உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
By AM. Rizath 2012-12-20 21:27:19 மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது. மேலும் குறுந்தகவல், ஈமெயில் மூலமாகவும் இது போன்ற வதந்திகளை நாசாவை ஆதாரம் காட்டி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் சிலர். இந்நிலையிலேயே நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன் இவற்றையெல்லாம் மறுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளிடுகையில், உலகம் நாளை அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்…
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்றைய காலகட்டங்களில் ஆபாச இணையதளங்களை சிறுவயது குழந்தைகள் காணக்கூடிய நிலையில் இருப்பது குறித்து தான் மிகவும் வருந்துவதகவும், இதுகுறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே இங்கிலாந்து அரசு அதிரடியாக எடுக்கும் எனவும் பிரதமர் கேமரூன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய்போது குறிப்பிட்டுள்ளார். இணையதளங்கள் உபயோகிக்கும்போது, ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் காணாத வண்ணம் தடை செய்வதில் பெற்றோர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என கூறிய அவர், ஆபாச இணையதளங்கள் வயது குறைந்த சிறுவர்கள் காண இயலாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறித்தியுள்ளார். சிறுவயதிலேயே ஆபாச இணையதளங்களை காணும் குழந்தைகளின் மனதில் பலவித இருட்டான எண்ணங்கள் தோன்றக்கூடிய அபாயங்கள் இருப்பதால், இதுகுறித்த…
-
- 0 replies
- 541 views
-
-
அமெரிக்காவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, 20 குழந்தைகள் உள்பட 27 பேர் சாண்டிகுக் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பலியான அதிர்ச்சியால் அமெரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை திடீரென மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளனர். அமெரிக்காவின் மிகவும் வன்முறை பிரதேசமாக கருதப்படும், Camden, New Jersey, போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் திரும்ப ஒப்படைத்தனர். அமெரிக்காவின் Camden, New Jersey, போன்ற நகரங்களில் வாழ்வோர், தங்களுடைய துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க நினைப்பவர்கள், உடனே தங்களுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்ற அற்விப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், ஆயிரக…
-
- 1 reply
- 957 views
-
-
தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 டிசம்பர், 2012 - 16:48 ஜிஎம்டி புதிய அதிபர் பார்க் ஹ்யாங் ஹே தென் கொரியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள பார்க் ஹ்யாங் ஹேயின் தந்தை ஒரு இராணுவச்சதிப் புரட்சியில் ஆட்சியை பிடித்த பிறகு 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தார். அவரது தந்தையும் முன்னாள் சர்வாதிகாரியுமான பார்க் யுங் ஹீ 1979 ஆம் ஆண்டு சுட்டிக் கொல்லப்பட்டார். மிகவும் நெருக்கமாக இருந்த போட்டியின் இறுதியில், பார்க் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சியின் வேட்பாளர் மூன் ஜே யின் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 60 வயதாகும் செல்வி பார்க், தற்போது…
-
- 0 replies
- 663 views
-
-
கடந்த 2010ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் கொடுமையான கணவனால் மூக்கு, காது போன்ற உறுப்புக்கள் அறுக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட ஆப்கன் இளம்பெண், தற்போது அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து, தன்னுடைய இயல்பான வாழ்க்கையை தொடங்கியிருக்கின்றார். ஆப்கானிஸ்தானில் ஒரு போர் வீரருக்கு Aesha Mohammadzai என்ற இளம்பெண்ணை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி அவருடைய தந்தை திருமணம் செய்து வைத்தார். திருமண வாழ்க்கை பிடிக்காமல், கணவன் வீட்டில் இருந்து தப்பிக்க நினைத்த ஆயிஷாவை, கணவன் கொடுமைப்படுத்தியோடு மூக்கு, காது போன்ற உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் தன்னுடைய தாத்தாவால் காப்பாற்றப்பட்ட ஆயிஷா, பின்னர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு தொ…
