Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். 30 முன்னாள் படைவீரர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இஸ்ரேலிய படைவீரர்கள் செய்த எண்ணற்ற கொடுமைகளை விவரிக்கிறது. 2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரேக்கிங் சைலன்ஸ் (மௌனத்தை கலைக்கிறோம்) என்ற முன்னாள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கான அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இப்போதைய மற்றும் முன்னாள் இஸ்ரேலிய படைவீரர்கள் பங்கேற்ற அல்லது கண்ணுற்ற கொடுமைகளை பற்றி விவரிக்கும் 850 நிகழ்வுகளை திரட்டியிருக்கிறார்கள். இஸ்ரேலிய படைவீரர்கள் மீது கல்லெறியும் மைனர் குழந்தைகளை பிடித்து அடைத்த…

  2. பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா 30 August 2025 பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்யப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், விசாக்களை மறுப்பது அல்லது ரத்து செய்வது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்தந்த அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான "உறவுகளைப் பொருட்படுத்தாமல்", நியூயோர்க்கில் வெளிநாட்டு அதிகாரிகள் வருகை அமெரிக்காவால் தடைபடாது என்று கோடிட்டுக் காட்ட…

  3. பாரீஸ்: பாலஸ்தீன தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேல் முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் தற்போது 'பார்வையாளர்' அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது. பாலஸ்தீனம் ஒரு தனிநாடாக ஐ.நாவில் முழுமையான உறுப்பினர் நாடாக இணைவதற்கான முயற்சிகளை அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜோர்டான் நாடு ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அதில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து 2017ஆம் ஆண்டுக்குள் விலகிக் கொள்ள வேண்டும்; பாலஸ்தீனமும் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; இதனடிப்படையில் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீ…

  4. 23 Sep, 2025 | 05:00 PM காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க பிரான்ஸ் தனது ஆதரவை முறையாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரான்ஸும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரு நாடுகள் தீர்வு தொடர்பான மாநாட்டில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க இதுவே சரியான தருணம் என்றார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே அமைதி ஏற்படுத்துவதற்கான ஒரு வரலாற்று ஈடுபாடாக இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார். பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பது, இஸ்ரேல் அமைதியாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என்றும…

  5. Published By: RAJEEBAN 10 APR, 2024 | 10:13 AM பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார். எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீனதேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெட்டன்யாகு அரசாங்கம…

  6. Published By: RAJEEBAN 28 MAY, 2025 | 02:33 PM பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவருவதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பாலஸ்தீன தேசத்தை பிரிட்டன் நெதர்லாந்து பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்ற அழுத்தத்தை பிரான்ஸ் கொடுத்துவருகின்றது. பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க செய்வதன் மூலம் அதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க செய்வதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டினை இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளிற்கான ஆரம்பமாக பயன்படுத்தலாம் என பிரான்ஸ் ஜனாதி…

  7. 25 JUL, 2025 | 10:18 AM பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220895

  8. Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 11:07 AM பாலஸ்தீனம் குறித்த ஐக்கியநாடுகளின் சர்வதேசமாநாட்டில் கலந்துகொண்டால் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்கா அதன் சகாக்களை எச்சரித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்திற்கு இரு தேசதீர்வு குறித்து ஆராய்வதற்கான ஐக்கியநாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் மாநாட்டை தொடர்ந்து இஸ்ரேலிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளை அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை மற்றும் நலன்களிற்கு எதிராக செயற்படும் நாடுகளாக கருதப்போவதாக இராஜதந்திர அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்த நாடுகள் இராஜதந்திர விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் எனவும் அமெரிக்…

  9. பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம்: அதிபர் இமானுவெல் மெக்ரோன் தகவல் பாரிஸ்: பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவெல் மெக்ரோன் நம்பிக்கை தெரிவித்தார் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் அனைத்துலக கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என்று அவர் கூறினார். இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு செய்யப்படும் என்று பிரான்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது சவூதி அரேபியாவுடன் பிரான்ஸ் இந்த கூட்டத்தை நடத்தும் வேளையில் அனைத்துலக சமூகத்தின் பார்வைகளைக் கொண்டு பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முனைப்பு காட்டுவோம் என்று மெக்ரோன் சொன்னார் ஐநாவில் உறுப்பியம் கொண்ட 193 நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங…

