Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சாட்சியம் காலத்தின் கட்டாயம் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் சித்திரவதைகள் என எம்மினம் சின்னாபின்னப்படுத்தப்பட்டு எமது தேசமும் எரிக்கப்பட்டபோது உலகம் கண்மூடி நிற்க உண்மைகள் புதைக்கப்பட்டன. இப்போ சீமெந்துச் சுவரில் முளைவிட்ட சிறு விருட்சம்போல் உண்மை மெல்ல மெல்ல வெளியேறுகிறது. தன்கடமையை மறந்த ஐ. நா மன்று கதிகலங்கி நிற்க மனிதவுரிமை மனச்சாட்சியாய் வாய்திறக்கிறது. சாட்சியம் கோரி வாய்திறக்கும் மனிதவுரிமை ஆதரவில்லாமல் அனாதையாய்விடக் கூடாது. பார்த்ததை பகிர்ந்ததை பட்ட துன்பத்தை துணிவுடன் எடுத்துக் கூறி தமிழர் துயர் துடைக்க சாட்சியம் வழங்கு சாட்சியமில்லாவிடத்து உண்மையும் அனாதையாகிவிடும். மனச்சாட்சியும் மௌனமாகிவிடும். தயங்காதே! தமிழீழ விடுதலைக்காய் தன்ன…

  2. நீண்ட நெடு மரங்களிநூடு நிதானமாய் நடக்கிறேன் நான் மழைத்தூறல் முகம் நனைக்க மகிழ்வாக மழையில் நனைந்த நாள் மனதில் வருகிறது. மனதின் ஓரங்களில் என்றும் ஒட்டிக்கொண்டே இருக்கும் காய்ந்துபோன சிலதும் பழுப்பாகிக் கொண்டிருக்கும் சில நினைவுகளுடனும் கவலையும் மகிழ்வுமாய் மனம் பயணிக்கிறது காததூரம் வந்துவிட்டோம் மீண்டும் வர முடியாத அந்த நாட்களின் நினைவுகளுடன் மட்டுமாய் என்பது மனம் கனக்க மாற்ற முடியாததான நாட்களின் வலுவிழந்த இறந்த காலத்தின் வரிகள் மட்டுமே நினைவில் எல்லாமும் எப்போதும் என் நினைவில் இல்லை சிறுபராயத்து சிதிலமடைந்த நினைவுகளில் சில மட்டும் செருக்கடையா மனதின் சிலும்பல்களாய் வந்துபோக மீட்டல் செய்ய முடியாத மறந்து போனவைகளுக்காக வருந்த மட்டுமே முடிகிறது

  3. Started by karu,

    தமிழ் ஹைகூ 1. தெருவில் இளைஞன். ஜீன்சில் ஓட்டை. தைச்சுப் பிச்சதா பிச்சுத் தைச்சதா? 2. போராளி மரணம்! செய்தி வந்தது ஆர்வலர் கேட்டார் அடிபட்டா பிடிபட்டா? 3. முக்கிய நபர் கைது. செய்தி. குழந்தை கேட்டது: முக்கினால் குற்றமா? 4. பசித்தது. றோல்ஸ் வாங்கினேன். வைத்திருந்தான்! முன்னுக்கொண்டு பின்னுக்கொண்டு இறைச்சித் துண்டு. 5. ஏமாற்றிவிட்ட முன்னாள் காதலி அகதிக்கு எழுதினாள்: 'தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்குதவாது.' ஏமாந்து போன அகதி எண்ணினான்: 'நீலநிற வான்கடிதம் வழங்கியது வாழ்க்கையல்ல' 6. எயார்ப் போட்டிலிறங்கிய ஊர்ப்பிள்ளை கேட்டாள்: 'உங்கள் படம் வேறாயிருந்ததே! 'மாப்பிள்ளை சொன்னான்: 'கவலைப் படாதே வழுக்கை வாழ்க்கையல்ல.' 7. போன் நம்பர் மறந்துவிட்டத…

