Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எழுக தமிழ்- பூவரசம் பூ! தீபச்செல்வன் குருதி நிணம் தீரா மண் பிணங்களும் எஞ்சாத தேசம் சிதைமேடுகள் மீதும்குருதி சிதலுறூம் காயம் இராணுவ சப்பாத்துக்களின் கீழ் எல்லாமும் ஆனாலும் எழுந்தது தேசம் அதனாலும் எழுந்தது தேசம் சிறகுடைத்து வீசப்பட்ட ஒரு பறவையின் சிறகசைப்பைப்போல கால்களற்றவரும் நடந்தனர் கைகளற்றவரும் ஏந்தினர் கொடியை விழிகளற்றவரும் ஏற்றினர் சுடரை சொற்களற்றவரும் எழுதினர் பதாகையை இல்லாதவர்களின் இருதயங்களைச் சுமந்து தொண்டைக் குழிகளில் நெடுநாளுறைந்த பெருங்குரல் காட்டாற்றைப்போலப்…

    • 1 reply
    • 897 views
  2. Started by Mayuran,

    மல்லுக் கட்டி நிற்கின்றோம் ஜல்லி கட்டை நடத்திவிட கொள்ளிக் கட்டை கொண்டு வந்து தமிழ் குல தொன்மம் அழித்துவிட மல்லுக் கட்டும் உலகமயமாக்கலோடு நாமும் மல்லுக்கட்டி நிற்கின்றோம். புல்லுக் கட்டு போல எங்கள் புராதன தொன்மைகளை புதைத்துவிட்டு பல்லுக்காட்டி நிற்கச் சொல்லி பாடம் சொல்லும் கயவரோடு மல்லுக்கட்டி நிற்கின்றோம் #ஈழத்துப்பித்தன் 19.01.2017

    • 0 replies
    • 818 views
  3. தக்காளி ,வெங்காயம் விளை நிலம் எங்கே உண்ணும் உணவும் உடை இல்ல நிலை இங்கே மறந்து மறைத்து போனது எங்களின் நிலைமை மூன்று மாதத்தில் நெல் சாகுபடி வருமானமோ நாங்கள் சாகும் படி ..... மாறும் எங்கள் காலம் தங்கம் இப்போ உங்க காலம் வரும் நெல்லை தேடி அலையும் காலம் சிறிய வீடு சிறிய காரும் போதும் எனக்கு இது தான் உன் எதிர்பார்ப்பு இயற்கை சீற்றம் வந்தால் இதில் இல்லை பாதுகாப்பு உண்ணும் உணவு நாங்கள் தயாரிப்பது உங்களுக்காக இதை நீ புரியாதவனாக இருக்கிறாய் வழி விடு வழி விடு உன் சங்கதி வாழ்வதற்கு புதிய இயந்திரம் வந்தாலும் இதில் அனைத்தும் கிடைத்து விடுமா ....... சிந்தனை என்னும் வார்த்தைகளை சிந்திக்க மறந்து விட்டாய் என் தோழா …

  4. பாராட்டு பாராட்டு மத்திய அரசுக்கு பாராட்டு ஜல்லிக்கட்டை பரணி எங்கும் தொரியப்படுத்திய அரசுக்கு பாராட்டு விளையாட்டு விளையாட்டு விளையாட்டை மாறிப்போனதா எங்கள் ஜல்லிக்கட்டு திமிரை கொண்டு திமில் பிடிக்கும் தமிழரின் வீரம்டா காளைகளையும் அடக்குவேம் தடையையும் உடைப்போம் விளையாட்டை மாறிப்போனது உங்களுக்கு தமிழரின் வீரத்தை மீண்டும் பதிப்போம் ஜல்லிக்கட்டுக்கு நடக்கும் இதை யார் தடுக்கும் மு.க.ஷாபி அக்தர்

  5. உதட்டில் ராக்கெட்டை வைக்கிறேன் அதன் புகை உள்ளே செல்லுதே நுரையீரலையும் தாக்குதே என் மூளைக்கு இது தெரிகிறது இதை வேண்டாம் என்கிறேன் ஆனால் மனம் ஏற்க மறக்குதே..... காற்றை கொண்டு அடைக்கப்ட்ட பையில் புகையை அடைகிறேன் காற்றை வெளியில் ஏற்றுகிறேன் கூடவே என் உயிரையும் ஏற்றுகிறேன் நீ மெதுவாய் கரைகிறாய் என்னையும் மெது மெதுவாய் கரைகிறாய் நீ முன்னாடி செல்கிறாய் என்னையும் பின்னாடி அலைகிறாய் ... நான் தீயால் உன்னை கொள்ளுகிறேன் நீ என்னை புகையால் கொள்ளுகிறாய் கடைசியில் நீயே வெல்லுகிறாய் ...... என் புகையில்லையே ............... எங்கள் உயிருக்கு இல்லை விலையே ...... மு.க.ஷாபி அக்தர்

