Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செந்தமிழ் தாயின் சந்தன மேனியர் ஆந்திர எல்லையில் சரிந்தே வீழ்ந்தனர் மரக்கட்டைகள் நடுவே செம்மரக்கட்டைகளாய்..! கிரந்த மொழி பேசும் திராவிட வாரிசுகளாம் தெலுங்கர்கள் பட்சாதாபமின்றி வேட்டையாடி மகிழ்ந்தனர் செந்தமிழன் பிணம் வீழ்த்தி...! சிங்களப் பேய்கள்.. ஹிந்தியப் பிசாசுகள் குடித்த ஈழத்தமிழ் இரத்தம் காய முதல்.. கடலில் கரைந்த தமிழகத் தமிழனின் குருதி நிறம் மாற முன்.. நடந்தது சம்பவம்..! சந்தனக் கடத்தலை சாட்டி முதலைகள் வேட்டையாடி முடித்தன.. மீண்டும் ஓர் இனப்படுகொலையின் நினைவை மனதின் ஓரத்தில் இருத்தி..! புலிக்கொடி நடுவே படை நடத்திய சோழ தேசம் இன்று வீழ்ந்து மடிகிறது..! காரணம் தான் என்ன.. தமிழனை தமிழன் ஆள வழியின்றி போனதே..! மீட்போம் எம…

  2. வேறு ஒரு இணையத்தளத்தில் வெளியான என் கவிதை ஒன்றை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன் . நன்றி http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/114942/

  3. பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! மறுபடியும் பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! எனக்கோ பிறந்தான் காணவில்லை ஐயா..!!

    • 2 replies
    • 716 views
  4. அன்பு மிக்க .... யாழ் இணைய நட்புக்களே .... உலக தமிழ் ஆர்வலர்களே ... திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்" பகுதியை கவிதையாக்கி வருகிறேன் அதனை தொடர் பதிவாக .... யாழ் இணையத்தில் பதியபோகிறேன் ஆவலர்கள் படித்து இன்புறுங்கள் ....!!! நன்றி பெண்ணே நீ யார் ....? என் கண்ணில் மின்னலாய்... பட்டவளே - பெண்ணே ....!!! நீ - பிரம்மன் படைப்பில் ... தங்க மேனியை தாங்கிய நான் கண்ட தெய்வீக தேவதையா ...? தோகை விரித்தாடும் மயில் அழகியா ..? எனக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட .... மானிட பெண் தாரகையோ ...? கண்ட நொடியில் வெந்து துடிக்குதடி -மனசு பெண்ணே நீ யார் ....? குறள் - 1081 தகையணங்குறுத்தல் அணங்குகொல் ஆய்மயில் கொல…

  5. அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!! அகம் முழுதும் நிறைந்தவளே ..... அகமதியால் காதலை இழந்தவளே.... அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ...... அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் .... அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!! அச்சப்படாதேயடா என்னவனே ..... அச்சுதனடா என்றும் நீ எனக்கு ..... அகந்தையும் அகமதியுமில்லை .... அடர்த்தி கொண்டதடா நம் காதல் ...... அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!! அடைமழை போல் இன்பம் தந்தவளே .... அந்தகாரத்தில் வந்த முழுநிலவே ..... அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி .... அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் .... அகத்திலே நீ அத்திவார…

  6. அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை – உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ….!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ….!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ……!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் … செருப்பில்லாத பாதங்களேடு…. இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே …..!!! …

  7. யாழவளே உனக்கு வயது பதினேளா ?? அதனால் தான் நீ அழகுடை மகளாகி அற்புதங்கள் கொண்டு ஆண்களையும் பெண்களையும் ஆவலொடு உன்பின்னே அலைய வைக்கின்றையோ ?? தேன்மதுரத் தமிழில் தெவிட்டாது தினமும் தெம்மாங்கு பாடி நீ தீந்தமிழில் திசையெங்கும் தமிழ் பரப்பி நிற்கின்றையோ?? வைகறையில் எழுந்தவுடன் உன் வாசல் வரை வந்து உன்முகம் கண்டபின் தான் ஊர் காணப் போகின்றார் உலை வைக்க முன்னரும் உன்னைத்தான் பார்க்கின்றார் உன்மத்தம் கொண்ட உறவுகளாய் உன் தமிழர் எத்தனை வேலைகளை எளிதாகச் செய்தாலும் ஏக்கத்துடன் உன்னை எண்ணியே செய்திடுவர் எப்போ மாலை வரும் என்று உன்னைப் பார்ப்பதற்காய் உற்ற துணையாக உன்னைத் தான் நினைத்து உறவாட வேண்டுமென உணர்வாய் ஏங்கிடுவர் மனைவியின் மந்திரங்கள் உள்ளத்தில் ஓதாது…

