வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
முதல் பார்வை: பொன்மகள் வந்தாள் ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே 'பொன்மகள் வந்தாள்'. ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் …
-
- 1 reply
- 622 views
-
-
திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்! ராஜாவுடன் புரு ஆர்.சி.ஜெயந்தன் சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் ஓர் இசையமைப்பாளராகப் பிரவாகித்த இளையராஜா, தன் அறிமுகப்படத்தைக்கொண்டே, ‘அன்னக்கிளி’க்கு முன், ‘அன்னக்கிளி’க்கு பின் எனத் தமிழ்த் திரையிசையை இரு கூறாகப் பிரிக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். புதிய இசைவடிவம், புதிய இசைக்கருவிகளின் அறிமுகம், புதிய ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் என மெல்லிசை மன்னருக்குப் பின்னர், பெருந்தேடல் கொண்டிருந்தார். தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன். …
-
- 0 replies
- 590 views
-
-
இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் சென்னை : ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள 'காட்மேன்' டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர்…
-
- 0 replies
- 457 views
-
-
ஜெனிலியா கலியாணம் முடித்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்... கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை.
-
- 17 replies
- 2.5k views
-
-
தத்தளிக்கும் தமிழ் சினிமா – 1000 கோடி இழப்பு! 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 17 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு மாதத்துக்குப் பிறகாவது திரையரங்குகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து அன்றாட தேவைகளுக்குத் தவித்து வருகின்றனர். 50 படங்கள் விஜய்யின் மாஸ்டர் சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் ஜெயம் ரவியின் பூமி நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என பெரிய பட்ஜெட் பட…
-
- 0 replies
- 409 views
-
-
அடுத்தடுத்து அண்ணன்கள் மரணம்; பாலியல் தொல்லை; வாழ்க்கையை மாற்றிய படம்: கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்து சாதித்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வார்கள். இப்படியான நம்பிக்கை உரைகள் பல இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த உரைகள் மூலமாக வெளி உலகுக்குக் தெரியாத பலரது முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் திர…
-
- 0 replies
- 619 views
-
-
வித்யா பாலன் இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு…
-
- 3 replies
- 1.1k views
-
-
’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை – ஆர். அபிலாஷ் May 16, 2020 - ஆர்.அபிலாஷ் · சினிமா தமிழில் “காட்ஃபாதரின்” தாக்கத்தில் ஏகப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் “தேவர் மகன்” மற்றும் “நாயகன்” நேரடியாகவே “காட்ஃபாதரை” நினைவுபடுத்துபவை; தமிழ் சினிமா வரலாற்றில் மைல்கல்களாக பாராட்டத்தக்கவை. இந்த இரு படங்களில் “தேவர் மகன்” மேலான கச்சிதமான திரைக்கதையை கொண்டது. ஒருவிதத்தில் “காட்ஃபாதரை” விட சிறந்தது “தேவர் மகன்” திரைக்கதை; ஒரு திரைக்கதையாளராக கமல் ஒரு மேதை. இதைப் பற்றி பேசுவதே இந்த கட்டுரையின் நோக்கம். “காட்ஃபாதருக்கும்” “தேவர் மகனுக்கும்” நாடகீய முரணும் (அமைதியான ஒருவன் தனக்குள் இருக்கும் வன்முறையாளனை எதிர்கொள்வது…
-
- 0 replies
- 546 views
-
-
ராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் காலமானார்! மின்னம்பலம் இளையராஜாவின் நீண்டகால கூட்டாளியாகவும் அவருடன் அன்னக்கிளி படத்திலிருந்து பணிபுரிந்தவருமான மூத்த இசைக்கலைஞர் புருஷோத்தமன்(65) காலமானார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன். டிரம்மராகவும் மியூஸிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்தப் படங்களில் பணியாற்றி வந்துள்ளார். ஒரு இசையமைப்பாளருக்கு மியூஸிக் கண்டக்டராக இருப்பதென்பது எவ்வளவு முக்கியமானதென்று இசை குறித்தவர்களால் நன்கு உணர முடியும். ஒரு இசையமைப்பாளரின் தூதர் தான் மியூஸிக் கண்டக்டர் என மேற்குலகம் இ…
-
- 0 replies
- 917 views
-
-
-
“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது எல்லாருக்கும் கோரிக்கை ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அ…
-
- 116 replies
- 11.8k views
-
-
-
