கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நட்பு கடல்... பல நதிகளின் சந்தோச சங்கமம் நட்பு... பல மனச் சுடர்களின் சங்கம சந்தோசம்... கடல் என்றுமே எதிர்பார்த்ததில்லை நதிகளின் குலாவலையோ... அல்லது தழுவலையோ....! நட்பும் அப்படித்தான்... மனங்கள் உரசினாலும் சரி மனங்கள் மணந்தாலும் சரி மரணிக்காத சொந்தங்களின் மறுக்காத உரசல்கள்.... அலைக்களின் ஆர்ப்பரிப்பும் நட்பின் சிதறல்களும் ஒன்றென்பேன்...! அவை என்றுமே தாமாக நிகழ்வதில்லை காற்றின் உந்துதல் அலைகளின் பிறப்பு என்றால் காலத்தின் கட்டாயம் நட்பின் சிதறலாகின்றது... சுனாமிப் பேரலையாய் கடல் வெடித்துத் தெறித்தாலும் மீண்டும் கடல் சேர்வதில்லையா...??? அப்படித்தான் - நட்பின் சிதறலும் ஆனாலும் என்ன சுனா…
-
- 10 replies
- 1.9k views
-
-
களத்தில் ஓர் காதல்..... கவிதை.... என் அன்புக் கண்ணனுக்கு உன் ஆசை மலர் எழுதும் மடலிது.... எனக்கான உந்தன் காதல் பரிசும் கிடைத்தது கார்த்திகை பூவும் கிடைத்தது..... கார்த்திகைப் பூவின் நிறங்களிலே எங்கள் ஈழத்தின் புலிக்கொடி பறக்கக் கண்டேன்..... எக்கணமும் அந்தப் பூ என் சொந்தம் ஆகலாமென்ற உன் உள்மனது சொல்லும் சேதியும் அறிந்தேன்.... நீ கொடுத்த; வெற்றுத் தோட்டா எண்ணிக்கையில் நீ வீழ்த்திய எதிரியின் என்ணிக்கையும் கண்டேன்... இதுதான்..! இந்த வீரத்தின் பாய்ச்சல்தானே எனை உன்பால் ஈர்ப்படைய வைத்தது காதலின் மரபு நீங்கி கார்திகைப் பூவில் காதலைச் சொன்னாய்.... எங்கள் காதல் மலர்ந்து சில நாளில் கதை…
-
- 23 replies
- 2.9k views
-
-
ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது. உயிர் முட்டி எழுகிறது உணர்வு. காதுமடலை உராயும் காற்றின் வழியே உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது. அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்... உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள் உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள். உமக்கான மொழியெடுத்து உம்மோடு பேச முடியாது, ஊமையாகி தலை குனிந்தே உங்கள் முன் குற்றக் கூண்டேறி நிற்கிறோம். வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை பொய் கலந்தென் புனைவிருப்பின் சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது. கார்த்திகை 27, 1982 முதல் மாவீரன் மண்ணில் சரிந்து இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது. காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக…
-
- 26 replies
- 5.2k views
-
-
