வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்' தமிழ் திரை உலகின் அடையாளமாக கொண்டாடப்படுகிற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்த நாள் இன்று. திரை உலகின் உச்சி வானைத் தொட்ட அந்த நடிப்பு சிகரம் அரசியலில் ‘வனவாசம்’தான் அனுபவிக்க நேர்ந்தது என்பது வரலாற்றின் விசித்திரம்தான். ”இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது”... இது சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம். ஆம், தமிழக அரசியலும் கூட பல விசித்திரம் நிறைந்த நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறது... இந்த விசித்திரங்களில் அதிகம் பந்தாடப்பட்டவர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர். திரை உலகில் சிவாஜி கணேசன் கோலோச்சிய காலங்களில் கலைஞர், எம்ஜிஆர், சிவ…
-
- 0 replies
- 687 views
-
-
கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்தின் அடுக்குகள் ஏறி மிதிக்க நினைக்கும். `உனக்கெல்லாம் இது ஒரு கேடா?' என ஆயிரமாயிரம் கண்கள் கேள்விகளோடு துளைக்கும். தலைமுறைகளாகத் தொடரும் வறட்டு ஆணவம் தாமிரபரணியின் தண்ணீரில் துரத்தி மூழ்கடிக்கத் துடிக்கும். இவை அனைத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்டு நிமிர்ந்து நின்றால்... அவன்தான் `பரியேறும் பெருமாள்.' வழக்கமாக இங்கே கதை சொல்வதுதான் வழக்கம். ஆனால், இங்கே பரியன் வழியே மாரி செல்வராஜ் சொல்லியிருப்பது பல தலைமுறைகளின் வலிநிறைந்த வாழ்க்கையை... அதை எப்படி அவரால் யதார்த்தமாக இரண்டரை மணிநேர சினிமாவில் சொல்ல முடிந்தது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. ரத்தமும் புழுதியும் கூத்தும் வேட்டையுமான அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கையை ஒரு சின்னப் பத்திக்குள் அடைக்க…
-
- 6 replies
- 2.7k views
- 1 follower
-
-
``நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh வெடித்துச் சிரிக்க வைப்பார், கசிந்துருக வைப்பார், கண்கள் வலிக்க அழ வைப்பார், எழுந்து நடனம் ஆட வைப்பார்.... அவர்தான் நாகேஷ். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, யாராலும் தொட முடியாத நடிப்புக்குச் சொந்தக்காரர். அவருடைய பிறந்ததினம் இன்று. அவருடன் நடித்த மிகப்பெரும் பாக்கியத்தைப் பெற்ற சச்சு பேசினார் ``நாகேஷ் சார், அவரைப் பற்றிய நல்ல நல்ல நினைவுகளை என்கிட்ட கொடுத்துட்டு போயிருக்கார். அவருடைய டைமிங் வாய்ப்பே இல்ல. ஒரு நடிகரா டைரக்டர் பேப்பர்ல காண்பிக்கிற டயலாக்கை மட்டும் பேசாமல், அந்த டயலாக்குக்கு உயிர் கொடுக்குறதுதான் நாகேஷ் சாருடைய பலமே. அவருடைய வேகம் யாருக்கும் வராது. பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவர…
-
- 0 replies
- 693 views
-
-
செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம். ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம். கதைக்களம் பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.…
-
- 4 replies
- 3.2k views
-
-
விஜய் நடித்துள்ள சர்கார்: ரஹ்மான் இசையமைப்பில் முதல் பாடல் வெளியீடு! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிம்டாங்காரன் எ…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
பப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்! பத்மினி அ+ அ- திருவாங்கூர் சகோதரிகள் என்று அவர்களைச் சொல்லுவார்கள். கேரளாவில் பிறந்தார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிரபலம் அடைவதே பெரும்பாடு. அப்படிப் பிரபலமாவதற்கு திறமை ரொம்பவே முக்கியம். அந்த வீட்டில் உள்ள சகோதரிகள் மூவருமே, நடனத்திறமையுடன் திகழ்ந்தார்கள். நாட்டிய சகோதரிகள் என்றே அறியப்பட்டார்கள். அவர்களை எல்லோருக்கும் தெரியும். லலிதா, பத்மினி, ராகினியைத் தெரியாதவர் உண்டா என்ன? இதில் பத்மினிக்கு, கடவுள் இன்னொரு வரத்தையும் தந்திருந்தார். நாட்டியத்துடன் நடிப்பும் ஒருசேர அமைந்தது அவருக்கு. …
