கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
தூயவன் அழைப்பு..! யாழினில் ஒரு பகலவன் கலகங்களின் தலை இவன் அரிச்சகர்களின் துணை இவன் அவனே நம் தூயவன் சிறு ஊடல்கள் சில சில பெருஞ்சமர்களோ பலப்பல சினமது மிக வெளிப்பட வெளியேறினான் தனிப்பட வானவரில் நம்பிக்கை மதமது உன் தும்பிக்கை உன் தெய்வம் கணேசனோ கடுப்படித்தவன் சபேசனோ அடிக்கடி நீ வருபவன் அடிக்கு அடி நன்கு தருபவன் கெடுத்தவன் எந்த அரக்கனோ கொடும் நாரதக் கொடுக்கனோ களத்தில் கடுப்பு என்னையா நீ குளத்தில் எறிந்த கல்லையா நீ வருவதெப்போ சொல்லையா உன் மறுபிறப்போ பொன்னையா வருந்திப் பெறவில்லை தடை வெளியேறக் கிடைக்க இல்லை விடை உனக்கு இடம் இருக்கையா உடனிருப்பார் நம்ம தயா…
-
- 50 replies
- 7.6k views
-
-
இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி இனிப்பும் கசப்புமாய் என் காதல் காதலுக்கு பல எதிரிகள் இங்குண்டு மற்றவர்களுக்கு? ஏனோ எனக்கு என் காதலே எதிரியாய் போனதேன்? அன்பாய் தான் இருக்கிறான் அழகாய் தான் எனை ரசிக்கிறான் நிறைவாய் தான் தருகிறான் நிறைமதியாய் எனை தாங்குறான் இருந்தும் எனக்கேனோ நிம்மதியாய் ஒருநாளும் உறங்கமுடியவில்லை.. என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவன் அடுத்த முகம்... நண்பர்கள் உனக்கெதுக்கு வேண்டாம் என விட்டுவிட்டேன் நானிருக்க சுற்றம் ஏன் அதை கூட விட்டு விட்டேன் படிப்பெதற்கு, வேலை எதற்கு நான் உன்னை பார்த்துக்கொள்வேன் அவன் மேல் உள்ள அன்பில் அத்தனையும் துறந்துவிட்டேன் கடைசியில் வ…
-
- 60 replies
- 7.6k views
-
-
நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவு இது. ஒரு பெருங் கவிஞனின் வாயில் உதிர்ந்த ‘துருப்பிடித்துப் போனவளோ?’ என்ற ஒற்றைக் கேள்விக்கு எழுதுகோல் உதிர்த்த பதில் இக்கவி வரிகள். மீண்டும் மானுட வாழ்வின் அசை போடலில் மீட்பித்துப் பார்க்கிறேன். இங்கு கீழ்க்காணும் கவிவரிகள் நேற்றைய காலங்களுக்கு உரியன. இருப்பினும் இன்றும் சில விடயங்கள் மாற்றமடையாமல் தொக்கி நிற்கின்றன. தூர தேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல். கட்புலன் அறியாக் காற்றே! உட்புலன் அசைக்கும் உந்து பொருளே! உயிர்ப்பில், இயற்கை அணைப்பில் நின்னை உணர்த்தும் உயிர் மூலமே! தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன். தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம் உரியபடி சேர்த்து விடு! - இல்லாவி…
-
- 16 replies
- 3k views
-
-
என் தலையெழுத்தினை பிழையாய், எழுதத் தொடங்கிய காதல்... என் தலைவாசல் தனைத் தட்டிநிற்கின்றது! வரவேற்க முடியாமலும்... தூக்கியெறிய முடியாமலும்... நான் படும் பாடு, என் எதிரிக்கு கூட... வந்துவிடக் கூடாது இந்த நிலைமை!!! பூட்டி வைத்த நான்கு சுவர்களுக்கு நடுவில்... நான் கதறி அழுத சத்தத்தையும், என் விரல் மொழிகள் வரைந்த குருதிச் சுவரோவியங்களையும், என் தலையணை தனைத் தோய்த்த நீரோவியங்களையும், மற்றவர் மனமறியாமல் புதைத்துவிட்ட... ரகசியமானவனாய் நான்!? எனக்கு, ஒரு இதயத்தினையும் ஒரேயொரு எண்ணத்தினையும் கொடுத்த, இறைவனுக்கும் என்மேல் இரக்கமில்லையோ!??? அன்பையும் ஆதரவையும் அன்போடு எதிர்பார்ப்பது... எத்தனை ஏமாற்றங்களைக் கொடுத்தாலும், அத்தனை வலியையும் நெஞ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பயணம் தொடங்கினேன்... தூறலும் தொடங்கியது அம்மா சொன்னவ ''மழையில நனையாதை'' எண்டு! ஒதுங்க இடம் தேடி...ஓடி... கடைசியில் - ஒரு தாவாரம்.. ஒதுங்கினேன்........ தாவாரம் வழியே தூவானம் வர உடல் நனைந்தது.... மனம் அடித்துக் கொண்டது... அம்மா சொன்னவ... ''மழையில நனையாதை'' எண்டு! தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