  8. இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே வழி அனைத்தையும் காதல் செய் . காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல . அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!! + கவிதை " மனத்தால் உனக்கு அபிசேகம் செய்கிறேன் - என் இதயத்தில் தெய்வமாக நீ இருப்பதால் " இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!! தொடரும் ...........

  9. இனியவளே .... உன்னை நினைக்காவிட்டால் ... இதயம் இருந்து பயனில்லை ... உன்னை பார்க்கா விட்டால் ... கண் இருந்தும் பயனில்லை .... நீ என்னவள் என்று தான் ... அனைத்தையும் இழந்து ... வருகிறேன் .....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 01

  10. அதிகாலையில் துயில் எழுந்து … தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் … தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை … கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு … தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம் ….? கொட்டும் மழையில் உடல்விறைக்க… உழைப்பாய் – வாட்டும் வெயிலில் … குருதியே வியர்வையாய் வெளிவர …. உழைப்பாய் – நட்டுநடு ராத்திரியில் … காவல் செய்யவும் புறப்படுவாய் .. யாருக்கு வரும் இந்த தைரியம் ….? பட்ட விவசாய கடனை அடைக்க பட்டையாய் உடல் கருகி …. விற்று வந்த வருவாயை .. கடனுக்கே கொடுத்துவிட்டு … அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!! அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு யாருக்கு வரும் இந்த தைரியம் ….? உச்ச அறுவடை பொழ…

  11. எல்லாமே மூன்று எழுத்து எல்லா இடத்திலும் பின்பற்று … எல்லோர் இடத்திலும் செலுத்து … நீயும் ஞானியாவாய் …. அன்பு ….!!! ####### உறவுகளிடம் சிக்கி தவிக்கும்…. உதறிவிட்டால் வாழ்க்கை வெறுக்கும்… இதுவும் ஒரு அழியாத கல்லறைதான் … பாசம் …..!!! ####### உள்ளவன் இல்லாதவனுக்கும் …. இருப்பவன் அனைவருக்கும் …. வற்றாத ஊற்றாய் கொடுக்கணும் … கருணை ….!!! ######## இல்லாதவன் இருப்பதுபோல் … இருப்பவன் பிரபல்யத்துக்காகவும் மாறி மாறி போடுவது …. வேசம் …..!!! ######### சந்தித்தால் வேதனையை தரும் சந்திக்காமல் சாதித்தவர்கள் இல்லை …

  12. சிதறி கிடக்கும் நாங்கள் … குப்பைகள் – அல்ல …. உங்கள் மீது … தொற்ற இருக்கும் … பெயர் வைக்கப்படாத .. நோய்கள் ….!!! ++ குப்பை கடுகு கவிதை

  13. தேவதை ஒருத்தி என்னை தேடி வந்தாள் தேவாமிர்தம் படைத்து உண்ணச் சொன்னாள் தேன் சொட்டும் வார்த்தையால் என்னை வருடி தேவை எல்லாம் கிடைக்கும் என்று வாழ்த்திச் சென்றாள் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் உதித்தது ஆணவம் கூடவே சேர்ந்துக்கொண்டது ஆர்ப்பரிக்கும் களிப்பில் மூழ்கியே ஆகாயத்தில் உயர பறக்கவும் விளைந்தது ஐஸ்வர்யாவின் அழகை பெற நினைத்து ஐஸ்க்றீம் குளியலில் நீந்தவும் முயன்று வைரங்கள் நகைகளில் ஜொலிக்கவும் எண்ணி வைப்பில் பலகோடி சேமிப்பில் கேட்டேன் அரண்மனை வானுயர அமைக்கவும் எண்ணி அதிகாரம் கையில் பெறவும் கேட்டேன் அகதி அந்தஸ்து இல்லா வாழ்க்கை யாவரும் பெற அஸ்தமித்த அமைதிக்கு உயிர் கொடுக்க வேண்டினேன் வையகம் முழுதும் பூந்தோட்டம் அமைத்து வைகை ஆற்றை ப…