Pinned by OLIPARAPPU ஒளிபரப்பு S.t.a_ S.t3 weeks ago (edited) நான் இலங்கை தமிழர்களின் பல திரைப்பட படைப்புகளைப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் இதுபோன்று ஒரு இயற்கையான தத்ரூபமான நடிப்பில் சிறந்த திரைக்கதை அமைப்பிலும் ஒரு படம் பார்த்தது இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் பாராட்டத்தக்க விடயம் என்னவென்றால் நமது இலங்கை தமிழர்களின் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த . பிள்ளைகளின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.👍👑 இவ்வாறு தமிழைக் கதைத்து நடிக்கக் கூடிய திறமை படைத்தவர்களாக இலங்கையில் கூட சிறுவர்கள்(. இளம் தலைமுறையினர்) இருக்கமாட்டார்கள். இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகவும் திறமையாக நடித்திருக்…
-
- 1 reply
- 586 views
-
-
அடிக்கிற கைதான் அணைக்கும் என பாடி வளர்ந்த பெண்களிலிருந்து சற்றே விலகி நிற்கும் பெண்ணைப்பற்றிய கதை.. அம்ரிதா என்கிற அம்முவின் முடிவினால், தங்களது உண்மை முகங்களை, உணர்வுகளை அறிந்து கொள்ளும் அவளைச்சுற்றியுள்ள பெண்கள்.. அம்முவின் முடிவினால் தங்களது செயல்களை சற்று திரும்பி பார்க்கும் அவளைச்சுற்றியுள்ள ஆண்கள்.. பெரும்பாலும் ஒரு பெண்ணானவள் அவளது தாயைப்பார்த்தே வளர்கிறாள்.. அதனால்தான் அவளது தாய், பாட்டி, கொள்ளுபாட்டி செய்தது போல, தனது மகிழ்ச்சியை, கனவுகளை குடும்பத்திற்காக விட்டுக்கொடுக்கிறாள்.. ஆனால் ஆண்கள் அவர்களது தாயைப்பார்த்து வளர்வதில்லை.. அது அவர்களது துரதிர்ஷ்டமாகிவிடுகிறது. திருமனமாகிய பின் வேலைக்கு போகாமல் குடும்பத்தை கவனிக்கவேண்டும் என மனதார விரும்பி வா…
-
- 3 replies
- 912 views
- 1 follower
-
-
Nebraska (2013) - நெடுஞ்சாலையில் ஒரு கிழவர் வயதானவர்கள் இளைய தலைமுறையினரால் தேவையில்லாத லக்கேஜ் போல ஒரு சுமையாகவே கருதப்படுகிறார்கள். அனுபவம் என்கிற பலவருட மதிப்பு மிக்க சொத்து முதியவர்களிடம் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இது ஒரு புறம். வயதானவர்களின் சில எளிய ஆசைகளைக் குறித்து "பெரிசிற்கு வந்த ஆசையைப் பாருய்யா" என்று கிண்டலடிப்பது இன்னொரு புறம் . உழைக்கும் சமயத்தில் தனக்காகவும் குடும்பத்தினருக்காகவும் பல ஆசைகளை துறந்து ஓடி ஓடி உழைத்த நபர், தன் இறுதிக்காலத்தில் நிறைவேறாத சில விருப்பங்களை அடைய ஆசைப்படும் போது இளையதலைமுறையினர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிழவர் குழந்தைத்தனமான விரு…
-
- 0 replies
- 506 views
- 1 follower
-
-
மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' சர்ச்சை: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் துல்கர் சல்மான். அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளி…
-
- 13 replies
- 2.3k views
- 1 follower
-
-
`தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction? பப்ஜி போன்ற வீடியோ கேம்களின் சினிமா வெர்ஷனைப் போல இருக்கிறது. அவ்வளவு உழைப்பைக் கொட்டி மிக நேர்த்தியாக, யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்கள். படம் முழுக்க தோட்டா வெடிக்குது, ரத்தம் தெறிக்குது, அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்! மாஃபியாவுக்கும் மாஃபியாவுக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்குது என `எக்ஸ்ட்ராக்ஷன்' படத்தை சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இந்தியாவின் மிகப்பெரிய ட்ரக்லார்டான ஓவி மகாஜன் சீனியருக்கும் வங்கதேசத்தின் மிகப்பெரிய ட்ரக்லார்டான அமீர் ஆஷிஃபுக்கும் இடையே பலகாலமாகப் பகையுணர்வு பட்டறையைப் போட்டு படுத்திருக்க, ஒருநாள், ஓவியின்…
-
- 1 reply
- 557 views
-
-
TRAPPED - சினிமா ஒரு பார்வை இந்த உலகம் விளிம்பு நிலை மனிதனை ஒரு போதும் கவனிப்பதில்லை. விளிம்பு நிலை என்பது சொல்லுக்கு பழகிய சொற்றொடர் என்ற போதிலும். சொல்லில் அடங்காத பெரும்பாலும் வகைமையில் வரும் மனிதர்களுக்கும் அதே கதிதான். இந்த உலகம் விளிம்பில் நிற்கும் மனிதனையும் ஒருபோதும் கவனிப்பதில்லை. மூன்று பக்கம் மக்களால் சூழப்பட்டிருந்தாலும்.. ஒரு பக்கம் புறக்கணிப்பாலும்....வெறுமையாலும்... வெற்றிடமாகவுமே இந்த மானுட பிழைப்பு இருக்கிறது. 'Trapped' ஒரு சினிமா படம் தான். ஆனால்.. பார்க்க பார்க்கவே....பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கும் சக மனிதன் ஒருவனின் உச்ச பட்ச தவிப்பு. இரண்டு நாட்களில் காதலிக்கு கல்யாணம் என்ற பதட்டம்.. பரிதவிப்பு. "சீக்கிரம் …
-
- 0 replies
- 545 views
-
-