-
- 1 reply
- 647 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா பள்ளியில் ஆடம் லான்ஸ் என்பவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு, 20 குழந்தைகள் மற்றும் 7 ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 6 வயது Jessica Rekos என்ற சிறுமியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை Newtown church ல் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறுமியின் பெற்றோர் கதறி அழுத கண்ணீர்க்காட்சி, கல்நெஞ்சையும் கறைய வைக்கும்படி இருந்தது. Jessica Rekos என்ற சிறுமியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை அமெரிக்காவின் சர்ச் ஒன்றில் நடந்தபோது, அவருடைய மூத்த சகோதரி, இரண்டு சகோதரர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இனி தங்கள் வாழ்வில் Jessica Rekos இல்லாமல் எவ்வாறு கழிப்பது என்றே தெரியவில்லை என்று கண்ணீருடன் அவர்கள் க…
-
- 0 replies
- 672 views
-
-
அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்மவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்க அங்கு சட்டம் கொண்டுவரப்படுகிறது. கருக்கலைப்புக்கு குறித்த விஷயத்துக்கு சட்ட ரீதியாக ஒரு தெளிவைக் கொண்டுவர அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை அடுத்தே அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் அங்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் மரணமடைந்து ஏழு வாரங்கள் ஆன பிறகு இந்தச் சட்டம் அங்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்ட விரோதமான ஒன்றாக உள்ளது. தாயின் உயிருக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஆபத்து உள…
-
- 0 replies
- 405 views
-
-
வந்தாரை வாழ வைக்கலாமா : இன்று சர்வதேச இடம்பெயர்வோர் தினம் உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தி டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக, பொருளாதார, கலாசாரத்தில் அவர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். உலகளவில் 21 கோடி பேர் இடம்பெயர்ந்தோராக உள்ளனர். இதில் 49 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் உலக மக்கள்தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். யார்: இடம்பெயர்வோர் என்பவர், சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில், தஞ்சம் கேட்டோ, அகதியாகவோ, இன்னொரு நாட்டுக்கு விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ இடம் பெயர்ந்தோரை குறிக்கிறது. இந்த முறையான இடம்பெயர்தலை விட…
-
- 0 replies
- 600 views
-
-
இந்திய பிரதமர் மீது வழக்கு போடப்போவதாக மிரட்டும் 11 வயது சிறுமி லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார். "காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள…
-
- 0 replies
- 511 views
-
-
கொங்கோவின் முன்னாள் சிவில் இராணுவ தலைவரான மத்தியூ நுட்ஜோலோ சூய் இழைத்ததாகக் கூறப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றிலிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். கொங்கோ குடியரசின் ரிஷ் இற்றுறி மாகாணத்தில் பொகொறோ எனும் கிராமவாசிகள் 200பேரை 2003இல் கொலை செய்ததாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்கள், பொதுமக்கள் உயிரோடு எரிக்கப்பட்டதாகவும் பெண்கள் மீது பலாத்காரம் புரியப்பட்டதாகவும் குழந்தைகள் சுவரில் அடித்துக் கொல்லப்பட்டனர் எனவும் கூறியிருந்தனர். இருப்பினும் நுட்ஜோலோ, தான் இந்த தாக்குதலுக்கு கட்டளையிடவில்லை எனவும் சில நாட்களின் பின் தான் இதுபற்றி கேள்விப்பட்டதாகவும…
-
- 0 replies
- 280 views
-
-
