ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
எமது உறவுகள் காடுகளில் தொலைந்து போகவில்லை – பற்றார்சன் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, தமிழ் உணர்வாளரும், செயற்பாட்டாளருமான வில்லியம் பற்றார்சன் கனடா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். கனடாவின் நாடாளுமன்றத்தை நோக்கி தமிழர்கள் நடத்தும் நீதி கோரும் நடை பவணியில் பங்கேற்று விடுத்த கோரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை அறிவதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் நானும் நடந்து கொண்டிருக்கிறேன். மேலும், அவர்களின் உறவினர்கள் வீதியில் நின்று இலங்கை அரசிடம் பதில்களைக் கோரி 1280 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது…
-
- 0 replies
- 574 views
-
-
தமிழரசு செயலாளர் பதவியைத் துறந்தார் துரைராஜசிங்கம்; சம்பந்தன், மாவைக்கு கடித மூலம் அறிவிப்பு BharatiSeptember 11, 2020 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 1.4k views
-
-
சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றில் இன்று ஆற்றிய உரை
-
- 8 replies
- 703 views
-
-
மருத்துவக்கழிவுகளை கிடங்கு வெட்டி புதைப்பதற்கு எதிராக, நல்லூர் பிரதேச சபை வழக்கு தொடர தீர்மானித்தால் சட்ட உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் என பதவி விலக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். செம்மணி- சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக வி.மணிவண்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த மயானத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த மயானத்தின் பாதுகாப்பு முழுவதும் நல்லூர் பிரதேச சபையினுடையதே அவ்வாறு இருக்க, இந…
-
- 0 replies
- 599 views
-
-
’மாடுகளை ஏற்றிக்கொண்டு அந்த வண்டியிலேயே நானும் வருகிறேன்’ -பா.நிரோஸ் கருத்தாழமிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு, மலையக மக்களுக்குப் பேரிழப்பு எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் தன்னுடன் பகிர்ந்து கொண்ட நகைச்சுவை சம்பவம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ள அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 3 replies
- 640 views
-
-
பிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு; - சச்சிதானந்தன்.! பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பிரதமரை பாராட்டுவதாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார் . சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார். இலங்கைச் சைவர்கள் அனைவரும் இதனால் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் எமது நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எ…
-
- 19 replies
- 2k views
-
-
புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் பாராட்டு! கனடா தமிழ் முதலீட்டாளர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகைக்கு இன்று (11) அழைத்திருந்தார். வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர். பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத் திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த 2 முதலீட்டாளர்களும் வடக்கு - கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார். …
-
- 1 reply
- 894 views
-
-
மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு Rajeevan ArasaratnamSeptember 11, 2020 மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கான முயற்சிகளுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்றுஉரையாற்றிய கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் இதனை தெரிவித்துள்ளார். மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானோ அல்லத வேறு எந்த அமைச்சரோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தனது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/67700
-
- 0 replies
- 319 views
-
-
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள நிலங்கள், தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு திருப்பித் தரப்படாது. ஏனெனில் இது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர நேற்று (10) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். இராணுவ ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் 90 சதவீதம் ஏற்கனவே மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விக்னேஸ்வரன் போன்ற பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட மக்கள் இருக்கும் வரை தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மக்களுக்கு ஒருபோதும் திருப்பித் தரப்படாது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “விக்னேஸ்வரன் எம்.பி கூறுக…
-
- 1 reply
- 562 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினையும் அதன் தலைவரையும் விமர்சிப்பதற்கு செல்வம் அடைக்கலநாதனுக்கு எந்தவித அருகதையும் இல்லை – பூ.பிரசாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினையும் அதன் தலைவரையும் விமர்சிப்பதற்கு செல்வம் அடைக்கலநாதனுக்கு எந்தவித அருகதையும் இல்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஓருபோது தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து,மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை நடுத்தெருவில் விட்ட கட்சியல்ல.இன்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்புக்காக பாடுபட்டுவரும் கட்சியாகும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பற்ற விமர்சிப்பதற்கு துளியளவும் அருகதையில்லாத நிலை…
-
- 0 replies
- 304 views
-
-
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றிஎம்முடன் இணைந்துப் பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அங்கு, இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், “கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகைதந்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு, உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால், நீங்கள் பலர், நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வெளியேறியுள்ளமை, எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.“எமது அரச…
-
- 7 replies
- 1.4k views
-
-
ரஸ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை பெறுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ள இலங்கை ரஸ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அதற்கான பட்டியலொன்றையும் சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை புதிய ஆயுத தளபாடங்களை விரைவில் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளது. நாங்கள் எங்களுக்கு தேவையான ஆயுத தளபாடங்கள் குறித்த பட்டியலொன்றை வைத்துள்ளோம். அவற்றை குறுகிய காலத்துக்குள் பெற விரும்புகின்றோம். முன்னைய உடன்படிக்கையொன்று தற்போதும் நடைமுறையில் உள்ளது. அது முடிவடைந்ததும் ரஸ்யாவு…
-
- 0 replies
- 344 views
-
-