    • 11 replies
    • 1.8k views
  4. தொலையும் நின்மதியே நிரந்தரமாகி நிற்கதியாக்கி விடுகின்றது உரிமையற்ற நிலைகளின் ஈடாட்டம் கண்டு ஏதுமற்றதாக ஆசை கொள்கிறது மனது மனதில் கூடுகட்டும் குப்பைகளும் ஆற்றாமைகளில் அழுந்தும் எண்ணங்களுமாய் எல்லாவற்றையும் எதிரியாய் நோக்க எந்நேரமும் எதுவுமாகிவிடாதிருக்க எனக்கே நான் எதிரியாகிறேன் செய்கைகளும் செயற்கையாய்க் கோர்க்கப்படும் வார்த்தைகளும் எந்நேரமும் செயல்களின் பிரதிபலிப்பை எதிர்மறை எண்ணங்களின் பிரதிநிதியாக்க பகுக்கப்படும் சிந்தனையின் செயல்களில் பக்கவிளைவாகின்றன வார்த்தைகள் உண்மையற்ற புரிதலற்ற அன்பும் காரணங்களுக்கானதான செயலும் எங்கோ ஓரிடத்தில் ஏதுமற்றதாகிவிடுகிறது உண்மை அன்பு எந்தவித எதிர்பார்த்தலுமின்றி என்றும் வற்றாத நதியாய் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறத…

  5. Started by மாறன்,

  6. பேசவேண்டும் யார் இருக்கிறீர்கள் வெறுமையாகிப்போன தேநீர்க் கோப்பையில் நிறைகிறது என் குரல். நீங்கள் எனக்காவும் பேசுவதாக இருந்தால் தேநீர்க் கோப்பையை கவிழ்த்துவிடலாம் என் வெற்றிடங்கள் நிறைந்து கொள்ளும். எதைப்பற்றி பேசுவீர்கள்.. வழிக்காத என் தாடியைப் பற்றி கசங்கிப்போன என் ஆடையைப் பற்றி கிழிந்துபோன காலனி பற்றி அருகில் இருப்பவரைப் பற்றி.. ஓ, நீங்கள் என்னைப்பற்றி பேசவே மாட்டீர்களா? ஓசைகளை கழற்றி எறிந்துவிட்டு சொற்களை கொட்டுவீர்கள் பின் எப்போது சிதை ஏற்றுவீர்கள் நான் செத்தபின்பா அப்போதாவது என்னைப் பற்றி பேசுவீர்களா என்ன. எப்போதுதான் பேசுவீர்கள் என்னைப்பற்றி? எனக்குத் தெரியும் உங்களால் பேசவே முடியாது. ஏனென்றால், நீங்கள் உங்க…

  7. எறித்த வெய்யிலை ஓரம் கட்டியபடி எங்கும் எக்களித்தபடி காற்று திடுமென வானம் திகைத்து நிற்க கார்மேகக் கூட்டத்தின் கடைபரப்பல் துமித்துத் தூவானத்துடன் தூறலாய் ஆர்ப்பரித்தபடி மழை அதி வேகத்தோடு சோவெனச் சோலைகளை நிறைத்து சொல்லாமல் பெய்கிறது கோடையில் மழை குதூகலம்தான் ஆயினும் ............ எரிக்காத வெய்யிலை இரசித்தபடி ஏகாந்தத்துள் திளைத்திருந்து சுவாசத்தின் காற்றை சுத்தமாய் நிரப்பியபடி மெய்மறந்திருந்த என்னை குளிர்ந்து பட்ட துளி குதூகலம் கலைத்து கூட்டினுள் கலைத்தது ஆயினும் வீசும் குளிர் காற்றும் மூக்கை நிறைக்கும் மழையின் மணமும் சடசடத்துப் படபடத்து ஆடும் இல்லை மரக் கொடிகளும் வாசலில் நின்றெனை வர்ணிக்க வைத்தது இயற்கை எப்போதும் இரசனைக்குரியதே ஆனாலும் மாந்தர் நாம் …