  10. 19 JUL, 2024 | 10:13 PM பாலஸ்தீனபகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளமை சட்டவிரோதமான செயல் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையிலும் ஜெரூசலேத்திலும் குடியேற்றங்களை ஏற்படுத்துவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அந்தபகுதிகளிலும் காசாவிலும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீனபகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தும் பிரசன்னமாகியிருப்பதை சட்டவிரோதமானதாக கருதுவதாக நீதிமன்றத்தின் தலைவர் நவாஸ் சலாம் தெரிவித்துள்ளார். மிகவிரைவில் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரவேண்டிய கடப்பாடு இஸ்ரேலிற்…

  11. பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க நேரம் வந்துவிட்டது – ஒபாமா இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரசை நேற்று செவ்வாய் வெள்ளை மாளிகையில் வைத்து பேச்சுக்களை நடாத்தினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அதன் பின் பத்திரிகையாளருக்கு கருத்துரைத்த அவர் பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென அவரிடம் தெரிவித்தார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்புக்களும் முதலில் கை கொடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்ற நியாயமான புரிதலோடு கதைக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தற்போது வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் ஆரம்பித்துள்ள ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் சிறந்ததோர் இலக்கை அடைய வேண்டுமானால் பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதே முத…

    • 26 replies
    • 2.4k views
  12. பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு 13 Sep, 2025 | 12:06 PM பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-நாடுகள் தீர்வை செயல்படுத்துவது குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசா போருக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்" மீது வெள்ளிக்கிழமை (13) வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவுகளின் படி, தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 10 நாடுகள் வாக்களித்திருந்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. பிரான்ஸ…

  13. 01 NOV, 2023 | 04:31 PM (காலித் ரிஸ்வான்) அரபு நாட்டுத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் அவசர அமர்வொன்று நவம்பர் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அரபு லீக்கின் இந்த 32வது அமர்வு சவூதி அரேபியாவின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது. காசா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றி கலந்துரையாடும் நோக்கோடு உச்சிமாநாட்டை நடாத்துமாறு பாலஸ்தீன் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து திங்கட்கிழமை (30) தலைமைச் செயலகம் அதிகாரபூர்வ கோரிக்கையை பெற்றதாக அரபு லீக்கின் உதவிச் செயலாளர் தூதர் ஹொசாம் சகி தெரிவித்தார். கெய்ரோ நகரில் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி அரபு லீக் உச்சி மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து 20 நாட்களுக்குப் பிறகு…

  14. Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 01:56 PM காசா மருத்துவமனையின் மகப்பேறு வோட்கள் ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை செயல் என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது என தெரிவித்துள்ள ஐநா பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கை ஐநாவிடம் கையளிக்கப்…

  15. Published By: RAJEEBAN 26 FEB, 2025 | 11:38 AM பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது. பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது உலக சுகாதார ஸ்தாபனம் இவர்களின் நலன்கள் பாதுகாப்பு குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது. 162 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தன்னால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக பாலஸ்தீன மரு…

  16. பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் இணைந்து இடைக்கால அரசொன்றை அமைக்க முடிவெடுத்துள்ளன ஒன்றோடொன்று போட்டியிட்டுப் போராடிய பாலஸ்தீன விடுதலை இயக்கங்களான "கமாசும்"(Hamas) வ(f)ற்ராவும்(Fatah) இணைந்து இடைக்கால அரசொன்றை அமைக்க முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரஸ்பரம் பகைமை பாராட்டிய இரு அமைப்புகளும் இணைந்து வருகின்ற ஐந்து கிழமைகளுக்குள், முகமட் அபாஸ் தலைமையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எடுத்த முடிவானது இஸ்ரேல் பிரதமர் பென்ஜாமின் நெற்ரன்ஜாகுவைக் குழப்பமடையச் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் இணைவதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே 2011 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், நடை முறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் …

