Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சால்வைகளும், பூக்களும் நிரம்பிக் கிடக்க வேண்டிய அமீரின் அலுவலகம் கழுவி துடைத்த மாதிரி இருக்கிறது. பெர்லின் போய் தனது பருத்தி வீரன் படத்திற்காக சர்வதேச அளவிலான சிறப்பு விருதை வாங்கி வந்திருக்கும் அவரது முகத்தில் உற்சாகத்திற்கு பதிலாக ஒரு மூட்டை வருத்தம்! ஏர்போர்ட்டில் இறங்குவதற்கு முன்பாகவே ஓடி போய் வரவேற்க வேண்டிய திரையுலக அமைப்புகள் வெவ்வேறு வேலைகளில் பிஸியாகிவிட, தனது விரக்தி சிரிப்பை சிரமப்பட்டு ஒளித்துக் கொண்டு பேசத் துவங்குகிறார் அமீர். பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு அங்கு வந்திருந்த பலரும் பிரமித்து போயிருந்தார்கள். அங்கே வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலர், "நாங்கள் இங்கு வந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படத்தை பார்த்ததும் எங்கள் மண்ணில் இரு…

    • 2 replies
    • 1.6k views
  2. சிங்கம் 2 படத்தில் சூர்யா நடிப்பார், நடிக்க மாட்டார் என்று பல வித செய்திகள் வந்த நிலையில், சூர்யா நடிப்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.மாற்றான் முடிந்ததும் அடுத்து சூர்யா நடிக்கப் போவது இந்த சிங்கம் -2 தான். அவருக்கு அனுஷ்கா, ஹன்ஸிகா என இரு ஜோடிகள். Video News க்கு இங்கு கிளிக்குங்கள்..

    • 0 replies
    • 756 views
  3. வீரகேசரி: நமீதாவை வைத்து அடுத்து படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி சிதம்பரம். ஷக்தியின் சினிமா 'சக்தியாக' நமீதா விளங்குகிறார். அவர் இயக்கும், தயாரிக்கும் படங்களில் நமீதா 'டிபால்ட் பிராப்பர்டி' ஆகி விட்டார். கதை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நமீதா இருப்பார் என்ற அளவுக்கு நமீதாவுக்கும், ஷக்திக்கும் இடையிலான நட்பு ஆழமாக உள்ளது. சமீபத்தில் வெளியான சண்டை படத்திலும் நமீதா நீக்கமற நிறைந்திருந்தார். கரகாட்டக்காரியாக ஆடி, ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் ஏற்படுத்திய பதைபதைப்பு இன்னும் கூட போயிருக்காது. இந்த நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி. இதில் நமீதாதான் நாயகி. அதேபோல ஹீரோவாக சுந்தர்.சியையே புக் செய்து விட்டார். இப்படத்திற்கு சுந்தர்.சிக்கு பெரும்…

  4. இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. மேற்கத்திய இசை, கர்நாடிக் சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதை தான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே’ என்று உருகவைப்பார், ‘போராளே பொன்னுத்தாயி’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோ…

  5. [size=4]'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்பட உலகில் இசையமைக்க ஆரம்பித்து 20 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டியும் அவரை கௌரவிக்கும் வகையிலும் சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சென்னை காமராஜர் அரங்கத்தில் இவ்விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசை வாழ்க்கையை ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான், தேசிய விருதுகளும் இரட்டை ஆஸ்கர் விருதுகளும் பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்தவர். ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் முகமாக பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகளென திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக இவ்விழாவை ஏற்…

  6. “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு! கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரான பூவை செங்குட்டுவன் (90) இன்று மாலை சென்னை பெரம்பூரில் காலமானார். வயது மூப்பே அவரது மரணக்காரணமாகக் கூறப்படுகிறது. செங்குட்டுவன் தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 4,000-க்கும் அதிகமான சுயாதீனப் பாடல்களையும், 5,000 பக்திப் பாடல்களையும் இயற்றி தனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வரிகளில் இலக்கிய நயமும், ஆன்மீக உணர்வும், பொதுமக்களின் வாழ்வியல் மொழியும் கலந்து காணப்பட்டதால் பரவலான வரவேற்பைப் பெற்றது. அவரது படைப்புகளில் சில பாடல்கள் காலத்தால் அழியாத புகழை பெற்றன. “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை…

