உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26606 topics in this forum
-
அண்ணாநகர் : கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், கூடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவனைப் பிடித்து விசாரித்தனர். சிறுவனின் பாக்கெட்டில் சுமார் ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது, ‘லவ் பேர்ட்ஸ்’ உள்ளிட்ட வளர்ப்பு பறவைகள் விற்பதாக தெரிவித்தான். 13 வயதில் வியாபாரமா? அதுவும் தனி ஒருவனாகவா? நம்ப முடியாமல் போலீசார், அவனை தீவிரமாக விசாரிக்க தொடங்கிய நேரத்தில், வேலூருக்கு செல்லும் தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் போலீசாரிடம் ஓடி வந்தனர். "சார்.. இவனை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். தினமும் எங்க வண்டியிலதான் வருவான். நல்ல பையன் சார். வளர்ப்பு பறவைகள் விற்கிறதுதான் இவனோட தொழில். தப்பான பையன…
-
- 9 replies
- 4k views
-
-
அமெரிக்க விமான நிலையங்களில் முழு உடல் சோதனை வாஷிங்டன், திங்கள், 28 டிசம்பர் 2009( 17:53 IST ) அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்ற குற்றத்திற்காக நைஜீரியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரையும் முழு உடல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சி.பி.எஸ். செய்தி தொலைக்காட்சிக்கு பீட்டர் கிங் அளித்துள்ள பேட்டியில், “நைஜீரியா போன்ற நாடுகளில் உரிய பாதுகாப்பு முறை பின்பற்றப்படாத காரணத்தால், அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளுக்கு முழு உடை சோதனை (full body scan) நடத்த வேண்டியது தற்போதைய சூழலில் அவசியமானதாகிறது” எனக் கூறியுள்ளார். முழு உடல் சோதனையால் பயணிகளின் தனி நபர் சுதந்த…
-
- 12 replies
- 1.7k views
-
-
கேர்னிங் நகரில் தமிழ் பேசிய இளைஞர் குழு ஒன்றிற்கும், துருக்கிய மத்திய கிழக்கு பின்னணி கொண்ட இளையோர் குழு ஒன்றிற்கும் இடையே கடும் மோதல் நடு நிசி தாண்டி சுமார் 01.04 மணியளவில் நடைபெற்றது. பேஸ்போல் மட்டைகள் கொண்டு இந்த மோதலில் இறங்கியிருந்தனர் என்றும் இதனால் 23 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மண்டை உடைந்து ஓகூஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இருவர் கை முறிந்து காயமடைந்து கேர்னிங் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேர்னிங் கொனகேத குடியிருப்பிற்கு முன்னால் நடந்த வன்முறைக் குழு மோதலில் தாம் ஆறு பேரை விசாரிப்பதாகவும் சுமார் 15 பேர் வரை இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என்று போலீஸ் தெரிவிக்கிறது. இது குறித்து சந்தேகத்தின் பேரி…
-
- 8 replies
- 1.1k views
-
-
துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம் இன்று திறக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான கட்டடத்துக்கு பர்ஜ் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா காண்கிறது. 2,684 அடி ( 818 மீட்டர்) உயரமுள்ள இந்த கட்டடத்தில் 57 லிப்டுகளும், எட்டு தானியங்கி படிகட்டுகளும் உள்ளன. அமெரிக்காவின் 101 அடுக்குகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயரம் 381 மீட்டர் தைவான் நாட்டில் உள்ள கட்டடத்தின் உயரம் 448 மீட்டர். தற்போது துபாயில் திறக்கப்பட உள்ள கட்டடத்தின் உயரம் 818 மீட…
-
- 6 replies
- 950 views
-
-
அவுஸ்த்திரேலியாவை உலுக்கிய இரு தமிழர்களின் வங்கிக் காசட்டை மோசடி இலங்கையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்து மற்றும் கணடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டு சர்வதேச அளவில் வங்கிக் கடனட்டை மோசடிகள் பலவற்றில் ஈடுபட்டு வந்த இரு தமிழர்களை அவுஸ்த்திரேலியப் போலிசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளங்கோவன் கணேஷமூர்த்தி மற்றும் கணடாவைச் சேர்ந்த 31 வயதுடைய ருக்ஷாந் செல்வராஜா ஆகிய இருவருமே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களாவர். மேற்கு அவுஸ்த்திரேலிய மாநிலமான பேர்த்திலுள்ள சுமார் 20 இற்கும் மேற்பட்ட மக்டொனால்ட் உணவு விடுதிகளில் "டிரைவ் இன்" பகுதியால் உள்நுழைந்து பணியாளர் வேறு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் தறுணத்தைப் பார்த…
-
- 9 replies
- 3.2k views
