Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரன்வேயில் உரசிய விமான இறக்கை-தப்பிய பயணிகள் வெள்ளிக்கிழமை, நவம்பர் 7, 2008 மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் காரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் இறக்கை ரன் வேயில் உரசி விபத்துக்குள்ளானது. இருப்பினும் விமானத்தில் இருந்த 161 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஏர் இந்தியா ஏர்பஸ் விமானம் இன்று ஜெட்டாவிலிருந்து காரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 161 பயணிகளும், விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்கியபோது விமானம் வலதுபக்கமாக அதிகமாக சாய்ந்தது. இதில் வலது பக்க இறக்கை ரன்வேயில் பட்டு உரசி, நொறுங்கியது. இதனால் விமானம் தடுமாறியது. ஆனால் பைலட்டின் சுதாரிப்பான செயல்பாட்டால் விமானம் ரன்வேயில் விழாமல் பத்திரமாக…

  2. சுரண்டை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே உள்ளது சேர்ந்தமரம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி ஸ்டெல்லா மேரி (40). ஸ்டெல்லா மேரிக்கு உடல் நிலை திடீரென சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்கு அருகில் உள்ள திருமலாபுரத்தில் வசிக்கும் டாக்டர் ரவியை சிகிச்சையளிக்க வேண்டினார். இதனை ஏற்ற டாக்டர் ரவி ஸ்டெல்லா மேரி வீட்டில் வந்து அவருக்கு சிகிச்சை செய்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட டாக்டர் ரவி, ஸ்டெல்லா மேரி அழகில் மயங்கி அவருடைய உடலில் பல பாகங்களில் தேவையில்லாமல் தொட்டு சில்மிஷம் செய்தார். உடனே ஸ்டெல்லா மேரி டாக்டர் ரவியை எச்சரிக்கை செய…

  3. நீதிபதி குறட்டை !! இரண்டு கஞ்சா கடத்தல் பேர்வளிகள் தமக்கு வழங்கப்பட்ட பிழையான தீர்ப்பிற்கு காரணம் நீதிபதியின் தூக்கமே என தொடுத்த மேன்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுகொண்டது. குறிப்பிட்ட வழக்கின் போது நீதிபதி Ian Dodd என்பவர் ஒவ்வொரு முறையும் 20 நிமிட நேரத்திற்கு தூங்கினார் என்றும் அவ்வப்போது குறட்டை விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. வழக்கு தொடரத் தொடர 20 நிமிடமாக இருந்த தூக்கம் கூடிகொண்டே சென்றது. ஜூரிகள் வழக்கை கவனிப்பதை விட்டு விட்டு நீதிபதியின் நிலமையைக்கண்டு அசந்து போனார்களாம். இவரின் தூக்கத்தை குளப்ப நீதிமன்ற ஊழியர்கள் ஆவணக் கோப்புகளை பலத்த சப்தமாக நிலத்தில் போட்டும் பார்த்தார்களாம். ஆசாமி உசும்பவில்லை. குறுக்கு விசாரணை நடந்த பொழது நிலமை இன்னும் மோசமாக…

  4. ஈரோடு: ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 30ம் தேதி கந்த சஷ்டியன்று, ஒரே நாளில் 20 சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ளது சுதா ஹை டெக் ஐவிஎப் மருத்துவமனை. இங்குதான் இந்த சோதனைக் குழாய் சாதனை நடந்துள்ளது. சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி நாள் மிகவும் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் பிரசவிக்க பெண்கள் விரும்பியதால் அன்றே 20 பேருக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களில் 58 வயது விவசாயி கோவிந்தசாமியின் 51 வயது மனைவி சரோஜா தேவியும் ஒருவர். சரோஜாவுக்கு சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பல வருடங்களாக காத்திருந்த இவர்களுக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைக…

  5. ஒபாமாவின் வெற்றி பல கருப்பின மக்களை ஆனந்தக் கண்ணீர் விடவைத்திருக்கிறது. துயரம் வரவழைக்க முடியாத கண்ணீரை ஆனந்தம் வரவழைத்து விட்டது. இந்த மகிழ்ச்சியின் பொருளின்மையை எடுத்துக் காட்டும் கேள்விகளை நேற்றைய பதிவில் எழுதியிருந்தோம். எனினும் தொலைக்காட்சிகளில் காணும் பிம்பங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. கறுப்பினக் கணவனின் அணைப்பில் கண்கலங்கும் வெள்ளையின மனைவியைப் பார்க்கும்போது, நமது தர்க்க அறிவு மழுங்கிச் செயலிழந்து விடுகிறது. நாமெல்லாம் கனவு காணும் "அந்த நாள்' வந்தே விட்டதோ, 'நிறவெறி ஒழிந்து சகோதரத்துவம் மலர்ந்து விட்டதோ' என்றொரு மயக்கம் நம்மைத் தழுவவத்தான் செய்கிறது. இந்த மயக்கம் உண்மையா? தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்கவும் ... http://vinavu.wordpress.com/2…

