Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கோவையில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள அமைச்சர், எம்பி!! – மதிமுக, பெரியார் திக ஆவசம் இன்று கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் எம்பி காசிம் பைசல் இன்று பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழைக்கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இவர்கள் தமிழ் மண்ணில் கால்வைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, கண்காட்சியை திறந்து வைக்காமலேயே பின்வாசல் வழியாக இருவரும் ஓட்டம் பிடித்தனர். கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை…

    • 0 replies
    • 745 views
  2. தனது தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதவையென அமெரிக்கா கருதும் உலக நாடுகளிலுள்ள பல கட்டமைப்புகள், தலங்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் தனது பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளை பட்டியல்படுத்துமாறு தனது தூதரகங்களுக்கு 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிணங்கவே மேற்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் காஸ் விநியோகக் குழாய்கள், சுரங்கங்கள், தொலைத் தொடர்பு நிலையங்கள்,போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தமொன்றை நடத்துவதாக அமெரிக்கா கருதினால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளின் விபரத்கொத்தாக இப்பட்டி…

    • 0 replies
    • 519 views
  3. 41 வயது மதிக்கதக்க ஒருவர் லண்டன் மாட்ரிட் தொடரூந்து நிலையத்தில் நிற்கும் போது , தவறுதலாக பின்னோக்கி நடந்து தண்டவாளத்தில் தலையின் பின் பக்கம் அடிபட விழுந்துள்ளார் , முள்ளந்தண்டிலும் தலையிலும் அடிபட்ட காரணத்தினால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை , அவர் குறுக்கே இருக்கமால் தண்டவாளத்துக்கு நடுவே நகர்த்தி கொள்கிறார் , அப்போது இன்னும் ஒரு நிமிடத்தில் தொடரூந்து வர இருப்பதாக நிலையத்தில் காண்பிக்க படுகிறது , தொடரூந்தை மக்கள் காண மக்கள் அதனை மறிக்க முற்படுகின்றனர் ..... ஆனால் ..30 வயது உடைய முந் நாள் போலீஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக குதித்து அம் மனிதரை சரியான நேரத்தில் காப்பாற்றுகிறார் இக் காட்சியை நிலைய கமராக்கள் படம் பிடித்துள்ளது .. வீடியோ வை இங்கே பாருங்கள். http…

    • 0 replies
    • 605 views
  4. சில நாட்களுக்கே முன்னதாக வட கொரியா தென் கொரியா மீது வீசிய செல் தாக்குதல்களால் இருவர் கொல்லப்பட்டது தெரிந்ததே. இன்று இது சம்பந்தமாக ஆரம்ப யுத்த குற்ற விசாரணைகளை வட கொரியாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடங்கியது! ICC Prosecutor: alleged war crimes in the territory of the Republic of Korea under preliminary examination The Office of the Prosecutor has received communications alleging that North Korean forces committed war crimes in the territory of the Republic of Korea. The Prosecutor of the ICC, Luis Moreno-Ocampo, confirmed that the Office has opened a preliminary examination to evaluate if some incidents constitute war crimes under the jurisdicti…

    • 0 replies
    • 459 views
  5. திங்கட்கிழமை, 6, டிசம்பர் 2010 (13:12 IST) கிளிநொச்சி நகர்: திருச்சி அருகே பரபரப்பு இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மாவீரர் நாள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நவம்பர் 27ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருச்சி அருகே எடுமலை கிராமத்தில் உள்ள காட்டில் மாவீரர் நாள் அன்று நாம் தமிழகம் கட்சியின் மண்ணச்சநல்லூரி பகுதியின் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளம்பரிதி உள்பட சிலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அந்த காட்டுப் பகுதிக்கு கிளிநொச்சி நகர் என பெயர் சூட்டி பெயர் பலகையு…

  6. மூர்க்கத்தனமான கொலை வெறித் தாக்குதலில் நெற்றியை இழந்த இளைஞர்! (பட இணைப்பு) சனி, 04 டிசம்பர் 2010 16:20 Share290 ஸ்டீவன் குளோக் என்ற 26 வயது நபர் ஒருவரால் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதால் தனது நெற்றியின் ஒரு பகுதியை இழந்துள்ளார். இவரைத் தாக்கிய ஜெக் ஹொப்ஸ் என்ற நபர் அவரின் முகத்தில் குத்தி கீழே வீழ்த்தி பூட்ஸ் கால்களால் தலையில் ஏறி மிதித்துள்ளார். ஒரு இடத்தில் பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது தன்மீது மோதிவிட்டுத் தன்னை முறைத்துப் பார்த்ததாலேயே இவரைத் தாக்கியதாக ஜெக் ஹொப்ஸ் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய போது இவர் மதுபோதையில் இருந்துள்ளார். தாக்கப்பட்ட ஸ்டீவனின் தலையிலும் மூளையிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நெற்றியின் பெ…

  7. அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை? சதுக்கபூதம் India’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில் (மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம். எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை, எளிதில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை ப…

