கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
திலீபனின் நினைவுகளில்...... கவிதை.... இருபத்தொரு வருடங்கள் முன் பாரதத்திடம் நீதி வேண்டி எங்களின் இதமொன்று நல்லூர் கந்தனின் வீதியிலே அமர்கிறது... கத்தியின்றி ரத்தமின்றி ஈழக் கனவொன்றே மனதில் கொண்டு கையிலெடுத்த ஆயுதந்தான் அகிம்சை எனும் அழியா ஆயுதம்.... கனவுகளைச் சுமந்தபடி எங்கள் கண்கள் முன்னே வருகிறான் சாவை அவன் விளையாட்டாய் நினைக்கவில்லை அது வீரனுக்கும் அழகல்ல...... யுத்தம் தொடங்கிறது அவனின் உடற் பசிக்கும் அவன் கொண்ட விடுதலை உணர்வுக்கும்.... பாரதமும் பார்க்கிறது அவனை பாதியாய் கொன்றுவிட்டு... சில நாட்கள் சென்றிடவே அவனின் யுத்தத்தின் முடிவும் முன் நோக்கி வந்திடவே உணர்வ…
-
- 0 replies
- 586 views
-
-
காதலின் மறுபக்கம் பாழடைந்த காவலரணில் கைவிடப்பட்ட வெடிகுண்டாக காத்துக் கிடக்கிறது உன்னை குதறிக் கடித்;து உமிழ்ந்து துப்ப ஒரு கூட்டம் மன்மத பாணங்களை ஏவமுடியாமல் மனதுக்குள் பூட்டி மகிழ்ந்தவர்கள் இன்று உனக்கு கிடைத்த மண மாலையும் மலர்ப் பஞ்சணையும் கண்டு புழுங்கித் தவிக்கிறார்கள் சொல்லம்புகளால் வேள்வித்தீ செய்தவர்கள் இருந்தும் சவமாக உலவுகிறார் பூமியிலே பாவம் அவர்கள் பயித்தியக்காரர்கள் என்று அசதியாக இருந்து விடாதே கைக்கெட்டாப் பொருள் என்று தெரிந்து கொண்டதால் வெடிகுண்டையும் ஏவத் தயங்க மாட்டார்கள் கவனமாயிரு.
-
- 0 replies
- 926 views
-
-
சிரங்கள் சிதையினும் எமக்கென்ன -நாம் சிவனைத் தொழுது பயனடைவோம் உயிர்கள் தொலையினும் எமக்கென்ன -நாம் உமையைத் துதித்துப் பயனடைவோம் பிள்ளைகள் இறப்பினும் எமக்கென்ன -நாம் பிள்ளையாரைப் புகழ்ந்து பயனடைவோம் முறை கெட்டாலும் எமக்கென்ன -நாம் முருகனைப் பாடி பயனடைவோம் அநீதி நடந்தால் எமக்கென்ன -நாம் ஆண்டவனைப் போற்றி பயனடைவோம் ஈழமே எரியினும் எமக்கென்ன -நாம் ஈசனை வேண்டிப் பயனடைவோம் இனமே அழியினும் எமக்கென்ன -நாம் இறைவனை நினைந்து பயனடைவோம் http://gkanthan.wordpress.com/index/eelam/payan/
-
- 0 replies
- 744 views
-
-
தேநீர் கவிதை: அம்மாவின் கைராட்டை ஓவியம்: முத்து சிம்னி விளக்கொளியில் இரவும் பகலுமாய் அம்மா சுற்றிய கைராட்டை உறங்கவிடாமல் சுற்றிக் கொண்டேயிருக்கிறது என் கவிதைகளில். அறுந்து புனைந்த நூல்கண்டுகளில் முடிச்சு முடிச்சாய் அவிழ்த்தெறிய முடியாத அவள் ஞாபகங்கள். தனக்கு மட்டும் கேட்கும்படி அவள் பாடிக்கொண்டே நூற்றுக் கொண்டிருந்த பொழுதுகள், சோடி முடிந்த நாட்கள் எல்லாத் திசைகளில் இருந்தும் எதிரொலிக்கிறது எனக்குள். எவருக்கும் தெரியாமல் அவள் அழுத கண்ணீரின் …
-
- 0 replies
- 1k views
-
-
''புலியென எழுக தமிழா நீயும்......'' அழுகிறாய் ஏனடா நீ அடிமையா தமிழா...??? இன்னும் உனக்கென்ன இழப்பதற்கிருக்கு...??? இன்னும் எதற்காய் அமைதியாய் இருக்காய்....??? பொறுத்தது போதும் பொங்கியே எழடா. போர்களம் ஏறியே விடுதலை காணடா... அழுதது போதும் அழுகையை நிறுத்தடா அணியாய் வந்தெங்கள் அணியினில் இணையடா... இதுவரை இருந்தாய் அடிமையாய் நீயும் இனியும் எழுவாய் புலியென நீயும்....!!! - வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 814 views
-
-
இழந்து விட்டேன் என்கிறேன் இல்லை இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்கின்றது(நம்பிக்கை)...
