வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்க வருகிறார். இந்தியிலோ, தமிழிலோ அவரை அறிமுகப்படுத்தாமல் முதலில் தெலுங்கில் களம் இறக்குகிறார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவிக்கு, கணவர் போனி கபூர் மூலம் 2 மகள்கள். இவர்களில் ஜான்வியை நடிகையாக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரீதேவி. அவரை தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக்க தீர்மானித்துள்ளார். தமிழில் நிறையப் படங்களில் நடித்தவரானாலும், தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தெலுங்கு சினிமா மூ்லம்தான் இந்திக்கு டிக்கெட் கிடைத்தது ஸ்ரீதேவிக்கு. காரணம், தமிழை விட தெலுங்கில்தான் ஸ்ரீதேவி நிறைய கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதன் காரணமாக தெலுங்கு சினிமா மூலம் தனது மகளை நாயகியாக்கவுள்ளார் ஸ்ரீதேவி. நாகார்ஜூனாவின் மகன் அகில் வளர்ந்து வாலிப…
-
- 0 replies
- 711 views
-
-
-
பி.யூ.சின்னப்பா - வாழ்க்கை குறிப்பு சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி எதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். சிறு வயதிலேயே பல வேடங்களில் நடித்து ரசிகர்களை அசர வைப்பாராம். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். தம் தந்தை நாடகத்தில் பாடி வந்த பாட்டுகளையெல்லாம் சின்னப்பா பாடிக்கொண்டிருப்பாராம். அத்துடன் புதுக்கோட்டையில் நடந்த பஜனைகளில் அவர் அடிக…
-
- 0 replies
- 711 views
-
-
சென்னை: சிங்கம் 2 படப்பிடிப்பின் போது காலில் அடிபட்டு இனிமேல் நடக்க முடியாது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்ட ஸ்டண்ட் கலைஞரின் குடும்பத்திற்கு விஜய் உதவி செய்துள்ளார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்த படம் சிங்கம் 2. சிங்கம் படத்திலேயே சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுத்தார். சிங்கம் 2 படத்திலும் சண்டைக் காட்சிகளில் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுக்கும் காட்சிகளுக்கு குறைவில்லை. சிங்கம் 2 படத்தின் ஒரு காட்சியில் கடலில் நிற்கும் கப்பலில் இருந்து வில்லனை சூர்யா தூக்கி வீச வேண்டும். இந்த காட்சியில் ரஞ்சன் என்பவர் நடித்திருந்தார். அவர் ஹரியின் பல படங்களில் அடியாளாக நடித்தவர். ரஞ்சனுக்கு காயம் சண்டை காட்சியில் சூர்யா ரஞ்சனை அடித்து நொறுக்க…
-
- 1 reply
- 711 views
-
-
‘மங்கத்தா’ படத்தில் நடித்த மகத்தும், தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் கடுமையாக மோதிக்கொண்டனர். மகத்தை மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து உதைத்தனர். வயிற்றிலும் தொண்டையிலும் பலமான குத்து விழுந்தது. இதையடுத்து மகத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையும் மேற்கொண்டார். உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நடிகை டாப்சியால் இந்த தகராறு நடந்தாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன. மனோஜ் மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். மகத் போலீசில் புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனோஜிடம் விசாரணை நடத்த தயாரானார்கள். ஆனால் …
-
- 0 replies
- 711 views
-
-
