Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வேட்டு வைக்காதே தமிழா வேட்டு வைக்காதே ஒருவனுக்கொருவன் வேட்டு வைக்காதே நாட்டை மீட்கப் போகையிலே நல்ல பாம்பும் நாடி வரும் கெட்ட பாம்ப்பும் தேடி வரும் நல்ல பாம்பை சேர்த்துக் கொள் கெட்ட பாம்பை விலத்திச் செல் நாதி கேட்ட நாம் இன்று நாகரிக உலகினிலே நமக்குள்ளே வேண்டாம் நம்பியார் வேலைகள் ஆயுத பலம் வேண்டாம் அழிவுகள் நமக்கு வேண்டாம் வேண்டும் எமக்கு இப்போ மனிதபலம் இதற்கு ஒப்பு உண்டா உலகில் நிகர் ஒருவன் வருவான் என்று ஒவ்வொரு நாளும் நாம் ஏங்குவதை விடுத்து எழுவோம் ஒன்றாகி ஒரு நாள் இந்த உலகிற்கேதிராக கூட்டுவோம் நம் உறவுகளை காட்டுவோம் நம் பலத்தை கொட்டுவோம் முரசைத் தமிழன் விட்டுக் கொடுக்கமாட்டான் என்றும் …

  2. படிப்பு வேண்டாமென்று மூட்டை கட்டிவிட்டு பழக்க தோசத்தில் றோட்டில் நின்ற‌போது நண்பர்கள் சேர்ந்து நல்லதொரு முடிவெடுத்து படிக்க சென்றோம் தனியார் கல்விநிலையம் குறளி வித்தைகாட்டி கூஅடித்து கூட்டமாய் வாங்குமேசை தட்டி வகுப்பை குழப்பி பாடம் படிக்காமல் பின்வாங்கில் படுத்துறங்கி நாங்கள் செய்த சேட்டைகள் கொஞ்சநஞ்சமல்ல நாளும்பொழுதும் நாசமாய் போக வாத்தி சொன்ன பாடம் வராமல் ஓடிவிட பரீட்சை வருகுதென்று செவியில் விழுந்த செய்தி பதறித் துடித்துப் படிக்க வைத்தது விட்டுவிட்ட பாடத்தை எட்டிப் பிடிக்கவென்று படிக்க தொடங்கி பாடத்தை கவனிக்க புரிய தொடங்கியது பாடம் மட்டுமல்ல படிக்காமல் விட்டுவிட்ட பகுதி பெரிதென்று நண்பர்கள் சேர்ந்து நல்லா படிக்கவென…

  3. மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு…… ஈரம் காயாத உனது குருதிச் சுவடுகளின் மீதேறிச் சென்று கொண்டிருக்கிறது வன்மங்களின் வெறியடங்கிய மெளனம்…… உறைந்து போன கனவுகளை அள்ளியபடி அலைகிறது உனது உயிரின் காற்று…… நீ நேசித்த நிலவும் நிசப்தம் நிறைந்த இரவும் உனது ஆத்ம அலைவின் எச்சமாய் இரவெல்லாம் காய்ந்து பகலில் பயங்களோடு தேய்கிறது….. கடைசிச் சாட்சியங்களுடன் கடல் கடந்திருப்பாயென்ற எங்களது நம்பிக்கையை கடைசிவரை உன்னோடிருந்து காலொன்றையிழந்து கடைசியாய் மீண்ட தோழனின் சாட்சியங்களுடன் நீயில்லையென்பதை நிரந்தரமாக நம்புகிறோம்…. கண்முன் இறந்த குழந்தைகளுக்காய் நீயழுததும் களத்தில் கூட நின்ற தோழர்களுக்காய் நீ வாழ்ந்ததும் கடைசிவரையும் நீ ந…

    • 0 replies
    • 676 views
  4. விடியலுக்காய்ப் பயணிப்போம்.... கவிதை - இளங்கவி முச்சந்திவரை கொண்டுவந்து மூலை திரும்ப முன் முடிவைத் தவறவிட்ட துரதிஸ்ரசாலிகள் நாம்..... ஆம் நான் கூறுவது நம் சுதந்திரத்தைத் தான்...... ....... முடியாததொன்றை முடித்துக்காட்டி.... பணியாத சிங்களத்தை பணிவித்துக்காட்டி.... உலகுக்கே தமிழரை யாரென்று காட்டி..... தமிழனென்றால் மூக்கில் விரலை வைக்கக் காட்டியவர்கள்.... இன்று வீடுகளில் முடங்களாய்.... வீதிகளில் பிணங்களாய்.... . சிறைகளிலே ஜடங்களாய்..... மொத்தத்தில் செத்துக் கொண்டிருக்கும் பிணங்களாய்..... ....... வீழ்ந்து கிடக்கும் வீரம் மீண்டு எழ ஆண்டுகள் பல...ஏன்! பல நூற்றாண்டுகள் ஆகலாம்..…