இன்னும் வடுவாக நெஞ்சில்.... முகம் நிமிர்த்திச் சிரித்திட முடியாமல் முட்டி நிறைந்த துயரச் சுமையோடு அன்றாடம் ஆகிவிட்ட அந்தரப் பொழுதுகள் இவை.... ஆமியும் அதிரும் வெடியுமென அடிக்கொரு நொடி வரும் செய்தியில் எவர் எவரோ எண்ணங்களில் வந்தமர்ந்து போக வழிகிறது கண்ணீர்த் துளிகள். ஊருக்குள் உறவாடிய தோழரும் தோழியரும் யாருக்கும் தெரியாமல் பற்றைக்காட்டுக்குள் பார்க்கவும் முடியாச் சிறைக்கதவுக்குள்ளென செவி சேர்ந்த கதைகள் பல சொல்லாத சோகங்கள். ஊர்காக்கும் போரில் ஒன்றாய் படித்தவ(னு)ளும் கடுங்குளிரும் கொடு வெயிலும் சுடுவதில்லையெமக்கு என்றெழுதிய வரிகளில் விழுந்து கிடந்த விழிகளை மீட்டு வெளிநாடு வந்த சுயநலம் வலிக்கி…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிட்டந்தது தமிழ் வீரம்! இராசராசனும் ராசேந்திரனும் கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் கீழ் ஆசியம் முற்றும் நல் தமிழ் பேரரசு கோலோச்சியதும் இன்நாளில்தான் ஈராயிரம் ஆண்டுகள் இழந்து கிடந்தோம் இனமானம்! எள்ளி நகையாடினர் வடவர் என்று தமிழ்ச்சேரன் செங்குடுவன் படை எடுத்து இமயம் வென்றதும் இன்நாளில் மூவாயிரம் ஆண்டுகள் மூச்சிழந்தது எம் பகுத்தறிவு நம் மண்ணை ஆரியர் அபகரித்ததும் பணி செய்ய வந்த பார்பனீயம் எம் அறிவுக்கே விலங்கு இட்டதும் எல்லைகளை நாம் சுருக்கிக்கொண்டதும் இன்நாளில்தான் ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த தமிழ் வீரமும் ஈராயிரம் ஆண்டுகள் இழந்து கிடந்த இனமானமும் மூவாயிரம் ஆண்டுக…
-
- 1 reply
- 921 views
-
-
அழகிய தமிழ்மகன்..... பிறந்த நாள் வாழ்த்து மடல்..... தமிழரின் வாழ்வு மீட்க உலகில் தமிழனின் புகழ்பரப்ப ஜம்பத்தினான்கு வருடங்கள் முன் வட கடலெல்லாம் ஓசைதர கடல்பறவையும் இசைபாட மணற்காட்டு மண்ணெல்லாம் மலர்போல மண்தூவ அழகிய தமிழ்மகனாய் அழுதபடி அவதரித்தான் சூரியன்போல் ஒர் குழந்தை.... அவனின் முதல் அழுகை அன்னையின் பாலுக்கு வேண்டியல்ல அடிமை மண்ணின் சுவாசத்தை அந்தக் கணம் சுவாசித்ததற்காய்... அவன் என் நாளும் வளர்கிறான்..... தன் வாழ்வின் சரித்திரத்தை அவன் நாளொன்றாய் அறிகிறான்.... அடிமைச் சரித்திரத்தை அவனன்று அறிந்ததுமே வீரனாய் அன்று வீறுகொண்டு எழுகிறான்.... தன் இளமையின் சுகமிழந்து தமிழனின்…
-
- 0 replies
- 816 views
-
-
தமிழர் இழந்த உரிமையைத் தரணி அதிர கேப்பவனே! தமிழர் தங்கள் வரலாற்றைத் தமிழர் அறியச் செய்தவனே! தமிழர் என்று சொல்வதிலே தனக்குப் பெருமை என்றவனே! தமிழை உலக அரங்கத்தில் தாங்கி நிற்கும் தலைமகனே! ஈழம் என்னும் தமிழ்ச்சொல்லை ஈன்றாய் எனக்குத் தமிழானாய்! வேழம் உனக்கு நிகரில்லை! வேங்கை குலத்து முதல்பிள்ளை! சோழ புலியின் அடையாளம் சூடும் தமிழர் அடையாளம்! வாழும் நாளில் மானத்தை மறவா நீயே மலையாகும்! பிறப்போம் இறப்போம் என்பதற்கே பிறப்போர் பலபேர்! இவ்வுலகில், பிறக்கும் போதே புலிபோலப் பிறந்த பின்னே உன்போலே இறவா திருக்கும்…