ஆனந்த யாழை மீட்டும் இளைஞன் ஜெய சரவணன் யுவன் சங்கர்ராஜா - 100 எங்கோ ஆடிக்கொண்டிருந்த ஆறு வயதுப் பிள்ளையை பியானோ தட்டிப்பார்க்க அழைக்கிறார் அப்பா. இன்று சினிமா ரதமேறி வலம்வரும் ஜூனியர் மேஸ்ட்ரோவின் மைக்ரோ பிரதிதான் அந்த வாண்டு. தந்தைக்குத் தெரிந்தும் தெரியாமலும் அன்று தொட்டுப் பார்த்த கருவிகள்தான் இன்று யுவன் சங்கர் ராஜாவின் கனவுகளை நனவாக்கிக்கொண்டிருக்கின்றன. நரம்புகளை மீட்டியே வரம்புகளைக் கடந்து சாதனை படைத்த பரம்பரையில் 1979இல் அந்தப் புது மெட்டு பிறக்கிறது. பள்ளியில் படிப்பென்பது ஒரு கட்டாயமாக மாறிப்போன சூழலில் ஓர் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சிக்கியவருக்குப் பதினாறாவது வயதில்தான் 'அரவிந்தன்' படம் மூலம் இசைப் பயணத்தைத் தொடங்க முடிந்தது. அம்மாவிடம் அன்பையும் அப்பாவிடம…
-
- 0 replies
- 710 views
-
-
உடலை வலுவாக கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் அனைவருக்கும் உதாரணமான மனிதராக இருப்பவர் அர்னால்டு ஸ்வார்ஸ் நேகர். இவர் ஒரு பாடிபில்டர்,ஹாலிவுட் நடிகர்,அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர். பலசாலியாக பொய்த் தோற்றம் காட்டும் நட்சத்திரங்களிடையே, போலியான புஜபலம் காட்டுபவர்களிடையே நிஜவலிமை காட்டிவரும் ஒரே நடிகர் அர்னால்டு. உடற்கட்டை விரும்புவோர் மட்டுமல்ல உலகப் பட ரசிகர்களிடையேயும் அர்னால்டுக்கு தனி... ரசிகர் கூட்டம் இருக்கிறது. அர்னால்டு நடித்து 'தி லாஸ்ட் ஸ்டாண்ட்' (The Last Stand) படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படம் அர்னால்டு ரசிகர்களுக்கு 2013 தொடக்கத்திலேயே விருந்தாகப் போகிறது. இது ஒரு முழுநீள ஆக்ஷன் படைப்பு. அர்னால்டுடன், ஜானி நாக்ஸ் வில்லி.லூயிஸ் கஸ்மேன், ஜேமி அ…
-
- 0 replies
- 710 views
-
-
The Last Halt | கடைசி தரிப்பிடம் | Sujeeth G | Siva Santhakumar | shathiesh படத்தை வாடகை முறையில் யூட்டியுப்பில் பார்க்கலாம். இயக்கினடுடைய செவ்வி... படம் நன்றாக உள்ளது, நீங்களும் பார்த்து கருத்துக்களை பகிரவும் !!!
-
- 1 reply
- 710 views
-
-
பிக்பாஸ் பிரபலமான கணேஸ் யாழில் பிக்பாஸ் பிரபலமான கணேஸ் யாழில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன் புகைப்படம் எடுத்து கணேஷ் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். http://newuthayan.com/story/82626.html
-
- 5 replies
- 710 views
-
-
அஜீத்தின் பிரியாணி ட்ரீட்டில் அசந்து போயிருக்கிறது மங்காத்தா டீம். இந்த தீபாவளியை மங்காத்தா குழுவினருடன் கொண்டாடி இருக்கும் அஜீத், தானே தயாரித்த பிரியாணியை எல்லோருக்கும் வழங்கியதுதான் இதில் ஆச்சரியம். 'அசல்' படத்தின் படுதோல்விக்குப் பின்னர் ரொம்பவும் அப்செட்டான அஜீத் 'நான் கார் ரேசில் கலக்கப் போகிறேன் என கிளம்பிவிட்டார். ஆனாலும் அவரை விடாமல் இழுத்துவந்து 'மங்காத்தா'வில் நடிக்க வைத்திருக்கிறார்கள் தயாநிதி அழகிரியும் வெங்கட் பிரபுவும். ராத்திரி பகல் பார்க்காமல் இதுவரைக்கும் காட்டாத அஜீத்தை இதில் காட்டுவோம் என்ற தீர்மானத்தோடு உழைத்து வருகிறார் வெங்கட் பிரபு. தீபாவளியைத் தொடர்ந்து (நவம்பர் 7) தன் பிறந்த நாளையும் அஜீத்துடன் கொண்டாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த தீபாவள…
-
- 0 replies
- 710 views
-
-
தாங்க்யூ பட் ஸ்பென்சர்! பட் ஸ்பென்ஸரைத் தெரியுமா உங்களுக்கு? பழைய கௌபாய் படங்களைப் பார்க்கிற வழக்கம் உள்ளவர்களால் இவரை மறக்க முடியாது. இவரும் டெரன்ஸ் ஹில்லும் ஜோடி சேர்ந்து கலக்கிய படங்கள் இருபது இருக்கும். லாரல் & ஹார்டி போல கௌபாய் படங்களில் இவர்கள் இணைந்து வந்தால் ரசித்துப் பார்க்கும் கூட்டமே உண்டு. பட் ஸ்பென்ஸர் நேற்று - 27 ஜூன் 2016 - தனது 86வது வயதில் மரணமடைந்தார். கொஞ்சம் குண்டான பட் ஸ்பென்ஸர், ரியல் லைஃபிலும் ஒரு ஜாலியான பேர்வழி. அவர் பெயரிலேயே அது தெரியும். அவரது இயற்பெயர் Carlo Pedersoli. 1951ல் நடித்த முதல் படத்தில் ஆரம்பித்து ஐந்தாறு படங்களில் அந்தப் பெயரில்தான் வலம் வந்தார். ஒரு படத்தில் நடிக்கும்போது, காரணமாக - அது என்ன என்பதை கீழே …
