Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மணிரத்னத்தின் பூர்வ வேர்கள் - யமுனா ராஜேந்திரன் 14 செப்டம்பர் 2013 “எனது பதின்மப் பருவத்தில், எண்பதுகளில், ஹாலிவுட் படங்களில் ஆச்சர்யமுற்றபடி, டேவிட் லீன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ரிட்லி ஸ்காட் போன்றவர்களின் படங்களைப் பார்த்தபடி நான் வளர்ந்தேன். மணிரத்னத்தின் படங்களை நான் பார்க்கத் துவங்கியவுடன் எனது விசுவாசம் மாறிப்போனது“ என 'மணிரத்னத்துடன் உரையாடல்கள்' (Conversations with Maniratnam : Bharatwa Rangan : Viking Penguin: : 2012) எனும் நூலுக்கான முன்னுரையில் எழுதுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். “நாம் பார்க்க விரும்பியிருக்கக்கூடிய படங்களை உருவாக்குவதை சாத்தியப்படுத்தியவர்” என கமல்ஹாசன் மணிரத்னம் குறித்துச் சொல்ல, "இந்தியாவில் உலகத்தரமான படங்களை உருவாக்குகிறவர்களில் ஒர…

    • 9 replies
    • 7.7k views
  2. ஐதராபாத்:ஸ்ருதி ஹாசன் ஹீரோவின் மடியில் அமர்ந்து கவர்ச்சியாக கொடுத்த போஸ் ஆபாசமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் போஸ்டர்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ் படங்களைவிட இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் ஸ்ருதி ஹாசன். ‘டி டே‘ என்ற இந்தி படத்தில் அர்ஜுன் ராம்பாலுடன் பெட்ரூம் காட்சியில் நடிப்பதுபோல் கொடுத்த போஸ் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுவதாக வந்த தகவலை கேட்டு ஷாக் ஆனார். ‘என் அனுமதி இல்லாமல் இப்படத்தை தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யக்கூடாது‘ என்று எதிர்ப்பு குரல் எழுப்பினார். அந்த சர்ச்சைக்கு முழுமையாக தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுனுடன் ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ள ‘ரேஸ…

  3. இசைப்பிரியா பற்றிய திரைப்படம் "போர்க்களத்தில் ஒரு பூ" - இயக்குனர் கணேசன் கனடாவில் கலந்துரையாடல் கலந்துரையாடல் [Tuesday, 2014-03-18 20:15:49] ஈழ மண்ணில் ஊடகப்போராளியாய் இருந்து 2009 ஆண்டு இடம்பெற்ற இனவழிப்புப் போரின் பின்னர் சிங்கள அரசினால் கைது செய்யப்பட்டு மிகவும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட ஊடகப்போராளி இசைப்பிரியா பற்றிய திரைப்படம் "போர்க்களத்தில் ஒரு பூ" எனும் பெயரில் உருவாகி வருவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் திரு. கு.கணேசன் அவர்கள், கனடிய மக்களையும், ஊடகங்களையும் சந்தித்து தன்னுடைய திரைப்படம் பற்றி கலந்துரையாட விரும்புவதனாலும், ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் கனடிய நாட்டில் திரைப்பட முன்னோட்டக் காட்சி அறிமுகத்தை ச…

  4. வுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே... * பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்! * அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்! * மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை! * இவர் …

    • 1 reply
    • 805 views
  5. தமிழ்நாட்டில் மட்டும் தான் நடிகைகளை தெய்வமாக மதிக்கின்றனர் - தமிழகத்தை பாராட்டிய தமன்னா [Monday, 2014-03-17 21:45:37] வீரம் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் தமன்னாவுக்கு படம் இல்லை. இருப்பினும், தெலுங்கில் ராஜமவுலி இயக்கி வரும் பாகுபாலி படத்தில் அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் சிறிய கேரக்டருக்கு ஒப்பந்தமான தமன்னாவின் பர்பாமென்ஸ் தூக்கலாக இருந்ததால் பின்னர் அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி அனுஷ்காவுக்கு இணையாக மாற்றி விட்டார் டைரக்டர். இதனால், இப்படம் தெலுங்கில் தனக்கு அடுத்தடுத்து புதிய படங்களுக்கு வழிவகுக்கும் என்று உற்சாகத்துடன் நடித்து வரும் தமன்னாவுக்கு தாய்மொழியான இந்தியிலும் தற்போது இரண்டு படங்…

