Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நீர்ப்பறவையின் கேலிக் கோடு - அஞ்சலிக் கவிதை! தீபச்செல்வன் மீன்களை தரையில் எறிவதைப்போல தொலைதூரம் வீசியெறிந்து உன்னையும் நாம்தான் கொன்றோம் புலத்தில் தந்தையர் நிலத்தில் குழந்தையர் வழிகளில் ஆழ்கடலில் கவிழ்ந்த படகுகளும் காடுகளில் கைவிடப்பட்ட பயணப்பைகளும் கீவ் நகரை கடந்தவனைக் காணாது ஊசியிலை காடுகளும் துடித்தன போலாந்து எல்லையில் வாடிக் கிடந்தது ஒரு சோலிமலர் துயரப்பிக் கிடக்கின்றன உன் கேலியின் கோடுகள் கூடுகள் பறிபோயிருக்கலாம் இரையற்று பசியில் மரிக்கலாம் எல்லாப் ப…

  2. Started by nochchi,

    அகதி கனத்த இதயத்தை கையில் பிடித்து மூச்சு முறிய முண்டியடித்து இழப்புகளுக்குள் இறுகி முன்னுக்கு நிற்கும் முந்நூறு பேரையும் முந்தியதாக நீண்டு நிற்கின்றன கைகள்……… துடிப்பின் துருவங்களுக்கு சென்றிருக்கும் எம் தேசத்தில் பூஜ்ஜியப் பெறுமானம் எனச்சொல்லப்படும் உயிருக்கு உணவையும் ஒலி வரட்சியடைந்து ஒய்ந்து போயிருக்கும் தொண்டைக்கு பருக தண்ணீரையும் பன்னீராய் நாடி…… நீட்டப்பட்ட கைகள் சாமானிய நிலையடையும் அன்றாவது சமாதானம் சாத்தியப்படுமா? அகதி வாழ்கை முற்றுப் பெறுமா? எம்.எஸ்.எம்.சறூக் சம்மாந்துறை. நன்றி - லங்காசிறி இணையம்

    • 0 replies
    • 700 views
  3. ஆழிப்பேரலையே – எங்கள் ஆன்மாக்களை புரட்டிப்போட்ட சுனாமியே ஆசியாவையே அழித்தொழித்து அகிலத்தையே அதிரவைத்த ஊளித்தாண்டவமே ஆண்டுகள் ஆயிரமானாலும் ஆறுதல் கோடிகள் சொன்னாலும் அடங்குமோ எங்கள் மனத்துயர்? அணையுமோ எங்கள் துயர் நெருப்பு? நினைவுகளை அழிக்கமுடியாமல் நித்தமும் கலங்கி நிற்கிறோமே…. மரங்களை அடுக்குவது போல் பிணங்களை அடுக்கிவைத்த காட்சிகள் மனக்கண்களில் விரிகிறதே – உடல் அணுக்கள் அனைத்தையும் உலுப்புகிறதே இறுதிக்கடன் செய்வதற்குகூட இனசனத்தை விட்டுவைக்காமல் குடும்பத்தோடும் குடியிருப்புக்களோடும் கூடிவாழ்ந்த ஊரோடும் உற்றார் உறவினரோடும் கொத்தொடும் குலையோடும் மொத்தமாகக்கொன்றொழித்த உன் கொடுமைதனை கோரத்தாண்டவத்தை எண்ணுகையில் உள்ளம் வெடித்த…

  4. Started by vanni mainthan,

    வாடா....வா... பெரியவரா பெரியவரா பெரகரா - நீங்க பெரிய அடி வேண்ட வேணும் பெரகரா.... ஓடி வந்து ஆட்சியில ஏற வாங்க ஓலமது கண்டு நீங்க ஓடணுங்க.......... எம் தமிழில் பாதியரை கொன்றவரே ஏறி குந்தி ஆட்சியிலே ஓட வாங்க.... நாட்டை விட்டு வேறு நாடு ஓடினாயோ....?? உன் உடலை நரியும் களுகும் கொத்த வேணும் ஓடி..வாடா.......... பண்டை கால புலி என்றா நீ நினைத்தாய்....??? அட உனக்கு பாடை கட்ட வேணுமின்று ஓடி வா.... அடுக்கடுக்காய் நெஞ்சுக்குள்ளே அடுக்கி வைத்தோம்- உன்னால் அழிந்தவரின் சோகங்களை தேக்கி வைத்தோம்..... இறக்கி வைக்க முடியாமால் தவித்து நின்றோம் இப்போ உன்னை இறக்க வைத்து நாங்களதை தணித்து வைப்போ…

