உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26647 topics in this forum
-
புலியை... நேருக்கு நேர் சந்தித்து, போட்டோ எடுத்த பிரதமர் மோடி! ராய்ப்பூர்: ராய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் புலியை பிரதமர் மோடி எடுப்பது போன்ற புகைப்படம் டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு விழா "ராஜ்யோத்சவம்' என்ற பெயரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அம்மாநிலத்தில் உள்ள நந்தன் வனவிலங்குகள் பூங்காவைப் பார்வையிட்டார். பூங்காவில் இருந்த விலங்குகளைப் பார்வையிட்ட அவர், வேலி அருகே நிற்கும் புலியைத் தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார். பிரதமர் கேமராவில் படம் பிடிப்பது போன்ற…
-
- 2 replies
- 780 views
-
-
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேரலைகள் ஏற்படும் எனவும் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மாகாணங்களில் ஒன்றான அலஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. http://athavannews.…
-
- 0 replies
- 339 views
-
-
மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு! மீனவர் படுகாயம்.[PHOTO ] இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2.03.2013 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 06.03.2013 அன்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மரு…
-
- 0 replies
- 474 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரில் ஒருவரான கில்லாரி கிளின்டன் ஆறு லட்சத்து ஐம்பதினாயிரம் மின்னஞ்சல் சம்பந்தமாக கடந்த ஒரு கிழமையாக தொலைக்காட்சியிலும் சரி வானெலிகளிலும் சரி புரட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.அந்த முறை எப்படியும் தப்ப வாய்ப்பே இல்லை தேர்தலுக்கு முன்னமேயே பிடித்துவிடுவார்கள்.இது ஓரு தேசிய குற்றம் என்றெல்லாம் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்க வெற்றி நிச்சயம் என்று ஏற்கனவே கணித்த முடிவுகளிலும் நிறையவே மாற்றங்கள்.12-14 வரை டொனால்ட் ரம்பை முன்னணியில் நின்ற கில்லாரி திடீரென்று பல புள்ளிகளால் கீழிறங்கி 4-5 வீதம் தான் முன்னணி சில சமயம் இருவரும் சமம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க குடியரசுக்கட்சியில் உள;ளவர்கள் கில்லாரி எப:போது கைது செய்யப்படுவார் என்றெல்லாம் பார்த்துக் கொண்…
-
- 2 replies
- 763 views
-
-
இத்தாலி தூதர் Daniele Mancin இந்தியாவை விட்டு வெளியேறத் உச்சநீதி மன்றம் தடை. கிருஸ்தவ விடுமுறை களிற்க்காக இத்தாலி சென்ற, கேரளா மீனவர்களை சுட்டு கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 2 இத்தாலியர்கள், அவர்கள் நாட்டிற்கு சென்றதும் இந்தியா திரும்ப முடியாது என்று சொல்லி உள்ளனர். இதற்க்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆட்சேபனையை , இந்திய வெளியுறவு துறை அலுவலர் ரஞ்சன் மதாய் (India's foreign secretary Ranjan Mathai) மூலம் இத்தாலி தூதர்,டானிலி மன்சினி ( Italian Ambassador to India Daniele Mancini)என்பவருக்கு சம்மனாக, நேரில் நேற்று கொடுக்கப்பட்டாது. இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கான இத்தாலி தூதர் டானிலி மன்…
-
- 1 reply
- 492 views
-
-
ஜோ பைடன்: டி.வி நேரலையில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இந்த காட்சி, தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இவருடன் சேர்த்து அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த வாரம் இரண்டாவது வைரஸ் தடுப்பு மருந்தான மாடர்னாவுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது. அந்நாட்டில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 749 views
-
-
அச்சமூட்டும் தருணங்கள் : ரஷ்ய தூதுவர் மீது துப்பாக்கி சூடு நடத்தும் காணொளி வெளியானது துருக்கி நாட்டின் ரஷ்ய தூதுவர் ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு கண்காட்சியில் கலந்துகொண்ட அவரை மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்நிலையில் தூதுவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது குறித்த மர்ம நபர் அங்கும் இங்குமாக நடப்பதும் பின்னர் தனது துப்பாக்கி இருக்கிறதா என இரு முறை உறுதி செய்து கொள்வதும் பின்னர் தூதுவரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதுமான காணொளி தற்போது வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் ரஷ்ய தூதர் ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற ஒரு கண்கா…
-
- 0 replies
- 286 views
-
-
