Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை ஒவ்வொரு முறையும் அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர்கள் தான் ரஜினியும் ஷங்கரும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் அந்த வளர்ச்சியை சிவாஜி, எந்திரனில் பார்த்து இருப்போம், தற்போது அடுத்தக்கட்டமாக உலகமே வியக்கும் 2.0 ஒரு படைப்பை இருவரும் கொடுக்க, ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தானதா? பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே அக்‌ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது. இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ச்சிக்குழு அரசாங்கத்தின் கீழ் ஆராய்ச்சி செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும்…

  2. தன் வாழ்நாள் முழுக்க போர்களின் ரணங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கால்வினின் கடைசி வருடங்களைப் பதிவு செய்திருக்கிறது A Private War. உலகை ஆள தற்போது எந்த விதமான போர்களும் நடப்பதில்லை. இப்போது நடப்பதெல்லாம் ஓர் நாட்டின் மீதான சர்வாதிகாரத்தை நிலைநாட்டத்தான். கடந்த 30 ஆண்டுகளில் உலகெங்கிலும் நடைபெற்ற போர்களில் பெரிதும் பேசப்பட்டவர் மேரி கால்வின். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் போர்கள் பற்றியெல்லாம் மக்கள் தெரிந்துகொள்ளக் காரணமாய் இருந்தவர் மேரி கால்வின். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியரான சீயன் ரியனிடம் (டாம் ஹாலண்டர்) , "நீங்கள் இதெல்லாம் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, நான் இதையெல்லாம் பார்க்கிறேன் " என்பார் மேரி. ஆம், …

  3. இரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.O“ – நாளை மிக பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயார்! லைகா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படம் நாளை உலகலாவிய ரீதியாக வெளியாகவுள்ளது. நேரடியாக 3D தொழில்நுட்பத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்தத் திரைப்படம், 3D மற்றும் 2D தொழில்நுட்பத்தில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அக்ஷய் குமார், எமி ஜக்ஷன், சுதன்ஷு பாண்டே, ஆதில் உசைன், கலாபவன் சஜோன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், நிரவ் ஷா ஒளிப்பதிவையும், என்டனி படத்தொகுப்பையும், ரசுல் பூக்குட்டி ஒலியமைப்பையும் கைய…

  4. சாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா !! திருவண்ணாமலை: அங்கே வேற யாராவது இருந்தால் எகிறி ஆட்டமே போட்டிருப்பார்கள்!! ஆனால் வந்தது இவராயிற்றே?! திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் ஆறாம் நாள் அது. நகரெங்கும் தெரு தெருவாக போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. நேரம் மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. கோயில் பக்கம் இருக்கிற அண்ணாசாலை அருகே ஒரு கார் வந்து நிற்கிறது. உச்சக்கட்ட டென்ஷனில் இருந்த போலீசார், ம்ஹூம்... இதுக்கு மேல போகக்கூடாது. பெர்மிஷன் கிடையாது. அப்படியே வண்டியை நிறுத்துங்க என்று எச்சரிக்கிறார்கள். உடனே ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்து அந்த போலீசாரின் காதில் உள்ளே இருப்பவரை பற்றி சொல்கிறார். இசைஞானி கொளுத்தும் வெயிலில் ப…

  5. கெய்ரோ திரைப்படவிழாவில் VR தொழினுட்பம் அறிமுகம், மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதி! எகிப்தின் ஒபேரா இல்லத்தில் இடம்பெற்ற கெய்ரோ திரைப்பட விழாவில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் சிறப்பு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இந்த முறை வித்தியாசமான சில விருந்தினர்களும் கலந்து கொண்டனர். இந்த வருடம் 40 வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் தேவையுடையவர்களுக்காக விசேடமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பேசும் திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டதுடன், ரசிகர்களுக்கு நவீன திரைப்பட தொழினுட்பத்தையும் ஏற்பாட்டாளர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அவ்விதமானவர்களுக்கு virtual reality எனப்படும் மெய்நிகர் யதார்த்த காணொளிகளை பார்த்து உ…