  7. குசேலன் படத்தால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்க ரஜினியும் படத் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், அஸ்வினி தத் இணைந்து தயாரித்த குசேலன் படம், ஆக.1ம் தேதி வெளியானது. இதன் வினியோக உரிமையை ப¤ரமிட் சாய¢மீரா நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியது. தமிழகத்தில் சில பகுதிகளுக்கான உரிமையை ரூ.15 கோடிக்கு வேறு வினியோகஸ்தர்களுக்கு பிரமிட் சாய்மீரா விற்றது.குசேலன் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால், ஆந்திரா வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் தங்களுக்கு ரூ.13 கோடி வர…

  8. நயன்தாராதான் எனக்குப் போட்டி!- சமந்தா சிறப்பு பேட்டி தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம்வந்தாலும் சென்னை பேச்சையும், அவருடைய நட்பு வட்டத்தையும் இன்னும் மறக்கவில்லை சமந்தா. சென்னை வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து… சென்னையில் உங்களை எந்தவொரு திரைப்பட நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லையே? உண்மைதான். மே மாதத்தில் 6-ம் தேதி ‘24', 13-ம் தேதி ‘ஆ ஆ', 20-ம் தேதி ‘பிரம்மோற்சவம்' ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. ஆகையால் அடுத்தடுத்துப் பட வேலைகள் என ஓடிக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் சென்னைக்கு வந்த…

  9. ஐதராபாத்தில் புகழ்பெற்ற தொழிலதிபர் பிரகாஷ் ராஜ். பிளஸ் டூ படிக்கும் இவரது மகள் வேகாவை பணத்துக்காக ஒரு கும்பல் கடத்துகிறது. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் போலீஸ் அதிகாரி ஜெயராம். இதற்கிடையே சென்னையிலிருந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க, ஐதராபாத்துக்கு கிளம்புகிறார்கள் நண்பர் பட்டாளமான எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி, ஷிவா, வைபவ். நள்ளிரவில் வழி தவறி ஓரிடத்தில் இவர்களது வேன் சென்றடைகிறது. அங்கு இவர்களது வேனுக்கு இடையில் வந்துவிழுகிறார் போஸ் வெங்கட். குண்டு காயத்துடன் இருக¢கும் அவரை காப்பாற்ற நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். மேலும் வாசிக்க... http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=312

  10. ‘போனோமா-சிரிச்சோமா-வந்த உடனே மறந்தோமா’ வகையில் அடுத்த படம் ‘முத்தின கத்திரிக்கா’ - விமர்சனம் ஒரே ஆளாய் கட்சி ஆரம்பித்து, ஒரே ஆளாய் அதை ஒப்பேற்றிக் கொண்டிருக்கும் சுந்தர்.சிக்கு நாற்பது வயதாகியும் திருமணமாகவில்லை. பூனம் பாஜ்வாவைப் பார்த்து காதலில் விழும் அவருக்கு, பெண் கேட்கப் போன இடத்தில் அதிர்ச்சி. அதோடு மட்டுமல்லாமல், ‘கவுன்சிலராகக் கூட வக்கில்ல’ என்று பூனம் பாஜ்வாவின் அப்பா ரவி மரியா சொல்லிவிட, எம்.எல்.ஏ. ஆக ஐடியா செய்கிறார். பழைய பாட்டு புத்தகத்தில் போட்டிருக்கிற மாதிரி.. ‘மீதியை வெள்ளித்திரையில் காண்க!’ பேய்ப் படங்கள், ஆர்ட் படங்கள் என்று மாறி மாறி ட்ரெண்டில் இருக்கும் தமிழ் சினிமாவில் இப்போது காமெடி படங்களின் காலம். படத்தில் ஒரு காட்…

  11. படத்தின் கதாநாயகன் ஜெராட் மற்றும் கதாநாயகி மிதுனா தம்­பி­ஐயா தேவதாஸ் பாடசாலை மாணவர்களாக தோன்றும் நடிகர்கள் தமிழ்ச் சினி­மாவை ரசிக்கும் ரசி கர்கள் இப்­பொ­ழுது உலகம் எங்கும் பரந்­தி­ருக்­கி­றார்கள். அத்­தனை பேருக்கும் தீனி­போட்ட தமிழ் சினிமா உலகம் சென்­னையில் இருக்­கி­றது என்­பதை நாம­றிவோம். பெரும்­பா லான தமிழ்த் திரைப்­ப­டங்கள் இப் பொழுதும் சென்­னையில் இருந்து தான் வெளிவரு­கின்­றன. ஆனாலும் இப்­பொ­ழுது தமிழ்ப்படங்கள் பிற நக ரங்­க­ளி­லி­ருந்தும் வெளி­வரத் தொடங் கு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. தமிழ்ப்­ப­டங்கள் லண்டன், டொரண்டோ, பாரிஸ், கொழும்பு போன்ற நக­ரங்­க ளி­லி­ருந்து தயாரிக்கப்பட்டு வெளி­வ­ரு வதை சாதா­ரண­மாக அவ­தா­னிக்கக் கூடி­ய­…