-
- 0 replies
- 617 views
-
-
தன்மானமே தமிழ் மானம் --------- ஏன் இந்த மாற்றம்........? யார் தூண்டிய மாற்றம்.....? மாற்றம் என்பது தேவையே..... வாழ்க்கையின் முன்னேற்றத்தை..... ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை...... வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை...... உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........? பூட்டன் காலத்தை நோக்கு........ படிப்பறிவு கிடையாது ........ பட்டறிவே பெரும் படிப்பு ....... பட்டறிவை வைத்தபடி.......... தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்...... அனுபவத்தால் வாழ்க்கையை...... அனுபவித்த அனுபவசாலிகள்.........!!! பாட்டன் காலத்தை நோக்கு...... படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்..... சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்....... படிகாத மேதைகள் என்று வாழ்ந்து....... கட்டிய அற…
-
- 0 replies
- 785 views
-
-
முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி கவிஞர் இன்குலாப் நினைவுப் படலத்தில் குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த கொடிய நாட்கள் அவை வானம் மறுக்கப்பட்ட பறவைகளை நான்கு திசைகளிலிருந்தும் நச்சு அம்புகள் துரத்திய நாட்கள் கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து அடைகாக்கப்பட்ட முட்டைகள் உடைந்து சிதற, மண்ணெல்லாம் உதிரக்கொடி படர்ந்த நாட்கள் பறவைகளின் நெஞ்சப்படபடப்பில் காற்றும் நெளிந்து கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள் வேடுவனின் இறையாண்மையில் குறுக்கிடமுடியாதென்று நாக்கைச் சப்புக்கொட்டி பறவைகளின் பச்சைக் கறிவிற்கக் கடைதிறந்த சந்தை வணிகர்களின் பங்கு நாட்கள். கிளிகளுக்கு இரங்குவதாய் அழுத பூனையொன்று ஒரு சிட்டு…
-
- 0 replies
- 731 views
-
-
'காதலுக்குப் போராடுகிறேன்' "தாலி கட்டி பொட்டு இட்டு தாரம் என்று ஊருக்கு கூறி தானும் தன் சுகத்திற்கு மட்டும் தாகம் தீரத் உடல் தீண்டுகிறான்!" "காதல் இல்லை கனிவும் இல்லை காத்தரமான ஒரு வாழ்வும் இல்லை காலம் முழுதும் நான் பணிசெய்து காமம் தணிக்கும் உடல் மட்டுமே!" "அன்பு வேண்டி உள்ளம் போராடுகிறது அணைப்புத் தேடி உடல் போராடுகிறது அயர்ந்து தூங்க கண் போராடுகிறது அலுப்புத் தட்டி உயிர் போராடுகிறது!" "குடும்ப கண்ணியத்தை மனதில் நிறுத்தி குழந்தை குட்டிகளை கவனத்தில் எடுத்து குதூகலம் மறந்து மௌனமாய் சஞ்சரித்து குற்றுயிராய் இன்று …
-
- 0 replies
- 642 views
-
-
கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்த எனது “கறுப்பு வெள்ளி” என்ற கவிதையை, யாழ் களத் தோழர்களுடன் தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கணையாழி ஆசிரியர் குழுவுக்கும், யாழ் களத் தோழர்களுக்கும் நன்றி! கறுப்பு வெள்ளி அந்தப் புதன்கிழமை என் நண்பனின் யாதுமாகிய காதலிக்குத் திருமணம். முகூர்த்த நேரத்தில் மலைக்கோட்டை மீதேறி அந்தத் திருமண மண்டபத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடன் பேசிய அலைபேசியை ஒரு பாறையில் மோதிச் சிதறிடச் செய்தான். இறங்கி வருகையில் ஒவ்வொரு படியிலும் நின்று சங்கல்பம் எடுப்பதுபோல் எதையோ முணுமுணுத்தான். திரும்பி வருகையில் திருச்சி சாரதாஸில் அம்மாவுக்கு நூல்ப…
-
- 0 replies
- 1k views
-
-
