Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொலம்பியாவில் உள்ள ஹொண்டியுராஸ் தூதரகத்தில், கிறிஸ்துமஸ் விருந்தின்போது பாலியல் தொழிலாளர்கள் வந்து அவ்விடத்தில் பொருட்களைத் திருடி அட்டூழியம் செய்தனர் என்று வெளியாகியுள்ள தகவல்களை விசாரிக்கப்போவதாக ஹொண்டியுராஸ் அரசாங்கம் கூறுகிறது. பொகோட்டாவில் உள்ள இந்த தூதரகத்தின் ஊழியர்கள் தமது கிறிஸ்துமஸ் விருந்திலே குடித்துவிட்டு களியாட்டம் போடுவதற்காக பாலியல் தொழிலாளர்களை அழைத்திருந்தனர் என்றும், அந்த விருந்தின்போது அங்கிருந்த கணிணிகள், கைத்தொலைபேசிகள் போன்றவை திருடுபோயுள்ளன என்றும் ஹொண்டியுராஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. களியாட்டம் போடச் சென்றவர்கள் தூதரின் அலுவலக அறைக்குள் மலம் கழித்துவிட்டுச் சென்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஹொண்டியுராஸ் மற்றும் கொலம்பியா இடையே போதைமர…

  2. கனடாவின் முக்கிய பகுதியான ரொறொன்ரோவின் மிக முக்கிய நீர் மின் உற்பத்தி நிலைய இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரொறொன்ரோவின் நகரப் பகுதிகளில் சில நாட்களுக்கோ , வாரங்களுக்கோ மின்தடை ஏற்படக் கூடும் என ரொறொன்ரோ ஹைட்ரோ அறிவித்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் மிகப் பழமையானது என்பதால் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதாகவும், நாளுக்கு நாள் ரொறொன்ரோவில் மக்கள் பெருக்கம் அதிகமாகி வருவதால் இக்கட்டான இது போன்ற நிலையை சமாளிக்கும் பொருட்டு புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ரொறொன்ரோ ஹைட்ரோ அதிகாரிகள் விவாதித்தனர். இதற்காகவே $195 மில்லியன் செலவில் ரோஜர்ஸ் சென்ரர் அருகே New Bremner Transformer station அமைப்ப…

    • 0 replies
    • 489 views
  3. தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை நான் எப்போ சொன்னேன்?; ஆனால் முன்மொழிவேன்: கருணாநிதி சென்னை: அடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் எனக் கூறவில்லை; அப்படியே கூறினாலும் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பி உள்ள கருணாநிதி, பொதுக்குழுவில் வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன் என்று குழப்பமாகவே கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது மற்றும் கட்சி வளர்ச்சிக்கு நிதி வசூலிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட…

  4. புதுடெல்லி, டிச. 31- டெல்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிய கடைசி 8 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. மாணவியுடன் அவரது பெற்றோர் மற்றும் 2 தம்பிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். அவர்கள் மாணவி அருகிலேயே இருந்தனர். வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் அவருக்கு தலையில் காயம் இருப்பதை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இந்த நிலையில் மறு நாள் (வெள்ளிக்கிழமை) மாணவி உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின. கிருமி தொற்றும் உடல் முழுக்க பரவி விட்டதால் டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மாணவி பெற்றோரை சந்தித்த டாக்டர்கள் வருத்தம் தெ…

  5. என்ன எல்லாரும் சுண்டல ஒரு மாதிரி பாக்கிறிங்க? அப்பிடின்னு நான் சொல்லலப்பா ........ மேற்கத்திய நாடுகளின் பழக்க வழங்கங்கள் நகரங்களில் அதிகம் கடைபிடிக்கப்படுவதால் இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. இதனால் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் கிராமங்களை காட்டிலும் நகரங்களிலேயே அதிகம் நடக்கிறது என்று ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். மேலும், பெண்களை தாயாக மதிக்கும் நம்நாட்டின் கலாச்சாரத்தையும் மதிப்பையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேணிக்காக்க வேண்டும். இதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் அரசுக்கு, ஆர்.எஸ்.எஸ். தரும் என்றும் அவர் கூறியிருந்தார். இக்கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. பல்வேறு தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்தனர்…