  5. என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ தெரியவில்லை எனக்கு உன்னைப் பிரிவதென்றால் உயிர்விட்டுப் போவதுபோல் வலியொன்று உணர்கின்றேன் என் செய்வேன் நான் ஏனிந்த நிலையெனக்கு என் வீட்டு முற்றத்தில் தினந்தோறும் எழுந்து வந்து ஆனந்தமாய் அனுபவிக்கும் இளங்காலை இனிமை மஞ்சள் இளவெயிலின் தகதகக்கும் மோகனத்தில் உணர்வழிந்து உறைந்துவிடும் மாலை மயக்கங்கள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் அழகான காலையிலே அவசரமாய் உணவு தேடி பரபரப்பாய் பறந்து வந்து பாட்டிசைக்கும் புள்ளினங்கள் பச்சை இலைகளிலே பதுங்கி ஒழிந்திருந்து கதிரவன் வெளிப்படவே ஒளிவீசும் பனித்துளிகள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் கொத்து கொத்தாய் காய்காய்க்கும் முற்றத்து மாமரங்கள் பழு…

  6. *** வசம்பெனும் குருவி குசும்புகள் பலசெய்து வலையிலே குடும்பமாய் வாழ்ந்தபின் மெளனமாய் ஓய்ந்து போனதென்ன? ஓடிப் போனதென்ன? *** புதிதாய் நண்பர்களை சேர்ப்பதிலும் ஏலவே நட்புறவு கொண்டோரின் இதயத்தில் நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நோக்குடனே நீண்டதூரம் சென்றாயோ? *** நிச்சயம் இன்றென அநித்தியம் நாளையென அன்றெமக்கு அன்புடன் பகர்ந்த அறிவுரையை மெய்ப்பிக்க நினைத்தே நீ பொய்யாகிப் போனாயோ? *** தருக்கங்கள் நிறைந்த கருத்தாடல் தளத்தில் சுடுகின்ற சூரியனல்ல நான் குளிர்விக்கும் நிலவென்று எமக்கு உணர்த்தவே நீ அமரன் ஆகினாயோ? *** குரலறிந்து, முகமறிந்து, முக…

  7. Started by ஜீவா,

    அந்த ஒற்றை மரம் பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது கூடுகட்டிக் குருவிகள் வசித்தது மரம் முழுக்க மந்திகள் இருந்தது மரங்கொத்தி பறவையும் மறைப்பில் குருவிச்சை கூட குசியாய் இருந்தது எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது உண்ணக் கனி கொடுத்தது உறங்கப் பாய் கொடுத்தது ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து கொலை செய்யவும் துணிந்தது கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும் சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம் இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று எட்டி நின்று வெட்டிப் பார்த்தன‌ காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு…

  8. ஒன்பதாம் ஆண்டு.... சைவ சமய பரீட்சை குனிந்து கரிசனையோடு எழுதுகிறேன்..... என் கண்ணும் விடைத்தாளும் விளையாடிகொண்டிருக்கும் வேளை ஏதோ ஒன்று அந்நியமாய்... என் கண்ணில் இடர்ப்பட... என் மனதிலோ.. வெட்கம் பூரிப்பு...... ஓர் இனம் புரியாத மாற்றம்... இப்புவியை வென்றுவிட்ட நினைப்பு.. அது... என் மூக்கின் கீழோரம் ஆடவனின் வீரச்சின்னம் எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.... பரீட்சை எழுதவில்லை... ரசித்திருந்தேன்.. அன்று தான் பிறந்திருந்த என் மீசையை..... வருவாயா வருவாயா என பார்த்து.. களைத்திருந்து... காத்திருந்து.. என் மூத்தோர்... மீசையை.... நான் பார்த்து அவாப்பட்டு.... இறுதியில் …