அதிகாலை எழுந்து ....அம்மணமான உடையுடன் ....அம்மாவின் கையை பிடித்தபடி .....வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,,எல்லாம் சுற்றி திரிந்து ....அக்கா அண்ணா பள்ளி செல்லும் ....போது நானும் போகணும்....என்று கத்தியழுத அந்த காலம் ....வாழ்வின் "தங்க காலம் "......!!!பச்சைஅரிசிசோறு வேகும்போது ....அவிந்தது பாதி அவியாதது பாதி ....கஞ்சிக்கு கத்தும் போது ....பொறடாவாரேன் என்று சின்ன ....அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர ....பாதி வாய்க்குள்ளும் மீதி ...வயிற்றில் ஊற்றியும் குடித்த ....அந்த காலம் ....வாழ்வின் "பொற்காலம் "......!!!பாடசாலையில் சேர்ந்தபோது .....புத்தகத்தையும் என்னையும் ...தூக்கிகொண்டு சென்ற அம்மா ....சேலையின் தலைப்பை என் தலை ....மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ...வேக வேக வீட்டுக்கு வந்து .…
-
- 0 replies
- 837 views
-
-
-
சிங்களத்தில் பிரபலமான எனது கவிதை. . வசந்தகாலம் 1971 . இலங்கைத் தீவில் 1971 ஏப்பிரல் 5ல் ஆரம்பித்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஜூன் மாதம் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களின் படுகொலையுடன் முடித்து வைக்கப்பட்டது. 1971 ஏப்பிரல் கிளற்ச்சியின்பின்னர். ”தமிழ் இளைஞர்கள் அமைதியானவர்கள். சிங்கள இளைஞர்கள் பயங்கர வாதிகள்” என சிங்கள அதிகாரிகள் பலர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். . சிங்கள இளைஞர்கள் சிங்கள மக்களின் பங்குபற்றுதலோ தமிழ் முஸ்லிம் மலையக (தமிழ் பேசும்) மக்கள் பற்றிய அக்கறை இல்லாமலும் ”சிங்கள சமூக நீதி” அடிப்படையில் இக்1970ல் ஜெவிபி (Janatha Vimukthi Peramuna ) கிளற்சித் தலைவர் ரோகண விஜயவீர இதயநோய் சம்பந்தமாக வைத்திய…
-
- 0 replies
- 1.4k views
-
-
சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகின்றாள் நித்திரை விட்டு விரைவினில் எழுந்திடுவோம்... மருத்துநீர் தலை தடவி வெந்நீரில் குளித்திடுவோம் நெற்றியில் நீறணிந்து நெறிப்படி வணங்கிடுவோம் பெரியோர் தாள் பணிந்து கையுறை பெற்றிடுவோம்... எப்போதும் போலவே அந்த நினைவுகள் வந்தெம் மனத்திரைஊசலாடுகின்றன... முகமில்லா உருவங்களுக்கும் நிசப்தமான வார்த்தைகளுக்கும் உரிமை கொண்டாடியபடி நீண்டு கொண்டிருக்கிறது எம் இரவுகள்... நாய்களின் குரைப்பொலிகள் ஊமத்தங் கூவைகளின் உறுமல் ஓசைகள் ஊரடங்கு இராத்திரிகளின் சுதந்திர ராகங்களாக... பதற்றமின்றி பட்டாசு வெடிக்க ஈர்க்குவானம் விட்டு இராத்திரிகள் களிக்க மாக்கோல…
-
- 0 replies
- 644 views
-
-
சிவனே.! கண் திறவாய்.!! - கவிஞர் நகுலேசன். குருந்த மலை ஆதி சிவனும் காணமல் போனார்.. தேடிப்போனவர் நமச்சிவாய சிவநாமம் உச்சரிக்கவும் தடையென்றானது… வாழும் வழிபாட்டு மரபுரிமையை நாளும் தின்னும் காட்டாட்சி சாது சாது என்றபடி சகல இடமும் விரிவாகும்.. சிவன் பெயரால் சீவியம் நடத்தும் சீவன்களும் சாமரம் வீச இன்று.. தையிட்டியில் இராணுவ புத்தரின் அதிகார அத்திவார தோண்டுதல் நடக்கும்.. கண் மூடியிருந்தால் சிவபூமியாவும் காணாமல் போகும் சிவனே.! கண் திறவாய்.!! சிவனடியர்களே ! விழித்தெழுவீர் !! https://vanakkamlondon.com/literature/2021/01/100588/
-
- 0 replies
- 516 views
-
-
