கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அன்று அடைமழைகாலத்தில் அழுதகண்ணீர் ஆழக் குழியில் விதைத்த விதைகளை நனைத்து உயிர்ப்பித்தது. இன்று விதைத்த விதைகளை தோண்டி எடுத்து வித்தை காட்டும் காலம் தோப்பாக வேண்டிய விதைகளை முளைக்கக்கூட விடுவதில்லை அறுபடைக்காக அன்றி அடையாளத்திற்காக விதைத்த வயலுக்குள் மீண்டும் நூறுவகைத் தானியத்தை விதைக்கின்றார்கள் எதுவும் முளைக்கவும் வளரவும் முடியாமல் செத்துப்போகின்றது தன்னை விட பெரிய சாணி உருண்டைகளை தள்ளிக்கொண்டுபோன வண்டுகள் தந்த நம்பிக்கையை கூட எதுவும் தருவதில்லை மாமரத்தடியில் ஈன்ற கன்றின் துவாலைகளை நக்கும் தாய்ப்பசு போதித்த பரிவுபோல் எதையும் எங்கும் உணர்வதில்லை கோடிக்குள் இருந்த கோழிக்கூட்டில் கக்காவுக்கு கூட போகாமல் அடைகாத்த…
-
- 1 reply
- 737 views
-
-
மனதை நெருடிய கவிதை. கடவுள்......? கலைமகள்: பாலுமினி பாகும் பருப்புடனே தேனீந்து காலம் முழுதுமுனைக் கைதொழுதோம் - சீலமுடன் சங்கத் தமிழ்வீரம் சாற்றும் மறத்தமிழைச் சிங்கம் சிதைக்கவிட்ட தேன் வெள்ளைக் கொடிபிடித்து வெள்ளை மனமெடுத்து வெள்ளம் எனும்மக்கள் வாழ்வதனை - அள்ளி கோரக் கொலைசெய்வோர் கேடு நிறுத்தவர வாரி உடல்சிதைத்த தேன் மலைமகள்: தேருங் கலை,கல்வி திறைபொன்னும் பின்வைத்துப் பேரும் புகழ்வீரம் பெரிதென்றோம் - சேருமனம் உன்னை முதல்வைத்தே உள்ளம் தொழுதவரை அன்னைநீ மாளவிட்ட தேன் கல்விபணம் காப்பதெனில் காணும் சுதந்திரமே இல்லையொரு வேற்றுவழி என்றெண்ணி - வல்லவராய் வாழ்வின் விடுதலைக்கு வாளெடுத்த நல்லவரை வீழ்ந்திடவென் றாக்கியது மேன் கலைமகள…
-
- 0 replies
- 695 views
-
-
இன்ப மிது வன்றோ ஐந் திரு மாதங்களா யென்மணி வயிற்றில் நிந்தனை யோடே சுமந்தே னென் கருவை -இந் நாள் மட்டுமதை என்குழந்தை யென்றுணரவில்லை நான் பெற்றுக் கொள்ளவுமதை விரும்பிடவில்லை... என் னைபுதைத்து முளைத்தெழுந்த குழந்தாய் நின் சோகக் கருவாய் ஏனிங்கு மலர்ந்தாய் -விண் மழை போலொரு கண்ணீர்க்கதை எனக்குண்டு மனம் விட்டுசொல்லிடவே மனமொன் றிங்கில்லை... ஊர்வாய் களையிழுத்து மூடிடவே எனதுறவுகள் பேர் காப்பாற்றிக் கொள்ள மண்ணிலே -வேர் விட்டு போனதம் கெளரவம் காத்திடவேயென் விடலை பருவமதை வீணாக்கிய விரோதக்கருவிது... மணவாளனது பேருமறியா முகமறியா பேதையாய் கனவினில் ஜொலித்த யென் கற்பனைகள் -என தாசையின் தா…
-
- 0 replies
- 855 views
-
-
எதிர்கொள்ளல் ஒன்றின் எதிர்பார்ப்புகள் சிதைந்துபோகாமலிருக்க நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை எரியூட்டியபின் , நினைக்கப்படுதல் நிகழாதிருக்க காலவோலையில் தடங்களை அழித்துக்கொண்டிருக்கிறேன், இயல்புகள் கடந்த இருத்தலுக்கான எழுச்சிதேடி இயங்குதல் தொடர்கையில் _சிந்தும் உணர்வுநீரில் உப்புக்கரிக்கிறது . எல்லாம் கடந்து புன்னகையோடு ஒரு பிரிதலை யாசிக்கிறேன் ............................... உள்ளுணர்வுகளின் முரண்களால் கிழிக்கப்படும் காலவாழ்வில் , எல்லாம் சாத்தியமாகாத சம்பவங்களாய் கடந்துபோகிறது . சடங்குகளாய் தொடர்ந்து நீழ்கிறது .