  5. அழிவின் உச்சத்தில் வன்னிமண்.... கவிதை.... அழிவின் உச்சத்தில்; இன்று நம் அழகான வன்னிமண் ஆனந்தத்தின் உச்சியிலோ நமை அழிக்கும் தென்னிலங்கை..... ஆறாய் ஓடிடுதே; நம் அரும்புகளின் இரத்தங்கள்.... அதைக் கண்டு ரசித்திடுவான் அதிகாரச் சிங்களவன்.... உயிர்காக்க ஓடும் வழி உயிர்களின் மரணப் பாதையாகி நம் மழலையெல்லாம் வீதிகளில் மண்ணாகிக் கிடக்கிறதே.... இக்கொடுமை பார்க்காமல் ஒருகணம் கண்மூடி திறப்பதற்குள் அடுத்தகுண்டு எடுத்திடுமே மழலைகளின் தாயின் உயிர்.... ஐயையோ பரிதாபம் இதைக் கேட்டாலே நம் உயிர்போகும்..... அதைக் காணொளியில் கண்டதுமே நம் கண்களிலே நீர்த்தேக்கம்.... நம் வன்னியிலே இன்று ஜனனத்துக்கு விடுமுறையா…

  6. மண்குளிரச் செய்த முகில்கள் – கவிஞர் புதுவை இரத்தினதுரை மாரிமழை யாகி நீர்தெளித்து ஆடி மண்குளிரச் செய்த முகில்கள். மாதவங்கள் செய்த போதெமது பூமி மடியிலுரு வான உயிர்கள். போரில்விளை யாடும் வேளையுடல் வீழ்ந்த போதுமுயி ரான சிலைகள். பூங்குயில்கள் பாடும் ஈழமதை வாங்கப் போயெரிந்து போன புலிகள். மாலைமணி ஆறு ஆகும்பொழு தாக மாரிமழை கொஞ்சம் ஓயும். மாலைமலர் சாத்தித் தீபஒளி காட்டும் வேளைவிழி ஆறு பாயும். சாலை, கடை யோடு, வீடுஎன யாவும் சாமிதுயி லில்லம் கூடும். சாதிமத மென்று வேறுபட லின்றித் தேவநிலை கொண்டு பாடும். வாரியெடுத் தும்மை வாசல்தனில் வைத்து வாசமலர் தூவும் பொழுதில் வந்தெமது கண்ணில் நின்றுதெரி கின்ற வாறுவர வேண்டும் அருகில். தேரிலெழுந…

  7. முஸ்லிம் நண்பா!உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!முடியவில்லை என்னால்;காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான் உடும்பனில்அவற்றை நீ வெட்டிவிட்டாயே!நீ மறந்திருப்பாய்.என்னால் மறக்கமுடியவில்லை.காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!நினைவிருக்கிறதா உனக்கு..நீ மறந்திருப்பாய்.நீ கொலைவெறியோடு விரட்டும் போது;ஒரு கையில் குழந்தையும்இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம் வீரமுனை, திராய்க்கேணியில்.நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள்உனக்காய் அழமாட்டமா?ஆனால்;மன்னித்துவிடு சகோதரா...இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!நீ சிங்கள இனதாண்டவத்தில் தான் தத்தழிக்கிறாய்நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!நாளை…

