேலிக் கூத்து.[/size] [size=3] அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் மறைந்த இந்திய நாட்டு பிரதமரின் நினைவு தினம். இன்றோடு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிறது. இந்த நினைவு நாளை தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சியினர் அனுசரித்துள்ளனர். இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிட்டது. அந்த செய்தியில் இந்திரா காந்திக்கு பதிலாக அன்னை சோனியா காந்தி என்று அவர்கள் தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளனர். இது பத்திரிக்கையாளர்கள் நடுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த அறிக்கை அதிகமாக பகிரப்பட்டு வருகிறது .தமிழ்நாடு காங்கிரஸ் அ…

    • 0 replies
    • 795 views
  2. பெங்களூருக்கு இன்று பயணம் மேற்கொண்ட கனடியப் பிரதமர் ஹாப்பர் அவர்கள் அங்குள்ள சோமேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு, பெங்களூரில் கனடாவிற்கான துணைத் தூதரகத்தையும் திறந்து வைத்துள்ளார். இந்து சமய முறைப்படி பாதணிகளைக் கழற்றி விட்டு கோயில் பிரகாரத்திற்குள் சென்ற ஹாப்பரிற்கு சோமேஸ்வர ஆலய பிரதமக் குருக்கள் சால்வை போர்த்தியும், மலர்மாலையணிந்தும் வரவேற்றார். அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற விசேட பூசைகளிலும் கலந்து கொண்ட ஹாப்பர், கோவில் உட்பிரகாரத்தைச் பிரதம குருக்களுடன் இணைந்து சுற்றிப் பார்த்துவிட்டு பின்னர் பெங்களூரில் துணைத்தூதரகம் ஒன்றைத் திறந்து வைத்தார். தென்னிந்தியாவிலுள்ளவர்கள் கனடா வருவத…

  3. காபூல் தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் பலி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலொன்றில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேபாளத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீதே, இந்தத் தாக்குதல், இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டது. இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளதோடு, காயமடைந்தோரின் எண்ணிக்கை 8 என, இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/175105/க-ப-ல-தற-க-ல-த-த-க-க-தல-ல-ப-ர-பல-#sthash.RQuMHRTu.dpuf

  4. பிரெக்சிஸ்ட் என்று அழைக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவுக்கு பிரிட்டன் வந்து விட்டது. இந்த யூனியனில் இருந்து வெளியேறும் முதல் நாடு பிரிட்டன்தான். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில், 18 சதவீத உள்நாட்டு உற்பத்தி திறனும், மிகப் பெரிய வலுவான பொருளாதாரத்தையும் கொண்ட நாடு பிரிட்டன். தற்போது பிரிட்டனின் வெளியேற்ற முடிவு, ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு கூட கடும் நெருக்கடியை அளித்துள்ளது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் பொருளதார ரீதியாக மிகுந்த தொடர்பு உண்டு. இந்தியாவுக்கு அதிக அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டனுக்கு 5வது இடம். அமெரிக்கா மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் அதிக முதலீடு செய்ய…

  5. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவை மதிக்க வேண்டும் - ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவு மதிக்கப்பட வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் வெளியேறும் முடிவை மதிக்க வேண்டும். ஆனால், சுதந்திரமான சந்தையை அது விரும்பினால் மக்கள் சுதந்திரமாக சென்று வர அனுமதிக்க வேண்டும் - ஏங்கெலா மெர்கல் ஆனால், எதிர்காலத்தில் சுதந்திரமான சந்தையை அணுக பிரிட்டன் விரும்பினால், மக்கள் சுதந்திரமாக போய் வருவதற்கும் அது அனுமதிக்க வேண்டும் என்று ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிபோது அவர் பேசியுள்ளார். கடந்தகால நெருக்கடிகளில் இருந்து ஐரோப்பா மீண்டு வந்துள்ளது எ…

  6. பதக்கங்களுக்காக மனிதநேயத்தை விற்கும் சீனா : பிஞ்சு தளிர்களை சாதனையாளர்களாக மாற்ற கொடூர பயிற்சி - வீடியோ ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் ஆசையில் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. சீனா இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம் பதக்கங்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. (இதுபோன்ற வீடியோக்கள் பல தொகுதிகளாக வெளியாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.) http://www.virakesari.lk/article/8602

  7. பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையிலுள்ள தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றியுள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது" எனக் கூறியுள்ளார். நியுயார்க்கில் ஐநா தலைமையகம் சென்று திரும்பிய அப்பாஸுக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது. உறுப்பு நாடல்லாத கண்காணிப்பாளர் நாடு என்ற ஒரு அந்தஸ்து பாலஸ்தீனர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பான ஐநா வாக்கெடுப்பில் வென்று அப்பாஸ் நாடு திரும்பியுள்ளார். தாங்கள் கடக்க வேண்டிய பாதை நெடியதாக இருந்ததென்றும், கடுமையான அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றும் ஆனாலும் மனம் தளராமல் போராடி இந்த அந்தஸ்தை பாலஸ்தீனர்கள் வென்றுள்ளனர் என்றும் ரமல்லாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அப்ப…