-
- 0 replies
- 674 views
-
-
ஷோபா - அதிசய தேவதை! ஷோபா மகாலக்ஷ்மி மாதிரிதான் அவரின் முகம் அமைந்திருந்தது. அதனால்தானோ என்னவோ மகாலக்ஷ்மி என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், அந்த மகாலக்ஷ்மி, பின்னாளில் தேவதையென நம் மனதில் இடம்பிடித்தார். அப்போது அவரின் பெயர் வேறானது. அந்தப் பெயரே... வேரென இன்றைக்கும் ஊன்றி நிற்கிறது. அந்தப் பெயர்... ஷோபா! தட்டுங்கள் திறக்கப்படும் எனும் வாசகம் ஷோபாவுக்கும் பொருந்தும். 1962ம் வருடத்தில் பிறந்தவருக்கு 1966ம் ஆண்டில், அதாவது நான்கு வயதிலேயே கதவு திறந்து கலைத்தாய் இவரை வரித்துக்கொண்டாள். தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற தமிழ்ப் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்…
-
- 0 replies
- 599 views
-
-
‘சிறந்த சர்வதேச நடிகர்’ - மெர்சல் காட்டிய விஜய்! மெர்சல் படத்துக்காக சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக, சிறந்த நடிகர் பிரிவில் `மெர்சல்' படத்தில் நடித்தற்காக விஜய் 'ஏஜென்ட்' திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, 'சைட் சிக் கேங்' நடிகர…
-
- 0 replies
- 493 views
-
-
டிஜிட்டல் மேடை 01: அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும் டிஜிட்டல் தொழில்நுட்பம், கட்டற்ற இணைய வேகம் இரண்டும் இணைந்து ஒரு பெரும் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கின்றன. கைக்குள் அடங்கிய ஸ்மார்ட் கைபேசித் திரைகள், இந்தப் புதிய புரட்சியால் பொழுதுபோக்கு மற்றும் நவீனப் படைப்புகளின் புதிய முகத்தைத் திரையரங்குகளுக்கு வெளியேயும் விரியச் செய்திருக்கின்றன. திரைப்படங்கள், குறும்படங்கள், பலவகையான தொடர்கள், ஆவணப் படங்கள் என இந்தக் கடலில் அவரவர் ரசனைக்கு ஆசை தீர முத்துக்குளிக்கலாம். மேலும், இந்தத் தளங்கள் வாயிலாகத் தனது படைப்பை முழுச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் உரிமையும் படைப்பாளிக்கு வாய்த்திருக்கிறது. படைப்பின் இன்னொரு முனையில் இருந்தபட…
-
- 0 replies
- 333 views
-
-
ரஜினியை ராமாபுரத்தில் தாக்கினாரா MGR ? : நடிகை லதா மனம் திறந்த பேட்டி
-
- 0 replies
- 414 views
-
-
``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive ``22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு." சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் வசீகர நடிப்பாலும், நடனத்தாலும…
-
- 5 replies
- 7k views
-
-
ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம். கதைக்களம் ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே. இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறைய…
-
- 2 replies
- 1k views
-
-
ரி இயக்கத்தில், விக்ரம் – த்ரிஷா நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம், சியான் விக்ரமுக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஹரி – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் மாஸ் மசாலா படமாக மாறியுள்ளது. முதல் பாகத்தில் இருந்த கிளாஸ் நிறையவே மிஸ்சிங்! கதைக் களம்: பெருமாள் பிச்சையை ஆறுச்சாமி கொன்று 26 ஆண்டுகள் ஆன நிலையில், அவனது மூன்று மகன்கள் தந்தையை கொன்றவனை பழி வாங்க துடிக்கின்றனர். தந்தை ஆறுச்சாமியும், மகன் ராம்சாமியும் இணைந்து சமூகத்தில் விஷ பூச்சிகளாக இருக்கும் அம்மூவரையும் வேரோடு வதம் செய்வதே திரைக்கதையின் சுருக்கம். அம்மா கதாபாத்திரம் என்பதால், த்ரிஷா ’நோ’ சொல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில், ”கல்யாண…
-
- 0 replies
- 629 views
-
-
