வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார்! Posted by: Shankar Published: Monday, April 15, 2013, 9:26 [iST] சென்னை: உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கலந்து கொண்டு கோச்சடையான் பட டிரைலரை வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச படவிழா நடைபெறுகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களுடன், இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. வழக்கமாக பாலிவுட் திரை நட்சத்திரங்கள்தான் இந்த விழாவில் பெருமளவு கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு, கேன்ஸ் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்காக மே மாதம் அவர் பிரான்ஸ் செல்கிறார். அவர் இரு வேடங்களில் நடித்து திரைக்கு வ…
-
- 0 replies
- 337 views
-
-
சில நாட்களுக்கு முன்னர் யூ ரியூப்பில் 80 களின் பாடல்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். அப்படிப் பார்த்தூகொண்டிருந்தபோது எதேச்சையாக ஒரு அறியாத திரைப்படம்பற்றிய விமர்சனத்தை வாசிக்க நேர்ந்தது. பல கருத்துக்கள் அப்படத்தினைப் புகழ்ந்திருந்தன. நான் இதுவரை கேள்விப்பட்டிராத திரைப்படம், அறிந்திராத நடிகர்கள் (சினேகாவைத் தவிர)...இப்படி எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அதைப் பார்க்கலாம் என்று தொடங்கினேன். ஏனென்றால் இப்படி பல படங்களை பார்க்க ஆரம்பித்து சில பத்து நிமிடங்களில் வேறு பாடல்களையோ அல்லது படங்களையோ பார்க்க போய்விடுவது எனது வழக்கம். அதுப்பொலத்தான் இதுவும் என்று எண்ணியே பார்க்கத் தொடங்கினேன். ஆனால் படம் தொடங்கியவுடனேயே, நான் இப்படத்தைப் பார்த்து முடிப்பேன் என்கிற உணர்வு மெல்ல ம…
-
- 5 replies
- 1.2k views
-
-
கற்றது தமிழ் படம் பார்த்த போது நெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலி பல இடங்களில் கேட்கும் போது எனக்கு மிக மானசீகமான பெண் கேட்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில் அவள் சுடிதாரின் நிறம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது. சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போது மனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள். உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல் எல்லையற்ற மனதின் சந்தோச பெருவெள்ளத்தில் காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது.அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள் ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது.ரத்தமும் சதையுமான பல்வேறு பெண்களின் சித்திரங்களை அஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள். …
-
- 1 reply
- 837 views
-
-
மாற்று சினிமா எனும் ஒளியியல் மாயை - கொற்றவை ’மாற்று’ எனும் இந்தச் சொல் மிகவும் கவர்ச்சிகரமானது, போதையூட்டக் கூடியது. அது நேரடியாக எதிர்மறை எனும் பொருள் மட்டுமல்லாது, அறிவுஜீவித்தனம், மேதாவித்தனம், சமூக அக்கறை, பொறுப்புணர்வு ஆகிய குறியீடுகளை தன்னளவில் சுமந்து கொண்டிருக்கிறது. அல்லது அவ்வாறு நிலைபெற்றுவிட்டது எனலாம். மாற்று எனும் இந்தச் சொல் திரைப்படங்களில் எவ்வகையான பிரதிபலிப்புகளைக் கொண்டிருக்கிறது என்பதோடு அதன் சித்தரிப்பு மற்றும் புரிதல்களை உரையாடலுக்குட்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கம். அதேவேளை அடூர் கோபாலக்ருஷ்ணன், ஜான் ஆப்ரஹாம், பசி துரை, சத்யஜித் ரே போன்றோரின் படத்திற்கு பொருந்தகூடிய மாற்று எனும் பொருள் இல்லை இந்த ’மாற்று’. அது கலைப் படம் என்று சொல்லப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்! ‘‘நலமா?’’ ‘‘நல்லா இருக்கேண்ணே... நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா... ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).’’ ‘‘ரஜினியே படம் செய்தால்கூட, ‘வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?’’ ‘‘ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. யாரும் போன்கூடப் பண்றது இல்லை. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படலை. மௌனமா கவனிச்சுக்கிட்டு இரு…
-
- 2 replies
- 950 views
-
-
