Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=4]நேற்று அமெரிக்காவில் பேட்மேன் ஓடிய தியேட்டரில் கொல்லப்பட்ட ஒரு பெண், சிறிது நாட்களுக்கு முன்பு டொரண்டோ ஈட்டன் மாலில் நடந்த துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்தவர் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. ஜூன் மாதம் 2ஆம் தேதி டொரண்டோவின் ஈட்டன் உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, ஜெசிக்கா காவி என்று அழைக்கப்படும் ஜெசிக்கா ரெட்ஃபீல்ட், (Jessica Ghawi, also known as Jessica Redfield, ) அந்த உணவகத்தில்தான் இருந்தார் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து தப்பித்த ஜெசிக்கா, நேற்று அமெரிக்க தியேட்டரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்ற வெள்ளிக்கிழ…

    • 0 replies
    • 448 views
  2. சிரியாவின் அரசாங்கப் படைகளுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் உருவான கடுமையான மோதல்கள் தலைநகர் டமாஸ்கஸில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. சிரியாவின் பல எல்லை நிலைகளை கிளர்ச்சிப்படைகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பலரால் கூறப்படுவதுபோல எதிர்த்தரப்புப் படைகள் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கின்ற போதிலும் அவர்களிடையே ஒரு ஒற்றுமையான முன்னெடுப்பை இன்னமும் காணமுடியவில்லை. அதிபர் அசாத்தின் நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள், இந்த வார குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதால், சிரியாவின் அரசாங்கம் பெருத்த பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. சிரியாவுக்கு வெளியே இருக்கும் அசாத்தின் எதிரிகளுக்கு இது நல்ல ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், வன்செயல்கள் தொடர்…

  3. ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்! முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கோர் இரத்த சாட்சியமாய், நோக்கியா நிறுவனத்தின் இயந்திரத்தால் கழுத்தறுக்கப்பட்டு, ஈராண்டுகளுக்கு முன்பு படுகொலையான இளந்தொழிலாளி அம்பிகாவை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இதோ அதன் நீட்சியாய் தனது இடது கை விரல்களைப் பறிகொடுத்து கூடவே தனது எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு தெருவில் நிற்கிறார், கலைவாணன் என்ற 22 வயது இளம் தொழிலாளி. செயல்துடிப்புமிக்க அந்த இளைஞனின் இணையில்லா கடும் உழைப்பையும் குருதியையும் சேர்த்தே சுவைத்து விட்டு, இன்று எஞ்சிய சக்கையாய் வெளியேற்றியிருக்கிறது, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள்…

  4. லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, பாதுகாப்பு பணிக்காக, 10 ஆயிரம் வீரர்களை சப்ளை செய்வதாக கூறியிருந்த தனியார் நிறுவனம், போதிய வீரர்களை சப்ளை செய்யாததால், குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. லண்டனில், வரும் 27ம் தேதி, ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. இந்த போட்டியை குலைக்க, பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வு துறை தெரிவித்துள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டி நடக்கும் அரங்கங்களுக்கு அருகே உள்ள கட்டடங்கள் மீது, ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.போலீசார், ராணுவத்தினரை தவிர்த்து, தனியார் நிறுவனத்தை சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை சப்ளை செய்ய, “ஜி4எஸ்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிறுவனம், தற்போது தி…

    • 0 replies
    • 416 views
  5. லாஸ் ஏஞ்செலஸ்: கடந்த 26 ஆண்டுகளில் முதல் முதலாக நஷ்டம் அடைந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2007ம் ஆண்டில் ரூ. 35,000 கோடியைத் தந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிய இணையதள விளம்பர நிறுவனமான aQuantive பெரும் நஷ்டத்தையே தந்துள்ளது. aQuantive நிறுவனத்தை வாங்கியதிலும் அதில் செய்யப்பட்ட முதலீடுகளும் நஷ்டத்தையே தந்துள்ளன. இந்த நஷ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது தான் தனது வரவு-செலவுக் கணக்கில் முழுமையாக சேர்த்து கணக்கை நேர் செய்துள்ளது. இதனால் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் மாதத்தில்) மைக்ரோசாப்ட்டின் கணக்கில் 492 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட்டின் பங்குகள் 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. இந்த நிறுவனம…