-
- 7 replies
- 1k views
-
-
சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்! சூடான பாலை-வனத்திலே .... நீராடினோம்!! என் அங்கத்தில் ஒரு கை மட்டுந்தான் அங்கிருந்தது! மற்றையவை எல்லாம் மற்றவை நாடி... தேடத் துணிந்தது!! தடுத்தவள் கைகளில் உணர்ந்த நாற்குணமும் - என் முற்றுந்துறந்த "போர்க்குணத்தில்" அடங்கிப் போனதோ என்னவோ??? பெண்மையை புதிதாய்..... பார்த்த துடிப்பு! பருவங்களுக்கே.... உரிய வெடிப்பு!!! இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடிக்காத வேகத்தில், நம் பயணம் தொடர்ந்தபோதும்..., சொர்க்கம் அருகில் வந்து நின்றபோதும்..., பயண நேரங்கள் நீடிக்க வேண்டுமென பேராசைப்பட்டது ஆசை!! மூடியும் மூடாத விழிகள்... தேடிடும் வழிகள்... அந்நியம் பார்க்காமல் எழுப்பிய ஒலிகள் - அத்தோடு பாதி தெரிந்த உருவங்கள்... தெறி…
-
- 41 replies
- 3.3k views
-
-
தலையிடிக்கிறது இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக , தூக்கமாத்திரை இல்லாத இரவுகள் இனி இல்லாமல் போகுமோ ? பயமாய் இருக்கிறது ........ வாசிப்புக்காய் தலையணை அருகிருக்கும் புத்தகத்தை தொட்டால் , அறையெங்கும் ஓலமிடுகிறது _என்னால் கோர்க்க இயலாமல் போன சொற்கள் ௬ட்டம் ௬ட்டமாக , காதடைக்கும் ஒலி கடந்து ஒளியனைத்து விழி மூடினால் , ஏதேதோ படர்வுகள் இருளுள்ளே உதறவும் முடியாமல் உணரவும் முடியாமல் ........ அறுந்தறுந்து வரும்_அந்த நினைவுநிழல்கள் அனுங்கிக்கொண்டு தற்கொலை செய்கின்றன ..... எங்கும் சகிக்க முடியாத மயான எரிதலின் வாசம் பரவ கைகளால் இறுக்கிக்கொள்கிறேன் தலையை , நிலவும் நீள் நிசப்தத்தில் அந்தரங்கமாய் அழுதுமுடிகையில் அநாதரவாய் அந்தரத்…
-
- 6 replies
- 1.4k views
-
-
சற்று ஆறுதல்…! -------------------- கடந்த சில நாட்கள் கடப்பதே துயரமாய் கடந்து போனது கண்களில் நீருடன் திரண்ட தமிழகம் தீர்ப்பினை மாற்றென நீதியைக் கோரி நீண்டது தெருக்களில் தமிழகத் தாயோ தன்னால் முடிந்தததை அவையிலே செய்தார் அரியதோர் நகர்வாய் அமைந்தது கண்டோம்! மூவரின் உயிரை முழுதுமாய்க் காத்திட உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழரே உறுதியோடு குரல் கொடுப்பீரா? காப்பது என்ன மூவரின் உயிரா உயிருடன் இணைந்து நீதியுமல்லவா? நீதியை காத்திட நெருப்பென எழுகின்ற தமிழக உறவே பற்றிக் கொள்கிறோம் நன்றியுடனே! நாதியற்றவன் தமிழன் என்பதை நாளைய சந்ததி எதிர்கொள்ளலாமா? மீட்கும் வரைக்கும் நீதியைக் கேட்போம் நீதியை மறுத்தால் தமிழனுக்…
-
- 8 replies
- 1.2k views
-
-
அடிமையாய்ப் போவோமென்று நினைத்தாயா? -இல்லை ஆடிப்போய்...ஆறித்தான் போவோமென்று நினைத்தாயா? இப்படியொரு இனம் வீரமுடன் வாழ்ந்தது - அதில், ஈனப் பிறவிகளாய்ச் சிலவும் இருந்தது என... உலகறியச் சொல்லி உரைத்துவிட்டு, ஊண் உறக்கமின்றி கந்தகவெடிகளில் சிதறி அழிந்ததையும்... எழுதிவைத்துச் செல்லுவோம் !!!!! - இதை, ஏட்டில் படித்தேனும்..... எப்படியேனும்... ஐயமின்றி ஐந்தறிவைத் தாண்டி வந்து - இனிமேலேனும், ஒழுங்காய் நடக்கும் எம் எதிர்காலம்! ஓரமாய் ஒதுங்கிப்போய் ஒழிந்திடுவோம்... என்று நினைத்தாயா? ஒளவை பின் பாரதி சொன்ன "அச்சம் தவிர்" ஆத்திசூடியை இன்னும் (ஃ) ஆயுதமாய் எம்கையில்... தாங்கியபடி ... எம் விடுதலைநோக்கி...... நம் பரம்பரை உன்னைத் தொடரும் - வெல்லும்வரை!!!!!!