இர்பான் கான்: மிகச்சிறந்த நடிகரின் மறைவு! April 29, 2020 - சந்தோஷ் · சினிமா செய்திகள் தேர்ந்த கதாப்பாத்திரங்கள் மூலம் எப்போதும் உலக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த இர்பான் கான் மரணமடைந்தார் என்ற செய்தி பலரை சோகக் கடலில் மூழ்கியிருக்க செய்திருக்கிறது. தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்று பல ஹாலிவுட் படங்களில் நடித்த இர்பான் கான் இன்று காலை(29.04.2020) மரணமடைந்தார். 1967ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த இர்பான் கான் இளம் பிராயத்திலே தன் தந்தையை இழந்தார். கிரிக்கெட், நாடகத்துறை என்று பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த இர்பான் கடைசியாக தஞ்சமடைந்தது சினிமாத்துறையில். தான் ஏற்றுகொண்ட கதாபாத்திரத்திற்கு மிகையா…
-
- 6 replies
- 764 views
-
-
( இணையத்தில் சினிமா பற்றிய கட்டுரைகளை தேடிக்கொண்டிருந்தபோது, சாம்ராஜ் என்பவரின் இக் கட்டுரை காணக்கிடைத்தது, மலையாள திரைப்படங்களில் தமிழர்களை எப்படி தொடர்ந்து இழிவாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு எழுதியுள்ளார். திரைப்பட ஆர்வலர்களை பொதுவாக அணுகும்போது, தவறாது சில மலையாள சினிமாக்களின் பெயர்களை சொல்லி, அவற்றை பெருமைபடுத்தி பேசி மகிழ்வார்கள். ஆனால் தமிழர்களை இத்தனை அவமானப்படுத்தும் அதன் போக்கையோ, தமிழர்களின் மீது, அது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை பற்றியே வாய் திறக்கவே மாட்டார்கள். ஆகவே, இக் கட்டுரையை வாசித்தபோது மிகவும் அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருந்தது. தமிழ் சினிமா ஆர்வலர்களும், சினிமா கனவுகளுடன் திரியும் என்போன்றவர்களும் அறிந்துக்கொள்ள வேண்டு…
-
- 20 replies
- 3.2k views
-
-
பிரபல பொலிவூட் நடிகர் ரிஷி கபூர் காலமானார் நேற்று உடல்நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர், இன்று மும்பை வைத்தியசாலையில் தனது 67ஆவது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டுகளாக, ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, இந்தியாவுக்குத் திரும்பினார். பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973இல் வெளியான ´பாபி´ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.…
-
- 0 replies
- 497 views
-
-
தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக இருப்பவர் நடிகை த்ரிஷா, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை பாதியில் நிறுத்திட்டு பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கி போயுள்ளனர. ஆயினும் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருக்க ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அவ்வாறு நடிகை த்ரிஷா தற்போது ரசிகர்களுக்கு ஒரு டெஸ்ட் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது “என்னுடன் டேட்டிங் வர விருப்பப்பட்டால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வார்த்தைகளுக்கு…
-
- 1 reply
- 450 views
-
-
கோமாளிகள்! இலங்கைத்தமிழ் சினிமாவில் அதிக வசூலையீட்டிய திரைப்படம். இத்திரைப்படம் வெளியானபோது யாழ்ப்பாணம் , கொழும்பு நகர்களில் ஐம்பது நாள்களைக்கடந்து ஓடியது. ஏனைய இடங்களிலும் நன்கு ஓடியது நினைவிலுள்ளது. வி.பி.கணேசனின் 'புதிய காற்று' வெற்றியைத்தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகியபோது இதனை நான் பார்க்கவில்லை. யாழ் வின்சர் திரையரங்கில் ஓடியது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் 'கோமாளிகள் கும்மாளம்' என்னும் பெயரில் சுமார் இரண்டு வருடங்கள் வாராவாரம் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற வானொலி நாடகமிது. எஸ்.ராம்தாசின் கதை, திரைக்கதை வசனத்தில், எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்துக்கு இசையினை கண்…
-
- 3 replies
- 1.2k views
-
-
வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன் - வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தொடர்ந்து வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலு பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள, இந்த வீட்டை தாண்டி நீயும் வர கூடாது, நானும் வர மாட்டேன், அது கோடு, இது ரோடு என வழக்கம் போல தனது ஸ…
-
- 0 replies
- 455 views
-
-
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன். 1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்). வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது. இந்தக் கொலை வழக்கிலிருந்தும் வடக்கூரான் குடும்பத்தின் பகையிலிருந்தும் சிதம்பரத்தின் குடும்பம் எப்பட…
-
- 18 replies
- 3.6k views
- 1 follower
-