  8. பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார் ராணி எலிசபெத்துடன் தெரீசா மே சந்திப்பு பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார். ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார். உள்துறை அமைச்சராக இருந்த தெரீசா மே, மார்க்கரெட் தாட்சருக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். அநீதிக்கு எதிராக போராடுவேன் ராணி எலிசபெத்தை சந்தித்த பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவ்னிங் தெருவுக்கு தனது கணவர் பிலிப்புடன் வந்த தெரீசா மே, அங்கு கூடியிருந்த சர்வதேச செய்தியாளர்களின் மத்தியில் உரையா…

  9. தாய்லாந்தின் முக்கிய இடங்களில் உள்ள பாலியல் விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்களில் நடைபெற்ற தொடர் சோதனையின் மூலம் நாட்டின் பாலியல் தொழிலை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.தரமான சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், தாய்லாந்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மூட தான் விரும்புவதாக தாய்லாந்தின் சுற்றுலா அமைச்சர் கோப்கர்ன் வட்டனவ்ரங்குல் பிரபல செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. ஆனால், இது பரவலாக அங்கு நடைமுறையில் உள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்ப ஆற்றுவதாக அது பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், பாங்காக்கில் உள்ள பெரிய மசாஜ் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையி…

  10. மத்திய தரைக்கடலில் 3,200 குடியேறிகள் மீட்பு மத்­திய தரைக் கடலில் நடத்­தப்­பட்ட 25 மீட்பு நட­வ­டிக்­கை­களில், 3,200 குடி­யே­றிகள் மீட்­கப்­பட்­டுள்­ளனர். மீட்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது ஒருவர் உயி­ரி­ழந்து காணப்­பட்­ட­தா­கவும் இத்­தா­லியக் கரை­யோரப் பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இந்­தாண்டு, இத்­தா­லிக்குச் சென்ற குடி­யே­றி­களின் எண்­ணிக்கை, 80,000யும் கடந்­து­விட்­ட­தாக, ஐ.நா.வின் அக­திகள் அமைப்பு கூறி­யுள்­ளது. அவர்­களில் பெரும்­பாலானோர் ஆபி­ரிக்­கர்கள். ஐரோப்­பாவைக் கடல் வழி சென்­றுசேரும் முயற்­சியில், 2014 ஆம் ஆண்டு முதல், இது­வரை, 10,000த்துக்கும் மேற்பட்ட குடியேறிகள் உயிரிழந்துள…

  11. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் மரணம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் மரணம் அடைந்தார் என நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார் பதிவு: ஜூலை 09, 2020 10:07 AM ஐவரி கோஸ்ட் ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி இறந்துவிட்டார் என்று நாட்டின் ஜனாதிபதி அறிவித்தார். ஜனாதிபதி அலசேன் ஓட்டாரா வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூலிபாலியின் மரணம் குறித்து நாடு துக்கத்தில் உள்ளது, ஜனாதிபதி மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். 30 ஆண்டு காலம் தனக்கு நெருங்கிய ஒத்துழைப்பாளராக அவர் இருந்தார் "தாயகத்தின் மீது ம…

  12. ஐரோப்பிய ஒன்றியம் மீது துருக்கி அமைச்சர் புகார் கடந்த மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில், துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராவதை தடுக்கும் வண்ணம் உள்ளது என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் சவுசோக்லு தெரிவித்துள்ளார். துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அதிகாரிகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வை மிகவும் தவறாக உள்ளதாகவும் மேலும் மேற்கத்திய நாடுகள் துருக்கியுடனான நட்பை துண்டித்தால் அது அவர்களின் தவறே ஒழிய அங்காரா, ரஷியா, சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் கொண்ட உறவு காரணம் அல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார். சு…

  13. இந்தியா - பாகிஸ்தான் இடையே யுத்தம் தொடங்கியதா ? இந்திய எல்லைப் பகுதியில் 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. எல்.ஓ.சி. என்றழைக்கப்படும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா காடி மற்றும் சோனகலி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன், ஆலோசனை நடத்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்,…

    • 5 replies
    • 811 views
  14. பாகிஸ்தானின் எரிசக்தி துறை அமைச்சராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பதவி வகித்தபோது, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்யும்படி, அந்நாட்டின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி நேற்று உத்தரவிட்டார். இந்தவிடயம் தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி, கூறியுள்ளதாவது.... தெற்காசிய கண்டம் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மீதும் கூட சமீபத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை மிக மிகப்பெரிய ஊழல் குற்…

