கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு. மண்ணுடன…
-
- 7 replies
- 1.3k views
-
-
இனி!! பதுங்குது பதுங்குது புலி! பாயும் காலம் இனி! தமிழரைக் கொண்ட கலி! இனி பகைவன் மண்ணில் தானே கிலி!. மெளனத்தின் பலத்தை மறந்து தோற்றதாய் எம்மை நினைத்து எங்கள் மண்ணைப்பறித்து! கொண்டாடினீர் வெற்றி களித்து! அண்ணனின் ஆணைக்குப் பணிந்து! வருவோம் பகையே துணிந்து! வருமே காலம் கனிந்து! ஈழம் மலரும் வேளையே எம் விருந்து!. நன்றி..!
-
- 7 replies
- 1.5k views
-
-
"வெற்றிக்கனி" எட்டுத்திக்கும் முட்டட்டுமே பகை!! உடைத்தே எறிவோம் எம் கைவிலங்கை! அடிமையாய் வாழ்வது ஈனம்! வீரம் தமிழரின் மானம்!. எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகை ஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி! கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?! எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்! ஈழம் எங்கள் உடமை தமிழா காப்பது நம் கடமை! உரிமை மறுக்கும் சிங்களத்தின் வேரை அறுத்தே நாட்டு உந்தன் பேரை! 'விதி வசம் என்பதை விட்டு! தடை உடைத்தே புறப்படு இது நம்நாடு! எரிமலையாய் இருடா! தமிழா! இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.
-
- 7 replies
- 1.9k views
-
-
கோவம் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி குதூகலப்படுத்துபவனே சபை நடுவே துணிவுடன் உலாவரும் சகலகலா வல்லவனே விடிய விடிய தூக்கமின்றி விருப்போடு பேசிப் பேசி சிரிப்புகளோடு கூடிய அரட்டையில் சிந்திக்கவும் சிறகடிக்கவும் வைப்பவனே தேடலின் நாயகனே வானொலியின் தலைவனே அரட்டையில் மன்னவனே எனதன்புத் தம்பியே அன்றொரு நாள் எனை நீ திடீரென சந்தித்த போது அடைமழை பெய்கையில் குடையின்றி நான் நனைந்ததையும் பெரியம்மா வீட்டு நாயை தைரியமாக களவாடியதை தெருவோரமாக ஒதுங்கி நின்று தெரியாமல் பார்த்த நீ சொல்லமாட்டேன் யாருக்கும் லொலிபொப் வாங்கித் தா என செல்லமாக கேட்டதும் செலவழிக்கின்றேன் இப்போதும் நான் ஆனால்... யாவற்றையும் யமுனாவாக …
-
- 12 replies
- 3.4k views
-
-
சிறு துளி பெருவெள்ளம் உன் கூந்தல் துவட்டிய பின்னும் தூறும் துளிகள் எனக்கு * உன்னைக் காதலித்ததால் அல்ல நீ என்னை காதலிக்காததால்தான் ஆனேன் கவிஞனாய்.... * விரும்பித்தான் காதலித்தேன் உன்னை விரும்பாமல் காதலிதுக்கொண்டே இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை * நீ சூடும் பூவுக்கு எப்படி கற்றுக்கொடுத்தாய் நீ சிரிக்காத போதும் சிரிக்க * உன் கண்களில் படித்துவிட்டுத்தான் வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு கவிதைகளையும் பல கண்களுக்காய் * உன்னைக் காதலித்ததால் தலைக்கனம் எனக்கு நீ காதலிக்காததால் தலைக்கனம் என் கவிதைகளுக்கு -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 1.3k views
-
-
வானத்தில் வெள்ளிகள் சிதறிக்கிடக்கின்றது அண்ணாந்து பார்தபடி மரத்தடியில் அவள் இருபக்கமும் சின்னன் இரண்டும் நித்திரையாக கண்கள் நனைய கண்ணீரில் நிலவெளி தெறித்தது வீடிளந்து வீதியோர வாழ்வில் மழைக்கு முன் கூடாரம் அமைக்க கடவுள் வழிவிடவேண்டும் மனதுக்குள் பிரார்தனை விடியாத வாழ்வில் விடிந்தது காலை அருகில் மூன்று கல்லு வைத்து அடுப்பு ஊத ஊத புகையை காற்று சுழற்றி முகத்தில் அடித்தது நாசிக்குள் போக பிரக்கடித்தது கண்ணெரிந்து கண்ணீர் வந்தது ஏனிந்த கண்ணீர் நிற்காமல் வருகிறது விறகு புகைக்கும் வருகிறது வீட்டுக்காரனை ஆமி சுட்ட போதும் மானாவாரியாய் வந்தது நினைக்கும் போதும் நிற்காமல் வருகின்றது தோட்டம் துரவை விட்ட…