    • 1 reply
    • 842 views
  6. பிரான்ஸ் அதிபர், பிரதமருக்கான சம்பளத்தை 30 சதவீதம் வரை குறைக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக பிரான்ஸில் அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கான சம்பளத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கான சம்பளத்தை குறைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்தின் மாத சம்பளம் சுமார் ரூ.14 லட்சம் என்பதில் இருந்து ரூ.10 லட்சமாகக் குறையும். கடந்த மே மாதத்தில் ஹொலந்த், பிரான்ஸ் அதிபராகப் பதவியேற்ற பின் எடுத்த முதல் சிக்கன நடவடிக்கை இது…

  7. வருகின்ற ஓகஸ்ட் 12ஆம் திகதி சென்னையில் நடைபெறும் டெசோ மாநாடு திசை திரும்பியிருக்கிறது. "சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு" என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் வடசென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "இன்னும் எத்தனை ஆண்டுகளோ எனக்குத் தெரியாது. அதற்குள் மிச்சமிருக்கின்ற ஆண்டுகளில் தமிழ் ஈழத்திற்கான உரத்தை- அதற்கான பலத்தை-அதற்கான எழுச்சியை உருவாக்கி விட்டுத்தான் உங்களிடமிருந்து அல்ல- இந்த உலகத்தை விட்டே நான் விடைபெற விரும்புகிறேன்" என்று உருக்கமான உரை நிகழ்த்தி விட்டு, அந்தக் கூட்டத்தில்தான் டெசோவை மீண்டும் புதுப்பிக்கும் ஆசையை வெளியிட்டார். அந்த உரையின் இறுதியில் கூட, "தமிழ் ஈழம் பெறுவதற…

    • 1 reply
    • 529 views
  8. [size=5]கடந்த செவ்வாய் கிழமையன்று டொரண்டோவின் மௌன்டைன்வியூ சாலைக்கு (Mountainview Road) அருகே நடந்த கோர விபத்தில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்பட்டது. இருப்பினும் சரியான தகவல்கள் கிடைக்காததால் குற்றவாளியை போலிஸ் தேடி வந்தனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற சில மணி நேரங்களில் பிராம்ப்டனின் வாகன பழுதுபார்க்கும் மையத்திற்கு வெள்ளை வோல்வோ ட்ராக் (Volvo truck) ஒன்று வந்துள்ளதாக போலிசுக்கு தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு இன்று விரைந்த அதிகாரிகள் அது விபத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமே என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் வாகனத…

    • 4 replies
    • 709 views
  9. [size=1] [size=4] கடந்த சில தினங்களுக்கு முன்னர் டொரண்டோவையே உலுக்கிய குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மாநகர மேயர் ராப் போர்ட் , இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் இது போன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுப்பது குறித்து கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் , ஒண்டோரியோ முதல்வர் டால்டன் மக்கென்றி ஆகியோரிடம் தான் பேசியுள்ளதாகவும் கூறினார். [/size][/size] [size=1] [size=4]இது தொடர்பில் ஒண்டோரியோ அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இப்படியெல்லாம் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு சிறப்பு காவல் படையினரை உருவாக்க வேண்டும். அதற்கு ஒண்டோரியோ நிதியுதவி செய்ய வேண்டும் என ராப் போர்ட்…

  10. [size=4]ஐரோப்பிய நாடுகளுடன் கனடாவை ஒப்பிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முதன்மையான நாடாக ஜொலிக்கிறது கனடா என சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது பிரான்சிலிருந்து வெளியாகும் பிரெஞ்சு வார இதழ்களில் ஒன்றான L’Express. அதுமட்டுமன்றி பிரான்சில் வாழும் மக்களுக்கு கியூபெக் மட்டுமல்ல கனடாவின் எந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்தாலும் வளமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை ஊக்குவிக்கும் வகையிலும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் கனடா சிறந்து விளங்குவதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் கூறி வருகிறார். மேலும் பிற ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், பிரித்தானியா ஆகியவற்றில் வாழும் மக்களும் இதே எண்ணத்தையே கொண்டுள்ளனர். மேற்கத்திய நாடுகளில் திடமான…

