வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5562 topics in this forum
-
பொன்மகளும், சில திரைப்பெண்களும்! மின்னம்பலம் நிவேதிதா லூயிஸ் கொரோனா காலத்திலும் மக்களிடம் ஓடிடி பிளாட்ஃபார்ம் மூலம் முதலில் வந்து சேர்ந்திருக்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்’. பெண் மனத்தை, அவள் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய படங்கள் மிகக் குறைவே. பெண் மனது எப்படி இயங்குகிறது என்பதையும் ஆண்களே இங்கே எழுதி இயக்கியிருக்கிறார்கள்.’பொன்மகள் வந்தாள்’ அப்படியான ஒரு படம் என்றே பரவலாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் சக்தி ஜோதியின் ‘தாய்’ ஒருகட்டத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். மகள் காதல் திருமணம் செய்துகொண்டு போனபின் அவளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் ஆத்திரத்தில் ‘எரித்து’ விட்டதாகக் கூறி, தன் மகள் வயிற்றுப் பேத்தி உயிருடன் இருப…
-
- 2 replies
- 681 views
-
-
நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் 'தலைவன் இருக்கின்றான்' என்ற நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு முன் இதே தலைப்பில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் கலந்துரையாடினார்கள். அப்போது விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அந்த உரையாடல் சமூகவலைதளத்தில் வைரலானது. அதே போன்று இன்று நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசனும், ரஹ்மானும் அவர்களுடைய பார்வையில் பதிலளித்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே. கமல்ஹாசன் நேரலையில் பேசியது என்ன? ஊரே கொண்டாடியதற்கு பிறகுதான் நான் ஏ.ஆர். ரஹ்மானை கவனித்தேன். அவருடைய பாடல்களை அதுவரையில் நான் கேட்கவே இல்லை. 'தலைவன் இருக்கின்றான்' படத்திலுள்ள …
-
- 0 replies
- 369 views
-
-
நீயெல்லாம் ஹீரோயினா.. வேற வேலை இருந்தா பாரு.. உதாசீனங்களைத் தாண்டி வென்ற நடிகை! ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய நிறத்தையும், தான் தமிழ் மொழி பேசுவதாலும் பல இடங்களில் நிராகரிக்க பட்டதாக ஒரு கல்லூரியில் தான் நடிகையானதற்கு பின் உள்ள போராட்டங்களை பற்றி பகிர்ந்து கொண்டார் நடிகை Aishwarya Rajesh. காக்கா முட்டை, கானா போன்ற வெற்றி படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் இப்போது தமிழ் மட்டுமல்லாது இப்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் இப்போது க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் ஹீரோவிற்கு சமமாக பஞ்ச் டயலாக் பேசிய படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியாகி வரவேற்பை பெற்றது. சாதாரணக்குடும்பத்து பெண் குப்பத்துல இருக்குற ஒ…
-
- 6 replies
- 1.6k views
-
-
நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் (ஜூன் 12, 1932) தமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி. நான்கு வயதிலேயே நாட்டியப் பயிற்சியைத் தொடங்கிய இவர், இளம் வயதில் அரங்கேற்றமும் நடத்தி மெய்சிலிர்க்க வைத்தவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்ட பத்மினி, குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். பத்மினியும் சகோதரி…
-
- 0 replies
- 685 views
-
-
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: வைரமுத்து பாடல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் தொடர்பாக வைரமுத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார் இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. உலகத் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்போது ஜார்ஜ் ஃப்ளாய்…
-
- 1 reply
- 345 views
-
-
யாராவது... இலங்கை பொண்ணு தான் மாட்டி இருக்கும். Prashanthan Navaratnam
-
- 5 replies
- 1.1k views
-
-
காலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா? காலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த கோடிகளால் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு ரசிகர்கள் வழக்கம் போல ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலபிசேகத்துடன் வரவேற்பு கொடுத்திருக்கின்றார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான மனநிலை. பல ஆண்டுகளாக தமிழ் மண்ணை சீரழித்து வரும் பிம்ப அரசியலின் தவிர்க்க முடியாத விளைவு. ஒரு பக்கம் மண்ணையும், காற்றையும், நீரையும், இந்த மண்ணின் வளங்களையும் காப்பதற்கான போராட்டம் வலியோடு நடந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் அதற்கு எதிரான சிந்தனை கொண்ட ஒருவரின் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளை சமன்படுத்துவதி…
-
- 0 replies
- 444 views
-
-
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
குறை சொல்வதோ, குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல – பிரசன்னா by : Benitlas நடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக உங்களில் எத்தனை பேருக்கு தோன்றுகிறது என்று கேள்வி எழுப்பினார். பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் அதிகமானதுக்குமான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்…