-
- 0 replies
- 673 views
-
-
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! மாவீரர்கள்! யார் இவர்கள்? தன்னலம் கருதாத தியாகிகள்! தமிழ்நலம் கருதிய ஞானிகள்! எங்களுக்காக தங்கள் உயிரையே துறந்த துறவிகள்! தமிழர் இதயங்களில் என்றும் நிலைத்து வாழும் தெய்வங்கள்! கடலிலும் தரையிலும் காற்றிலும் கலந்து இருப்பவர்கள்! எங்கள் சுவாசத்தினூடக எம் உதிரத்தில் கலந்து எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்! விடுதலைத் தீ அணைந்து போகாமல் தம் உயிரை உருக்கி நெய்யாக வர்த்தவர்கள்! தாம் உருகி உலகத்திற்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்! கல்லறைக்குள் உறங்குகின்ற கார்த்திகைப் பூக்கள்! சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்! தூங்கிக் கொண்டிருந்த தமிழனின் துயில் எழுப்பி! துயிலும் இல்லங்களில் மீள…
-
- 33 replies
- 5k views
- 1 follower
-
-
வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே! காரிருள் போர்த்தி நிலம் கண்விழித்துப் பார்த்திருக்க, கறுப்புமுகில் தான் கவிந்து காணவென்று பூத்திருக்க, ஆழிமகள் அணைக்கவென்ற ஆர்ப்பரிப்பில் அலை எறிய. வந்துதித்த ஆதவனே! வாழிய நீ பல்லாண்டு. புற்றீசல் மெட்டெடுத்து புதுப்பாடல் இசைத்திருக்க, புவி நனைத்து வர்ணமகன் பன்னீரை வார்த்திருக்க, நறுமலர்கள் வாடாத நனிதிங்கள் கார்த்திகையில் பிறப்பெடுத்த பெருமகனே! வாழிய நீ பல்லாண்டு. கிழக்குமுகம் சிரிக்க எழும் ஒளியின் அடர்வே!. செம் பொன்னள்ளி வீசிவரும் சூரியச் சுடரே! இலக்கெடுத்துச் சுயம் ஒடுக்கும் மானிடத் திருவே! இலங்குபுகழ் தலைமகனாய் வாழிய நீ பல்லாண்டு. தாயகத்தை நெஞ்சிலேற்ற தலைமை வேளே! தனித்துவப் …
-
- 2 replies
- 909 views
-
-
http://www.imeem.com/vaseeharan/music/NoO0...yadiyil_vallam/ பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும் பல்லவி தாளையடியில் வள்ளம் எடுத்து தாய்நாட்டை விட்டுப் போகின்றோம் தமிழ் நாட்டின் கரையைத் தேடி உயிரைச் சுமந்து போகின்றோம் நீயொரு வள்ளத்திலே- அடி நானொரு வள்ளத்திலே இந்தக் கடலில் கரைந்து போவோமோ இல்லை கடலைக் கடந்து போவோமோ சரணம்-1 மேற்கில் சாய்ந்த சூரியன்-நாளை எங்கள் கண்ணில் விடியலாம் மேகக் கூந்தல் காற்றில் விரிய எங்கள் மேனியும் சிலிர்க்கலாம் எனக்குத் தெரியும் வெண்ணிலவு அன்பே உனக்கும் தெரியலாம் எனக்குள் எரியும் காதல் நெருப்பை கடல் நீரும் குடிக்கலாம் உப்புக் காற்றின் ஈரம் வந்து காதில் இனிப்பைச் சொல்லுமோ அனலில் வீழ்ந்த எங்கள் …