  6. உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக இளையராஜா தேர்வு! உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. டேஸ்ட்ஆப் இந்தியா என்ற பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 கம்போஸர்கள் பட்டியல் இது. 25. ஆலன் சில்வெஸ்ட்ரி (ஃபாரஸ்ட் கம்ப், பேக் டு த ஃப்யூச்சர், தி அவெஞ்சர்ஸ் படங்களின் இசையமைப்பாளர்) 24. வாஞ்சலிஸ் (ப்ளேட் ரன்னர், சேரியட்ஸ் ஆப் பையர் போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர்) 23. ஜேம்ஸ் நியூட்டன் – ஹோவர்ட் (எட்டு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தி ப்யூஜிடிவ், மை பெஸ்ட் ப்ரண்ட்ஸ் வெட்டிங், வ…

    • 3 replies
    • 861 views
  7. சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா?- மனம் திறக்கிறார் ஷகிலா பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை,16-03-2014 10:07 PM சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…” என்று வரவேற்கிறார் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் கலங்கடித்த ஷகிலாவுக்கு இந்தியாவைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள். இப்போது அதிகம் அவர் நடிப்பதில்லை. ஆனாலும், இன்னும் வெளியிடப்படாத அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல், அதற்குள் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருப்பதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரவிக் கிடக்கும் ஷகிலாவின் புகழுக்கு உதாரணம். வீட்டில் உடனிருக்கும் …

  8. 'ஆயிரத்தில் ஒருவனை' வரவேற்ற எம்ஜிஆர் ரசிகர்கள்! அரை நூற்றாண்டைக் கடந்தும் அழியாத புகழில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் திரைக்கு வந்திருப்பது எம்ஜிஆர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1965ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி இப் படம் முதன்முதலாக வெளியானபோது என்ன உற்சாகம் இருந்திருக்குமோ அந்த உற்சாகத்துக்கு கொஞ்சமும் குறையாத வகையில் எம்ஜிஆர் ரசிகர்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டதைக் காண முடிந்தது. எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் திரைப்படமான இதில், நாகேஷ், எம்.என்.நம்பியார், ஆர்.எஸ். மனோகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பி.ஆர். பந்துலு இயக்கத்தில், படத்தை அவரே தயாரித்தார். பந்துலு பண நெருக்கடியில் இருப்பதை அறிந்து இந்தப் ப…

    • 11 replies
    • 5.5k views
  9. நெடுஞ்சாலை (Highway) பயணங்கள் எப்போதும் சுவாரசியத்தைத் தரக்கூடியவை. பயணத்தில் இலக்குகள் அல்ல, பயணத்தைத் தொடங்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதென புத்தரிலிருந்து லா-சூ வரை பலர் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். அதுவும் பயணங்கள் -எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் வாய்க்கும்போதும்- அவை இன்னும் அழகாகிவிடுகின்றன. இவ்வாறான பயணங்களில் மனம் எதையும் எதிர்பார்க்காதிருப்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தும், மறக்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன. இவ்வாறு எதிர்பாராது நிகழும் பயணம் ஒன்றைத்தான் 'ஹவே' எங்களுக்குக் காட்சிப்படுத்துகின்றது. கழுத்தை நெரிக்கும் திருமணச் சடங்குகளாலும், உறவுகளாலும் திணறும் ஓர் இளம பெண், திருமணத்திற்கு முதல் நாளிரவு, தன்னை ஆசுவாசப்படுத்த தன் நண்பரோடு …

  10. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் நார்த்தப் என்ற கறுப்பின இளைஞனின் 12 வருட அடிமை வாழக்கையை அடிப்படையாகக் கொண்டு 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் திரைப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் அடிமை வியாபாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் மீது நடத்திய குரூரமான வரலாறின் சிறு துளி என இந்தப் படத்தை சொல்லலாம். FILE சாலமன் நார்த்தப் நியூயார்க் நகரில் வசித்த சுதந்திரமான மனிதன். மனைவி இரு குழந்தைகளுடன் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்த வேளையில் இரு வெள்ளையர்கள் அவரை வாஷிங்டன் அழைத்துச் சென்று தந்திரமாக விற்று விடுகிறார்கள். தானொரு சுதந்திரமான மனிதன் என்று நார்த்தப் சொல்வதை அவனை வாங்கியவர்கள் கேட்க தயாராக இல்லை. நார்த்தப் லூசியானாவில் உள்ள பண…

