Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல 'தந்தான தந்தான தந்தான தனனே..' என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் - சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன. உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக்கொன்றது. …

    • 0 replies
    • 477 views
  2. மழையைக் கொடுக்கும் பக்டீரியா அமெரிக்காவில் கண்டுபிடிப்பு [18 - March - 2008] மழையைக் கொடுக்கும் பக்டீரியா எதுவென்று அமெரிக்காவின் மொன்டானா மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பக்டீரியாவின் பெயர் மேலும் பல ஆய்வுகளை நடத்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படவுள்ளது. இந்த பக்டீரியா உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. தாவரத்தின் இலை மீது இவை தங்கியிருக்கும். இவை விண்ணில் பறந்து சென்று ஒரு கூட்டமாக நிலைபெறும். இவற்றைச் சுற்றி உறைந்த பனிக்கட்டிகள் சேரும். அந்தப்பரப்பே இறுகி மேகமாக மாறும். பிறகு அதில் மேலும் பல மடங்கு நீர்த்துளிகள் சேர்ந்து கருமேகமாகி மழை பெய்யும். அமெரிக்காவிலேயே மொன்டானா, கலிஃபோர்னியா, கிழக்கு அமெ…

  3. வாய்க் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களை நீண்ட காலமாக பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதுதொடர்பாக, இரண்டு நாடுகளின் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை. மெல்போர்ன் பல்கலைக்கழக கூறியதாவது: பற்சிதைவு, வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த பிரபலமான பல மவுத்வாஷ்கள் உள்ளன. அவை பயன் அளித்தாலும், குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 9 மடங்கு வாய்ப்புள்ளது. புகைபிடிப்பவர்களுக்கு இது பல மடங்கு புற்றுநோய் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துவோருக்கு 5 மடங்கு அபாயம் உள்ளது. எனவே, மவுத்வாஷ்களை குறுகிய காலத்த…

  4. . மஹாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கரைக்கப்பட்டது. பிபிசி 1/31/2010 12:39:24 PM - மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர். 1948 இல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன. அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி …

    • 6 replies
    • 2.2k views
  5. மஹிந்தவிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட பிரித்தானிய எம்.பிக்கு நேர்ந்த கெதி! சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செலவில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்ட அதி சொகுசு விடுமுறையை கழித்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏழு வார காலத்திற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்தின் DUP என்று அழைக்கப்படும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான இயன் பெஸ்லிக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கன்சவேடிவ் கட்சி தலைமையிலான தற்போதைய கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு வழங்கிவ…

  6. மஹிந்தவின் இந்தியா வருகையை கண்டித்து புதுவையில் நாம் தமிழர் கட்சி முழு அடைப்பு! மஹிந்தவின் இந்தியா வருகையை கண்டித்து புதுவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவளித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக நாம் தமிழ் கட்சியினர் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு பிரசாரம் செய்தனர். அப்போது வணிகர் சங்கம், பெரிய கடை வியாபாரிகள், பஸ், ஆட்டோ, டெம்போ சங்கம், தனியார் பள்ளிகள் ஆகியோரை சந்தித்து பந்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்குகிறது. இதனால் புதுவையில் நாளை பஸ்கள் ஓடாது என்று தெரிகிறது. இதுதொ…

  7. மஹீன் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் 8 சிரியாவின் மத்திய ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள மஹீன் நகரத்தை அரச படைகளிலிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த சனிக்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களின் மத்தியில் இரண்டு வாகன குண்டுவெடிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை தலைமையகமாக கொண்டு செயற்படும் சிரிய மனிதவுரிமை கண்காணிப்பு குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் சதாட் பகுதியில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/119511/மஹீன்-நகரத்தை-ஐ-எஸ்-தீவிரவாதிகள்-கைப்பற்றியுள்ளனர்

  8. மாகாண ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப் மக்கள் வழிபாட்டிற்காக, தேவாலயங்களை திறக்க மறுக்கும் மாகாண ஆளுநர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது. 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு, மாகாண அரசுகளை ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “பல மாகாணங்கள், மதுபான விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறந்து…

    • 1 reply
    • 435 views
  9. பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி கடுமையான சேதங்களை உண்டாக்கியுள்ளது. இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிபரின் அரசியல் ஆலோசகர் பிரான்சிஸ் டோலென்சியோ தெரிவித்துள்ளார். மாங்குட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி பிலிப்பைன்ஸின் முக்கியத் தீவான லூசான் தீவைத் தாக்கிவிட்டு மேற்கே சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. பிலிப்பைன்ஸ் மக்களால் 'ஒம்போங்' என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியின் இப்போதைய வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டராக உள்ளது. டூகெகரோ நகரில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்டடங்களும் சேதமடைந்துள்ளன என்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் முற்றிலும் செயல்படவில்லை என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். …