    • 0 replies
    • 503 views
  14. உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்... உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்... ராத்திரியின் நீளம் குறையும்... அதிகாலையின் கொடூரம் புரியும்.. உனக்கும் சமைக்க வரும்... சமையலறை உனதாகும்.. ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்.. பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்.. ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின், கிரைண்டர், மிக்சி கண்டுபிடித்தவன் தெய்வமாவான். கையிரண்டும் வலிகொள்ளும்... கண்ணிரண்டும் பீதி கொள்ளும்... கல்யாணம் பண்ணிப்பார்... தினமும் துணி துவைப்பாய்... மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்.. . காத்திருந்தால். ...'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்... வந்துவிட்டால்.... 'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்.... வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது - ஆனால் வீடே …

    • 0 replies
    • 563 views
  15. பொய்கையில் பூத்த பொற்தாமரை என்று பொழிவாய் கூறியவன் பொருள் தேடி வந்தவுடன் பொதியில் புதைந்தானே பொறுத்தது போதுமென்று பொம்மையாய் வாடி நிற்க பொன்னி அல்லவே நான் பொங்கல் வந்தால் பொற்காலம் பிறக்கும் என்று பொது அறிவு கொண்டவள் பொருட்படுத்தவும் தயங்க மாட்டேன் பொருத்தமான தருணம் வரும் பொறுத்தது போதுமென்று பொங்கி எழ நேரம் வரும் பொருளாதாரத்தில் நானும் உயர்ந்து பொறுப்பதிகாரியாய் இருப்பேன் உனக்கு - மீரா குகன்

    • 8 replies
    • 765 views
  16. திரு செல்வா கனகநாயகம் ஆங்கில விரிவுரையாலார் ரொரன்ரோ பல்கலைக் கழகம் தமிழ் இலக்கிய வரலாரூ எழுதிய பேராசிரியர் வி செல்வநாயகம் அவர்கலாது மகனாவார், ஈழத்து தமிழ் கவிதை சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்களூள் முக்கியமானவர். 1970பதுகளின் பிற்பகுதியில் நான் யாழ் பல்கலைக் கழக மாணாவன்/மணவர் தலைவனாக இருந்தபோது அவருடைய நட்ப்புக் கிட்டியது. செல்வாவின் மனைவி திரு எங்கள் ஆங்கில விரிவுரையாளாராக இருந்தார். மொழிபெயர்ப்புகளூக்கூடாக என்னையும் சேரனையும் புதுவை இரத்தினதுரையையும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த பெருந்தகை. மேலதிக தகவலுக்கு http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE…

    • 11 replies
    • 1k views
  17. திசைகள் புணர்ந்த இடத்திலிருந்து திரும்பத்தொடங்குகிறேன். நான் நீ இனி முத்தமிட்டுக்கொள்ளலாம். முன்னைய முத்தத்தின் நினைவுகள் கூடாதவகையில் முத்தமிடு. இனியொருபோதும் நிகழமுடியாத சந்திப்பின் இறுதி முத்தமென்று நினைவில்கொள் முத்தமிடு. சாம இரவுகளில் வெற்றுத்திடல்களில் சுடரும் ஒளியிறக்கி முத்தமிடும் மின்மினிகளைப் பார். பேரண்டத்தின் மூர்க்கம் கொண்ட மூலையில் இருந்து எடுத்துவை முத்தத்தை. இதழ் ஊறும் காமம் தீண்டி உயிர்க்கும் விரல்கள் இறந்துபோன காலமொன்றினை கடந்துவரட்டும். மேனிகுழல் வாய்முத்தம் இசைக்கின்றன துவாரங்கள் கனப்பொழுதொன்றில் வித்துறை உடைந்து நிலம் கிழித்து எழுகிறது முளையம், அன்பு. ஒற்றைப் பார்வைக்கும் மற்றைச்சொல்லுக்கும் ஒத்திவைக்கும் …