தமிழ் வலைப்பூக்கள் இன்று தாரலமாக இருக்கிறது.ஒரு அறிக்கை சொல்லுகிர விதமாக இன்றில்லிருந்து கடந்த 4 மாதகாலமாகா 94% வலை பதிவுகள் புதிபிக்க படவில்லை என்பதாக. கோட்டிக்கணக்காக கொட்டி இருக்கு வலைப்பதிகளில், தமிழின் பங்கு குறைந்தது அல்ல. அதற்கு காரணம், தமிழர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வம்.எழுதனும் என்னும் ஆர்வம். ஆரம்பத்தில் கவிதைகளை மட்டும் கண்டிருந்த தமிழ் வலைகள், இன்று அதன் வளர்சி மூச்சடக்க வைக்கிறது. முன்பு தேம்கள் (blogger Temple)கொடுக்கப்பட்டது, அதற்குள் அழகிய எண்ணங்களை படங்களோடும், அனிமேசனோடும் கொடுத்து சுவைக்கை வத்தார்கள். இன்று? வலைப்பூவுக்கும் ஒரு இணையதளத்துக்குமான வித்தியாசத்தை இனம் காண்பது இலகுவாக இல்லை. ஆம் உதாரனத்துக்கு இலவச வலை டெம்பில்கள் (blogger Temple)இருப்பதா…
-
- 0 replies
- 1.5k views
-
-
அந்த ஆண்டவனும் ஊனம் தான் வழமையானது என் பிராத்தனைகளை அவன் கேட்பதை, நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், காது கேளாதவன். என் கேள்விகளுகெல்லாம் அவன் அமைதியாய் சொல்லும் பதில்களை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன். என் செயல்களில் உள்ள நல்ல வற்றை அவன் பார்ப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், பார்வை அற்றவன். என் பிரச்சனைகளை தீர்த்துவெய்க்க ஒவ்வொறு முறையும் அவன் கைகொடுப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன். என் தனிமையான பயணங்களில் என் தோழனாய் என்னுடன் அவன் நடப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன். நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊனமாகி விடுகிறான்!!! நம் ஊனமுற்ற நண்பர்களின் கெதி? ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!…
-
- 0 replies
- 643 views
-
-
This day, previous year, More than quarter a million innocent lives Butchered by the brutal force of Chemical bombs, Cluster bombs And the most cruel ammunition Barred by the U.N. Blood-thirsty barbarians Destroyed tiny babies, innocent children And helpless ladies; Genocide carried in broad daylight When the U.N. stood as a passive spectator! No big powers dare open their mouths! No peace-brokers wished to mediate! The biggest democracy, U.S. Failed to condemn the genocide The Land of Lincoln Swerved from protecting The rights of minority! The country of George Washington Decli…
-
- 0 replies
- 679 views
-
-
தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் மாவீரர் ஈழத்துக்காக மாவீரர் தம் உயிர் தந்தார் மாவீரர் தமிழீழம் வாழ தம் இனம் வாழ பினமாகினர் அவர் நினைவு அது நம் இன நிமிர்வு களம் கண்ட அவர் சிரம் சாயவில்லை அவர் உடல் மட்டும் மண்ணுக்கு தமிழீழ உரமானது அவர் தந்த கொடி இது அவர் உயிர் தந்து பறந்த கொடி இது தமிழ் மானம் காத்த கொடி அவர் நினைவு உரமாக்கி புலிக்கொடி நாட்டி தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2014/11/tamileelam.html
-
- 0 replies
- 3.3k views
-
-
குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில் கனவுகளை எழுதுகிறது சாம்பல் பறவையொன்று, இனிவரும், வசந்தகாலத்தின் இலைகள் பறவையின் கனவுகளை மொழிபெயர்க்கவும், இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும், அந்தக் கணங்களில், அந்தப் பறவையும் மரமும் என்ன பேசிக்கொள்ளும்...... கனவுகளை வைத்திருந்து கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ.. கிளையின் துயர் மீது கண்ணீர் சிந்திக் கழுவிப் போகுமோ.. கூடுமுடைந்து அங்கேயே தங்கிவிட துணியுமோ.. சாம்பல் பறவையின் கண்களில் இருந்து பெருவெளியில் கலந்தது அரூபமொன்று, கிளைகளில் இருந்து வழியத்தொடங்கிய காலத்தின் துயர் பறவையின் கனவுகளை மூடிப் பெருகத்தொடங்கியது. யாருக்குத் தெரியும் இனிவரும் வசந்தகாலத்தில் …