மாயன் காலண்டரின் கூற்றுப்படி உலகம் அழிந்தால், அதிலிருந்து தப்பிக்க கலிபோர்னியாவை சேர்ந்த Ron Hubbard என்பவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடைய, லெதர் சோபா, பிளாஸ்மா டிவி அடங்கிய உருண்டை வடிவ ஆடம்பர வீடு ஒன்றை கட்டி விற்பனை செய்து வருகிறார். மிகப்பெரிய குண்டுவெடிப்பையும் தாங்கக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ள இந்த வீட்டின் உள்ளே, ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ளது போன்ற ஆடம்பர வசதிகள் கொண்டது. இந்த வீட்டை ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை வாடகைக்கோ அல்லது முழு விலை கொடுத்து விலைக்கோ வாங்கிக்கொள்ளலாம் என Ron Hubbard அறிவிப்பு செய்துள்ளார். மாயன் காலண்டரின் பட உலகம் அழிய நான்கே நாட்கள் இருப்பதாக எண்ணி, உலக அழிவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்பவர் இந்த வீட்டை பயன்படுத்திக் கொள்ளல…
-
- 7 replies
- 2.2k views
-
-
கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரன்ஸ்விக் எல்லைப்பகுதியில் இந்த வாரம் வானிலிருந்து வீழ்ந்த இரண்டு உலோகப் பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிவதில் கனடிய இராணுவம் தீவரமாக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு உலோகப் பொருட்களும், ஒரே பொருளாக வீழ்ந்து விசையின் தாக்கத்தினால் இரண்டாக உடைந்தனவா என்பதும் ஆராயப்படுகிறது. கியூபெக் மற்றும் நியூபிரன்வீக் மாகாண எல்லைப் பகுதியலுள்ள பெகன்மூக் பிரதேசத்திற்கு அண்மையில் காணப்பட்ட இந்த உலோகப் பொருட்கள் எவ்வாறு பூமியை வந்தடைந்தன என்பது பற்றியும் இது விமானமொன்றின் உதிரிப்பாகமா அல்லது செய்மதியையொத்த காலநிலைக் கண்காணிப்புக் கருவியா என்பது குறித்தே ஆராயப்படுகிறது. கனடிய இராணுவமும் கனடிய மத்திய பொலிசாரும் இந்த பொருள் வீழ்ந…
-
- 1 reply
- 693 views
-
-
புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் ஓடும் பேருந்து ஒன்றில் 23 வயது மாணவியின் நண்பரை அடித்துத் தூக்கி வெளியே வீசி விட்டு, ஒரு கும்பல் அம்மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளனர்.அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் நண்பர் கூறுகையில்,"இரவு 11 மணிக்கு முனிர்கா என்ற இடத்தில் ஒயிட்லைன் பேருந்தில் ஏறினோம்.அந்தப் பேருந்து புறப்பட்டு பத்து நிமிடமான நிலையில், பேருந்தில் இருந்த சிலர் எனது தோழியிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினர். இதை நான் ஆட்சேபித்ததையடுத்து அவர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர்.பின்னர் என்…
-
- 2 replies
- 744 views
-
-
சீன அரசு தன்னுடைய வீட்டை திருடிக்கொண்டதாக குற்றம் சுமத்தி, தனது வீட்டை ஒப்படைக்கும்படி 50 அடி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணை அதிரடிப்படையினர் காப்பாற்றி, விசாரணை செய்து வருகின்றனர். சீனாவின் Lia Sun என்ற 31 வயது பெண்மணி, நேற்று Zhujiang என்ற ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது Guagzhou நகர் போலீஸார் அதிரடியாக காப்பாற்றினர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய சீன அரசு ஆக்கிரமித்து கொண்டதாகவும், அதற்கான உண்மையான மதிப்பீட்டு தொகையைக் கொடுக்காமல், மிகவும் குறைவாக கொடுத்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. மேலும் …
-
- 0 replies
- 412 views
-
-
அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளி துப்பாக்கி சூடு நடத்திய Adam Lanza என்பவனின் வீட்டிற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். அதோடு, அந்த வீடு இருக்கும் சாலையில் போக்குவரத்தை தடை செய்து, வீட்டின் அருகில் இரண்டு காவலர்கள் காவல் காத்து வருகின்றனர். 20 பள்ளிக் குழந்தைகள் உள்பட 27 பேரை சுட்டு கொன்ற அமெரிக்காவை சேர்ந்த Adam Lanza என்பவன், தன்னுடைய தாயார் நான்ஸியுடன் வசித்து வந்த வீடு, Sandy Hook, நகரில் உள்ள Yogananda Road என்ற இடத்தில் உள்ளது. இந்த வீட்டை அதிரடியாக சோதனையிட்ட காவல்துறையினர், வீட்டை சுற்றிலும் டேப் சுற்றி, காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணை முடியும்வரை அந்த வீடு இருக்கும் சாலையில் போக்குவரத்தை தடை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 794 views