ஏமன் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துகிறது அமெரிக்கா - பைடன் முடிவு பட மூலாதாரம், REUTERS ஏமனில் தனது கூட்டணி நாடுகள் ஈடுபட்டுவந்த போர் நடவடிக்கைகளுக்கு அமரிக்கா தந்துவந்த அதரவை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏமனில் கடந்த ஆறு வருடங்களாக நடந்து வரும் போரில் கிட்டதட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. "ஏமன் போர் நிறுத்தப்படவேண்டும்" என அமெரிக்க அதிபர் பைடன் தனது முதல் வெளிநாட்டு கொள்ளைகள் குறித்த உரையில் தெரிவித்தார். இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டிரம்பிற்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த ஒப…
-
- 0 replies
- 542 views
-
-
அமெரிக்க அதிபருக்கு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ஆலோசனை வழங்கும் முக்கிய பதவிக்கு சூசன் ரைசை ஒபாமா கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி தேர்ந்தெடுத்தார். இன்று சூசன் ரைஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுக் கொண்டார். ‘கடந்த 4.5 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதராக இருந்து அதிபருக்கு சேவை செய்தது பெருமையாக உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வெள்ளை மாளிகையில் பணியை தொடங்கப் போவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்‘, என்று ரைஸ் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். இவர் அமெரிக்கா, இந்தியாவுடன் உறுதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள பெரும் பங்காற்றினார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த போது, இந்தியாவின் தேசிய பாதுக…
-
- 0 replies
- 427 views
-
-
இந்தோனேஷியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170யைக் கடந்தது. தேசிய பேரழிவு தணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, அடோனாராவில் குறைந்தது 72பேர் உயிரிழந்தனர். அத்துடன் லெம்படாவில் 47பேர் உயிரிழந்தனர் மற்றும் 22பேர் காணவில்லை. கத்தோலிக்க பெரும்பான்மை கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை இடமாற்றம் செய்வதாக இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உறுதியளித்துள்ளார். மிக மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டு பகுதிகளான லெம்படா மற்றும் அடோனாரா தீவுகளுக்கு விஜயம் செய்தபோது விடோடோ இந்த உறுதிமொழியை அளித்தார். இரண்டு தீவுகளில் பா…
-
- 0 replies
- 277 views
-
-
தொடர்பை இழந்ததால் பரபரப்பு: லண்டனில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று ஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தனது தொடர்புகளை இழந்த நிலையில், தற்போது விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGOOGLE அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திற்கு 231 பயணிகள், 18 விமான ஊழியர்கள் என ஏர் இந்தியாவின் ஜெட் விமானம் ஒன்று சர்வதேச நேரப்படி காலை 06.54க்கு புறப்பட்டு சென்றது. ஹங்கேரி வான் பகுதியில…
-
- 0 replies
- 286 views
-
-
பிரேஸில்: ரியோ டி ஜெனிரோ துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்! பிரேஸிலில் போதைப்பொருள் கடத்தர்காரர்களை குறிவைத்து ரியோ டி ஜெனிரோவின் மிகப்பெரிய சேரி பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது நகர வரலாற்றில் பதிவான மிகக் கொடூரமான சோதனை நடவடிக்கை ஆகும். ரியோவின் சிவில் காவல்துறையின் சுமார் 200 உறுப்பினர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் குறித்த பகுதிக்குள் நுழைந்து போதைப்பொருள் கடத்தல் காரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகள் தோட்டாக்களால் தாக்கப்பட்டாலும் உயிர் தப்பினர். ரியோவில் நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் அதிகளவிலான உயிரிழப்பு…
-
- 1 reply
- 499 views
-
-
1967க்கு பின்னர்... ஒரு மில்லியன், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது! 1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000 பேர் சிறுவர்கள் என்றும் கைதிகள் விவகாரங்களுக்கான ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1967 முதல் 54,000 க்கும் மேற்பட்ட நிர்வாக தடுப்பு உத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை 1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய சிறைகளுக்குள் மொத்தம் 226 பாலஸ்தீன் கைதிகள் இறந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் மேலும் க…
-
- 0 replies
- 486 views
-
-