    • 0 replies
    • 352 views
  11. டைம் – மன்மோகன்:சிரிப்பு சீனுகளுக்கிடையில ஒரு அழுகை சீனு! டைம் பத்திரிக்கைகாரன் மன்மோன் சிங் படத்த அட்டையில போட்டு ஏசியிருக்கானாம். காங்கிரசு அமைச்சருங்களும் கட்சிக் காரனுங்களும் அத கண்டிக்கதும், பிஜேபிகாரன் இதான் கோளுன்னு சத்தம் போடுறதும்னு டீவிகாரனுங்களுக்குத்தான் ஒரே கொண்டாட்டம். ஜனாதிபதி எலக்சன், பிராணாப்பு, சங்மான்னு சிரிப்பு சீனுகளுக்கு நடுவுல இப்பிடி ஒரு அழுக சீன். ’2002ல தூங்கி வழிஞ்ச டிரைவர்னு ஒங்காளு வாஜ்பாயிய இதே டைம் சொல்லிச்சேன்னு’ சிதம்பரம் பிஜேபிட்ட கேக்காரு. இதுக்கெடையில ‘காங்கிரசு காரனுங்க டைம்க்கு பதிலா டைம்ஸ் ஆப் இந்தியாவ எரிச்சிட்டாங்க’ன்னு இன்டர்நெட்டுல எல்லா பயக்களும் சிரிக்கானுங்க. ‘டைம்ணா என்ன டைம்ஸ் ஆப் இந்தியாண்ணா என்ன, ரெண்டுலயும் டைம்…

  12. Started by SUNDHAL,

    சிரியா அதிபர் காயமா? புதன் கிழமை நடை பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Hassan Turkmani அசாத்தின் மைத்துனர் General Assef Shawkat மற்றும் இந்நாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பலி ஆகி இருப்பதாக Syria தொலைக்காட்சி உறுதிபடுத்தி இருக்கு இந்த கூட்டத்தில் இருந்த அசாத்தும் காயப்பட்டு இருக்கலாம்னு உறுதிபடுத்த தகவல்கள் கூறுகின்றன. யாழ். Com காக சுண்டல் இந்த தாக்குதலுக்கு சிரிய கிளர்ச்சி குழு பொறுபெடுத்து இருக்கு

    • 4 replies
    • 804 views
  13. திருச்சியில் வசித்து வரும் இலங்கை பெண், 16.5 இலட்சம் ரூபா கடன் வாங்கியதற்கு கந்துவட்டி ௭ன்ற பேரில் ரூபா 59.4 இலட்சம் பணத்தையும், காணியையும் மிரட்டி வாங்கிக் கொண்ட குற்றச்சாட்டில் அங்கு நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த இலங்கை நபர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, கே.கே.நகர் பகுதியிலுள்ள சுந்தர் நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி ௭ன்கிற மனோராணி. இலங்கையைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி வந்து சுந்தர் நகரில் வசிக்கிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு மனோராணியின் தம்பி லண்டன் செல்ல பணம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், அதே பகுதியில் வசித்த இலங்கையரும், நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவருமான சாந்தகுமார் ௭ன்பரை அணுகி பணம் கேட்டுள்ளார். இதனைத்தொட…

  14. சர்வ‌தேச குற்றவாளி 97 வயதில் கைது [size=4]இரண்டாம் உலகப்போர் ந‌டைபெற்ற சமயத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை ‌கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச அளவில் தேடப்பட்ட நஜி (வயது 97), 7 தலைமுறைக்குப் பின்னர், ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் கைது செய்யப்பட்டார். [/size] [size=4]இத்தகவலை லண்டனிலிருந்து வெளிவரும் சன் பத்திரிகை,உறுதிப்படுத்தியுள்ளது. [/size] http://tamil.yahoo.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%B3-095400325.html