  6. இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்…

  7. 'திமிரு புடிச்சவன்' - செல்ஃபி விமர்சனம்

  8. முதல் பார்வை: காற்றின் மொழி உதிரன் பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே 'காற்றின் மொழி'. கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த வேலை செய்தாலும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்து…

  9. சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற ப…

  10. பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு! ஆர். அபிலாஷ் சினிமாவில் கமலின் பல புதிய முயற்சிகள், அவர் ரிஸ்க் எடுத்து நிகழ்த்திய பல புரட்சிகர தொழில்நுட்ப சாகசங்களைப் பற்றிப் பலரும் பேசியிருக்கிறார்கள். ஒரு நடிகராக அவர் செய்த சாதனைகளைவிட அவரது குரல் வேறுபாடுகள், வட்டார மொழி லாகவம், பாட்டு, நடனம், இயக்கம், பிரமாண்டத் திரைத் திட்டங்கள், கனவுகள், உருவ மாற்றங்கள் ஆகியவற்றை நாம் அதிகம் பேசுவதற்குக் காரணம் அவரது அபார பன்முகத் திறமையை நாம் ஏற்றுக்கொண்டு வியந்து பழகிவிட்டோம் என்பது. அவரது நடிப்பைப் பற்றி நாம் தனியாக பேசுவதில்லை என்பதையே அவருக்கான முக்கியப் பாராட்டாக நினைக்கிறேன். கமலின் குரல் நுணுக்கங்கள் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் சக்தி அமரன் ஒருமுறை…

  11. படத்தின் காப்புரிமை Getty Images / Viacomm / Sun Pictures சமீப காலங்களில் பெரும்பாலான படங்கள், குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. மக்களின் பொழுதுபோக்கை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து, அதில் ஒரு சர்ச்சை எழுவது என்பது சாதாரணமாகிவிட்டது. அவ்வாறு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் சர்கார். அரசையும், அரசின் திட்டங்களையும் விமர்சித்து மறைமுகமாக இப்படம் கிண்டலடிக்கிறது என பலரும் இதற்கு எதிர்ப்பு குரல்கள் தெரிவித்து வருகிறார்கள். …

  12. நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இசை ஏ.ஆர்.ரகுமான் ஓளிப்பதிவு கிரிஷ் கங்காதரன் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்பேட்டில் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக …

    • 4 replies
    • 1.7k views
  13. ’சர்கார்’ படத்தின் 'சிம்டாங்காரன்' பாடல் சர்ச்சை: பாடலாசிரியர் விவேக் பாடலில் கையாண்ட சொற்களுக்கு நூதன விளக்கம் YouTube ’சர்கார்’ படத்தின் 'சிம்டாங்காரன்' பாடல் சர்ச்சையானதைத் தொடர்ந்து பாடலாசிரியர் விவேக் பாடல் சொற்களுடன் கூடிய நீண்ட விளக்கமளித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ‘சர்கார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிக்காக முதலில் படத்…

  14. ’2.0’ படத்தின் ட்ரெய்லர்ற்கு பிரபலங்கள் வாழ்த்து லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’2.0’ படத்தின் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியானது. அத்துடன் இந்த படம் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி உலகம் எங்கும் வெளியாகவுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு விழா இடம்பெற்றதில் இருந்து தற்போது வரை தமிழில் 9.2 மில்லியன் பார்வையாளர்களையும், ஹிந்தியில் 15 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. இந்நிலையில் ட்ரெய்லர் தொடர்பில் பல நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு, http://athavannews.com/2-0-படத்தின்…

  15. எனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை! வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை. என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. பெரிய இயக்குனர்களும் சரி, புதுமுகங்களும் சரி எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதில் மகிழ்ச்சி. வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர்கள் நினைப்பது என் பாக்கியம். நான் வேலை செய்த அனைத்து இயக்குனர்களும் வித்தியாசமானவர்கள். அத…