-
- 15 replies
- 2.4k views
-
-
தென்னகம் தந்த காலப்பிழம்பு. மண் தவப்பேறே! மானுடத் திருவே! விடுதலைச் சீற்றம் வெடித்த பிழம்பே! தன் நிலை எரித்த தாய்மைச் செறிவே! தென்னகம் கொண்ட கொள்கைக் குன்றே! என்னகம் தொட்டு எழும் மொழிமெட்டில் உன்னடி நோக்கி என்தலை வணங்கும். உன் இருப்புக்குள் எவ்வளவு நெருப்பு உண்டாய், கண்டு கொண்டோம். கந்தகம் தீய்க்கும் எங்கள் வாழ்வை நெஞ்சகங்கொண்டு நெருப்பாய் ஆனாய். எம்மினம் காக்க தென்னகம் தந்த காலப்பிழம்பே! தொப்புள் கொடியின் தாய்மைப் போரில் உத்தம தத்துவம் சொன்னவனே! நடுவன் அரசை நடுவீதிக்கழைத்து நியாயம் கேட்ட நீதிமானே! நலிந்திடாத் தமிழுனை நாளும் பாடும். ஈழவர் வாழ்விற்கு இளநகை கேட்ட அன்புத்தம்பி முத்துக்குமாரா! எத்தனை ஆயிரம் தோழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு மீட்பர்களே!..... நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம். பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டி புன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள். நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்க அஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்! வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே! காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம். கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும் காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்! கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சூதிலும் சூழ்ச்சியிலும் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள் நாங்கள் தெரிகின்றதா எங்களை ?? மகசீன் சிறை என்றும் காலி சிறை என்றும் வருடங்கள் காறித் துப்பியதே எங்களை!! தெரிகின்றதா எங்களை ?? சிறையில் இருக்கும் நாங்கள் வாழக்கூடாதாம் என்று ஒருகூட்டம் , வாழவேண்டும் என்று இன்னுமொருகூட்டம் !! தெரிகின்கிறதா எங்களை ?? சிங்களம் அடித்த அடி வலிக்கவில்லை உங்கள் அடியின் வலி......... குப்பிக்கடியின் வலியைவிட கொடுமை ஐயா!! கொட்டும் மழையும் பாம்புக் கடியும் பயிற்சிக் கடுமையும் ஒருநாள் இனித்தது எங்களுக்கு, எங்களைப் போல் பலர் களத்தில் பகைவருடன் பொருதி நின்றபொழுது அடித்த விசில்களால் குளம்பித்தான் போனோம்....... எல்லா மக்களும் எங்களுடன் தான் என்று, …
-
- 98 replies
- 5.6k views
-
-
-