  10. மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்! வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி (Kocani) நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றிலேயே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான ADN இசைக்குழுவின் நிகழ்ச்சியின் போது அதிகாலை 03:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தினை அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னரும் அந்த இடம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. இசை நிக…

  11. மாடுகளை இறைச்சிக்காக விற்க தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மத்திய அரசு மாடுகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த மே 23ஆம் தேதியன்று விதித்தது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான எஸ். செல்வகோமதி என்பவர் மத்திய அரசு கொண்டுவந்த கால்நடை விற்பனை குறித்த அறிவிப்பை எதிர்த்து பொதுநல வழக்கு …

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து தனது வேளாண் துறை மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், எலன் ரைக்கர்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் 1 கோடி பசுக்கள் மற்றும் 2 கோடியே 60 லட்சம் ஆடுகள் உள்ளன. புவி வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் இலக்குகளை அடைய, அந்நாடு அறிவியல் மற்றும் தனித்துவமான கொள்கையைப் பயன்படுத்தி, கால்நடை வளர்ப்பு தொழிலில் இருந்து அதிக அளவிலான மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இளம் காளை ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் இடப்பட்டுள்ள…

  13. மாட்டிறைச்சி சர்ச்சைக்கு பதிலடி..சிக்கன் விற்பனைக்கு தடை கேட்கிறது முருக பக்தர்கள் முன்னேற்ற சங்கம். சென்னை: பெரும்பான்மை இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக கூறி, மாட்டிறைச்சிக்கு தடை கேட்டு வட இந்தியாவின் இந்துத்துவா அமைப்புகளும், சில அரசியல்வாதிகளும் சர்ச்சை கிளப்பிவருகின்றனர். பசு என்பது இந்துக்களுக்கு புனிதமானது என்பதை காரணமாக கூறி, தடை கேட்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாட்டிறைச்சி சர்ச்சை நாடு முழுவதிலும் உச்சத்தில் உள்ளது. இதை கேலி செய்யும்விதமாக, சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் ஒரு படம் பரவிவருகிறது. அந்த படத்தில் முருகப்பெருமான் கையில் சேவற்கொடியோடு காட்சியளிக்கிறார். முருகரின் படத்துக்கு அருகே சேவல் படத்தை தனியாக எடுத்துப்போட்டு, அ…

  14. மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை எட்டிப் பிடிக்கும் இந்தியா. டெல்லி: உலகின் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தை எட்டியுள்ளது. விரைவில் பிரேசிலிடம் இருந்து முதல் இடத்தை இந்தியா தட்டிப் பறிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தரவை மாட்டு இறைச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் உண்பார்கள்.. அதை உண்பது இழிவானது என்ற ஆதிக்க சாதி மனோபாவம் இருக்கிறது. அதே நேரத்தில் பசு மாடுகளை தெய்வமாகக் கருதிப் போற்றுகிற வழிபாட்டு மனோநிலையும் இருந்து வருகிறது. ஆனால் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மாட்டு இறைச்சி பிரதான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் கறவையை நிறுத்திவிட்ட எருமைகளும் ஆண் மாடுகளும் காளைகளும் இறைச்சிக்காக வெ…

  15. மாட்டுத் தீவன ஊழலில் பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. லாலு பிரசாத் யாதவ் இதே வழக்கில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என 44 பேர் மீது குற்றங்காணப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பை அடுத்து லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி மத்திய சிறையில் சரணடைந்தார். கடந்த 17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் மருந்துகளை வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த தீர்ப்பால் நீண்ட சிறை தண்டனையை எதிர்கொள்ளும் சூழலில் லாலு பிரசாத் யாதவ் உள்ளார். சமீபத்தில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பி…

  16. மாட்டுத்தாவணி – கோயம்பேடு தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி தாய்ச்சுமையொடு பக்குவமாக மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து தேசிய நெடுஞ்சாலையை பிடித்தது பேருந்து. இயங்குவது எந்திரம் மட்டுமா? அதனொரு பாகமாய் ஓட்டுநரின் கையும், காலும் தசையும், நரம்பும் அசையும். வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு வெகுதூரம் சரிபார்த்து விழிகள் சுழன்று இசையும். அவியும் எஞ்சின் சூடும் இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால் உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம். கும்மிருட்டில் விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல் பத்திரமாய் நம் பயணங்கள். எத்தனை பேர் அறிவோம் அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும்…

  17. கும்பகோணம்: பள்ளி விடுதியில் சிறுநீரை குடிக்க வற்புறுத்தி 9-ம் வகுப்பு மாணவன் சித்ரவதை செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களும், கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன்.கூலித்தொழிலாளி.இவரது மனைவி பூங்கொடி.இவர்களது மகன் பரத்ராஜ்(வயது 14). பரத்ராஜ் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் பள்ளி அருகில் உள்ள விடுதியில் பரத்ராஜ் தங்கி இருந்தான். அதே விடுதியில் இப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக சமூக அறிவியல் பாடத்தை படித்து கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் …