-
-
ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர். ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர். பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை ந…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தியாவுக்கு செல்லும் நான்கு நாடுகளின் பிரஜைகளுக்கு எச்சரிக்கை திகதி: 01.01.2010 // தமிழீழம் நான்கு நாடுகள் இந்தியாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா மற்றும் கனடா ஆகிய நாட்டவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டவர்களுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவிற்கு பயணிக்கும வெளிநாட்டவர்கள் ஒருமுறை வந்து சென்ற பின் இரண்டு மாத இடைவெளியின் பின்தான் திரும்ப இந்தியா செல்ல பயண அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. இன்நிலையில் இந்தியாவின் இந்த நிபந்தனைகளை இந்நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்தியாமுழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்றும் அடுத்தகட்ட தாக்குதல் வெளிநாட்டவர்கள் கூடு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மூலம் தற்ஸ்தமிழ்: http://thatstamil.oneindia.in/news/2009/12/26/tewari-may-be-sacked-soon-from.ஹ்த்ம்ல் ஹைதராபாத்: விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்துது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து ஆளுநர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்தார் என்.டி.திவாரி. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் அனுப்பி வைத்த விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்து கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டார் திவாரி. அவரது செயலால் நாடே அதிர்ந்தது. இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கமா என்று மக்கள் பதறினர். ஏற்கனவே தெலுங்கானா விவகாரத்தால் நொந்து போயுள்ள ஆந்திர மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்கள். செக்ஸ் ஊழலில் சிக்கி தவித்து வரும் என்.டி. திவாரியால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக…
-
- 21 replies
- 9.1k views
-
-
அண்மையில் அமெரிக்காவின் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில்உள்ள விமான நிலையங்கள் கடுமையானபாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னிலையில் நத்தார் பண்டிகையினை முன்னிட்டுதொலைக்காட்சியில் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காமீது தாக்குதல் நடத்துவதற்கு அல்கெய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது அல்கெய்தா அமைப்பு அமெரிக்காவிற்கு பலவித்த்தில் அச்சுறுத்தலாக உள்ளார்கள். உலகில் எந்த மூலையில் அல்கெய்தா அமைப்பு இருக்கின்றதோ அவர்களை தேடிக்கண்டுபிடித்து அழிப்போம் மக்களை அல்கெய்தாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ந…
-
- 0 replies
- 652 views
-
-
லண்டன் : உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதாபாத்திரம், திரைப்படங்கள், யூ டியூப் ஆகிய அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி 10 ஆண்டின் உலகின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜெ.கே. ரவுலிங். இவர் ஹாரி பாட்டர் என்ற கேரக்டரை மையமாக வைத்து எழுதிய நாவல்தான் ஹாரி பாட்டர். முதல் பாகம் 1997ல் வெளியானது. 7 பாகங்களாக வெளிவந்துள்ள இது உலக அளவில் புகழ் பெற்றது. இதுவரை 40 கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 67 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இது, வர்த்தக அளவில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. கடைசியாக வெளியான 4 பாகங்கள் உலகிலேயே வேகமாக விற்பனையான புத்தகம் என்ற சிறப்பைப் பெற்றன. பின்னர் இந்த கேரக்டரை மையமாக வைத்து ஹாலிவுட் த…
-
- 0 replies