-
-
கனடா பிராம்டனில் - Steeles Ave & Airport Rd சந்திப்புக்கு அருகில் இரசாயணவாயு புகை பரவல் - அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவிப்பு: [Monday, 2012-12-17 21:59:36] Steeles Ave & Airport Rd சந்திப்பு பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற திடீர் விபத்தால் அப்பகுதியில் இரசாயணவாயு புகை பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதிக்கு மக்கள் செல்வதை தற்காலீகமாக தவிர்க்குமாறு அவசர சேவை பிரிவினர் கேட்டுக்கொள்கிறார்கள். பிற்பகல் 2 மணியளவில் அப்பகுதியிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இருந்து வெளியான விசவாயுபுகை அந்த பகுதியில் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. தீயை கட்டுப்படுத்துவதற்கு 50க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்களுடன் படையினர் தீவிர முய…
-
- 2 replies
- 504 views
-
-
தனது உடலை அழகுபடுத்துவதற்காக ஹாலிவுட் நடிகை முதல் உள்ளூர் நடிகைகள் வரை பலவிதமான அறுவை சிகிச்சை செய்திருப்பதை நாம் அறிவோம். ஆனால், ஒரு இளைஞன் தன்னை அழகுபடுத்துவதற்காக கிட்டத்தட்ட 100 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்பதே தற்போது ஆச்சரியப்படும் செய்தி ஆகும். இதற்காக இந்த இளைஞர் $100,000 செலவு செய்துள்ளார். இங்கிலாந்தில் 32 வயதான Justin Jedlica என்ற இளைஞர் தன்னை எப்போதும் அழகுபடுத்திக் கொள்வதில் மிகுந்த பிரியம் உள்ளவர். இதற்காக இவர் $100,000 டாலர்கள் வரை செலவு செய்து, 90 முதல் 100 அறுவை சிகிச்சைகள் செய்து தற்போது ஒரு அழகு பொம்மையாக காட்சியளிக்கின்றார். அழகாக இருப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அதற்காக நான் எத்தனை தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கும்…
-
- 0 replies
- 616 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறந்த குழந்தைகளுக்கு கன்ணீர் அஞ்சலி செலுத்தினார். அமெரிக்காவில் இதுபோன்ற கொடுமையான நிகழ்ச்சி இனிமேலும் நடக்காதவாறு, துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றும்போது உறுதிகூறினார். பின்னர் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர். அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து, குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்து, அந்த இடத்தை சிறிது நேரத்தில் கலகலப்பான இடமாக மாற்றினார் ஒபாமா. San…
-
- 0 replies
- 471 views
-
-
ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் விளையாட்டுத்தனமான காரியத்தால், தற்கொலை செய்த நர்ஸ், உடல் இன்று இந்தியாவில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிர்வா என்ற இடத்தில் உள்ள Our Lady of Health Church அருகிலுள்ள கல்லறையில் நர்ஸ் ஜெசிந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் இந்த இறுதிச்சடங்கில் கண்ணீருடன் கலந்து கொண்டனர். முன்னதாக உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் ஆகியோர் சேர்ந்து, ஜெசிந்தாவிற்காக, அவரது வீட்டில் வழிபாடு நடத்தினர். இதில் ஜெசிந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். நர்ஸ் ஜெசிந்தாவின் இற…
-
- 0 replies
- 2.3k views
-
-
2011 இல் பிரிட்டனில் நடத்தப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின் பிரகாரம்.. லண்டனில் வெறும் 45% மக்களே உள்ளூர் வெள்ளை பிரிட்டன் மக்களாக உள்ளனர். மிகுதிப் பேர் வெளிநாட்டவர்களாவர். நாடாளவிய ரீதியில் பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே முதன்மை வகிக்கிறது. போலந்து நாட்டவர்கள் இரண்டாம் இடத்தையும்.. பாகிஸ்தானியர்கள்.. மூன்றாம் இடத்தையும் தக்க வைத்துள்ளனர். 2001 கணக்கெடுப்பில் போலந்து நாட்டவர்களின் எண்ணிக்கை முதல் 10 க்குள் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும்.. குடியேற்றக்காரர்களின் வரவால் பிரிட்டன் வீட்டுப் பிரச்சனைக்கு ஆளாகி உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும்.. மத ரீதியில்.. கத்தோலிக்கர்களின் சனத்தொகை வீழ…
