உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
அமெரிக்காவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் சீன அரசுடன் உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று (புதன்) புறப்பட்டு பீஜிங்கை வந்தடைந்தார். இவ்விஜயத்தின் போது சீன அரசுடன் மிகச் சிக்கலான இராஜதந்திர நகர்வுகள் குறித்தும் பொருளாதாரம் குறித்தும் கிளின்டன் பேசவுள்ளார். இவற்றில் சீனாவின் கண் பார்வையற்ற மனித உரிமை ஆர்வலரான சென் குவாங் செங் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு நிமித்தம் தஞ்சம் கோரியிருக்கும் விடயம் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் கிராமங்களில் மேற்கொள்ளப் படும் மனித உரிமை மீறல்களினைத் தட்டிக் கேட்பவரான கண் பார்வையற்ற சென் குவாங் செங் ஷான்டொங் மாகாணத்திலுள்ள இவரது கிராமத்தில் மனித உரிமைகள் அமைப்பின் உறுப…
-
- 0 replies
- 464 views
-
-
அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று ஆப்கானில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது ஒருநாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இத்தாக்குதல்கள் ஒபாமாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன. இச்சம்பவத்திற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லாடனின் நினைவு தினத்தை முன்னிட்டு தீவரவாதிகள் திடீர் தாக்குதலி்ல் ஈடுபடக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை ஆப்கான் பொலிஸாருக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆப்கானி்ன் கிழக்கு மாகாணத் தலைநகரில் அமெரிக…
-
- 0 replies
- 565 views
-
-
ஒசாமா பின்லேடனால் 10 ஆண்டுகளுக்கு முன் தரைமட்டமாக்கப்பட்ட நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடம் மீண்டும் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய்க்கு அடுத்ததாக உலக உயர்ந்த கட்டிடமான இதன் உயரம் 541 மீட்டர். செப்டம்பர் 11, 2001ல் வெடிகுண்டுகளை நிரப்பிய விமானங்கள் மூலம் நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கட்டிடங்களை பின்லேடனின் தீவிரவாதிகள் மோதி தகர்த்தனர். நூற்றுக்கணக்கானோர் பலியான அந்த பயங்கரம் நடந்து 10 ஆண்டு தேடலுக்கு பிறகு கடந்த ஆண்டு மே 2ம் தேதி பாகிஸ்தானில் பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். தரைமட்டமான உலக வர்த்தக மைய கட்டிட இடத்தில் மீண்டும் பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. அதன் உச்சியில் 124 மீட்டர் உயர தூண் அமைக்கும் பணி …
-
- 0 replies
- 556 views
-
-
திங்கட் கிழமை அதிகாலை 4.50 மணிக்கு சீனா அதன் தென் மேற்கு மாநிலமான சிச்சுவானிலிலுள்ள க்சிச்சாங் ஏவுகணைத் தளத்திலிருந்து பெயிடோவு-2 எனப்படும் இரு செய்மதிகளை Long March - 3B எனும் ராக்கெட்டின் மூலம் பூமியைச் சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதைக்கு செலுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் சீனா பெயிடோவு ரக செய்மதிகள் 11 ஐ விண்ணில் செலுத்தியிருந்தது. இச் செய்மதிகள் புவியியற் கண்காணிப்புக்காகவும் தகவல் தொடர்பு வலைப் பின்னல்களின் குறித்த இலக்குகளை நிர்ணயிப்பதற்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இரு செய்மதிகளை ஒரேயொரு ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்துவது சீனாவுக்கு இதுவே முதன் முறையாகும். இம்முறை செலுத்தப்பட்ட இச் செய்மதிகள் பெயிடோவு நெட்வேர்க்கின் துல்லியத்தை அதிகரிக்க அல்லது அத…
-
- 0 replies
- 702 views
-
-
வரும் மே 7ம் திகதி சுமார் 40 வருடங்கள் கழித்து சிரியாவில் உள்ள பல கட்சிகளும் ஆசனங்களைப் பெற வழிவகுக்கும் பாராளுமன்றத் தேர்தல் சிரியாவில் இடம்பெறவுள்ளது. சிரியாவில் ஏற்கனவே பல தடவை இந்த தேர்தல் பிற்போடப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. இதற்கு முன்னர் சிரியாவின் பிரதான கட்சியான தேசிய முற்போக்கு முண்ணனிக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் நிற்பதற்கு அனுமதி இருந்தது. எனினும் அங்கு ஆளும் தரப்புக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் புரட்சி வெடித்து பல்லாயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஐ.நா இன் தலையீட்டை அடுத்தே சிரிய அரசு இந்த தேர்தலை மும்மொழிந்துள்ளது. இதற்காக எட்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த சுமார் 7000 வேட்பாளர்கள் பாராளுமன்றத்தி…
-
- 0 replies
- 444 views
-
-
வாஷிங்டன் : பாகிஸ்தானுக்குள் ஆளில்லா விமான குண்டு வீச்சை உடனே நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவை பாகிஸ்தான் எச்சரித்தது. ஆனால், தாக்குதல் தொடரும் என்று அமெரிக்கா நேற்று பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையோர மலைப் பகுதிகள் அல்கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது. எனவே, தீவிரவாதிகளை கொல்ல ஆப்கன் படை தளத்தில் இருந்து ஆளில்லா விமானங்களை அமெரிக்கா அனுப்பி குண்டு வீசி வருகிறது. சமீபத்தில் அப்படி நடந்த குண்டு வீச்சில் தீவிரவாதிகளுக்கு பதிலாக பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியாகினர். அதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இனி அனுமதியின்றி பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த கூடாது என்று எச்சரித்தது. இதுபற்றி நேற்று முன்தினம்…