    • 0 replies
    • 1.6k views
  11. ம.கா.செந்தில்குமார் ''அடங்கப்பா... என் விரதத்தை விகடன் கலைச்சுப்பிடுச்சே!'' - கலகலவெனச் சிரிக்கிறார் கவுண்டமணி. 'பேட்டி’ என்றாலே விலகிச்செல்லும் அல்லது விரட்டிவிடும் நம்ம கவுண்டரேதான். ''ஒரு ஃப்ரெண்டா வா... ரசிகனா வா... எவ்வளவு நேரம் வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசலாம். ஆனா, பத்திரிகைக்காரனா வராத!'' என்று அன்பாக அதட்டும் அதே கவுண்டமணி. 'இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது’ முதல் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ வரை சாகாவரம் பெற்ற பன்ச்களின் நாயகன் இதோ என் முன் அமர்ந்திருக்கிறார். பல மாதத் துரத்தல், வற்புறுத்தல், ஏகப்பட்ட உரையாடல்களுக்குப் பிறகு நிகழ்ந்த பேட்டி இது. அரியலூர் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தின் '49ஓ’ படத்தின் படப்பிடிப்பு இடைவே…

  12. 3 கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருப்பதால் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். நடிகை நமீதா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் தமிழ்நாட்டில் ஓயாத அலைகளாய் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இப்போது அதுபற்றி அதிகமாக பேசமுடியாது. நல்ல விடயம் நடக்கும் முன்பு, அதுபற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது’’ என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்றும் எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தமிழ்நாட்டில்தான் பிரியவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், 16 வயதில் நான…

    • 0 replies
    • 487 views
  13. ரோமானிய அழகி லூலியாவை மணக்கவிருக்கிறார் சல்மான்கான். பாலிவுட்டில் 48 வயதை தொட்டாலும் இன்னும் பெண்களின் கனவு நாயகனாகவே வலம் வருகிறார் சல்மான்கான். இந்நிலையில் ரோமானிய அழகி லூலியா வந்தூருக்கும், சல்மான் கானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் லூலியாவை திருமணம் செய்து கொள்ள சல்மான்கான் திட்டமிட்டு உள்ளார். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் வாழ்க்கை இப்போது திடீர் பிரகாசமாகியுள்ளது. 15 வயதில் இருந்து இது போன்ற கால கட்டம் எனக்கு அமைந்தது இல்லை. முதல் தடவையாக இந்த மாற்றத்தை அனுபவிக்கிறேன். விரைவில் என் வாழ்வில் நல்ல விடயம் ஒன்று ந…

  14. கடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும் - யமுனா ராஜேந்திரன் - மேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறையையும் தனது படங்களின் பேசுபொருளாகக் கொண்டு கணிசமான படங்களை உருவாக்கினார் அமெரிக்க இயக்குனரான ஆலிவர் ஸ்டோன். கடந்த முப்பதாண்டு கால ஆயுத விடு…

  15. நேற்று நடந்த மலேசியா விமான விபத்தில் நடிகை நமீதா இறந்து விட்டதாக இணையதளங்களில் செய்திகள் கசிந்தன. இதனால் நமீதா, நான் அதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் இருந்து தப்பிவிட்டேன் என உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் மக்களுடன் கொண்டாட வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று நான் மலேசியா செல்ல முதலில் திட்டமிட்டேன். ஆனால் எனது அரசியல் பணிகள் என்னை மலேசியா செல்ல அனுமதிக்கவில்லை. என்னை மலேசியா செல்லவிடாமல் தமிழகத்தில் கட்சி பணியாற்ற சொன்ன மச்சானுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர் அப்படி தடுக்கவில்லை என்றால் சீனாவில் உள்ள தமிழ் எப்.எம்-இல் உலக மகளிர் …

  16. சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷ்ராப், நாயகி தீபிகா படுகோனே, இயக்குனர்கள் கே. பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் சத்யம் சினிமாஸுக்கு வந்த ரஜினியை பார்க்க அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள…

  17. ரஜினியை வைத்து ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக அனுஷ்கா நடிப்பார் எனத் தெரிய வந்துள்ளது. கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்குவார் என்றும், கன்னட - தமிழ் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது. கோச்சடையான் விழாவில் இந்தப் புதிய படம் குறித்து இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கும் கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற எதிர்ப்பார்ப்பும் ஆரம்பித்துவிட்டது. இந்தப் படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஏற்கெனவே ரஜினிக்க…

