Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ம.பி.,யில் ரயில்வே ஊழியர் எரித்து கொலை: 2 குழந்தைகள் பலியானதால் மக்கள் ஆத்திரம் போபால்: மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகள் ரயிலில் அடிபட்டு இறந்ததால் ஆத்திரமுற்ற அவர்களது குடும்பத்தினர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு தீ வைத்தனர். 2 ஊழியர்களை எரித்து கொல்ல நடந்த முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில மணித்துளிகளில் இந்த வன்முறைச்சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ம.பி., மாநிலம் குல்பஞ்ச் ரயில் நிலையம் அருகேயுள்ள விதிஷா கிராமத்தில் ரயில் மோதியதில் இரண்டு குழந்தைகள் பலியானார்கள். மக்கள் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் நிலையத்தில் ரயில் கிளம்புவதாக தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டேஷன்…

    • 0 replies
    • 599 views
  2. தென் கொரியாவின் முதல் பெண் அதிபரானார் பார்க் தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் கியூன்-ஹை (61) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பின்னர் துவக்க உரையாற்றிய அவர், வடகொரியா உடனடியாக அணு ஆயுத சோதனையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.தலைநகர் சியோலில் உள்ள நாடாளுமன்ற வளாகம் முன்பு கூடியிருந்த சுமார் 70,000 மக்கள் முன்னிலையில் பார்க் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, ராணுவம் சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய துவக்க உரையில் கூறியதாவது: சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு, வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக வேலை வாய்ப்பு உ…

  3. அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்: சீக்கியர் மீது துப்பாக்கி சூடு அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் கன்வல்ஜித்சிங் (46). சீக்கியரான இவர், லாரி டிரைவராக உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு இவர் தனது மகனுடன் டேடோனா கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுனர்கள் அவரையும், மகனையும் கடுமையாக தாக்கினார்கள். மேலும் துப்பாக்கியால் சுட்டனர். அதில், கன்வல்ஜித்சிங் தொடை மற்றும் உடலில் குண்டு காயங்கள் ஏற்பட்டன. உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் கன்வல்ஜித்சிங்கின் மகன் காயமின்றி தப்பினார். இதுகுறித்து போர்ட் ஆரஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்களுக்கு இடையே முன்விரோதம் எது…

  4. போர்க்குற்ற மற்றும் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், பொருளாதாரத்தடை விதிக்கபட வேண்டும் என்றும், இலங்கை வடகிழக்கு மாவட்களில் மற்றும் தமிழ் வாழ்விடகளில் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசே ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறித்தி உலகத் தமிழ் அமைப்பினர் (GTO) பெங்களூர் மாநகரின் டவுன் ஹால் (Town Hall) முன்பு நடத்திய போராட்டம். https://www.facebook.com/media/set/?set=a.10151455508574795.509810.610959794&type=1

  5. அமெரிக்க பிரேரணை குறித்து இலங்கை பீதியடையவே தேவையில்லை!- சுப்பிரமணியசுவாமி [ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 12:27.06 AM GMT ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை பீதியடையத் தேவையில்லை என இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும்பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ரீதியில் இந்தியா எடுக்கின்ற அநேகமான தீர்மானங்களின் பின்னணியில் இருப்பது அரசியல் நோக்கங்கள் என்று கூறிய அவர், அவ்வாறான நோக்கங்களில் தெளிவைக் கா…

  6. 24 February 2013 07:14:44 PM படித்தவர்கள்: 55 கனடாவில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் பிரபல நிறுவனத்தின் தேயிலை பவுடரில் விஷத்தன்மை கலந்துள்ளதால் அதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் விற்பனையான அனைத்து தேநீர் பவுடரையும் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. The Canadian Food Inspection Agency இன்று விடுத்துள்ள ஒரு எச்சரிக்கை அறிக்கையில், Tega brand Organic Lemon Hibiscus Green Rooibos Herbal Tea என்ற நிறுவனத்தின் தேநீர் பவுடரில் விஷத்தன்மை கலந்துள்ளதால், அதை உடனே வாடிக்கையாளர்களிடம் இருந்தும், கடைகளில் இருந்தும் உடனே திரும்பப்பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை தேநீர் பவுடர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெ…

  7. ரஷ்யாவில் எரிகல் விழுந்து 1500 பேர் படுகாயம் அடைந்தது குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அமெரிக்காதான் ஆயுத சோதனை நடத்தியிருக்கும் என்று பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கி.மீ. கிழக்கில் உள்ள யூரல் மலைப் பகுதியில் விண்ணில் இருந்து சக்திவாய்ந்த எரிகல் விழுந்து சிதறியது. இதில் வீடு, கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் 1200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். விண்ணில் இருந்து ரஷ்யா மீது சிதறியது உண்மையில் எது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மாஸ்கோவில் இருந்து வெளிவரும் நோவியி இஸ்வெஸ்ஷியா என்ற நாளிதழ் தனது வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. இதில் வாசகர்கள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.ரஷ்யா …

