Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விடிந்தால் யுத்த நிறுத்தம் இல்லையேல் விபரீதம் கொபி அனான் சிரியாவில் நாளை வியாழன் விடிந்தால் யுத்த நிறுத்தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடைபெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இதுவே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பாதுகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதியிருந்தார். இருந்தாலும் இன்று காலை கருத்துரைத்த அவர் இந்த நிமிடம்வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார். இருந்தாலும் இதுவரை சமாதானத்திற்கான சமிக்ஞைகள் எதையும் சிரிய அதிபர் வ…

    • 4 replies
    • 706 views
  2. இது எப்படி இருக்கு!!!!!!!!!!!! http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s320x320/550119_2975615395761_1423116401_32386650_1341140095_n.jpg நன்றி-முகநூல் காரட்டூனிஸ்ட் பாலா http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/463451_2975615395761_1423116401_32386650_1341140095_o.jpg

  3. முள்ளியவாய்க்காலில் பல ஆயிரம் தமிழர்களின் பிணங்கள்-இந்தியக் குழு ஆராய ஈழ எம்.பி. கோரிக்கை மதுரை: முள்ளிவாய்க்கால் முழுவதும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைத்துள்ளனர். இலங்கைக்கு வரும் இந்திய எம்.பிக்கள் குழு இங்கு சென்று பார்த்து ஆராய வேண்டும் என்று ஈழத் தமிழ் எம்.பி. ஸ்ரீதரன் கூறியுள்ளார். மதுரையில் வக்கீல்கள் சங்கம், தமிழ் வக்கீல்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டார் ஸ்ரீதரன். அப்போது அவர் பேசுகையில், இலங்கை தமிழர் விஷயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர். பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும…

  4. இந்தியா அதிசக்திவாய்ந்த பிராந்திய வல்லரசு என்பதில் சந்தேகமில்லை. அது உலக தரத்திற்கு வளர முயற்சிக்கிறது என்பது உண்மையானாலும் சாத்தியம் மிகக் குறைவு. ஆரம்பந் தொட்டே இந்தியா தனித்தியங்கும் வலுவை இழந்து விட்டது. வல்லரசு என்ற அந்தஸ்தைக் கோரும் நாடு நிகழ்ச்சிகளைத் தனது பக்கம் இழுப்பதோடு நிகழ்ச்சிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வலுவுடன் இருக்க வேண்டும் இந்த அடையாளம் இந்தியாவிடம் இல்லை. இராணுவ வலுச்சமநிலைச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவால் முடியவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேயில் நாட்டின் ஊடாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரப்பிரசாதம் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. எதிரிகளைச் சம்பாதிப்பதில் இந்தியா தனித் திறமையுடன் திகழ்கிறது. 1971 இந்திய வரலாற்றில் மிக மு…

    • 3 replies
    • 1.2k views
  5. பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. அதன் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. கிட்டத்தட்ட கோமாவில் இருந்த அதற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குழந்தையின் நிலைமை இன்று காலை மோசமானது. இதையடுத்து அ…

  6. இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அதிமுக இடம்பெறாதது ஏன்? : ஜெயலலிதா விளக்கம். ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது. இலங்கை செல்லும் 14 எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் தமிழக எம்.பி. ரங்கராஜன் …

  7. இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சுதந்திரத்துக்கான சர்வதேச மகளிர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள 150 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அணு ஆயுத போட்டியில் இந்தியாவை விட பலமான நாடாக திகழ வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 12,500 கோடி வரை அணு ஆயுத ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ஆயுத தயாரிப்புக்காக பாகிஸ்தான் செலவிட்டு வருகிறது. அணு ஆயுத தயாரிப்புக்கான புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பது, அதை சுத்திகரிப்பது, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் குறைந்த தூர, நெடுந்தூர ஏவுகணைகள…

