கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தொட்டுத்தொட்டு நான் வளர்த்தேன் நெஞ்சுக்குள்ள விதை விதைச்சே விருட்சம் வளர்த்தேன் காடு கழனி எல்லாம் நான் அலைஞ்சே கண்டுபிடிச்சே உன்னைப் போல் அதையும் நெஞ்சுக்க வைச்சேன்..! தொட்டும் தொடாமலும் நீயும் வந்தே பச்சைப் பைங்கிளியா சுற்றியே வந்தே... உள்ளம் முழுக்க உல்லாசமா நான் உன் சோலையில..! அங்க என்ன வேலை செஞ்சே.. நெஞ்சுக்க நோ எடுக்க பிடிங்கி எறிஞ்சே நான் வைச்சத..! வெட்டிய காடும் வரண்ட கழனியும் சுற்றி வந்த பைங்கிளி சிறகொடியவும் கண்டேன்..! தோழியாய் வந்தே தூதனாய் என் உயிர் பிடிங்கினே.. நீ யாரென்று பார்க்கையில... நான் தேடியே நட்ட மரக்கன்ற பிடிக்கி எறிஞ்ச என்னவள் கை... அறிஞ்ச போதே பதறிப்போனே செல்லமாடி நீ எனக்கு..! …
-
- 4 replies
- 1.3k views
-
-
சில நிகழ்வுகளும்! நிஜங்களும் எப்படித்தான் பார்த்து பார்த்து எடுத்துவைத்தாலும் மறந்து போய் விடுகின்றது பயணத்தின் போது ஏதோ ஒன்று! அள்ளி அள்ளிக் குளித்தாலும் சில நேரங்களில் நனைவதேயில்லை புறங்கால்கள்!. எப்படித் தேடியும் அகப்படுவதில்லை பிச்சை போடும்போது மட்டும் சில்லறைகள்! மிகக் கவனத்தோடு கையாண்டாலும்!. சதையோடு சேர்த்தே வெட்டுப்படுகின்றது விரல் நகங்கள்!. எழுந்து போய் நிறுத்த வேண்டும் தொலைக்காட்சியை நினைத்தும் தேடுகின்றது மனது ரிமோல்ட்டை! இப்படியே நகர்கின்றது! என் வாழ்வில்! சில நிஜங்களும் நிகழ்வுகளும்!.
-
- 4 replies
- 1.4k views
-
-
மனதை வருடும் ஹைக்கூ....... காலடிப்பதிவை கவிதையாக்கிச் செல்லும் கொலுசுச் சிணுங்கல்... என்னருகில் அமர்ந்திருப்பவர் எழுந்திருக்கிறவராய்த் தெரியவில்லை கர்ப்பிணிப்பெண் நிற்கிறாள்...... - எல்.இளங்கோ. நிமிர்ந்து நின்றது புல் வளைத்துக் காட்டியது ஒரேஒரு மழைத்துளி -ப.ஆனந்தன் குப்பை பொறுக்கும் சிறுமியின் கையில் ஃபிளாப்பி டிஸ்க். அப்பாவுக்கு அறுபதனாயிரம் மனைவிகள் இருந்தும் சந்தேகம் இல்லை. ராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகங்கள். -கபிலன் (வைரமுத்துவின் மகன்) பறவை சிறகை மீறின ஆகாயத்தை அளந்து ஓய்ந்து அலகை மீறின வனத்தை உண்ண அமர்ந்தது. -எம்.யுவன் எந்தப் ப…
-
- 4 replies
- 7k views
-
-
முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வந…
-
- 44 replies
- 13.8k views
-
-
கண்ணும் கண்ணும் பேசினும் கண்ணுக்குத் தெரியாதது... தொட்டுத் தொட்டு பேசினும் புலனுக்கு புலப்படாதது... சோடி போட்டு சுத்தித் திரியினும் சாட்சி சொல்லாதது... கட்டிப் பழகி கழற்றி விடினும் மெளனமாய் இருப்பது... புளுகித்தள்ளி உசத்தியாக் காட்டி ஏமாற்றினும் அலட்டிக் கொள்ளாதது... மாற்றி மாற்றி பலது வந்து போயினும் குற்றம் காணாதது... இடையில் ஒன்றைவிட்டு ஒன்று தாவினும் கண்டுக்காதது... மனசில் ஆயிரம் வைச்சுப் பழகினும் காட்டிக் கொடுக்காதது... ஓசிக் காரில, காசில பவனி வரினும் கெளரவமாய் நினைக்க வைப்பது... பூங்காவில பீச்சில ஒளிச்சிருந்து கும்மாளம் அடிப்பினும் சாட்சிக்கு வராதது... அப்பா அம்மா கண்டுபிடிக்க முடியாதது... நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்…
