Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வியாழக்கிழமை, 14, ஜூலை 2011 (8:50 IST) ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது: அமிதாப்பச்சன் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், தனது சொந்த தயாரிப்பில் புத்தா ஹோகா தேரா பாப்' என்ற இந்தி திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி முடிந்த நிலையில், ஆரக்ஷான்' என்ற அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் ஆகஸ்டு 12ந் தேதி வெளியாகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடைய இணையதள பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் பணி மிகவும் முக்கியமானது. அதிக அளவிலான மக்களின் கவனத்துக்கு அதைக…

  2. Started by வீணா,

    நீங்கள் இந்த உலகில் பெளதீக ரீதியாக மனிதன் என்கிற அடையாளத்தைத் தவிர சமூகத்தில் என்னவாக அடையாளப்படுத்தப் படுகிறீர்கள்? உங்கள் பெயர், முகம், பதவி தவிர்த்துப் பார்த்தால் நீங்கள் வாழும் தேசத்தின் குடிமகனாக, நீங்கள் சார்ந்த இனத்தவராக உங்களுக்கென்று ஒரு அடையாளம் நிச்சயமிருக்கும். ஆனால் பெயரையோ, முகத்தையோ, இனத்தையோ, வாழும் ஊரையோ, தேசத்தையோ அடையாளமாக சொல்லமுடியாதபடி எத்தனையோ லட்சம் பேர் ஏதோ ஒரு தேசத்தின் எல்லைப் பகுதியில் அல்லது ஜனசஞ்சாரத்தில் ஒளிந்து கொண்டபடி, தங்கள் இயல்பான அடையாளத்தை தொலைத்துவிட்டு ‘அகதிகள்' என்ற பெயரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் மிக அதிக எண்ணிக்கையில் அகதிகளாக வாழ்பவர்கள் பாலஸ்தீனியர்கள். அதற்கு அடுத்தபடியாக ஆப்கானியர்கள். பொதுவாக…

  3. தென்மேற்குப் பருவக்காற்று -- விமர்சனம் ”கள்ளிக்காட்டில் பெறந்த தாயே என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே….” என்று தொடங்கும் வைரமுத்துவின் வைரவரிகளோடு அம்மாவை வணங்கி பாடும் பாடலோடு தென்மேற்குப் பருவக்காற்று நம்மை இதமாக வருடத் தொடங்குகிறது. தாயை வணங்கிப்பாடும் பாடலை விட சிறந்த இறைவணக்கம் வேறு ஏது..? நாயகனில் கதாநாயகியாக ஆரம்பித்த சரண்யாவின் பயணம் இன்று 100 வது படமான தென்மேற்குப் பருவக்காற்று –ல் அம்மாவாகத் தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவு சுலபத்தில் அம்மாவாக ”நடிக்க” முடியாது. தாய்க்கே உண்டான ஒரு பரிவு,பாசம்,செல்லக் கோபம்,மகனின் எதிர்காலத்தினைப் பற்றிய பயம், அவன் நல்ல நிலைக்கு வந்து விட்டாலோ எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத மகிழ்ச்சி இப்படி பல உணர்…

  4. புதன்கிழமை, 27, ஏப்ரல் 2011 (19:10 IST) நடிகர் கார்த்தி திருமணம் பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல படங்களில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் திருமணம் முடிவாகியுள்ளது. ஈரோட்டைச்சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்கிறார். இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார், ‘’ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம் செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஜூலை 3ம் தேதி கார்த்தி -ரஞ்சனி திருமணம் நடைபெருகிறது’’ என்று அறிவித்துள்ளார். nakkheeran