  8. கட்டிளம் காளை இது... தலைக்கனம் இருந்தது நேற்று வரை..!! கண்கள் செய்த சதியால் சித்தம் குழம்பிய காளை.. காலை ஒன்றில் சுபமுகூர்த்த வேளையொன்றில் கறவை ஒன்றின் கழுத்தில் ஏற்றியது நாண்.!! அடுத்த நொடியே காளையது... நான் எனும்.. திமிரிழந்தது. அடுத்த மணியில் காளை எனும் உணர்விழந்தது. அடுத்த நாளில் அடிமாடாய் போனது அதன் நிலை..! காலக் கழிவினில் அடிமாடு நிலையும் கழிய பூம்பூம் மாடாக.. கூடிப் பெருத்த கறவைக் கூட்டம் கூட்டமாகிப் பெருகி நின்று துரத்துது..!! தனித்துவிட்ட நேற்றைய காளை.. கிழடாகி தோலுக்கும் தசைக்கும் பெறுமதியற்று சுடலை ஏகுது..! இதுவே கலியுகத்தில் காளைகளாய் திமிரெடுத்த உயிர்களின் வாழ்க்கை எனும் வட்டமாகும்..!!! வேண்டுமா எனியும் இந்த நிலை.. புதிதாய் ஓர் விதி செய்…

    • 33 replies
    • 2.8k views
  9. Started by அஞ்சரன்,

    அமர்த்து இருக்கிறார் நடுவில்.. ஆலாவட்டங்கள் ..சாமரங்கள் .. கன்னியர்கள் கூட்டமாக விசியபடி .. நீதியை காக்கும் சபையாம் அது .. அன்றில் இருந்து இன்றுவரை உலகில் .. ஓலம் இட்டார் எல்லாம் ஒடுவரும் இடம் .. ஒப்பனைகள் கலையாமல் பார்த்தபடி .. தளங்கள் பல போட்டு தலையாட்டி பொம்மைகள் ... இன்னும் ஒரே பாட்டுக்கு ஆடுகிறது .. இசையும் மாற்றம் இல்லை அவர்கள் .. இயல்பும் மாறவில்லை குணங்கள் எப்படியோ .. கூடியிருத்து பேசுகிற நேரம் மட்டும் .. அவர்களுக்கு உலகம் வெளிப்பா தெரியும் .. அப்பொழுது கூட ஒருபகுதி ஒளிப்பாக .. அங்குதான் கனியம் இருக்கும் வளம் இருக்கும் .. தங்களுக்குள் கைகுலுக்கி பங்கு பிரிப்பர் .. வெளியில் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்து .. பொங்கி எழுந்து உரையாற்றி கண்ணில் .. சினம் காட்டி மீறல் என…

  10. செஞ்சோலை சொந்தங்களே ! என்சோலை பந்தங்களே !!! யார் கொடுத்தார் சாபம் எமை பிரிந்தீரே ஏன் கொடுத்தார் சோகம் புரியவில்லை நஞ்சாகி நீங்கள் எமை பிரிந்தீரே நெஞ்சோடு நீங்கள் தொடர்ந்தீரே பிஞ்சான நீங்கள் பினமாகிநீரே பிணமாலை கண்டு நீர் அழுதீரோ? மகிந்தாவின் சதியில் மாண்டு மடிந்தீரே மண்ணோடு மண்ணாகி எம்மை மறந்தீரே அந்நாளில் அநியாய சாவை அடைந்தீரே அப்பாவி உயிராக வாழ்வை துறந்தீரே கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே. வித்தான நீங்கள் மீண்டும் வளர்வீரே எம்மோடு ஒன்றாகி வாழ்வை பெறுவீரே எந்நாளும் உம்மை எண்ணி விழிநீரே எம் கண்கள் நீர் வந்து துடைப்பீரோ? கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே.

  11. உன் இடுப்பில் எனைச் சுமந்து நிலாச்சோறு ஊட்டிய நாட்களில் உன் பொறுமையின் வ‌லி நான் உண‌ர‌வில்லை… தாவ‌ணிப்ப‌ருவ‌த்தில் தோழி வீடுசென்று தாம‌த‌மாக‌ திரும்பும் நாட்க‌ளில் உன் அவ‌ஸ்தையின் வ‌லி நான் உண‌ரவில்லை… க‌ல்லூரிப்ப‌ருவ‌த்தில் கண்ணாடியுடன் சினேகித்து பட்டாம்பூச்சியாய் பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி நான் உணரவில்லை… ம‌ண‌ப்ப‌ந்த‌லில் உன் காலில் விழுந்தெழுந்த‌ போது என் உச்சி முக‌ர்ந்த‌ உன‌து முத்த‌த்தில்தான‌ம்மா உண‌ர்ந்தேன் நம் பிரிவின் வலியை ***************************************************************************************************************************** எனதருமை மகனே ! எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் ம…