-
- 0 replies
- 572 views
-
-
http://www.imeem.com/vaseeharan/music/PnPS...tamizhan_tamiz/ - பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும் பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே ச…
-
- 0 replies
- 775 views
-
-
காலம் தன் சுழலும் ஒவ்வொரு பற்களிடையேயும் பிணங்களையிழுத்துச் செல்லும் யுத்தகாலப்பொழுதில் இனி வடிகட்டிய செய்திகளை மட்டுமே அறிவதற்கென ஒரு சிறுவனை கனவினில் நெய்யத் தொடங்கினேன் அவன் நான் விடியலில் எழும்புவதற்குமுன் சமாதானத்து நிற திரைச்சீலைகளைத் தொங்கவிட்டான் குருதியை நினைவுபடுத்திவிடுமோ என்ற எச்சரிக்கையில் சிவப்பாய்ப் பூக்கும் செடிகளையெல்லாம் களைகளைப்போல அகற்றிவிட்டதில் அவனது அன்பு விளங்கியது செவ்வந்திகள் செம்மஞ்சளாய்ப் பூத்து 'மண்ணின்' நினைவுகளை வேரில் தேக்கிவைத்திருப்பதால் அகற்றுவதா இல்லை விடுவதாவென என் சுபீட்சத்தின் பொருட்டுச் சிறுவனுக்கு மிகப்பெரும் குழப்பம் உள்ளதும் நான…
-
- 0 replies
- 819 views
-
-
கார்த்திகையின் தீபங்கள்...... மாவீரர்களின் நினைவுக்காய்..... தமிழினத்தின் கண்ணீரை உங்கள் உதிரத்தால் கழுவிவிட்டு எங்கள் கண்களெல்லாம் மழையாக்கி கவலையற்று உறங்குகிறீர்... கார்த்திகையில் ஓர் நாள் ஆம்..! இருபத்தியேழாம் நாள் தமிழினத்தின் கவலை நீக்க உயிரையே அர்ப்பணித்த எம் மண்ணின் காவியங்கள் உங்களை நாம் வணங்கிடும் நாள்..... எம் மண்ணில் ஒளிகொடுக்க தம் உயிரையே மெழுகாக்கி உருகிவிட்ட ஈழத்தின் வேங்கைகளை எழுச்சியுடன் நினைத்திடும் நாள்.... மாவீரர் நீங்களெல்லாம் நம் மனமெல்லாம் நிறைந்திடுவீர்..... ஈழத்தின் நிலங்களிலே கார்த்திகைப் பூக்களாய் மலர்ந்திடுவீர்..... எதிரியின் படையெடுப்பை இயற்கையாய் நின்று எதிர்த்திடுவீர்..... ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
இரவாய் இருந்த எம் வாழ்க்கை பகலாய் விடிய வந்துதித்த தலைவா வாழீ நீ! முதலாய் வந்த குடியின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட போது உனக்கு மீசை கூட முளைக்கவில்லை! ஆசை அரும்புகின்ற அந்த வயதில் ஆயுத பாஷையன்றி வேறெதுவும் இவர்க்குப் புரியாதென உணர்ந்தவன் நீ! துவக்கை கைகளில் எடுத்தவன் நீ! தமிழின விடுதலைக்குப் புது துவக்கம் கொடுத்தவன் நீ! உலகில் தமிழின இருப்பை எதிரொலிக்கச் செய்தவன் நீ காந்திய வழியில் நடந்து சோர்ந்தவர்களுக்கு நீ பிறந்தது பெரும் தெம்பு! ஏந்திய துவக்கின் வாய் திறந்து பேசிய வார்த்தையால் தான் பேச்சு வார்த்தை கூட நடந்தது! உன் வேர்கள் ஆழமானது நீ பரப்பி…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஈழத் தலைமகனே! "அடிமை" என்னும் விலங்கறுக்க வந்த தலைவன் "மிடிமை" நீக்கி தலை நிமிரச் செய்த தமிழன் கொடுமை கண்டு பொங்கிய எரிமலை இவன் விடிவை நோக்கி பயணிக்க எழுந்த ஆதவன் பொங்கும் கடல் தந்த ஈழத் தமிழ்மகன்- தமிழ் வாழ வேண்டி தமிழன்னை ஈந்த தலைமகன் ஈழ அன்னையாவருக்கும் மூத்த பிள்ளை நாம் அழைப்போம் என்றும் எங்கள் அண்ணை" தமிழர்க்கொரு இன்னல் என்றால் வேங்கையாவான் தமிழீழப் பிள்ளைக்கெல்லாம் தமையனாவான் ஈழமே மூச்சென்று என்றும் வாழ்பவன்! எந்த இடர் வந்திடினும் சோர்ந்திடாதவன் உறுதிகொண்ட மனங்கள் சேர்த்து படையமைத்தவன் உலகம் வியந்துநிற்கும் வகையினிலே எமைச்சமைத்தவன் கலங்கிடாத களத்திற்கே இவன் தளபதி! அண்ணன் கட்டளைக்காய் காத்திருக்கும் புலிப்படையணி விழி…
-
- 0 replies
- 871 views
-
-
''இன்ர நெட்'' லவ்..... கவிதை.... பலகோடி ''லவ் பேட்ஸ்''கள் இணையத் தளங்களிலே வலங்கள் வரும்.... அதில் சிலகோடி தங்களுக்காய் ஜோடிகள் தேடி நிற்கும்.... ஜோடிகள் கிடைத்தவுடன் ஜோராக சேர்ந்து கொண்டு தங்கள் உணர்வெல்லாம் ''மொனிட்டரிலே'' உண்மையாய் கொட்டி நிற்கும் .... அழுவதற்கும் கை விரல்கள் அழகாக ரைப் அடிக்கும்... கோபப் படுவதற்கு ''கீ போட்''டை கொதிப்புடன் உடைத்தெறியும்..... அழுவதும் எழுத்தில் தான்... சிரிப்பதும் எழுத்தில் தான்... முகம் பார்க்க முன்னர் ''என் கேஜ்'' ஐ முடிவு செய்வதும் எழுத்தில் தான்.... இரண்டும் பார்த்திராது ஒன்று இக்கரையில் நின்று நீதான் என் ''பியூட்டி'' எனும்.... மறுகரைய…
-
- 10 replies
- 2.7k views
-
-
-
" கார்த்திகைப் பூக்கள்" மானத்தை உயிரெனக் கொண்டவர் - மண் மானத்தை உயர்வெனக் கொண்டவர் தன் மானமே தமிழென நின்றவர் -வீர தலைவனின் வழியினில் சென்றவர்! பொங்கிடும் கடல்அலையும் வீரரைப்பணிந்து நிற்கும் வீசிடும் காற்றலையோ ஈழ மறவரைப் புகழ்ந்து நிற்கும் நெஞ்சிலே தாங்கிநின்றோம் உம்மை நித்தமும் பூஜிக்கின்றோம் வெங்களம் ஆடிநின்றே சிங்களக் கொட்டத்தை அடக்கி நின்றீர்! எங்களின் மானம் ஒன்றே தமிழீழமே என்றுரைத்தீர் தாயகம் காக்கவே இன்னுயிர் கொடுத்தே உயர்ந்து நின்றீர்! கார்த்திகை மாதமல்ல வீரரைக் நினைக்க ஓர் பொழுதென்ன?! என்றுமே உங்களைத்தான் தெய்வமாய் எண்ணுகின்றோம் காப்பதே கடவுள் என்றே நாம் அறிந்ததை உம்மில் கண்டோம்! 'கல்லறை வாழுகின்ற க…
-
- 1 reply
- 1k views
-
-