2014 ஆஸ்கார் விருது வழங்கும் விழாவுக்கான திகதி அறிவிப்பு ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் விருது தான் ஆஸ்கார், ஆனாலும் உலகமே அது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறது. 85 வது ஆஸ்கர் விருதுகள் சென்ற மாதம் வழங்கப்பட்டன. இந்தநிலையில், அடுத்த வருடத்துக்கான (2014) ஆஸ்கர் விருது வழங்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெப்ரவரி மாதம் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். அடுத்த வருடம் வின்டர் ஒலிம்பிக் பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23வரை நடக்கிறது. இதன் காரணமாக பெப்ரவரியில் நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை மார்ச் 2-ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளனர். 2013 நவம்பர் 16 ஆஸ்கர் விருதுக்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கும். டிசம்பர் 27 முதல் நாமினிகளுக்கான வாக்கெட…
-
- 0 replies
- 268 views
-
-
உட்டாலங்கடி உண்ணாவிரதம் நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரண்டனர் தமிழ்த் திரை நட்சத்திரங்கள். ஏப்ரல் 2-ம் தேதி நடிகர்கள் பலரும் கறுப்புச் சட்டையுடன் வந்திருந்தனர். சென்ற தடவை இதே நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தபோது சிலர் மைக்கை பிடித்து மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதுமாதிரியான தர்மசங்கட நிலை இப்போது ஏற்படக் கூடாது என்று நட்சத்திரங்கள் யாரையும் பேசவிடவில்லை. சிலரோ ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் போல தலையைக் காட்டிவிட்டுப் பறந்தனர். உண்ணாவிரதப் பந்தலில் பலரும் கறுப்புச் சட்டையில் அமர்ந்து இருக்க, காலை 11.15-மணிக்கு வெள்ளுடையில் பரபரவென ஆஜரானார் ரஜினி. வந்ததும் சரத், ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா எல்லோரைய…
-
- 6 replies
- 1.1k views
-
-
ரோஜாக்கூட்டம் படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அதன்பிறகு நண்பன் வரை பல படங்களில் நடித்து விட்டார். சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகளாகி விட்டது. இந்த நிலையில், சமீபத்தில் மணிவண்ணன் இயக்கத்தில், உருவாகியுள்ள அமைதிப்படை -2 படமான நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்தார். அப்போது, மணிவண்ணனை ரொம்ப நாட்களாக எனக்கு இயக்குனர் என்றே தெரியாது என்று தெரிவித்தார். நான் நடிக்க வந்த காலகட்டங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால் அவரை ஒரு நடிகராக மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், கரு.பழனியப்பன் படத்தில் நடித்து வந்தபோதுதான், அவர் ஒரு இயக்குனர் என்பது எனக்கு தெரியும் என்று சொன்னார் ஸ்ரீகாந்த். மேலும், அதையடுத்து…
-
- 4 replies
- 834 views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
ஹன்சிகா, அஞ்சலியுடன் உதட்டோடு உதடு வைத்து சூடான முத்தம் சேட்டையில் கொடுத்தாகிவிட்டது. அடுத்து இனி யாருக்கு முத்தம் கொடுக்கலாம் என ரூம் போட்டு யோசித்த ஆர்யா, அடுத்ததாக அவரது நினைவுக்கு வந்தவர் தமன்னாதானாம். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் ஆர்யா, தனக்கு ஜோடியாக தமன்னாவை போடும்படி வலியுறுத்தினாராம். மேலும் படத்தில் கண்டிப்பாக முத்தக்காட்சி இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். அவரது முதல் கோரிக்கை ஏற்கப்பட்டது. முத்தக்கோரிக்கைதான் பெண்டிங்கில் உள்ளது என கே.வி.ஆனந்த் வட்டாரம் தெரிவிக்கின்றது. மாற்றான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தப் படத்திற்கு தயாராகி வருகிறார் கே.வி.ஆனந்த். தன்னுடைய புதிய படத்தில் ரஜினியோ அல்லது விஜய்யோ நடிக்கலாம் என்…
-
- 0 replies
- 419 views
-
-
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த படங்களில் பெரும்பாலானவை வெற்றிப்படங்களாய் அமைய, நேராக மும்பைக்கு பறந்தார் நடிகை ஜெனீலியா. இந்திக்கு சென்று சில படங்களில் நடித்ததும் இந்தி நடிகரும் ஓட்டல் தொழிலதிபருமான ரித்தேஷ் தேஷ்முக்கை ஜெனீலியா திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்த ஜெனீலியா திடீரென திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டோடு இருக்கிறார். பொது இடங்களில் தென்பட்டால் கூட ரித்தேஷ் தேஷ்முக்கின் இமை அகலா பாதுகாப்புடனே இருக்கவும் ஜெனீலியா கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்தி பரவியது. இதையறிந்த ஜெனீலியா “ நான் கர்ப்பமாக இருக்கிறேன் என யார் சொன்னது. தொடர்ந்து 8 வருடங்களாக நடித்துக்கொண்டிருபதால் ஓய்வு …
-
- 10 replies
- 963 views
-
-
Banner: Century Films Cast: Prithviraj, Rima Kallingal, Narain, Samvrutha Sunil, Remya Nambeesan, Swasika Direction: Lal Jose Production: Prem Prakash Music: Ouseppachan இளமையான இனிமையான பொழுது போக்கு படம். அழகான கதாநாயகர்கள் ,மிக மிக அழகான கதாநாயகிகள் .மிக மிக மிக அழகான படப்பிடிப்பு . ஆனால் சாதாரண சினிமா கதை . பிரதாப் போத்தன் நடிப்பு அற்புதம் . யாழ் இளைஞர்களே தவறவிடாதீர்கள் .