    • 0 replies
    • 454 views
  16. தற்கொலை முயற்சி செய்த உலக புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா செய்திகள்:இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார். பல்வேறு நாடுகளிலும் வெறித்தனமான ரசிகர்கள் கொண்டுள்ளார். இசையுலகில் தனியிடம் பிடித்துள்ள அவரின் இளமைக்காலம் மிகவும் வறுமையும் துயரமும் நிறைந்தாக இருந்துள்ளது. பல நாட்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற விரக்தியோடு வாழ்ந்துள்ளார். கிருஷ்ணா த்ரிலோக் என்கிற எழுத்தாளர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை ரஹ்மான் சொல்ல சொல்ல ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். புத்தகத்தின் பெயர் “ஒரு கனவின் குறிப்புக்கள்” . அதில் தான் இளமையில் வாழ்வில் பட்ட சிர…

    • 0 replies
    • 512 views
  17. இந்தியாவின் மிகப்பெரிய கட் அவுட் இதுதான்.. அசத்திய கேரள விஜய் பேன்ஸ்.. சர்கார் பீவரில் மல்லுஸ்! சர்கார் படத்திற்காக கேரளாவில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தீபாவளி, தளபதி தீபாவளிதான் என்று விஜய் ரசிகர்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டனர். நாடு முழுக்க இருக்கும் விஜய் ரசிகர்கள் சர்கார் பீவரில் தீபாவளி எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சர்க்காருக்காக புதிய சாதனை படைத்து உள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதும் போல தமிழ் ரசிகர்கள் விஜய்க்கு எப்படி கட் அவுட் வைப்பார்களோ, எப்ப…

  18. நாயகன் அரியணை ஏறிய யோகி பாபு காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. பல நடிகர்கள் அந்த பாதையில் சென்று சில வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடிக்க முற்பட்டுத் தோல்வியடைந்த பட்டியலே இங்கு அதிகம். அதன்பின் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பும் குறைந்துவிடுவதே யதார்த்தமாக இருக்கிறது. இதை உணர்ந்தே சில மாதங்களுக்கு முன் யோகி பாபு தான் கதாநாயகனாக நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார். கூர்கா படத்தின் டைட்டில் கேரக்டரில் அவர் நடிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியானது அப்படியான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. சாம் ஆண்டன் இயக்கும் அந்த படத்தில் யோகி பாபு உடன் கனடா நடிகை எலிஸ்ஸாவும் நடிக்கிறார்…

  19. மூன்று வருடத்திற்கு முன்னதாக பிபிசி கல்ச்சர் (BBC Culture) மிகச்சிறந்த 100 அமெரிக்க திரைப்படங்களை கண்டறிவதற்காக முதல்முறையாக மிகப்பெரிய அளவில் விமர்சகர்கள் மூலம் ஓட்டெடுப்பை நடத்தியது. அதன்பிறகு 21-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படங்கள் மற்றும் இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவைகள் குறித்து ஒரு ஓட்டெடுப்பை நடத்தியது. இவ்வருடம் ஹாலிவுட்டை தாண்டி உலகம் முழுவதுமுள்ள மிகச்சிறந்த சினிமாவை கண்டறியும் முயற்சியை எடுப்பதற்கு சரியான சமயம் வந்ததாக பிபிசி உணர்ந்தது. இதையடுத்து விமர்சகர்களிடம் ஆங்கில மொழியில் வெளியான திரைப்படங்களை தவிர்த்த மற்ற திரைப்படங்களில் அவ…

  20. இளையராஜா இசை: யாருக்கு உரிமை? காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மீது இளையராஜா தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திரையுலகில் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் இளையராஜா. 2010ஆம் ஆண்டு இளையராஜா எக்கோ நிறுவனம் மீது தனது பாடல்களை தனது அனுமதி பெறாமல், காப்புரிமையை மீறி விற்பனை செய்துவருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனால் குற்றப்பிரிவு போலீஸார் எக்கோ நிறுவனத்திடம் இருந்து 20,000 சிடிக்களை பறிமுதல் செய்தது. இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி எக்கோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை பல்வேறு நீதிபதிகள் விசாரித்து வந்தனர். தற்போது நீதிபதி ம…