    • 0 replies
    • 901 views
  6. சில வருட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் ரஜினியின், "வாய்ஸ்' பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது பிறந்தநாள் விழாவிலும், அதற்கு அடுத்து மத்திய அமைச்சர் சிதம்பரம் பிறந்தநாள் விழாவிலும் பரபரப்பை ஏற்படுத்திய களங்கள்.ரஜினியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த விழாவில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, சக நடிகர்கள் அவரை உசுப்பேற்றி விட்டனர். ஆனால், விழாவில் பேசிய ரஜினியோ, "அரசியலுக்கு வருவேன் என, பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டேன்' என, குறிப்பிட்டார். அரசிலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து, இந்த பேச்சால், ஏமாந்து போன ரசிகர்களுக்கு, அடுத்த நிகழ்ச்சியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார் ரஜினி. தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட, மத்திய அம…

  7. தேர்தலின் போது கேபிள் டிவியை முழுவதுமாக பயன்படுத்தி வென்ற ஒபாமா Posted by: Mathi Published: Sunday, January 6, 2013, 12:04 [iST] நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது கேபிள் டிவிதான் என்று ராய்ட்டர்ஸ் செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடப்பாண்டில் கேபிள் தொலைக்காட்சிக்கான விளம்பரமானது 650 மில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது 136 மில்லியன் டாலராக இருந்தது. மொத்தம் 6 லட்சம் கேபிள் விளம்பரங்களை ஒபாமாவும் 3 லட்சம் விளம்பரங்களை ராம்னியும் வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய சில வாரங்களில் ஒபாமா தரப்பு முழு வீச்சில் கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் பிரச்சாரம்…

  8. The magnitude 7.5 earthquake that struck off the Alaska coast overnight posed a brief tsunami threat to parts of Alaska and Canada but not to California's coast, officials said. The temblor was too far north to cause major wave activity in California. Officials issued a tsunami alert for the immediate area but canceled it a few hours later. There were no reports of damage from the temblor near Craig, Alaska. The Alaska Tsunami Warning Center later said the waves were too small to pose a threat, reaching just six inches above normal sea level in places such as Sitka and Port Alexander, the Associated Press reported. "Initially, in the first 15 to 20 minutes, th…

  9. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குளிரின் காரணமாக குறைந்தது இருபது பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய குளிர் காலத்தில் மட்டும் இந்தியாவில் சீதோஷ்ண நிலையின் காரணமாக உயிரிழக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கை நூற்று முப்பதாக அதிகரித்துள்ளது. இந்த குளிர் காலத்தில் மிக அதிகமான வெப்ப நிலைச் சரிவைச் சந்தித்த மாநிலம் உத்தர பிரதேசம் ஆகும். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல ஊர்களிலும், தலைநகர் தில்லியிலுங்கூட கடுங்குளிர் தாக்கியது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான வெப்ப நிலை தில்லியில் சென்ற வாரம் தில்லியில் பதிவாகியிருந்தது. பல நகரங்களில் அடர்த்தியான மூடுபனியும் பரவியுள்ளதால் பொதுப்போக்குவரத்து சேவைகளும் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன…

  10. ஈழத்தில் தமிழினத்தை வேர​றுத்த சிங்கள அரசு, வெளிநாடுகளில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதர​வாகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்த நினைக்கிறது. உள விலும் அச்சுறுத்தும் சம்பவங்​களிலும் கைதேர்ந்த சிலரை இந்த அசைன்மென்ட்டுக்காக தமிழ கத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஈழப் போராட்டங்களுக்கும் புலிகள் ஆத ரவு நிலைப்பாட்டுடன் இருக்கும் முக்கியத் தலைவர்​கள் சிலர்தான் இந்த உளவு மனிதர்களின் குறி'' என்று அதிரவைக்கும் தகவலைச் சொன்னார் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர். ஈழத்துடன் தொடர்பில் இருக்கும் உணர்வாளர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ''இலங்கையில் நடந்த நான்​காம் கட்ட ஈழப் போருக்குப் பிறகு, புலிகளின் செயல்பாடு அங்கே முற்றிலும் தடுக்கப்பட்டு​விட்டது. ஈழத்தைச் சிதைத்து விட்ட இலங்கை அரச…