தெரியவில்லை எனக்கு தெரிந்தால் நீ சொல்லு.... ஜயனே... யான் அறியவில்லை வரலாறு அறிந்தால் வந்து நீ சொல்லு.... தெரியவில்லை எந்தனுக்கு தெரிந்தால் வந்து நீ சொல்லு.... புரியாமால் வந்து இங்கு பளுகவில்லை நானிங்கு.... ஆழ ஆராய்ந்தால் அதை வந்து நீ சொல்லு.... எந்தனுக்கு விலையாக கொண்டு வந்து நீ வில்லு.... எம் தமிழர் மீதினிலே எறி வந்து நீ சொல்லு... காலம் புராவும் அக்கருத்தை நீ வில்லு.... ஒரு காலம் போவேன் யான் ஊண்டியே தான் பொல்லு.... அன்நேரம் கூட நான் வாழ்த்துவேன் உன் சொல்லு... அறியாமால் இருக்கிறேன் அறிந்தாலே நீ சொல்லு.... அறியாமை விலகட்டும் ஜ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தெரியாம போச்சுதே...( திபாவளி) ஜயோகோ அரியரோ வந்தனரோ...??? எம் தமிழை அன்று வந்து ஆண்டனரோ....??? தீபாவளியை கொண்டு வந்து தினித்தனரோ....??? எம் தமிழர் அன்று என்ன பல் இழித்தனரோ....??? ஆண்டாண்டாய் ஆடி படி கழித்தனரே.... அந்த காலமிதை சொல்ல ஏனோ மறந்தனரோ....??? இன்று மட்டும் எப்படியோ கண்டனரோ....??? ஒடி வந்து எங்களிற்கு சொல்லினரோ....??? ஒப்பாரி வைத்து இங்கு காத்துறாரே..... எம்மை மாறும்படி வந்துயிங்கு கெஞ்சிராரே.... ஆதியந்தம் கேட்டுப்பிட்டா முழிசிறாரே.... அந்த ஆய்வுகளை சொல்ல ஏனோ மறுக்கிறாரே....??? ஆண்ட எங்கள் மன்னனையோ அழித்தனரோ....??? அட…
-
- 0 replies
- 1.6k views
-
-
விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல் விழும் எச்சில்களுக்கு இரத்தம் வருத்த ஆடுகிறான் தன் பிஞ்சுகளோடு கனத்த உடலும் கால் தெரியும் அமைப்பும் ரசிக்கத்தான் கூட்டமுண்டு காலணா வீச ஆளில்லை கரணம் அடிக்கும் பூக்களை ரசிக்கத் தெரிகிறது சிந்தும் துளி ரத்தங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை உழைக்கப் பல தொழில்கள் பிழைக்கப் பல தொழில்கள் பிச்சைக்குத் தொழிலுண்டா? வீசுங்கள் உங்கள் சட்டைப்பை காசுகளை. ஆகாயத்தின் மத்தியில் ஆடும் இவர்களின் வாழ்க்கையும் அடிக்கடி கலையும் மேகங்கள் கயிறின் நுனியில் உயிரை வைத்து பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில் உதடுகள் வெடிக்க இவர்கள் ஆடுகிறார்கள் இறைவனின் கூத்து இறைவன் ஆடுகிறான் இவர்களின் வாழ்க்கையில் கூத்து.…
-
- 6 replies
- 1.4k views
-
-
விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல் விழும் எச்சில்களுக்கு இரத்தம் வருத்த ஆடுகிறான் தன் பிஞ்சுகளோடு கனத்த உடலும் கால் தெரியும் அமைப்பும் ரசிக்கத்தான் கூட்டமுண்டு காலணா வீச ஆளில்லை கரணம் அடிக்கும் பூக்களை ரசிக்கத் தெரிகிறது சிந்தும் துளி ரத்தங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை உழைக்கப் பல தொழில்கள் பிழைக்கப் பல தொழில்கள் பிச்சைக்குத் தொழிலுண்டா? வீசுங்கள் உங்கள் சட்டைப்பை காசுகளை. ஆகாயத்தின் மத்தியில் ஆடும் இவர்களின் வாழ்க்கையும் அடிக்கடி கலையும் மேகங்கள் கயிறின் நுனியில் உயிரை வைத்து பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில் உதடுகள் வெடிக்க இவர்கள் ஆடுகிறார்கள் இறைவனின் கூத்து இறைவன் ஆடுகிறான் இவர்களின் வாழ்க்கையில் கூத்து.…
-
- 5 replies
- 1k views
-
-
வாழ்த்துக்கள்...! இது தான் நம் நாடு கலந்து கொள்ளாத கடைசி மாநாடு....! அடுத்தமுறை ஒன்பதாம் நாடாக கண்டிப்பாய் எம்மை வரவேற்பீர்....! அங்கே: இன்று நீங்கள் செய்வது போல் குடும்பக்கதை பேசோம்...! தொழில்நுட்பம் உரைத்து - உமை வியப்பில் ஆழ்த்துவோம்....! தீவிரவாதத்துக்கு - உண்மை இலகணம் சமைப்போம்....! நாம்நாட்டின் வளம் கொண்டு நாம் வாழும் இரகசியம் உங்களுடன் பகிர்ந்தே மகிழ்திருப்போம்....! முடியும் என்பாதே நம் தாரக மந்திரமாய் ஆங்கு உரத்தே ஒலிக்கும்....! வேண்டும் என்றால் இருந்து பாரும் நடக்க இருப்பதை உரைப்பது தான் நம் பரம்பரைப் பழக்கம்....!