    • 0 replies
    • 1.1k views
  8. உத்தரிக்கும் இரவு அசமந்தமாக நகரும் சரக்கு ரயிலாக எரிச்சலுாட்டியபடி நீளுகின்றது இரவு. கடைசிக் கையிருப்பும் முடிந்து போன அந்தரிப்பில் முட மறுதலிக்கின்றன உறக்கமற்ற விழிகள். தீர்ந்து போன சக்கரை டப்பாவைச் சுரண்டுவது போல மீதமிருக்கும் கனவுகளை பிறாண்டுகிறது தவித்துப் போன மனது. இன்னமும் மக்கிப் போகாத இறந்த காலத்தின் நினைவுப் புழுக்கள் நெளிந்து நெளிந்து மூளையை தின்னுகின்றன. அப்போதுதான் வீதியோரத்தில் அயரத் தொடங்கிய இராப் பிச்சைக்காரனை அப்புறப்படுத்தும் - மாடி வீட்டுக் காவலாளியின் தீவிரத்துடன் கண்களில் குத்துகிறது காலைச் சூரியன். ஓ.... ஒரு இரவைக் கடப்பதற்குள் ஒரு மாமாங்கத்தின் உத்தரிப்பு. 2.ஒரு தேவதையின் கனவு. எண்ண இழ…

    • 0 replies
    • 506 views
  9. ஒளிதந்த அந்தப்பேரிரவு (பாகம்1) எப்படியோ இருபத்தாறுவருடங்கள் ஓடிமறைந்து விட்டன.இந்த இருபத்தாறுவருடங் களில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்..தோல்விகள்...பெருவெ ற்றிகள்.. திருப்பங்கள்..அழிவுகள்...!ஆனாலும் அன்றைய்பொழுதின் அதிர்வுகள் இன்னமும் நெஞ்சின்ஓரங்களில்...!எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் இன்று எல்லோர்மனங்களினுள்ளும் பிசைந்தாலும் அந்த 23யூலை 1983 ன் நாளில் எதிரிக்கு ராணுவரீதியாக சொன்ன பெரும்செய்தியும் அதைவிட அரசியல்ரீதியாக எம் தாயகமக்களை எழுச்சிபெற செய்ததும் என்றும் நெஞ்சிருத்தி நினைலுகொள்ளத்தக்கது.பார்ப்ப

  10. விடுத்திடுக வீண் கவலை விழித்தெழுக புலத்தமிழா நிலத்தமிழன் அங்கு நிட்டூர பகைவனுடன் கலக்கம் சிறிதுமின்றி களமாடி வருகின்றான் வலக்கரமாய் நின்றவற்கு வலுவூட்டும் பொறுப்பில்லுள்ள புலத்தமிழர் நாம் புலம்பிச் சுருண்டிடவோ? ஈன தமிழர்களாய் இன்னமும் வாழாமல் மான தமிழர்களாய் மார் தட்டி எழுந்திடுவோம்! ஓயார்,உண்ணார்,உறங்கார் பகலிரவாய்ப் பேயாய் அலைவார்! பிணி நடுவும் களமாடி மடிந்தார் இருபத்தையாயிரம் மாவீரர்! விடுமோ, இத்தியாகம் வீழ்ந்திடநம் விடுதலைபோர்? ஒரு பாவம் அறியா ஒருலட்சம் தமிழ் மக்கள் மரணித்து காத்த அறம் மண்கவ்வ நேர்ந்திடுமோ? பரம்பரை தமிழர்மண் பறிபோகாமற் காக்கும் பெரும் தர்ம போராட்டம் பெற்றிடுமோ தோல்விதனை? மற்றவரின் மண்ணை வன்பறிப்புச் செய…

  11. தேநீர் கவிதை: ஓவியங்கள்! பிசிறின்றி நேர்த்தியாய் வரையப்பட்ட ஓவியங்கள், அழகான சட்டமிடப்பட்டு கண்காட்சிக்கென எடுத்து வைக்கப்பட, ஓவியக் கூடத்தில் வரையும்போது கீழே சிந்தப்பட்ட வண்ணப் பிசிறுகள் பார்வையை ஈர்க்கின்றன... சட்டமிடப்பட்ட ஓவியங்களை விடவும் கூடுதல் அழகோடு. ***** வரைந்து முடித்த ஓவியத்தில் ஏதோவொன்று குறைவதான நிறைவின்மையில் ஆழ்ந்திருந்தான் ஓவியன். உள்ளே ஓடி வந்த …