-
- 0 replies
- 466 views
-
-
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் ஆகின்றது. எனினும் இதற்குப் பிறகும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இன்னும் சோமாலியா, யேமன் போன்ற மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் அல்கொய்தா மற்றும் தலிபான் இயக்க போராளிகளின் தாக்குதல் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. அல் கைதாவின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு தினம் நெருங்கும் நிலையில் பாகிஸ்தான் அல் கைதாவிற்கு புதிய தலைவர் நியமிக்கபப்ட்டுள்ளார். பார்மன் அலி ஷின்வாரி எனப்படும் 30 வயதுடைய இந்நபர் பாகிஸ்தானின் கைபர் கணவாயைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர் என்பதுடன் ஆங்கில அறிவும் கணனி தகவற் தொழில் நுட்ப அறிவும் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 373 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன்,முருகன்,பேரறிவாளன்,நளினி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரும் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர்.இந்த மனுக்களை நிராகரித்து ஜனாதிபதி, கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.இதையடுத்து,வேலூர் சிறையில் அவர்களை செப்டம்பர் 9-ம் தேதி தூக்கிலிடுவ…
-
- 4 replies
- 610 views
-
-
சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச (Pornographic) திரைப்படக்காட்சிகள் அடங்கிய மெமரி டிஸ்க் ஒன்றில் அல் கைதாவினரின் நூற்றுக்கு மேற்பட்ட இரகசிய உள்ளக தகவல்கள் உள்ளடங்கியிருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மனிய புலனாய்வு பகுறியீட்டாளர்கள் (Cryptologists) தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் - புடாபெஸ்ட், ஹங்கேரி நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு ஜேர்மனுக்கு திரும்பிய 22 வயதுடைய ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர், பேர்லினில் கடந்த வருடம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார். அவர் தனது உள்காற்சட்டையினுள் மறைத்து வைத்திருந்த, குறித்த ஆபாச காட்சிகள் அடங்கிய மெமரி ஸ்டிக்கை மீட்டெடுத்த ஜேர்மனிய புலனாய்வு காவற்துறையினர் அதனை ஆராய்ந்த போதே அதில் அல்கைதாவின் இரகசிய தகவல்கள் இருந…
-
- 0 replies
- 721 views
-
-
CANBERRA, Australia (AP) — An Australian billionaire said Monday he'll build a high-tech replica of the Titanic at a Chinese shipyard and its maiden voyage in late 2016 will be from England to New York, just like its namesake planned. Weeks after the 100th anniversary of the sinking of the original Titanic, Clive Palmer announced Monday he has signed a memorandum of understanding with state-owned Chinese company CSC Jinling Shipyard to build the Titanic II. "It will be every bit as luxurious as the original Titanic, but ... will have state-of-the-art 21st-century technology and the latest navigation and safety systems," Palmer said in a statement. He called the pro…
-
- 0 replies
- 408 views
-
-
தமிழகத்தில் ஜூன் 12ஆம் திகதியன்று மீண்டும் ஓர் இடைத் தேர்தல் மோதல் உருவாகப் போகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், எதிரணியில் இருக்கும் தி.மு.க.வும் களத்தில் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எளிமை மிக்கவராக திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இறந்ததையொட்டி புதுக்கோட்டை இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே சங்கரன்கோவில் இடைத் தேர்தலை விட அதிக எண்ணிக்கையில், அதாவது 52 சிறப்பு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து களமிறங்கியுள்ளது அ.தி.மு.க. அதுமட்டுமல்ல, கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுக்காமல் தானே களமிறங்குகிறது. புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவித்த அ…
-
- 0 replies
- 374 views
-
-
அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா நதியில் தனியாருக்கு சொந்தமான பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை மாலை இவ்விபத்து நடைபெற்றுள்ளது. இப்படகில் சுமார் 350 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். கடும் காற்று மற்றும் மழை போன்ற மோசமான காலநிலையில் சிக்கி இப்படகு விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துப்ரி மாவட்ட படகு துறை முகத்திலிருந்து நதியின் எதிர்ப்புறமுள்ள மெடார்டாரி எனும் இடத்துக்கு புறப்பட்டுச்சென்ற குறித்த இரண்டு அடுக்கு படகு, நதியின் மத்தியில் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 546 views