  6. வெளிநாட்டின் இன்பம் துன்பம் இங்கு இன்பமே துன்பம் ,துன்பமே இன்பம் முதல் முதலில் விமானப்பயணம் வாழ்நாளின் சாதனைப்பயணம் என தேன்றும் வந்த பிறகுதான் இது சாகவந்த பயணம் என்று தெரியும் இங்கு நான்கு சுவத்துக்குள் சிறை அது தான் எங்களின் அறை அது உள்ளவே சமையல் அறை சிக்கன்,மீனு எல்லா பொருளும் கிடைக்கும் குளிர்சாதன கிடங்குல அந்த ஏதிலிலும் சத்துயில்ல நாங்கள் உண்ணுவது தான் உணவு நாக்கு சுவைக்கு இல்லை என பழகு இது தான் எங்கள் முதல் மந்திரம் இங்கு ஜன்னல் என்ற ஒரு பெயருக்கு ஒன்று இருக்கு அதை திறந்தாள் புழுதிக்காற்று அடிக்கும் இதை யாருக்குத்தான் பிடிக்கும் சுவாசிக்க காற்று தேவை இங்கு சுவாசிக்கவே நல்ல ஒரு காற்று தேவை அனைத்து காய்ச்சலுக்கும் ஒருமாதிரி மாத்திரை கம்பெனிக்கு எங்கமேல இல்ல அக்கறையும் …

  7. இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின் நள்ளிரவில் வீடு சேர்பவன் சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான். தன்னை மலடாக்கிய உணவை இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான். ஆடு மாடுகளின் மேவு ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான். டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு…

  8. களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட சின்னாவும், வடிவேலும், சிலுக்கோட கூத்தாட குத்தாட்டம் போட்டபடி கு. சாவும் தள்ளாட கானத்துப் பிரபாவும், கதை எழுதும் மணிப்பயலும் கதவோரம் நின்று நின்று களத்துக்குள் கல் பொறுக்க வானவில்லும் வெண்ணிலாவும் வக்கணையாய் பேச்செடுக்க பொக்கைவாய் திறந்து யம்மு போயிலை சாறுமிழ விண்ணான டங்குவுடன் விம…

  9. அன்பின் சிறிய நிமிடங்கள் - கவிதை மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில் கடற்கரையில் தோளோடு தோளாகச் சாய்ந்துகொள்வதில் அப்படி என்ன கிடைத்துவிடும்? இருசக்கர வாகனப் பயணத்தில் தோளைப் பிடித்துக்கொள்வதில் என்ன நிறைந்துவிடும்? அவ்வளவு அவசரமாக பத்து விநாடிகள் கைகளை இறுகப் பற்றிக்கொள்வதில் எதை நாம் கடந்துவிடுவோம்? எல்லா கதவுகளும் திறந்துகிடக்கும் முற்றத்தில் மின்னலென அணைத்து விலகும் பொழுதில் அப்படியென்ன சாகசம் இருக்கிறது? லிஃப்ட்டின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு முத்தமிட்டுக்கொள்வதில் என்னதான் நிகழ்ந்துவிடும்? அன்பின் சிறிய நிமிடங்கள் நம்மை ஆட்கொள்கின்றன அவை நிகழ்கிறபோது அப்படியொன்றும் அவை அவ்வளவு சி…

  10. 2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! ------------------------------------------------------------------ அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக ...…

  11. ஈழத்திலிருந்து, காலத்துக்குகேற்ப அற்புதமான கவிதை. - திரு ராஜேஸ்வரன்.-

    • 2 replies
    • 1.2k views
  12. "அலைமுறியும் கடற்காற்றில்" நான் கவிதைகளை எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு முந்தைய தலைமுறையில் எழுதியவர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனை மட்டும் தான் முக்கியமானவராக கருதினேன், இன்றும் அப்படித் தான் . சேரன்,வ .ஐ. ச ஜெயபாலன் , ஊர்வசி, சிவரமணி எல்லாம் ஏதோவொரு புள்ளியில் வேறு விதமான அனுபவங்களைத் தருபவர்களாக இருந்தார்கள். நட்சத்திரன் செவ்விந்தியன் செவ்விந்தியனின் "வசந்தம் 91" தமிழில் வந்த முதல் தொகுப்புகளில் முக்கியமானதொன்று. அதன் மொழியமைப்பு மிகவும் சரளமான , நதியின் மேல் எறியும் கல்லைப் போன்று தாவிச் சென்று மறைவது. * ரமணன் அண்ணாவின் வீடு தான் எனக்கு ஏராளம் புத்தகங்களைக் காட்டித் தந்த வீடு . குறைந்தது ஆயிரம் புத்தகங்கள் ,ஆயிரமும் தேர்ந்தெ…