  18. அதிகாலையில் உன்னை எழுப்ப அலாரம் வைத்துவிட்டு, அலாரத்தை நீ எழுப்புவாய் நடைபாதை சாக்கடைநாற்றம் உன் நாசியைத் துளைக்காது கோவில்மணி ஓசையில் சிறகைக்கும் பறவைகளை ரசிப்பாய் மொட்டை வெயிலில், மொட்டைமாடியில் கவிதைகள் பிறக்கும் மழையையும் ரசிப்பாய் உச்சி வெயிலையும் ரசிப்பாய் தங்கையிடம் அத்தனையும் விட்டுக்கொடுப்பாய் அம்மாவை அவ்வப்போது அன்போடு கட்டியணைப்பாய் சிலமுறை முத்தம் கொடுப்பாய் என்றுமே கேட்காத அப்பா சொல்லை தட்டாமல் கேட்பாய் அவள் சிணுங்களை செல்போனில் ரசிக்க, சில்லறையைச் சேகரிப்பாய் ஆடைகளைக் களைகையில் அவனை நினைத்துக்கொள்வாய் (பெண்களுக்கு மட்டும்) நீ நாத்திகனானாலும் ஆத்திகத்தை அவ்வப்போது ஆதரிப்பாய் கல்லூரி, அலுவலகம் செல்லும்முன் - நீ கடைசியாகப் பார்ப…

    • 3 replies
    • 833 views
  19. சப்பாத்தின் விலை ஒன்பது தொண்நூறு விற்பவனிடம் வாதாடிக் களைத்துவிட்டேன் குறையும் இருபது சதத்திற்காய் வாயாற முடியாது இருந்த காலங்களில் எல்லாம் வறுமையின் கோரத்தை போக்க நட்சத்திரங்களை எண்ணியபடி வயிறை நீரால் நிறப்பியதுண்டு இது சற்றே மாறுபட்டது ஆடம்பரம் என்றோ ஆசைஎன்றோ வரையறுத்து விட்டு விட்டால் கால்கள் தேவையற்றதாய் போய்விடும் ஊரென்றால் பறவாயில்லை சப்பாத்துமுள்ளும் சாணிப் பட்டியும் கிரவல் றோட்டும் பழகிப்போன ஒன்று இது சற்று மாறுபட்டது மண்ணில் கால் படுவதே இல்லை மாறிப்பட்டு விட்டால் குளிரின் கோரம் ஊசியாய் குத்த விறைத்த கால்கள் பாறைபோல் ஆகும். இருக்கும் பழசுகளிலும் இடையிடையே ஓட்டை எப்படியும் இந்தமாதம் …

  20. எனக்குள் ஒரு பட்டாம் பூச்சி இருந்தது குளக்கரைகளில் மிதக்கும் தாழம் பூவிலும் குதித்து விளையாடும் குளப்படி வாண்டுகளிலும் லயித்து மகிழும் பட்டாம் பூச்சி அது கடந்து போகும் ஒரு துளி இசையை நூல் பிடிச்சு அதில் தொங்கி கூத்தாடும் பின் தூரத்தே கேட்கும் பறையொலியிலும் தன் சிறகுகளை விரித்து நடனமாடும் செங்கறுப்பு பெண்களின் கருத்த முலைக் காம்புகளின் மீது தீராக் காதல் கொண்டு கவி பாடும் சிலவேளைகளில் சரசமாடும் பெரும் வனம் புகும் இருள் விரும்பும் சிறுகாடு ஒன்றில் தனித்து இருக்கும் மழை நாளில் மழை நீரில் தன் குஞ்சுகளுடன் நடனமாடும் இலக்கியம் அருந்தும் மதுக் கோப்பைகளின் மிதக்கும் நுரையில் தாளம் போடும் யாருமற்ற கடற்கரை ஒன்றில் துணைவியுடன் க…

  21. பிரிவில் வறளும் காதலர்போல் விழுந்து கரைந்த சருகுகளைக் காணாது தனித்துக்கிடக்கும் மரத்தடி அவள் உதட்டின் முறுவல் போல் அரும்பும் குருத்துகள் காலத்தைக் காதலித்து பொழுதோடு காமுற தாவணி மறைவில் ஓரக்கண்ணால் உசுப்பிவிடும் அவள் பார்வை போல் வசந்த கால வாசல் கதவுகள் மெல்லத் திறக்கின்றது இத்தனைகாலம் சூட்டின் இதத்துக்காய் போர்த்திய அங்கிகள் புணர்வின் தேவைபோல் ஒவ்வொன்றாய் கழன்று விழ அமைதியான அவள் முதல் முத்தச் சம்மதம்போல் பொழுதின் வெண்ணொளி மேனியை சிலிர்ப்பூட்ட முதல் அணைப்பின் பட படப்பில் இரவும் பகலாக்கும் ஏக்கம்போல் மெல்ல மெல்ல பொழுது ஓளியில் கரைய காமத்தில் கரையும் ஊடலைப்போல் சிலகாலம் ப…

