Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெர்லின்: வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நேற்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு இந்திய நேரப்படி நேற்றிரவு சென்றடைந்தார். …

  2. டெல்லி: தமது பதவிக் காலத்தில் ராணுவத்துக்கான ரகசிய நிதி மூலம் சிறப்பு உளவுப் பிரிவு அமைத்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசை கவிழ்க்க முயற்சித்தது உள்ளிட்ட புகார்களில் சிக்கியிருக்கிறார் ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங். இது தொடர்பாக மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வி.கே.சிங் தமது பதவிக் காலத்தில் ரகசிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியது குறித்து ராணுவத்தின் ரகசிய விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை முடிவடைந்து அதன் விவரங்களை உள்ளடக்கிய அறிக்கை தற்போது பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்த போது 2010ஆம் ஆண்டு வி.கே.சிங் சிறப்பு உளவுப் பிரிவை ஒன்…

  3. சற்றுமுன் மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடி சுற்றிவளைப்பு மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நடவடிக்கை அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, மா…

  4. அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதனை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உறுதி செய்துள்ளார். மேலும் சிட்னியில் மேற்;கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படவிருந்த வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவ…

  5. பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் – சீனா மிரட்டல் Posted on December 11, 2021 by தென்னவள் 18 0 பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முடிவை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதைக் காரணம் காட்டி பீஜிங் குளிர்கா…

  6. குஜராத் இனப்படுகொலையை சீக்கியர் கூட்டுப்படுகொலையுடன் ஒப்பிடக்கூடாது:அமர்த்தியா சென்! 19 Dec 2013 புதுடெல்லி: 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையை 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்கள் கூட்டுப் படுகொலையுடன் ஒப்பிடக்கூடாது என்று நோபல் விருதுப் பெற்றவரும், பொருளாதார நிபுணருமான அமர்த்தியா சென்தெரிவித்தார். என்.டி.டி.விக்கு அளித்த நேர்முகத்தில் அமர்த்தியா சென் கூறியது: பிரதமராவதற்கு குஜராத் இனப்படுகொலை மோடிக்கு தடையாக இருக்காது என்று கூறிய இன்ஃபோஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் கருத்தை நிராகரித்தார் அமர்த்தியா சென். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் குற்றவாளிகளை நீதிக்கும் முன்கொண்டு வராதது அவமானகரமானது.ஆனால், இச்சம்பவத்தையும், மோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்போது நிகழ்…

  7. போராட்டம் எதிரொலி: முதன்முறையாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது கனடா! கொவிட்-19 சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக கனேடிய அரசாங்கம் முதன்முறையாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அவசரகாலச் சட்டம் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு வழங்கலாம், ஆனால் அதற்கு வழிவகுக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அரசாங்கம் அவர்களைக் கொண்டுவரவில்லை என்று பிரதமர ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். ஆனால், அது குடிமக்களின் சுதந்திர நடமாட்டம் அல்லது ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். மேலும் சட்டவிரோத போராட்டங்களுக்கு நிதி உதவி செய்வதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது…

  8. 3500 வருடங்கள் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு எகிப்தில் 3500 வருடங்கள் பழைமையான கல்லறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறை 18 ஆம் எகிப்திய அரச குடும்பத்தவாின் கல்லறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தகவல் வௌியிட்டுள்ளனர். எகிப்தின் தெற்கு நகரமான லக்ஸாில் இந்தக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/3500-வருடங்கள்-பழைமையான-கல்லறை-கண்டுபிடிப்பு/50-203471

  9. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான தொகுதியாக உள்ளது. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியாவை தொடர்ந்து அந்த தொகுதியில் ராகுல்காந்தியும் வெற்றி பெற்றார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த தொகுதியின் பிரசார பொறுப்பை பிரியங்கா ஏற்றுள்ளார். இந்த நிலையில் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்து காட்டுவேன் என்று சபதமிட்டப்படி இவர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். நேற்று குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சுமார் 100 கார்கள் பின் தொடர சென்ற அ…

  10. டெல்லி: கடந்த வாரம் தெற்கு டெல்லியில் ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி மால்வியா நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதி. அவர் தான் டெல்லியின் சட்ட அமைச்சராக உள்ளார். அவர், தனது ஆதரவாளர்களுடன் கடந்த புதன்கிழமை இரவு கிர்கி எக்ஸ்டென்ஷனுக்கு சென்று உகாண்டாவைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த 2 பெண்கள் என்று மொத்தம் 4 ஆப்பிரிக்க பெண்களை பிடித்து அவர்கள் விபச்சராம் செய்வதுடன் போதைப் பொருள் விற்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து அந்த பெண்கள் போலீசில் அளித்த புகாரில், சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நள…

  11. டைட்டானிக் விபத்து வரலாறு: 110 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் நான்கு மர்மங்கள் எடிசன் வேகா பிபிசி நியூஸ், பிரேசில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 37வது கட்டுரை இது.) சரியாக 110 ஆண்டுகளுக்கு முன்பு, டைட்டானிக் கப்பல் ஒரு இருண்ட இரவில் பனிப்பாறையின் மீது மோதியது. அப்போது பெரும்பாலான பயணிகள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.…

  12. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைRENA LAVERTY/AFP/GETTY IMAGES விளம்பரம் ஜனவரி மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வாஷிங்டென்னிற்கு பயணித்த போது, தடை செய்யப்பட்ட பொருளை கொண்டுவந்ததாக, ஹாலிவுட் நடிகை ரோஸ் மகௌவனுக்கு பிடி …

  13. ''லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது'': லெபனான் ஷியா தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP Image captionஹசன் நஸ்ரல்லா லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி செளதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அம…

  14. உக்ரைனுக்கு... ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து, வழங்கப்பட வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை! உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ‘ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப வாழ உக்ரைன் தனது விருப்பத்தையும் உறுதியையும் தெளிவாக நிரூபித்துள்ளது’ என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார். பின்னர் ஒரு ட்வீட்டில், ‘ஐரோப்பியக் கண்ணோட்டத்திற்காக உக்ரேனியர்கள் இறக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் எங்களுடன் ஐரோப்பியக் கனவுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.’ என உர்சுலா வான் டெர் லேயன் பதிவிட்டுள்ளார். அடுத்த வியாழன் மற்றும் வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸ…

  15. திங்கட்கிழமை, 9, ஆகஸ்ட் 2010 (23:15 IST) கலைஞரை ஏசுநாதருடன் ஒப்பிடுவதா? கிருஸ்துவர்கள் கொந்தளிப்பு முதல்வர் கருணாநிதியை ஏசுநாதருடன் ஒப்பிட்டுப்பேசிய ராதாபுரம் திமுக எம்.எல்.ஏ. அப்பாவுவை கைது செய்யக்கோரி நெல்லை மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய கிருஸ்துவர்கள் கைது செய்யப்பட்டனர். nakkheran

  16. ஆப்கானிஸ்தான்: தற்கொலை குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி பகிர்க ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள, ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த ஒரு கலாசார மற்றும் மத அமைப்பின் மையத்தில், வியாழன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP அதே பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆஃப்கன் உள்துறை அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதலில் தங்கள் ஈடுபடவில்லை என்று தா…

  17. ஏவுகணை தாக்குதல்: ஹவாய் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கிய அந்த ஒரு பொய்யான குறுஞ்செய்தி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER தவறாக பரவிய ஒரு குறுஞ்செய்தி ஹவாய் மக்கள் அனைவரையும் பீதி அடைய வைத்துவிட்டது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை ஹவாய் மக்களுக்கு கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. "பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை ஹவாய் எதிர்நோக்கி உள்ளது. …

