உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
பயங்கரவாதிகள் புதிய ஜீன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயோவெப்பன்கள்(BioWeapon) எனப்படும் உயிர் ஆயுதங்களை உருவாக்கும் சூழ்நிலை இருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற உயிர் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது, உயிர் ஆயுதங்கள் குறித்த பயம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஈரான் மற்றும் வடகொரிய நாடுகள் மேற்கொண்டுவரும் அணு ஆயுதங்களை விட அதிகமான அழிவை இந்த உயிர் ஆயுதங்கள் ஏற்படுத்தும். புதிய ஜீன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம், பயங்கரவாதிகளிடம் சென்றால் அணு ஆயுதங்களை விட பேரழிவை அவர்கள் இந்த உயிர் ஆயுதங்கள் மூலம் ஏற்படுத்த …
-
- 0 replies
- 1.2k views
-
-
கனேடிய கைதிகளிடம் ஜப்பான் மன்னிப்பு இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பானில் சிறை வைக்கப்பட்டிருந்த கனேடிய கைதிகள் அடைந்த துன்பத்திற்கு ஜப்பானின் அரசு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஜப்பானின் வெளியுறவு பிரதி அமைச்சர்களில் ஒருவரான ரொஷியுகி காரோ ரோக்கியோவில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரினார். கனேடிய முன்னாள் படையினர் நல அமைச்சர் ஸ்ரீவன் பிளானி கனேடிய முன்னாள் படையினரின் குழுவோன்றுடன் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டார். 1941 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ஹொங் கொங்கில் இருந்த நேச நாடுகளின் படையினர் ஜப்பானிடம் சரணடைந்தார்கள். கைது செய்யப்பட்டவர்கள், 1945 ஆம் ஆண்டு, ஜப்பான் சரணடையும்வரை ஜப்பானால் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்…
-
- 0 replies
- 549 views
-
-
சுப்பிரமணிய சாமி ஹாவர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார் - மதக் கலவரத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு!! வாஷிங்டன்: இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது. கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிர…
-
- 2 replies
- 855 views
-
-
மலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை - ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரம்: தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். தமிழகத்தில் இதுவரை கேரள மக்களுக்கு எதிராக ஒரு தூசியைக் கூட தமிழக மக்கள் எழுப்பியதில்லை. அந்த அளவுக்கு அவர்களும் நமது சகோதரர்கள் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். ஆனால் முதல் முறையாக கேரளத்தவர்கள் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் எழுந்துள்ள கொந்தளிப்பு கேர…
-
- 2 replies
- 857 views
-
-
பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு மாரடைப்பு: பதவியிலிருந்து விலக முடிவு பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரிக்கு(Asif Ali Zardari) சிறிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகக்கூடும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன ஜர்தாரி நேற்று(6.12.2011) மாலை பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு புறப்பட்டுச் சென்றார். குழந்தைகளைப் பார்ப்பதற்காகவும், சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் அவர் துபாய் சென்றதாக பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படலாம் என்று ஜர்தாரி அஞ்சியதாகவும், இதனால் உதவிகேட்டு அவர் அமெரிக்காவுக்கு தூது விட்டதாகவும் தகவல்கள் வெள…
-
- 6 replies
- 712 views
-
-
முல்லைப் பெரியாறு அணையச் சாட்டு வைச்சு கேரள மாநிலத்தில் (தமிழ் மூவேந்தர் ஆண்ட பூமி) வாழ்ந்து வரும் மற்றும் பிரயாணம் செய்யும் தமிழக உறவுகள் மீது மலையாள கொலைவெறிக் கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழக - கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள இடங்களில் கேரள வர்த்த நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்தான.. கேரள மாநிலம் நோக்கிய லாரி போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. மலையாளிகள் நீண்ட காலமாகவே தமிழர் விரோதப் போக்கோடு செயற்பட்டு வருவதோடு மலையாளிகளாக இருந்தவர்களாலேயே ஈழத்தமிழர் மீதான 2009 இனப்படுகொலை உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு சிங்களத்தால் நடந்தேறச் செய்யப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எப்போது மாறும் மலைய…
-
- 7 replies
- 2.1k views
-
-