    • 11 replies
    • 954 views
  18. சென்னை: கோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். அவர் படங்களின் வர்த்தகம் உலகளாவியது. தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் சந்தைப்படுத்த காரணமாக இருந்தவரும் ரஜினிதான். ஆனால் அவரோ தனக்கு இருக்கும் செல்வாக்கை வசூலாக மாற்றுவதிலோ... அரசியலாக்குவதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார். பதவி வாய்ப்புகள் எதையும் ஏற்பதும் இல்லை. பாபா படத்தின் போதே சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா என்ற கேள்வியும் அவருக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பாபா படம் வெளியானபோதே க…

    • 4 replies
    • 783 views
  19. சென்னை: உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இதனால் இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார். இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார் சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு …

  20. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவிஞர் வைரமுத்து 7 பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் சிவனை நோக்கி தவமிருந்த ‘கோச்சடை யான்’ ஆடும் ருத்திர தாண்டவ பாடல் ஒன்றும் அடங்கும். ‘கோச்சடையான்’ என்றொரு படைத் தலைவன். அவன் ஒரு ஞான குருவும்கூட. தீவிர சிவ பக்தன். போர் முடித்துவிட்டு ருத்திர தாண்டவம் ஆடுகிறான். அந்த ருத்திர தாண்டவம் அவ்வளவு அழகாக படமாகி உள்ளது, என்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தப் படத்தின் ரஜினியின் ருத்திர தாண்டவம் தனி சிறப்பாக அமையும். இந்த ஆடலுக்கு இசை மட்டும் இருந்தால் போதும் என்று முதலில் முடிவு எடுத்தார்கள். நீ…

  21. 86வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு! லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகத் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்காக ஆஸ்கார் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 86வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவின் 'டல்லாஸ் பையர்ஸ் கிளப்' படத்துக்காக ஜார்டு லெடோவுக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது, கேத்தரின் மார்ட்டினுக்கு 'தி கிரேட் கேட்ஸ்பை" படத்த…

  22. நம்ம சினிமாக்கள் என்னதான் ஒரு பக்கம் டெவலப் ஆகிட்டே போனாலும் சில நேரங்கள்ல 'சி’ சென்டர் ஆடியன்ஸே ஈஸியாக் கண்டுபிடிச்சுக் கலாய்க்கிற மாதிரியான காட்சிகளை, இன்னமும் நம்ம டைரக்டர்ஸ் திரைக்கதைகளில் கோட்டை விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதெல்லாம் பாத்தா கண்ணு வேர்க்குது. சில சாம்பிள்ஸ் நீங்களே பாருங்க. உங்களுக்கும் கண்ணு வேர்க்கும். 'எந்திரன்’ படத்துல ஒரு காட்சி. எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஐஸ்வர்யாராயைச் சீண்டுகிற ரவுடிகளை அடிச்சுத் துவம்சம் பண்ற நம்ம 'ரோபோ’ ரஜினி பேட்டரி சார்ஜ் இல்லாம கீழே விழுந்துடுறாரு. அங்கே ஒரு எலக்ட்ரிக் போஸ்ட்டுக்குள்ளே கையை விடுறாரு. ('படையப்பா’ படத்தில் பாம்புப் புற்றுக்குள்ளேயே கையை விட்டவராச்சே) அப்படியே அதில் கிடக்கிற வயரை எடுத்து ப்ளக் பண்ணி சார்ஜ…

  23. பிரபல அமலா பால் தனது செல்லபிராணியான நாய்க் குட்டியை கட்டி பிடித்து தூங்குவதை பழக்கமாக கொண்டிருக்கிறார். நடிகைகள் பலர், தங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வருவது வழக்கம். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அவர்களுடைய பொழுது போக்கே இந்த செல்லப் பிராணிகள்தான். அதனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் செல்லப் பிராணிகளுக்காக பிரத்யேக ஏசி ரூம் என்று ஆயிரக்கணக்கிலும் செலவு செய்கின்றனர். நடிகை அமலா பால் தனது செல்லப் பிராணியாக நாய்க் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். உறங்கும்போது இந்த நாய்க் குட்டியை அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வதுடன் அதை கட்டிப்பிடித்துதான் கண்ணே அசருகிறார். அதுமட்டுமில்லங்க, அந்த நாய்க் க…

    • 4 replies
    • 625 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.