  15. பிரதமர் பதவியை நெருங்குகிறார் ராகுல் ; ‘ உரிய நேரத்தில் வருவேன் ’ கட்சியும், அரசாங்கமும் கெட்டப்பெயரை சுமந்து அல்லல்படும் இந்நேரத்தில் ராகுலை உயரிய பொறுப்புக்கு கொண்டு வர காங்., திட்டமிட்டுள்ளது. இதன்படி உயர் பொறுப்புக்கு வரும் முடிவை எடுத்து விட்டேன் என்றும், உரிய நேரத்தில் காங்., கட்சி தலைமை முடிவை எடுக்கும் என்றும் இன்றயை பேட்டியில் ராகுல் சுருக்கென 2 வரி பதிலில் தெரிவித்தார். [size=3] [size=4]ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி என்ற பல பிரச்னைகளால் பிரதமர் பெயர் பெருமளவுக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்., கட்சியில் மாற்றம் வருமா ? பிரதமர் பதவிக்கு புதிய முகம் அமர்த்தப்படுமாக என்ற பேச்சு தற்போது எழுந்திருக்கிறது. இதனையடுத்து ராகுல் நோக்க…

    • 0 replies
    • 557 views
  16. தனக்கு சார்ப்பான நாடுகளின் பயங்கரவாதச் செயலை தடுக்க நடத்தப்படும் தற்கொலைத் தாக்குதல்களை பயங்கரவாதம் என்று வரையறுக்கும் அமெரிக்கா தானும் அதே தாக்குதல் பாணிகளை சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களைக் கொண்டு நடத்தி வருகிறது. ஆனால் அது ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியாம். அது பயங்கரவாதம் இல்லையாம். ஏனெனில் தனது தலைமையில் நடந்தால் அது தற்கொலை தாக்குதல் என்றால் என்ன மனிதப் படுகொலைகள் என்றால் என்ன அவை எல்லாம் அமெரிக்காவின் ஆயுத பலத்தின் முன் நியாயமானவையாகவே காட்டப்பட்டு வருகின்றன. சிரியாவின் தலைநகரில் நிகழ்ந்த இன்றைய தற்கொலைத் தாக்குதலில் சிரிய அரசின் உளவு அமைப்பின் கட்டிடம் ஒன்று இலக்கு வைக்க்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த கட்டிடத்தினுள் சிரிய அரசின் முக்கிய அ…

  17. [size=5] கியூபெக்கில் பலத்த சூறாவளிக்காற்று. 6,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு. [/size] [size=5] கியூபெக்கில் பலத்த சூறாவளிக்காற்று வீசத் தொடங்கியுள்ளதையடுத்து இன்று கியூபெக் நகரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் எனவும் 2 சென்டிமீட்டர் அளவிலான பனிக்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [/size] இந்த புயலினால் தென் மேற்கு கியூபெக் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் கனடாவில் பணிபுரியும் வானிலை அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆன்ட்ரே கேண்டின் கூறியுள்ளார். தென்மேற்கு கியூபெகின் சில பகுதி…

    • 0 replies
    • 534 views
  18. [size=1] [size=1]கடந்த சில நாட்களுக்கு முன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மனித உடல் உறுப்புகள் அடங்கிய பார்சல் ஒன்று வந்து கனடா முழுவதையும் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. அந்த சம்பவத்தின் குற்றவாளி ரோக்கோ பின்னர் கைது செய்யப்பட்டான். [/size][/size] [size=1] [size=1]நேற்று ரோக்கோவின் பெயருக்கு ஒரு மர்ம பார்சல் கனடாவின் Montreal தலைமை தபால் நிலையத்திற்கு வந்தது. அதைப் பார்த்த அஞ்சல்துறை அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். பின்னர் தலைமை அஞ்சல் அதிகாரி முன்னிலையில் அந்த பார்சல் திறக்கப்பட்டது. அதன் உள்ளே வெள்ளை நிறத்தின் பவுடர் இருந்தது. மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப் பவுடராக இருக்கலாம் என அஞ்சல் அதிகாரிகள் அச்சம் அடைந்தனர்.[/size][/size] [size=1] …

    • 0 replies
    • 649 views
  19. [size=4]நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 3.5 சதவீதமாக குறையும் என, பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது. [/size] [size=4]உலக நாடுகளின் கடன் பெருகி வருவது, இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது, போன்றவைதான், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைய காரணம் என, இந்த நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]இந்திய பொருளாதாரம்மேலும் விவரங்கள் வருமாறு:[/size] [size=4]நடப்பாண்டில், உலக பொருளாதார வளர்ச்சி, 3.6 சதவீதமாக இருக்கும் என, கடந்த ஏப்ரலில் மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 0.7 …