-
-
லண்டனில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் போது, பாதுகாப்புக்காக மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது ஏவுகணைகளை நிறுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வரும் ஜூலையில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால், போட்டி நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிழக்கு லண்டன் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் ஏவுகணை நிறுத்த இங்கிலாந்து ராணுவம் முடிவு செய்துள்ளது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகள், லெக்சிங்டன் பில்டிங் வாட்டர் டவர் மீது நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த டவரில் மக்கள் வசிக்கு…
-
- 1 reply
- 398 views
-
-
பர்மிய தமிழரான நண்பர் ஒருவரின் ... என் நாடான பர்மா வில் , கோவில் ஒன்றில் திருவிழா , அங்கே நமது தமிழர்களை சந்திக்கும் பொது அவர்களுக்கு நமது தமிழ் தேசிய இன விடுதலையை பற்றி தெரியப்படுத்தவும் , உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்களாய் ஒன்று படவேண்டும் என்றும் ஈழ விடுதலைக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும் துண்டு சீட்டு விநியோகம் செய்தபோ எடுத்த புகைப்படம் ............ என் நாடான பர்மா வில் , கோவில் ஒன்றில் திருவிழா , அங்கே நமது தமிழர்களை சந்திக்கும் பொது அவர்களுக்கு நமது தமிழ் தேசிய இன விடுதலையை பற்றி தெரியப்படுத்தவும் , உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்களாய் ஒன்று படவேண்டும் என்றும் ஈழ விடுதலைக்காக அவர்கள் என்ன செ…
-
- 1 reply
- 604 views
-
-
சோனியாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு அடி போலீசார் சரமாரியாக தாக்கியதால் மக்கள் கோபம் கர்நாடக மாநிலம் தும்கூரில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவருக்கு எதிராக பெண் ஒருவர் கறுப்புக் கொடி காட்டியதால், பெரும் பரபரப்பு உருவானது. கறுப்புக் கொடி காட்டிய அந்தப் பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கியதால், மக்கள் கோபம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் தும்கூரில், சித்த கங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிகளின் 105வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்று பேசினார். அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து, தங்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறியபடி,…
-
- 0 replies
- 467 views
-
-
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு நேற்று டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு விவாழில் கலந்து கொண்ட அவருக்கு, பல்கலைக்கழக வேந்தரும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுமான எம்.ஏ.ஜாகி டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதன் போது கருத்துரைத்த பான் கீ மூன், நான்கு தசாப்தகாலத்திற்கு முன்னர் இந்தியாவில் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அதற்கான ஆதாரமாக இன்று பட்டம் பெற்றிருக்கிறேன் என்றார். மேலும் தனது மகன் இங்கு தான் பிறந்ததாகவும், தனது மகளின் கணவரும் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா தனது மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான சவால்க…
-
- 3 replies
- 447 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மே மாதம் 5ம் தேதி இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் ஜூன் 13ம் தேதி இந்திய - அமெரிக்க உறவு குறித்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதில் ஹிலாரி பங்கேற்க உள்ளார். இதற்கிடையில் மே 3-4ம் தேதி அமெரிக்கா - சீனா இடையே பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பான 4வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஹிலாரி திட்டமிட்டிருந்தார். சீனா வந்தாலும், இந்திய சுற்றுப் பயணம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை. இந்நிலையில், திடீரென தனது பயண திட்டத்தை ஹிலாரி மாற்றி உள்ளார். சீனாவில் நடக்கும் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு மே 5ம் தேதி முதல் 8ம் தேதி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 524 views
-
-
இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடு இந்தியா! அதிர்ச்சி தரும் ஆய்வு உலகிலேயே இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட வயதிலேயே பெண்கள் தாயாகி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் யுனெஸ்கோ நிறுவனம் பெண்கள் குறித்து நடாத்திய ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 30 வீதமான பெண்களுக்கு டீன் ஏஜிலேயே திருமணம் செய்துவைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதாவது 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணங்கள் நடப்பதாகவும், அதில் 22 வீதமான பெண்கள் 18 வயதை தாண்டுவதற்கு முன்பாக்வே தாயாகி விடுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதேப்போன்று, உலகம் முழுவதும் 47 விழுக்காடு பெண்கள் 20 முதல் 24 வ…