-
- 0 replies
- 489 views
-
-
தலைகீழாக விழுந்த சிவகார்த்திகேயன் வைத்தியசாலையில் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நாயகனாக நடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது வேலைனு வந்தா வெள்ளைகாரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற பாடல் காட்சியின் போது சிவகார்த்திகேயன் தலைகீழாக தொங்குவது போல படமாக்கப்பட்டது. அப்போது கயிறு அறுந்து விழுந்தது.அதனால் சிவகார்த்திகேயன் தலை வேகமாக தரையில் மோதியது இதனை கண்ட படப்பிடிப்பினர் உடனடியாக அவரை தூக்கி முதலுதவி செய்தனர். அச்சம்பவத்தால் படப்பிடிப்பு ரத்து செய்யபட்டது. htt…
-
- 0 replies
- 728 views
-
-
ஜி,வி.பிரகாஸ், சைந்தவி காதல் & கல்யாணம்
-
- 6 replies
- 1k views
-
-
நன்றி நக்கீரன். உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் பிஸியாம்! சென்னை: சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், கொளுத்தும் வெயிலில் சில மணி நேரங்கள் வந்து அமர்ந்துவிட்டு, தன் ஆதரவைத் தெரிவித்துச் சென்றார். அஜீத், சூர்யா, கார்த்தி உள்பட பெரும்பாலான நடிகர்கள் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் விஜய் மட்டும் வரவில்லை. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, "தலைவா பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் விஜய். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை,"…
-
- 16 replies
- 2k views
-
-
தமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி...(தமிழ்த் திரையில் சரித்திரம் படைத்தப் பெண்கள்) 1940-50களில் தமிழ் திரையுலகின் 'ஸ்டார் மேக்கர்' என்று அழைக்கப்பட்டவர் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும்,தன் இனியக் குரலால் வசியப்படுத்திய இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் இவரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டுதான் தமிழ்த் திரையுலகில் காலடியெடுத்து வைத்து புகழ் பெற்றார்கள்.ஒருமுறை தான் அடுத்ததாக இயக்கப்போகும் படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காக பிரபல நடிகை எஸ்.பி.எல்.தனலட்சுமி வீட்டிற்கு தன் நண்பருடன் சென்றிருக்கிறார் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.அங்கு இவர்களுக்கு காபி,பலகாரத்தட்டுகளைக் குனிந்த தலை நிமிராம…
-
- 0 replies
- 1.9k views
-
-
சென்னை: செக் மோசடி வழக்கைத் தொடர்ந்த நாமக்கல் தொழிலதிபருடன் பவர்ஸ்டார் சீனிவாசன் சமரசமாகி விட்டார். பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இதையடுத்து தொழிலதிபர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில்வசித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், கடும் முயற்சி மற்றும் செலவுகளுக்குப் பின்னர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து பிசியாக நடித்து வருகிறார். இவரது பல்லழகும், பவர்புல் கலரும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சினிமாக்காரர்களிடமும் கூட செம கிராக்கியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தானே பவர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித்த சீனிவாசனை இப்போது அனைவருமே அன்போடு பவர் ஸ்டார், பவர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். அவரது பெயரே பவராகி விட்டது. சீனிவாச…
-
- 0 replies
- 669 views
-
-
அரசியல் வேண்டாம் என நடிகர்கள் சொல்லக்கூடாது. அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல்தான். அரசியல் மாற்றம், சமூகமாற்றத்துக்கான ஆயுதமாக திரைப்படத்தைப் பயன்படுத்துவோம் என்றார் இயக்குநரும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான். இயக்குநர் மணிவண்ணனின் அமைதிப்படை 2 சீமானும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சீமான் பேசுகையில், “அரசியல் எனக்கு வேண்டாம் என்று எனக்கு முன் பேசிய சத்யராஜ் சொன்னார். அது தவறு. ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அரசியல் இல்லாமல் என்ன இருக்கிறது இங்கு. அரசியலை வேண்டாம் என்பவன் நல்ல மனிதனே அல்ல என்கிறார் மேல்நாட்டு அறிஞர். ஒவ்வொரு மனிதனின் வார்த்தையிலிருந்தும் அரசியல் பிறக…
-
- 2 replies
- 565 views
-
-
நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்: அந்தமானுக்கு தப்பி ஓட்டம்!! நாமக்கல் கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி உள்ளது. தனிப்படை போலீசார் நாளை சென்னை செல்கிறார்கள். இதற்கிடையில் அவர் அந்தமான் தப்பி ஓடி விட்டதாக வழக்கு தொடர்ந்தவரின் வக்கீல் கூறி உள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் வசித்து வரும் இவர் கடந்த 2008-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பொன்னுச்சாமி என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் பெற்றார். இதற்கா…