-
- 7 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=5WOSPyV1-dI&feature=related
-
- 0 replies
- 535 views
-
-
(நண்பன் ஒருவன் 2005இல் தனது முதற்காதல் பற்றிச் சொன்னதில் அவனது வலியினை கவிதையாக்கினேன்) என் சுவாச அறைகளின் சுழற்சியாய் இருந்தவளே ! காதல் வார்த்தையையே கௌரவப்படுத்திய கற்பூரமே. கடைசியாய் நீ தந்த கடிதம் என்றோ நீ சொன்னது போல கைகூடாத காதலின் சாட்சியாக.... உனது கண்ணீர் முழுவதையும் கட்டியனுப்பிய கடலது. கட்டுநாயக்கா நான் தாண்ட நஞ்சு தின்ற என் காதலியே ! எங்கேயடி இருக்கிறாய் ? கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்.... கண்ணீரைத் துடைத்தபடி நான்.... முதற் காதல் - நீ தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள் இன்னும் விரல்களில்.... வாசமடிக்கிறது. கூடப்பிறந்தவர்க்கும் , உன்னைக் காதலிக்க உயிர் தந்தவர்க்கும் அர்ப்பணமாய் என் காதல். அம்மாவி…
-
- 16 replies
- 1.2k views
-
-
பிதற்றுகிறான் சுடலைமாடன் கோடை வெப்பம் கொடுமையாய் முடிந்து ஈர வரவை மண் எதிர்பார்த்து காத்திருக்க இளவேனில் முடிந்து இருள் எங்கும் படர தொடங்கும் போது உள் நுழைந்தான் சுடலை மாடன் யாழ் இணையத்தினுள் வந்தவனை வா என்று வாழ்த்தியது ஒரு சிலரே பெண் (பிள்ளை புனை) பெயரில் இங்கு தனில் வந்திருந்தால் வாழ்த்தயுள்ளார் பலபேர் பொல்லாத கவி வடித்து புகழ்வதாய் பொய்யுரைத்து வல்லோராய் தம்மை காட்டயுள்ளார் பலபேர் கன்னிகளின் கேள்விகளுக்கு கவிதையிலே பதில் சொல்லி தூங்காமல் இணையத்திலே அலைந்து தேடி பல இணைப்புகளை இணையத்தில் இணைத்திடுவார் ட்யூப் லையிட் வெளிச்சத்தில் யூடுபில் இல் படம் தேடி பக்குவமாய் பதிவு செய்து பக்கங்களை நிரப்பிட…
-
- 5 replies
- 2k views
-
-
தகிக்கும் தாபங்களின் உச்சக் கட்டமாய், தளர்வதற்காய்த் தள்ளாடும்... தேகங்களின் தேடல்களுக்கு, இடுக்களில் வடிந்தோடும் - மன்மத நீரில் நீந்தியபடியே... உயிர் பிரியும் போராட்டம்!!! பதின்மங்களில் பெற்றதை பலமுறை பழகிப் பார்க்க, தவறிய சந்தர்ப்பங்களை... இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய் பயின்றிடத் துடிக்குது, நெஞ்சம் - கொஞ்சம்! ஆனாலும் பக்கத்தில் இல்லையே... என் மஞ்சம்!!! "இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால், அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"
-
- 21 replies
- 4.7k views
-
-
ஒரு காலை விடிவதற்குள் எத்தனைபேர் அடங்கிப் போனார்கள்!? மீதமிருந்த அழுகுரலையும் பகற்பொழுதுகள் அடக்கியது! ஏங்கித் தவித்தெல்லாம் அனாதையாய்க் கிடக்க, நாங்களும் அனாதைகளாய்த்தான் ஓடி வந்தோம்! வழியில் வந்த குழிகள் எல்லாம்..... அன்று, பதுங்கு குழிகளாகவும் புதைகுழிகளாகவுமே தெரிந்தது!.....இருந்தது! சின்ன மழைத் தூறல் கூட எம் பெருங்கண்ணீரை மறைத்தது! என்னவென்று சொல்ல.... எப்படிச் சொல்ல........??????? மானமுள்ள தமிழர் என்றிருந்த நிலை சொல்லவா? இல்லை... ஓடிவந்து மானம் விட்ட கதை சொல்லவா? கடைசிவரை எதையெதையோ நம்பியிருந்தோம்! ஒன்றுமே நடக்கவில்லை!! இப்பொழுதும் இருக்கின்றோம்.........! சொல்லும்படி ஒன்றுமில்லை!! எதிர்காலம் உட்பட எதுவுமில்லை எங்களிடம்! எதற்காகத் தொ…
-
- 7 replies
- 1.6k views
-
-