  12. புதை குழிகளுக்குள் அவர்கள் அண்ணாந்து பார்க்க உறவுகள் அவர்களை தலை கவிழ்ந்து பார்க்க கண்ணுக்கு புலப்படாத உருவங்கள் உணர்வுகளில் முழுமையாக நிரம்பியிருக தேற்றுவராரற்ற கணங்களில் நாங்கள் இருக்கின்றோம்…. நாடு இருக்கின்றது…… மீழுவோம் ஒரு நாள் ஆழுவோம் ஒருநாள்… நம்பி உயிர்கொடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கு தவறும் போதெல்லாம் மனசாட்சி உள்ளவர்களுக்கு துரோகம் முக மூடியை கிழித்து எட்டிப்பார்க்கின்றது அதற்கும் அப்பால்.. நினைக்க நினைவு கூர நேரமில்லை.. நேரமிருந்தாலும் ஒன்றுபட முடியவில்லை மிஞ்சியது எதுவும் இல்லை ஆகவே உங்களை தோண்டி எடுத்து எதாவது தேறுமா என்றும் பாரக்கின்றார்கள்… உங்கள் தியாகமே எம்மினத்த…

  13. உன் மகன் தமிழீழ விடுதலைப் புலி வீரன்….. பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால் பார்வதியானாளா..? ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை அழித்தெழுதிய ஆற்றல் வீரன் பிரபாகரனைப் பெற்றதால் பார்போற்ற நின்றாளா..? வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா தியாகத்தை எழுதிய புலிகள் பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால் புகழ்பெற நின்றாளா… ? அன்று.. தாயிறந்த செய்தி கேட்டு துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே துடிதுடித்து ஓடிவந்தார் தாய் படுத்த சுடலைக்கு.. நீ பெற்ற பிள்ளை.. மானமுள்ள தமிழனுக்கெல்லாம் நீயே தாயென்று போற்றி.. இன்று உன் பிள்ளைகள் உலக முழுதும் உன் சவக்கட்டில் ஏந்தி ஊர்வலமாய் போகக் கண்டான் போய் வா தாயே.. தன்மானம் குலையா தலைமகன் வேலுப்பிள்ள…

  14. கடல் வெள்ளம் போல் புகுந்து கனவுகளை வளர்த்தவளே காந்தப் பார்வையாலே கண்களுக்குள் இனித்தவளே தவறு நான் செய்யவில்லை தண்டனை நீ தருகின்றாய் சிறைக்குள் நான் துடிதுடிக்க சிரித்து நீ போகின்றாய் ஊமைக் குயிலடி நான் உள்ளுக்குள் அழுகின்றேன் ஓரிரு வார்த்தைளோ மெல்ல மெல்ல கொல்லுதடி என் உதிரத்தால் எழுதி வைக்கும் உண்மையடி பெண்ணே நீ போகுமிடமெங்கும் பாதி உயிரோடும் என் பயணம் தொடரும் புத்தகப் பையுக்குள்ளே பாவத்தை சுமப்பவளே இறந்து நான் போன பின்னே என் இதயத்தை அறுத்துப்பார் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் உன் பெயர் அப்போதாவது நீ என்னைக் காதலி...

    • 0 replies
    • 651 views
  15. எங்கிருந்தோ ஒரு பட்சி வந்து சொன்னது மங்குவது போலிருக்கும் யாவும் மங்குவது கிடையாதென்று! எத்திசையும் எக்காளச் சிரிப்பு... சுற்றி வரப் பகைவனின் இருப்பு... வீழ்ந்துவிட்டோம் என்று இவர் நினைப்பு விழ விழ எழுந்த கதை பல இருக்கு! அப்போது தெளியும் மகிந்தனின் கிறுக்கு! கால காலமாய் நாமிருந்த மண் வேழம் போல் பொருதும் வீரம் நிறைந்த மண் நாணல் போல் விழுவதும் நேரம் பார்த்து எழுவதும் கூனல் வீரம் கொண்ட பகைவனுக்குப் புரியாது! புரியும் போது அவனுடலில் உயிர் தரியாது! அப்பாவிகள் பலர் இப்ப ஆவிகள்! புலி வேட்டையென்ற பெயரில் ஹெலியில் கூட வந்து குண்டு போடுகின்றீர் ஹெகலிய ரம்புக்வல்லவிற்கு தீனி போடுகின்றீர்! …

