உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
இந்திய விமான நிலையங்களில் புலியின் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளின் மக்களும் சங்கமிக்கின்ற ஒரு இடம் விமான நிலையம். விமான நிலையங்களில் உள்ள நேர அட்டவணைப் பலகையில் அந்த விமானநிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களினது சின்னங்களுடன் பெயர்களும் அது தரையிறங்கும், புறப்படும் நேரங்களும் விமான இலக்கத்துடன் அந்த நேர அட்டவணையில் போடப்படும். ஆனால், இந்தியவிலுள்ள எந்தவொரு விமானநிலையத்திலும் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான “ரைகர் எயார் வேஸ்” (tiger air ways) எனும் விமானத்தின் பெயர் நேர அட்டவணையில் இடம்பெறுவதில்லை. உலகில் மிகக்குறைந்த விலையில் விமானச்சீட்டு வழங்கும் ஒரு விமான சேவை இது. விமானத்தின் சின்னமாக புலி இருப்பது தான் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டாலும், இந்…
-
- 0 replies
- 692 views
-
-
இழவு வீட்டில் சுண்டல் விற்பவர்கள்.. அநீதிகளுக்கு எதிராக உன் உள்ளம் கொதித்தால் நீயும் என் தோழனே..- சேகுவரா நிகர பொருளாதார தத்துவத்திற்க்காக போராடிய தோழர் சேகுவராவின் பிறந்த நாள் அன்று அவரது மூத்த மகள் அலைடா சேகுவரா ஒர் அறிக்கையை வெளியிட்டார்.. "என் தந்தையின் பெயரையும் படத்தையும் வணிக முத்திரையாக்காதீர்கள். பிரிட்டானிகா வோட்காவிற்கும் ஃபிஸ்ஸி பானத்திற்கும் ஸ்விஸ் கைபேசிக்கும் என் தந்தையின் படத்தை விளம்பரச்சின்னமாகப் பயன்படுத்துவது அவரை அவமதிக்கும் செயலாகும்.“நிகரமைப் பொருளியலுக்காகப் போராடியவரை மிகைத்துய்ப்பு வாதத்திற்குப் பயன்படுத்துவது முரண்பட்ட செயல். எங்களுக்குப்பணம் தேவை இல்லை. மரியாதைதான் தேவை”. சேகுவேராவின் புகழ், வணிக நோக்கங்களுக்குப் பயன்படு…
-
- 2 replies
- 2.2k views
-
-
அலங்காநல்லூர் : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று விமரிசையாக நடந்தது. மாடு முட்டி 63 பேர் காயமடைந்தனர். 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பொங்கலை ஒட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடப்பது வழக்கம். நேற்று இந்த நிகழ்ச்சி கோட்டை முனியாண்டி சுவாமி கோயில் திடலில் நடந்தது. காலை 10.30 மணிக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக, கிராம கோயில் காளை ரசிகர்களின் விசில்பறக்க களமிறங்கியது. 5 நிமிடங்களுக்கு மேல் நின்று விளையாடிய இந்த காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. கூர்சீவப்பட்ட கொம்புடன் சீறிப்பாய்ந்து வீர…
-
- 0 replies
- 546 views
-
-
மக்கள் போராட்டங்களும்- இந்தி-தமிழக அரசியல்வியாதிகள் நிலையும்- இனி தமிழ்தேசிய தோழர்கள் கடமையும் மக்கள் போராட்டம்-(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு) தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட்டார்கள்.இன்று அந்த பழக்கமே மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்…
-
- 0 replies
- 742 views
-
-
கேப்டன் டிவி- ஏப்.14ல் ஒளிபரப்பு ஆரம்பம்! சென்னை: தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 'கேப்டன் டிவி' ஏப்ரல் 14ம் தேதி, 24 மணி நேர ஒளிபரப்பு சேவையை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 'கேப்டன் டிவி'யின் நிர்வாக இயக்குனர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், 'கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம் ததும்பும் தொடர் நாடகங்களும், மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களும், மாலை புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களும் இடம் பெறுகின்றன. பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் இதில் முக்கிய பங்கு பெற…