  8. . தென்சீனக்கடலில் சீன பிலிப்பைன் கடற்படைகள் முறுகல்நிலை. சீனா தன் கடற்பகுதி எனவும் பிலிபைன்ஸ் மீனவர்கள் நுழையக்குடாது எனவும் அச்சுறுத்துகிறது. அமெரிக்கா பிலிபைன்சிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சர்வதேச 120 மைல் கடல்வலயச் சட்டத்திற்கமையவே பிலிபைன்ஸ் உரிமை கோறுகிறது. இரண்டு கடற்படைகளும் முறுகல் நிலையில் உள்ளன. http://www.news.com....i-1226324037020

  9. கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து யுஎஸ்எஸ் கார்ல் விஷன் (சிவிஎன்,70), எஸ்எஸ் ஹார்லே, எஸ்எஸ் பங்கர் ஹில் போர் கப்பல்கள், கடந்த 7ம் தேதி சென்னைக்கு வந்தன. யுஎஸ்எஸ் கார்ல் விஷன் (சிவிஎன்,70) கப்பல் துறைமுகத்தில் நிறுத்த இடம் இல்லாததால், நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டது. அமெரிக்கா கடற்படை வீரர்கள் சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். சமூக சேவைகளிலும் ஈடுபட்டனர். இருநாட்டு கடற்படை வீரர்களுக்கும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியா, அமெரிக்கா கடற்படை வீரர்கள் கூட்டுப் பயிற்சி, சென்னை வங்காள விரிகுடா கடலில் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டுப் பயிற்சியை பார்வையிடுவதற்காக, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, பா…

  10. இந்தியா-வியட்நாம் இடையேயான வர்த்தகத்தை 700 கோடி டாலராக அதிகரிக்கும் டெல்லி: இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு வர்த்தகமானது அடுத்த 3 ஆண்டுகளில் 700 கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்து உறுப்பினர்களை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடன் பொருட்கள் மீதான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை 2010-ஆம் ஆண்டு இந்தியா உருவாக்கியது. மேலும் சேவைகள் மற்றும் முதலீடுகளுக்கான தாராள ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது வியட்நாமுக்கு மருந்து பொருட்கள், பருத்தி, மின் இயந்திரங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வரும் இந்தியா அங்கிருந்து இரும்பு, எஃகு, மோட்டார் வாகனங்கள் மற்றும்…

  11. அசாம் அருகே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அசாம் கோலாகாட் அருகே உள்ள நுமலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஏராளமான தீயணைப்பு வண்டிகள் சென்று, கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டன. இதன் காரணமாக, 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை, தீயின் ஜுவாலை தெரிந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கு தாங்கள் தான் காரணம் என, அசாம் உல்பா பயங்கரவாதிகள் தெரிவித்தனர். தங்களது எழுச்சி தினத்தை கொண்டாடும் வகையில், வெடிகுண்டு வீசி தாக்கியதாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பிய இ-மெயிலில் தெரிவித்துள்ளனர். உயிர்ச் சேதமில்லை இருப்பின…

  12. லண்டனில் நடைபெறவுள்ள கோடை ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை ஈரான் தடை செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. London2012.Com எனும் குறித்த இணையத்தளத்தை தேடுபொறிகளில் தேடினால் தானாக Peyvandha.ir எனும் மாற்றுத்தளத்திற்கு செல்வதாக ஈரானியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் ஈரானின் வெளிவிவகார அமைச்சிடம் முறையிடப்பட்டுள்ள போதும் அவர்கள் பதில் அளிக்க மறுத்துள்ளனர். ஈரானின் அரச தலைமைகள் அண்மையில் விடுத்த உத்தரவின் படி சைபர் கஃபேக்களில் இணையத்தை உபயோகிக்கும் ஈரானியர்கள், அவர்களுடைய ID, மற்றும் பெயர் விபரங்களை பதிவிட வேண்டிய விதிமுறை கொண்டுவரப்பட்டது. மேலும் லண்டன் ஒலிம்பிக்கின் லோகோவில் Zion எனும் வார்த்தை பிரயோகம் தோன்றுவதாகவும், இது இஸ்ரேல் அல்…