இக்கவிதை கண்ணதாசன் தான் உயிரோடிருக்கும்போதே தன்னுடைய இறுதி ஊர்வலத்தின்போது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கணீரென்ற குரலினால் பாடப்பட வேண்டும் என்று இயற்றிக்கொண்டாராம் தேனார் செந்தமிழமுதைத் திகட்டாமல் செய்தவன் மெய் தீயில் வேக போனாற் போகட்டுமெனப் பொழிந்த திரு வாய் தீயிற் புகைந்து போக மானார் தம் முத்தமொடும் மதுக் கோப்பை மாந்தியவன் மறைந்து போக தானே எந் தமிழினிமேல் தடம் பார்த்துப் போகுமிடம் தனிமைதானே! கூற்றுவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக் குவித்துப்போட்டு நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு! -'கவியரசு'கண்ணதாசன் உங்கள் இரங்கற்பாவை யாழில் இயற்றிவையுங்கள், பிறகு பாடுகிறோம்.............
-
- 3 replies
- 1.1k views
-
-
தாய்மை என்னும் உறவுக்குள் இதம் தரும் உணர்வுகளுடன் அனுதினம் கலண்டர் கிழிக்கையில் அச்செய்தி கிடைத்திடுமோ – என ஏங்கத்துடன் இருந்த அவள், ஆண்டு பல கடந்தும் – அவள் புரிந்திட்ட நன்மையின் விளைவால் ஆண்டவனின் அருளால் அவள்தன் தங்க வயிற்றில் குட்டி நிலா துயில் கொள்ள தனியான இடம் அமைத்து பெண்மைக்கே பெருமை சேர்க்கும் தாய்மை என்னும் உறவுக்குள் நகர தொடங்கி விட்டாள் இன்று முதல்… வெறுமையாய் இருந்த அவள் முழுமையாயாய் ஆனாதினால் ஆனந்தத்தில் மூழ்கியே சரணடைகின்றாள் தன் கணவன் மடியில்…. பிரிவால் துவண்டு இருந்த உறவினர் முகங்களிலே ஆயிரம் மின்னல் அடித்திடும் புன்னகையின் பிரதிபலிப்புக்கள்.. குட்டி நிலவின் வரவை எண்ணி கலண்டரின் அருகில் காத்திருப்பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
(ஆறுவருடங்கள் முதல் எழுதிய கவிதையிது. இன்று பழைய தூசுதட்டியதில் கண்ணில் எட்டியதை இணைக்கிறேன்) ஞாபகங்களுடன் இன்றும்.... மீண்டும் சந்திப்பதாய் ஒரு மாலைநேர ஈரக்காற்றின் உவர்ப்போடு அழுததாய் ஞாபகம். தாஜ்மகால் பற்றியும் தலைசிறந்த காதல் இலக்கியம் தந்த ஜிப்ரான் பற்றியும் நிறையவே பகிர்தல்கள். ஒரு தாஜ்மகால் ஒரு முறிந்த சிறகு எங்களுக்காயும் எழுதப்படுமெனும் எண்ணமேயில்லை கௌரவப் பிரிதலாய் அது நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது. என்றாவது நினைவு வரும் சிறுவயது ஞாபகம் போல் எப்போதாவது வந்துபோகும் ஞாபகங்களுடன் இன்றும்.... காதலென்ற …
-
- 11 replies
- 1.6k views
-
-
கோழியின் கால்களை பிடித்து தலையை சுவற்றில் ஓங்கி அடித்து பின் சுருக்கில் தொங்கவிட்டு உரித்து குழம்புவைப்பார்கள் அப்படித்தான் அவ்வப்போது ஆட்களையும் அடித்து தொங்கவிடுகின்றார்கள் ஆனால் ஏன் என்று தெரியவில்லை திருவிழாக்களில் பறவைக் காவடிகள் குறைந்துவிட்டதால் கடவுளின் கோபம் என்றும் பேசிக்கொள்கின்றார்கள் கடவுளை குளிப்பாட்டி பவுடர் போட்டு மசாஜ் செய்துவிட்டாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளின் பொண்டாட்டிமார்களுக்கு மேக்கப்செய்து திருக்கலியாணம் நடத்தி முதலிரவுக்கு அனுப்பி வைத்தாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளுக்கும் சரி காவடி தூக்கும் பக்தனுக்கும் சரி கோபம் ஒரு மார்க்கமாகத்தான் எப்போதும் வருகின்றது கண்ணகியம்மன் கோயில்க் கோடி…
-
- 13 replies
- 2.1k views
-
-