    • 42 replies
    • 8.6k views
  5. விவாகரத்துக்கு பிரபுதேவா - ரம்பலத் இருவரும் சம்மதம்?! : 7ம் திகதிக்கு வழக்கு ஒத்திவப்பு சென்னை குடும்ப நல நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நடிகர் பிரபுதேவா - ரம்லத் விவாகரத்து வழக்கின் போது நேரில் ஆஜரான இருவரும் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரம்லத்துக்கு சென்னையில் இரண்டு வீடு, ஹைதராபாத்தில் ஒரு வீடு என மொத்தம் மூன்று வீடுகளும், 10 இலட்சம் ரூபாய் பணத்தொகையும், ஜீவனாம்சமாக கொடுப்பதற்கு பிரபுதேவா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருவரும் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், நயன் தரா - பிரபுதேவா திருமணம் உறுதியாகியுள்ளது. திருமணத்திற்கு பின் நடிப்பதற்க…

  6. வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: டைரக்டர் பாக்யராஜ் தேர்தல் முடிவுக்கு பிறகு `மைக்'கை பிடித்து பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று டைரக்டர் கே.பாக்யராஜ் பேசினார். `களவாணி' படத்தை டைரக்டு செய்த ஏ.சற்குணம் அடுத்து, `வாகை சூட வா' என்ற புதிய படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவில், டைரக்டர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசும்போது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்ததையும், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இனிமேல் அதிகமாக பே…

  7. புதன்கிழமை, 29, ஜூன் 2011 (8:23 IST) சினிமா பட உலகில் இருந்து விலகல் : கதறி அழுதார் நயன்தாரா பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இரண்டு பேரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். கணவர்-மனைவி போல் ஒரே ஓட்டலில் தங்கினார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது. இந்த நிலையில், பிரபுதேவா-ரமலத் இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கு கோர்ட்டி…

  8. Posted by சங்கீதா on 29/06/2011 in புதினங்கள் இந்த வருடம் நடந்த (2011) 58ம் இந்திய தேசிய திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் 14 விருதுகளைப் பெற்றுள்ளன. இந்த வரலாறு காணாத சாதனையை வட இந்தியத் திரைப்படவுலகம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்திரன், ஆடுகளம், மைனா, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும் இந்த 14 விருதுகளையும் பெற்றுள்ளன. எந்திரன், ஆடுகளம் ஆகிய படங்களை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மைனா என்ற படத்தைக் கருணாநிதியின் மகன் ஸ்ராலினின் புதல்வன் உதயநிதி தயாரித்தார். சிறந்த நடிகராக ஆடுகளம் படக் கதாநாயகன் தனுஷ் பெற்றுள்ளார். ரஜினிகாந்தின் முதலாவது மகளின் கணவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தென் மேற்குப் பருவக் காற்ற…

  9. 12-வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விழா கனடாவின் டோரண்டோ நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது மை நேம் கான் படத்துக்காக ஷாருக்கானுக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது அனுஷ்கா ஷர்மாவுக்கு பந்த் பாஜா பாராத் படத்துக்காக கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பந்த் பாஜா பாராத் படத்துக்காக ரண்வீர் சிங்குக்கு கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தபாங்க் படத்துக்காக சோனாக்ஷி சின்ஹாவுக்கு கிடைத்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸுக்காக வி.ஸ்ரீனிவாஸ் மோகனுக்கும்…

  10. அவன்-இவன் அழுத்தமில்லாதவன் பெரிய ஹீரோக்கள் ஆர்யா, விஷால் கூட்டணியில் பாலா இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புடன் சென்றேன்..அதை படத்தின் பின்பாதி மட்டும் ஓரளவுக்கு பூர்த்தி செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.... பொதுவாக கடைநிலை மனிதர்களின் உறவுகளையும் ,உணர்வுகளையும் அழுத்தமாகவும்,அழகாகவும் படம் பிடிக்கும் பாலா அவன்-இவன் படத்தில் ஏனோ அங்கும் இங்கும் தடுமாறி இருக்கிறார்.. முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை தெளிவாக உணர்த்துவது சிறந்த திரைக்கதைக்கு அழகு என்று சொல்வார்கள்.. இந்த படத்திலோ முதல் பாதி முடியும் வரை பாலா என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை ..... திர…