ஒலிம்பிக் ஸ்பான்சராக போபால் விஷவாயு கம்பெனியா? எதிர்ப்பு வலுக்கிறது ஒலிம்பிக் போட்டியில் டெü கெமிக்கல் நிறுவனம் விளம்பரதாரராக இருக்கும் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் தெரிவிப்போம் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் (பொறுப்பு) மல்ஹோத்ரா தெரிவித்தார். போபால் விஷவாயு கசிவுக்குக் காரணமான டெப் கெமிக்கல் நிறுவனம் அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் விளம்பரதாரராக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. போபால் விபத்தில் பாதிப்புக்குள்ளான ஏராளமான மக்களுக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடுகளை வழங்காத நிலையில், ஒலிம்பிக் போட்டியின் விளம்பரதாரராக இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம…
-
- 0 replies
- 489 views
-
-
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக- கேரள எல்லை பகுதியான குமுளியில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக வாகனங்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால் வண்டிபெரியார், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கம்பம் பகுதியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் கம்பம், கூடலூர், குமுளி பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கேரள அரசை கண்டித்து கூடலூரில் மறியல் போராட்டம் நடந்தபோது கேரள முதல்- அமைச்சர் உம்மன்சாண்டி, முன்னாள் முதல்- அமைச்சர் அச்சுதானந்தன் ஆகியோரது கொடும்பாவியை கொளுத்தினர். ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடலூரை சேர்ந்த வாலிபர் செல்லப்பாண்டி (வய…
-
- 2 replies
- 895 views
-
-
இலங்கை முத்திரை கொண்ட ஆயுதங்கள் அடங்கிய கப்பலை இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்தோனோஷியாவிலிருந்து குஜராத் கடற்கரையில் வந்து கொண்டிருந்த ஆயுத கப்பலை இந்திய கப்பல்படை மற்றுமு் சுங்கவரித்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வந்தனர். இந்தோனேஷியாவின் எம்.வி.ஜென்கோ மாகாணத்திலிருந்து மர்ம கப்பல் ஒன்று கடந்த 2-ம் தேதி குஜராத் மாநிலத்தின் கடற்கரையில் நவலகாய் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த கப்பலில் என்ன உள்ள என்பது குறித்து சந்தேகம் அடைந்த கப்பல்படையினர் ,நேற்று சோதனையிட்டனர். அதில் நிலக்கரி மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இலங்கை நாட்டின் முத்திரையுடன் 392 தானியங்கி துப்பாக்கிகள், வெடிக்காத ஏராளம…
-
- 3 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
50 லட்சம் கோடி ரூபாய்: இந்திய மக்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு உலகளவில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியர்களிடம் தான் உள்ளதாகவும், இந்தியர்களின் வீடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் கோடியைத் தாண்டும் ($950 billion) என்று தெரியவந்துள்ளது. Macquarie Research என்ற சர்வதேச நுகர்வோர் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்திய வீடுகளில் மட்டும் 18,000 டன் தங்கம் உள்ளது (ஒரு டன் என்பது 1,000 கிலோ. இதன்படி பார்த்தால் இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் எடை 1.80 லட்சம் கோடி). இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) மதிப்பில் 50 சதவீதம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் தங்களது சேமிப்பில…
-
- 0 replies
- 667 views
-
-
எகிப்திய தேர்தலில் முதல் கட்ட வாக்குகள் முடிவடைந்துள்ளன. எகிப்திய தேர்தலில் முதல் கட்ட வாக்குகள் முடிவடைந்துள்ளன. இதில் முஸ்லிம் சகோரத்துவ சுதந்திர கட்சி 30 வீத வாக்குகளையும் அல் நூர் கட்சி, 20 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன. எனினும் எகிப்தின் புதிய பாதை தொடர்பில் இன்னும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது எகிப்தில் தேர்தல்கள் மூன்று கட்டங்களாக இடம்பெறுகின்றன. இந்தநிலையில் எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் தேர்தல் முடிவடையும் முஸ்லிம் சகோதரத்துவ சுதந்திர கட்சி பல்வேறு கூட்டுக்கட்சிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்தக்கட்சி எகிப்திய தேர்தலில் வெற்றிப்பெறுமானால் அதனால் உறுதியான ஆட்சியை முன்கொண்டு செல்லமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஆய்வாளர்…
-
- 0 replies
- 467 views
-
-
ரஸ்ய பாராளுமன்றத் தேர்தல் புற்றினின் கட்சி பாரிய பின்னடைவு ரஸ்ய பிரதமர் புற்றினின் போரினிற் ரஸ்யா கட்சி தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக மொஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று ஞாயிறு நடைபெற்ற தேர்தலில் முதலாவது கருத்துக்கணிப்பு இந்த பின்னடைவை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது. முடிவுகள் நாளை திங்கள் வெளியாகும். கடந்த 2007 ம் ஆண்டு தேர்தலில் 63.3 வீத வாக்குகளை பெற்ற இக்கட்சி இப்போது வெறுமனே 48.5 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 450 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 220 ஆசனங்களையே இவர்கள் பெறக்கூடிய நிலை உள்ளது. இதனால் கட்சி அறுதிப் பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இக்கட்…