இருள் சூழ்ந்த கரிய மேகத் திரளிடையே அடிக்கடி விட்டு விட்டு பொழிகின்ற செவ்வானத் தூறல்களாய் சீழ் கட்டிய இரத்த வாடைகள் நிரூபனின் நாற்று வலை தாங்குவோர் இன்றி தத்தளிக்கும் ஈழ மக்களை ஏந்திட நாமிருக்கிறோம் எனும் குரலுக்கு ஏதும் செய்திய முடியாதோராய் நாமிங்கு! நேற்று முத்துக்குமார் மூட்டிய தீ முது பெரும் விடுதலைத் தீயாய் கனன்று மிளாசி எரிந்தது, அதில் காங்கிரஸின் பொய் வேடத்தை தமிழகம் உணர்ந்து கலைஞரின் வாழ்விற்கும் காற் புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பி மகிழ்ந்திருந்தது! நிரூபனின் நாற்று வலை இன்று செங்கொடி அவர்கள்; முத்துக்குமார் வரிசையில்.... நீயும் போனாயா சகோதரி- இல்லை உன் கண் முன்னே காங்கிரஸின் நர்த்தன நடனத்தில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
மெல்லிதாய் மேலெழும்பி நாள் தோறும் புலர்ந்து மறையும் வலையுலக நாழிகைகள் நடுவே தொலைந்து போகின்றன எங்களின் உணர்வலைகள்! நிரூபனின் நாற்று ஆண்கள் மட்டும் தான் அதிகம் எழுதலாம் என்பதும் அவர்கள் மட்டும் தான் தம் உணர்வுகளை உச்சுக் கொட்டலாம் என்று கூறுவதும் யார் இங்கு இயற்றி வைத்த சட்டமோ தெரியவில்லை! எங்களுக்குள்ளும் சாதாரண மனிதர்களைப் போன்ற மன உணர்விருக்கும், எம் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து எழுதிட இணையம் வாய்ப்புத் தந்தது- ஆனால் எம் இடையே உள்ள பச்சோந்திகளும், நரிகளும் காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்; காம சுகம் தேடும் மோகத்தில் அலைந்து காறி உமிழ நினைக்கிறார்கள்! நாளைய பெண்களின் விடுதலை நம் உளத்தில் தோன்றும் இன்றை…
-
- 16 replies
- 1.8k views
-
-
எல்லாமே வீணாய்ப் போச்சு! இன்னும் என்ன இருக்கு? இதைச் சொல்லிச்சொல்லியே சமாதான புறாக்களாக பூரிப்போடு பறக்கின்றோம்! வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ; இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்! தேவையென்று எதைத் தேடினோமோ; அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்! என்னதான் தேவை எங்களுக்கு....? ஒன்றுமே தெரியவில்லையா உங்களுக்கு??? என்ன மனுஷரடா நீங்கள்??? அயல்நாடாம் தமிழ்நாட்டின் கொதிநிலை கூட, உங்கள் கண்ணீரில் இல்லையே! அச்சச்சோ... தவறாக சொல்லிவிட்டேனோ??? கண்ணீர் வந்தால்தானே...அதைப்பற்றி பேசமுடியும்! தமிழராய் இல்லாட்டியும் பரவாயில்லை... குறைஞ்சது, மனுஷராத்தன்னும் ஒருமுறை நினைச்சுப் பாருங்கோ! நடந்ததை எல்லாம்.... நடக்கின்றவை எல்லாம்... நடக்கப்…
-
- 26 replies
- 2.5k views
-
-
"சொந்தங்கள்" என்ற சொற்பதம் கழிவறைச் சேற்றுக்குள் புதைந்து ரொம்ப நாளாச்சு! அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில் நிறையவே கொட்டிக் கிடக்குது! சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று... அவராடும் ஆட்டத்திற்கெல்லாம்..... ஆளும் நானில்லை... ஆடுகளமும் நானில்லை! ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்! - ஆனால், அநியாயமாய்ப் போன அன்பென்ற ஒன்று, என்னோடு கூடிப்பிறந்ததாய்ப் பிதற்றுகின்றது இன்னும்! சொந்தமென்று ஒன்று என்னை ஓங்கி உதைத்து நான் வீழ்ந்தபோதும், நண்பனென்று சொல்லி உரிமையோடு என்னை தாங்கிப் பிடித்தது - நட்பு !!! என்னை நேசிக்கும் நட்புக்காய் உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!!