-
- 2 replies
- 1.1k views
-
-
உறவுகளே தொடர்கதை போல் தொடர் கவிதையை இங்கு படைப்போமா? நான் தொடக்கி வைக்கின்றேன். என்னை தொடர்ந்து வருபவர் நான் எழுதும் கருவுக்கு ஏற்றதாகவோ அதன் கடைசி வரிகளை தெரிவு செய்து அதிலிருந்து தொடங்க வேண்டும். முதல் கவிதையை நமது தாயக நினைவுகளுடன் தொடங்குவோமா? எமது பழைய நினைவுகள் எல்லாம் கவிதை வரிகளில் வலம் வரட்டும் இங்கு. என்ன நீங்கள் தயரா? அந்த நாள் எந்த நாளோ? சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு புத்தகப்பையை அனணத்தபடி சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு :arrow:
-
- 54 replies
- 8.1k views
-
-
வணக்கம் ரமா, கள உறவுகளே. இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள். ஆனால் ஒன்று இல்லை இரண்டு: (1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள். (2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள். கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன். தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும். நன்றி
-
- 29 replies
- 4k views
-
-
உருப்பெற்று உருப்பெற்று வார்த்தைகள் வரிசைகட்டி நிற்கின்றன பேறுகாலநிலை; பேரவஸ்தை! ஞாபகங்களின் தொடர்பறுந்து விடாமல், கண்ணாடிக் குவளையை கை பற்றுதல்போல் தாள்களில் பிரசவிக்கும் கணம்வரை கவனம் வேண்டியிருக்கிறது! கைதவறி வைத்துவிட்ட கைத்தொலைபேசி, மருமகள் மீதான அம்மாவின் வசைபாடல், மூன்றுநாள் காய்ச்சலோடு மூத்தவளின் முனகல், அடுக்களைக்கும் அறைகளுக்குமாய் அந்தரித்து திரியும் மனையாள்…. கவனத்தை சிதைத்த காலைநேர களேபரங்களோடு கருக்கொண்ட கவிவரிகளும் கட்டறுந்து விடுகின்றன. அடிக்கடி சிணுங்கும் அலுவலக தொலைபேசிகள், கணினிக்குள் தொலைந்துபோன கணக்கியல் பதிவுகள், முகாமையாளரின் மேலாண்மை சிடுசிடுப்புக்கள் கூட்டங்கள் கொதிநிலை …
-
- 2 replies
- 928 views
-
-
தொலைபேசி என்னைத் தொட்ட சோகங்கள் யாரையும் தொட்டதில்லை இதுவரையில் கண்ணீரில் கரைகின்ற பல கதைகள் கேட்டுக் கேட்டு என்னை நானே நொந்துகொண்டேன் ஏக்கங்கள் கொண்டதால் தேடிடும் உறவுகள் பாசத்தைத்தேடித்தேடி அடைக்கலமான குழந்தைகள் பிரிவின் துயரால் துடியாய்துடிக்கும் காதல்நெஞ்சங்கள் இவர்கள் வலிதனை என்னவேன்று சொல்ல இங்கே இயந்திர வாழ்கைதனில் தொலைத்துவிட்ட மகிழ்ச்சிக்காய் கணவனும் மனைவியும் எனையே அணைத்துக் கொள்ளும் சோகங்களை நான் எப்படி சொல்வேன் இத்தனை சோகங்கள் என்னேடு தானிருக்க என்னையும் வம்பிலுக்கும் வாலிப நெஞ்சங்கலே உங்களை என்ன சொல்லி நான்திட்ட எப்போது திருந்துவீர்கள் பிரான்ஸ் நாட்டில்…
