Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தமிழர்களின் பகுதி கடந்த முறை தேர்தலில் வென்ற பிறகு தாராவி பகுதியில் முக்கியமாக தமிழர்களின் பகுதியில் கருனைகாட்டாமல் இருந்தே வர்ஷா மேடமே( நடாளுமன்ற உறுப்பினர் ஏக்நாத் காய்வாடின் மகள்) மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார். மட்டுங்கா பகுதிகளில் உள்ள வசதிபடைத்த தமிழர்கள் வாக்கு பதிவின் போது மாடியை விட்டு கீழே இறங்குவது இல்லை இது 1960 களில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. மீண்டும் தாராவி தமிழர்களுக்கு ஒரு இருண்ட காலம் (இது அவர்களாகவே ஏற்று கொண்டது. தாராவியில் இந்த முறை ஒரு மாற்றம் தெரிந்தது எப்பொழுதும் காங்கிரஸிற்கு ஓட்டு போடும் வட இந்திய மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் அதிகம் சிவசேனாவிற்கு ஓட்டு போட்டு இருந்தனர். தெலுங்கர்கள் மற்றும் கோலி இனமக்கள், ஆகியோ…

  2. மும்பை ரெயில் விபத்து படங்கள் ஒரு விபத்து 2 நபர் உயிரிழப்பு 11 பேர் காயம் 463 புறநகர் ரெயில் சேவை நிறுத்தம் 18 வெளியூர் சேவை ரெயில் நிறுத்தம் சுமார் 12 லட்சம் பயணிகள் தவிப்பு காரணம் இரண்டு அதிகாரிகளின் அலட்சியம். இந்தியாவின் மராட்டிய மாநிலத்தின் பிரபல நகரமான கல்யானில் இருந்து மும்பை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த ரெயிலில் மீது காலை 10. 45 மணி அளவில் தண்ணீர் குழாய் செல்வதற்காக போடப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. மும்பையை தென் மாநிலங்களுடன் ரெயில் பாதை மூலம் இனைக்கும் முக்கிய பகுதி பாதிக்கபட்டதால் இந்த நிலை தானே மாநகராட்சி ”நாங்கள் பழுதுபார்ப்பதற்காக அனுமதி கேட்க்கும் பேதெல்லாம் ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து விடுகிறது. இது தானே மாநகராட்சி கமிசனர் லாலி…

  3. உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலைப் போலவே நியூசிலாந்தில் ஒரு தாஜ்மஹால் நகலை உருவாக்கும் முயற்சியில் இந்தியர்கள் சிலர் இறங்கியுள்ளனர். 100 கோடி ரூபா செலவில் இந்த 'நகல்' தாஜ்மஹால் உருவாகவுள்ளது. இந்தியாவில் உள்ளதைப் போலவே இந்த தாஜ்மஹால் உருவாகவுள்ளது. நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இந்த புதிய தாஜ் மஹால் கட்டி எழுப்பப்படவுள்ளது. ஆக்லாந்தின் புறநகரான ஈடன் சே பகுதியிலுள்ள வடக்கு சாலையில்இ அமைந்துள்ள மகாத்மா காந்தி மைய வளாகத்தில் இந்த தாஜ்மஹால் கட்டப்படும். இதுகுறித்து காந்தி மையத்தின் தலைவரான கானு படேல் கூறுகையில்இ "இந்திய கலாசாரம் மற்றும் வரலாற்றின் பிரமாண்டத்தை இந்தப் புதிய தாஜ்மஹால் பிரதிபலிக்கும் இந்தியர்களின் பெருமையையும் இது பறை சாற்றும்" என்றார். இந…

  4. திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு, பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் அனுமதி அளித்து விட்டதாக, அருணாச்சல் முதல்வர் தோர்ஜீ காண்டு தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம், அருணாச்சல பிரதேசத்திலுள்ள தவாங் பகுதிக்கு புத்த மதத் தலைவர் தலாய்லாமா செல்கிறார். அங்கு கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். அருணாச்சல பிரதேசம் தனது பகுதி என்று கூறிவரும் சீனா, தலாய்லாமா அங்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதி என்கிறது. இந்நிலையில், அருணாச்சல் முதல்வர் காண்டு பிரதமரை சந்தித்தார். சீன அருணாச்சல் பிரதேச எல்லைப் பிரச்னையில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று, பிரதமரைக் கேட்டுக்கொண்ட அவர், தல…