  9. சுதந்திரம் நோக்கிப் பயணித்து சூனியத்தை அடைந்த சூட்சுமத்தில் தான் இன்னும் எமது வெட்கம்கெட்ட இறுமாப்பு உயிர்வாழ்கின்றது முகங்கள் தொலைந்த உருவங்களில் என்னும் அழுகை சிரிப்பு சத்தங்கள் அதைவிட மேலான கோபங்கள் ஆவேசங்கள் வெறியோடு நெஞ்சு மயிரைப் புடுங்கி அண்ணாந்து ஊதியபோதும் முகத்தை உணரமுடியவில்லை நாம் தொலைந்து போனோம் எம்முடன் எடுத்துவந்த சாப மூட்டைகளில் தலையை சாய்த்து புலம்பிக்கொண்டிருக்கின்றோம் சாப மூட்டையுடன் தலைமுறை தலைமுறையாக நடந்து ஒருவழியாக மயானத்தை அடைந்துவிட்டோம் சுடலைஞானம் தனக்கு தனக்குதான் பிறந்துவிட்டது என்று அங்கேயும் குத்துப்பாடு நடக்கின்றது விசும்பலும் வெளிப்படும் கண்ணீரும் பிரசவ வலிகளும் நாதியற்றுப்போனது …

  10. காசு இல்லாத உலகம் வேண்டும் மாசு இல்லாத சூழல் வேண்டும் எல்லை இல்லாத தேசம் வேண்டும் கோசம் இல்லாத அரசியல் வேண்டும் ஊழல் இல்லாத அரசாங்கம் வேண்டும் நடுநிலையான நீதி வேண்டும் வேஷம் இல்லாத மேடை வேண்டும் தேசம் மதிக்கும் ஆடை வேண்டும் யுத்தம் இல்லாத மண்ணிலம் வேண்டும் இரத்தம் தோயாத செந்நிலம் வேண்டும் தமிழில் பேசும் தமிழர்கள் வேண்டும் தமிழருக்கென்று ஒரு நாடும் வேண்டும் மானம் காத்த பெண்ணினம் வேண்டும் பெண்மையைப் போற்றும் ஆணினம் வேண்டும் தன்னினம் காத்த மறவர் வேண்டும் மண்ணில் அறம்காத்த மாவீரர் வேண்டும் விலைபோகாத தலைவன் வேண்டும் தலைவணங்காத தன்மானம் வேண்டும் மறைந்தவை மீண்டும் தோன்ற வேண்டும் நல்லதைச் சொல்லும் நண்பர் வேண்டும் நல்லதை அறிந்திடும் நன்ம…

    • 25 replies
    • 2.6k views
  11. தமிழ் படை ஆள் பற்றாகுறையால் பின் வாங்க இலட்சக்கணக்கில் போர்கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் போலி பக்திமான்களும் உண்டு, அரை கோடி தமிழர் எதிர்த்து போராட இருபது மைல் தூரத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் ஏழு கோடி திராவிட தமிழ் வாய் வீர்களும் உண்டு, இரண்டு இலட்சம் தமிழரை இருபது வருடமாக முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் வந்தாரை வாழ வைக்கும் தமிழக்கத்தாரும் உண்டு, தமிழ் கோவில்களில் பாரசீக பாசையில் எதோ சொல்ல, விளங்காமல் நேர்த்தி நிறைவேற என்று கடவுளுக்கு இலஞ்சம் கொடுப்போரும் உண்டு, தமிழ் பிட்டையும், தோசையயும், கறி குழம்பையும், ஸ்ரீ லங்கா உணவகம் என்று சிங்கள எதிரிக்கு கோல் போடும் தமிழ் விற்பன்னர்களும் உண்டு, இன வெறியரிடம் இரண்டாயிரம் வாங்கி, தம் ம…

    • 7 replies
    • 2.2k views
  12. Tamil civilian lives are in your hands the Diaspora pleaded in desperation; To Canada, US, Britain, EU, Norway and the UN; had you heeded with compassion; Twenty to forty thousand need not have perished in one sweep without identification; From a cruel regime’s and its ally’s fire power, chemical weaponry and ammunition. You have to act fast before it’s too late we wailed and protested; Lay down on highways, burnt our bodies, fasted, begged and prayed; In a tiny sliver of land our people are holding out, we cried, To their last vestige of freedom and dignity, still brave but petrified. You would have prevented a HOLOCAUST from happening; If you did…