அகமதாபாத்: நமது நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை கேட்கவே முடியவில்லை என்று காட்டமாக சாடியிருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. தொடரும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒருகாலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு பலத்த சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. இப்போது அது தன் குரல் வலிமையை இழந்துவிட்டது. அதைப்போலத்தான் நமது பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சும் கூட.. ரூபாய் மதிப்பைப் போல அவரது பேச்சும் வலிமையை இழந்து ஊமையாகிப் போய்விட்டது அவரது பேச்சையெல்லாம் இப்போது கேட்க முடிவதில்லை என்றார். அண்மையில் சுதந்திர தின நிகழ்ச்சியின் போதும் கூட பிரதமர் மன்மோகன்சிங்கை மிகக் கடுமையாகவே மன்மோகன்சிங் தாக்கிப் பேசியிருந்தத…
-
- 2 replies
- 625 views
-
-
உலகில் அதிசக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா! [Friday 2017-05-05 15:00] உலகின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா அதை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளது.ரஷ்யா ஏற்கனவே Satan என்னும் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்து வெளியிட்டு உலக நாடுகளை மிரள செய்தது.இந்நிலையில், Satan 2 என குறிக்கும் வகையில் RS-28 Sarmat என்னும் உலகின் கனமான மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணையை தயாரித்து வருகிறது. Sarmat ஏவுகணை இதுவரையில்லாத அளவில் 11,000 மைல்கள் போகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த ஏவுகணை பிரான்ஸின் ஒரு பகுதியையே அழிக்கும் அளவுக்கு திறன் கொண்டதாகும்.தொழில்நுட்பத்தை பொருத்தவரைய…
-
- 0 replies
- 297 views
-
-
முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலானோர் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாக ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி 23 கோடிபேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் முப்பதில் ஒரு பங்காகும். வெளிநாட்டில் வாழ்வோரின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் துவக்கத்தோடு ஒப்பிடுகையில் முப்பது சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அமீரகத்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்க இடம்பெயர்ந்து செல்வோரில் பெரும்பாலானோர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் கண்டமாக ஐரோப்பா இருக்கிறது. ஆசியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் 4 கோடியே 60 லட்சம் பேர் வெளிந…
-
- 0 replies
- 304 views
-
-
அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கு வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்போவதில்லை என்று அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலியாவின் விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர் இந்தநிலையில் அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட விடயங்களை மனித உரிமை காப்பு அமைப்புக்கள் விமர்சனம் செய்து வருவதால் படகு அகதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குவதை தவிர்க்கவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத படகுகளை தடுப்பது அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்எனவே தேவையேற்படும் போது மாத்திர…
-
- 0 replies
- 296 views
-
-
வடகொரியாவை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர்: வீடு திரும்பிய ஒரே வாரத்தில் மரணம் அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் ( கோப்புப் படம் ) வடகொரியாவை உளவு பார்த்ததாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு பின் உடல் நிலை மோசமடைந்ததால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் மரணமடைந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அந்நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி வடகொரிய அரசு அவரை கைது செய்தது. இந்தக் குற்றச்சாட்டில் ஒட்டோ வார்பியருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இக்குற்றத்தை ஒப்புக் கொண்ட வார்ம்பி…
-
- 0 replies
- 286 views
-
-