  12. எல்லா காலங்களினது உழைப்பையும் ஒன்று திரட்டி சேகரித்த விதைகளை பயிரிடும் சற்றுமுன் தீர்ந்துபோன விதைப்புக் காலத்தின் கடைசி பின்மாலைப் பொழுதில் அஸ்தமன சூரியனின் இளஞ்சூட்டில் நெளிவெடுத்து வருடும் காற்றில் தலையசைத்து சிரிக்கும் நெற்பயிருக்கு தீங்கொன்றும் நேரா வண்ணம் வழிநெடுகிலும் கையில் உள்ளதை சிந்திச் சிதறியபடி செலகிறேன் பசித்திருக்கும் பறவையின் கூடுவரை.., நகரத்தின் பல்லிடைச் சக்கரத்தில் சக்கையாய் சிதறுண்ட வாழ்க்கையின் எஞ்சிய சிறுதுரும்பின் உயிர்நீட்சிக்காய் கனவுச் சிறகுகளை களைந்துவிட்டு மீண்டுமொரு விதைப்பு காலத்திற்காக தேடல் துவங்குகிறது..... ~ராஜன் விஷ்வா

  13. நட்பெனப்படுவது யாதெனில்.... 3 ஆகஸ்டு 2014 இல் 11:53 AM தவறுகளைத் தைரியமாய்த் தவறென்று சுட்டிக் காட்டி அறிவைச் சுற்றிக் காட்டித் தட்டிக் கொடுக்கும், பெரிதாக ஒன்றுமே செய்யாமலே அரிதான விருது கொடுப்பது போலப் புகழும் , மூச்சு விட்டு முன்னுக்கு வர முன்னுதாரணம் காட்டிப் போட்டு பேச்சு மூச்சின்றி அடக்கமாக பின்னுக்கு நிற்கும், தெரிந்த நாலு தகவலை என் போலத் தெரியாத நாலு பேருக்கு தெளிவாகத் தெளித்துக் கொண்டிருக்கும்.. முன்னர் முதுகு சொரிஞ்சு விட்ட நன்றியாக பின்னர் முதுகுக்குப் பின்னால் சொறிந்துவிடும், தேவைக்கு மட்டுமே சாம்பிராணி போட்டு ஒரு சாதாரண பிராணியை அசாதாரண அப்பிராணியாக்கும், …

  14. இருண்டகாலத்தின் பதுங்குழி சொங்களற்றவர்களின் அசையா முகங்களில் சங்கீதம் பாடி ஆடுகின்றன ஈக்கள் இரவுக்கும் பகலுக்கும் இடையில் மாபெரும் யுத்தப்படை ஒன்று என் கிராமத்தை கடந்து போயிருக்கையில் காணவில்லை விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை சாட்சிகளற்றவர்களின் நிலத்தில் கைது செய்யப்பட்ட குழந்தை ஒன்றை ஏற்றுக்கொள்ளவும் யாருமில்லை மீண்டுமொரு இருண்ட காலத்தில் பதுங்குகின்றனர் குழந்தைகள் வானத்தில் விமானங்கள் இல்லை எத்திசைகளிலிருந்தும் செல்கள் வரவில்லை வானத்தையும் திசைகளையும் கண்டு அஞ்சுகின்றன குழந்தைகள் இப்போது எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் எதுவும் இல்லை விமானங்களும் இல்லை போர்க்களங்களைத் துறந்துவிட்டோம் பாசறைகள் யாவற்றையும் மூடிவ…

  15. சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு… என் அப்பாவைக் கொன்று எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு. அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில் நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்… இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன். • ஆனால், துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ, குறித்த நேரத்தில் வராமல் கால்மணி நேரம் தாமதித்தாலும், தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ எனக்குப் புலப்பட்…