-
- 1 reply
- 795 views
-
-
அகமதாபாத்: குஜராத்தில் 3-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள 95 சட்டசபை தொகுதிகளில்,இன்று 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.பிற்பல 3 மணி நிலவரப்படி சராசரியாக 54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக காணப்படுவதால், பா.ஜ.வுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ள்தாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில்,குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மணி நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோடி,"இந்த தேர்தலின் மூலம், 3வது முறையாக ஆட்சி அமைக்கும் உரிமையை எங்களுக்கு வழங்கும் குஜரா…
-
- 0 replies
- 459 views
-
-
கனடாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பத்தில் உள்ள 6 வயது சிறுமி Ana Marquez-Greene என்பவர் அமெரிக்க பள்ளி துப்பாக்கி சூடு சம்பத்தில் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது. கனடாவில் உள்ள University of Manitoba என்ற இடத்தில் பணிபுரிந்த Jimmy Greene என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவிற்கு பணிமாற்றம் காரணமாக குடிபெயர்ந்தார். அவர் தன் இரண்டு குழந்தைகளை சமீபத்தில் துப்பாக்கி சூடு நடந்த Sandy Hook Elementary பள்ளியில் சேர்த்தார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கரமான துப்பாக்கி சூடு சம்பத்தில், இவருடை 6 வயது மகள் Ana Marquez-Greene பலியானார் என்ற சோகச்செய்தி கனடிய ஊடகங்களுக்கு தற்போது தெரியவந்துள்ளது. பலியான Ana Marquez-Greene சகோதரரும் இதே பள்…
-
- 1 reply
- 514 views
-
-
அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 20 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு போப்பாண்டவர் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சம்பவத்தை அறிந்து தான் மிகவும் அதிர்ச்சியுற்றதாகவும், பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். போப்பாண்டவர் வருத்தம் தெரிவித்த செய்தியின் வீடியோ பார்க்க....
-
- 0 replies
- 433 views
-
-
முன்னாள் இத்தாலிய பிரதமரும், 76 வயது கோடீஸ்வரருமான Silvio Berlusconi, தன்னை விட 50 வயது குறைவாக உள்ள தனது காதலியை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இரண்டுமுறை இத்தாலி நாட்டின் பிரதமராக பணியாற்றிய Silvio Berlusconi ஒரு கோடீஸ்வர தொழிலதிபரும் ஆவார். மனைவியை இழந்த இவருக்கு தற்போது வயது 76. இவர் தன்னை விட 50 வயது குறைவான, அதாவது 27 வயதுள்ள Francesca Pascale என்ற இளம்பெண்ணை காதல் புரிந்து வருகிறார். இந்த பெண்ணும் இவர் மீது தீவிர காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் Silvio Berlusconi தனது திருமணத்தை திடீரென அறிவித்துள்ளார். 26 வயது Francesca Pascale ஐ தான் மிகவும் நேசிப்பதாகவும், அதுபோலவே அவரும் தன் மீது மிகுந்த காதல் வைத்திருப்பதால், இருவரும் திருமணம் செய்…
-
- 0 replies
- 744 views
-
-
அமெரிக்காவில் உள்ள நியூட்டன் கத்தோலிக்க சர்ச் ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன் பள்ளியில் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கானோர் கூடினர். அதிபர் ஒபாமாவும் அந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக வருவதாக இருந்தார். இந்த வேளையில் அந்த சர்ச்சில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தவுடன், அமெரிக்காவே பரபரப்புடன் காணப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள், St Rose of Lima என்ற சர்ச்சின் உள்ளே அஞ்சலி நிகழ்ச்சிக்காக கூடியிருந்தபோது, வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன் போலீஸார் அதிர்ந்தனர். உடனடியாக மாநில அதிரடிப்படையினர் அடங்கிய ஒரு குழு சர்ச்சில் அதிரடியாக நுழைந்து வெடிகுண்டு சோதனை நடத்தினர். அவர…
-
- 1 reply
- 453 views
-