    • 0 replies
    • 978 views
  13. குஞ்சு பொரித்து மூன்றே நாளுக்குள் முட்டையிலிருந்து எட்டிப்பார்த்த குஞ்சுகளுக்காய் இரைதேடவந்த ஜோடிக்குருவிகள் வேடனின் வலையில் சிக்கி கூண்டுக்குள் இன்று காட்சிப்பொருளாய் வித்தை காட்டிப் பிழைக்கின்றான் வேடன் வேடிக்கை பார்க்க வருபவர்களோ இறைக்கை இருந்தது தானே பறந்திருக்கலாமே என்றும் கண்ணிருந்தது தானே பார்த்திருந்தால் மாட்டி இருக்கத்தேவையில்லை தானே என்றும் வியாக்கியானம் கூறுகிறார்கள் தத்தமக்கு ஏற்ப வியாபாரிகள் வந்து விலை பேசிப் போகிறார்கள் வேடனின் குடும்பம் சமையலுக்கு தயாராகிறது பார்ப்பவர்கள் மனங்களில் பரிதாபம் மட்டும் சிலர் சிவனை வேண்டுகிறார்கள் சிலர் புத்தரை வேண்டுகிறார்கள் சிலர் அல்லாஹ்வை வேண்டுகிறார்கள் சிலர் யேசுவை வேண்டுகிறார்கள் …

  14. மரணம் ! அது உனது முகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.... சொல்ல எழுகிற சொற்களைக் குற்றித் துளைக்கும் கூர்முனைக் கத்தியிலிருந்து உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது. உதிரும் குருதித் துளிகள் உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டு போகிறது..... கத்தியின் இடுக்கிலிருந்து ஒழுகுகிறது உனது கடைசிக் கனவுகள்..... ஓர் உயிரின் பெறுமதி பற்றிய எந்தவித கவலையுமின்றி உன்னைக் குற்றிக் குருதியில் குளிப்பாட்டி மகிழ்கிறது காடேறிகளின் கர்வம்..... இன்றைய முகப்புச் செய்திகளிலும் தலைப்புச் செய்திகளிலும் நீ நிறைந்து வழிகிறாய்..... வியாபாரிகள் வயிறு முட்ட நீ வலியில் துளித்துளியாய் செத்துப் போகிறாய். எத்தனையோ கொடுமைகள் …

    • 32 replies
    • 4.4k views
  15. எல்லோரையும் போல அவனுக்கும் வாழ்வு மீதான பிரியங்களும் தனக்கான வாழ்க்கை மீதான பிடிமானங்களும் இருந்தன….. பருவவயதின் காதலும் பள்ளிக்கூடக் கனவுகளும் அவனையும் ஒரு சினிமாக் கதாநாயகனாக்கியது ஒருகாலம்…… கால இடைவெளி நதியாய் ஓடிய குடும்ப நிம்மதியைப் பேரலையொன்று விழுங்குமாப்போல குடும்பத்தின் நம்பிக்கையொன்று இடையில் தொலைந்து போக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாமுமாகியிருந்தான்…… ஒற்றைப்பிள்ளையாய் ஒருகோடி நம்பிக்கையாய் ஒளி நிறைந்த சூரியனாய் அவனே அனைத்துமாய்….. காதலும் கல்வியும் நிறைந்த நாட்களுக்குள் போரும் அவலமும் புகுந்து கொண்ட போது போராளியாதலே யாவற்றுக்குமான முடிவென்றவன் சொல்லாமல் கொள்ளாமல் காடேகிக் கையில் இயந்திரத்தோடு வீட்டுப் ப…

    • 7 replies
    • 1.2k views
  16. Started by akootha,

    தேசிய நினைவெழுச்சி வாரத்தை முன்னிட்டு கவிதை போட்டி From: media@tyouk.org வணக்கம் தமிழீழ தேசிய நினைவெழுச்சி வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்படும் கவிதை போட்டியின் பதாகையை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம் நாங்கள். இவ் மின்னஞ்சலுடன் இணைத்திருக்கும் பதாகையை தயவுசெய்து உங்கள் இணையத்தில் அல்லது பத்திரிகையில் இணைக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம். நன்றி சஞ்சய் தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்.