  8. இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் பரபரப்பு! கோலாலம்பூரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன் நேற்று (26.03.2013) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விடுதலைப்பு புலிகளின் தலைவர் பிரபாரகன் அவர்களின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனை சிங்களப் பயங்கரவாத அரசு காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதற்கான புகைப்படங்கள் உட்பட இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் வெளிவந்ததையடுத்து உலகின் பல நாடுகளில் தமிழர்கள் கொதித்தெழுந்துள்ளனர். மலேசியாவில் உள்ள …

  9. ராஜஸ்தானில் இந்திய ராணுவத்தினர் நடத்திய போர் பயிற்சியை வேவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனப் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் போர் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அண்மையில் விமானப்படையினர் இரும்புக்கரம் என்ற பெயரில் போர் பயிற்சி செய்தனர். இந்த நிலையில், பொக்ரானில் இருந்து பாகிஸ்தானுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை உளவுத் துறையும், ராணுவ உளவுப் பிரிவும் கண்டுபிடித்தன. இதையடுத்து அடிக்கடி பாகிஸ்தானுக்கு தொலைபேசியில் பேசிய சுமீர் கான்(34) என்பவரை நேற்றுமுன்தினம் பிடித்து விசாரித்தனர். அப்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐக்கு உளவாளியாக அவர் செயல்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தானில…

  10. கடைசி பிரார்த்தனை கூட்டத்தில் போப் பெனடிக்ட் உருக்கம் போப் 16-வது பெனடிக்ட், வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.போப் பதவியில் அவர் பங்கேற்கும் கடைசி ஞாயிறு பிரார்த்தனை என்பதால் சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டிருந்தனர். அவரைப் புகழ்ந்தும், ஆதரவு தெரிவித்தும், வழியனுப்பும் விதமாகவும் வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் மக்கள் பங்கேற்றனர்.அப்போது அவர்கள் மத்தியில் போப் மிகவும் உருக்கமாகப் பேசினார். “ஓய்வு பெறுமாறு கடவுள் இட்ட கட்டளையை ஏற்று செயல்பட்டுள்ளேன். இனிமேல் தொடர்ந்து அதிகமாக பிரார்த்தனை செய்வதிலும், தியானம் செய்வதிலும் எனது நேரத்தை செலவிடப் போகிறேன். நான் இந்த தேவாலயத்தை கைவிட்டுச் செல்லவில்லை.…

  11. ஆப்கானிஸ்தான் தலைவர் அமெரிக்க விசேட படை அமெரிக்கப் படையினரை கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி ஞாயிற்றுக் கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அவர்கள் இரண்டு கிழமைக்குள் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி கேட்கப்பட்டுள்ளார்கள். இதற்கான முக்கியகாரணம் அவர்களுடன் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், துஸ்ப்பிரயோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அதே நேரம் அமெரிக்காவின் படைகள் தரப்பில் இருந்து வெளிவந்த அறிக்கையானது தாம் துர்நடத்தைகள் பற்றி நடவடிக்கை எடுப்பதாகவும், தெரிவிக்கின்றது. மேலும், 2014 ம் ஆண்டு அளவில் அமெரிக்காவினதும், சர்வதேசநாடுகளைச் சேர்ந்த படைகள் என்பன சண்டையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு தயாராகிக்கொண்டிரு…

  12. கடல் நீர்மட்டம் இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தட்ப வெப்ப நிலையை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் பி.எஸ்.எல்.வி., சி - 20 ராக்கெட் சரல் உள்ளிட்ட 7 சிறிய செயற்கைகோளுடன், வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லான இந்த சாதனை வெற்றி நிகழ்வை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் பார்வையிட்டார். இந்த வெற்றியை ஜனாதிபதியும், விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில் சரல் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. விண்ணில் செலுத்துவதற்கான, 59 மணி நேர, கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் காலை துவங்கியது. கடல் சார்ந்த வானிலை : கடல் ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கை கோளை வடிவமைத்து உள்ளனர்.…

    • 0 replies
    • 432 views
  13. சியோல்: தென்கொரியா நாட்டின் முதலாவது பெண் அதிபராக பார்க் கியூன் ஹே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தென்கொரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மூன் ஜே போட்டியிட்டார். அவரை எதிர்த்து கியூன் ஹே களம் இறங்கினார். இத்தேர்தலில் மூன் ஜே தோல்வியைத் தழுவ கியூன் ஹே சரித்திரம் படைத்தார். தென்கொரிய நாட்டின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை கியூன் ஹே பெற்றார். இதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் கியூன்ஹே பதவி ஏற்றார். பல லட்சம் பேர் கூடியிருந்த விழாவில் அவர் பேசுகையில், நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க மாட்டேன். வ…