    • 1 reply
    • 931 views
  5. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் வருமா? நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு அக்டோபர் 20,2009,00:00 IST புதுதில்லி : மரபணு மாற்றம் செய்யப்பட்ட, "பி.டி' கத்தரிக்காய்க்கு உயிர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு தரப்பில் இந்த கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப் படுவதால் இந்த கத்தரிக்காய் சந்தைக்கு வருமா என்பது கேள்வி குறியாக உள்ளது. கோவை வேளாண் பல்கலைக் கழகமும், அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டாவின் இந்தியப் பங்குதாரரான மஹிகோ நிறுவனமும் சேர்ந்து, காய்புழு தாக்குதலை எதிர்க்கும் வகையில், மரபணு மாற்றம் செய்யப் பட்ட கத்தரிக்காய்களை உற்பத்தி செய்துள்ளன. இந்த கத்தரிக்காய் செடி, வறட்சியை தாங்க வல்லது; பூச்சிக்கொல்ல…

    • 19 replies
    • 2.9k views
  6. “சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.ஜீவன் 12.10.2009 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் புறக்காவல் நிலையம் அருகே விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சட்டைப்பையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி எழுதிய கடிதத்தில்..’ வெங்கடாஜலபதி முன்பாக இறக்க வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை எடுத்தேன். எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. எனது மரணத்தால் பெற்றோரும் உறவினர்களும் அழவேண்டாம். மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.” - இது 13.10.2009 தினத்தந்தியில் வெளிவந்த ஒரு செய்தித் துணுக்கு. ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு மனிதனுக்கு மட்டுமல்ல மனிதன் உருவாக்கிய கடவுளர்களிடமும் உண்டு என்பதற்கு விசுவரூ…

  7. இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடா அருகே சென்ற சிங்கப்பூர் கப்பலை, சோமாலிய கடல்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் இருந்த இரண்டு இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளனர். சோமாலியா நாட்டில் நிரந்தர அரசு ஏதும் இல்லை. வன்முறையாளர்கள் ஒவ்வொரு குழுவாக செயல்பட்டு ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த வன்முறையாளர்களில் சிலர் கடல் கொள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் சர்வதேச கப்பல்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்தி கடத்திச் செல்வதும், கணிசமான பிணைத் தொகையைப் பெற்றுக் கொண்டு கப்பலை விடுவிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும், நூற்றுக்கும் அதிகமான கப்பல்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தியுள்ளன…

  8. மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை 11 பாடல் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒலிப்பேழைகளாக வெளிவந்தவை தற்போது ஒலிக்குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. இந்தப்பாடல்கள் அனைத்தும் அரசியல் சார்பு கொண்ட தமிழக மக்களிடம் பிரபலம் என்றால் மிகையில்லை. ம.க.இ.கவின் மையக்கலைக்குழு தோழர்கள் இதற்கு இசையமைத்து பாடியிருக்கிறார்கள். எமது பொதுக்கூட்டத்தில் அவர்கள் நடத்தும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருவார்கள். ஒவ்வொரு குறிப்பான அரசியல் காலகட்டத்தை மனதில் கொண்டு அவர்கள் தயாரிக்கும் பாடல்கள், நிகழ்ச்சிகள் தமிழகத்தின் புரட்சிகர வரலாற்றின் கலைப்பதிவாய் இடம் பெற்றுவிட்டன. நடைமுறையில் இப்படி இயங்கும் இந்த மக்கள் இசையை இணையத்தில் இருக்கும் வினவின் வாசகர்கள் பலர் அ…