    • 1 reply
    • 452 views
  12. அசின் அளவுக்கு கிளாமராக நடிப்பேன் என்றார் பூனம் பஜ்வா.தெனாவட்டு ஹீரோயின் பூனம் பஜ்வா கூறியதாவது:தெலுங்கில் 4, கன்னடத்தில் ஒன்று என 5 படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நடித்த தெனாவட்டுதான் நான் நடித்து கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற படம். எனது சொந்த ஊர் புனே. ஆனாலும் தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழில் பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஹீரோவுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் தமிழில் அதிகம் என்பதை புரிந்திருக்கிறேன். எல்லா ஹீரோக்களுடனும் நான் நடிப்பேன். அதேநேரம் நடிப்பை வெளிப்படுத்தும் படங்களுக்கும், ஹீரோயினை மையமாக வைத்த கதைகளுக்கும் முன்னுரிமை தருவேன்.¨ நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா? என்கிறார்கள். கிளாமராக நடிக்கும் நடிகைகளை பற்றி நான் விமர்சிக்க …

  13. திரை விமர்சனம்: றெக்க மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, முதல் முறையாக மசாலா தூக்கலாக உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத் திருக்கிறார். மசாலா படங்களுக்கெனவே ஆகி வந்த 2 வில்லன்களின் பகையோடு கதை தொடங்குகிறது. டேவிட் (ஹரிஷ் உத்தமன்) - செழியன் (கபீர் சிங்) இடையே தொழில் பகை. காதலர்களைச் சேர்த்துவைக்கும் சிவா (விஜய் சேதுபதி) இவர்களுக்கு இடையில் வருகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் டேவிட்டிடம் சிக்கிக் கொள்ளும் சிவா, அதிலிருந்து மீள, அவனுக்காக அமைச்சரின் மகள் அஞ்சலியை (லட்சுமி மேனன்) கடத்திக் கொண்டு வர ஒப்புக்கொள்கிறார். அவரால் கடத்தி வரமுடிந்ததா, காதலர்களைச் சேர்த்துவைக்க அவர் காட்டும் ஆர்வத்தின் பின்னணி என…

  14. நடிகை பூஜாவுக்கு, தொழில் அதிபருடன் ரகசிய திருமணம். சென்னை: நடிகை பூஜாவுக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜே ஜே படம் மூலம் கோலிவுட் வந்தவர் இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா. அவரது தாய் இலங்கையை சேர்ந்தவர், தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூரில் படித்த பூஜா தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, சிங்கள மொழிப் படங்களில் நடித்து வந்தார்.அவருக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகாது என்று கூறி பிரிந்துவிட்டனர். இந்நிலைில் பூஜாவுக்கும், தீபக்கிற்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பூஜா தமிழில…

  15. ரூ.50 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் கைது, புழல் சிறையில் அடைப்பு. சென்னை: ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் கூறினர். பின்னர் ரங்கநாதனை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அப்போது ரூ.20 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்த பவர் த…

    • 3 replies
    • 550 views
  16. The Last Halt | கடைசி தரிப்பிடம் | Sujeeth G | Siva Santhakumar | shathiesh படத்தை வாடகை முறையில் யூட்டியுப்பில் பார்க்கலாம். இயக்கினடுடைய செவ்வி... படம் நன்றாக உள்ளது, நீங்களும் பார்த்து கருத்துக்களை பகிரவும் !!!

    • 1 reply
    • 710 views
  17. நடிகர் சிவாஜிக்கு கூகுள் டூடுல்! மின்னம்பலம்2021-10-01 நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 1) அவரை சிறப்பித்து கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. ஒரே நாளில் நடிகர் சிவாஜி கணேசன், அண்ணாதுரை அவர்கள் எழுதிய நாடக வசனத்தை உள்வாங்கி சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அந்த நாடகத்தை நேரில் கண்டு ரசித்து வியந்த தந்தை பெரியார் அவரை வெகுவாக பாராட்டியதுடன் கணேசன் என்கிற பெயருக்கு முன் சிவாஜி என்கிற அடைமொழியை வழங்கினார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்தது. 1952ல் வெளிவந்த ‛பராசக்தி படம் மூலம் திரை…