-
- 0 replies
- 577 views
-
-
நாளை எம்ஜிஆர் பிறந்தநாள் விழா! சென்னை: முன்னாள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க நிறுவனருமான எம்ஜிஆரின் 93வது பிறந்தநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் தொண்டர்களும் அ.தி.மு.க கட்சியினரும் கொண்டாடத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துமாறு தொண்டர்களுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் எம்ஜிஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து தொண்டர்களுக்கு நிதியுதவி வழங்குகிறார். எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு அவ்வை சண்முகம் சாலைய…
-
- 0 replies
- 510 views
-
-
எம்.கே. நாராயணன் ஆளுநராகிறார்-அவரது பதவியில் மேனன் டெல்லி: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள எம்.கே.நாராயணன் மேற்கு வங்க ஆளுநராக நியமி்க்கப்படவுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. முன்னாள் இன்டெலிஜெஸ் பீரோ (ஐ.பி.) தலைவரான நாராயணன், காங்கிரசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் அவர் கடந்த 7 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார். பிரதமர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உளவுப் பிரிவுகள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பதவி இது. தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது, இலங்கை விவகாரத்தை கையாண்ட முறை என முக்கிய விவகாரங்களில் நாரா…
-
- 6 replies
- 744 views
-
-
போர்ட் ஆப் பிரின்ஸ் : ஹைதி தீவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தலைநகர் போர்ட் ஆப் பிரின்சில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாக காட்சியளிக்கிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் மரண ஓலம் எங்கும் ஒலிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட உலக நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா அருகே கரீபியன் கடல் பகுதியில் உள்ளது ஹைதி தீவு. அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பூகம்பம் அந்த தீவையே இடுகாடாக்கி விட்டது. சில விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகள் பதிவானது. வீடுகளும் கட்டிடங்களும் சீட்டுக் கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன. நிலைமையை புரிந்து கொள்வதற்கு முன்பே இடிபாடுகளில் சிக்…
-
- 3 replies
- 780 views
-
-
மலையாளிகளுக்கு ஏன் பச்சபாண்டிகள் மீது இவ்வளவு காண்டு? "கச்ச தீவை திரும்ப பெறுவதால் தமிழக மீனவர்கள் சுடபடுவது நிற்காது-நாராயணன் இலங்கையில் மனித உரிமை மிகச்சிறப்பாக பேணபடுகிறது- சசிதரூர் இலங்கையில் என்ன நடக்கிறது என நான் சொல்ல மாட்டேன் – விஜய நம்பியார் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்: மேனன் இலங்கைக்கு இந்தியா எவ்வித அழுத்தங்களையும் கொடுக்காது – மேனன் இந்தியாவினது போரைத்தான் நான் நடாத்தியுள்ளேன்-“ஜனாதிபதி ராஜபக்ஸ சொன்னது சரியானதே” – மேனன்" ஊர்விட்டு ஊர் வந்து டீ கடையும் பேக்கரியும் நடத்தும் இக்கும்பல்கள் தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை இம்சிப்பதும் தென்னிந்திய ரயில…
-
- 0 replies
- 1.9k views
-
-
சீனாவிலிருந்து வெளியேறும் கூகுள்!! பெய்ஜிங்: தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை குறி வைத்து சைபர் தாக்குதல் தொடர்வதால், இனி சீனாவிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம். சர்வதேச அளவில் இது மிகப் பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டாளராகத் திகழ்கிறது கூகுள். இந்த நிறுவனம் வெளியேறும் பட்சத்தில், அதைப் பின்பற்றி வேறு சில நிறுவனங்களும் கூட வெளியேறும் ஆபத்து உள்ளது. இன்னொரு பக்கம், கூகுளுக்கு நேர்ந்த சங்கடத்தை சர்வதேச வர்த்தக சுதந்திரத்துக்கு நேர்ந்த அச்சுறுத்தலாகப் பார்க்கிறது அமெரிக்கா. இந்த விஷயத்தில் உடனடி விளக்கம் தேவை என சீன அரசிடம் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனே கேட்டுள்ளா…