    • 5 replies
    • 2.1k views
  11. இது முழுக்க முழுக்க உண்மையே, துளியும் கற்பனை கிடையாது!" என்ற தைரிய அறிவிப்போடு வெளியாகத் தயாராக உள்ள, ஈழ யுத்தத்தையும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளையும் விளக்க முயற்சிக்கும் படமான செங்கடலுக்கு சென்னை சென்சார் குழு தடை விதித்துள்ளது. ஒரு கரையில் ரத்தம் வடிக்கும் இலங்கைத் தமிழன், மறுகரையில் கண்ணீர் வடிக்கும் தமி்ழக தமிழன், இடைப்பட்ட நீர்ப்பரப்பில் மீன் பிடிக்கப் போய் உயிரை விடும் தமிழ் மீனவன்... இந்த மூன்று சமூகங்களின் துன்பங்களையும் அதற்குக் காரணமான காரணிகளையும் அடிப்படையாக வைத்து செங்கடல் திரைப்படம் தயாராகியுள்ளது. லீனா மணிமேகலை உருவாக்கியுள்ள இந்தப் படம், விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்போடு தயாராகியுள்ளது. ஆனாலும் இந்தப் படம்…

  12. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்) ஒன்றி ணைந்து ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. மாநில, தேசிய அரசியல் அரங்கில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த இணைப்புத் திட்டம் குறித்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன்... ‘‘1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டபோது இருந்த அரசியல் சூழல், காலகட்டம் வேறு. உதாரணமாக, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்ல கம்யூனிஸத்தின் ஆட்சி. ஆனால் இப்போ உள்ள நிலைமையில் நிறைய மாற்றங்கள். மக்களின் அன்றாட பிரச்னைகளில் தனியாக நின்று போராடினால் வேலைக்கு ஆகாது. இரண்ட…

    • 0 replies
    • 607 views
  13. இரண்டாவது மகாத்மா மண்டேலாவா... மகிந்தாவா? - பாலாவின் கிண்டல் சமூக அவலங்களையும், இன உணர்வையும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் பதிவு செய்வது ஒரு பிரச்சாரகரின் பாணி. அதையே வெகு நாசூக்காக பதிவு செய்வது படைப்பாளியின் ஸ்டைல். உலகமே போர்க்குற்றவாளி என்று கூறி ஒதுக்க முயலும் ஒரு ஆட்சியாளரை, இந்தியா மட்டும் எந்த அளவு தாங்கிப் பிடிக்கிறது என்பதைக் காட்ட பாலா என்ற படைப்பாளி ஒரு காட்சி வைத்திருக்கிறார் அவன் இவனில். டுடோரியல் கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்கு டிக்டேஷன் வைக்கும் ஆசிரியர் இப்படிக் கேட்பார்: "உலகில் இரண்டாம் மகாத்மா எனப்படுவர்... அ) நெல்சன் மண்டேலா ஆ) மகிந்தா ராஜபக்சே" என்று கூறிவிட்டு, எது சரியான விடை என்று கேட்பார். :lol: :lol: மாண…

    • 8 replies
    • 1.4k views
  14. சனிக்கிழமை, 18, ஜூன் 2011 (10:17 IST) நாளை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல்: மாலையில் முடிவு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு இயக்குநர் அமீரும், நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு பிரவு சாலமன், வெங்கட் பிரவு, கதிர், சிம்புதேவன், வசந்தபாலன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பாரதிராஜா தலைமையிலான அணியை எதிர்த்து, முரளி என்பவர் தலைமையில் உதவி இயக்குநர்கள் அணி போட்டியிடுகிறது. நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசையமைப்பாளர் சங்க வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற…