  13. Started by akootha,

    உலகின் தலைசிறந்த ஒரு ஊடகவியலாளர் இன்று காலமானார். கேள்விகளை கேட்பதில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் இவர். இவரின் அறுபது நிமிடங்கள் என்ற சி.பி.எஸ். ஒரு மணித்தியாலய நிகழ்வு மிக பிரபல்யமானது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் இவர் கடமையாற்றியுள்ளார். இவருக்கு வயது 93

    • 1 reply
    • 518 views
  14. அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை ஈரான் நிரூபித்தால், மக்கள் நலத்திட்டங்களுக்கான அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் புகார் கூறி வருகின்றன. இதை காரணம் காட்டி ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டின. ஆனால், ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனி, அதிபர் அகமதி நிஜாத் ஆகியோர், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பதிலடி கொடுத்தனர். எனினும், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வல…

  15. டெல்லி: மனித வெடிகுண்டுக்குப் பலியான ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியை, அதேபோல மனித வெடிகுண்டுக்குப் பலியான பெனாசிர் பூட்டோவி்ன் மகன் பிலாவல் பூட்டோ இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது மகன் பிலாவல் பூட்டோ மற்றும் குடும்பத்தினருடன் டெல்லி வந்தார். இன்று பிற்பகல் அவர் ஆஜ்மீர் தர்கா செல்கிறார். சர்தாரி பாகிஸ்தான் அதிபர் என்பதால் அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் விருந்தளித்துக் கெளரவித்தார். இதில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தியும், பிலாவல் பூட்டோவும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இது அனைவரையும் கவர்ந்தது. பிலாவல் பூட்டோ இந்தியாவுக்கு வருவது இதுவ…

  16. அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும். ஒரு பேப்பரிற்காக சாத்திரி பிரான்சில் தேர்தல் இந்த மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. இரண்டு தடைவை வலது சாரிக்கட்சி ஆட்சியில் இருந்து விட்டது இரண்டாவது தடைவை வலது சாரிக்கட்சியில் நிக்ககோலா சார்க்கோசி பிரான்சின் அதிபராகியிருந்தார். எனவே இந்தத் தடைவை சோசலிசக்கட்சியிடம் பிரான்ஸ் மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே கருத்துக்கணிப்புக்களும் ஊடகசெய்திகளும் வெளியாகிக்கொண்டிருந்தது. சோசலிசக் கட்சியின் வேட்பாளர் françois hollande கருத்துக்கணிப்புக்களில் முதலிடத்தில் இருந்தார். சார்க்கோசி இந்தத் தடைவை போட்டியிடமாட்டார் என்பது போல போக்கு காட்டிக்கொண…

  17. சீனாவின் தென் கடல் பகுதியிலில், இந்தியா கச்சா எண்ணெய் எடுத்து வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆசியான் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், சீனாவின் தென் கடல் பகுதியில் இந்தியா கச்சா எண்ணையை எடுத்து வருகிறது. எனினும், இப்பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கு இந்தியாவிற்கு தார்மீக உரிமை இல்லை எனவும், இப்பகுதியிலிருந்து இந்தியா உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. நேற்று கம்போடியாவில் ஆசியான் நாடுகளின் அரசியல் விவகாரம் தொடர்பாக நடந்த மாநாட்டின் நிறைவின் போது, தென் சீனாவின் பாதுகாப்பு தொடர்பான தேசிய நிறுவன தலைவர் வூ ஷிஹுன் இது குறித்து தெரிவிக்கையில், இந்தியாவுடன், சீனா எந்த வகையிலும் சர்வதேச கடல்…

    • 2 replies
    • 698 views
  18. வட மாலி போராளிகள் தனிநாடு பிரகடனம் பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் அங்கீகரிக்க மறுக்கின்றன! Mali's Tuareg rebels, who have seized control of the country's distant north in the chaotic aftermath of a military coup in the capital, declared independence Friday of their Azawad nation. “We, the people of the Azawad,” they said in a statement published on the rebel website, “proclaim the irrevocable independence of the state of the Azawad starting from this day, Friday, April 6, 2012.” http://www.theglobea...article2394040/

    • 11 replies
    • 991 views
  19. அமெரிக்காவில் சிறுவர்கள் ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறார்கள். America's prisons are overflowing, but many who are kept behind bars, are just children. Thousands of youths are tried as adults in the U.S. every year - and some are given life sentences in the country's harshest jails. Many then find themselves becoming victims of sexual violence, and suicide.