-
- 0 replies
- 555 views
-
-
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள். இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் இதோ. எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம். இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பா…
-
- 0 replies
- 557 views
-
-
படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற அவதார் 2 படக்குழு தனிமைப்படுத்தப்பட்டது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7, 500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நியூ…
-
- 0 replies
- 269 views
-
-
37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை ஒலி’ உலகின் ஆகச் சிறந்த ஆச்சரியமும் சோகமும் என்ன தெரியுமா? காதலில் யாரெல்லாம் தோற்றுப்போனார்களோ அவர்களையெல்ல்லாம் பட்டியலிட்டு, பட்டயமாய் வைத்து சொல்லிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் கலையில் தோற்றவர்களைக் கண்டுகொள்ளாமலேயே புறந்தள்ளியிருக்கிறது. தோற்றுவிட்ட கலைஞனின் வாழ்வை, வலிக்க வலிக்கச் சொல்லிப் பதிவு செய்து, நம்மைப் பதறடித்த, சிதறடித்த, கலங்கடித்த.. சலங்கையின் ஒலி... அவ்வளவு சீக்கிரத்தில் மனக்காதுகளில் இருந்து தள்ளிப்போய்விடாது! ஹிட் கொடுத்த நடிகர்களையே சினிமா சுற்றிவரும். வெற்றி அடைந்த கலைஞனுக்கே பரிசுகள் வழங்குவார்கள். சாதனை படைத்தவனையேக் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால் இயக்குநர் கே.விஸ்வநாத், அந…
-
- 0 replies
- 557 views
-
-
ஆதரவு கரம் கொடுத்த நடிகர் ஷாருக்கான் :பிஹாரில் ரயில்வே நடைமேடையில் இறந்துகிடந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு உதவி நடிகர் ஷாருக்கான்: கோப்புப்படம் புதுடெல்லி பிஹாரில் முசாபர்பூர் ரயில்நிலைய நடைமேடையில் இறந்துகிடந்த தனது தாயை எழுப்ப முயலும் குழந்தை தொடர்பான வீடியோ கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. இதைப்பார்த்த நடிகர் ஷாருக்கான் அந்த குழந்தைக்கு ஆதரவு கொடுத்து உதவியுள்ளார். நடிகர் ஷாருக்கான் நடத்தும் மீர் அறக்கட்டளை அந்த குழந்தைக்கு தேவையான உதவிகளையும், நிதியுதவியும் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார் கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த இரு மாதங்களாக ஏராளமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் வே…
-
- 0 replies
- 300 views
-
-
தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல் திரைப்படமாகிறது! ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கின்ற தீபச்செல்வன் திரைத்துறையிலும் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்கின்றார். அவரது பல்வேறு சிறுகதைகள் ஏற்கனவே குறும்படங்களாக மாறியுள்ளன. கனடாவைச் சேர்ந்த ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள “சினம் கொள்” திரைப்படத்திலும் பாடலாசிரியர் மற்றும் வசன கர்த்தா என தனது பணியைச் செவ்வனே செய்துள்ளார். அண்மையில், அவரது மற்றுமொரு சிறுகதையான “யாழ் சுமந்த சிறுவன்” கதையையும் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் திரைப்படமாக்கப்போகின்றார் என்ற செய்தியையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தீபச்செல்வன் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று பதிந்துள்ளார்…
-
- 0 replies
- 615 views
-
-
நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார் நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக் கூட்டணி இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்க முத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் ம…
-
- 1 reply
- 2.4k views
-
-
முதல் பார்வை: பொன்மகள் வந்தாள் ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே 'பொன்மகள் வந்தாள்'. ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் …
-
- 1 reply
- 639 views
-
-
திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்! ராஜாவுடன் புரு ஆர்.சி.ஜெயந்தன் சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் ஓர் இசையமைப்பாளராகப் பிரவாகித்த இளையராஜா, தன் அறிமுகப்படத்தைக்கொண்டே, ‘அன்னக்கிளி’க்கு முன், ‘அன்னக்கிளி’க்கு பின் எனத் தமிழ்த் திரையிசையை இரு கூறாகப் பிரிக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். புதிய இசைவடிவம், புதிய இசைக்கருவிகளின் அறிமுகம், புதிய ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் என மெல்லிசை மன்னருக்குப் பின்னர், பெருந்தேடல் கொண்டிருந்தார். தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன். …
-
- 0 replies
- 599 views
-
-
இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் சென்னை : ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள 'காட்மேன்' டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர்…
-
- 0 replies
- 480 views
-
-
ஜெனிலியா கலியாணம் முடித்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்... கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை.