கப்பலில் தீப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டார் உயிர் பிழைத்த மாலுமி கப்பலில் தீப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக MT New Diamond கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க பனாமாக்கப்பல் மாலுமியும் பிலிப்பைன்ஸ் பொறியியலாளருமான எல்மோர் பல விடயங்களை தெரிவித்துள்ளார். கடற்படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 மணி நேரம் நிபுணர் டொக்டர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் சத்திர சிகிச்சை, அளிக்கப்பட்டு பின்னர் அதிதீவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். …
-
- 0 replies
- 522 views
-
-
தமிழர்களின் பூர்வீக பிரதேசமான குருந்தூர்மலையில், காவலரண் ஒன்றினை அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி முல்லைத்தீவில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான குருந்தூர்மலையில், காவலரண் ஒன்றினை அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் குறித்த பிரதேசத்தில் இன முறுகலை ஏற்படுத்துகின்ற வகையில், மதங்களுடன் தொடர்புடைய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருந்தூர் மலைப் பகுதியில் கட்டுமான வேலை ஒன்றினை முன்னெடுப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். இதனடிப்படையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்ப…
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கையில் கால்நடைகளை படுகொலை செய்வதற்கு தடை விதிக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கும் திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்தார். ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோது இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது .https://www.virakesari.lk/article/89490
-
- 23 replies
- 2.8k views
-
-
(செ.தேன்மொழி) 'வியத்மக ' அமைப்பினூடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சிமுறையை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கத்தை அமைத்தவர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கி உலகச்சாதனை புரிந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல கூறினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தன்னை மாறுப்பட்ட பண்புக் கொண்ட ராஜபக்ஷ ஒருவராகவே காண்பித்துக் கொண்டிருந்தார். வியத்மக அமைப்பின் ஊடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சி முறையை முன்னெடுக்கப்போவதாகவே தெரிவித்து வந்தார். அதன் காரணமாகவே மக்கள் அவரை …
-
- 4 replies
- 531 views
-
-
பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்குரானை பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கிவந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நீர்வழங்கல் தொகுதியொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்குரானை பகுதியானது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதோடு பொது போக்குவரத்துகளை காணாத பகுதியாகவும் இருந்துவருகின்றது. இப்பகுதியில் வறட்சி காலங்களில் மக்களும் பாடசாலை மாணவர்களும் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். …
-
- 0 replies
- 290 views
-
-
அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்க நடவடிக்கை ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய மேற்படி வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி (2020/09/30) வரை ஏற்றுக்கொள்ளப்படும். பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான…
-
- 0 replies
- 711 views
-
-
ரவிராஜ் படுகொலை விவகாரம் – போலி ஆதாரங்களை உருவாக்குமாறு ரணில் கூறியதாக குற்றச்சாட்டு யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் ஜோன் அமரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக தனக்கு தொலைபேசி அழைப்பு வருவதாக சிஐடியைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரி அமரவ…
-
- 0 replies
- 446 views
-
-
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா திருகோணமலைக்கு விஜயம்! இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (வியாழக்கிழமை) திருகோணமலைக்கு விஜயம் செய்தார். திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் தலமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”கோவிட் 19 இன் தாக்கம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில் இலங்கை இராணுவமானது சிரமங்களை பாராது கடமைகளில் ஈடுபட்டிருந்தது. இதன் காரணமாக நாட்டில் குறித்த நோய்த்தொற்றானது சமூகபரவலடையாது பாதுகாக்க முடிந்தது. அதற்காக நன்றி தெரிவிக்குமுகமாக எனது இந்த விஜயம் அமைந்துள்ளது. போ…
-
- 0 replies
- 534 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழு கட்டுப்பாட்டையும் இழந்ததற்கு அரசாங்கம் இன்று கவலை வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு ஒரு சொத்து என துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஏனைய நாடுகளின் முக்கிய துறைமுகங்கள் போன்ற உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஏனைய நட்பு நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். எனினும், ஒரு முக்கியமான துறைமுகத்தின் கட்டுப்பாட்டை இழப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம் ஒப்படைக்க கடந்த அரசு எ…
-
- 6 replies
- 755 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சாணக்கியனுக்கு நாடாளுமன்றத்தில் உயர் பதவி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனது நாடாளுமன்ற கன்னி உரையில் நாடாளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்றிய இரா.சாணக்கியன் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஞானசார தேரரின் வாக்குமூலத்தை தொலைபேசியில் பதிவு செய்த மௌலவி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சி வழங்கி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் பதில் செயலாளர் அதனை தனது தொலைபேசியில் பதிவு செய்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சி வழங்குவதற்காக வருகை தந்திருந்தார். அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை உட்பட 10 குழுவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த சாட்சி விசாரணை இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆ…
-
- 0 replies
- 444 views
-
-
20 ஆவது திருத்தம் நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரபடவில்லை http://athavannews.com/wp-content/uploads/2020/08/G.L.Peiris-1.jpg அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதி நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரபடவில்லை என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த அதிகாரம் பொதுமக்களுக்கு தடையற்ற சேவையை வழங்க ஜனாதிபதிக்கு உதவும் என குறிப்பிட்டார். மேலும் 19 ஆவது திருத்தம் இருக்கும் வரை, ஜனாதிபதி நீதிமன்றங்களுக்கு பதில் வழங்க வேண்டியவராக இருப்பதனால்…
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, https://www.virakesari.lk/article/89637 Tags
-
- 0 replies
- 334 views
-