    • 0 replies
    • 566 views
  11. ஆடையில்லாமல் சாலையில் கிடந்தபோது பொதுமக்களை வேடிக்கை பார்க்கவிட்ட பொலிசார்! - டில்லி மாணவியின் நண்பர் குற்றச்சாட்டு [saturday, 2013-01-05 08:24:41] பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த மாணவியின் ஆண் நண்பரின் பேட்டியை ஒளிபரப்பிய ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 228(ஏ) (பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படையாக தெரிவித்தல்) பிரிவின் கீழ் ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என டில்லி மாநகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்தார். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டபோது உடன் சென்றிருந்த அவரது நண்பர் வெள்ளிக்கிழமை இரவு ஜீ…

  12. வெனிசியூலா நாட்டின் நீண்டகால அதிபராக இருக்கும் கூகோ ஸாவாசின் உடன் நிலை மோசமடைந்துள்ளது. தற்போது கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு கடுமையான நெஞ்சுச்சளி தாக்கியுள்ளது. மூச்சுவிட பெரும் சிரமப்படுவதாக அவருடைய தகவல்துறை அமைச்சர் ஏர்னஸ்ரோ வில்லகாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் இவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவராகும், புற்றுநோயின் பாதிப்புடன் மார்புச்சளி, காய்ச்சல், மூச்சுவிட இயலாத நிலையில் மேலும் பல சிக்கல்களை அவருடைய உடல் சந்திக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. 58 வயதான ஸாவாஸ் பெரும் எண்ணெய் வளமுள்ள வெனிசியூலா நாட்டின் அதிபராக இருந்துகொண்டு அதி தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இ…

    • 3 replies
    • 669 views
  13. அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ப்ளேபாய் பத்திரிகையின் நிறுவனர் 86 வயதான ஹக் ஹெப்னர் கடந்த 31-ம் தேதியன்று 26 வயதான கிறிஸ்டல் ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். இதை உலகமே வியந்து பார்த்தது. இந்நிலையில், புதிதாகத் திருமணம் செய்து கொண்ட 26 வயதான கிறிஸ்டல் ஹாரிஸ் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு தனது குடும்பத்தை விரிவாக்க 86 வயதான ஹக் ஹெப்னர் விரும்புகிறார். ஆனால், ஹக் ஹெப்னர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நம்பிக்கை கிறிஸ்டல் ஹாரிஸுக்கு இல்லை. தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இருக்கிறது என்பதையும் எந்த வேலையைச் செய்து முடிப்பதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை இதன்மூலம் உலகுக்கு நிரூபிப்பேன் என்று ஹக் ஹெப்னர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறிவருகிறார். …

    • 0 replies
    • 604 views
  14. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் குடிபோதையில் அருகிலுள்ள பெண்ணையும், மற்ற பயணிகளையும் தொந்தரவு செய்ததால், குடிகாரரின் வாயை பிளாஸ்டிக் டேப் ஒன்றால் கட்டியதோடு, அவரை அவருடைய சீட்டில் வைத்து கட்டி விமான பயணம் முடியும்வரை கட்டி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த Andy Ellwood என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று முன் தினம் நீயூயார்க்கை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு விமானத்தில் குடிபோதையில் ஒருவர் விமானத்தின் உள்ளே பயங்கர கலாட்டா செய்ததாகவும், அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாகவும், இதனால் சக பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த மனிதரை பிளாஸ்டிக் டேப் வைத்து வாயை க…

    • 0 replies
    • 521 views
  15. தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப் பார்க்க முடிவதைப் பார்த்து வாயில் சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார். 51 வயதான அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனில் முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக் கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர் இவர்தான். பிரிட்டனில் லீட்ஸ் மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் இவரது பழைய கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர் வழங்கியிருந்த கையொன்று அவருக்குப் பொருத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வலது கைக்…