-
- 10 replies
- 5.1k views
-
-
தொழிலாளர் தினம் பாரிலுள்ள தொழிலாளர் பர்ர்த்திருந்த மே ஒன்று ஊரெங்கும் உன்னதமாய் உருவெடுக்கும் ஊர்வலங்கள் தினக்கூலி ஊழியரும் ஆர்ப்பரிக்கும் மேதினத்தில் மனக்கெழிர்ச்சி பொங்கியங்கே முழக்கமிடும் நாளின்று அலுவலகத் தொழிலாளர் ஆலை நிறுவனங்கள் கல்லுடைப்போர் மற்றும் கட்டிட வல்லுனர்கள் உழவுசெய்து உணவளிக்கும் உத்தமத் தொழிலாளி வழக்கம் போல் விதைகளைத் தூவிநிற்க இன்று மூழ்கிநிற்கும் இயற்கையின் வருகையிலே நன்றேயுழைத் தால்தான் உணவில்லா நிலைமாறும் அன்னாளே பொன்னாளாய் ஆறுகின்ற வார்த்தையொடு உழைப்பவரின் வியர்வையிங்கே உலருமுன்னே ஊதியங்கள் அழைத்தங்கே அளித்திடல் வேண்டுமென ஆன்றோர்கள் அன்போடு அறவார்த்தை அனைவர்க்கும் பொதுவாக உன்னத கருத்துக்கள் உவந்தார்கள் அந்நாளில் உ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேசக் காதல் யூலியட் இறக்கவில்லை நடித்திருந்தாள். ரோமியோ அறியவில்லை இறந்துவிட்டான். யூலியட் அறிந்துபின் இறந்துவிட்டாள். “இருவரும் இறக்கவில்லை விதைக்கப்பட்டார்கள்” எழுதிவைத்தார்கள் காதலுக்காய் உயிரைவிடுதல் காவியம் என்று. ரோமியோ! யூலியட்! உருகி வழிகிறது உலகம் முழுதும் ஒன்றுக்கு பதிலாய் பல நூறாயிரமாய் நாமும் காதலித்தோம். இதயச்சுவர்களில் ஈரமாய் எழுதினோம். ஊர்காற்று முழுதும் ஓலை அனுப்பினோம். காது மடல்களில் கானம் இசைத்தோம். மூக்கு முட்டிச் சுவாசித்தோம். இதழ்களால் இறுகப் பற்றினோம். கண்கள் முழுதும் நிறைத்தோம். ஒரு கோப்பையில் உண்டோம். காலடிச் சுவடுகளில் கால்வைத்து நடந்தோம். அவள் ஒளியில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்மா! நினைவினைப் பிழிந்து கொஞ்சம் நெஞ்சின் நெருப்பிலே போடுகின்றோம். தீயின் தீ கூட கசிந்து மெல்ல கண்ணீராய் வழியுதம்மா..!! தடம் மாறிப்போன தமிழை இடம் நோக்கி இழுத்து வர ஒரு பிள்ளை பெற்றாயம்மா! இன்று பாரின் திசையிருந்து அழுவோர்க்கெல்லாம் என்றும் நீயே அம்மா! மானத் தமிழன் தாயே அம்மா! இதமான மழையின் ஈரம் பலமான அலையின் ஓரம் கால் பட்ட தடங்கள் அழிய ஈமங்கள் முடியும் அங்கே! நாமங்கள் முடிவதில்லை! அம்மா உன் ஞாபகம் வளரும் எம்மில் ஈழப்போர் ஓய்வின்றித் தொடரும்..!