-
- 17 replies
- 2.7k views
-
-
தத்தளிக்கும் தமிழ் சினிமா – 1000 கோடி இழப்பு! 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 17 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு மாதத்துக்குப் பிறகாவது திரையரங்குகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து அன்றாட தேவைகளுக்குத் தவித்து வருகின்றனர். 50 படங்கள் விஜய்யின் மாஸ்டர் சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் ஜெயம் ரவியின் பூமி நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என பெரிய பட்ஜெட் பட…
-
- 0 replies
- 416 views
-
-
அடுத்தடுத்து அண்ணன்கள் மரணம்; பாலியல் தொல்லை; வாழ்க்கையை மாற்றிய படம்: கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்து சாதித்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வார்கள். இப்படியான நம்பிக்கை உரைகள் பல இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த உரைகள் மூலமாக வெளி உலகுக்குக் தெரியாத பலரது முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் திர…
-
- 0 replies
- 637 views
-
-
வித்யா பாலன் இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு…
-
- 3 replies
- 1.1k views
-
-
’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை – ஆர். அபிலாஷ் May 16, 2020 - ஆர்.அபிலாஷ் · சினிமா தமிழில் “காட்ஃபாதரின்” தாக்கத்தில் ஏகப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் “தேவர் மகன்” மற்றும் “நாயகன்” நேரடியாகவே “காட்ஃபாதரை” நினைவுபடுத்துபவை; தமிழ் சினிமா வரலாற்றில் மைல்கல்களாக பாராட்டத்தக்கவை. இந்த இரு படங்களில் “தேவர் மகன்” மேலான கச்சிதமான திரைக்கதையை கொண்டது. ஒருவிதத்தில் “காட்ஃபாதரை” விட சிறந்தது “தேவர் மகன்” திரைக்கதை; ஒரு திரைக்கதையாளராக கமல் ஒரு மேதை. இதைப் பற்றி பேசுவதே இந்த கட்டுரையின் நோக்கம். “காட்ஃபாதருக்கும்” “தேவர் மகனுக்கும்” நாடகீய முரணும் (அமைதியான ஒருவன் தனக்குள் இருக்கும் வன்முறையாளனை எதிர்கொள்வது…
-
- 0 replies
- 558 views
-
-
ராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் காலமானார்! மின்னம்பலம் இளையராஜாவின் நீண்டகால கூட்டாளியாகவும் அவருடன் அன்னக்கிளி படத்திலிருந்து பணிபுரிந்தவருமான மூத்த இசைக்கலைஞர் புருஷோத்தமன்(65) காலமானார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன். டிரம்மராகவும் மியூஸிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்தப் படங்களில் பணியாற்றி வந்துள்ளார். ஒரு இசையமைப்பாளருக்கு மியூஸிக் கண்டக்டராக இருப்பதென்பது எவ்வளவு முக்கியமானதென்று இசை குறித்தவர்களால் நன்கு உணர முடியும். ஒரு இசையமைப்பாளரின் தூதர் தான் மியூஸிக் கண்டக்டர் என மேற்குலகம் இ…
-
- 0 replies
- 952 views
-
-