  15. . குமாரசாமிதான் என் கணவர் - நடிகை குட்டி ராதிகா பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி என்னைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது எனக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது, என்று கன்னட நடிகை குட்டி ராதிகா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் குமாரசாமி. இந்த நிலையில் அவரது கேரக்டருக்கே பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் வந்து சேர்ந்துள்ளது குட்டி ராதிகாவின் இந்த அதிரடி பேட்டி. இயற்கை படம் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் குட்டி ராதிகா. அடிப்படையில் இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வந்தார். ஆனால் திடீரென்று இவர் க…

  16. இயக்குனர்கள் சங்கத் தேர்தல் - கொதிப்பும், கசப்பும் இயக்குனர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கயிருக்கிறது. தேர்தல் அறிவுப்பு வெளிவந்த நாள் முதல் சங்கத்தில் நடந்து வரும் மாற்றங்களும், மோதல்களும் தமிழ் சினிமாவின் ஸ்கி‌‌ரீன் ப்ளேயைவிட மர்மங்கள் நிறைந்தது. பாரதிராஜா தலைமையில் ஒரு அணியினரும், அமீர் தலைமையில் இன்னொரு அணியினரும் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தனர். இவர்கள் தவிர உதவி இயக்குனர்கள் புதிய அலைகள் என்ற பெய‌ரில் தனி அணியாக களத்தில் குதித்தனர். பாரதிராஜா அணிக்கும், அமீர் அணிக்குமான போட்டி அரசியலை முன்வைத்து என்பதை அனைவரும் அறிவர். சீமான் தமிழர் பிரச்சனைக்காக சிறை சென்ற போது சீமானின் தனிப்பட்ட விஷயம் அது, அதற்கும் சங்கத்துக்கும் தொடர்ப…

  17. பாடிகார்ட் மலையாளம் படத்தின் நடித்த நயன்தாரா, அதன் தமிழ் வடிவமான காவலனில் நடித்த அசின் இருவருமே சிறப்பாக நடித்திருந்தனர். காரணம் அவர்கள் மிகச் சிறந்த நடிகைகள். அதே நேரம் அவர்களை நான் காப்பியடிக்க விரும்பவில்லை என்றார் நடிகை த்ரிஷா. மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படம் தமிழில் காவலன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. மலையாளத்தில் நயன்தாராவும், தமிழில் அசினும் நாயகிகளாக நடித்தனர். இப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. வெங்கடேஷ், திரிஷா ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படம் குறித்து த்ரிஸா கூறுகையில், "பாடிகார்ட் படத்தின் கதை அற்புதமானது. உணர்வு பூர்வமான காதலை உள்ளடக்கியது. இதில் எனது கேரக்டர் ரொம்ப பிடித்துள்ளது. ரொம்ப ஈடுபாட்டோடு நடித்து வருகிறேன். நயன்தாரா, …

    • 2 replies
    • 1.2k views
  18. திங்கட்கிழமை, 13, ஜூன் 2011 (13:2 IST) சிங்கள மொழி படத்தில் நடிக்க பூஜாவுக்கு எதிர்ப்பு சிங்கள மொழியில் தயாராகும் குசபாபா என்ற படத்தில் நடிக்க நடிகை பூஜா. ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார். சிங்கள மொழியில் பூஜா நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று அழிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு நடிகர் நடிகைகள் போவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலையில் அங்கு தயாராகும் சிங்கள மொழி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது.…

  19. Started by nunavilan,

    பாட்சா

    • 0 replies
    • 626 views
  20. குடும்ப பாங்கான வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் சினேகா. சக நடிகைகள் கவர்ச்சியில் நீச்சல் உடைவரை வந்து விட்டனர். ஆனால் சினேகா அது போன்று நடிக்க மாட்டேன் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார். சினேகா தோற்றத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட அழகாக மாறி இருக்கிறார். இதுபற்றி சினேகா கூறியதாவது: என் அழகுக்கு யோகா தான் காரணம் தினமும் 2 மணி நேரம் யோகா பயிற்சி செய்கிறேன். யோகா செய்ததால் அழகு கூடிவிட்டது. இது எனக்கு நிறைய பலன் அளித்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். நிறைய நேரங்களை என் குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன் என்றார். நக்கீரன்.