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெ.வாக நடிக்கிறார் நித்யா மேனன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி இப்படத்தை இயக்கி, தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இப்படம், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர் இதுகுறித்து 'தி…
-
- 0 replies
- 730 views
-
-
கமர்ஷியல் படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிட்டால்.. நடிகை சமந்தாவின் ஆசை இதுதான்! (விடியோ) சமந்தா தனது எட்டு ஆண்டுகள் திரை வாழ்க்கையில் பல கமர்ஷியல் படங்களைக் கடந்து இப்போதுதான் யூடர்ன் போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய திரைப்பயணம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அதன் காணொலி இதோ http://www.dinamani.com/cinema/cinema-news/2018/sep/20/actress-samanthas-interview-about-u-turn-3004274.html
-
- 0 replies
- 469 views
-
-
4ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா 2018… தொடர்ச்சியாக, 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதாகும். முப்பது வருட யுத்த இழப்புகளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது. யாழ்ப்பாண சர்வதேச தி;ரைப்பட விழா (Jaffna International Cinema Festival) ஒரு பக்கசார்பற்ற, சினிமாத்துறை சார்ந்த படைப்பாளிகளின் ஆக்க வெளிப்பாடுகளுக்கான ஒரு களமாகும். இது Agenda 14 மற்றும் சிலோன் தியேட்…
-
- 0 replies
- 503 views
-
-
நேற்று முன்தினம் இந்தப்படத்தைப் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் இருந்தாலும் மலையாளக் கம்முயூனிஸ்ட் சாக்கோ விளிம்பு நிலை மக்களுக்காக போராடியது பிடித்திருந்தது. படம் பிடித்திருந்தது. ஆனால் கட்டுரை சொல்லுவதுபோல இன்னும் இரசனையை வளர்க்கவேண்டும்! மேற்குத் தொடர்ச்சி மலை – பா. கோவர்தன் September 13, 2018 மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியான தினத்தின் மதியத்தில் இருந்தே ‘தமிழில் ஓர் உலக சினிமா’ எனும் அடைமொழி அதனுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. தமிழின் முதல் சீரிய அரிய முயற்சி என்றெல்லாம் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் தமிழர்களில் பலரும் சிலிர்த்துக் கொண்டார்கள். இதை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன் என்பதனால் சிறிய அதிர்…
-
- 0 replies
- 482 views
-
-
நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது: ஜோதிகா சிறப்பு பேட்டி ஜோதிகா | கோப்புப்படம். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2018-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு என்கிறார் நடிகை ஜோதிகா. பாலாவின் 'நாச்சியார்', மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி', புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் என்று பிஸியாக இருக்கிறார் ஜோ. அவருடனான சந்திப்பில்.., 'செக்கச் சிவந்த வானம்' இசை வெளியீட்டு விழாவில் அத்தனை நடிகர்களும் வந்திருந்தனர். உங்களைப் பார்க்க முடியவில்லையே... அந்த நேரத்தில் என்னுடைய குழந்தைகளுக்கு விடுமுறை விட்டிருந்தது. இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தோம். அவர்களின் விடுமுறையின்போது பொதுவ…
-
- 0 replies
- 550 views
-
-
நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை ம…
-
- 2 replies
- 753 views
-
-
37 வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய மலையாள நடிகர் கேப்டன் ராஜு காலமானார்! குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் என பல தோற்றங்களில் நடித்த 68 வயதான மலையாள நடிகர் கேப்டன் ராஜு இன்று காலை உயிரிழந்தார். PhotoCredits : Twitter/@seoanushka மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கேப்டன் ராஜு. குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் என தனிப்பட்ட நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் இவர். தமிழில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, ஜீவா, தாய்நாடு, சூரசம்ஹாரம், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 1950-ல் ப…