  8. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதவியும், இந்தியாவின் தகுதியும்! உலகத் தலைவர்களில் ஒருவராக இடம்பெறுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா முட்டி மோதிக்கொண்டிருக்கையில், இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருப்பவர் யார் என்பது குறித்தே உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கு தெரியவில்லை என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆசியாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், வேகமாக வளரும் நாடாக திகழ்வதாகவும், சர்வதேச பிரச்சனைகளில் தீர்மானிக்கிற சக்தியாக உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளதாகவும் இந்தியாவுக்கு வந்துவிட்டு போகும் பல உலக நாட்டு தலைவர்கள் புகழ்ந்துவிட்டு போவது உண்டு.ஏன் நமக்கு நாமே அவ்வாறு புகழ்ந்து கொள்வதும் உண்டு. இந்நி…

  9. முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில், கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தையும் தான் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும்- ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும்- என்னைப் பற்றி குறிப்பிடும் போது- நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும்- இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும்- என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள். என்னைப் ப…

  10. மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3.25மணி வரை இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் 201 பேர் சாட்சியமளித்துள்ளனர். இன்றைய அமர்வின் போது 93 சாட்சியங்கள் காணாமல் போனோர் தொடர்பிலும் 60 சாட்சியங்கள் தடுப்பு காவலி;ல் உள்ளேர் தொடர்பிலும் 19 சாட்சியங்கள் கடத்தி செல்லப்பட்டோர் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 29 சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் மேற்கொள்ளவிருந்த சம்பூர் பகுதிக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-…

  11. தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் செய்தி அயர்லாந்து பெயில் அவுட். வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது 'அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படுபாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்கப்படுகிறது' என்பதாகும். ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்குத் தான். இதன் பயனை அனுபவிக்கப் போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும், இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்படப் போகும் இழப்புகள் விழப்போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான…

  12. சனிக்கிழமை, 4, டிசம்பர் 2010 (22:44 IST) பூலோக அழகியாக இந்திய பெண் தேர்வு 2010ஆம் ஆண்டுக்கான பூலோக அழகியாக இந்தியாவின் நிக்கோல் ஃபாரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் அழகியான இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். 2010ஆம் ஆண்டுக்கான பூலோக அழகி தேர்வு செய்யும் போட்டி, வியட்நாமில் நடைபெற்றது. பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியாவின் நிக்கோல் ஃபாரியா பூலோக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவாற்றல் போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். nakkheeran

  13. இந்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இணையதளத்தை பாகிஸ்தான் விஷமிகள் சிதைத்துள்ளனர். நேற்றிரவு சிபிஐ இணையதளத்தின் முதல் பக்கத்தில் "சிதைக்கப்பட்டுள்ளது" என்ற தகவலுடன் "பாகிஸ்தான் இணையதள ராணுவம்" என்கிற வாசகமும் அத்துமீறி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. தேசிய தகவலியல் மையத்தால் சிபிஐ உள்ளிட்ட அரசின் இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளத்தின் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி இவ்வாறு சிபிஐ இணையதளம் சிதைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையதளம் மீண்டும் பாதுகாப்பாக இயங்க நடவடிக்கை …

    • 0 replies
    • 498 views
  14. போபால் விஷவாயு சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அதில் உயிரிழந்தோருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலங்களவையில் போபால் சம்பவத்தை நினைவு கூர்ந்த அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, இத்துயரச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதனால் ஏற்பட்ட கோரமான பாதிப்புகள் இன்றும் நம்மைத் தொடர்கின்றன. அங்கு இன்றும் குறைபாடுகளுடைய குழந்தைகள் பிறக்கின்றனர். பலர் நோயில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். மனித சமுதாயத்துக்கு நேர்ந்த இந்த மிகப்பெரிய கொடுமை உலகின் மனசாட்சியை இன்று வரை உலுக்கி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார். மக்களவையில் அஞ்சல…

    • 5 replies
    • 916 views
  15. பிரித்தானிய சென்றுள்ள இன வெறி பிடித்த போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சேவை கைது செய்யக்கோரி சென்னையில் பிரித்தானிய தூதரகம் முன்னால் தமிழ்நாடு மாணவர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடத்தி மனு ஒன்றையும் தூதரகத்தில் அளித்துள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சினர் மற்றும் ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் . http://meenakam.com/2010/12/03/15267.html

  16. ஐதராபாத்: ஆந்திராவில் புதிய அமைச்சரவை பதவியேற்ற முதல் நாளே சிக்கல் ஆரம்பித்து விட்டது. இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் 8 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பதவி விலகுவதாக ரோசய்யா வெளிப்படையாக தெரிவித்தாலும், ஜெகன்மோகன் ரெட்டி விவகாரத்தையும், தெலங்கானா விவகாரத்தையும் சரியாக கையாளவில்லை என மேலிடம் அதிருப்தி தெரிவித்த காரணத்தினால்தான் ராஜினாமா செய்ததாக ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தொடர்ந்து இந்த இரண்டு பிரச்னைகளையும் …

