Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Started by akootha,

    நெல்சன் மண்டேலாவின் 93வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்! தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 93வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு 67 நிமிடங்கள் மக்கள் தன்னார்வ தொண்டு வேலைகளில் ஈடுபட்டனர். இது அவரது 67 ஆண்டு அரசியல் போராட்டத்தை குறிக்கும். மில்லியன் கணக்கில் குழந்தைகள் ஒன்றாக இணைந்து சிறப்பு பாடலை பாடினர். இவர் தனது பிறந்தநாளை தனது சொந்த கிராமத்தில் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு ஹீரோவாக தோன்றினார். http://www.dinakaran.com/LatestNews_2011.asp?Nid=1221 US president Barack Obama and Mrs Obama US President Barac…

    • 0 replies
    • 264 views
  2. ஜூலை 18,2011,15:10 IST கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் 15.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேயைச் சேர்ந்த "இந்தியா போரன்சிக்'என்ற நிறுவனம், இந்தியாவில் நடந்த ஊழல் அளவு குறித்த ஆய்வை நடத்தியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும், 15.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, இந்தியாவுக்கு வெளியில் நடந்த சட்ட விரோத நிதி பரிமாற்றங்கள் தொடர்பானவை. இந்த ஆய்வின் அடிப்படையில், ஊழல் என்ற பெயரில், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், 2,000 ரூபாய் வரை செலவிடுவதாக தெரியவந்துள்ளது. ஆனால், கடந்த 2000…

  3. பிரகாசமான தொலைக்காட்சி என்றாலே முதலாளியை விட அதிகமாகப் பேசப்படுவது இந்த நபரைத்தான். ஒரு மாதத்திற்கு முன்புவரை எல்லாரையும் ஆட்டி வைத் துக்கொண்டிருந்த இவர் இப்போது ஆடிப்போய் இருக்கிறார். கரன்ஸியை எண்ணிக்கொண்டிருந்தவருக்கு இப்போது கம்பி எண்ணும் வேலை. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவருக்கு இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரின் மனசாட்சியின் வாக்குமூலம் : ‘‘நான் சென்னை தி. நகரில் பொறந்தேன். அம்மா பர்மாவைச் சேர்ந்தவர். அப்பா தெலுங்கு நாயுடு. பணவசதி படைத்த குடும்பம் இல்லை என்றாலும் நடுத்தர வர்க்கம். எனது பள்ளிப் பருவத்தில் எதுவும் சிறப்பாக அமையவில்லை என்றாலும், கல்லூரியில்தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனை ஏற்பட்டது. அந்தக் கல்லூரியில் பிரபல சகோத…

  4. தமிழகத் தமிழர்கள் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு! தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசினார். கவிவீச்சு சிதம்பரத்தில் நேற்று(16.07.2010) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் "தமிழர் தொழில், வணிக, கல்வி பாதுகாப்பு மாநாடு" நடந்தது. சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்த இம்மாநாட்டிற்கு, தோழர் பெ.சவுந்திரராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர்கள் கவிபாஸ்கர், இராசா இரகுநாதன், கோ.கவித்துவன், புலவர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவிவீச்சு நிகழ்த்தினர். மலர் அரங்கம் தமிழ்நாட்டுத் தமிழர…

    • 1 reply
    • 519 views
  5. தி கேஜ் - கூண்டு - வன்னிப்படுகொலைகளின் புத்தகம் 2009 வன்னிக் கொலைக்களம் ஆவேசமாக அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தபோது ஐ.நாவுக்கான பேச்சாளாராக கொழும்பிலிருந்த அவுஸ்த்திரேலியரான கோர்டன் வைஸ் என்பவரால் வன்னிப் படுகொலைகள், அதற்கு முன்னரான காலம், படுகொலைகளின் பின்னரான காலம், அதன் முன்னரான, பின்னரான உலக ஒழுங்கு ஆகிய பல்வேறுபட்ட நிலைகளில் இருந்து ஒரு தொகுப்பாக தி கேஜ் எனு இந்த நூல் வரையப்ப்ட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் பல விடயங்கள் எமக்கு முன்னரே பரீட்சயமாக இருந்தாலும் கூட குறிப்பாக வன்னி கொலைக்களத்தில் இறுதிக்காலத்தில் நடைபெற்ற கொடூரங்களை உள்ளிருந்த சாட்சிகளின் அடிப்படையிலும், ஐ.நா பணியாள்ர்களின் சாட்சியங்களினூடாகவும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். எழுந்தமா…