பதிவுகள் பத்திரமாய் பேணுங்கள் ......... தமிழ் ஈழத்தாயின் ,விடுதலை நோக்கிய தியாக பாதையின் சுவடுகளை ,பத்திரமாய் பதிவுப் பெட்டகத்தில் பாது காத்து வையுங்கள் நான் இறந்தால் என் மகனும் அவன் இறந்தால் அவன் மகனும் முழு தமிழ் ஈழ சந்ததியும் . படித்து மகிழவேண்டும் ,ஈழவிடுதலை வலியை எம் தலைவனின் ,வழி காட்டலை ,வீரத்தை பார் போற்றும் உத்தமனை ,கலங்காத நெஞ்சனை கருமமே கண் ஆனவனை ,ஒரு வழிக்காட்டியை என் குடும்பம் ,தப்பி வந்தது தன் சந்ததியை காக்க எனக்கு என்ன உரிமை என் தமிழ் ஈழத்தில் என் உடலிலும் தமிழ் ரத்தம் ஓடுவதாலா காட்டிலும் மேட்டிலும் கந்தக புகையிலும் கொட்டும் மழையிலும், கூடார நிழலிலும் என் சனம் துன்பப்பட ,ஓடி வந்த எனக்கு என்ன சொந்த…
-
- 7 replies
- 1.3k views
-
-
மரணித்த தியாகிகளே நான் சிறு துரும்பென உணர்கின்றேன் உங்கள் ஒவ்வொருவரின் இழப்புகளில் வேகின்றது ஆகுதி ஆன எம் பரம்பரையின் உயிர் என் வயது தான் உங்களுக்கும் சில வருடம் குறையலாம் பெண் சுகம் என்னவென்று தெரியுமா? அல்குளின் இன்பம் தெரியுமா? உங்களுக்கு நான் சொல்வேன் என்னவென்று? சொல்லுங்கள் எனக்கு தியாகியாகி போவதன் சுகம் என்னவென்று இனம் காக்க மண் மேல் வீழ்வதன் சுகம் என்னவென்று பல இலட்சம் அடிமைகளின் விலங்கு உடைக்கும் சுகம் எனக்கு தெரியாது பல் கோடி சதிகளின் கண்ணி உடைக்க தெரியாது ஆயினும் அல்குளின் சுகம் என்னவென்று நான் சொல்வேன் சொல்லுங்கள் ஏன் என்னை போல நீங்கள் இல்லை ஏன் பெண் சுகம் நாடவில்லை காட்டாறுவ…
-
- 0 replies
- 855 views
-
-
ஊனுடலை விட்டு உயிர் பிரிந்தாலும், - தமிழர் உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!! பேரினவாதம் எனும் கொடிய மிருகம் ஒன்று கர்ச்சிக்கும் பலமாக தமிழர் உரிமைகளைக் கொன்று. தமிழர் தம் துயரத்தை துடைத்திட வேண்டும் என்று, கிளம்பிய வீரர்கள் நீங்கள் தியாக தீபங்கள் அன்றோ! அன்னையின் அரவணைப்பு, தந்தையரின் ஆதரவு, உடன் பிறந்து உறவாடிய சகோதரரின் பாசம், வாழ்வில் உயர்ச்சிகாண நீர் தொடர்ந்த கல்வி, இத்தனையும் துறந்திட்டீர்; வீரவேங்கைகளாய் புறப்படீர். தாய்மண்ணின் மீட்பிற்காய் உம் உயிரையும் ஈந்துவிட்டீர். மாவீரரே..! ஈழத்தமிழர் வீரத்தின் சின்னங்களே...! நிகரற்ற தியாகிகளே...! உமை என்றும் நினைவு கூர்வோம். ஈழத்தமிழர் விடுதலைக்காய் நீர் வீறுடன் செய்த பயணம், உம் வழிவந்…
-
- 1 reply
- 723 views
-
-
சமாதிகோவிலடியும் சாகாத நினைவுகளும். பெஞ்சன் வடலி பெரிய இலுப்பை பிள்ளையார் வாசல் பிரியமான நாவல்... பேச்சியம்மன் கோவில் பேய் வருமென்றாலும் போய்வர விரும்பிய இலந்தைக் கூடல்.... பசுமையாய் பச்சையம் உலராப் பத்துமணியிரவு. பாலூறும் இரவுப் பெளர்ணமி ஒளி. விசாகப்படையலுக்கு வீடுவீடாய் பொருள் சேர்த்து விரித்த பாயில் பரப்பிய தானிய வகைகள் பரந்த சமாதிகோவில் மடம். பாடலபாடம் படித்த வீட்டு முற்றம் பலா மா பழவகை தந்த தோட்டம் துரவுகள் பகலிலும் கொள்ளையடித்த பலட்டன் பனைவெளிப் பனங்காயின் இனிப்பு...... பால் தந்தே எமை வளர்த்த பசுவும் அதன் சிசுவும் பால்யகாலப் பலகதை நினைவும் பாதிவாழ்வில் பயணம் முடிந்தும் பசுமையின் இனிப்ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