  9. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம், லாஸ் ஏஞ்சலெஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது உடமைகள் சோதனையிடப்பட்டன. கிட்டத்தட்ட 3 மணி நேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் பெக்காம். 34 வயதாகும் பெக்காம், வியாழக்கிழமையன்று லண்டனிலிருந்து லாஸ் ஏஞ்சலெஸ் வந்தார். அங்கு அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது உடமைகளை முழுமையாக சோதனையிட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த சோதனை நடந்ததால் பெரும் அதிருப்திக்குள்ளானார் பெக்காம். எரிச்சலைடந்தார். தனது அமெரிக்க ஏஜென்டுகளைத் தொடர்பு கொண்டு நான் வெளியேற வேண்டும், ஏதாவது செய்யுங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுள்ளார். ஆனாலும் அவர்களாலும் பாதுகாப்பு சோதனையிலிரு…

  10. கண்காட்சிகள் நடத்தப்படும் கொடிசியா அரங்கில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த அரசு முடிவு செய்திருக்கிறது என பரவியுள்ள தகவல்,கோவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் 9ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு, கோவை மாவட்ட மக்களைப் பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியது. அதேநேரத்தில், மிகக்குறுகிய கால இடைவெளியில் மாநாட்டை நடத்த திட்டமிட்டதில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. வழக்கமாக, உலகத் தமிழ் மாநாடு நடக்கும் ஊர்களில் புதிய குடியிருப்புகள், வீதிகள், பாலங்கள் என அனைத்து விதமான கட்டமைப்பு வசதியும் செய்து தரப்படும். இதனால், அந்த நகரத்துக்கும், நகர மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.ஆனால், 4 மாத இடைவெளி…

  11. "உங்களை மக்கள் ஏன் வெறுக் கிறார்கள்?'' என 9 வயது சிறுவனொருவன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்டான்.அவர் அவனை ஆரத்தழுவி அவனின் துணிச்சலைப் பாராட்டினார். அமெரிக்காவில் புயலால் பாதிக்கப் பட்ட நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தை ஜனாதிபதி பராக் ஒபாமா பார்வையிட் டார். அங்கு பொதுமக்களை அவர் சந் தித்துப் பேசினார். அப்போது அவரை டைரன் ஸ்காட் என்ற 9 வயதுச் சிறுவன் சந்தித்தான். அவன் ஒபாவைப் பார்த்து, "ஏன் உங்களை மக்கள் வெறுக்கிறார்கள்?'' என துணிச்சலாகக் கேட்டான். அவனது கேள்வியால் தடுமாற்றமடைந்த ஒபாமா, சமாளித்துக்கொண்டே பதில் அளித்தார். "நான் ஜனாதிபதித் தேர்தலில் ஏராளமான வாக்குகளைப் பெற்றுள்ளேன். அதனால் என்னை எல்லோருமே வெறுக்கிறார்கள் எனக் கூறமுடியாது'' என அவ…

  12. ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் மா. செங்குட்டுவன் வந்திருந்தார். கவிக்கொண்டல் செங்குட்டவன் என்று அவரை அழைப்பார்கள். திமுகவின் ஏதோ ஒரு இலக்கியப் பிரிவில் அவர் இருப்பதாக ஞாபகம். அவர் யேர்மனியோடு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று விட்டு தமிழ்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகையில் கவிக்கொண்டல் செங்குட்டுவன் இலக்கியப் பயணத்தை முடித்திக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார் என்று பெட்டிச் செய்தியும் வந்திருந்தது. திமுகவில் ஏதோ ஒரு மட்டத்தில் ஓரளவு முக்கியமானவராக அவர் இருக்கின்றார் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். யேர்மனியில் உள்ள அன்னை பூபதி படிப்பகத்திற்கான பெருந்தொகை நூல்களையும் அவர…

  13. 76 இலங்கை தமிழ் அகதிகளுடன் கனடாவுக்குள் நுழைந்த கப்பலை அந் நாட்டு கடற்படை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை கைது செய்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஓஷன் லேடி என்ற அந்தக் கப்பல் வான்கூவர் தீவுக்கு அருகே வந்தபோது கனடா கடற்படை சுற்றி வளைத்தது. அதில் இருந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது. கனடாவில் குடியேற அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால்இ அவர்களை பிரிட்டிஷ் கொல்பியாவில் உள்ள ஒரு சிறையில் வைத்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடா பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந் நாட்டில் குடியேறுவது சமீபகாலமாக மிகவும் சிரமமாகிவிட்டது. வருடல்.....