  18. இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இஸ்ரேல் நாட்டுப் போர் விமானம் ஒன்றை சிரியா சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவின் விமானப் பாதுகாப்பு அமைப்பையும், அந்நாட்டில் உள்ள இரானிய இலக்குகளையும் தாக்குவதற்காகச் சென்ற இஸ்ரேலின் ஜெட் போர் விமானம் ஒன்று சிரியாவின் விமான எதிர்ப்புத் தாக்குதல் வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள…

  19. 3000- மீட்டர் சைக்கிளோட்டத்தில் வெள்ளி, வெண்கலம் பெற்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் தங்கம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை ஜோவானா ரோவ்ஸெல் (நடுவில்) கிளாஸ்கோ கொமன்வெல்த் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகளின் களநிலவரப் படி, (ஜிஎம்டி நேரம் 16.00 மணியளவில்) பதக்கப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடும்போட்டிகளுக்கு நடுவே முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 23 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 7 தங்கப் பதக்கங்களுடன் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இம்முறை போட்டியை நடத்தும் ஸ்கொட்லாந்து 5 தங்கம் அடங்கலாக 11 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத…

  20. ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது. அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு. ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற க…

  21. பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளி : பலி எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 31 OCT, 2022 | 01:33 PM கடந்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளியின் போது உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த சூறாவளி அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீற்றர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சூறாவளியை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தி…

  22. '90 லட்ச ரூபாய் ஊதியத்தை ஏன் திருப்பித் தந்தீர்கள் சச்சின்?' உசதுல்லா கான்மூத்த பத்திரிகையாளர், பாகிஸ்தான் மாநிலங்களவை உறுப்பினராக ஆறு ஆண்டு காலம் களத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர், மொத்த ஊதியமான 90 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டார். படத்தின் காப்புரிமைPTI கிரிக்கெட்டில்கூட அணியில் இடம் பெற்றால், போட்டியில் விளையாடாவிட்டால்கூட சம்பளத்தை யாரும் மறுப்பதில்லையே? 90 லட்சம் என்பது குறைவானத் தொகை அல்லபாகிஸ்தான் ரூபாயின் மதிப்பில் அது ஒரு கோடியே 60 லட்ச ரூபாய்க்கு சமமானத் தொகையாகும். மக்கள் பணம் இது என்பதால் திருப்பிக் கொடுத்து விட்டீர்களா? நீண்ட காலமாக விக்கெட்டில் நின்று ரன் எடுக்காமல் வெறும் தடுப்பாட்டம் ஆடுவதற்கா…

  23. உலகப்பார்வை: தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைAFP கியூபாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா கியூபாவின் தலைநகரான ஹாவானாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை கனடா திரும்ப அழைத்துள்ளது. கியூபாவில் உள்ள கனடா நாட்டை சேர்ந்த 10 பேருக்கு விளக்கமுடியாத மூளை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கனடா நாட்டு அரசு கூறியுள்ளது. சிரியாவில் நடத்தப்படும் வான்வழி தாக்குதல் சட்டப்பூர்வமானது …

  24. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான சுவீட் கடைகள் உள்ளன. அதில் அல்வா விற்பனையில் பிரபலமாக திகழும் சாந்தி சுவீட் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகள், கார வகைகளின் விற்பனை மும்முரமாக நடந்து வந்த நிலையில் மதுரை வருமான வரித்துறை துணை இயக்குனர் மருது பாண்டி தலைமையிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று இரவு 7 மணிக்கு சாந்தி சுவீட் கடைக்கு வந்தனர். பின்பு அவர்கள், வியாபாரத்தை நிறுத்துமாறும், கடை ஊழியர்கள் வெளியேறக்கூடாது எனவும் உத்தரவிட்டனர். பின்னர் கடையில் உள்ள சரக்கு இருப்பு, விற்பனை மற்றும் ரசீது உள்ளிட்டவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடை உரிமைய…

    • 0 replies
    • 937 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.