-
- 1 reply
- 580 views
-
-
நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராக கடமைபுரியும் திரு வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு …
-
- 0 replies
- 533 views
-
-
ஆட்டுமந்தை கூட்டத்தை கட்டுபடுத்த வழி கூறுங்கள்... ஈழ பிரச்சனையிலும் சரி இந்த பிராந்தியத்தின் மற்ற பிரச்சனைகளிலும் மற்ற நாடுகள் தலையிடாமல் இருப்பதற்கு காரணம் பொந்தியாவின் அறிவியல் வளர்ச்சி..அணு ஆயுதவளர்ச்சி ..ரசாயண வளர்ச்சி என்று ஒரு மண்ணும் இல்லை.. பன்னி குட்டி போடுவது போல் மக்கள் சந்தை அல்லது மக்கள் கூட்டம்.. விளம்பரங்கள் மூலம் அவிழ்த்து போட்டு ஆடி .. நுகர்வு வெறியை மக்களிடம் தூண்டி வருகிறது கோகோ கோலா முதல் குண்டூசி வரை எவளாவது அரைகுறையோடு சொன்னால் தான் இங்குள்ள மாக்களுக்கு ஏறுகிறது.. இவ்வாறு அடிமைபடுத்த பட்ட மக்கள் சந்தையை இங்கு வைத்திருக்கும் பன்னாட்டு மாமாக்கள் .. இப்பிராந்தியத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடதவாறு மனிதாபிமானமுள்ள அந்தாந்த நாட…
-
- 8 replies
- 1.3k views
-
-
ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 573 views
-
-
'இந்தியாவைவிட ஆஸியில் இந்தியர் பாதுகாப்பாக உள்ளனர்' மெல்போர்ன்: இந்தியர்கள், இந்தியாவில் இருப்பதை விட ஆஸ்திரேலியாவில் மிக பாதுகாப்பாகவே உள்ளனர் என்று அந் நாட்டு விக்டோரியா மாகாண போலீஸ் கமிஷ்னர் சிமோன் ஓவர்லேண்ட் கூறினார். ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் கொலைகளும் ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியா. சிமோன் கூறுகையில், தங்களது சொந்த நாட்டை (இந்தியா) விட, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். வேண்டுமானால், புள்ளி விவரங்களை பாருங்கள். இந்தியர்கள் அவர்களது சொந்த நாட்டை விட இங்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளது தெரியும் என்றார். அந் நாட்டு வெ…
-
- 4 replies
- 665 views
-
-
ஹைட்டி நாட்டில் கடுமையான நிலநடுக்கம்: பலி ஆயிரத்தை தாண்டும்? கரீபியன் தீவு நாடுகளின் ஒன்றான ஹைட்டியில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.0 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹைட்டி நாட்டை இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள், இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் சாலைகளில் அநாதையாக கிடப்பதாக தெரிவித்துள்ளனர். ஹைட்டி தலைநகர் போர்ட்-அ-பிரின்ஸில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்பாக தனது அமெரிக்க நண்பர்களுக்குப் பேசிய கத்தோலிக்க சேவை மையத்தின் பிரதிநிதி, “இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி குறைந்தது ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும்” எனக் க…
-
- 0 replies
- 514 views
-
-
தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவும் ஏவுகணையை, மற்றொரு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சென்று தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம்:- சீனா பரிசோதனை வெற்றி. எதிரி நாட்டில் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஷின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவும் ஏவுகணையை, மற்றொரு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சென்று தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதித்துள்ளது. இந்தப் பரிசோதனையின் முடிவு திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்ததாக" கூறப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை எந்த நாட்டையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என்ற…