  17. நாராயணன் கிருஸ்ணன்,சி.என்.என் தொலைக்காட்சியால் உலகில் மக்களுக்கு சேவை செய்த முதல் 10 பேர்களில் ஒரு தமிழராக தெரிவு செய்யப்பட்டார். 10 heros http://www.youtube.com/watch?v=TKhP4B3A0tQ

  18. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) தமிழ்ப் பெண்ணான கமலா தேவி ஹாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ஆவார். ஷியாமாளா பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஆப்பிரிக்கர் ஒருவரை மணம்புரிந்தார். கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீல் பதவிக்கு வரும் முதல் பெண என்பதோடு, முதல் வெள்ளையர் அல்லாத வக்கீல் என்ற பெருமையும் கமலாவுக்குக் கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப் பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது. கடந்த 3 வாரங்களாக அட்டார்னி ஜெனரலை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங…

  19. விக்கிலீக்ஸ்’ இந்தப் பெயர்தான் அமெரிக்காவை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தயவு செய்து ராணுவ ரகசியங்களை வெளியிட்டு விடாதீர்கள் என்று ‘விக்கிலீக்ஸி’டம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்காவையே மிரள வைத்த இந்த ‘விக்கிலீக்ஸ்’ பற்றி பார்ப்போம். ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் ஜூலியன் அசாங்கே என்ற ஆஸ்திரேலியரால் ஆரம்பிக்கப்பட்டது. நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து நாடுகளில்தான் இந்த இணையதளத்தின் சர்வர் இயங்கி வருகிறது. அடக்குமுறை அரசுகளின் அராஜகத்தையும்,ஊழல் மன்னர்களின் ஊழலையும் வெளிக்கொணர்வது தான் இந்த இணையதளத்தின் நோக்கம். ஒவ்வொரு நாட்டிலும் கம்ப்யூட்டர் ஹாக்கிங் நிபுணர்களும், தகவல் தரும் ஆர்வலர்களும் இணைந்து தான் இந்த இணையதளத்தை இயக்குகிறார்கள்…

  20. சேது சமுத்திரத் திட்டமாகட்டும்,விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கும் விஷயமாகட்டும்...கடைசி நேரத்தில் வந்து பிரச்னையை அப்படியே திருப்பிப் போடுவதில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நிகர் அவர் மட்டும்தான்.இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஸ்பெக்ட்ரம்.அந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து என்று அவர் கிளப்பிய குற்றச்சாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான கேள்விகளுடன் அவரை சந்தித்தோம்... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? “ஸ்பெக்ட்ரம் விவகாரம் இதுவரை ஒரு ஊழல் விவகாரமாகவே பார்க்கப்பட்டது.ஆனால்,இன்று அது தேசியப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்னையாக உருமாற…

  21. ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது. அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு. ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற க…

  22. விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது. சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை. அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது. அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே. அதே போல தான். …

  23. நேரு குடும்பத்தின் தேச துரோகங்கள் நாடகமாடிய நேரு – காங்கிரஸ் எனும் கட்சியை சுகந்திரம் வாங்கிய உடனே கலைத்துவிட வேண்டும். அதில் உழைத்த தலைவர்களெல்லாம் இந்தியாவிற்காக மீண்டும் உழைக்க வேண்டும் என்றார் காந்தி. சிலர் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் பணக்காரனாக பிறந்து, கொஞ்ச காலம் சுகந்திர தியாகி போல நடித்த நேருவோ ஒத்துக்கொள்ள வில்லை. காந்திக்கு எதிரான தலைவர்களை திரட்டி ஆட்சியில் அமர்ந்துவிட்டார். காந்தியின் பேச்சையே கேட்கவில்லை – இந்தியாவை ஒன்றினைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேல் அவர்களின் பேச்சை பல தடவை கேட்கவில்லை. சீனாவின் மீது கவணமாக இருக்குமாரு அவர் சொன்னதை கேட்காமல்தான், இந்தியாவின் பெரும்பகுதியை போரின் போது தாரை வார்த்தார் நேரு. காந்தி சுட்டு கொல்லப்படுவதற…

  24. ஈழத் தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது கருணாநிதி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தை கருணாநிதி குடும்பத்தினர் எண்ணிக் கொண்டிருந்தனர் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டினார். சென்னை தியாகராயா நகரில் இன்று மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பழ.நெடுமாறன் சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசும் போது, ஈழத்தில் புலிகள் இயக்கம் நடத்திய போர் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திர இயக்கங்கள், ஆதரவோடு நடைபெற்றன. ஆனால் புலிகளின் போர், எவ்வித ஆதரவும் இல்லாமல் நடைபெற்ற போராகும்.…

  25. அமெரிக்காவுக்கும் இந்தியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில சர்ச்சைக்குரிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் பி.ஜெ. குரோலே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இத்தகவலை கூறியுள்ளார். "இதுகுறித்து நாங்கள் இந்தியாவுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளோம். எனினும், விக்கிலீக்ஸ் எத்தகைய ஆவணங்களை வைத்துள்ளது என்பதும், அதன் திட்டம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், நாங்கள் எங்களின் நிலையை நட்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய அந்த ஆவணங்களை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்." என்றார் குரோலே. விக்கிலீக்ஸ் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.