  6. சன் டிவி சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு எந்திரன் பட விநியோக விவகாரம் தொடர்பாக வந்துள்ள மேலும் ஒரு புகாரை தொடர்ந்து "சன்பிக்சர்ஸ்' சக்சேனா உதவியாளர் அய்யப்பன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. . சினிமா பட விநியோகம் செய்ததில், கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மற்றும் அவரது உதவியாளர் அய்யப்பன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சக்சேனாவை போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் வல்லக்கோட்டை பட தயாரிப்பாளர் டி.டி.ராஜா, சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத…

  7. சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர் : டி.ராஜேந்தர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தேர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான சிம்பு நடித்த வானம் படம் ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அந்த விளம்பர போஸ்டரில், ’’அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.’’ என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது. இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான். இது குறித்து டி.ராஜேந்…

  8. இந்தியர்களின் பணம் ரூ.11 ஆயிரம் கோடி: சுவிஸ் வங்கி அறிவிப்பு. முன்னதாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ. 20 லட்சம் கோடி முதல் ரூ. 50 லட்சம் கோடி வரை இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள், அரசுசாரா நிறுவனங்கள் மதிப்பிட்டுக் கூறியிருந்தன. இந்நிலையில், இந்தியர்களின் பணம் ரூ.11,250 கோடி மட்டுமே தங்கள் நாட்டு வங்கிகளில் இருப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. இது குறித்து சுவிஸ் தேசிய வங்கிகளின் தலைவர் வால்டர் மேயர் கூறியிருப்பது: எங்கள் நாட்டு வங்கிகளின் இந்த ஆண்டுகளுக்கான புள்ளி விவரத்தின்படி இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பணம் ரூ.11,250 கோடிக்கு மேல் பல்வேறு வங்கிகளில் உள்ளது. 2009-ஆம் ஆண்டு இது ரூ.12,150 என்ற அளவிலும், 2008-ல் இது ரூ.13,500 க…

  9. தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2011, 14:48 சென்னை: தலைவர் பதவியை இப்போதே தனக்குத் தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோருகிறாராம். ஆனால் தலைவர் பதவியை யாருக்கும் தரக் கூடாது. கடைசி வரை கருணாநிதிதான் தலைவராக நீடிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி கோரி வருகிறாராம். இதுதொடர்பாகத்தான் தற்போது கருணாநிதி குடும்பத்தில் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கதையாக தனது இரு மகன்களை வளர்த்து வந்த திமுக தலைவர் கருணாநிதி அதற்குரிய பலனை தற்போது அனுபவித்து வருவதாக திமுகவின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள். கருணாநிதி ப…

  10. பத்மநாபசாமி கோவில் பொக்கிஷ ரகசியத்தை வெளிக் கொணர்ந்த வக்கீல் சுந்தரராஜன் மரணம் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளைத் திறந்து அதில் குவித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி அரிய வகை பொக்கிஷங்கள் வெளியுலகுக்குத் தெரிய வர காரணமாக இருந்த வழக்கறிஞர் சுந்தரராஜன் மரணமடைந்தார். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு அறையைத் திறக்காமல் உள்ளனர். அதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பை விடஅதிக அளவிலான நகைகள் இருக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்ம…