-
- 7 replies
- 1.4k views
-
-
விழித்தெழு தமிழா விழித்தெழு- நீ விடியலின் எல்லையில் விழித்தெழு... பகையவர் கோட்டைகள் சரித்திடுவோம்- புலியென ஆகியே புறப்படுவாய்... இது வரை இருந்தாய் இது போதும் இனியும் எழுவாய் புயலென நீயும்... பதுங்கும் புலியது பாய்வது முறையே படுக்கைக்கு போகுமா பாருக்கு உரைப்பாய்... கிளி பிள்ளை வந்தின்று கிண்டல்கள் பொழியுது பார்த்தே சிரித்து புலியது பதுங்குது... அர்த்தங்கள் புரிவாய் அணியாய் திரள்வாய் பறையது அடித்து பட்டாசு கொளுத்து.. பொய்யா பகையதின் பொய்யதை எறிவாய்... உன் தமிழ் வெல்லும் உரித்துடன் ஏற்ப்பாய்...
-
- 12 replies
- 2.3k views
-
-
உமிழ்ந்தது தப்பு... குடு குடுப்பை காறனவன் குழிக்காதே எண்கிறான் பர பரப்பில் வந்துயவன் பகுத்தறிவு என்கிறான்... மூடர்கள் நீர் போலும் முளையில் ஏதுமில்லை ஏனென்று கேளாது ஏற்றீரோ நீரும்..? ஆலயங்கள் தோறும் ஏறி ஆண்டவனை வணயங்கியவன் இன்று வந்தேனோ இல்லை சாமி என்றானோ...?? காலயிலே நீராடி காசிக்கு மாலையிட்டு ஊச்சி மலையேறி உண்ணா நோன்பிருந்தான்.. பின்னாளில் வந்தேனொ பிதற்றல்கள் செய்தான்..? இன'னாளு வரைக்கும் இதையென் சொல்லலயோ...?? தாசி மகளுக்கு தரணியிலே விலை வைத்தான் இத்தனை இழியாரையோ இன்று பெரியார் என்பீர்...?? கட்டி தளுவி கலவியதை நீயாடு பிள்ளையதை வேண்டாமென்று பிதற்றிய செம்மலிவர்... இன்னாரின் இலட்சியத்தை ஏ…
-
- 2 replies
- 970 views
-
-
எத்தனை எத்தனையோ பிறந்தநாள் பாடல்கள் வந்திருக்கு... சரி நம்ம பாட்டையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் விழவாவிலும் போட்டு எங்கள் செல்ல மழலைகளை ஆடவிடுங்கள். http://vaseeharan.blogspot.com/ பல்லவி பிறந்த நாளைக் கொண்டாடும் பிஞ்சு மழலைகளே இந்த வீட்டின் சந்தோஷத்தை கொண்டு வந்தவர்களே அம்மாவின் அன்புபிள்ளை அப்பாவின் நல்ல பிள்ளை ஆண்டவனின் செல்லப் பிள்ளையாய் நல்ல நல்ல பாட்டைக் கேட்டு தன்னாலே ஆட்டம் போடுங்க நல்லாய் படிச்சு பட்டம் முடிச்சு உலகை நீங்கள் வெல்லுங்க சரணம்-1 தரணியெங்கும் சென்று நீயும் தமிழைப் பரப்பிட வேண்டும் நெஞ்சை நிமிர்த்தி நின்று நீயும் தமிழில் கதைத்திட வேண்டும் உன்தன் மூ…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஆறு ஊரின் வெளியே ஆறு - அது ஓடும் அழகைப் பாரு! மாரி பொழிந்தால் வெள்ளம் - கரை புரண்டு ஓடும் எல்லாம்! ஓய்வு சிறிதும் இல்லை - அது ஓய்ந்தால் வருமே தொல்லை! ஆய்வு செய்தால் நிறைய - ஞானம் பிறக்கும் மடமை மறைய! மலையின் மீது தோன்றி - ஊற்று நீராய் வருமே தாண்டி! கலையாய் பூக்கள் எங்கும் - மலர நீரும் போயே தங்கும் துள்ளிக் குதித்து ஆடும் - தங்கப் பாப்பா நீரில் ஓடும்! பள்ளி செல்லும் நேரம் - தேனீ போல விரைந்து போகும்! தடைகள் வந்தால் ஆறு - அவற்றைத் தகர்த்துச் செல்லும் கேளு! மடைகள் திறந்து நீராய் - வெல்லும் படையாய் இருக்க வாராய்!