    • 3 replies
    • 626 views
  15. ஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம். ஆசியா, ஐரோப்பாவை இணைக் கும் வகையில் துருக்கி இஸ் தான்புல் நகரில் புதிய தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் துருக்கி அமைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதி ஐரோப்பிய கண்டத்திலும் கிழக்குப் பகுதி ஆசிய கண்டத்திலும் உள்ளன. இரு கண்டங்களையும் இணைக் கும் வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்கெனவே 2 பிரமாண்ட பாலங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர புரூக்ளின் பாலத்தைப் போன்று இஸ்தான்புல்லில் 3-வதாக தொங்கு பாலம் …

  16. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், செப்.27 வரை 6000 கன அடி நீர் திறக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம். காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், செப். 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6000 கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று டெல்லியில் விசாரணை நடத்தியது. காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்ட 3,000 கன அடி நீர் போதாது. 50 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. …

  17. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! சீமான் உண்ணாவிரதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வருகிற 27ஆம் திகதி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் புதுவையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கு புதுவை பொலிஸார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வேண்டி நாம் தமிழர் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 4ஆம் திகதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சியினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள சீமான் நேற்று இர…

  18. கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளை நாட்டிலிருந்தே துரத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநில சட்டசபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி அங்குதேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் ஈடுபட்டு வருகிறார். அகர்தலாவில் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக, ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பதவியிலிருந்து வேரோடு பிடுங்குவதே எங்களது நோக்கம். அவர்களை கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றினோம். தற்போது இந்தியாவிலிருந்தே வெளியேற்ற வேண்டும். மக்களுக்கு நெருக்க…

  19. ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள் இல்லாது குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் ( Bielefeld) நகரில் 22.09.20 அன்று நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட 40 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிகமாக 50 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை குமமெர்ஸ்பாஹ் (Gummersbach) நகரிலும் தொடர்ச்சியாக பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா …

    • 47 replies
    • 3.6k views
  20. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான டுவிட்டரில் போஸ்ட் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை செய்யாமல் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை அந்த அலுவலகத்தின் வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து சாலையில் செல்வோர் பலரும் ஆபாச படத்தை அலுவலகத்தின் முன் நின்றுகொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்த அதிகாரி உடனே தன்னுடைய கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு மறைவான பகுதி…

  21. கொவிட்-19 தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டும் சீனா! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/WireAP_90fa1484bd5745b181b5780609100e66_16x9_992-720x450.jpg கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் சீனா முனைப்பு காட்டி வருகின்றது. அந்த வகையில் தற்போது அங்கு 4 நிறுவனங்கள் சார்பில் 5 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை ரஷ்யா, எகிப்து, மெக்ஸிகோ உட்பட 12க்கு மேற்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை விரைவில் வெளியிட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக முன்பதிவுகளை பெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் (கொவிட்-1…

    • 0 replies
    • 572 views
  22. சிரியாவின் அலெப்பா நகர மக்களுக்காக ஈஃபிள் டவர் விளக்குகள் அணைப்பு! சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்காக ஈஃபிள் டவர் விளக்குகள் அணைப்பு! சிரியா நாட்டில் ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தாக்குதல் தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்கின்றன. போர் நிறுத்த நடவடிக்கைகளும் அமைதியைத் தரவில்லை. இந்தப் போரில் அலெப்போ நகரை மையமாக கொண்டே கடும் தாக்குதல் தொடர்கின்றன. இதில் பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்படுகின்றனர். இம்மாதிரியான கொடூரமான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, நகரில் இயல்பான வாழ்க்கை நிலவ வேண்டும் என உலகம் தழுவிய அளவில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரீஸ் நகரத்தில் உள்ள, உலக புகழ்பெற்ற ஈபிள் டவரும் இணைந்துகொள்கிறத…

  23. ""இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார். ஐந்து பேர் குழு: இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர். இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பியுள்ள இவர்களில், திரிணமுல் காங்கி…

    • 0 replies
    • 898 views
  24. கனடாவில் நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் பெண் டிரைவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். நேற்று மதியம் 12.30 மணியளவில் Mayfield Road, east of Airport Road என்ற இடத்தில் பெண் டிரைவர் ஓட்டி வந்த வாகனமும், ஒரு டிராக்டரும் பயங்கரமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பெண் டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர், முதல்கட்ட விசாரணை முடியும்வரை, இறந்த பெண் டிரைவரின் இதர விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க முடியாது என கூறிவிட்டனர். இந்த விபத்தில் டிராக்டரில் வந்த ஓட்டுனருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக Airport and Innis Lake road பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு தடை செய்யப்பட்டது. காவல்துறையினரின் இந்த விபத்து நடந்த…

    • 0 replies
    • 383 views
  25. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஷ் ஷெரீப், பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்களுடனும், உங்களது அரசுடனும் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். மேலும் நவாஸ்ஷெரீப் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார், இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா வர பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளது குற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.