    • 0 replies
    • 396 views
  17. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் காலமானார் 3 நாள் துக்க தினம் பிரகடனம் 1/27/2008 5:35:38 PM வீரகேசரி நாளேடு - பாலஸ்தீன விடுதலை இயக்கமான "பி.எப்.எல்.பி.' அமைப்பின் ஸ்தாபகரான ஜோர்ஜ் ஹபாஷ், ஜோர்தானில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 80 வயதான ஹபாஷ், மாரடைப்பு காரணமாகவே, மரணத்தைத் தழுவியதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். ஜோர்ஜ் ஹபாஷின் மரணத்தையடுத்து, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மூன்றுநாள் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஹபாஷை வரலாற்று முக்கியத்துவ தலைவர் என வர்ணித்த பாலஸ்தீன ஜனாதிபதி, தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளார். ஹபாஸின் தலைமைத்துவத்தின் கீழ் "பி.எப்.எல்.பி.' அமைப்பா…

  18. அமெரிக்க எதிர்ப்பையும் மீறி யுனெஸ்கோ தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டது பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas யுனெஸ்கோவின் தலைமையகக் கட்டிடத்தில் நேற்று முதன் முறையாக பாலஸ்தீனக் கொடியை ஏற்றியுள்ளார். இது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைக் கோரி நிற்கும் பாலஸ்தீனத்தின் முதல் வெற்றியாக மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு கிடைத்த பெரும் தோல்வியாகவும் கருதப்படுகின்றது. இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனவும், சர்வதேச சமூகம் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான முதற்கட்டம் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, இஸ்ரேலுடனான சமாதான முயற்சிகளுக்கு ப…

  19. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இராணுவ பிரிவுக்கு முழுமையாகத் தடை: பிரித்தானியா! பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவுக்கு முழுமையாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, உட்துறை அமைச்சர் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய அதிநவீன ஆயுதங்கள், பயங்கரவாதப் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை ஹமாஸ் அமைப்பிடம் உள்ளன. அந்த அமைப்பின் அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் இடையே பிரித்தானியா அரசாங்கம் இனியும் வேறுபாடு காட்டாது. எனவே, ஹமாஸ் அமைப்பு முழுவதையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தால், …

  20. Published By: RAJEEBAN 24 APR, 2024 | 11:01 AM அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப…

  21. 11 MAY, 2024 | 06:25 AM ஐக்கியநாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது. 143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. https://www.virakesari.lk/article/183203

  22. பாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்! ஐக்கிய நாடுகளின் நிவாரணம் வழங்கும் முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் கனடா 50 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வருட காலத்திற்கு அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மாரி-க்ளவுட் பிபீயூ நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் வேலைத்திட்ட முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீனிய அகதிகளின் சிறார் கல்வி, பெண்களுக்கான நலன் அபிவிருத்தி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றுக்காக கனடாவின் நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இது…

    • 0 replies
    • 357 views
  23. பாலஸ்தீனத்தில் பதின்ம வயது சிறுவன் சுட்டுக்கொலை இஸ்ரேலிய வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்திருக்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துவருகின்றன. எப்ரோன் நகரில் உள்ள பேட்ரியார்க் குகைக்கு அருகில் 17 வயதான இந்தச் சிறுவனை எல்லைப் படையினர் சுட்டனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதியில் தெருக்களில் தினமும் தாக்குதல் நடப்பது வழக்கமாக இருந்துவருகிறது. அக்டோபர் மாதத்திலிருந்து இம்மாதிரி தாக்குதல்களில் சுமார் 190 பாலஸ்தீனியர்களும் 28 இஸ்ரேலியர்களும் 2 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். …

  24. மேற்கு கரையிலும் காஸாவிலும் இடம்பெறுகின்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழ்க்கறிஞர் படு பென்சவுடா இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மேற்கு கரை கிழக்கு ஜெரூசலேம் மற்றும் காஸா பள்ளத்தாக்கு ஆகியபகுதிகளில் யுத்த குற்றங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் யுத்த குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதுமான தகவல்களை திரட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதிய காரணங்கள் உள்ளன என நான் த…

    • 0 replies
    • 785 views
  25. பாலஸ்தீனத்து மீது 5வது நாளாக தாக்குதலை நடத்துகிறது இஸ்ரேல் Published: Sunday, November 18, 2012, 13:15 [iST] காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் இன்று 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8 குழந்தைகள் உட்பட 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்தார். ஹமாஸ் இயக்கத் தலைமையகம் மற்றும் ஹமாஸ் ஆதரவு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை நிர்மூலமாகின. இதில் 6 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். காசா பகுதியிலிருந்தும் பல நூறு ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டு வருகின்றன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.