-
- 2 replies
- 1.3k views
-
-
-
செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள் சொரிவது எனவிழி நீர்வழிய மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும் எழுமெழில் முகமதில் தீ பரவ தழுவிடு எனையென பருவமும் அவனிடம் கொலை கொலையென மனம்தான் அழிக்க எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும் எழிலுறும் வகையென இவளிருந்தாள் சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு சிலையெனும் வடிவெடு ஆரணங்கே கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில் குறுநடை பழகிட வருமெனவே பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும் பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென குடமிரு வளை யயல் கோபமிட்டான் அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும் அதிசய மலையுது நீரின்றியே மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில் மகிழ்வென நீந்திடும் மதிகுலைய உலையிடு உயிரென ஊறிட…
-
- 0 replies
- 852 views
-
-
பள்ளிப்பருவத்திலே சித்திரம் வரைவதில் வாலி அவர்கள் மிகவும் முனைப்பாக இருந்தாராம். அப்போதைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஒவியத்தில் கரை தேர்ந்து இருந்தவர் ஓவியர் “மாலி”. அவரது தீவிரமான ரசிகரான இவருக்கு, பள்ளித் தோழன் பாபு என்பவன் ” வாலி ” என்னும் பெயர் சூட்டி ஓவியத்தில் மாலியைப் போலவே நீயும் ஒரு கலக்கு கலக்குவாய் என்று வாழ்த்தினானாம். அப்போது அவர் பாரதியாரின் ஒவியம் ஒன்றை வரைந்து அதன் கீழ் வாலி என்று கையொப்பமிட்டு அதைத் தனது தமிழ் வாத்தியாரிடம் காட்டினாராம். அதைப் பார்த்துப் பாராட்டிய தமிழ் வாத்தியார் “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலி என்று பெயர் சூட்டினாய்?” என்று கேட்டாராம். அதைக் கேட்ட சுற்றி நின்ற மாணவர்கள் சிரித்து விட்டார்களாம். அப்போது ஒரு துண்டுக் காகித…
-
- 4 replies
- 1.8k views
-
-
என் மகளே செங்கொடி....! *செங்கொடி* நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து மானிட விடுதலையை வென்றிருக்க வேண்டிய வித்து நீ. ஏனடி பெண்ணே…? எரிந்தாய் நெருப்பில்….? அவசரப்பட்டு விட்டாய் மகளே..…! அண்ணன்களைக் காக்க நீ அணைத்த தீ அவர்களை வாழும்வரை வருத்தப்போகிற வலியல்லவா உனது தீ….! நீ வாழ்ந்திருக்க வேண்டியவள் வரலாறுகள் படைத்திருக்க வேண்டிய பலம் நீ. ஏனடி பெண்ணே….? இந்த அவசரம்….? உன்போல்வீரமும்மானிடப்பெறுமதியும்புரிந்தவர்கள் இவ்வுலகில்அதிகமில்லையடிமகளே…..! மாற்றங்கள் நிகழ உன்போன்ற மங்கையரும் மகனாரும் தேவையடி எங்களுக்கு….! அரசியல் புலிகளும் நரிகளும் உங்கள் உயிரில் தீமூட்டிக் கரியாக்கி வீர உரை நிகழ்த்தி இன்றோடு உன்ன…
-
- 4 replies
- 1.4k views
-