  18. சிதம்பரம் மாணவன் முகமது பைசலை கடத்தி சென்ற கடத்தல் காரர்கள் இலங்கை தமிழில் பேசி இருக்கிறார்கள். எனவே அவர்கள் இலங்கை தமிழர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. சிதம்பரம் மாணவன் முகமது பைசலை கடத்தி சென்ற கடத்தல் காரர்கள் நேற்று 5 தடவை முகமது பைசலின் தந்தைக்கு போன் செய்து பேசியுள்ளனர். ஒவ்வொரு தடவை பேசி முடித்ததும் போனை ஆப் செய்து விடுகிறார்கள். எனவே இங்கிருந்து அந்த போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. முதலில் வந்த போன் வேலூர் அருகே உள்ள டவரில் பதிவாகி இருந்தது. அதன்பிறகு ஆந்திரபகுதியில் இருந்து போன் வந்தது. எனவே தமிழக ஆந்திர எல்லையில் எங்கோ பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. போனில் பேசிய கடத்தல் காரர்கள் இலங்கை தமிழில் பேசி இருக்கிறார்கள். எனவ…

  19. திருவள்ளூர் அருகே யு.கே.‌ஜி மாணவ‌ன் கட‌த்த‌ி‌ கொலை செய்யப்பட்டு ‌ச‌ம்பவ‌ம் அ‌‌‌ந்த பகு‌தி‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளதோடு, உட‌ல் ‌கிட‌ந்த இட‌த்த‌ி‌ல் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்க‌ள் ‌கிட‌ந்ததா‌ல் ந‌ரப‌லி செ‌ய்ய‌ப்ப‌ட்டானா எ‌ன்ற கோண‌த்‌தி‌ல் காவ‌ல்துறை ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கிறது. [size=2][size=4]திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சூரகாபுரம் நடுத்தெருவை சேர்ந்த பூபாலன் – சந்திரா த‌ம்ப‌தி‌க்கு கீர்த்தனா (8) என்ற மகளும் பிரியதர்ஷன் (7) என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பூபால‌ன் வேலை செய்து வருகிறார்.[/size][/size] [size=2][size=4]தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்த ‌பி‌ரிய…

    • 0 replies
    • 645 views
  20. - பாகம் 1 http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=1213&cat=32 - பாகம் 2 http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=1212&cat=32 தமிழக மாணவர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை தீவிரம் ( அக்டோபர் 22,2010 ) தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தலையொட்டி, கல்லூரிகளில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது.அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் உத்தரவின்படி, தமிழக மாணவர் காங்கிரஸ் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அற…

    • 0 replies
    • 581 views
  21. மாணவர் விசா விவகாரத்தை கேமரூனிடம் எழுப்பிய மோடி லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்த சென்ற மோடி, கேமரூன். | படம்: ஏ.பி, இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குக் கல்விக்காக வரும் மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்திருப்பதையும், மாணவர் விசாக்கள் குறித்த பிரச்சினைகளையும் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனிடம் எழுப்பினார். பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் இந்த விவகாரத்தை எழுப்பினார். இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "மாணவர்கள் விசா விவகாரத்தை பிரதமர் மோடி மிகவும் வலிமையாக எழுப்பினார். பிரிட்டனில் கல்விக்க…

  22. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு வித்திட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத்தத்தில் வைகோ போன்ற தலைவர்கள் முதலில் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மிகவும் தாமதமாக சுதாரித்த காங்கிரஸ் கட்சி தங்கபாலுவை உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு அனுப்பி வைத்தது. அங்கு நடந்த களேபரத்தில் தங்கபாலு தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது செய்தி அல்ல. இனி வரப்போவது தான் படுபயங்கர காமெடி செய்தி. இந்த தாக்குதலில் தங்கபாலுவின் இடதுபுற தலையில் அடிபட்டு, கைக்குட்டையால் மூடியவாறே உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியேறினார். ஆனால் தற்போது தங்கபாலுவின் அடிவருடிகள் சிலர் அவருடைய தலையின் வலதுபுறம் அடிபட்டதாக ஒரு போட்டோவை போட்டு போஸ்டர் ஒட்டி இலவச விளம்பரம் தேட முயற்சித்துள்ளனர்…

  23. மாணவர்களின் செல்போன் வக்கிரம்: மாணவி அகிலா தற்கொலை! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர். அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால்…

  24. மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது! மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ‘குளோபல் கொன்சல்ரன்சி கியூஎஸ் குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்’ என்ற அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகரத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை மற்றும் செயற்பாடு, வேலைவாய்ப்பு, விரும்பக் கூடியது, மலிவானது மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 14 நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள குறித்த பட்டியலில் உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக லண்டன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.