-
- 1 reply
- 489 views
-
-
உலகளவில் 60 சதவீதமான பாலியல் வன்முறைகள் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளின் மீதே மேற்கொள்ளப்படுகின்றன எனவும் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மூன்று மில்லியன் பெண் பிள்ளைகள் பாலுறுப்பு சிதைக்கப்படும் அல்லது வெட்டி அகற்றப்படும் ஆபத்தில் உள்ளதாகவும் அண்மைக்கால ஐ.நா.அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. குடித்தொகை மற்றும் அபிவிருத்தி ஆணையகத்தின் 45ஆம் அமர்வில் 'குடித்தொகை நிகழ்ச்சி திட்டங்களை கண்காணித்தல் -கட்டிளமை பருவத்தினர் மற்றும் இளைஞர் மீதான விசேட கவனம்' என்னும் அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் சமர்பிக்கப்பட்டது. மில்லியன் கணக்கான பெண் பிள்ளைகள் தேவையற்ற கர்ப்பம், பாதுகாப்பு கருக்கலைப்பு, பால்வினை நோய்கள் என்பவற்றை தவிர்க்கும் முறைகளை அறியாதுள்ளனர் என இந்த அறிக்க…
-
- 0 replies
- 326 views
-
-
747 விமானத்தின் முதுகில் ஏறி நியூயோர்க் வந்திறங்கிய விண்வெளி விமானம். இந்த விண்வெளி விமானத்தை அடுத்த ஆடி மாதத்திலிருந்து நியூயோர்க் கப்பல் நூதனசாலையில் பார்வைக்காக வைக்கப்படும் New York (CNN) -- The space shuttle Enterprise, mounted atop a 747 jumbo jet, swooped across the New York City skyline on Friday before touching down at the city's John F. Kennedy International Airport, bringing an end to its final flight. It took off from Virginia's Dulles International Airport with a flight plan that included fly-bys of the Statue of Liberty and other Gotham landmarks. It is ultimately bound for its new home at the city's Intrepid Sea, Air and Space Museum. "This…
-
- 0 replies
- 702 views
-
-
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பதவிவிலக முடியாது. முடிந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி சவால் விடுத்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கிலானி குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதற்கு கட்டுப்பட்டு கிலானி உடனடியாக பதவி விலக வேண்டும் என நவாஸ் ஷெரிப்பின் பிஎம்எல்,என் மற்றும் இம்ரான் கானின் டெரிக் இ இன்ஷாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 327 views
-
-
போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய ராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது. இதற்கிடையில், வடகொரியாவை நிறுவிய கிம் சங்கின் 100,வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தரக்குறைவாக தென் கொரியா விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரிய ராணுவ அதிகாரிகள், தென் கொரியா மீது குண்டு வீசி 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தோற்கடிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்…
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் நவீன செயற்கை கோளான ராடார் இமேஜிங் செய்மதி ரிசாட் - 1 இன்று காலை 5.47 மணியளவில் சிறீஹரிகோட்டா தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. சந்திராயன் - 1 மற்றும் ஜி.சாட் -12 ஆகிய செயற்கை கோள்களை விண்ணுக்கு ஏவிய பி.எஸ்.எல்.விசி -19 ராக்கெட் மூலமே 1858 கிலோ எடையுள்ள ரிசாட் 1 செய்மதியும் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. தற்போது ரிசாட் -1 பூமியின் சுற்றுவட்ட பாதையில் தன்னை வெற்றிகரமாக இணைத்து கொண்டுள்ளதாக விஞ்னானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 வருட கால கடும் உழைப்பில் முற்றுமுழுதாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரிசாட்-1 செய்மதியின் வடிவமைப்புக்காக இஸ்ரோ மொத்தம் ரூ.498 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்மதி ஏவும் திட்டத்தின் இயக்குனரான வளர்மத…
-
- 1 reply
- 697 views
-
-
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மகன் சில டெலிகம் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டன . இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது மத்திய நிதி துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். இந்நேரத்தில் இந்த பதவியை பயன்படுத்தி இவரது மகன் கார்த்தி சிதம்பரம் சில ஆதாயங்களை பெற்று கொடுத்ததாகவும், சில குறிப்பிட்ட நிறுவனங்களில் கார்த்தி பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், மேலும் அன்னிய முதலீட்டு தொகை கிளியரன்ஸ் கொடுக்க நிதி …
-
- 0 replies
- 341 views
-
-
போபர்ஸ்: குவாத்ராச்சிக்கு லஞ்சம் தரப்பட்டது ஏன்?; சோனியா விசாரணை நடத்தியிருக்க வேண்டும்- சித்ரா வியாழக்கிழமை, ஏப்ரல் 26, 2012, 9:45 [iST] டெல்லி: போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் ரூ. 64 கோடி லஞ்சம் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முன்னாள் இந்து பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் அளித…
-
- 1 reply
- 381 views
-