-
- 1 reply
- 1.3k views
-
-
துடைத்து வைத்த கண்ணாடி போல இருந்ததடி என் உள்ளம்! இப்போதெல்லாம் அதில் தெரிகின்றதடி உன் விம்பம்! சலனம் இன்றிப் பயணித்தவன் நான் என்னுள்ளே நீ வந்தபின் உன் பெயரை மனனம் செய்யப் பழகிக் கொண்டவன் மரணம் வரும் எப்போதோ நானறியேன் அதுவரை சரணம் என்றுன்னை அணைப்பேன் ஊரெல்லாம் ஏதேதோ கதைக்க நீயும் நானும் வாய்மூடி மெளனிகளாவோம் உன் மனம் நானறிய என் மனம் நீயறிய உதவாத கதையெல்லாம் எமக்கெதற்கு? சிந்தை சிதறாது காதலி முந்தை வினையெல்லாம் கூடி எம்மை அலைக்கழிக்கும் பந்தை பக்குவமாய் வெட்டி விளையாடும் கால்பந்து வீரனாவோம்! விந்தை எதுவுமின்றி விரண்டோடும் வினையெல்லாம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழ்க் குலமே! எழுக!!!!! புத்தனா,நீ? போய்விடு! போதி மரத்தைத்தான் எத்தனை நாளாக நம்பி யிருப்பது? அகிம்சை போதிக்கும் அண்ணலும் வேண்டாம்! பகையை வளர்க்கும் பாலமும் வேண்டாம்! பிஞ்சுக் கொடியை மொட்டு மலரை நஞ்சுக் கொடியை நசுக்கிய பாவியைக் காணவா, கண்கள்? இருக்கும் உயிரைப் பேணுதல் வேண்டோம்! களத்தில்நில்! நம்முள் இருப்பதும் ஓருயிர்! என்பதை,எண்! செங்களத்தில், அரும்புகளைக் கொன்ற அகந்தை அழிப்போம்! சிங்கள நாயின் சிரந்தனைக் கொய்துநமைப் பங்கப் படுத்தும் படையை ஒழிப்போம்! புலிகளை வெல்லுமோ பசுக்களின் கூட்டம்! அலிகளுக்கா ஆண்மை பணியும்? தமிழா, இறுதிக் களமிது, போராடு! நெஞ்சில் உறுதிகொள்! உள்ளத்துள் ஈழம் தனைநினை! …
-
- 3 replies
- 1.1k views
-
-
பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடையில் Among the School Children - W.B.Yeats தமிழில் - நோயல் ஜோசப் இருதயராஜ் செல்லுகிறேன் நீண்ட வகுப்பறையின் ஊடே சிறுமுறுவல் சிலவினாக்கள் சிந்திக் கொண்டே; வெள்ளை உடை முக்காட்சில் முதய கன்னி விடைகனிவாய்ச் சொல்லுகின்றாள்: ``சிறுமியர்கள் மெல்லிசைப் பண், வரலாறு, கணிதம், தையல் மேலும் நவ நாகரிகம் கற்கின்றார்கள்`` எல்லோரின் விழிகளும் ஓர் கணவியல்பில் எழுகிறது அறுபதினைக் கடந்த என்மேல்! காணுகின்றேன் நின்றபடி கனவில், ஹோமர் காவியத்து ஹெலன்போன்ற என்றன் காதல் ராணியினை. தாழும் தீக் கணகணப்பில், ராப்போதில் அன்றொருநாள், அரட்டை கேலி வீண் அற்பச் சிறுபிள்ளைத் தனங்கள் எல்லாம் விபரீதம் விளைத்தகதை சொன்னாள்! கேட்டேன்! ஊன்கலந்த…
-
- 1 reply
- 966 views
-
-
பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய் கிடப்பதா? சொல்லாண்டு தமிழினம் அடிபட்டு சாவதா? பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா? மெல்ல தமிழ் இனம் இனி சாகுமா? வெல்லா போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா? எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம் எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொருக்குவோம் கொல்லா