  16. எதிர்கொள்ளமுடியாத நடுக்கமொன்றை சிலிர்ப்பால் கடத்தியது வாசலில் கூடுமுடைந்து அடைந்துகிடந்த தாய்ப்புறா. வீடும், நாளைய தன் குஞ்சுகளும் நினைவுகளில் நீண்டிருக்கும்... மரம் தேடி நிலைகொள்ளுமொரு கிளை பார்த்து சிறுசுள்ளி வளைத்து, துணைகூடி வீடமைத்து இயல்பான வாழ்வென்று இணைபுணர்ந்த நேற்றையை நினைத்திருக்கும். துயர் வரமுன் துணை வருமோ என்று தவித்திருக்கும் இறகுகோதி இயல்பாய் இருப்பதாய் நடிக்கலாம் என்றும் எண்ணமிட்டிருக்கும். எல்லாம் கடந்தும் அதன் நினைவுகளில், நான் வளரத்தொடங்கியிருப்பேன் ஒரு இரைதேடும் பூனையாக பாம்பாக குறைந்த பட்சம் ஒரு நாயாகக்கூட... காலத்தை மீறியொரு பெருங்கனவு அதன் விழிகளில் நிறைந்து வழியத்தொடங்கியது நான் மூழ்கத்தொடங்கினேன். நினைவு…

  17. மனம் என்னும் மாயப் பிசாசு மறைந்திருந்து கொல்லும் எண்ணங்கள் எதிரிகளாக கடிவாளமற்ற குதிரைகளில் காததூரம் கடக்கும் சொற்களற்ற நிழல்களிநூடே சொல்லாது விடும் வார்த்தைகள் கோர்த்து சுவற்ற சிற்பங்களாய் கனவுகள் ஆயிரம் வடிக்கும் பகுத்தறிய முடியா உண்மைக்கும் பொய்க்கும் இடையே சஞ்சலம் மட்டும் கொண்டு சக்திகள் எல்லாம் அற சகலதும் துறக்கத் தோன்றும் ஏன் தான் மனிதற்கு மட்டும் இறைவன் ஒருமனம் தந்தான் விருப்பமற்றதை விலக்கி வேண்டாதவற்றை கழற்றி வில்லங்கம் கொண்டதை விடுத்து நின்மதியாய் நான் வாழ நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு

  18. கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள் ------------------------------------------------------------------ அவர்கள் நித்திரை கொண்டு கொண்டிருந்த சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும் ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர் இறக்கும் போது அக் குழந்தைகள் எதை கனவு கொண்டு இருந்திருக்கும்.. வெடிகுண்டு சத்தம் கேட்காத ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு தாயின் மடியில் தலை வைத்தும் அப்பாவின் மடியில் கால் நீட்டியும் படுப்பதாய் கனவு கொண்டிருக்கும் ஒரு சின்ன பொம்மையுடன் கட்டிப்பிடித்து நித்திரை கொண்டு இருந்திருக்கும் தங்கள் வளர்ப்பு நாயின் குட்டிகள் மழையில் நனைந்துடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்ந்திருக்கும் தெருவில் தொலை தூரத்தில் வரும் ஐஸ் கிறீம் காரனின் பாம் பாம் …

  19. புயல் சுழன்றடித்த பெருந்தீவின் மாயான அமைதியில் சலனமில்லா ஊர்களின் நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில் வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் முன்பொரு காலத்தில் எந்நேரமும் விளையாட்டு சாமான்கள் விழுந்துடையும் சத்தங்களும் விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும் கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும் நினைவின் தொகுப்பாய் எஞ்சிய ஒற்றை நிழற்படம் முன் சிறுபிள்ளை பிரார்த்தனை முனுமுனுப்புகளுமிருந்தன இமைப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன துயரிரவின் பேரமைதியில் ஊமைநிலத்தில் ஊடுருவிய புத்தரின் நிலைகுத்திய காந்த விழிகளுக்கப்பால் 'புயலின் சூன்யத்தை, கோர பசியை, தீரா உயிர்வேட்கையை, மாளா குரூரத்தை, அழிவின் ஆரோகணத்தை, ஏதொவொரு பிணத்தை புண…