    • 0 replies
    • 865 views
  17. இன்னொரு பக்கம் ஜெயபாஸ்கரன் தெளிவாகவே தெரிகிறது நிகழ்வுகளின் இன்னொரு பக்கம் கண்களை கவரும் வண்ண வண்ண கடவுள் படங்களின் மீது, அச்சு இயந்திரங்களின் ஓசையும் 'முருகனுக்கு மெஜந்தா போதாது' என்றொரு குரலும் கேட்கிறது எனக்கு. திரையரங்குகளில் கிடந்து வெளியேறும் போது சொல்கிறார்கள் 'அப்பாசாமி நடிப்பு அற்புதம்' உள்ளுக்குள் உறுமுகிறேன் நான். 'அடபாவிகளே' எடுத்தத்தில் தேறியதை காட்டுகிறார்கள் நமக்கு. எடுத்து எடுத்து வெட்டி வீசப்பட்டதைக் குறித்து ஏதாவது தெரியுமா உனக்கு? இங்கிலாந்து ராணி இந்தியா வந்தபோது எல்லோரும் பார்த்தார்கள் அவரை. நான் பார்த்தது அவருக்காகவே அங்கிருந்தே கொண்டு வரப்பட்ட காரை. என்னவோ போங…

  18. அரைக்கிலோ அரிசியில் கூட அரசியலாம் ஆணுறைகளின் விற்பனை அதிகரிப்பாம் உலகமயமாக்கல் பிராந்திய நலன் என்று புரியாத வார்த்தைகளாய் அடிபடுகின்றன‌ பனையால் விழுந்த ஓலைகளைச் சப்பித்துப்பி விட்டுப் போகின்றன மாடுகள் வேலியடைக்கவும் வேலி தாண்டவும் முடியாமல் பாவம் ஓலைகள் இன்னும் எத்தனை மாடுகள் பசியாறப் போகிறதோ காட்சிகள் முடியும்முன்னர் சாட்சிகள் கலைக்கப்படுகின்றன‌ நாளை கண்ணகி காவியமாம் காத்தவராயன் கோயிலில் அண்ணனின் துவசம் முடிவதற்குள் அய்யனாருக்காய் அறுக்கப்படும் ஆடுகள் அண்ணனும் ஆடுகளும் பலியெடுக்கப்படுகின்றன தர்மத்தின் பெயரில் கூடின்றி வாழும் குருவிகளுக்கு கோபுரத்தின் உச்சியில் கூட‌ குந்தவிடாது ஆணி அடிக்கப் படுகிறது சாவுக்கும் வாழ்வுக்குமிடையே குருவிகள…

  19. கருணாநிதியே கவிதை நதியே உலகம் தூற்றும் உயர்ந்த பதியே தமிழன் தலையைக் கவிழ்த்த உன் கடிதப் பொதிகள் டெல்லியின்வீதிகளில் கடலை சுத்துவதும் விதியே நீவிர் செய்தது உமக்கே சரியா ஒன்றல்ல மூன்றாமே உமக்கு நாம் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது நாளை உமது காற்றடைத்த உடல் நாறும் போது இத்தாலி திரவியம் உம் உறவுகளையும் நாற வைக்கும் வாழ்க உம் கடிதக் கவிகள் வாத்தியார் *********

  20. அது ஒரு மாலைப் பொழுது மழைத் துறல்கள் காற்றின் மோதுகையால் சிதறி முகத்தை உரசிச் செல்லும்போது ஒரு வகையான உணர்வு மனதைக் கிள்ளத்தான் செய்கிறது. இரு பீர் போட்டில்கள் காலியாகியிருந்தன. அந்த நண்பன் சடுதியாகத்தான் கேட்டான், அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை, இப்போதெல்லாம் நான் எதிர்பார்ப்பவைகள் எதுவும் நடப்பதுமில்லை. அந்த நண்பன்! யதி, நீ விடயஞானம் உள்ளவன் உன்பற்றி பலரும் அறிவாளி என்கின்றனர், இது விடயத்தில் எனக்கு உன்னால் உதவ முடியும். நான் ஒரு மார்க்ஸிஸ்ட் ஆவது எப்படி? நான்! என் குறித்த அவன் வர்ணனைகள் என்னை சங்கடப்படுத்தின. இதிலெல்லாம் நான் நாட்டம் கொள்வதில்லை, ஏனெனில் நான் என்னை அறிவேன். நான் சிரித்துக் கொண்டேன…