-
- 1 reply
- 569 views
-
-
இசைஞானி இளையராஜா பொதுவாக அரசிடம் கோரிக்கை எதுவும் வைக்காதவர். அறப்பணி உதவிகளென்றால் கூட தானே தன் சொந்த பணத்தில் செய்துவிடுபவர். ஆனால், அவர் அரசுக்கு வைத்த ஒர் கோரிக்கை, இசைக்கென்று தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பதுதான். தனது இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் இளையராஜா. சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் நேற்று மாணவிகள் நடத்திய பொங்கல் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் இசைஞானி. அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு தனது ஆர்மோனியத்தையும் எடுத்து வந்தார் ராஜா. மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விகளுக்கு அதே உற்சாகத்துடன் அவர் பதிலளித்தார். …
-
- 1 reply
- 891 views
-
-
நல்லது நடக்கும் போது பாராட்டு தெரிவியுங்கள்!!அதுவே பண்பாடு! டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம். கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், மாநில உள்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சீனாவின் ரகசியமான நில ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், லே பகுதி குறித்த முறையான, சரியான வரைபடம் இல்லாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. சரியான வரைபடம் இல்லாத காரணத…
-
- 8 replies
- 2.3k views
-
-
புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐக்கிய அரசு எமிரேட் அரசு, இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர் ஷேக் கலிபா பின் சயீது, புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும், புதிய சட்ட விதிமுறைகளில் கையெ ழுத்திட்டுள்ளார்.இதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்களை விற்போருக்கு 1.2 கோடி ரூபாய் வரை அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
எப்படி இப்படியா தங்கபாலு காங்கிரஸ் கட்சி தமிழர்களை பாதுகாக்கிறது http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24108 தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் கே.வீ.தங்பாலு, இந்தியாவில் தீவிரவாதம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏன் என்றால் இப்போது உள்ள அரசு காந்திய வழியில் நடத்தப்படும் காங்கிரஸ் அரசு. இந்திரா காந்தி, மகாத்மா காந்தியை எப்படியை தீவிரவாதிகள் கொன்றார்களோ, அப்படித்தான் ராஜீவ்காந்தியும் கொல்லப்பட்டார். இலங்கை தமிழர்களுக்காக நாம் பாடுபட்டோம். ஆனால் இலங்கைத் தமிழர்களே நம்ம தலைவரை கொன்றுவிட்டார்கள். இதை காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்தியால…
-
- 3 replies
- 789 views
-
-
ஒரே நேரத்தில் இருநாடுகளுடனும் போர்புரியம் வல்லமை இந்தியாவுக்கு உண்டு ஒரேநேரத்தில் இந்தியாமீது சீனாவும் பாக்கிஸ்தானும் போர்தொடுப்பது ஒரு அசாதாரணமானதுதான். ஆனால் இவ்விருநாடுகளும் போர்தொடுத்தால் அதனை எதிர்கொள்ள முடியும் என்றும் இந்தியவிமானப்படையின் கிழக்கு கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இருமுனைகளிலும் போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக்கூடிய வேகமாக இடம்மாறும் போர் குழுக்கள் இந்தியாப்படையில் உள்ளதென்றும் அப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் ''ஆற்றல் பெருக்குப்படைகள்" செயல்படும். ஒரேநேரத்தில் ஒருமுனையில் தற்காப்பு போரிலும் மறுமுனையில் தாக்குதலிலும் ஈடுபட்டு தேசத்தை காப்பாற்ற வல்லமை பெற்றவை என்றும் தெரிவித்தார். அவர் சீனாவினால் உற்பத்தி செய்யப்பட்டுவரும் ச…