  21. 'அக்கா ஒரு ஆட்டம் போடுங்க!' - குடிமகன் கலாட்டா... குலுங்கிய நமீதா!! கற்றோருக்கு மட்டுமல்ல, நமீதா மாதிரி நடிகைகளுக்கும் செல்லுமிடமெல்லாம் சிறப்புதான்... எங்கே போனாலும் கூட்டத்துக்கும் சுவாரஸ்ய தகவல்களுக்கும் குறைவில்லை. சமீபத்தில் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் நமீதா. திருச்சியிலிருந்து உள்ளடங்கிய பக்கா கிராமம் அது. நெற்றி மேட்டில் கைவைத்தபடி உற்று நோக்கினாலும் ஒரு ஆள் தென்படாத பொட்டல் வெளியில் நிகழ்ச்சியை வைத்திருந்தார்கள். ஆனால் என்ன ஆச்சர்யம்... நமீதா வருகிறார் என்று கூறிய சில மணி நேரங்களில் சுத்துப்பட்டு கிராமங்களில் உள்ள அத்தனை பேரும் வயது வித்தியாசமின்றி குவிந்து விட்டனர். கூட்டத்தைப் பார்த்த நமீதாவுக்கு ஏக சந்தோஷம். வழக்…

  22. விஜய்யின் வேலாயுதம், அஜீத்தின் மங்காத்தா படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. இரு படங்களையும் ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், கட் அவுட்கள் வைத்தும் பட ரிலீசை விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதற்கிடையில் ரசிகர்கள் இடையே மோதலை தவிர்ப்பதற்காக இரு படங்களையும் ஓரிரு வாரம் இடைவெளி விட்டு ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. மங்காத்தா, வேலாயுதம் படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியிலும் போட்டா போட்டி நடக்கிறது. அஜீத்துக்கு மங்காத்தா 50 வது படம். திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். விஜய்யின் வேலாயுதம் படத்தை ராஜா இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயம், சந்தோஷ் சுப்பிர மணியம், எம்.குமரன் சன்ஆப…

  23. கதாநாயகியாக ஒரு திருநங்கை நடித்திருக்கும் தமிழ்ப் படம்! 'ஊரோரம் புளியமரம்’ வகையறாப் பாடல்களுக்கு கேலிப் பொருளாக மட்டுமே பயன்பட்டு வந்த திருநங்கை சமூகத்தைப்பற்றி நேர்மறையாகப் பேசுகிறாள் இந்த 'நர்த்தகி’. வணிக நோக்கம் தவிர்த்த, இந்த முயற்சிக்காகவே இயக்குநர் விஜயபத்மாவுக்கும் தயாரிப்பாளர் கீதாவுக்கும் வாழ்த்துக்கள்! தன் ஒரே மகன் தன்னைப்போல சிலம்பு வீரனாக வளர வேண்டும் என்று நினைக்கும் தந்தை, கணவன் காட்டுவதே உலகம் என்று தனது ஆசாபாசங்களைக்கூட புதைத்துக்கொண்டு வாழும் அம்மா, விவரம் புரிந்த வயதில் இருந்தே தன்னைக் கணவனாக மனதில் பதித்துக்கொண்டு வாழும் மாமன் மகள்... இப்படி ஒரு சூழலில், ஒருவன் தன்னைப் பெண்ணாக உணர்ந்தால்? சிறுவன் சுப்பு மனதளவில் தன்னைப் பெண்ணாக உணர்கிறா…

  24. Started by nunavilan,

    கிகுஜிரோ தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை. நமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... ?? உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம். அதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்…

    • 0 replies
    • 514 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.