    • 0 replies
    • 663 views
  20. மியான்மர்: கலவரமும் நிலவரமும் அண்மையில் செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டவைகளில் மியான்மரின் வங்காள முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் நண்பர் இக்பால் செல்வன் தன்னுடைய கோடங்கி தளத்தில் எழுதிய இந்தக் கட்டுரை வரலாற்றுத் தகவல்களுடன் கிடைத்தது. அந்தக் கட்டுரையை செங்கொடி வாசகர்களுக்கும் தருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த மீள் பதிவு. உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் நடத்தும் கலவரங்கள், உழைக்கும் மக்களே இரண்டு பிரிவாக பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்த்து புரியும் கலவரங்கள், தேசிய இனப் பிரச்சனைகள் போன்றவை எல்லாம் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உரு…

  21. மத்திய அரசு கூடங்குளத்தில் ரூ.32 ஆயிரம் கொடி செலவில் மேலும் 2 மெகா அணு உலைகளை அமைக்க முடிவு செய்தது. இதன்படி 3 மற்றும் 4-வது மெகா அணு உலைகள் அமைக்கும் பணி ரஷ்யாவிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அணுசக்தி துறை சிறப்பு செயலாளர் ஏ.பி.ஜோஷி, ரஷியாவின் நிதித்துறை துணை மந்திரி எஸ்.ஏ. ஸ்டோர்சாக் ஆகியோர் மாஸ் கோவில் கையெழுத்திட்டனர். கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க ரஷியா, இந்தியாவுக்கு ரூ.17 ஆயிரம் கோடி கடன் வழங்க முன் வந்துள்ளது. மீத முள்ள ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும். இந்த 2 மெகா அணு உலைகளில் இருந்து அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்திய அணுமின் கழக அதிகாரிகள் கூறும்போது, கூடங்குளம் பகுதியில் 2 அணு உலைகளில் இருந்து ஒர…

  22. இந்தியப் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிப் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட 36% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. 7% அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 56, 57 ரூபாயாக வீழ்ச்சியடைந்து, மேலும் சரிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்புச் சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள், குறிப்பாக இறக்குமதியாகும் எண்ணெயின் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதோடு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 19.6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறது அரசு. முந்தைய ஆண்டுகளில் இந்தியப் பொருள…

  23. உலகின் பெரும்பான்மையான நாடுகளின் பொருளாதாரம் கடுமையான சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளது சர்வதேச நாணய நிதியம். இதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த நாடுகளின் அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. வளர்ச்சியடைந்த பிற நாடுகளின் பொருளாதார நிலையுடன் ஒப்பிடும் போது சமீப காலமாகவே கனடா சீரான வளர்ச்சி கண்டு வருவதாகவும் ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 188 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியம் இந்த வருடம் கனடாவின் பொருளாதார வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் , அடுத்த ஆண்டு 2.2 விழுக்காடாகவும் மெல்ல உயரக் கூடும் எனவும் கணித்துள்ளது. அதே நேரத்தில் பிற நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சீரான பாதையில் செல்லவில்லை என்பதையும்…

    • 2 replies
    • 645 views
  24. ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்'' என்று அந்த மேடையிலேயே லாரன்ஸ் …

  25. கனடா,அமெரிக்க நாடுகளை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள நேரத்தில் அது வெடிக்கும் எனவும் மர்ம டெலிபோன் ஒன்று வந்ததால், கனடிய எல்லையில் பரபரப்பு காணப்பட்டது. உடனே காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் அம்பாசிடர் பாலத்திற்கு விரைந்து வந்து முதலில் போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் பாலம் முழுவதும் சல்லடை போட்டு சோதனை இடப்பட்டது. வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அம்பாசிடர் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த அம்பாசிடர் பாலம் Windsor மற்றும் Detroit நகரங்களை இணைக்கும் மிக முக்கிய பாலம் ஆகும். இந்த பாலத்திற்கு ஏதாவது அசம்பாவிதம் ஆனால், …

    • 0 replies
    • 496 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.