    • 0 replies
    • 409 views
  20. சிரிய தாக்குதல்களில் 130 பேர் பலி சிரியாவில் பல இடங்களில் அரசாங்கப் படைகள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சாமானியர்கள் 130 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஹமா மாகாணத்திலுள்ள லாதம்னா நகரத்தில் முதலில் ஷெல் குண்டுகளை வீசிய துருப்பினர், பின்னர் அந்த ஊருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர் என்று கூறப்படுகிறது. ஹோம்ஸ் நகரிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நிறைய சடலங்கள் சிறு டிரக் வண்டிகளில் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் சிறு பிள்ளை ஒன்றின் சடலம் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் வீடியோ படம் ஒன்று இணைய தளத்தில் வலம் வந்துகொண்டுள்ளது. ஹோம்ஸ் நகரில் நிறைய பேர் ஒட…

    • 0 replies
    • 282 views
  21. அமெரிக்க கப்பற்படை விமானம் குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த எப்.ஏ -18 டி போர் விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி பயிற்சிக்காக இந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியது. இவ்விமானம் விர்ஜினியா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது. இதில் 40-ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததது மட்டுமின்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த எரிபொருள், வீடுகளின் மேல் பரவியதால் தீ விபத்து ஏற்பட்டது எனவும், இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் த…

    • 0 replies
    • 619 views
  22. சென்னை: முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று, பவுர்ணமி வழிபாடு நடத்தியுள்ளனர். மூன்று மாத இடைவெளிக்குப் பின் இணைந்த இருவரும், நேற்று முதல் முறையாக, பொது இடத்துக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனக்கு எதிராக சதி செய்ததாக குற்றம்சாட்டி, சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன் உள்ளிட்ட, 20 பேரை, கடந்த டிசம்பரில் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, போயஸ் தோட்டத்திலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டார். ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்த சதி பற்றி தனக்குத் தெரியாது என்றும், போயஸ் தோட்டத்தில் நான் இருந்ததால், அதைப் பயன்படுத்தி எனது உறவினர்களும், நண்பர்களும் முறைகேடாக நடந்து கொண்டனர். நான் எப…

  23. தென் சீன கடல் பகுதி உலகிற்கு தான் சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கூறியுள்ளார். தென் சீன கடல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள், துரப்பண பணிகளை மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவித்த சீனா, பணிகளை நிறுத்தி விட்டு தென் சீனக்கடலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என எச்சரித்திருந்தது. இல்லாவிட்டால் அதிக விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, தென் சீனா கடல் பகுதி உலகிற்கு சொந்தம் என்பதே இந்தியாவின் கருத்து. இந்த பகுதி எந்த நாட்டின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த பகுதியில் வர்த்தகம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என க…

  24. அ.தி.மு.க-பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக அப்துல்கலாம்? ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய எதிர்வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதிய ஜனாதிபதியை ஆளும் காங்கிரஸ் கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வோ தன்னிச்சையாக தெரிவு செய்ய முடியாது. மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை இந்தப் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரலாம் என்று கூறப்படும் நிலையில் தனது ஆதரவு நபர் ஜனாதிபதியாக வேண்டியது அவசியம் என்று பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளும் பலரது பெயர்களைப் பர…

  25. பாகிஸ்தானின் இராணுவத்தினர் நூற்று முப்பது பேர் பனியில் புதையுண்டனர் பாகிஸ்தானின் சியாச்சின் மலைப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சுமார் 130 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும், பனிச்சரிவில் சிக்குண்ட இராணுவத்தினரில் எத்தனைபேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றி இன்னமும் உறுதி செய்ய முடியவில்லை எனவும் மேஜர் ஜெனரல் அதார் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்கு அருகிருள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அமைந்துள்ள மேற்படி இராணுவ முகாம், உலகிலேயே அதி உயரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து …

    • 0 replies
    • 316 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.