  21. சர்கார்: தொடரும் குழப்பங்கள்? சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டுக்கு முற்றிபுள்ளி வைக்கும் விதமாக இன்று (அக்டோபர் 30) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பெரும் பங்காற்றிய இயக்குநர் பாக்யராஜ், இந்த தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வருண் எழுதிய கதையின் கருவும், சர்கார் படக் கதையின் கருவும் ஒன்றுதான். பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இயக்குநர் முருகதாஸிடம் முன்னதாக தெரிவித்திருந்தேன். வருணின் கதை என ஒப்புக் கொண்டால் தன்னைத் தவறாக பேசுவார்கள் என முருகதாஸ் மறுத்தார். இதனையடுத்து இணை இயக்குநரான வருணின் பிரச்சினை பற்றி முருகதாஸிடம் விளக்கினேன். எனது மகன் கூட விஜய்யின் ரசிகன்தான். ஆனால், சங்கத் தலைவர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதில் அதிகம் …

  22. பின்னணி பாடுவதில் ஜேசுதாஸ் குடும்பத்தின் புதிய வாரிசு பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசின் பேத்தி அமேதா மலையாள சினிமாவில் பாடி, தனது இசைக் குரலை பதிவு செய்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அமேதா, கானகந்தர்வன் ஜேசுதாஸ் குடும்பத்தின் நான்காவது தலைமுறை பின்னணி பாடகியாவார். அவரது தந்தை அகஸ்டின் ஜோசப் 1950-ம் ஆண்டு நல்லதங்காள் சினிமாவில் பாடினார். அந்த படத்திற்கு இசை அமைத்தவர், பிரபல இசை அமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி. 1962-ம் ஆண்டு அதே இசை அமைப்பாளரின் விதி தந்த விளக்கு என்ற சினிமாவில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார். 25 வருடங்கள் கழித்து 1987-ல் ‘இடநாழியில் ஒரு காலோச்ச’ என்ற படத்தில் அவரது மகன் விஜய் ஜேச…

    • 0 replies
    • 378 views
  23. சர்க்கார் அரசியல் - ஜெயமோகன் சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம். ஒரு…

  24. ''சங்கர் மகாதேவன் சாரிடமிருந்து பாராட்டு கிடைச்சது செம்ம ஹேப்பி'' - குஷியில் வீணை 'வீணா ஶ்ரீ' ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், வீணா ஶ்ரீவாணி. இவருடைய வீணைக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அவ்வளவு அழகாகப் பாடல்களை வீணையில் வாசித்து ரசிகர்களைச் சுண்டி இழுப்பவர். சமூக வலைதளத்தில், ரசிகர்கள் கமென்ட்டிடும் பாடல்களை உடனுக்குடன் வாசித்துக் காட்டுவார். எனவே, இவருடைய முகநூல் முழுவதும் இசையால் நிரம்பிவழியும். இவர் கடந்த வாரம், பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவனின் 'Breathless' பாடலை, ஒரு நிமிடம் தொடர்ந்து வாசித்துள்ளார். அதற்குப் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது. இது தொடர்பாக, வீணா ஶ்ரீவாணியைத் தொடர்புகொண்டு பேசினோம். குரல் முழு…

  25. ஜெனிஃபர்.ம.ஆ Follow இயக்குநர் சுசி கணேசன் மீதான கவிஞர் லீனா மணிமேகலையின் #metoo புகாருக்கு நடிகை அமலா பால் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாள்களாகத் தொடர்ந்து வரும் #metoo புகார்கள், தமிழில் பல பிரபலங்களை குறிவைத்த நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் 2005-ம் ஆண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கத்தியைக்காட்டி தான் அவரிடமிருந்து தப்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்த சுசி கணேசன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை …

    • 9 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.