  11. மும்பை தொடர் குண்டுவெடிப்பு-போலீஸ் விசாரணைக்குச் சென்றவர் மர்ம மரணம் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2011, 12:30 மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக போலீஸாரால் விசாரிக்கப்பட்டவர் திடீரென மரணம் அடைந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பயஸ் உஸ்மானி என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் நிஸார் தம்போலி கூறுகையில், பயஸ் உஸ்மானியை போலீஸார் விசாரணைக்காக அழைத்திருந்தனர். அப்போது அவர் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றார். இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை போலீஸார் சித்திரவதை செய்யவில்லை. அடிக்கவும் இல்லை. ஒரு மணி நேரம் மட்டுமே அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டா…

  12. கருப்புப் பணம் எங்கே இருக்கிறது? இந்தியா ஒரு ஏழை நாடு என்று நீண்ட நாட்களாகச் சொல்லப்படுகிறது.இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள்.வேண்டுமானால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள்.”இந்தியா ஏழைகள் அதிகம் வாழும் பணக்கார நாடு”. பணக்காரர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,அதே நேரம் ஏழைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.இங்கே பரம்பரை பணக்காரர்கள் மட்டுமல்ல,புதிய தொழில் அதிபர்கள்,சாமியார்கள்,அரசியல்வாதிகள்;ஏன் சாமிகளும்கூட பணக்காரர்கள்தான்.பின் எப்படி இது ஏழை நாடு.எனவேதான் சொல்லுங்கள் இந்தியா ஏழைகள் வாழும் பணக்கார நாடு. எல்லோரும் ஒருவரே என்ற சரிநிகர் சமமான நிலையை எட்டவேண்டும் என்பது குறித்துக் கவலைப்பாடாதவர்கள்,கல்வி,வேலை வாய்ப்பில் சமூகநீதி கிடைக்கவேண்டும் என்பது அ…

    • 0 replies
    • 535 views
  13. அமெரிக்காவிற்கான இந்திய தூதுவராக நிருபமா ராவ் நியமனம்! Published on July 17, 2011-7:07 am இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக நியமிக் கப்பட்டுள்ளதாக “த இந்து’ நாளிதழ் உத்தியோகபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கான அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. நிருபமா ராவ் விரைவில் தமது பொறுப்புகளை ஏற்கவுள்ள தாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் புதுடில்லியில் தெவித்தார். அமெரிக்காவுக்கான இந்திய தூதுவரான மீரா சங்கன் இடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிநாட்டுச் சேவையில் 1973 இல் இணைந்துகொண்ட அவர் 2009 ஓகஸ்ட் முதலாம் திகதி வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதுடன், கோகிலா ஐயருக்குப் பின்னர் அப்பதவியை …

  14. ஸ்ராலினுடன் மோதல்! வீட்டைவிட்டு வெளியேறினார் கலைஞர்! Sunday, July 17, 2011, 10:24 இந்தியா 02 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி என்பனவற்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப உறுப்பினர்கள்மத்தியில் பிளவு ஏற்பட்டிருப்பதுடன், தி.மு.க.வை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் கருணாநிதி தனது வழிமுறையை மாற்றிக் கொள்ளவேண்டிய அழுத்தங்கள் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. இந்த வார இறுதியில் கருணாநிதியின் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டிருந்த கடுமையான முரண்பாடுகளையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடற்கரையோரமிருந்த வீடு ஒன்றிக்கு சடுதியாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்ப…

  15. பத்மநாபசுவாமி கோயில் உள்ள பாதாளஅறை குறித்து பொது நல வழக்கு தொடர்ந்த வக்கீல் சுந்தரராஜன் உடல்நலகுறைவு காரணமாக இறந்தார்.திருவனந்தபுரத்தில் உள்ள பத்பநாபசுவாமி கோயிலில் பாதாள அறைகள் இருப்பதாகவும் அவை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளதால் அதில் பொக்கிஷங்கள் இருக்ககூடும் எனவே அவற்றை திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என வக்கீல் சுந்தரராஜன் பொது நல வழக்கு தொடர்ந்தார். மேலும் சுப்ரீம் கோர்ட் நியமித்த உறுப்பினர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் சனிக்கிழமை உடல்நல குறைவு காரணமாக இறந்தாR.. dinamalar