- 921 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்க்க முயன்ற சம்பவத்தை அடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெல்டா ஏர் - லைன்ஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம், 278 பயணிகளுடன் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து, அமெரிக்காவின் டெட்ராயிட் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. விமானம், டெட்ராயிட் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அதில் அமர்ந்திருந்த ஒரு பயணி, தனது காலின் கீழே குனிந்து, தீப்பற்ற வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த விமான ஊழியர்கள், சக பயணிகள் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். உடனடியாக, டெட்ராயிட் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சில நிமிடங்களில், வி…
-
- 0 replies
- 989 views
-
-
அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி - எப்.பி.ஐ அதிகாரிகளினால் கைது கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதை அவர் ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகர்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும், விமானங்களும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2624&cntnt01origid=52&cntnt01returnid=51
-
- 1 reply
- 1.1k views
-
-
அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீ மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.விக்டோரியா மற்றும் தென் அவுஸ்ரேலியா மாநிலங்களில் ஆபத்து. http://www.sbs.com.au/news/article/1158402/'Safer-places'-designated-as-fires-
-
- 1 reply
- 826 views
-
-
ஆஸ்திரேலியாவில் ஏ.எச்.எஸ். சென்டார் என்ற கப்பல் இருந்தது. இது ஆஸ்பத்திரி போல வடி வமைக்கப்பட்டிருந்தது. அதில் 332 பேர் பணி புரிந்தனர். இவர்களில் 268 பேர் நர்சுகள். இரண்டாம் உலகப் போரின் போது அதாவது 1943-ம் ஆண்டு மே 14-ந் தேதி இக்கப்பல் ஜப்பான் நீர்மூழ்கி கப்பலால் தண்ணீருக்குள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. எனவே இக்கப்பல் மூழ்கியது. இந்த கப்பலில் இருந்து 64 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மற்றவர்கள் கடலுக்குள் ஜலசமாதி ஆனார்கள். இந்த சோக சம்பவம் ஆஸ்திரேலியாவில் இன்னும் மறையவில்லை. இந்த நிலையில் இந்த கப்பலை தேடும் பணி நடந்து வந்தது. தற்போது இக்கப்பல் குவின்ஸ் லேண்டு மாகாணத்தில் பிரிஸ்பேன் நகர் பகுதியில் மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சோவியத் நாட்டின் சாதனை 100 ஆண்டு காலத்திற்கு மேலாக பேசப்பட்டு வரும் கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் என்று இந்தியாவில் கைவிடப்பட்ட வேளையில் அதைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான திட்டத்தினை சோவியத் நாட்டில் நிறைவேற்றி மாபெரும் சாதனை புரிந்திருக்கிறார்கள். சோவியத் நாட்டில் உள்ள துர்க்மேனிய குடியரசில் 3,5000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு மாபெரும் பாலைவனம் ஒன்று அமைந்துள்ளது. இதற்கு அடுத்த குடியரசில் ஓடும் அமுதாரிய என்னும் ஆற்று நீரின் ஒரு பகுதியை இப்பாலைவனப் பகுதிக்குத் திரும்பிக் கொண்டுவந்து பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றியிருக்கிறார்கள். 18-ம் நூற்றாண்டில் துர்க்மேனிய நாடோடி மக்கள் அப்போது ரஷ்யாவை ஆண்ட மகாபீட்டர் சக்கரவர்த்தியைக் கண்டு …
-
- 0 replies
- 1.8k views
-
-
தெலுங்கானாவைத் தனி மாநிலமாக அறிவிப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. உடனடியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் இரவில் அறிவிக்க நேரிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தெலுங்கானா விவகாரம் இன்று ராஜ்யபாவில் புயலைக் கிளப்பியது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்ந்து நடந்து வரும் சமயத்தில் இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை சபைக்குத் தெரிவிக்காமல் அறிவித்தது குறித்து பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ராஜ்யசபாவில் இருமுறை பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் ப.சிதம்பரம் எழுந்து இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், "நேற்று வெங்கையா நாயுடு தெலுங்கானா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது அரசு பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்…
-
- 17 replies
- 2.6k views
-
-