-
- 3 replies
- 1.8k views
-
-
அமெரிக்க உளவுவிமானத்தை சுட்டுவீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு ஈரானிய வான்பரப்பிற்குள் ஊடுருவிய இந்த ஆர்.கியூ - 170 ரக விமானத்தை ஈரானிய புரட்சிப் படையினர் சுட்டுவீழ்த்தியதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல் ஆலம் தொலைக்காட்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்றை ஈரானிய படையினர் சுட்டுவீழ்த்தியதாக ஈரானிய தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய வான்பரப்பிற்குள் ஊடுருவிய இந்த ஆர்.கியூ - 170 ரக விமானத்தை ஈரானிய புரட்சிப் படையினர் சுட்டுவீழ்த்தியதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல் ஆலம் தொலைக்காட்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிய சேதங்களுடன் வீழ்த்தப்பட்ட இவ்விமானத்தை ஈரானிய படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் த…
-
- 9 replies
- 1k views
-
-
பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகர் பஸ் நிலையம் அருகே 01.12.2011 அன்று நடந்தது. பகுதி செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் உதயசூரியன், மாரி, கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசியதாவது: ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடத்த வேண்டும். அது உங்களுக்கு தெரியாதா? அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிட்லர் போல ஆட்சி நடத்திக்கிட்டு இருக்காங்க. மக்களுக்கு நல்லது செய்யனும் என்பது கிடையாது. நான் சொல்வது தான் சட்டம் என்று இருக்காங்க. வந்த உடனேயே சமச்சீர் கல்வி மேலே கை வைச்சாங்க. 3 மாசமா பள்ளிக்க…
-
- 0 replies
- 477 views
-
-
ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு: 45,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம் 1.8 தொன் எடையுள்ள இந்த குண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும். ரைன் நதியில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் கடந்தவாரம் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மழைவீழ்ச்சியின்மையால் அந்நதியின் நீர்மட்டம் குறைவடைந்தத்தை தொடர்ந்து இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் குண்டு 2 கிலோமீற்றர் சுற்றுளவிற்குள் வசிக்கும் மக்களை அனைவரையும் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர். இரு வைத்தியசாலைகள், 7 மருத்துவ சிகிச்சை நிலையங்கள், ஒரு சிறைச்சாலை ஆகியவற்றிலுள்ளவர்களும் வெளியேற்றப்படுக…
-
- 4 replies
- 945 views
-
-
ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை தாக்குவதற்கு ஈரான் மறைமுகத் திட்டம் போட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஜேர்மன் அரச சட்டத்தரணி காறல் ரஞ்ச் இன்று வெளியிட்டார். ஜேர்மனிய பிரஜை ஒருவருக்கும், ஜேர்மனில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமை அம்பலமானதைத் தொடர்ந்து அவருடைய கருத்து வெளியாகியுள்ளது. மேற்கண்ட சந்தேக நபருடைய வீட்டில் ஜேர்மனிய போலீசார் நடாத்திய தேடுதல் சந்தேகத்தை மேலும் உறுதியாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை முடுக்கிவிட்டால் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடாத்த ஈரான் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டார். கடந்த செவ்வாயன்று பெருந்தொகையான ஈரான் ஆர்பாட்டக்காரர் தெகிரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு…
-
- 0 replies
- 664 views
-
-
Dec 03 வால்மார்ட் கம்பெனியால் வீழ்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேருமா? Saturday 03 December 2011 07:23:43 AM | படித்தவர்கள்: 46 News | India | Add comments (0) அமெரிக்க கம்பெனியான வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு எதிராக வணிகர்களின் தொடர் போராட்டம் தொடங்கிவிட்டது. ‘வால்மார்ட்டே திரும்பிப் போ’ என்ற கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான கண்டனங்களும் நாடு முழுக்க எதிரொலித்து வருகிறது. எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும், ‘அடுத்து என்ன நடக்குமோ?’ என அச்சத்தில்தான் உறைந்திருக்கிறார்கள் வணிகர்கள். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்…
-
- 0 replies
- 600 views
-
-
தமிழரான அப்துல்கலாம் சிங்களருக்கு ஆதரவளிப்பதா? கொதிக்கும் தமிழ் ஆர்வலர்கள். இலங்கையில் அடுத்த ஆண்டிலிருந்து சிங்களம், ஆங்கிலம், தமிழ் என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும்’ என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ‘‘தமிழர்களை கட்டாயமாக சிங்களம் படிக்க வைக்கும் முயற்சி இது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் கலந்து கொள்வது சரியல்ல’’ என கொந் தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். இலங்கையில் உள்ள லட்சுமண் கதிர்காமர் நினைவிடத்தில் ‘நல்லிணக்கமும், போருக்குப் பின்னரான நிலையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ‘‘அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கில…