    • 0 replies
    • 438 views
  16. லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 10 கோடி டாலர், (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.540 கோடி) செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான சுவாமி நாராயணா கோயில் தற்போது பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. புருஷோத்தம சுவாமிநாராயண சன்ஸ்தா அமைப்பு சார்பாக உலகம் முழுவதும் பல இடங்களில் இதுவரை 67 கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் 68-ஆவது சுவாமிநாராயணா கோயில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் உள்ள ஹாலிவுட் நகரத்துக்கு அருகே பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி பக்தர்களின் வழிப்பாட்டிற்காக கோயில் திறக்கப்பட்டது. இருபது ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் ஐந்து கோபுரங்களால் சூழப்பட்டு இரண்டு பெரிய குவி மாடங்கள், நான்கு மே…

  17. தம்மை யார் எவ்வாறு ஆள்வது என முடிவு செய்வது மக்களின் சொந்த ஜனநாயக உரிமையாகும். இந்த விடயத்தினை வைத்து சில சர்வதேச விவகாரங்களை லாவகமாக பிரித்தானியா கையாள்கின்றது. ஸ்பெயின் பக்கத்தில் ஒரு சிறு பிரதேசம்: ஜிபல்டார். பலமுடன் இருந்த காலத்தில் வளைத்துப் போட்டது பிரிட்டன். அது தனது கோடியில் உள்ள ஒரு பிரதேசம். தனக்கு திருப்பித் தரப் படவேண்டும் என ஸ்பெயின் அடம் பிடித்த போது இந்த சுய நிர்ணய அஸ்திரத்தினை பாவிக்க, ஜிபல்டார் மக்களோ பிரிட்டிஷ் கொலனியாகவே இருக்க வேண்டும் என சொல்ல ஸ்பெயின் வாய் மூடிக் கொண்டது. ஹாங்காங் விடயத்தில் சீனாவுடன் 99 வருட ஒப்பந்தம் போட்டிருந்ததாலும், சீனா பெரும் பேட்டை பிஸ்தா என்பதாலும் பேசாமல் கிளம்பி வர வேண்டியதாகி விட்டது. இப்பொது அதே அடத்தினை ஆர்…

    • 0 replies
    • 788 views
  18. அசாமில் கணவன் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்த உள்ளூர் காங்கிரஸ் தலைவருக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் போடோ பிராந்திய கவுன்சில் காங்கிரஸ் கமிட்டி தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பிக்ராம் சிங் பிரம்மா. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது, பக்சா மாவட்டத்தில் உள்ள சபாகுரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் நேற்று அதிகாலை போடோ பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவர் வீட்டில்…

  19. உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வரும் தி எக்னாமிஸ்ட் என்ற பத்திரிகை 2013 ஆம் ஆண்டில் எந்த நாட்டில் பிறந்தால், இன்பமாக வாழலாம் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம்போல் சுவிட்சர்லாந்து முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. சுவிஸை அடுத்து நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது. சென்ற வருடம் ஐந்தாம் இடத்தை பிடித்திருந்த கனடா, இவ்வருடம் நான்கு இடங்கள் பின் தள்ளி, ஒன்பதாவது இடத்தையே பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா, முதல் 10 இடங்களில் ஒன்றாக இருக்க முடியவில்லை. அதற்கு 16வது இடமே கிடைத்துள்ளது. அமெரிக்கா 1988 ஆம் வருடம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மற்றும் …

  20. இளவரசர் ஹாரி ஒரு குடிகார நரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிக்கிறார் - ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவர் குல்புதின் ஹெக்மத்யார் பிரித்தானிய ஊடகத்தில் பகிரங்க விமர்சனம் Jan 03 2013 09:13:37 ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை வேரோடு அழிக்க அமெரிக்கா தொடர்ந்தும் போராடி வருவதால் வெறுப்படைந்துள்ள தீவிரவாதிகள் சிலர் பிரித்தானியப படைகளை தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆப்கனில் தங்கியிருந்த இளவரசர் ஹாரியை " குடிகார நரி " என வருணித்துள்ளார் ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவரான குல்புதின் ஹெக்மத்யார். அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிப்பதற்காகவே இளவரசர் பிரித்தானியாவிலிருந்து ஆப்கன் வந்துள்ளதாகவும் பிரித்தானியாவின் பிரபல ஊடகங்களில் ஒன்றான " தி டெய்லி…