-
- 3 replies
- 710 views
-
-
அயன் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தர் கே.வி.ஆனந்த்! மாற்றான் படம் படுதோல்வியாக அமைந்தாலும், அந்தப்படத்தை பார்த்த ரஜினி, கே.வி.ஆனந்தை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். அந்தகேப்பில் ரஜினிக்கு கே.வி.ஆனந்த் சொன்ன கதை பிடித்து விட்டது! ஆனால் கோச்சடையன் படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தனுஷை இயக்க தயாராகிவிட்டார் கே.வி.ஆனந்த்! இடையில் தனுஹை இயக்கும் முன்பு விக்ரம் படத்தை இயக்கவும் முடிவ்பு செய்தார். ஆனால் ஐ படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் முடியும் என்ற சூழல் இருப்பதால் தற்போது தனுஷை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார்! கதை யாரை ஹீரோவாக கேட்கிறதோ அவரை மட்டுமே தேடிப்போகும் கே.வி.ஆனந்த், தற்போது தனுஷுக…
-
- 0 replies
- 710 views
-
-
நயன்தாரா தற்கொலையா? : டுவிட்டரில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த படம் கஜினி. இந்த படம் ஹிந்தியிலும் இதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போது தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் ஹிந்தியில் ஜியாகான் நடித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஹிந்தி நடிகை ஜியாகான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானபோது, சிலர் கஜினி படம் என்றதும் நயன்தாராவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு பேஸ்புக், டுவிட்டர்களில் செய்தி பரப்பி விட்டார்களாம். இதனால் கேரளாவில் உள்ள நயன்தாராவின் பெற்றோரும், உறவினர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தார்களாம். அதனால் உடனடியாக நயன்தாராவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளனர். …
-
- 6 replies
- 710 views
-
-
இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்! இன்றைய தேதிக்கு இணையதளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை நீதானே என் பொன்வசந்தம்தான்! லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒலிக்கும் இந்த இசைக் கோர்வை, இசைஞானியின் புதிய இசைப் பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது. இதுபோன்று இன்னும் சில இசைக் கோர்வைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை…
-
- 0 replies
- 709 views
-
-
[size=6]Maatran official Trailer 2 HD[/size] http://youtu.be/M7kQXTHnkMI
-
- 3 replies
- 709 views
-
-
விஜய் நடிக்கும் 'காவலன்' பொங்கலுக்கு ரிலீஸ். படாடோப விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ரோமேஷ் பாபுஎன்பவர்தான் தயாரிப்பாளர். சுமார் 380 தியேட்டர்களில் 'காவலன்’ ரிலீஸ் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய தலைவலி வந்து சேர்ந்தது. இந்தப் படத்துக்கான வெளிநாட்டு உரிமையை சிங்கப்பூர் சரவணன் என்பவர் வாங்குவதாகக் கையெழுத்துப் போட்டார். ஆனால், 'இதோ வர்றேன்’ என்று போனவர்... போனவர்தான். ஆளையே காணோம். 'படத்தை நீங்கள் வாங்க வேண்டாம்’ என்று அவரை யாரோ மிரட்டியதாக விஜய் தரப்பு சந்தேகப்பட்ட நிலையில்... படத்தை வெளியிடுவதற்கான தடைகள் நாலா பக்கமும் எழுந்து வர ஆரம்பித்தன.'' விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து பொக்கே கொடுத்து வந்த…