-
- 29 replies
- 3.9k views
-
-
நேற்று என்பதை மறந்து விடு நாளை என்பதை நெஞ்சில் நிறுத்திவிடு இது விளையாட்டும் இல்லை நடிப்பும் இல்லை இதுதான் வாழ்க்கை தாயும் இல்லை தந்தையும் இல்லை தலைவன் ஒன்றே தெய்வம் தங்கமும் தேவை இல்லை வைரமும் தேவை இல்லை மண்ண் ஒன்றே என் உயிர் மண்ணிற்கே எனது உடல் எனக்கு மூச்சுக் காற்றும் தேவை இல்லை தென்றல் காற்றும் தேவை இல்லை என் தேசத்தின் சுதந்திரக் காற்று ஒன்றே போதும் என் வாழ்க்கைன் போகட்டும் மண்ணிற்காக நாளை நம் பிஞ்சுகள் வாழட்டும் அவர்களிற்காக
-
- 5 replies
- 1.3k views
-
-
"லிபரேசன் ஒப்பரேசன்"..... வடமராட்சி மக்களால் எனதூர் நிறைந்தது இளவட்டம் நிறையவே வந்தது பு+சாவைத் தப்பிய பெருமூச்சு எங்கும். எங்கள் வளவிற்கும் வந்தார்கள். காய்த்துக் குலுங்கிய மரமுந்திரிகை, அது முற்றத்தில் முன்னிற்கு நின்றது. கனியாதனவும் உண்டார்கள்! ஐயோ தம்பி பழமே கடினம் காயாய் வேணாம் சமைக்கிறோம் பொறுங்கள் முடியாது போனால் கொல்லையில் மாமரம்..… "முந்திரி தானே உடனே எட்டுது" பசியில் தோய்ந்த பதிலே கேட்டோம். ரூபவாஹினிச் செய்தியின் நேரம் வீட்டிற்குள் குறைந்தது நூறு பேர் இருக்கும் பு+சாக்குப் போகும் கப்பலைப் பார்த்து அடையாள அணிவகுப்பு அன்றங்கு நடந்தது! புங்கடிக் குளமும், ஈட்டி எறிஞ்சானும் கொட்டிகை வெளியும், கட்டுவரம்பும் காட்டினேன், …
-
- 6 replies
- 1.4k views
-
-
சஹாராவில் பூக்களா? பாலைவனத்தில் ... பா(ழ்) ல் பண்ணை ...? நிறுவ முடியுமா? முடிந்தாலும் ... பச்சை வயலை எரித்துவிட்டு,,,, பாலைவனத்தில்... பன்னீர் மழையா? வீணே போகுமே!! சூரியனுக்கு... கறுப்படிக்க நினைக்கிறானாம்.!. முடிந்தாலும்........(???) சுற்றி வர - இருட்டாகுமே ... கவலையில்லையா?! (யாருக்கோ)
-
- 3 replies
- 1.1k views
-
-
சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கவிதைக்குள் செல்லுங்கள். ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை 'சமர்' தானம் செய்யப்படுவது தான் 'சமாதானம்' என்று! சடைத்த பனைகளின் தலைகோதிச் சிக்கெடுத்து விரல் இரத்தம் கசியப் புன்னகைத்த காற்றைப் போல நாங்களும்...! சிக்கெடுக்கும் முயற்சியில் வெளியாரும்...! சிங்காரக் கொண்டைக்காரி, தலை அவிழ்த்து உதறி ஈரோடு பேன் விரட்டு மட்டும் விடிவில்லை! காரோடு, கண்ணாடி மாளிகை கண்ணசைப்பில் காரியமாற்ற 'குண்டர்களின்' தோழமை! வேரோடு அறுப்பதாகப் பேச்சு! வெற்றுத் தோட்டா நமக்கா கூற்று? யாரோடு நமக்கென்ன பேச்சு...? தம்பி, போரா…
-
- 4 replies
- 1.1k views
-
-
அம்மா உன் கருவறை மீண்டும் தருவியா... நல்ல சயனம் அங்குதானே மீண்டும் தாங்கவருவியா.. இந்த பூமி ரொம்ப இரைச்சல்.. அதுதானே என்னிதய எரிச்சல்.. நட்பு என்பதை நம்பி நான் மோசம் போனேன் தம்பி அன்பு என்ற அம்பு என்னைத்துளைகள் செய்தது நம்பு இது மனிதம் இறந்த காலம் புவி திரும்பச் சுழலக்கூடும்.. ஒழுக்கம்தானே உயர்வு பண்புதானே வாழ்வு நல்லதென்றும் யோசி -நன் மெய் அதையே பேசி.. தந்தை சொன்ன மந்திரம்-இன்று தவிக்கும் தனயன் மாத்திரம்