    • 0 replies
    • 639 views
  21. Bank Of Canada இனால் அதிகப்படியான பாதுகாப்பிற்காகவும் , கள்ளத் தாள்களின் பெருக்கத்தை தவிர்க்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய $100 குழைம வங்கித் தாள்கள் நாட்டின் பல பகுதிகளில் கோடைக்காலத்தின் போது சூடு தாங்க முடியாமல் கரைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கனடிய மத்திய வங்கி என்ன பதில் சொல்ல விரும்புகிறது என கனடியன் பிரஸ் சில தினங்களுக்கு முன்னர் கேட்டுக் கொண்டதையடுத்து இப்பிரச்சினை தொடர்பில் 134 பக்க ஆவணங்களை Bank Of Canada வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சினை தேசப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதொடு சர்வதேச உறவுகளையும் சீர்குலைத்து விடும் என்பதால் இதன் பின்னணி குறித்த வெளிப்படையான விவாதங்க…

  22. இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண், தான் ஆசை ஆசையாக வளர்த்த ஐந்து பூனைகள் இறந்துவிட்டதால், அதனை நினைவு கொள்ள, அந்த ஐந்து பூனைகளின் உருவங்களை தனது முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த நியூடவுன் நகரில் வாழும் 23 வயது Fran Bailey என்ற பெண், ஐந்து பூனைகளை தனது வீட்டில் வளர்த்து வந்தார். திடீரென ஐந்து பூனைகள் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து போனதால், பெருத்த வருத்தமடைந்த அப்பெண், பூனைகளின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். பின்னர் அந்த பூனைகளின் நினைவு தனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் என கருதி, அந்த பூனைகளின் உருவங்களை தனது முதுகில் பெரிதாக பச்சை குத்திக் கொண்டார். இவரது பூனைப்பாசத்தைப் பார்த்து அப…

  23. தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுடப்பட்டு, இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது பள்ளி மாணவி மலாலா இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். பாகிஸ்தானில் 15 வயது பள்ளி சிறுமி மலாலாவை துப்பாக்கியால் சென்ற அக்டோபர் மாதம் தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு, தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த சிறுமி, மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் உள்ள Birmingham என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைகள் திருப்திகரமாக முடிந்துள்ளதால், இன்று மாலை தற்காலிகமாக லண்டனில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டியதிருப்பதால், அதுவரை லண்டனிலேயே தங்கியிருப்ப…

    • 0 replies
    • 708 views
  24. வணக்கம் உறவுகளே, மீண்டும் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கின்றது......ஊடங்களில் எல்லாம் முக்கிய செய்தியாக தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருப்பது கருணாநிதி அவர்களினுடைய பேச்சு அதாவது தனக்கு பிறகு ஸ்டான்லின் இருக்கின்றார் என்று அறிவித்ததன் மூலம் தி மு க என்ற மாபெரும் இயக்கத்தின் அடுத்த பொறுப்புக்கு ஸ்டான்லின் அவர்கள் வருவது ஏறத்தாள உறுதியாகி விட்டது.......... ஸ்டான்லின் ஒன்றும் அரசியலுக்கு தலைவரின் மகன் என்ற செல்வாக்கோடு வலம் வந்தவர் அல்ல மாறாக ஊர் ஊராக சென்று இயக்கத்தை வளர்த்து அரசியல் களம் பல கண்டு சிறை சென்று சென்னை மாநகராட்சி தலைவராக திறம்பட செயலாற்றி பின்பு அமைச்சராகி அதன் பின்பு துணை முதல்வராகி என்று திறம்பட செயலாற்றியவர் சரி இனி இன்றைய that's தமிழ் இல்…

  25. சியோல்: சாட்டிங் மூலம் அறிமுகமான சிறுமிகளை மிரட்டி பலமுறை உறவு கொண்ட காமக்கொடூரனுக்கு ரசாயண ஆண்மை நீக்கம் செய்ய தென் கொரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் கயவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் அல்லது அவர்களுக்கு ஆண்மை நீக்க ஆபரேசன் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. டெல்லியில் கடந்த 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி மரணம் அடைந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. அதேசமயம் பாலியல் சம்பவங்களைத் தடுக்க சம்பவங்களைத் தடுக்கும் வகையி…

    • 0 replies
    • 556 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.