பெய்ஜிங்: இந்திய வர்த்தகத் துறைக்கு சற்று கலவரம் தரும் செய்தி இது... 'சீனாவில் 1 பில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கண்டறியப்பட்டுள்ளது'. இதனால் இந்தியாவுக்கு என்ன கலவரம்? இதுவரை சீனா பயன்படுத்தி வந்த இரும்புத் தாதுவில் பாதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். அதாவது இந்த கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட உள்ளது என்பது கலவரமான செய்திதானே. சீனாவின் ஹீபே மாகாணத்தில் லூனான் கவுன்டி என்ற இடத்தில் ஆறு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த இரும்புத் தாது படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 41.43 மீட்டரிலிருந்து 108.95 மீட்டர் அடர்த்தியில் இந்தத் தாது படர்ந்துள்ளதாம். 100 முதல் 600 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தத் தாதுவை …
-
- 2 replies
- 2.3k views
-
-
UNFCC புவி வெப்பமடைதலினால் ஏற்பட்டு வரும் சூழல் மாற்றமும் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை குறித்து விவாதிப்பதற்காகவும் ஆக்கபூர்வமான் முடிவுகளை எடுப்பதற்காவும் ஐக்கிய நாடுகள் மன்றம் 15ஆவது தடவையாக டன்மர்கின் தலை நகரமாகிய கொப்பன்ஹாகனில் கூடியுள்ளது, 7/12 ல் தொடங்கியுள்ள இந்த மகநாடில் 192 நாடுகள் சூழல் மாற்றத்தை எப்படித் தவிர்கலாம் என்ற விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்க, இத்தப் பாரிய சூழல் பற்றிய விவாதம் 18/12 ல் முடிவடையும். இச் சூழல் பற்றிய மகாநாட்டின் விபரம் .pdf ல் cop15 frontpage Opposition to man-made climate change: We want proof! Russian TV
-
- 1 reply
- 629 views
-
-
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த பொறியாளரின் குழந்தையை அதே நிறுவனத்தில் மருத்துவப் பிரிவில் வேலைப்பார்த்த செவிலிப்பெண் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் கங்கை கொண்ட சோழன் தெருவைச் சேர்ந்தவர் குடியரசு (31). இவரது மனைவி வாசுகி (30). தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இன்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் அம்சவள்ளி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் பணியாற்றும் அதே கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மருத்துவப் பிரிவில் நர்ஸாக பணியாற்றுபவர் தேன்மலர் (24). காஞ்சிபுரத்தைச் சேர்ந்தஇவர், குடியரசு வீட்டின் அருகிலேயே வசித்து வந்தார். குடியரசு, வாசுகி, தேன்மலர் ஆகியோர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாலும், பக்கத்து வீட்டில் வசித்தத…
-
- 12 replies
- 2.4k views
-
-
லண்டன்: இளவரசர் சார்லஸுக்குப் பதில் அவரது மூத்த மகன் வில்லியம் விரைவில் மன்னராக முடி சூட்டப்படவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக இப்போதே அவர் ராணி எலிசபெத்தின் பணிகளைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் வில்லியம் நிழல் மன்னர் போல செயல்படுவதாக இங்கிலாந்து மீடியாக்கள் செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளன. ராணி எலிசபெத்துக்கு அடுத்து மன்னராக முடி சூட்டப்பட வேண்டியவர் சார்லஸ்தான். ஆனால் அவர் தனது எதிர்ப்பையும் மீறி காதலி கமீலாவை மணந்து கொண்டது எலிசபெத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால், சார்லஸுக்கு மன்னர் பதவியைத் தர அவர் விரும்பவில்லை. மாறாக, சார்லஸ் -டயானா தம்பதியினரின் மூத்த மகனான வில்லியமை மன்னராக்கவே அவர் விரும்புகிறார். தற்போது இது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. 27 வயதாகும…
-
- 0 replies
- 1.1k views
-
-
. வீரகேசரி இணையம். இத்தாலி நாட்டின் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி(73). அவரது சொந்த ஊரில், அவரது கட்சிப் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசினார். பேரணியின் போது பொதுமக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு வாலிபர் பிரதமரின் முகத்தில் உலோகத்தால் ஆன சிலையால் ஓங்கி அடித்தார். இதனால் அவரது வாய் மற்றும் மூக்கில் இரத்தம் கொட்டியது. பிரதமரது 2 பற்கள் உடைந்து விழுந்தன. பிரதமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாலிபரைப் பொலிசார் கைது செய்தனர். அவர் மனநோயாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.