    • 1 reply
    • 359 views
  18. நடிகர்கள்: மகேஷ், அஞ்சலி, ஏ வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன் வசனம்: ஜெயமோகன் இசை: விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ் பின்னணி இசை: விஜய் ஆன்டனி மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு எழுத்து - இயக்கம்: ஜி வசந்தபாலன் தயாரிப்பு: கே கருணாமூர்த்தி - சி அருண்பாண்டியன் தமிழ் சினிமாவில் அபூர்வமாக சில குறிஞ்சிகள் மலர்வதுண்டு. வசந்த பாலனின் அங்காடித் தெரு அப்படியொரு குறிஞ்சி!. இது பண்ணப்பட்ட கதையல்ல... விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம். அத்தனையும் நிஜம்!. பத்து மாடி, பதினைந்து மாடி என உயரமான கட்டடங்களில் பரபரப்பாக நடக்கும் பளபள வர்த்தகங்களுக்குப் பின்னே அதன் முதலாளிகள் செய்யும் சில்லறைத்தனங்களும், மனிதன…

    • 9 replies
    • 1.8k views
  19. இளையராஜாவின் நிறைவேறாத ஆசைகளுக்கு வாய்ப்புள்ளதா..? -சாவித்திரி கண்ணன் பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள் இருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை! ‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! ஒரு பத்திரிகையாளனாக உருவாவதற்கு முந்தியில் இருந்தே அவர் பெல்பாட்டம் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த அந்த இளமைக் காலம் முதல் அவரைப் பார்த்து வருகிறேன். அவரை சில முறை பிரசாத் ஸ்டுடியோவிலும், ஒரே ஒரு முறை அவரது வீட்டிலும்…

  20. ம.கா.செந்தில்குமார் ''அடங்கப்பா... என் விரதத்தை விகடன் கலைச்சுப்பிடுச்சே!'' - கலகலவெனச் சிரிக்கிறார் கவுண்டமணி. 'பேட்டி’ என்றாலே விலகிச்செல்லும் அல்லது விரட்டிவிடும் நம்ம கவுண்டரேதான். ''ஒரு ஃப்ரெண்டா வா... ரசிகனா வா... எவ்வளவு நேரம் வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசலாம். ஆனா, பத்திரிகைக்காரனா வராத!'' என்று அன்பாக அதட்டும் அதே கவுண்டமணி. 'இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது’ முதல் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ வரை சாகாவரம் பெற்ற பன்ச்களின் நாயகன் இதோ என் முன் அமர்ந்திருக்கிறார். பல மாதத் துரத்தல், வற்புறுத்தல், ஏகப்பட்ட உரையாடல்களுக்குப் பிறகு நிகழ்ந்த பேட்டி இது. அரியலூர் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தின் '49ஓ’ படத்தின் படப்பிடிப்பு இடைவே…

  21. ஒப்பற்ற கலைஞர் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்.

  22. சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நயன்தாரா தனது திரையுலக பயணத்தில் 14 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை ஆனார். ஆரம்பத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடி ஆனார். குசே…

  23. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்ஐவி வைரஸôல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி செய்வதற்காக இனி விளம்பரப் படங்களில் நடிக்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் 5 கோடி நிதியுடன் ""எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ்நாடு அறக்கட்டளை'' ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இத்தகைய குழந்தைகளுக்கு மேலும் உதவ "பாப்புலேஷன் சர்வீஸஸ் இண்டர்நேஷனல்' (பிஎஸ்ஐ) என்ற தன்னார்வ அமைப்பு நிதி திரட்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பிஎஸ்ஐ, "ச…

    • 0 replies
    • 727 views
  24. எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்??

    • 2 replies
    • 1.6k views
  25. ரஹ்மான் வருகைக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன் -கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி *மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், காதல், களி என வெவ்வேறு உணர்வுநிலைகளை பாடல்களில் வழங்கியிருக்கிறீர்கள். ஆயிரம் பாடல்களில் உங்கள் சொந்த மனநிலைகளும் பிரதிபலித்திருக்கும். அதுபற்றி யோசிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? கவிதை என்பது பொது உணர்ச்சி என்றும் பாட்டு என்பது தன்னுணர்ச்சி என்றும் கருதப்படுகிறது. இதைத்தான் ஆயிரம் பாடல்கள் முன்னுரையிலும் நான் எழுதியிருக்கிறேன். லிரிக் என்பது ஓர் ஆங்கிலச் சொல். இந்த லிரிக் என்பதற்கு தன்னுணர்ச்சிப் பாட்டு என்றுதான் பொருள். இந்த லிரிக் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தபோது கிரேக்க மொழியிலிருந்து இந்தச் சொல் பிறந்ததாக அறியமுடிந்தது. கிரேக்கத்தில் ல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.