-
- 5 replies
- 1.9k views
-
-
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, 'பரதேசி' என பெயர் இடப்பட்டிருக்கும் புதிய படத்தை வித்தியாசமான கதை பின்னணியில் இயக்கியிருக்கிறார். 1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. அதர்வா, வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் சுமார் 90 நாட்கள் நடைபெற்றது. செப்டம்பர் 19 லண்டனில் இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது Vikatan Cinema
-
- 16 replies
- 5.9k views
-
-
வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு... கஜ புஜ கஜ கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளது. வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படமும் இதில் அடங்கும். தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது ஏஜிஎஸ். இந்த நிறுவனம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஆனால் மாற்றான் படத்தின் சறுக்கல் காரணமாக, சில மாதங்கள் புதிய படம் அறிவிக்கவில்லை. இப்போது ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டிருப்பதாவது: கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் வடிவேலு நடிக்க, யுவராஜ் இயக்கும் படத்துக்கு கஜ புஜ கஜ தெனாலி…
-
- 0 replies
- 436 views
-
-
ஜூலையில் உலகமெங்கும் கோச்சடையான் இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள முதல் படம் கோச்சடையான். இந்தியாவில் முதல் 3டி படமான இப்படம் மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது. இதில் ரஜினியுடன், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வருகிற மே மாதம் வெளியாகிறது. அதையடுத்து படத்தை ஜூலை மாதத்தில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான் என 5 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் பல முக்கிய ஏரியாக்களுக்கு விற்பனையாகி விட்டது. இந்நிலையில், கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமையும் தற்போது விற்பனையாகியுள்ளது. …
-
- 0 replies
- 428 views
-
-
அம்மா பார்த்த உறவுக்கார மாப்பிள்ளையை மணக்கும் த்ரிஷா? Posted by: Siva Published: Friday, March 15, 2013, 12:27 [iST] சென்னை: நடிகை த்ரிஷா உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். த்ரிஷா இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே அவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் என்று பல காலமாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே தாங்கள் நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர். இந்நிலையில் த்ரிஷாவின் அம்மா உமா தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளாராம். மாப்பிள்ளை வேறு யாருமில்லை அவர்களுடைய உறவுக்காரர் தானாம். அவர்…
-
- 5 replies
- 1k views
-
-
மத்திய அரசின் 60 வது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் விஸ்வரூபம், வழக்கு எண் 18/9 மற்றும் பரதேசி ஆகிய படங்கள் தேசிய விருதுகளைப் பெற்று தமிழ்ப்பட உலகிற்கு பெருமை சேர்த்துள்ளன. முஸ்லீம்பெருமக்களால் படுபயங்கரமாக எதிர்க்கப்பட்ட கமலஹாசனின் விஸ்வரூபத்திற்கு சிறந்த கலை இயக்குனர் மற்றும் சிறந்த நடன இயக்குனருக்கான விருது ஆகிய இரண்டு தேசிய விருதுகளும், சிறந்த மாநில மொழிப்படமாக வழக்கு எண் 18/9 என்ற திரைப்படமும், சிறந்த ஆடை அமைப்பிற்காக பரதேசி படத்திற்கும் விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் தமிழ்த் திரையுலகம் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கின்றது. மேலும் சிறப்பான ஒப்பனை செய்த ராஜா-வுக்கு சிறந்த ஒப்பனை கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அள…
-
- 0 replies
- 455 views
-
-
காதலர் கென்யே வெஸ்ட்டுக்கு, கி கர்தஷிக்கும் பிறக்கப்போகும் குழந்தை குறித்து ரசிகர்களுக்கு தினந்தோரும் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கின்றது. கர்ப்பம் குறித்து நேற்று கிம் கர்தஷியான் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'கர்ப்பமாக இருப்பதும், குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் எளிது என நினைத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததிற்கு மேல், கர்ப்பமாக இருக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த சாக்லேட் கூட சாப்பிட முடியவில்லை. இவ்வளவு கஷ்டம் என்று தெரிந்திருந்தால் நான் குழந்தை பெறுவதற்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியதும் அருகிலிருந்த அவருடைய காதலர் சிறிது அதிர்ந்துவிட்டார். http://www.thedipaar.com/new/cinema/cinema.php?id=19319&c…
-
- 0 replies
- 523 views
-