  14. கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ 2018ல் ஓய்வு கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ எதிர்வரும் 2018ம் ஆண்டில் ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். தனது இரண்டாம் தவணைக்கால நிறைவுடன் ஓய்வு பெற்றுக் கொள்ள உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.81 வயதான ராவுல் கஸ்ட்ரோ, நோய் வாய்ப்பட்ட தனது சகோதரரான பிடேல் கஸ்ட்ரோவின் பதிலீடாக 2008ம் ஆண்டு ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக்கொண்டார். ராவுல் கஸ்ட்ரோவிற்கு பின்னர், 52 வயதான துணை ஜனாதிபதி டியாஸ் கானேல் ஜனாதிபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1959ம் ஆண்டு கியூப புரட்சியின் பின்னர், தொடர்ச்சியாக கஸ்ட்ரோ சகோதராகள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கடந்த ஐந்து தசாப்த காலமாக பிடெல் கஸ்ட்ரோ நாட்டை ஆட்சி செய்து …

  15. மூன்றுவாகனங்களை இரயில் வரும் பாதையில் நிறுத்திவிட்டு, ஹாக்கி விளையாட்டை மும்முரமாக பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென வந்த ரெயில் மோதியதால் மூன்று வாகனங்களும் சுக்குநூறாக நொறுங்கிய சம்பவம் ஒன்று கனடாவில் பரபரப்பாக்கி உள்ளது. கனடாவின் ஒண்டோரியோவில் உள்ள Sudbury என்ற இடத்தில் Sudbury Wolves என்ற அணியினர் விளையாடிய ஹாக்கி போட்டியை பார்ப்பதற்காக மூன்று வாகனங்களில் வந்தவர்கள் விளையாட்டை பார்க்கும் ஆர்வத்தில் இரயில் வரும் பாதையில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, விளையாட்டை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வந்த CP இரயில் ஒன்று மூன்று வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியதால் அந்த வாகனங்கள் சுக்குநூறாக நொறுங்கிப்போயின. இந்த விபத்து காரணமாக அந்த பகு…

    • 4 replies
    • 504 views
  16. எஃப் 35 ரக போர் விமானங்கள் இயக்கத்தை நிறுத்தியது அமெரிக்க ராணுவம் அமெரிக்க ராணுவம், என்ஜின் பிரச்னை காரணமாக எஃப் 35 ரக போர் விமானங்கள் முழுவதையும் சேவையில் ஈடுபடுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.இதுகுறித்து ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கலிபோர்னியா மாகாணம் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் பயன்பாட்டில் உள்ள எஃப் 35 ரக போர் விமானங்களில் வழக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு விமானத்தின் என்ஜின் பிளேடில் உடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவ்வகையைச் சேர்ந்த அனைத்து விமானங்களின் இயக்கமும் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வகை விமானங்களின் என்ஜின்கள் மற்றும் அதுதொடர்பான உதிரி பாகங்களை ஆய்வுக்காக கனெக்டி…

  17. இந்திய நலனுக்கு பாக்கிஸ்தான், சீனா ஊறுவிளைவித்து வருகின்றன – ஆர்.எஸ்.எஸ். Written by gobika // February 25, 2013 // Comments Off ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தலைவர் மோகன் பகவத் 4 நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ளார். அங்கு புபனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது பாகிஸ்தான், சீனா குறித்து அவர் கூறியதாவது:- இந்திய நலனுக்கு எதிரான கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள பாகிஸ்தான், வெளிப்படையாக இந்திய இறையாண்மைக்கு சவால் விடுத்து வருகின்றது. அதே நேரத்தில், இந்தியத் துணைக்கண்டத்தில் சீனா, பொருளாதார போரை ஏவி, திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றது. பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளை, எல்லையில் கொண்டுவந்து பனிமூட்டத்தை பயன்படுத்தி, இந்திய ராணுவத்தினர…

  18. டெல்லி: தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) சார்பில் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்துவிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டிருக்கிறது. டெல்லியில் வரும் 7-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பா.ஜ. க தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, சரத்பவார், முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸை புறக்கணிக்கவும் திமுக முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக நாளை சென்னையில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் ஆலோசிக்கப்பட…