-
- 7 replies
- 1.3k views
-
-
நான் இராட்சதன்.... பூப்பொன்ற மனங்களை புரியாததாலா நான் இராடசதன்... புரிந்த மனங்களை வெளி மொழியாததாலா நான் இராட்சதன்.. கறந்த பாலாய் கண்ணுற்ற உன் காதலை காப்பாற்ற முடிந்தும் கல்லாக இருந்ததாலா நான் இராட்சதன்.. கல்லறை புகும் முட்டாள் காதலென காதலை இகழ்ந்து மென்மை அறியாததாலா நான் இராட்சதன்.. நண்பா.. உன் காதலை ..உலகுக்கு உணர்த்த உயிர்விட்ட நீயும் உன் காதலியும் இழந்தபோது உலகம் சொல்கிறது.. முட்டாள் காதலர்கள் என்று.. இல்லை இப்போது இராட்சதன் நான் சொல்கிறேன்.. காதல் அற்புதமானது.. காக்கப்படவேண்டியது சேர்த்துவைக்கப்படவேண்டியது.. இரக்கப்படவேண்டியது.. உதவவேண்டியது.. உணரவேண்டியது..ஆனால் உயிர்விட வேண்டியது அல்ல …
-
- 7 replies
- 1.3k views
-
-
என்னைக் கோவப் படுத்தியதுக்காக உன் மேல் நீ கோவப்படுகிறாய் உன்னைக் கோவப் படுத்தியதுக்காக என் கோவத்தை வெறுக்கிறேன் * என்னால் உன் கோவங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை ஒரு விதத்தில் அதுவும் உதவி செய்கிறது எனக்கு ஆங்கிலம் புரியாததால் * உன் கோவத்தை என் மேல் இறக்கி வைத்துவிட்டு போய்விடுவாய் பாவம் நான் படாத பாடுபடுகிறேன் உன் கோவத்தை யாரிடமாவது இறக்கி வைக்க * உன் ஆசையை காட்டுவதற்காக இப்பிடியா வார வாரம் என்கூட கோவம் போட்டு பேசாமல் விடுகிறாய் சில தினங்கள் * உன்னை அழகாய் எனக்கு காட்ட விரும்புகிறாய் என்றால் சொல்லி இருக்கலாமே உனக்கு விரும்பிய அழகுசாதனப் பொருட்கள் வாங்கி தந்திருப்பேனே அதை விட்டுட்டு ஏன் என் மேல் அடிக்க…
-
- 10 replies
- 1.6k views
-
-
-
« ம் அனைவரின் சொந்தம் கறுப்பு நாய் கறுப்பு நாய்க்கு அனைவரும் சொந்தம் அது சதா அலைகிறது. சர்க்கஸ் உலகம் கூடாரத்துள் மயிர்கூச்செறியும் சாகச வித்தைகள் காட்சிக் கேற்ப மாறும் பின்னணி இசை பசிதாகம் விற்பனையும் நடுவே இடையிடையே யாவற்றையும் நையாண்டி செய்கிற கோமாளிக் குள்ளர்கள் ஒரு பேயின் முகம் போல யிருக்கிறது ஒரு பேயின் முகம் போல யிருக்கிறது அதன் முகம் கண்களில் தீக் கங்குகள் ஏதேன் தோட்டத்தில் பிறந்தவை அதனுடைய வார்த்தைகள் கருநாகங்கள் படமெடுத் தாடுகின்றன கழுத்திலிருந்து புதைத் தழுத்துகிறது அதனுள் கடைசிச் சொட்டு மிழந்து வெளிர்ந்து பொங்கி யதனைத்தையும் உறிஞ்ச பிய்த்து எறிந்த சதை கூரையிலிருந்து ஒழுகுகிறது …
-
- 2 replies
- 1.1k views
-
-
என்னுடைய வலைப்பதிவில் நான் போட்ட இந்த குரல்பதிவு எப்பிடி இருக்கென்று சொல்லுங்கள்...யாழில் audio எப்பிடி இணைப்பதென்று தெரியவில்லை அதனால் இங்கே சென்று கேளுங்கள். தத்தக்க பித்தக்க
-
- 12 replies
- 1.9k views
-
-
அவன் மனிதன் அல்ல மகான் தனிமனித விடுதலைக்காக(ஆத்மீகவிடுதலைக
-
- 18 replies
- 2k views
-
-