  16. சீனாவின் கடும் எதிர்ப்பை புறக்கணித்து, திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று சந்தித்து பேசுகிறார். சீனாவின் கடும் எதிர்ப்பை புறக்கணித்து, திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு, திபெத்தின் தனித்துவமிக்க சமயம் மற்றும் கலாச்சார பெருமைகளை காப்பதிலும், திபெத்தியர்களின் மனித உரிமைகளை பேணுவதிலும் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது எனினும் இச்சந்திப்பு தமது நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் என்று சீனா குறிப்பிட்டுள்ளது. http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8618 Obama, Dalai Lama meeting…

  17. ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் பிரெஞ்சு இராணு வத்தினரிடம் ஒரு மின்னல் விஜயம் ஒன்றைத் திடீரென பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மேற்கொண்டுள்ளார். 5 மணிநேரம் அங்கு பலரையும் சந்தித்து விட்டுத் திரும்பியுள்ளார்.இந்த விஜயம் பாதுகாப்புக் காரணங்களிற்காக மிகவும் இரகசியமாகவே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பிரான்ஸ் இந்த ஆப்கான் நடவடிக்கையில் 2001ம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த நடவடிக்கை Jaques Chirac காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிக்கோலா சாச்க்கோசி உடனடியாக பிரெஞ்சுப் படைகளின் முண்ணனி நிலைகளான கிழக்குக் காபூலின் நகரமான Tora நோக்கிச் சென்றார். அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி 2012 முடிவிற்குள் ஆப்கானில் நடவடிக்கையிலிருக்கும் படையினரின் கால்…

  18. முன்னைநாள் உள்ளகப் புலனாய்வுத்துறை அதிகாரியும் Bourgoin-Jallieu (Isère)ற்குரிய தற்போதைய படைத்துறை அதிகாரியும் (brigadier-chef de Bourgoin-Jallieu ) பிராந்தியப் புலனாய்வு அதிகாரியுமான ஒருவர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டுள்ளார்.முறையான வதிவிட அனுமதி இல்லாது (étrangers en situation irrégulière) பிரான்சில் தங்கியிருப்போரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சட்டவிரேதமாக வதிவிட அனுமதி பெற்றுக் கொடுத்ததாக் குற்றம் சாட்டப்பட்டே இவர் கைது செய்யபப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய் அன்று வதிவிட அனுமதியற்ற துருக்கியைச் சேர்ந்த ஒரு நபர் காவற்துறையினரிடம் முறையிடச் சென்றுள்ளார். அவர் பெருங் கோபத்திலிருந்தார். தனக்கு விசா பெற்றுத் தருவதாகக் கூறி Bourgoin-Jallieu வில் இருக…

  19. 9 ஜூலை 2011, தெற்கு சூடான் என்ற புதிய தேசம் உதயமாகியது. அன்று முதல் ஆப்பிரிக்க கண்டத்தின் 54 வது நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் இணைந்துள்ளது. இந்தப் புதிய தேசத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்துள்ளன. தெற்கு சூடானின் எண்ணை வளத்தை நுகரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளைப் பேண முன்வந்துள்ளது. இதற்கிடையே, தமிழ்த் தேசியவாதிகள் வழமை போலவே தெற்கு சூடானுடன், தமிழீழத்தை தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். இவ்விரண்டு தேசியப் பிரச்சினைகளுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், இறுதிக் கட்ட தீர்மானம் தொடர்பாக பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. சூடான் நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானில் உள்ளது. ஒரு துளி எண்ணெய…

  20. கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் உள்ள மிசிசாக பகுதியில் வசித்து வந்த Real Estate முகவரின் கொலை தொடர்பாக தமிழ் இளைஞர்கள் இருவர் உட்பட மூவர் கைது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சனவரி 19 இல் இருந்து காணாமல் போன ரியல் எஸ்டேட் முகவரான இவரது உடல் எச்சங்கள் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கீழ் பகுதியில் இருந்து நேற்று கண்டு பிடிக்கபட்டும் உள்ளது மேலதிக செய்தி Police confirm body found in Markham home is real estate agent Tony Han