-
- 0 replies
- 529 views
-
-
என்னைக் கைது செய்யுங்கள்: மு க ஸ்டாவின் அதிரடி தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், திமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு வந்து தன்னை கைது செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தன் மீதான புகார் பொய்யானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்த மு க ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதாவைப் போல தான் வழக்குகளை சந்திக்க பயப்படவில்லை என்றும் இந்த வழக்கை சட்டபூர்வமாக சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை மு க ஸ்டாலினும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆக்கிரமி…
-
- 0 replies
- 507 views
-
-
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது. நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடன…
-
- 6 replies
- 791 views
-
-
ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சிகள் தொடர்பாக அந்நாட்டுக்கு எதிராக புதிய தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் நேற்றுகூடிய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளின் அமைச்சர்கள் இத்தீர்மானத்தை மேற்கொண்டனர். ஈரானின் 39 அதிகாரிகளையும் 141 நிறுவனங்களையும் இத்தடைகள் இலக்காக கொண்டுள்ளனதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் கத்தரின் அஸ்டன் கூறியுள்ளார். இந்த அதிகாரிகளுக்கு பயணத் தடைகள் விதிக்கப்படுவதுடன் மேற்படி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படவுள்ளன. கடந்தவாரம் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஈரான் மீது சில தடைகளை விதித்தன.அதன்பின் ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகம் ஆர்ப்பாட்டக்கார்களால் தாக்கப்பட்டதையடு…
-
- 1 reply
- 689 views
-
-
Dec 02 ஒபாமாவை விட அதிக சம்பளம் வாங்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு. ) அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரை விட ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு அதிக சம்பளம் பெறுகிறார். ஆஸ்திரேலியாவில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்த அந்நாட்டின் சம்பள டிரிபியூனல் முடிவு செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டின் பெண் பிரதமரான ஜூலியா கில்லார்டுக்கு சம்பளத்தில் 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதிகரிக்கிறது. புதிதாக தேர்வான எம்.பி.க்களுக்கே 1 லட்சத்து 40 ஆயிரம் டாலர்களில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் டாலர்களாக சம்பளம் உயர்த்தப்படுகிறது. இதில் மற்ற அலவன்ஸ்களும் அடங்கும். பிரதமர…
-
- 2 replies
- 965 views
-
-
NEW YORK (CNNMoney) -- Raj Rajaratnam is headed for the Big House. The former hedge fund manager, convicted in May of insider trading, lost his bid Thursday to remain free pending his appeal. 0PrintComment As a result of the federal appeals court ruling, Rajaratnam is required to report on Monday to begin serving his 11-year prison term, the longest ever in an insider trading case. It's expected that Rajaratnam will serve his sentence at the Federal Medical Center Devens in Massachusetts. Rajaratnam is a diabetic with "imminent kidney failure" and will need a transplant during his prison stay, according to the federal judge who sentenced him. Rajarat…
-
- 1 reply
- 651 views
-
-
ஹிலாரி கிளிண்டனின் பர்மிய விஜயம் பர்மிய அதிபருடன் ஹிலாரி கிளிண்டன் அடக்கு முறை ஆட்சிக்கு உட்பட்டு உலகின் ஏனைய நாடுகளால் இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பர்மாவுக்கான அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனின் விஜமானது சரித்திர முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகின்றது. 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலர் ஒருவர் பர்மாவுக்கு விஜயம் செய்வது இதுதான் முதல் தடவையாகும். கடுமையான தடைகளை முகங்கொடுக்கின்ற இந்த நாட்டுக்கு இந்த தசாப்தத்தில் ஒரு வெளிநாட்டு உயர் தலைவர் செல்வதும் இதுதான் முதல் தடவையாகும். முன்னாள் இராணுவ ஆட்சியாளர்களில் சிலரையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள பர்மாவின் புதிய சிவிலியன் அரச…
-
- 2 replies
- 634 views
-