-
- 1 reply
- 697 views
-
-
தனது வாழ்விலோ அல்லது செய்யும் தொழிலிலோ தான் கடைபிடித்துவந்த, கட்டிக் காத்துவந்த கொள்கையை ஒரு மனிதன் விட்டுவிட்டுப் பாதை மாறிடும் போது, அதனால் ஏற்படும் (தீய) விளைவுகள், அவனுடைய வாழ்வையும், தொழிலையும் மட்டுமே பாதிப்பதில்லை. அப்படிப்பட்ட மனிதனை அல்லது நிறுவனத்தைச் சார்ந்துள்ள மக்கள் அல்லது சமூகத்தை அந்தத் தடுமாற்றம் எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை ஒரு நிகழ்வும், அந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகமும் விளக்கியது. நாட்டு நடப்பையும், அது சார்ந்த அரசியலையும் செய்தியாக அளிப்பதோடு நிற்காமல், நிகழ்வுகளுக்கான காரணத்தையும், பிரச்சனைகளின் ஆழத்தையும் தெளிவாக எடுத்துரைத்து வாசகர்களை விவரப்படுத்தும் சமூகக் கடமையுள்ள ஊடகங்கள், தடம் புரண்டு, நிகழ்வின் காரணத்தை மறைத்தும், உண்மை…
-
- 7 replies
- 807 views
-
-
அண்ணாநகர் : கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், கூடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவனைப் பிடித்து விசாரித்தனர். சிறுவனின் பாக்கெட்டில் சுமார் ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது, ‘லவ் பேர்ட்ஸ்’ உள்ளிட்ட வளர்ப்பு பறவைகள் விற்பதாக தெரிவித்தான். 13 வயதில் வியாபாரமா? அதுவும் தனி ஒருவனாகவா? நம்ப முடியாமல் போலீசார், அவனை தீவிரமாக விசாரிக்க தொடங்கிய நேரத்தில், வேலூருக்கு செல்லும் தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் போலீசாரிடம் ஓடி வந்தனர். "சார்.. இவனை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். தினமும் எங்க வண்டியிலதான் வருவான். நல்ல பையன் சார். வளர்ப்பு பறவைகள் விற்கிறதுதான் இவனோட தொழில். தப்பான பையன…
-
- 9 replies
- 4k views
-
-
அமெரிக்க விமான நிலையங்களில் முழு உடல் சோதனை வாஷிங்டன், திங்கள், 28 டிசம்பர் 2009( 17:53 IST ) அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்ற குற்றத்திற்காக நைஜீரியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரையும் முழு உடல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சி.பி.எஸ். செய்தி தொலைக்காட்சிக்கு பீட்டர் கிங் அளித்துள்ள பேட்டியில், “நைஜீரியா போன்ற நாடுகளில் உரிய பாதுகாப்பு முறை பின்பற்றப்படாத காரணத்தால், அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளுக்கு முழு உடை சோதனை (full body scan) நடத்த வேண்டியது தற்போதைய சூழலில் அவசியமானதாகிறது” எனக் கூறியுள்ளார். முழு உடல் சோதனையால் பயணிகளின் தனி நபர் சுதந்த…
-
- 12 replies
- 1.7k views
-
-
கேர்னிங் நகரில் தமிழ் பேசிய இளைஞர் குழு ஒன்றிற்கும், துருக்கிய மத்திய கிழக்கு பின்னணி கொண்ட இளையோர் குழு ஒன்றிற்கும் இடையே கடும் மோதல் நடு நிசி தாண்டி சுமார் 01.04 மணியளவில் நடைபெற்றது. பேஸ்போல் மட்டைகள் கொண்டு இந்த மோதலில் இறங்கியிருந்தனர் என்றும் இதனால் 23 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மண்டை உடைந்து ஓகூஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இருவர் கை முறிந்து காயமடைந்து கேர்னிங் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேர்னிங் கொனகேத குடியிருப்பிற்கு முன்னால் நடந்த வன்முறைக் குழு மோதலில் தாம் ஆறு பேரை விசாரிப்பதாகவும் சுமார் 15 பேர் வரை இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என்று போலீஸ் தெரிவிக்கிறது. இது குறித்து சந்தேகத்தின் பேரி…
-
- 8 replies
- 1.1k views
-