-
- 1 reply
- 709 views
-
-
ரத்தம் தெறிக்க, அலறல் சத்தம் ஒலிக்க, வெறி அடங்கும் வரை தேடித் தேடி நடத்தப்படும் பழிவாங்கும் படலம்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒன்லைன். கடலை வெறித்துப் பார்த்தபடி, பீடியை பற்றவைத்துக்கொண்டு ஆசுவாசமாக நின்றுகொண்டிருக்கிறார் சங்கய்யா (செல்வராகவன்). அருகிலிருந்த அறையிலிருந்து சங்கரய்யாவை நோக்கி பொறுமையாக நடந்து வருகிறார் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). எந்த வித பதற்றமும் இல்லாமல், 'உயிரோட எரிக்கணும் மண்ணெண்ணய கொடு' என கேட்கிறார். பொறுமையாக சம்பந்தபட்டவரை எரித்து முடித்து அவர்கள் அங்கிருந்து நடந்து செல்லும் வரை அந்த 'சிங்கிள் ஷாட்' நீண்டுகொண்டேயிருக்கிறது. திரையிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள்ளும் அந்த 'சிங்கிள் ஷாட்' மூலமாக ந…
-
- 7 replies
- 708 views
-
-
சிலம்பாட்டத்தில் கைதேர்ந்த சமந்தா - வீடியோ இணைப்பு நடிகை சமந்தா சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராக உருவாகியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். சமந்தாவுக்கும் - தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ…
-
- 2 replies
- 708 views
-
-
‘‘எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ரோல் இருக்கிறது. அதை மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியைத்தான் ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் செய்துவருகிறேன்’’ என்கிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி. ‘பாகுபலி’ படத்துக்குப் பாடல்கள் மற்றும் வசனம் எழுதுவதை முடித்த கையோடு பாரதிராஜா நடித்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். பாடல்கள், வசனம் ஆகியவற்றைத் தாண்டிக் கதை விவாதம், கணினி வழி மொழி ஆளுமை என்று எப்போதும் பிஸியாக இருப்பவரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகச் சந்தித்தோம். ‘பாகுபலி’ படத்தில் பங்களிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது? ‘நான் ஈ’ படத்துக்குப் பாடல்கள் எழுதினேன். அப்போது தெலுங்குப் பாடல்களைவிடத் தமிழ்ப் பாடல்கள் நன்றாக இருப்பதாகக் கூ…
-
- 3 replies
- 708 views
-
-
ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது. துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி. அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அ…
-
- 0 replies
- 708 views
-
-
சென்ற வாரம் 12ந்திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இiணைந்தவர்கள் பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி கண்டார்கள். ரஜனிகாந்தின் வாழ்க்கை வரலாறு முழுவதும் அங்கு அலசப்பட்டது எனலாம். அவருக்கு சக்தி வாய்ந்த கண்கள், அதைப் பார்த்துத்தான் பாலசந்தர் அவரைத் திரையுலகுக்குக் கொண்டு வந்தார், அவருடைய பணிவு அவருடைய அது அவருடைய இது எனப் புகழ்ந்து புகழ்ந்து கடைசியில் அவரைக் கடவுளாகவே சொல்ல ஆரம்பிpத்து விட்டார்கள்! ரஜனியுடன் அவருடைய வருடாந்த ஆன்மீகப் பயணத்தில் செல்பவரையும் பேட்டி கண்டார்கள். அவர் தங்களுடைய இமயமலைப் ப…
-
- 2 replies
- 708 views
-
-