  6. அமெரிக்காவின் புதிய அதிபர் - ஒபாமா இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா புதன்கிழமை, நவம்பர் 5, 2008 சிகாகோ: தனது சொந்த ஊரான சிகாகோவில் கிராண்ட் பார்க் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உணர்ச்சிகரமான உரை: நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும்…

  7. அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா பெரும் வாக்கு வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெள்ளை இனவெறியை மீறி அவர் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் பலருக்கும் இருந்தது. ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்களும், அதிபர் தேர்லின் போது ஜான் மெக்கைனின் ஆதரவாளர்களும் வெள்ளை நிறவெறியை வெளிப்படையாக பேசிவந்தனர். தற்போதைய வாக்கு விகிதத்தில் கூட வயதான வெள்ளையர்கள் மெக்கைனுக்கும், இளவயது வெள்ளையர்கள் கணிசமாக ஒபாமாவுக்கும் வாக்களித்தாகச் செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மையான கருப்பின மக்களும், ஹிஸ்பானிய மக்களும் ஒபாமவை ஆதரித்திருப்பதில் வியப்பில்லை. இப்படி அமெரிக்க சமூகத்தில் வலுவாகக் கருக்கொண்டிருக்கும் நிறவெறியை மீறி ஒபாமா வெற்றி பெற…

  8. அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் : புதிய அதிபர் யார்? on 03-11-2008 03:15 அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இத்தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல் 4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள். …

    • 66 replies
    • 5.9k views
  9. ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் அமெரிக்க விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள் என்று சுமார் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் இந்தத்தாக்குதலை ஆப்கானிஸ்தான் அதிபர் விமர்சித்திருப்பதோடு விமானத்தாக்குதல்கள் மூலம் அவர்கள் உச்சரிக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதும் அவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகளின் செயற்பாடுகளை ஆதரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. US Afghan air strike 'killed 40' US air strikes have been blamed for many civilian deaths Afghan President Hamid Karzai …

  10. Started by cawthaman,

    எளிய தமிழ் என்ன என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் சொல்லலாம் என்றாலும், மக்களுக்குப் புரிகிற, தெரிகிற தமிழே எளிய தமிழ் என்று சொல்லலாம். இந்த அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளும் இடைமுகப்பும் எளிமையாக இல்லாததாக பல சமயம் விமர்சனத்துக்குள்ளாவது உண்டு. எடுத்துக்காட்டுக்கு, தமிழ் விக்கிப்பீடியாவில் Log in என்பதற்கு புகுபதிகை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இதற்குப் பதில் உள்ளே, நுழைக, நுழைவுப்பலகை, புகுபலகை போன்ற சொற்களைப் பயன்படுத்தினால் மக்களுக்கு எளிதாகப் புரியுமே என்று கேட்பவர்கள் உண்டு. புகுபதிகை போன்ற சொற்கள் தூய தமிழாக இருப்பதால் இவற்றைப் புரிந்து கொள்ள இயலாத தமிழர்கள் இத்தளங்களைப் புறக்கணித்துச் சென்றால் இழப்பு தானே என்றும் நினைக்கலாம். ஆனால், இதில் உள்ள…

  11. பாட்னா & சிந்த்வாரா: விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட மத்திய அமைச்சர் விமான நிறுவன மேலாளரை பலர் முன்னிலையில் கெட்டவார்த்தைகளால் ஏசியபடி அறைந்து தாக்கினார். பிகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்திலிருந்து கொல்கத்தாவுக்கு நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கு கிங்பிஷ்ஷர் நிறுவன விமானம் புறப்பட இருந்தது. இதில் பயணம் செய்ய லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த மத்திய உணவுத்துறை இணையமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால், 8.20 மணி வரை அவர் விமான நிலையம் வரவில்லை. 8.20 மணிக்கு அந்த விமானத்துக்கு ஓடு பாதையில் செல்ல அனுமதி கிடைத்தது. அப்போது தான் அமைச்சர் விமான நிலையத்துக்குள் வந்தார். …

  12. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது) ரஜனி தன் ரசிகர்களைச் சந்திக்கிறார், விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார், என்ற பரபரப்புக்களுக்கு நேற்று முடிவு கிடைத்தது.சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்தார். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வாகனங்களில் கோடம்பாக்கத்திற்கு படையெனத்திரண்டிருந்தனர். 1500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்று எழுதப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்…