-
- 2 replies
- 2k views
-
-
தேசத்தின் குரலுக்கு கண்ணீர் அஞ்சலி ********************************* வெண்மேகம் மறைந்தது-இருள்பரப்பி கார்மேகம் சூழ்ந்தது வெண்ணிலவு தண்ணொளியை ஒரு கணம் இழந்தது மின்னிய பின் பேரிடிகள் மேதினியில் தொடர்ந்தது-தமிழ் மேனிகளோ வேதனையால் கண்ணீரை வடித்தது உன் பிரிவால் இத்தனையும் உலகமெங்கும் நடந்தது விண்ணதிர்ந்த சேதிவந்து வேதனையைத் தந்தது அன்னைத்தமிழ் மண்முழுதும் கண்ணீரில் நனைந்தது தேசத்தின் குரலே தேசத்தின் குரலே தமிழீழ தேசத்தின் குரலே உலகெங்கும் தமிழினத்தின் இருள் அகற்றப் புறப்பட்ட சத்தியத்தின் ஜீவனே எங்கே நீ சென்றாய் மூ பத்து வருடங்கள் அயராது உழைத்தாய் -தமிழ் தேசத்தின் துன்பத்தை உலகெங்கும் உரைத்தாய் ஈழத்தை பெறுதற்காய் காலமெல…
-
- 4 replies
- 1.3k views
-
-
கம்பனிற்கு கவி படித்தார்கள் நம் கற்றோர்கள் ஆறுமுகதானுக்கும் கவி படித்தார்கள் நம் அறிஞர்கள் கற்பனா சக்திக்கு பாராட்டு தெரிவித்தார்கள் நம் கவிஞர்கள் அட நம் அன்டனின் அறிவை அண்டம் புகழ பாட அறிஞர்கள் இல்லையா ஆசியா புகழ்பாடும் அரிடி உண்ணும் அண்டத்தில்
-
- 4 replies
- 1.3k views
-
-
உடலிருந்தும் உறவிழந்து அழுகுதே தமிழினம் துயர் துடைக்க யார் வருவார் நீங்கள் இல்லையே தமிழன்னை காத்த மலை ஒன்று சரிந்ததே அன்று உலகத்தில் எம்மை உரைத்த பிறந்தாக வேண்டும் நீங்கள் இன்று !!! (முகநூல்) உலகமெங்கும் ஏற்றுக்கொண்ட ஈழ ராஜ தந்திரி உலகமெங்கும் தமிழரின் உரிமை சொன்ன மந்திரி தழு தழுத்த குரலோடு தர்மம் சொன்ன வாய்மொழி தலைவன் மீது அன்பு கொண்டு அனலில் நின்ற பெரும்புலி எம் தேசம் தந்த பெறுமதி எம் தேசத்தின் குரல் !!!
-
- 0 replies
- 572 views
-
-
தேசத்தின் குரலோனே செங்கதிர் சொல்லோனே தேசியத்தின் சுவடோடு சென்றுவிட்ட வல்லோனே தமிழ் வாழும் நாள் எல்லாம் வாழ்ந்திடுவீர் எம்மோடே காலனின் வருகை கண்டும் கலங்கினீர் தமிழனுக்காய் காலம் கனியும் நேரம் கவர்ந்து விட்டான் காலதேவன் பேனா முனைகளிலே பேசியது உம் உணர்வு துப்பாக்கித் தோட்டாவாக துளைத்தது சிங்களத்தை பேச்சுவார்த்தை மேசைகளில் பேரமிட்ட சிங்கள துவேசிகளை மதியுரைஞர் உம் மதியினாலே மதியிழந்து கலங்கவைத்தீர் போரும் சமாதனமும் தந்தீர் போற்றுகின்ற பொக்கிசமாய் நோய் வந்து உழன்றபோதும் நேசித்தீர் சமதானத்தை தேசியத்தலைவரின் நேசத்துக்குரிய நண்பா தேசம் போற்றும் உம் நேசக்கரம் என்றும்
-
- 5 replies
- 1.3k views
-