-
- 0 replies
- 602 views
-
-
சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் வெளியிடப்படவுள்ளது தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த சில்க் சுமிதா கடைசியாக நடித்து வெளிவராமல் இருந்த ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிடவிருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 1980-ல் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த சில்க்சுமிதா 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் அறிமுகமான இயக்குனரின் கடைசி படமான ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிட முயற்சி நடைபெறுகின்றது.1979-ம் ஆண்டு சில்க் சுமிதாவை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து சுமிதா என்று பெயர் சூட்டினேன். எனது படமான வீணையும் நாதமும் படத்தில் சில்க்கு அறிமுகம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனவுக்'கண்’ணி மாதவியை மறக்கமுடியுமா? நடிகை மாதவி அ+ அ- கண்களால் பேசுவது என்பது ஒருவகை. பேசும் கண்களைக் கொண்டிருப்பது வரம். அப்படி கண்களை வரமாக வாங்கி வந்த நடிகைகள் பலர் உண்டு. அவர்களில் மாதவிக்கு தனியிடம் உண்டு. சிலர் தில்லுமுல்லு மாதவி என்பார்கள். இன்னும் சிலர் டிக் டிக் டிக் மாதவி என்பார்கள். ஆனால் பலரும் ராஜ’பார்வை’ மாதவி என்று சொல்லுவார்கள். ஹைதராபாத்தில் பிறந்தார். அவரின் பெயர் அல்லதுர்கம் மாதவி. எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழுக்கு வந்தார். தனியிடம் பிடித்து நின்றார். வந்தது முதலே, மிகப்பெரிய உயரமும் தொடாமல், கீழேயும் செல்லாமல் எந்த ஆர்ப்பாட்டமு…
-
- 0 replies
- 818 views
-
-
மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn கண்ணாடியும் ஃப்ரெஞ்சு தாடியுமாக என்ட்ரியான அந்த இளைஞரை 'யாரு சாமி நீங்க? எங்க இருந்து வந்தீங்க?' என ஆச்சரியமாக பார்த்தது கன்னட திரைப்பட உலகம். இன்று அதே இளைஞர் தமிழில் காலெடுத்து வைத்திருக்கிறார். 'லூசியா' என்ற மேஜிக்கல் படம் கொடுத்த பவண்குமாரின் பை-லிங்குவல் படமான 'யூ'டர்ன்' நம்மையும் அப்படி கேட்க வைக்கிறதா? இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு ஆங்கில இதழில் இன்டெர்னாக சேரும் சமந்தாவுக்கு வீட்டிலிருந்து கல்யாண பிரஷர், அலுவலகத்திலிருந்து வேலை பிரஷர். தன்னை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் ஒரு வித்தியாச அசைன்மென்ட்டை கையிலெடுக்கிறார். வேளச்சேரி பாலம் பற்ற…
-
- 6 replies
- 1.8k views
-
-
விரட்டும் செல்போன்கள்... மிரட்டும் கழுகு... சிட்டி ரீ-என்ட்ரி! - ரஜினியின் 2.0 டீசர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 2.0 திரைப்படம். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்புக் கூடியிருக்கிறது. முழுக்க முழுக்க 3டி கேமராவைப் பயன்படுத்தி 2.0 படம் படமாக்கப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று …
-
- 3 replies
- 860 views
-
-
சீமராஜா சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 3 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு3 / 5 நடிகர்கள் சிவகார்த்திகேயன்,சமந்தா,சிம்ரன்,நெப்போலியன்,சூரி,லால்,யோகிபாபு இயக்கம் பொன்ராம் கரு: ராஜவம்சத்தை சேர்ந்த சீமராஜா தனது ராஜ கௌரவத்தை மீட்டெடுக்க முயல்வது தான் ’சீமராஜா’ படத்தின் கரு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்கு பிற்கு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இயக்குநர் பொன்ராம் கூட்டணியில் வெளிவந்துள்ள மூன்றாவது படம் ’சீமராஜா’. வழக்கம் போல நகைச்சுவை காட்சிகள் மிகவும் தரமாக தயாராகியுள்ளத…
-
- 2 replies
- 3.5k views
-