தேவனவன் சிலுவையிலே தொங்குகின்றார் திருமகனின் இருபுறமும் திருடர்கள் ! இதயத்தைத் திருடியவர் இயேசு என்பார் இரும்புப் பெட்டியைத் திருடியவர் மற்றோர் ! மன்னனிட்ட கட்டளையில் மாற்றமில்லை .. மனுமகனோ சிலுவையிலே மரணத்தீர்ப்பு திருட்டு என்பதுதான் குற்றச்சாட்டா ? இல்லை திருமகனையே விற்று விட்ட பற்றுச் சீட்டா ? மதுரா. தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 7 replies
- 1.4k views
-
-
மன்னிப்பு என்பது .. ஏரோது மன்னன் தேடிய இயேசுவே எங்கே போகின்றீர் ? பாரிலே வாழ்ந்தவர் பாவிகள் தானய்யா தேவனே ஏகி நின்றீர் ! நீரோடை போலே நீர் சொன்ன வேதங்கள் நீர்க் குமிழ் ஆனதுவோ ? வேரோடு மானிடர் வீழ்ந்திட்டார் .. பாவத்தில் வேதனை தானதுவோ ? அன்புடன் நேசித்த அப்போஸ்தலன் இராயப்பன் அறியேன் .. என்றுரைத்தான் முப்பது வெள்ளிக் காசுகள் வேண்டி யூதாசும் முத்தமிட்டான் அன்றாடம் உம் நிழலில் அலைந்த இச் சீடர்கள் வென்றார்களா விதியை ? இறைவா .. எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்மை புரிந்து கொண்டேன் எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்ம…
-
- 2 replies
- 1.4k views
-
-
அண்ணன் செயக்குமாருக்கு .. தமிழகக் கவிஞர் அறிவுமதி - சூரியன்
-
- 2 replies
- 1.1k views
-
-
விரல்கள் .. வேண்டும் எண்ணங்களின் வலி என்னை எழுத வைக்கிறது நண்பர்களே .. எழுதுகோல் என் கையில்; ! எழுது .. எழுது என்ற ஏக்கமேயன்றி எதுகை மோனை. பாடுபொருள்….. பக்குவம் எல்லாம் தொலைந்து விட்டது .. நான் பிறந்த நாடு எனக்கில்லை .. என்றார் ! நான் பிறந்த மண்ணை தமதென்றும் சொன்னார் ! தட்டிக் கேட்ட தமிழரை யெல்லாம் சுட்டுக் கொன்றார் .. விடுபட்டுப் போன சிலரை பூசா முகாமில் பூட்டியே வைத்தார் .. தப்பியோடிய தமிழர்க்கு தந்ததே உலகம்.. அகதி எனும் நாமம் பல ஆயிரம் கண்கள் சிந்திய கண்ணீர் சில ஆயிரம் இதயத்தைக் கூட கரைக்கலையே ! பல ஆயிரம் உடல்கள் சிந்திய இரத்தம் சில ஆயிரம் உள்ள…
-
- 8 replies
- 1.4k views
-
-
தமிழன் புகழ் வானில் உயர்ந்தது வரி உடை அணிபவன் ஆணையில் பறந்தது! திரி சடை சிவனும் திடுக்கிட்டு மூன்றாம் விளி திறந்தான் ... முகமலர்ந்து வாழ்த்தினைப் பகர்ந்தான்... சிங்கங்கள் முகத்தை அஷ்டகோணலாக்கி அ'சிங்கங்கள்' ஆயின! பறந்தது உண்மை குண்டு விழுந்ததும் உண்மை இருந்தது இருந்தபடியே இருப்பதாக அறிக்கை வாந்தி எடுத்தார் அரசாங்க அமைச்சர் அவர் மனசுக்குள் நிறைய எரிச்சல்! உலகம் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே 'அது எப்படி புலி வானில் பறக்கலாம்?' என்று வேதாந்தம் பேசின... வெறும் அறிக்கைகள் வீசின! இறக்கைகள் விரித்து இன்னும் இன்னும் பற என்று தமிழர் வாய்கள் பேசின...! …
-
- 6 replies
- 1.8k views
-
-