(சிஎன்என்) முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியா பல்கலைக்கழக இர்வின் மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோவிட் அல்லாத தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். யுசி இர்வின் மருத்துவ மையத்தின் மருத்துவத் தலைவர் டாக்டர் அல்பேஷ் அமீனின் வியாழக்கிழமை மாலை ஒரு கூட்டு அறிக்கையின்படி, அவர் ஐசியூவில் நெருக்கமான கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டு, IV நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் திரவங்களை வழங்கினார். தொடர்ந்து கண்காணிப்பதற்காக அவர் மருத்துவமனையில் இருக்கிறார். கிளிண்டனின் தனிப்பட்ட முதன்மை மருத்துவர் டாக்டர் லிசா பார்டாக். "இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அவரது வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, மேலும் அவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு நன்ற…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
ஜப்பானின் கிழக்குக் கரையோரப் பகுதியை சக்திவாய்ந்த விஃபா சூறாவளி தாக்கியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 50 பேரைக் காணவில்லை. ஜப்பானின் இஸு ஒஷிமா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது டோக்யோவுக்கு தெற்கே உள்ள இஸு ஒஷிமா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவுகளும் வெள்ளப் பெருக்கும் அங்கு ஏற்பட்டுள்ளன. முன்னர் சுனாமியால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த ஃபுக்குஷிமா அணுஉலையை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும், இந்த சூறாவளியால் அதற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பல வீடுகளின்மேல் மண்மேடுகள் சரிந்துவிழுந்து மூடியுள்ளன. டோக்யோவில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் தடைப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் டோக…
-
- 0 replies
- 291 views
-
-
இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும். இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். மும்பை தாக்குதல்தான் பாகிஸ்தானின் கடைசி விளையாட்டாக இருக்க வேண்டும். எல்லை கடந்த தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. எங்களுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு மீண்டும் மீண்ட…
-
- 12 replies
- 2.9k views
-
-
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியும், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கும் பாஜகவில் சேர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார். நரேந்திர மோடிக்கு ஓட்டு: வியாழக்கிழமை, தனது ட்விட்டர் பக்கத்தில்: "எனக்கு இந்திய தேசத்தின் நலனே பிரதானம். மத்தியில் நிலையான, ஸ்திரமான, பொறுப்பான நல்லாட்சி அமைய வேண்டும். அந்த வகையில் ஒரு வாக்களராக எனது ஓட்டு நரேந்திர மோடிக்குத் தான்" என கிரண் பேடி அவரது கருத்தை வெளியிட்டிருந்தார். காங்கிரசுக்கு எதிரான போராட்டம்: இன்றும் அவர் மோடியை ஆதரித்து பேசியுள்ளார். நாட்டை வழிநடத்திச் சென்று நிலையான ஆட்சி செலுத்தும் தகுதி உடைய நபரை ஆதரிப்பேன் என தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் போராட்டம் முழுக்க முழுக்க காங்…
-
- 0 replies
- 258 views
-
-
திகைக்கவைக்கும் இந்தக் காணொளியை ஓர் ஆளில்லா விமானம் எடுத்துள்ளது. நிகழந்துவரும் அகதி நெருக்கடி எவ்வளவு பெரியது என்பதைக் காட்டி உதவிகள் கோரும் நோக்கத்தோடு இந்தக் காணொளியை பேரிடர் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. BBC
-
- 1 reply
- 708 views
-
-
ரோஹிஞ்சா நெருக்கடி: அர்சா தீவிரவாதிகள் குறித்த உண்மைகளை தேடி ஒரு பயணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionஅர்சா அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோ பிபிசி-யின் தென் கிழக்கு ஆசியாவின் செய்தியாளர் ஜொனாதான் ஹெட், மியான்மரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மியான்மர் ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்த `அர்சா` அமைப்பைச் சேர்ந்தவர்களையும், வங்கதேசத்தில்…
-
- 0 replies
- 405 views
-
-
பிரெக்சிற் குறித்த சர்வஜனவாக்கெடுப்பில் வெளிநாடொன்று தலையிட்டதா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலகில் மிகவும் பாதுகாப்பானது பிரித்தானியாவின் ஜனநாயகம் எனவும் அது தொடர்ந்தும் அவ்வாறானதாக காணப்படும் எனவும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் பேச்சாளர் ஓருவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சர்வஜனவாக்கெடுப்பில் வெளிநாடொன்று தலையிட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்றைய செய்தியாளர் மாநாட்டில் சர்வஜனவாக்கெடுப்பில் வெளிநாட்டின் தலையீடு குறித்து பிரதமர் கரிசனையுடன் உள்ளாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அவரது பேச்சாளர் இந்த கரிசனைகள் குறித்து தான் அறிந்திர…
-
- 1 reply
- 376 views
-