-
- 0 replies
- 828 views
-
-
தறுதலை தமிழனின் தலைவணங்கிய வணக்கங்கள் டோண்ட் வோரி.. ரத்தகறையை அழிச்சிரலாம்.... தானைத் தலைவருக்கு, இந்த தறுதலை தமிழனின் தலைவணங்கிய வணக்கங்கள். 'என்னடா, இவன் தன்னைத் தானே தறுதலைன்னு சொல்லுறானேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க தலைவரே புள்ளைகளுக்கெல்லாம் அப்பன் வெக்கறது தானுங்க பேரு. வேலை வெட்டி எதுக்கும் போகாம நீங்க குடுத்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டில நீங்களும் உங்க வாரிசுகளும் வகைவகையா நடத்துற சேனல்கள்ல படம் பாட்டுத்துட்டு ஊர் மேஞ்சுட்டு இருந்ததனால ஊர அழைக்காமலேயே எங்கப்பன் எனக்கு வெச்ச ரெண்டாவது பேரு தானுங்க இந்த தறுதலைங்கற பேரு. பேரு நல்லா இருக்குங்களா தலைவரே? என்ன பண்ணித் தொலைக்கிறது தலைவரே எங்கப்பன் அம்பானி மாதிரி சொத்து சேத்து இருந்தா எனக்கு அதகொடுத்துர…
-
- 1 reply
- 1.9k views
-
-
சென்னை : தெலுங்கானாவைத் தொடர்ந்து, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷம் தமிழகத்தில் எழுந்தது. "தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை' என திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம், பா.ம.க., ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி "பளீர்' பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், "திடீர்' உண்ணாவிரதம் மேற்கொண்டார். பத்து நாட்கள் நீடித்த இந்த உண்ணாவிரதத்தால், ஆந்திரா போர்க்களமானது. போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைய பச்சைக் கொடி காட்டியது.மத்திய அரசின் இந்த அறிவிப்பால், அமைதி திரும்புவதற்கு மாறாக, தெலுங்கானா எதிர்ப்பு புயல் தற்போத…
-
- 1 reply
- 923 views
-
-
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம். இவரது மனைவி ஹீமாஅக்ரம் (வயது 42). நோயினால் பாதிக்கப்பட்ட இவரது உடல், உறுப்புகள் செயல் இழந்தன. எனவே இவருக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. எனவே அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். லாகூர் ஆஸ்பத்திரியில் அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்காததால்தான் மரணம் அடைந்தார் என கூறி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம் வாசிம்அக்ரம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையொட்டி நடந்த விசாரணையின் அடிப்படையில் வாசிம் அக்ரம் மனைவிக்கு சிகிச்சை அளித்த 17 டாக்டர…
-
- 0 replies
- 1.3k views
-
-
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் லண்டனில் செத்த தமிழனையும் வஞ்சித்த இந்திய தூதரக அதிகாரிகள் தமிழகத்தை சேர்ந்த கொல்லப்பட்ட ஒரு இந்திய குடிமகனுக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் காட்டிய அலட்சியம் லண்டனில் கொலையான வாலிபர் - இலண்டனில் இந்திய தூதரகம் என்ன செய்துகொண்டிருக்கிறது லண்டனில் படுகொலை செய்யப்பட்ட நாமக்கல் இளைஞர் சரவணக்குமாரின் உடல் தமிழகம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை கொண்டு வர உதவிய உலகத் தமிழ் கழகத்தின் நிர்வாகியான ஜேக்கப் ரவிபாலனும் உடலுடன் தமிழகம் வந்துள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்தவர் 23 வயதான சரவணக்குமார். லண்டனில் எம்.பி.ஏ படித்து வந்தார். படிப்புச் செலவுக்காக பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். தீபா…
-
- 5 replies
- 3.4k views
-