குணம் இன்னும் தேவையோ? எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ? செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி ஷெல்லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்..! கல்லாய் நீயும் இருப்பதோ..! கடவுளையும் துணைக்கழைப்பதோ..! மெல்லத் திறந்திடு உந்தன் சிந்தனையை பொல்லாப்பகை விரட்ட -புலி படையுடன் இணைந்திடு நல்லார் உலகை படைக்க நாமும் இணைவோம் சொல்லார் எம் மீத…
-
- 4 replies
- 1.1k views
-
-
செடியின் துயரம் பலநூறு மொக்குகள் மலர புன்னகையுடன் பேசத் தொடங்கியது செடி முந்திக் கொண்ட ஒவ்வொரு மலரும் முணுமுணுத்தது தனித்தனி மொழியில் தானாகக் கண்டறிந்து சேர வழிகேட்டது கூந்தலுக்கும் கோயிலுக்கும் தோட்டத்தைச் சுற்றி இலைகளாய்ச் சிதறின சொல்சொல் என அவை முன்வைத்த வேண்டுகோள்கள் ஆளற்ற வெளியில் பரிதவிக்கும் பார்வையற்றவர்களென காற்றின் திசைகளில் விடைவேண்டி கைதுழாவி நடுங்கிக் களைத்தது காலம் சற்றே கடந்தாலும் ஒப்பந்தப்படியும் உரிமைப்படியும் பறித்தெடுத்தன பூக்காரனின் விரல்கள் போகுமிடம் தெரியாத இழப்பின் வலியில் கிளைகழற்றிக் குமுறியது செடி
-
- 9 replies
- 1.9k views
-
-
மரம்போல்வர் -நோயல் ஜோசப் இருதயராஜ் பகல் வெளிச்சத்தில் பச்சையச் செழிப்பால் துர்காற்றை உணவுப் பண்டங்கள் ஆக்கித் தர்மப் பிரபுத்துவம் செய்தும் உயிர் மூச்சாய்ச் சுழற்றியும் பெயர் நாட்டுவர். இரவில் துர்காற்றைப் பரப்புவர்; துதிமாரியில் சிலிர்ப்படைவர்; விமர்சனத் தகிப்பில் நரம்பு சுருங்கிச் சாயம் திரிந்த இலை சிந்துவர்; அணில்கள், பறவைகள், வழிஞரை மட்டும் இல்லாமல் பச்சோந்திகள், பாம்புகள், பல்லிகள், அட்டைகள் குரங்குகள், மரநாய்கள், சிறுத்தைகளையும் ஒளித்துக் காப்பர். மாடுகள் உரசி முட்டித் தேய்த்துச் சொறிந்து கொள்ளக் காட்டி நிற்பர்; இடி மழைக்குத் தம்மிடம் நம்பி ஒதுக்கியவர் வெந்து கருகி உயிரிழக்க உறுப்பிழக்க விடுவர். விவரமின…
-
- 2 replies
- 859 views
-
-
நல்வரவு லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு குடிவரவு, பொதிமண்டபம் இவ்வழி மஞ்சட் ஓட்டுக்கு இப்பால் வரிசையில் நில் கடவுச்சீட்டு? நுழைவுப்படிவம்? (கண்களால் மேலுங் கீழுந் துளாவல்) இது உன்னுடைய கடவுச்சீட்டா? விஸா எங்கு பெற்றாய்? கொஞ்சம் பொறு யாருடன் நிற்கிறாய்? முகவரி? தொலைபேசி? எத்தனை நாள் நிற்கிறாய்? ஏன்? எதற்கு? விமானப் பயணச்சீட்டை எடு கொஞ்சம் பொறு மஞ்சட் கோட்டுக்குப் பின்னால் நில், ஓரமாக அடுத்த ஆள் அடுத்த ஆள் அடுத்த... நீ வரலாம் அந்தப் பக்கமாக வைத்தியபரிசோதனைக்குப் போ சட்டையைக் கழற்று எக்ஸ் கதிர் இயந்திரத்தின் முன் நில் மூச்செடு, முதுகை நிமிர்த்தி நெருங்கி நில் கொஞ்சம் பொறு இந்தா உன் கடவுச்சீட்டு நீ போகலாம் பொதி மண்டபம் இவ்வழி…
-
- 17 replies