    • 2 replies
    • 584 views
  21. டெல்லி: வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று டெல்லியில் தெரிவித்தார். மீரா சங்கரை அடுத்து நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்க அரசு கடந்த மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது. நிருபமா ராவ் 1973-ம் ஆண்டு ஐஎப்எஸ் பேட்சை சேர்ந்தவர். அவர் 1-8-2009 அன்று வெளியுறவுத் துறைச் செயலாளராக ஆனார். இந்த பதவியை வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றார். சோகிலா ஐயர் தான் இந்தியாவின்…

  22. இந்தோனேஷியாவில் எரிமலை குமுறுகிறது _ வீரகேசரி இணையம் 7/15/2011 4:56:33 PM Share இந்தோனேஷியாவில் சுலாவெஸி மாகாணத்தில் எரிமலையொன்று வெடித்துச் சிதறி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேஷியாவின் சுலாவெஸிமாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள லோகொன் எனும் எரிமலை நேற்று இரவு வெடித்துச் சிதறியது. புகையுடன் கூடிய தீச்சுவாலையுடன் எரிமலைக் குழம்பையும் (லாவா) கக்குகின்றது. இதன்போது சுமார் 4800 அடி உயரத்திற்கு தூசு மற்றும் சிறுகற்களும் தெறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலவும் அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு அப்பகுதியில் வசி்ப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாற…

  23. சன் டிவி சக்சேனா - அய்யப்பன் மீண்டும் கைது திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களான செல்வராஜ், சண்முகவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பனை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சில வழக்குளில் சக்சேனாவையும், அவரது கூட்டாளி ஐயப்பனையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 15ம் தேதி, சக்சேனா மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா, வல்லக்கோட்டை என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 50 லட்சம் ரூபாயை சக்சேனா மோசடி செய்து விட்டதாக, ராஜா, விருகம…

  24. 2ஜி விவகாரம்: ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐயிடம் பாஜக நேரில் வலியுறுத்தல் டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தில் முன்பு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ இயக்குனர்ர் ஏ.பி.சிங்கை நேரில் சந்தித்து பாஜக குழு வலியுறுத்தியது. வழக்கமாக சிபிஐ இயக்குனர்கள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதில்லை. ஆனால், தற்போது பாஜக எம்பி பிரகாஷ் ஜாவதேகர் தலைமையில் 5 எம்பிக்கள் அவரை சந்தித்த அனுமதி கோரியதையடுத்து, சிங் அவர்களை அனுமதித்தார். இதையடுத்து ஜாவேத்கர், மாயா சிங், சிவகுமார் உதாசி, பூபேந்திர யாதவ் மற்றும் ஜகத் பிரசாத் நடா ஆகியோர் அடங்கிய குழு ஏ.பி.சிங்கை இன்று சந்தித்து ஸ்பெக்ரம் லைசென்ஸ் விற்பனைக் கொள்கைக்கு ப.சிதம்பரம…

  25. மும்பையில் குண்டு வெடித்தபோது சிதறிய ரூ.25 கோடி வைரங்கள்! Posted by இரும்பொறை on 15/07/2011 in உலகம், செய்தி மும்பையின் ஓபரா ஹவுஸ் பகுதியில் நேற்று முன் தினம் வெடிகுண்டு வெடித்தபோது குண்டுகளின் பாகங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் பாகங்களுடன் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரங்களும் சிதறின. ஓபரா ஹவுஸ் பகுதியின் கஹூ கல்லி எனப்படும் சிறிய தெரு வைர விற்பனைக்குப் பேர் போனது. பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படும் இந்தக் கடைகளில் ஒரு நாளைக்கு பல கோடி மதிப்புள்ள வைரங்கள் விற்பனையாவது வழக்கம்.

கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தப் பகுதியில் வெடிகுண்டு வெடித்தபோது கடைகளை மூடத் தயாராகிக் கொண்டிருந்தனர் பெரும்பாலான வியாபாரிகள்.

வைரங்களை பட்டர் பேப்பரில் வைத்து மடித்து, வெல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.