  14. இலங்கைத் தமிழர்களின் நிலைமையை அறியும் விதமாக ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குப் போன தமிழக எம்.பி-க்கள் குழு கடந்த 14-ம் தேதி ரிட்டர்ன் ஆனது. முதல்வரே சென்று இந்தக் குழுவை விமான நிலையத்தில் எதிர்கொண்டார். ''எம்.பி-க்கள் குழு இலங்கையின் நிஜமான நிலையைக் கண்டிப்பாக வெளிப்படுத்தாது. பொருத்தமற்ற சாக்குபோக்குகளைச் சொல்லி சமாளிக்கும் விதமாகத்தான் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்!'' என ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்க... இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தோம். பயணக் களைப்பு அகலாத நிலையில், நெஞ்சறையும் நிஜங்களை கொஞ்சமும் மறைக்காமல் குமுறலும் கொந்தளிப்புமாக நம்மிடம் கொட்டத் தொடங்கினார் திருமா…

    • 8 replies
    • 3.4k views
  15. இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து இந்திய-சீன பிரதமர்கள் இடையே ஹாட்லைன் தொடர்பை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. எல்லையில் ஊடுருவல், பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தது , ஆகிய செயல்களால் இந்தியாவை சீனா சீண்டி வருகிறது. இதையடுத்து பாகி்ஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் சீனாவின் செயல்களுக்காக இந்தியா கண்டனம் தெரிவித்தது.எல்லைக்கு அருகே சீனா புதிய ராணுவ, விமானப் படைத் தளங்களை அமைத்து வருவதையடுத்து இந்தியாவும் தனது பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந் நிலையில் இரு நாட்டு வெளியுறவத்துறைகளும் பதற்றத்தைத் தணிக்கும் வேலைகளில் ஈடுபட்…

  16. கடலுக்கு அடியில் முதல் தடவையாக அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்த மாலைத்தீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலகம் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில் இந்த விசித்திர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கடல் மட்டத்திலிருந்து ஆறு மீற்றர் ஆழத்தில் நீச்சல் உபகரணங்களுடன் மாலைத்தீவு அமைச்சரவை அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளனர். உலக காபனீரொட்சைட் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்தக் கோரி விசேட ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. கடலுக்கு அடியில் மாநாடு நடத்துவது தொடர்பில் மாலைதீவு அமைச்சர்களுக்கு விசேட பயற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 14 பேரைக் கொண்ட மாலைதீவு அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் மட்டும் இந்த மாநாட்டி…

  17. இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாக பேசினார்களா? இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறது, தமிழக எம்.பி.க்கள் குழு. இலங்கை சென்ற எம்.பி.களில் ஒருவரான கனிமொழியிடம் அவர்களது பயணம் தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தோம். முகாம்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா? ``முகாம்கள் என்பதே குறைந்த கால அளவில் குடியமர்த்தப் பயன்படுவதுதான். எனவே, எப்படிப்பட்ட முகாம்களாக இருந்தாலும் மக்கள் அங்கே தொடர்ந்து வாழ முடியாது. அந்த முகாம்களில் உள்ள அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை விட சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.'' ஓரளவு நவீன வசதிகள் செய்யப்பட்ட முகாம்களு…

    • 2 replies
    • 1.2k views
  18. http://www.youtube.com/watch?v=qC2eF0L-QAA இக்குழந்தை சிறு காயத்துடன் உயிர் தப்பி விட்டது.