- 3.9k views
-
-
வெறுமை சாலைகளிலும் மரங்களிலும் மனிதர்களிலும் இறங்குகிறது வெறுமையான இரவு. காத்திருப்பவை நாய்களின் குரைப்பும் சோற்றின் மௌனமும். ஏதொ மறந்து போய்விட்டது யாருடைய களைத்த முகமும் உன்னைத் தேடுவதில்லை. இழந்தது வசவுகளின் கசிந்த அன்பு. இன்று கால்களுக்குக் கீழ் எந்தத் தரையும் இல்லை என்னிடம் தரப்பட்டவை வார்த்தைகள் என் பின் இருப்பவை துகள்கள். கதியில் மறைந்தது சிரிப்பு ஏன் அழுகையாகக்கூட இருக்கலாம். இப்பொழுதுதான் இங்கு எங்கேயோ ஓய்ந்திருக்கவேண்டும் அந்தப்பாடல் கண்களில் ஒளிர்ந்து தன் புறாக்களை அசைத்து போகிறாள் ஒரு பெண் உச்சிவெயிலில் வேர்க்க விறுவிறுக்க வந்த நண்பன் நீல மேகங்களிடை மறைந்த ஒரு தேவதையைப் பார்த்திருக்கவேண்ட…
-
- 9 replies
- 1.6k views
-
-
எம் தேசியத்தை இறுதிவரை இழக்கப்போவதில்லை சுனாமிப் பேரலையில் அம்மாவை இழந்தேன் சுற்றிவளைப்பில் அப்பாவையும் இழந்தேன் கண்ணி வெடியில் அண்ணா காலை இழந்தான் கடத்தலிலே அக்கா கற்பை இழந்தாள் செல்வீச்சில் சொந்தங்களை இழந்தேன் குண்டு வீச்சில் குடியிருப்புக்களை இழந்தேன் இப்போது எஞ்சியிருப்பது என்னுயிர்தான் எதை இழந்தபோதிலும் எம்தேசியத்தை நாம் இறுதிவரை இழக்கப்போவில்லை . கனடாவில் இருந்து வெளிவரும் உலகத்தமிழர் பத்திரிகையில் பரமேஸ்வரி துரைசிங்கம் அவர்களினால் எழுதி சிறப்புப்பாராட்டு பெற்ற கவிதை இது.
-
- 3 replies
- 1.2k views
-
-
பிஞ்சுகளைப் பிளந்த பிசாசுகள் செஞ்சோலையில்-எங்கள் பிஞ்சுகளின் செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே முல்லையின் மரண ஓலம் கேட்கிறதா..? வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்-எங்கள் வண்ணப் பூக்களை வந்து பாருங்கள் யுத்தவெறி பிடித்த புத்தமுகம் கிழியும்! உங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள தமிழனின் குருதியென்ன மதுபானமா? பிணவெறி பிடித்த இனவெறிகளே! எங்கள் வலிகளைக் சேமிக்கும் இதயங்கள் இனியும் தாங்காது வலிகளைச் செலவு செய்ய வருவோம்! எங்கள் குருதியால் எழுதப்படும் சிங்கள மகிந்தவின் சிந்னைக்கு எரிமலைப் பிழம்புகள் கொடுப்போம்! எல்லை மீறிய எதிரிகள் கூட்டமே-இனி எழுது கருவிகள்கூட ஏவுகணையாகும் எட்டுத் திக்கிலும் வெற்றி எமதாகும!; கனத்த நெஞ்சுட…
-
- 8 replies
- 1.5k views
-
-
புகலிடம் *********** அவள் ஒன்றும் இந்த மர மனங்களிடம் கனிகளுக்காக - காத்திருக்கவில்லை..... அது - தரும் நிழலுக்காகத்தான்...... காத்து நின்றாள் அவள்- கனத்த இதயத்தில்... நினைத்த எண்ணங்கள் சருகாகிப் போனதால்... அந்த சருகையே உரமாக்கி (மர)மனங்கள் ஓங்கி வழர்கின்றன அதனால்தான் -அவள் வெயிலினில் கூட... வெறுப்பின்றி நடக்கின்றாள் இனி- அவள் ஒதுங்கப் போவது எந்த(மர) நிழலிலோ....? இல்லை இந்த வெயில் தான் இவளின்...புகலிடமோ....???