  13. கை தவறிக் கீழே விழுந்த கடலை எல்லாம் சாமிக்கு. துறட்டிக்கு எட்டாமல் தூரப்போன முற்றல் முருங்கைக் காயெல்லாம் கிளிகளுக்கு. கறவைகளுக்குச் சுருக்காமல் காம்பில் எக்கின பால் எல்லாம் கன்றுக்கு. திருவினை ஆகாத முயற்சித் திராட்சை எல்லாம் பந்தலுக்கு. எட்டுவது....கிட்டுவது எல்லாம் எனக்கு. முடியாதது....படியாதது முழுவதும்... உனக்கே உனக்கு. ******************************************************* தண்ணீர்த் தொட்டியில் செத்துக் கிடந்த காக்கைக் குஞ்சுகளுக்கு மனதார வருத்தப் பட்டாயிற்று. வாசலில் நிற்கும் வயசாளிக்கு ..... "ஒன்றுமில்லை" என்று அனுப்பிவிடலாம். இன்றைக்கு ..... என்னால் முடிந்தது இவ்வளவே. **********************************…

    • 0 replies
    • 14.2k views
  14. தேநீர் கவிதை: மழை மழை நனைதல் தவம். குழந்தைகளுடன் நனைதல் வரம். பகல் முழுதும் மழையுடன் விளையாடிக் களைத்த குழந்தை தூங்கிப் போனாள். மழையும் ஓய்ந்து தூங்கியது. அதன் பின் தொடங்கிற்று பிறிதொரு சிறுமழை - கிளைகளினூடே துளிகளாகவும் கனவு காணும் குழந்தையின் இதழ்களில் புன்னகையாகவும். இங்க செம மழ. ஜாலியா நனையிறோம் அங்க மழயா என்ற ஒரு குழந்தையின் …

    • 1 reply
    • 1.7k views
  15. நினைவுகள் வலியிருக்கும்-உன் நினைவுகள் என்னவோ.... அப்படியில்லை இதுதான்..... உண்மை காதலின் ...... அடையாளம்....!!! வாழ்க்கையில் .... எல்லாம் இழந்துவிட்டேன்..... உன் நினைவையும் இழந்தால்...... அனாதையாகி விடுவேன்...... ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்

  16. நாசமாக்கிய நாகரீகம் !!!!!! மண் வெட்டிய மண்வெட்டிகளும் இல்லை உழுது உண்ட கலைப்பைகளும் இல்லை வெட்டுமண் சுமந்த பின்னல் கூடைகளும் இல்லை குடிநீர் சேகரித்த குளங்களும் இல்லை கால்கிலோ தங்கத்தை கடுக்கானாய் சுமந்த காதுகளும் இல்லை கோபுரங்கள் கண்ட சிற்பங்களும் இல்லை விடியலில் ஒலிக்கும் பாகவதர் ராகங்களும் இல்லை குளங்களில் குளித்த கோமனங்களும் இல்லை வெத்திலை பாக்கு பரிசங்களும் இல்லை நல்லது கெட்டதை சொல்ல பெரியோர்களும் இல்லை தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டுகளும் இல்லை நியாங்கள் சொன்ன பஞ்சாயத்து அரச ஆலமரங்களும் இல்லை நல்லதையும் கெட்டதையும் கட்ட…

  17. தமிழக ........ இறவாத தலைவியே...... உம்மை எனக்கு பிடிக்கும்..... காரணம் நீங்கள் அம்மா.......!!! அரசியல் ................. எனக்கு தேவையில்லை...... அம்மாவாக நீங்கள் எனக்கு ....... தேவை .....................!!! அம்மா என்றால் உருகாத........ உயிரினம் உண்டோ............. அம்மாவுக்கா கண்ணீர் விடாத...... மனிதன் உண்டோ........? தமிழகத்தின் தலைவியாகி...... தமிழ் மக்களின் மனதில்....... தலைவியாகிய தாயே.........!!! உலகெங்கும் இருந்து கண்ணீர்...... விடும் தமிழ் உள்ளங்களில்...... என் கண்ணீரும் கலந்திருக்கும்....... அம்மா என்றால் கண்ணீர் விடாத...... உயிரினம் உண்டோ...........??? & கவிப்புயல் ,கவி நாட்டியரசர் இனியவன்

  18. தன்மானமே தமிழ் மானம் --------- ஏன் இந்த மாற்றம்........? யார் தூண்டிய மாற்றம்.....? மாற்றம் என்பது தேவையே..... வாழ்க்கையின் முன்னேற்றத்தை..... ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை...... வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை...... உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........? பூட்டன் காலத்தை நோக்கு........ படிப்பறிவு கிடையாது ........ பட்டறிவே பெரும் படிப்பு ....... பட்டறிவை வைத்தபடி.......... தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்...... அனுபவத்தால் வாழ்க்கையை...... அனுபவித்த அனுபவசாலிகள்.........!!! பாட்டன் காலத்தை நோக்கு...... படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்..... சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்....... படிகாத மேதைகள் என்று வாழ்ந்து....... கட்டிய அற…