தேசியக் கவிதைகளும் விசுவாசமற்ற சொற்களும் யவனிகா ஸ்ரீராம் சங்கம் வளர்த்த தமிழ்க்கவிதை மரபுகள், அதன் இறைச்சி, ரசனை அதனுடன் இயைந்த மொழி விரிவு போன்றவற்றையெல்லாம் பல்கலைக்கழக அடைவுகளுக்குள் தேர்வுகளுக்கான காப்சூல்களாக்கிய பின்பு இன்றைய தமிழனின் வெறும் கவிதா தாகத்தைத் திரைப்படப் பாடல்களே தீர்த்து வைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லலாம். புதிய, பழைய திரைப்பாடல்களை குறுந்தகடுகளில் பெற்றுக்கொண்டு, பேச்சுவழக்கில் அதன் சிலாகிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் கவிதைக்கணங்கள் முடிந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதில் தவறொன்றுமில்லை. ஒரு காலத்தில் சங்க இலக்கியம் தொடர்ந்து தனிப்பாடல்கள், கதைப்பாடல்கள் வழியே உருக்கொண்ட பாரதியின் கவிதைகள் சமூக, அரசியல், பின்னணிகளோடும், புதிய கர…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரிய சிநேகிதி, மன்னிப்பாய்...! மெளனத் தவம் கலைத்துச் சகுனம் பார்க்காது காதலென்னும் மாய வார்த்தை சொன்னேன்! உள்ளம் மூடி வைக்காது... பள்ளம் விழுந்ததடி உன் பார்வை பட்டென்றேன் நீயும் பட்டென பதில் சொன்னாய் என்னைச் சட்டென வெட்டி விட்டாய் சட்டென தேறிவிட்டேன் வெளியில் சிரித்தவாறு ஆனால் உள்ளம் இன்னும் வலியில் அழுதவாறு வெள்ளமென உவகை தோன்றுதடி உன்னோடு இருக்கும்போது! இதற்குப் பெயர் காதலென்று அர்த்தம் செய்தேன்! கடைசிவரை குற்றம் செய்தேன்! உன் கனவுக் கட்டிட வாசலில் கூட நிற்கத் தகுதியிருக்குமா எனக்கு? நீ நுழைவுத் தேர்வு நடத்தவில்லையே சிநேகிதி... ஆனாலு…
-
- 12 replies
- 2.5k views
-
-
பச்சோந்தி கைஃபி ஆஜ்மி ஒரே கழுத்தில் எண்ணற்ற முகங்கள் ஒவ்வொரு முகத்திலும் ஆயிரமாயிரம் தழும்புகள் ஒவ்வொரு தழும்பும் மூடிய கதவுகளாய் அதனின்று வெளிச்சம் வராது அதனின்று வெளிச்சம் போகாது எந்தக் கருப்பை பெற்றெடுத்ததோ இதனை எந்த வீட்டில் வளர்ந்ததோ இது எந்த வீட்டில் திரிந்தோ இது எல்லா மொழியையும் பேசுகிறது ஜன்னலைப் போல் திறக்கிறது காயங்களை இதயத்திடம் சொல்கிறது கதையை உனது மதம்; உனது உன்னத கடவுள் உனது பண்பாட்டின் அடையாளத்தை இவையனைத்தையும் அபாயம் சூழ்ந்துள்ளது இவற்றை பின்தொடர்கிறது பேரிருள் உறைந்து போகிறதென் குருதி முடிக்கொள்கிறதென் திறந்த விழி உலகின் அனைவருமென் எதிரிகள் இப்படியே உணர்கிறேன் தோழர்களாக எவருமில்லை என்னை உயிருடன் வி…
-
- 3 replies
- 1.5k views
-
-
'' குண்டுகள் வெடிக்க வேண்டும்..'' எங்களின் மண்ணிலே ஏறியே வந்து உன் பிள்ளை அனுப்பியே ஊரதை அழித்தாய்... எம்மினம் அழிகையில் ஏனென்று கேட்கல இன்றேன் தாயே வெம்பியே அழுகிறாய்...?? நாளுமே..நாளுமே நரபலி எடுத்தாய் எம் தமிழ் வாழ்விலே இன்னலை அழித்தாய்.. கூடியே வாழ்ந்தவர் கூடதை சிதைத்தாய் எத்தனை அவலத்தை எமக்கன்று திணித்தாய்... இத்தனை மறந்தேன் இன்று நீ அழுதாய்...?? நின்மதி தொலைத்து நித்தமும் அழுதோம்... அத்தனை ரணமும் அனுபவி வேண்டும் உன் உடல் யாவுமே கிழியவே வேண்டும்... அங்க மிழந்து- நீ அலறவே வேண்டும் அது கண்டு அயலவர் கலங்கிட வேண்டும்... பஞ்சம் வந்துன்னை பற்றிட வேண்டும் உணவின்றி நோயினால்- நீ இறந்திட வே…
-
- 6 replies
- 1.6k views
-