    • 0 replies
    • 1.2k views
  13. சென்னை : அரசியலைப் பற்றி முழுமையாகத் தெரிந்த பிறகே அதில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை இன்று சந்தித்த ரஜினிகாந்த், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் விரிவாகப் பதிலளித்தார். தற்போது, எந்திரன், சுல்தான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாகவும், இந்த படங்கள் வெளிவந்த பிறகு மீண்டும் தனது ரசிகர்களைச் சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் பற்றி தனக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும், எனவே, தற்போது அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். எனினும், ஆண்டவன் ஆணையிட்டால், அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்…

  14. நன்றி தினமணி

    • 4 replies
    • 1.2k views
  15. நியூயார்க்: அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த சாப்ட்வேர் நிபுணர் ஒருவர் தனது மனைவ, மகள், மகனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் தான் அமெரிக்க நிதி நெருக்கடியால் வேலையிழந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த கார்த்திக் ராஜாராம் என்ற இந்தியர் தனது மனைவி, மாமியார், 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் மி்ச்சிகன் மாகாணத்தில் உள்ள நோவி நகரில் வேலையிழந்த தந்தை குழந்தைகளையும் மனைவியையும் கொலை செய்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்தவரான லட்சுமிநிவாஸராவ் நெருசு (42) தனது மனைவி ஜெயலட்சுமி (37), மகள் தேஜஸ்வி (14), மகன் சிவா (12) ஆகியோரைக் கொலை செய்துவிட்டு தப்பிவ…

  16. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரதத்தில், நடிகர், நடிகைகள் சட்டத்துக்கு புறம்பாக பேச நடிகர் சங்கம் தடை விதித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில், ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது. நடிகர், நடிகைகள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில், இந்நிகழ்ச்சியை சென்னையில் நடத்த வேண்டும் என்று நடிகர் சங்கம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சங்கம், நவம்பர் 1ல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தது. இதற்கிடையே, ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர்…

  17. பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழாவிற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜெயாடிவி ப்ளாஷ் நியூஸ் வெளியிட்டுள்ளது. பசும்பொன்னில் நடைபெற்று வரும் தேவர் ஜெயந்தி விழாவிற்காக இன்று காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல இருந்தார் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா. இந்நிலையில் விமான நிலையத்தில் அவர் தடுக்கி விழுந்ததால் அபச குணம் கருதி விமான பயணத்தை ஜெயலலிதா ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு கார் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு சென்ற ஜெயலலிதாவை திமுகவினர் தாக்கியதாகவும் அவரது கார் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஜெயா தொலைக்காட்சியில் சற்று முன்னர் செய்தி ஒளிபரப்பாகியுள்ளது. இதையடுத்து பசும்பெ…

    • 4 replies
    • 3.8k views
  18. பசும்பொன் தேவர், தேவர் சாதியின் அடையாளமென்றால் தேவர் சாதியின் அடையாளம் எது? தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அந்த அடையாளங்கள். பசும்போன் தேவரை நினைவு கூர்வதின் குறியீடுகள் இதைத் தவிர வேறில்லை. தேவர் சாதி மக்களின் கம்பீரமான வரலாற்றை முத்துராமலிங்கம் பொதிந்து வைத்திருப்பதாக அம்மக்கள் கருதுகிறார்கள். தென் மாவட்ட அரசியலில் தேவர் சாதிப் பெருமிதத்தை அங்கீகரிக்காமல் எந்தக் கட்சியும் பிழைப்பை ஓட்டமுடியாது என்பதால் உள்ளூர் வட்டம் முதல் மாவட்டம் வரை சாதி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆதிக்கம் செய்யும் தேவர் சாதிப் பிரமுகர்கள் அரசியல் கட்சிகளின் தளபதிகளாக ஆட்சி நடத்துவது மறுக்க முடியாத யதார்த்தமாகும். தேவர் ஜெயந்தி நடைபெறும் இக்கால…

  19. ஜெயலலிதா, சோ ராமசாமி, இந்து ராம் மற்றும் சில பூனைகள் (The dangers of bharamins chauvinism) பொன்னிலா குண்டுகள் ஆலங்கட்டி மழை போல் பொழிந்தாலும் நாங்கள் பாசிஸ்டுகளுக்கு ஒரு அடி நிலத்தைக் கூட கொடுக்க மாட்டோம். எங்களது தோழர்கள், ஆதரவாளர்களும் எங்களுக்குப் பின் நிற்கின்றனர். எங்களுக்குப் பின்வாங்குதல் என்பது கிடையவே கிடையாது. நான் வானத்தைப் பார்த்தேன்... அது எனது கண்களை வசியம் செயதது... நாங்கள் அனைவரும் சிற்பபாக சுடக் கூடியவர்கள், சுதந்திரமானவர்கள்... எங்களது ஒவ்வொரு தோட்டாவும் எதிரியை எழ விடாமல் செய்தது.. (ஜப்பானுக்கு எதிரான சீனப் புரட்சியின் போது கனேடிய புரட்சியாளரும் மருத்துவருமான தோழர் நார்மன் பெத்யூன் குழுவினரின் பாடல்கள்) ‘‘தமிழ்ந…