-
- 7 replies
- 1.5k views
-
-
மறக்குமோ நெஞ்சம்? ஈழத் தமிழர் ஏட்டில் இன்னுமோர் வரலாற்றுப் பதிவு! நேருக்கு நேர் நின்று போர் செய்ய முடியா கோழைகளின்! வெறியாட்ட அரங்கேற்றம்! செஞ்சோலை!! செங்குருதியில் குளித்த ஓராண்டு நிறைவு! பிஞ்சுகளை எல்லாம் நஞ்சுகள் நசுக்கிய நாள் இது! ஈழத்தமிழர் நெஞ்சங்களில் பதிந்திட்ட ஆறாதவடு! எங்களின் மலர் முகங்களை மறக்க இயலவில்லை!மனங்களில் கண்ணீரோடு கதறிய கதறல் உலுக்குகிறது ஈழத் தமிழனை! பொறுப்பதில்லை எதற்கும் இனி!. "ஏன்" என்று எந்த அரசும் கேட்கவில்லை! போனது "தமிழ்" உயிர் தானே! "அலட்சியத்தில்" உயர்ந்து நிற்கின்றது எங்கள் வேங்கைகளின் இலட்சியம்! இனி!!....வெல்லும் காலம்! "ஓயும் அகதி எனும் ஓலம்! சிங்களத்தினை செங்களமாடும்…
-
- 6 replies
- 1.5k views
-
-
பூக்கள் எப்படி அது நடக்கப் போயிற்று ஒரு மாதத்திற்கு முன்வரை எங்களுக்குள்ளே உறவு முறை சுமுகமாய் இருந்தது ஒன்று சேர்ந்து அருகருகே உட்காரும் குருவிகளாய் ஒருவொருக்கொருவர் மிகவும் பணிந்து போய் ரொம்பவும் நேசத்துடனே இப்போது நினைக்கவே என்னவோபோல இருக்கிறது இருவருக்குமுள்ள தூரம் நீண்டு போய் பார்த்துக்கொள்ளவே மனசைக் கொண்டு வர முடிவதில்லை அப்படியே பார்த்துக் கொண்டாலும் பேசுவதற்கு ஒன்றுமேயில்லாமல் வேற்று மனிதர்களாய் முகங்கள் குரங்குகளாய் மாற அடையாளங்கள் மறந்துபோக கோபம் மட்டும் இந்த சமயத்தில் வரவே கூடாது கோபம் பழைய கணக்குகளைப் போடும் போன மாதம் நான் என்ன பேசினேன் அதற்கு முன்மாதம் அங்கே என்ன நடந்தது குழப்பம் அதிகமாகிக் கதவு தானே மூடிக்கொள்ளும் …
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 02*** தலைப்பு: யாழ் கீதம்! - யாழ் இணையத்திற்கான ஒரு கீதம்! கவியரங்கின் நடுவர்கள் பண்டிதர் தமிழ்தங்கை குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண்புமிகு யாழ் கள கவிஞர் பெருமக்கள் கவியரங்கை ஆரம்பித்து வழி…
-
- 36 replies
- 6.7k views
-
-
உலக மென்னும் அற்புத படைப்பின் அழகிய பொய்கள் நாங்கள் அறிவு கொண்டு அழிவையே நேசித்து போலி கொண்டு நிம்மதியழித்து இன்பம் தேடி துன்பம் நேசித்து காலம் தனை காகிதக் குப்பையாக்கி மரணம் கொண்ட மாய வாழ்வின் உதிர்ந்த இதழின் கற்பனை கொண்டு வாழ்வின் சரித்திரத்தை இறந்த உயிரின் இரத்தத்தில் எழுதுகின்றோம்
-
- 18 replies
- 2.6k views
-