பூநகரியில் புலிதேடும் படலம்..... ஆமிக்காரனும் சட்டம்பியாரும் கேள்வியாயும் பதிலாயும் ஒரு கவிதை ஜயா....ஜயா ... நில்லு..நில்லு.! சந்தியிலே புலி நிக்கா சொல்லு.. சொல்லு ! அந்த வழில புலி கண்டிய... ...? ஒமோம்.. தம்பி... ஒமோம். அந்த வழியிலே புளி நிக்கு கனக்க கனக்க காச்சு கிடக்கு..! இல்ல இல்ல மாத்தய ..! கொட்டியா... கொட்டியா கண்டியா..! ஒமோம்..ஒமோம் கொட்டயோட தான் நான் கண்டேன் இனி கோதுடச்சு ... கொட்டயெடுத்து... கொழும்புக்கு அனுப்பலாம் நீங்கள்... டேய்..ஜயா.. உனக்கு காது கேட்காத..? மாத்தய..நீ போடா போட..! நான் அந்த ஜயாட்ட கேக்கிறன்... தம்பிகளா.. நான் மனதுக்குள்ள சொல்லுறன் புலி தேடவந்த பொன்சேகவின் தம்பிகளே …
-
- 8 replies
- 2.5k views
-
-
ஈழத்தின் போர்க் கோலத்தால் உலகெங்கும் சிதறி வாழும் நாம் நாளும் பல கருத்துக்களை - யாழ் தளத்திலே பரிமாறி உறவுகளானோம். பிழைகள் செய்தோமென தாழ்வுணர்ச்சி கொண்டு விலகி யாவரும் ஓடினால், எஞ்சுபவர் யாரிங்கே? யாழ் கொண்ட களை அது போய்விடாதோ? களை அல்ல நீர். யாழ் என்னும் பயிர் செழிக்க பொழிவீர் உம் நற் கருத்தை மழை நீராய். குற்றங்கள் களைந்து, நற் சிந்தனை புகுத்தி மாற்றங்கள் செய்து ஊற்றுவோம் தமிழ் நீர். சளைக்காதீர் தோழர்களே மீள வாரீர் யாழுடன் தமிழ் மொழியும், தேசியமும் தளைத்து ஓங்க வாரீர்! வாரீர்!! (அண்மையில் யாழின் உறவுகள் இருவர் (கு.சா அண்ணை, முனிவர்) யாழில் கருத்துகள் எழுதாமல், பார்வையாளராக மட்டும் இருப்போமென வேதனையுடன் சொல்லிச் சென்றார்கள். இன்னும்,…
-
- 13 replies
- 1.8k views
- 1 follower
-
-
இயலாமையின் மடிப்புகளில்.. ஒரு புழுவினும் கீழாய் என்னை நிறுத்தி நகர்கின்றது காலம் எனது நிலங்களை பேய்கள் அபகரிக்கும் செய்திகளிலெல்லாம் வந்தமருகின்றது என் இயலாமையின் தருணங்கள் முகம் எங்கும் அப்பி கிடக்கிறது போராட சென்ற தோழர்களின் சாவு. அங்கு அவர்கள் சாகும் பொழுதுகளிலும் குளிருகின்ற இரவில் மனைவியுடன் கலவி கொண்டு களித்து இருந்தேன் நானிங்கு வீட்டின் முன் இலைகளற்றும் மண்ணின் பிடிப்புடன் நிமிர்ந்து நிற்கின்றது ஒரு மரம் மண்ணற்ற என்னை பார்பதும் இல்லை தன் கிளையில் வந்தமரும் குருவியிடம் சொல்லி வைத்திருந்தது என்னிடம் பேச வேண்டாமென துணிவற்றவனுடன் கதையெதுக்கு என்று கேட்டது அது வீட்டிற்குள் சென்று உடலினை…
-
- 20 replies
- 2.8k views
-