  21. Started by வீணா,

    படித்ததில் பிடித்தது Invictus Out of the night that covers me, Black as the pit from pole to pole, I thank whatever gods may be For my unconquerable soul. In the fell clutch of circumstance I have not winced nor cried aloud. Under the bludgeonings of chance My head is bloody, but unbowed. Beyond this place of wrath and tears Looms but the Horror of the shade, And yet the menace of the years Finds and shall find me unafraid. It matters not how strait the gate, How charged with punishments the scroll, I am the master of my fate: I am the captain of my soul. கவிதை William Ernest Henley எனும் ஆங்கிலக் கவிஞரால் 187…

  22. ஒட்டியுலர்ந்து ஊட்டச்சத்தெல்லாம் உறிஞ்சப்பட்டுப் பதுங்குளியிலிருந்து இழுத்துவரப்பட்ட போது மிரளும் விழிகளின் அருகாய் அருகாய் துப்பாக்கிகள்….. *அம்மா காப்பாற்று அப்பா காப்பாற்று* கண்ணீர் வற்றிய கண்களிலிருந்து சொட்டிய துயர்….. கனவுகளைத் துரத்திக் கொண்டு இரவுகள் அலைகிறது…… கட்டையாய் கத்தரிக்கப்பட்ட தலைமயிருக்கான காரணங்கள் கேட்டுக் கேட்டுப் பதிவிடுகிறார்கள்….. சொல்லால் வசியம் செய்து சொல்ல முடியாக் கதைகள் நிரம்பிய கதைகளை மீள்பதியமிடும்படி வேண்டுகிறார்கள்…… ‘எனக்குத் தெரியாது‘ எத்தனையோ தரம் எழுத்துமூலமும் வாக்குமூலமும் எடுத்த பின்னாலும் கிளறிக் கிளறி ரணங்களைத் தோண்டுகிறார்கள்….. *பம்பைமடு* விசப்பாம்புகளின் குடியிருப்புகள் பே…

    • 12 replies
    • 1.9k views
  23. அத்தியடிக் குத்தியரும் ஆனந்த சங்கரியரும் சிங்களக் குகையினில் கூடு கட்டி வாழ்ந்து கொண்டு விட்ட அறிக்கைகள் மறக்கவில்லை. குத்தியன் சொன்னான் கொடுத்திடுவேன் வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலம்.. மத்தியில் அங்கும் கூட்டாட்சி என்று. சங்கரியன் சொன்னான்... சம உரிமையோடு தமிழருக்கும் அங்கு ஓர் வாழ்வு இந்திய பாணியில் ஒரு மாநில சுயாட்சி என்று. இவர் தம் மூதாதை இந்தியப் பேயரசின் எச்சம்.. வரதராஜப் பெருமாளும் ஒரிசா ராஜஸ்தான் டெல்லி என்று பதுங்கிக் கிடந்து பார்த்துச் சொன்னான் ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தமே நல்ல தீர்வென்று. சித்துகளின் மன்னன் வவுனியாவின் சிற்றரசன் சித்தார்த்தனும் சொன்னான் 13ம் திருத்தம் அமுலுக்கு வந்தால…

  24. (படித்ததில் பிடித்தது) அன்பின் சுந்தரம், நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன ஏழை வானத்தின் கீழ் அந்தகார இரவு முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு அன்றைய நள்ளிரவு இருள் பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு அப்பா இல்லாமல் போன காலம் குஞ்சுகளுக்கு யாருடைய காவல் அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர் வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள் ருசி தானே இந்த (சிறை) உணவு வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் …

    • 2 replies
    • 942 views
  25. ஆடுகளுக்காக... அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம் விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக சலனமின்றி மூப்படைகிறது சந்ததிகளின் ஆயுள். விடியலைப் பறைசாற்றும் நோக்கில் ஆர்ப்பரித்த சேவல்களால் வாழ்தலின் வேட்கை அதிகரித்து உயிர்த்தெழுந்த போதெல்லாம் சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன. சிறை மீட்பாளர்கள் சிந்திக்கும் அவகாசத்தில் கூண்டுக்குள் வேட்டையாடல்கள் விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும். கசாப்புக் கடைக்காரனின் நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள பிடியளவு தழைகளையும் ருசித்துத் தின்னும் ஆட்டின் இறுதி நிமிட வாழ்தலின் நிதானத்திற்கு நிகரானது ஆதிக்குடிகளின் நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.