என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இருக்காது. அதை கமல்சார்தான் கரெக்ட் பண்ணார் என்கிறார் நடிகை த்ரிஷா. கமலுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் இது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம், கமல்ஹாஸனுடனான அனுபவம் என போகிற இடமெல்லாம் மன்மத அம்பு குறித்து ஒரு செய்தியாவது சொல்லத் தவறுவதில்லை த்ரிஷா. இந்தமுறை, கமல் எப்படி தனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்பதை இப்படிக் கூறுகிறார் த்ரிஷா: “கமல் சாருடன் நடிக்கணும்கிறது எனக்குப் பல வருஷக் கனவு. ‘தசாவதாரம்’ படத்தில் கமல் சார் நடிக்கக் கூப்பிட்டிருந்தார். அப்போ என் கையில் டேட்ஸ் இல்லை. அடுத்து ‘மர்மயோகி’ வாய்ப்பு. எக்கச்சக்க ஹோம் வொர்க் பண்ணி வச்சிரு…
-
- 0 replies
- 708 views
-
-
கமலிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர், வார்த்தைகளில் வகுப்பெடுக்க ஆரம்பித்தால் அறிஞர்கள்கூட இந்தக் கலைஞானியிடம் காதுகளை கடன் கொடுத்துவிடுவார்கள். போன வாரத் தொடர்ச்சி இதோ.... ‘மன்மதன் அம்பு’ படத்திற்கு நீங்கள் எழுதியவற்றை கவிஞர் வாலியின் வீட்டிற்குப் போய் படித்துக் காட்டி கருத்துக் கேட்டீர்களாமே? ‘‘நிறை குறைகளைத் தெரிந்துகொள்வதற்காக நான் வழக்கமாகச் செய்கின்ற பழக்கம்தான் இது. என்னுடைய பதினாறு, பதினேழு வயதில் எழுதிய கவிதைகளை கவியரசு கண்ணதாசனிடம் படித்துக் காட்டி கருத்துக் கேட்டிருக்கிறேன். அதேபோல் என்னுடைய கவிதைகளை வைரமுத்துவிடம் கூட படித்துக்காட்டுவேன். அவருக்கு வயதானதே என்னுடைய கவிதைகளைப் படித்துதான். கலைஞரிடம் படித்துக்காட்டி இருக்கிறேன். நல்ல வார்த்தைகளை…
-
- 0 replies
- 707 views
-
-
ஒருபோதும் நடிகரைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வெயிட்டான தொழிலதிபரைத்தான் திருமணம் செய்து கொள்வேன். அப்போதுதான் தொழிலுக்கு உதவியாக இருப்பார், என்கிறார் நடிகை சமீரா ரெட்டி. பாலிவுட்டில் முன்னணி நடிகையான சமீரா, இப்போது தமிழ், தெலுங்கிலும் பிஸியாகிவிட்டார். இவர் தந்தை ஒரு தொழிலதிபராம். அதனால் தானும் ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்து கொள்ளவே விரும்புவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "என்னை பிற நடிகர்களுடன் இணைத்து வரும் கிசு கிசுக்களைப் படித்தால் காமெடியாக உள்ளது. நிச்சயம் ஒரு நடிகரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நடிகர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அதேபோல தொழில் உலகைப் பற்றியும் தெரியும். என் தந்தை பெரிய பிஸினஸ்மேன். எனக்கு…
-
- 1 reply
- 707 views
-
-
ரொம்ப தேங்க்ஸ்ங்ணா... சினிமாவுல நான் பாட்டுக்கு ஓடிட்டே இருக் கேன். அப்போ நடிக்கிற படங் களைப் பத்தி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிட்டு இருக் கும். ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 20 வருஷமாயிருச்சுனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னப்போ, 'அட’னு சின்ன ஆச்சர்யமா இருந்துச்சு. சிறந்த நடிகனுக்கான விகடன் விருது அந்த ஆச்சர்யத்தைப் பெரிய சந்தோஷமாக்கிருச்சு!''- நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் விஜய். 'துப்பாக்கி’யின் 100 கோடி வர்த்தகம், அடுத்த படத்துக்கான எதிர் பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது. ''அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்றேன். பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனோட வாழ்க்கை. 'Life of an actor gets tough and tougher' சொல்வாங்க…
-
- 0 replies
- 706 views
-