-
- 0 replies
- 624 views
-
-
தியாகத்தின் திரு விளக்குகளே தமிழீழத்தின் குல விளக்குகளே நியாய தேவைதையின் நீதியரசர்களே நீர் எமக்காய் மரணித்த முத்துக்களே தாயின் கை விலங் குடைக்கத் தானைத் தலைவ னொடிணைந்தவரே வாழும் வரை நாமுமை நினைந்து உம் கனவு பலித்திட கருமம் செய்வோம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
-
- 0 replies
- 557 views
-
-
சிறுவர்கள் பீரங்கிகளை முறிப்பார்கள் தீபச்செல்வன் சிறுவர்களுக்காக பீரங்கிகளும் துப்பாக்கிகளும் விமானங்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன துப்பாக்கிகள் என்ன செய்யப்போகின்றன? ஒன்றில் அவை சோர்வடைந்து சரிந்து போகும் அல்லது கூர்மையடைந்து முகங்களைக் கிழிக்கும் நீதான் புரட்சியை ஆயுதமாக்குபடி நிர்பந்திக்கறாய் எதிர்ப்பை கிளப்பும் களத்தை திறக்கிறாய் புரட்சியையும் எதிர்ப்பையும் கொல்ல முடியாது சனங்களை அடக்கும்பொழுது புரட்சி குருதியில் பெருக்கெடுக்கிறது வாழ்வின் பாடலை நாம் பாடிக் கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு அந்நியப்படைகளே! எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்? வாழ்வை மூடியிருக்கும் உங்கள் அதிகார நிழலை எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்? முதியவர்கள் …
-
- 0 replies
- 641 views
-
-
நான் நல்ல நடிகன் நான் ஒரு நடிகன் அம்மாவுக்கு நல்ல மகன் ஆசானுக்கு வல்ல சீடன் பள்ளியில் நல்ல ஆசான் ஊருக்கு பேர்பெற்ற சமூகத் தொண்டன் மாமாவுக்கு நல்ல மருமகன் மனைவிக்கு ஏற்ற கணவன் என் குழந்தைக்கு செல்ல அப்பா பாட்டிக்கு அன்புப் பேரன் உற்ற தோழன் அவனுக்கு நல்ல நண்பன் தங்கைக்கு ஒரு அண்ணன் அண்ணாக்கு நான் தம்பி நான் நல்ல நடிகன்
-
- 0 replies
- 673 views
-
-
எழுந்து வா..... எவர் வந்தால் எமெக்கென்ன எழுந்தோடி வா தமிழா எம் மண்ணை மீட்போம்.... அஞ்சாத தமிழினமே அஞ்சி நிற்பதுவோ....?? அறபோரில் நாம் வெல்ல அணிதிரளாயோ....??? அடிமை தான் வாழ்வென்று அடிமைக்குள் அடிமையாய் ஆண்டாண்டாய் கிடப்பதுவோ....??? அட தமிழா வெட்கமில்லையா எழுந்துவா.... மாற்றான் காலடியில் மறத்தழிழன் கிடப்பதுவோ...??? மானம் உண்டென்றால் மறத்தமிழா எழுந்து வா.... கூன் விழுந்தா வயதென்ன குமரா நீயென்ன யாராய் இருந்தாலென்ன நம் ஈழம் நாம் காண்போம் நம்பியே எழுந்து வா.... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 763 views
-
-
பள்ளி நினைவுகள் தோழிலே பையுடன் தோழர்கள் புடைசூழ பள்ளி சென்ற பருவ நாட்கள் சிந்தையில் விரிகையில்-இதயத்தில் சின்னதாய் ஒரு நெருடல் நிலவு அல்ல-பள்ளி நினைவுகள் தேய்வதற்கு நித்தமும் விழி எதிரே நிஜங்களாய் மலர்பவை பருவமழை அல்ல-பள்ளி நினைவுகள் வந்துபோக பசுமையாய் பதிந்து பாதத் தடங்களாய் தொடர்பவை காலச்சக்கரம் விரிகையில்-வசந்த காலத்தின் சுவடுகளாய் பதிந்து காற்றினும் பரந்து விரிந்து காவியமாய் நெஞ்சிலே ஒளிர்பவை நேற்றைய நட்புகளே - பள்ளி நாட்களின் உறவுகளே இதயச்சுவர்களில் உங்களின் இனிய நினைவுகள் அழியாத புத்தகமாய் ஆண்டாண்டு வாழும்
-
- 0 replies
- 930 views
-