    • 3 replies
    • 2.5k views
  20. சென்னை: சென்னையிலிருந்து மதுரை செல்ல விமானத்தில் ஏறிய ஜெயலலிதா படிக்கட்டில் நிலை தடுமாறி வழுக்கினார். இதையடுத்து பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் கோபத்துடன் காரில் ஏறி வீடு திரும்பினார். பின்னர் பிற்பகலில் அவர் மீண்டும் மதுரை கிளம்பினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 101வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை செல்ல திட்டமிட்டார். இதற்காக மும்பையில் இருந்து தனியாருக்கு சொந்தமான அந்த விமானம் சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இன்று காலை 10.55 மணிக்கு சசிகலா, பிஏ, வேலைக்காரப் பெண், பாதுகாப்பு அதிகாரி ஆகியோருடன் சென்னை வ…

  21. குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று அடுத்தடு்த்து 12 குண்டுகள் வெடித்தன. இதில் 61 பேர் பலியாகியுள்ளனர், 275க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகரான குவஹாத்தியில் 6 குண்டுகள் வெடித்தன. கனேஷ்குரி, திஸ்பூர், பான் பஸார், பேன்ஸி பஜார் உள்ளிட்ட இடங்களில் இந்த குண்டுகள் வெடித்தன. இதையடுத்து அப்பர் அஸ்ஸாம் எனப்படும் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள கோக்ரஜார், பர்பேடா, போங்கய்கோன் ஆகிய இடங்களில் 6 குண்டுகள் வெடித்தன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தான் இந்த குண்டுகள் வெடித்தன. இதில் 61 பேர் பலியாகியுள்ளனர். 275 பேர் காயமடைந்தனர். குவஹாத்தியில் ஊரடங்கு: இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து குவஹாத்தியில் பல இடங்களில் போலீசார், ஆம்புலன்ஸ்கள், தீயணைப…

  22. தென்மேற்கு பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தை இன்று புதன்கிழமை தாக்கிய 6.4 ரிச்டர் பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 160 பேர் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 160 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்வதாகவும் பலோசிஸ்தான் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந் நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. வட குவேதாவிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மேற்படி பூமியதிர்ச்சி மையங்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பூமியதிர்ச்சியாலும் அதன் விளைவாக ஏற்பட்ட மண்சரிவுகளினாலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்…

  23. சூதாடிகளின் தலைமையகமான அமெரிக்காவிலேயே இந்தப் பங்குச் சந்தைப் பலூன் வெடித்த பிறகு இந்தியாவில் மட்டும் வெடிக்காமல் இருக்குமா? இன்று வெடித்தது மட்டுமல்லாமல் புள்ளி தள்ளாடி ஏழாயிரத்தில் வந்து நிற்கிறது. இடைப்பட்ட பதினாலாயிரத்தில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று எந்தப் பத்திரிகையும் சர்வே நடத்தப் போவதில்லை. தப்பித் தவறி வந்த செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம்.... மேலும் படிக்க இங்கே சொடுக்கவும் - http://vinavu.wordpress.com/2008/10/30/usuicide/

  24. பெங்களூர், அக். 29- இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக மாநிலம் ஹ¨ப்ளியில் மனித சங்கிலி போராட்டமும், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். உண்ண உணவின்றி அகதிகளாக தமிழர்கள் காடுகளில் வாழ்கின்றனர். சிங்கள ராணுவத்தின் கொடூர செயலை கண்டித்து கர்நாடக தமிழர் பேரவை சார்பில் ஹ¨ப்ளி மாநகர தலைமை தபால் நிலையம் எதிரே கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள், முதியோர், ஊனமுற்றோர் உள்பட 500 பேர் கலந்துகொண்டனர். அம்பேத்கர் இளைஞர் சங்கம், முத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளை, வைரமலை வைரவேல் முருகன் ஆலய அறக்கட்டளை, ஒசபேட்டை தமிழர் பேரவை துர்காதேவி சேவா சமிதி ஆகிய அமைப்புகளும்,…

  25. ஏமாறாதே! ஏமாற்றாதே!! ஜெயவர்த்தனே காலத்திலிருந்து கூறப்படும் மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டு நமக்கெல்லாம் சலித்துவிட்டாலும், இந்திய அரசுக்கும், நமது முதல்வருக்கும் இலங்கை அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தனக்குத் திருப்தி அளிப்பதாகவும் முதல்வர் கூறி இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மத்திய அரசு அப்படி என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.