  16. இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே! வாழ்த்துக்கள். இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே! மேகங்களிடம் ‘முத்தங்களும்’ காற்றிடம் ‘மலர்ச்செண்டும்’ அனுப்பியுள்ளோம். பெற்றுக்கொள். ‘இதரைவாழைக்கன்றுகள்’ இரண்டை இனிவரும் கடலலைகளிடம் கொடுத்து விடுகின்றோம். கொடிமரத்துக்கருகில் பாத்தி கட்டி நாட்டிவிடு. அடிபெருகி எங்கள் அன்புக்குக் குலைதள்ளட்டும். நேற்றுவரை தென்னாபிரிக்கா என்றே உன்னை அழைத்தோம். இன்று ‘என் ஆபிரிக்கா’ என்றே இங்கே ஒவ்வொருவரும் உச்சரித்துக் கொள்கின்றோம். ‘வாஸ்கொடாமா’வுக்கு மட்டும்தான் நீ ‘நம்பிக்கைமுனை’யாக இருக்கவில்லை போராடும் எங்களுக்கும் அப்படித்தான் புலப்படுகின்றாய் நெல்சன் மண்டேலா! கறுப்புச் சிங்கமே! கையை நீட்டு. குலுக்கிக் கொள்ளுவோம். உன்னைக் கட்டித்தழு…

    • 0 replies
    • 830 views
  17. எனக்கொரு தேசம் எடுத்திட வேண்டும். முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதூகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் காத்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் த…

    • 0 replies
    • 716 views
  18. ஏ மிலேச்ச நாடே! எத்தனை கொடுமைகள் செய்து விட்டாய் எங்கள் தமிழினத்திற்கு.... எத்தனையோ வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்த்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்று மிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் கலைந்த கூந்தலோடும் வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்... கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்! குறள்நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள் அறம் பாடுகிறேன்! தாயே என்றழைத்த வாயால் பேயே என்றழைக்க வைத்து விட்டாய்! இனி நீ வேறு, நான் வேறு! ஏ மிலேச்ச நாடே! ஆ…

    • 0 replies
    • 858 views
  19. புலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை கவிதை: வெய்யில், ஓவியங்கள்: செந்தில் 1 நிலமிழந்த சிறுவர்கள் மிச்சமிருக்கும் ஒரு பனங்கிழங்கை சூரியனின்மீது வைத்துச் சுடுகிறார்கள் சனமிழந்த காகத்துக்கும் நாய்க்கும் இரு துண்டுகளை ஈயும் அவர்களை கடலின் கண்கள் வெறித்துப் பார்க்கின்றன ஈழத்துக்கும் தனுஷ்கோடிக்கும் மாறிமாறி நீந்தும் ஆமைக்கு அந்த ஒரு சேதி இன்னும் சொல்லப்படவில்லை. 2 முப்பது வயதிருக்கும். பிள்ளைகளை உறக்கத்தில் ஆழவிட்டு புலியேறிப் போனாள். காட்டில் நிறைய்ய நிறைய்ய மூங்கில்கள் வளர்ந்தன பூத்தன எரிந்தன வளர்ந்தன எரிந்தன பூத்தன. தள்ளாடி வருகின்றன கால்கள் திரும்பி காற்றை நரைகூந்தல் நடமிடுகிறது கிழட்டுப்புலிகள் அவள் தோள…

  20. ____________________ இன்று விடுவிக்கப்படாதவர்கள் மற்றொரு பக்கத்தில் கம்பிகளுக்குள் நிற்கிறார்கள். அவர்களின் இடுப்பில் இருந்த குழந்தைகள் அழுகின்றன. இந்தக் குழந்தை கொண்டாடத் தொடங்கிய மகிழ்ச்சி முட்பம்பிகளில் மோதி சிதறுகிறது. தனது அம்மா அப்பபாவின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்யப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு குழந்தையை ஒலிபெருக்கியில் அவர்கள் புன்னகைக்க விட்டார்கள். உன்னை வரவேற்பதற்காக சொற்களை கொண்டு வந்திருக்கிறேன். கைளில் கட்டியிருந்த அடையாள இலக்கை அவிழ்த்து உன்னை வெளியில் அழைத்துச் செல்லுகிறேன். குழந்தை முகத்தைப் பொத்திக்கொண்டு புன்னகைத்துக்கொண்டிருக்கிற