  19. FILE த‌மிழக‌த்‌தி‌ல் பூரண மது‌வில‌க்கை அம‌ல்படு‌த்த வ‌லியுறு‌த்‌தி நடைபயண‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ள ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோவை முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா ‌‌திடீ‌ரென ச‌ந்‌தி‌த்து பே‌சியது அர‌சிய‌ல் வ‌ட்டார‌த்த‌ி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. அடு‌த்தா‌ண்டு நடைபெற உ‌ள்ள நாடாளும‌ன்ற தே‌ர்த‌ல் கூ‌ட்ட‌ணி‌க்கான அ‌ச்சாரமாக இ‌ந்த ச‌‌ந்‌தி‌ப்பு நட‌ந்‌திரு‌க்கல‌ா‌ம் எ‌ன்று அர‌சிய‌ல் நோ‌க்க‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ ‌மீது முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு அலா‌தி ‌பி‌ரிய‌ம். ‌விடுதலை‌ப்பு‌லிகளை ஆத‌ரி‌த்து பே‌சிய ஒரே காரண‌த்த‌ி‌ற்காக வைகோ பொடா ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர் ஜெயல‌லிதா. ஜா‌மீ‌னி‌ல் வெ‌ளியே வர மறு‌த்த வைகோ, சுமா‌ர் ஒ‌ன்றர…

  20. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவெல்ஸ்ட்டோக்(Revelstoke) மலைப்பகுதியில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடிகொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். கனடாவின் மலைக்காவல் துறை அதிகாரியான டேன் மோஸ்காலுக்(Dan Moskaluk) இவ்விபத்து குறித்து கூறுகையில், ஆறுபேர் கொண்ட குழுவில் வந்த இவர்கள் மூவரும் பிரிந்துசென்று கிரீலி ஏரிப்பகுதிக்கு அப்பால் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடி கொண்டிருந்தபொழுது அதிகாலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில்மூவரும் பனிச்சரிவில் சிக்கிகொண்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவரின் உடல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Revelstoke Mountain Resort என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரி…

  21. கனடாவில் சனிக்கிழமை அதிகாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Victoria Park Avenue என்ற இடத்தின் அருகில் உள்ள Dawes Road என்ற இடத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதி காவல்துறையினர் விரைந்து சென்றனர். காயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த போலீஸார் தங்களது முதல்கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விசாரணையில்காயம் அடைந்த இளைஞரும் வேறு இரண்டு மர்ம நபர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும், வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து ஏற்பட்டுள்ள…

  22. கனடாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இண்டர்நெட், செல்போன் மற்றும் சேட்டிங் முதலியவற்றில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமிகளிடம் ஆபாச புகைப்படங்கள், வீடியோ மற்றும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய குறுஞ்செய்திகள் அனுப்புதல் போன்ற குற்றங்களுக்காக 24 வயதான யூனிஸ் என்பவர் நேற்று அதிரடியாக டொரண்டோ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் York University Lions football அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பயிற்சியாளராக இருக்கும் இவர் மீது கிரிமினல் வழக்கு ப…

  23. கடன் தகமை அல்லது கடன் அந்தஸ்து நிலையில் 3 ஏ என்ற உயர் நிலையில் இருந்து பிரிட்டனை விலக்குவதாக ஒரு உலக கடன் தகமை கணிப்பீட்டு நிறுவனம் அறிவித்ததை அடுத்து, தமது நாட்டின் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்கப்போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுயுள்ளது. வரவு செலவுத்திட்ட துண்டுவிழுதலை குறைப்பதற்கான தனது நடவடிக்கைகளுக்கு, ''மூடி'' நிறுவனத்தின் இந்த தகமைக் குறைப்பு, பலத்தை தந்துள்ளதாக பிரித்தானிய நிதி அமைச்சரான ஜோர்ஜ் ஒஸ்போர்ன் கூறியுள்ளார். அரசாங்கம் ஒரு அவமானகரமான தாக்கத்தை இதன் மூலம் எதிர்கொண்டுள்ளதாகவும், தனது செலவு வெட்டுத் திட்டத்தை அது கைவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழில் கட்சி கூறியுள்ளது. பிரிட்டனின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும், செலவு வ…

    • 0 replies
    • 409 views
  24. ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் தில்சுக் நகர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகர் பகுதியில் இன்று இரவு 7 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 5 இடங்களில் குண்டுகள் வெடி்தததாக முதலில் தகவல்கள் வெளியாகின. தற்போது 3 இடமாக அது குறுகியுள்ளது. ஆனந்த் டிபன் சென்டர், கொனார்க் மற்றும் வெங்கடாத்ரி தியேட்டர்களுக்கு அருகே குண்டுகள் வெடித்தன என்று தகவல்கள் கூறுகின்றன. குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும்…

    • 18 replies
    • 1.1k views
  25. இளையராஜா சஞ்சிகை ஒன்றில், “பாரதிராஜாவின் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்” என்று கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள பாரதிராஜா, “அவரது பேச்சு பைத்தியக்காரன் பேச்சு அல்ல.. ஆனா குழந்தைத்தனமானது. வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்” என்று கூறியுள்ளார். இளையராஜா பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ள பாரதிராஜா, “நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான்தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு ஒரு களம் கிடைக்கல. ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, கமலுக்கும் ரஜினிக்கும் கிடைச்சுது. நாம எவ்ளோ பெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.