  19. இந்த வாரக் குமுதம் இதழிலி இருந்து இலங்கை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் உண்மை நிலையைக் கண்டறியும் தமிழக எம்.பி.க்களின் பயணத்தைப் பற்றி ஈழத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்கள், மாணவர்கள் சிலருடன் பேசினோம். `வெள்ளை வேன்' அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதால், முதலில் பேசத் தயங்கியவர்கள், தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார்கள். "தமிழக எம்.பி.க்கள் வரவால் ஒரு மாற்றம் ஏற்படும்; முகாம்கள் பற்றி அரசாங்கம் கூறும் தகவல் சரியா என்பதைக் கண்டறிந்து உண்மைகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருந்தது. ஆனால், வழக்கப்படியே அரசாங்கம் அழைத்துச் சென்று காண்பித்த முகாம்களுக்க…

  20. 15 நாளில் 58,000 பேர் மறுகுடியேற்றம்?: தெரியாது என்கிறது இலங்கை! கொழும்பு: 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை மறுகுடியேற்றம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா கூறியுள்ளார். இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் [^] குழு தமிழகம் திரும்பியதும் முதல்வர் [^] கருணாநிதியை சந்தித்து தங்களது அறிக்கையைக் கொடுத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி, 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப் போவதாக இலங்கைத் தரப்பு தெரிவித்துள்ளதாகவும், ம…

  21. இந்திய நாடாளுமன்றக் குழு!!

  22. முகாம் தமிழர்கள் நிலை: குழு அறிக்கை சொல்வது என்ன? சென்னை: முள் வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பெரும் அவதியில் உள்ளனர். மழைக்காலத்திற்கு முன்பு அவர்களை இடம் பெயரச் செய்யாவிட்டால் பெரும் சீரழிவு ஏற்படும் என்று திமுக - காங்கிரஸ் -விடுதலைச் சிறுத்தைகள் எம்.பிக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்று திரும்பிய இக்குழுவினர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தங்களது பயணம் குறித்த 9 பக்க அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது... வேதனை தாங்க முடியவில்லை... இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ் மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை. அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் சொந்த ஊர்களுக்கு ச…

    • 2 replies
    • 633 views
  23. இந்தியாவிலிருந்து வரும் இ}மெயில்கள் தமக்கு பெரும் தொல்லையாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்கள் வருத்தமளிப்பதாகவும் ரசாயனத்துறைக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவிலிருந்து எனக்கு ஏராளமானோர் இ-மெயில் அனுப்புகின்றனர். இதனால் எனது சக ஊழியர்கள் மற்றும் ரசாயனத்துறை தொடர்பான சர்வதேச இதழ்களில் இருந்து வரும் முக்கியத் தகவல்களை படிக்க சிரமமாக உள்ளது. திடீரென வரத் தொடங்கியுள்ள இத்தகைய இ-மெயில்களை அழிக்கவே எனக்கு தினமும் சில மணி நேரம் செலவாகிறது. எனக்கு நோபல் பரிசு கிடைத்தது அவர்…

  24. ஒருவரை வாழ்த்தி அல்லது அல்லது அவர் செய்த நற்செயல்களைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்துவது தான் தமிழர் மரபு. அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலைவர்கள், மகிந்த ஈழத்தமிழர்களைக் கொன்றதைப் பாராட்டுகிறார்களா? அதற்காக வாழ்த்துகிறார்களா? அல்லது எதற்காக பொன்னாடை போற்றினார்கள். பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது சகோதரர்களைப் பார்க்க, அனுமதி பெற்றுச் செல்லும் எவனாவது, அவனைச் சிறைப்பிடித்து வைத்திருப்பவனைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கட்டியணைத்து, பசப்பு வார்த்தை பேசுவதுண்டா? சிறையிலிருக்கும் உறவினர்களைப் பார்க்கப் போகிறவர்கள், சிறையின் வார்டனுக்கு பொன்னாடையணிவிக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. இந்த இந்தியத் தமிழர்கள், …

    • 7 replies
    • 1.3k views
  25. மகிந்தவின் தூதுக் குழு சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் தற்போதை பாதுகாப்பு நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள் குடியமர்த்துவது, தடுப்பு முகாங்களின் நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. பதிவு.கொம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.