  22. தனித்திருத்தல் வரம். நீண்ட இரவில் ஏதாவது ஒரு மாலையில் தன் குரல் கேளாத தொலைவில் எதுவும் தேவையில்லை நீ நான் அவர்கள் ஒரு புல்வெளியில் குளக்கரையில் குறைந்த பட்சம் ஒரு பெருமரநிழலில்.. தனித்திருத்தல் பெரும் தவம். இழக்கவும் ஏற்கவும் எதுவுமில்லாமல், கேட்கவும் சொல்லவும் எவருமில்லாமல் பெருவெளியொன்றில் மிதந்துபோகும் ஒற்றை மேகம் போல கிளைநுனியொன்றில் சலனமின்றிக் கிடக்கும் ஒரு பறவையைப் போல தனித்திருத்தல் வரம் தனித்திருத்தல் பெரும் தவம். தனித்திருத்தலில் ஒரு தற்கொலை நிகழலாம் ஒருவன் வன்புணர்வை முயலலாம் தாயொருத்தி அடிவயிற்றின் வலியோடு ஏதாவது கடையொன்றில் பணத்தினை வீசலாம் எவனோவொருவன் எப்பவோ கடந்துபோன பெண்ணின் வனப்போடு காமத்தை கழித்துக் கொண்…

  23. Started by கவிதை,

    சுடும் மழைக் காலம்... குளிர் வெயிலாய் நீ வந்தாய் ! இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !! மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை, இதழிடை பாடும்.... இன்னிசையாய் நீ அமைந்தாய் !!! கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...! நிரந்தர வதிவிடம்... மனங்களும் கொடுத்திடும்...!! சிலதரம் பார்த்திடும்... நால்-விழிகளும் கலந்திடும்...! வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!! எங்கே நீ சென்றாலும்... என் நினைவும் பின்னால் அலையுமடி..! அங்கே வானவில் வீடு கட்டி... உனக்காய் வாசல் வரையுமடி... !! உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ? பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ?? என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்…

  24. புவியீர்ப்பு விசையின் சக்திக்குள்ளே உயரப்பறக்கும் பருந்து கண்ணில்பட்டதை தன்னிலும் சிறியதென்றது துாரம் எம் பார்வைக்குள் அடக்கப்படும் காட்சிகள் அல்ல அதையம் தாண்டும் அருகே போகும்போது ஈர்க்கப்படும் விடையம் எம் சிந்தனையில் கட்டுப்பாட்டை விதிக்கின்றது சாட்சி ஒதுக்கப்பட்ட உண்மைகள்போல் அருகில் இல்லாத ஒன்றின் மீதான விருப்பம் இருப்பதை ஒதுக்கி வைக்கின்றது இழக்க நேரிடும் என்ற உண்மை அறியாதவரை சிந்தனை பந்தில் அடைக்கப்பட்ட காற்றல்ல பரந்த விரிந்த பூமிப்பந்தில் பார்வையின் நோக்கத்தில் படைப்பாளி சிக்கிக்கிடப்பதுபோல்

  25. பட்டு தெளியாத பாதையில் .. பாடையை கட்டிவைத்து .. இதில் வந்து படுங்கள் என்று .. நான் மட்டும் கூவி அழைக்கையில் .. தெட்ட தெளிவா தெரிந்த பின்னும் .. சீவன் போன ஜீவன் கூட வராது .. ஆவிகளை மீண்டும் போருக்கு அழைக்கும் .. ஆற்றல் மிகு விசுவாசங்கள் ஒருநாளும் .. போரறியாது அதன் வலி அறியாது .. காவி காவி சென்று மாறி மாறி .. புற்றுகள் மேல் கொட்டில் போடும் .. தவளைகள் நிலையறியாது .. பாம்புகளிடம் இருந்து உமக்கு விடுதலை .. வாங்கலாம் அதுவரை அதிலே படும் .. உறக்கம் இன்றி அவர்கள் விழித்திருக்க .. நாம் உண்டுவிட்டு ஏப்பம் விடும் சத்தம் .. பாம்புகள் சீறும் சத்தமாவே காதுகளில் கேட்கும் .. ஒவ்வெரு நாளும் மேட்டில் இருந்து .. நொந்து சாவதை விட தண்ணியில் .. ஊறி திளைக்கலாம் என்று நினைக்கிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.