  20. எருக்களை வாசமும் .. எருமையின் சத்தமும் .. பாதை கடந்து போகையில் .. கூடவரும் நாயுருவியும் ... கால்களை கண்டவுடன் .. வெட்கப்படும் தொட்டா சிணுங்கியும் .. மெதுவாக குற்றி கூடவரும் .. நெருஞ்சி முள்ளும் .. ஆற்றுப்படுக்கையில் கோலம் போடும் .. மணலின் ஜாலத்தை குழப்பி .. நடக்கும் கால்களின் அடியில் .. சிதைந்து கிடக்கும் நத்தை ஓடும் .. எட்டி பிடித்து ஏறுவதுக்கு .. கைகள் பற்றி பிடிக்கும் வீரை மரவேர் .. சரசரக்கும் சருகு இலைகள் .. அதுக்குள் வசிக்கும் சாரைப்பாம்பு .. என் காலடி சத்தத்தில் எழுந்து ஓடும் .. பெருச்சாளியும் ..சிறு பூச்சியும் ... நிசப்த்தம் கலைத்து விழிக்கும் .. சிறுவான் குரங்கு கூட்டமும் .. காட்டி கொடுக்காது அமைதி .. காக்கும் ஆள்காட்டி பறவையும் .. கூடவே வரும் என் நிழல் .. என் …

  21. எல்லா இடங்களிலிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் நகரங்கள், பள்ளிகள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் எல்லா இடங்களிலும் போர்களை நடத்துகின்றனர் குழந்தைகளை கொல்கின்றனர் சிறுவர்களை கொல்கின்றனர் பிறக்க இருக்கும் சிசுக்களைக் கொல்கின்றனர் குழந்தைகளின் தாய்மார்களை கொல்கின்றனர் கதறும் அப்பாக்களை கொல்கின்றனர் ஓடி ஒழியும் அப்பாவிகளைக் கொல்கின்றனர் அவர்கள் கூடிக் கூடிக் கதைக்கின்றனர் போர்களை நிறுத்துவதற்கு கூடுகின்றனர் பின் மீண்டும் போர்களை எப்படி திறமையாக நடத்துவது என்று கதைக்கின்றனர் போரால் சிதையும் மனிதர்கள் பற்றி கதைக்கின்றனர் பின் சிதையாது மிச்சமிருப்பவர்களை கொல்வது எப்படி என்று கதைக்கின்றனர் ஒருவர் இறப்பத…

  22. ஆமணக்கும் நெருஞ்சியும் பூவரசும் பனங்கூடல்களும் இயல்பிழந்து போக அரசமரங்கள் எழில் கொள்கின்றது, மின்குமிழ்களின் பின்னும் தொலைபேசிக் கோபுர அடிகளிலும் தொடரூந்து தண்டவாள இடைவெளிகளிலும் யாருமறியாமல் நிறைந்துகிடக்கிறது பேரிருள் சூழ்ந்த மௌனமொன்று.. வீதிகளும் விளம்பரத்தட்டிகளும் விடுதிகளும் வங்கிகளும் வடுக்களின் மேல் வர்ணம் பூசிப்போக, அடிப்பிளவுகளில் உயிரடங்கி வெதும்பிக் கிடக்கிறது தலைமுறைக்கனவு கிராமத்து முனைகளில், சுடுகுழல்களில் ஒளிந்திருக்கும் குறிகள் விரகம் தீர்க்கும் வன்மத்துடன் அலைகின்றன. நகரத்து ஒழுங்கைகளில் தேரவாத காவிகள் தம்மபததின் பக்கத்தில் இனவாதத்தை எழுதி ஓதுகின்றனர். அதிகாரங்களும் அடையாளங்களும். நிர்வாணிகள் மீது குறிகளைப் புதைத்துவிட…

  23. குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி - தீபச்செல்வன் பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடியவில்லை எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை சூழ நிறுத்திவிட்டு காட்ட முடியாதிருந்தோம் ஒளியிருக்கும் திசையை ஈற்றில் வழங்கியிருக்கிறோம் ஆண்குறிகளை அடையாளம் காட்டுமொரு காலத்தை. 0 …

    • 1 reply
    • 948 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.