  19. எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும், போராடுவோரின் நெற்றிச் சுழிப்புகளையும் இதுவரை கவிதையென்று மொழிபெயர்த்திருக்கிறேன்! ******* உயிர்ப்பின் முதல் நொடியை உணர முயல்கிறேன் மீண்டும் பொருளில் உணர்வு தோன்றிய கணம் ஓடுவரா முட்டையின் முதல் அசைவு வித்தின் மண்தேடும் ஆதி விழைவு நரைத்து ஒரு முடி உதிர்ந்த சமயம் உணர்ந்தேன் அது என் மறதியின் முதல் நொடி ****** மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில கிடக…

  20. ஊற்று - தேநீர் கவிதை சக்கையாகிப் போன ஒரு பழைய நினைவின் இடுக்கிலிருந்து உருண்டோடி வருகிறது * காடிருந்த நிலத்தின் வியர்வையாக வழிகிறது * புதையுண்ட தனிமையின் விதையொன்று மரமாகி உதிர்க்கும் முத்து முத்துப் பூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கிறது மூலம் காண முடியாத ஆழத் துயரில் ஊற்றெடுத்து தளும்பிக் கொண்டிருக்கிறது * கால வெறுமையின் ஊதுகுழல்களால் ஊதப்படும் சாம்பல் பூத்த கங்குகள் எரிவதில் பொங்கிப் …

    • 1 reply
    • 950 views
  21. மனிதன் காட்டுக்குள் ..... நுழையும் போது...! குரங்குகள் தாவும் ...! நரிகள் ஊளையிடும் ...! குருவிகள் ஓலமிடும் ..! இத்தனையும் அவை சந்தோசத்தால் .. பயத்தால் செய்யவில்லை.... மரங்களுக்கு அவை .... கொடுக்கும் -சமிஞ்சை... மனிதர்கள் வருகிறார்கள்... மரங்களே விழிப்பாக ..... இருங்கள் எச்சரிக்கின்றன ....!!! & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன்

  22. தியாகம்.. கார்த்திகை பூ எடுத்து வாடா.! கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் ஆணிவேரான ஆலமரங்களே..! வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... வீழ்ந்தாலும் விதையாக மாவீரன் மறைவதில்லை மாவீரம் அழிவதில்லை ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் இல்லை தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். கல்லறைக்கு வருக…

    • 0 replies
    • 2.1k views
  23. மீண்டும் உயிர் பெறும் மாவீரம் மீண்டும் உயிர் பெறும் மாவீரம் “”””””””””””””””,,,”””””””””””””””” உறங்கிக் கிடந்த உறவுகளே உங்கள் வீரம் ஓய்ந்து போகவில்லை உயிர்பெறத் துடிக்கின்றது “”” எங்கள் கண்மணிகள் கல்லறை எங்கும் பகைவன் பாதங்களின் சிதைவு கண்டு முட்புதர்கள் கூட மூடிக்கொண்டது ” கல்லறை எங்கோ ஓரமாய் விழியிளந்து விசும்பும் சத்தங்கள் உறவுகளின் உள்மனதை உரமூட்டியதோ,, வீரம் மெருகேறிய கைகளில் வீச்சருவாள், புனிதம் கொள்கின்றது மாவீரர் துயிலும் இல்லம் ” இன்று மிளிரும் மாவீரர் நாள் மிடுக்குடன் எழுந்து கொள்ளட்டும் ” கார்த்திகை 27 கண்மணிகளின் புனித நாள் ” மாற…

  24. தடமழிந்த நிலமிருந்து எழுகின்ற குரல் கேட்கிறதா, சாம்பல்மேடுகளில் படர்ந்த காற்றில் உறைந்து கிடக்கும் உயிர்ச்சூடு புரிகிறதா, துயர் துடைக்கும் கனவைச் சுமந்தவர்களின் நடையோசை எதிரொலிக்கிறதா, தோழர்களே.... கருகியழிந்த இனமொன்றின் பாடல்களல்லவா இவை, அன்றொருநாள் எம் நிலமெங்கும் ஓங்கியொலித்த விடுதலையின் குரல்களல்லவா, இதோ, வீழ்ந்துபட்ட நிலமிருந்து தமிழ்க்கிழவி அழைக்கிறாள் யாருமில்லையாம் குரல் செவிமடுக்க, ************************************* காலம் தன்னை நிசப்தமாக்கிக்கிடக்கிறது. மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.