  21. விளையாட்டா விளையாட சின்னவர்கள் ... பொம்மை கேட்டனர் .. கொடுக்கப்பட்டதோ பொம்மை துப்பாக்கி .. ஆண்டுகளா பல சிறார் விளையாடி போன .. அதே குருதி தேய்த்த பழைய துவக்கு .. இதை வைத்திருந்தவன் இறந்து போய் .. ஒருவருடமும் இல்லை அப்ப நாலு வயது .. அப்பொழுது இவன் பிறந்து இருந்தான் .. இவன் அருகில் நான் இருக்கும்போதே .. அவன் வெளியில் விளையாடியபடி நின்றான் .. டும் என சத்தம் வந்தால் ஓடி வரும் அவன் .. அன்று மட்டும் வரவில்லை ஏனோ .. சீறி வந்த ஏவுகணைக்கு தெரியுமா .. அவன் ஆசைப்பட்டது பொம்மை.. துவக்குக்கு என்று .. ஏவுகணை ஏவுறவன் பார்வையில்.. அவன் தீவிரவாதி... ஆனால் அவனுக்கு பொம்மை மேல் .. தீராத காதல் வியாதி ... பிஞ்சா கருகி விழும்போது மனம் .. துண்டா வெடித்து போவதை யார் அறிவர் .. …

  22. கவிதை ...........!!! தனியே வரிகளல்ல தனியே வலிகளல்ல தனியே வார்த்தையாளமல்ல தனியே உணர்வல்ல தனியே உணர்ச்சியுமல்ல ... தனியே தனி தேவையுமல்ல தனியே தனி விருப்பமுமல்ல .... தனியே அனுபவமுமல்ல ... தனியே அறிவுமல்ல .... தனியே இன்பமுமல்ல தனியே துன்பமுமல்ல .... தனியே ஆசையுமல்ல .... தனியே மோகமுமல்ல ... தனியே ரசனையுமல்ல தனியே கற்பனையுமல்ல ... தனியே உண்மையுமல்ல கவிதை .....!!! ஆத்மாவின் வெளிப்பாடு ... ஆத்மாவின் உந்தல் ஆத்மாவின் உணர்வு ஆத்மாவின் செயற்பாடு ... ஆத்மாவின் தொழிற்பாடு ஆத்மாவின் கடமை ஆத்மாவின் தேவை ஆத்மாவின் தேடல் ஆத்மாவின் ஆரம்பம் ஆத்மாவின் முடிவு ........!!! கவிதை ......!!! எழுதும்போது ஆத்மா என்ன சொல்கிறதோ .... அதை எழுது…

  23. கவிஞர் கலாப்ரியா பதில்கள்… தமிழ் ஹைக்கூ கவிதைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? – தூய்ஷன், மலேசியா. முதலில் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஹைகுவின் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழில் பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’ என்று எழுதுகிறார். ஹைகு அல்லது ஹொக்கு முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப்பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்துவைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் …

  24. எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன எங்கள் இமைகள் கவிந்துள்ளன எங்கள் உதடுகள் அண்டியுள்ளன எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம் எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக எங்கள் முதுகில் கசையால் அடிக்குக எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து போகட்டும் தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும் கவிந்த இமைகள் ஒருநாள் உயரும் இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும் கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும் அதுவரை நீங்கள் எங்களை ஆள்க அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து (பலர் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள். இருந்தாலும் இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாகத் …

  25. இழிவு ஒன்றிருந்தால் ... உயர்வு ஒன்று இருக்கும் .... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! இறக்கம் ஒன்றிருந்தால் ... ஏற்றம் நிச்சயம் இருக்கும் ... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! பள்ளம் ஒன்றிருந்தால் ... மேடு ஒன்றிருக்கும் வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! தோல்வியொன்றிருந்தால் .... வெற்றி நிச்சயம் உண்டு .... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.