Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/மத-வழிபாடுகளில்-ஈடுபடுபவ/

  2. மைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.! இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வர வேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் நாளைய விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று (27) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு:- "அமெரிக்க முதன்மை பிரதி உதவி இராஜாங்க செயலர் டீன் தொம்ஸன் இராஜாங்க செயலாளரின் எதிர்வரும் விஜயம் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சீனா - இலங்கை உறவு தொடர்பாக பகிரங்கமாக வலியுறுத்தல் விடுத்ததுடன் தலையீடு செய்தமை மட்டுமன்றி வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக 'கடினமானதும் ஆனால் தேவையானதுமான தீர்மானங்களை' இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தமையானது இரா…

  3. ஊடக பிரிவு முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும் எனஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். பிரான்ஸில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கள் குறித்து ஹாபிஸ் நஸீர்அஹமட் எம்பி தெரிவித்துள்ளதாவது; தங்களது உயிரை விடவும் இறைதூதர் முஹம்மது நபியை முஸ்…

  4. கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் பகுதியில் இன்று (28) இரவு சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் பவுசரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது ஆலய பூசகரின் மனைவியான யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய இராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய இராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://newuthayan.com/சற்றுமுன்-கோர-விபத்து-தா/

  5. மைக் பொம்பியோவுக்கு பகிரங்க கோரிக்கை? 56 Views அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை வருகையினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்களின் சங்கப்பிரதிநிதிகளால், இன்று யாழ் ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நிகழ்த்தப்பட்டது. இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத் தலைவி திருமதி யோகராசா கனகரஞ்சனி, யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க இணைப்பாளர் இளங்கோதை மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊடக சந்திப்பானது ‘அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுக்கு, வலிந்து காணாமலாக…

  6. இலங்கையில் இதற்கு முன்னொரு போதும் இல்லாதவாறு ஒரே நாளில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதிலிருந்து நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனினும் அசாதாரணமான மரணங்களைக் கட்டுப்படுத்தும் கட்டத்தில் இலங்கை இருப்பதால் இப்போதாவது அபாயம் குறித்து உண்மையான தகவல்களை சுகாதாரத்துறையினர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் தற்போதுள்ள அபாய நிலைமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெளிவுபடுத்துகையில், செவ்வாய்கிழமை மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகின. 5 நாட்களில் 6 மரணங்கள் புதிய கொத்தணிகளால் பதிவாகியுள்ளன. நாம் அனைவரும் எச்சரிக்கை நிலைமையொன்று…

  7. பட மூலாதாரம், Mike Pompeo படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பேயோ தெற்காசியாவின் தீவு நாடான இலங்கை மீது தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வந்த பின்னணியில், அதன் மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கோவிட்-19 வைரஸ் தாக்கம் சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் பின்னணியில் கூட சர்வதேசத்தின் நேரடி தலையீடு, இலங்கைக்குள் செலுத்தப்படுவதாகவும் கருத முடிகிறது. கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே காணொளி ஊடாக சந்திப்பொன்று நடைபெற்றது. பட மூலாதாரம், இந்திய பிரதமர் அலுவலகம் …

    • 2 replies
    • 979 views
  8. சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் Rajeevan Arasaratnam சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது சிறிலங்காவை சீனத்தின் குறுநில அரசாகி ( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது. ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு சீனம் அண்மையில் வழங்கியுள்ள உறுதியினை மையப்படுத்தி அமெரிக்க வெளியுறவுச் செயலர் பொம்பியோவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விடயத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியு…

    • 2 replies
    • 757 views
  9. மணிவண்ணனை பதவி நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.அதனடிப்படையில் வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது.தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவை தானே தாக்கல் செய்தார் .இந்ந…

  10. கொரோனாவுக்காக அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி தொடர்பில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த நிதிக்கு எவ்வளவு சேகரிக்கப்பட்டது என்பதை நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் “இட்டுகம” என்ற பெயரில் இந்த நிதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிதிக்கும், இதற்கு பின்னர் சேகரிக்கப்பட்ட நிதிகளுக்கும் என்ன நடந்தது என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு …

    • 3 replies
    • 547 views
  11. பொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் குறித்த தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்- மைக்பொம்பியோ Rajeevan Arasaratnam இலங்கை மக்கள் பேண்தகு அபிவிருத்தியுடன் இறைமையும் சுதந்திரமும் கொண்டவர்களாக விளங்கவேண்டும் என அமெரிக்க விரும்புகின்றது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார். நட்புறவு மிக்க சகா என்ற அடிப்படையில் அமெரிக்கா அதனையே வழங்குகின்றது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாடுகள் பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ நான் இந்தி…

    • 0 replies
    • 359 views
  12. அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயாராகவே உள்ளது – தினேஸ் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/10/dinesh-1.jpg அணி சேரா நாடு என்ற வகையில், அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயாராகவே உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இலங்கைதான், பழ…

    • 0 replies
    • 957 views
  13. முஸ்லிம்களை நம்பும் தமிழ் தலைமைகள் இனியாவது திருந்த வேண்டும் ! கலையரசன் October 27, 2020 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் தமிழர்களின் சேர்த்து சிறுபான்மை இனம் என்று பேசி வந்தனர். அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சிறந்த ஒரு பதிலடி கொடுத்துள்ளனர். இனியாவது தமிழ் தலைவர்கள் திருந்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 20வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனை மூவின மக்களும் எதிர்த்துள்ளனர். இந்த சீர்திருத்த…

  14. கோட்டாபயவைச் சந்தித்தார் பொம்பியோ! October 28, 2020 இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்தித்துள்ளார். நேற்று (27.10.20) இரவு 7.35 மணியளவில் இலங்கை சென்றடைந்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் உட்பட.ட குழுவினரை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி உட்பட அமெரிக்க தூதவர அதிகாரிகள் வரவேற்றிருந்தனர். ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான இரு தரப்பு கலந்துரையாடலை அடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளார். இதனையடுத்து அவர் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல்…

  15. “நொதேன் பவர் ” – பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற சம்மதம்… October 28, 2020 யாழ்.சுன்னாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த “நொதேன் பவர்” நிறுவனத்தினால் பொறுப்பற்ற விதத்தில் வெளியேற்றப்பட்ட கழிவோயிலினால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தி நிறுவனமான “நொதேன் பவர்” நிறுவனத்திலிருந்து வெளியேறிய கழிவோயில் அப்பிரதேசத்தை சூழவுள்ள வீடுகள் , தோட்டங்களின் குடிநீர் கிணறுகளில் கலந்தன. அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை …

  16. சுகாதார அமைச்சரின் தடுப்பூசி கதையால் அரசாங்கத்திற்கு சிக்கல் : October 27, 2020 கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், அதனை வழங்குவதற்கு தயாராகுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தை கேட்டுள்ளதாகவும், இலங்கை சுகாதார அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார். கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் அறிவித்த விடயம், தற்போது அரசாங்கத்திற்கு சிக்கலை தோற்றுவித்துள்ளது. இது குறித்து தமக்கு அறியத்தரப்படவில்லை என இலங்கை தொற்றுநோயியல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆய்வக சோதனை மட்டத்தில் உள்ள தடுப்பூசிகளை பரிசோதிக்க இலங்கையைப் பயன்படுத்துவதற்கான திட்டமாக இது இருக்கக்கூடும் என சுகாதாரத் துறையில் …

  17. வெற்று கார்பன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள் சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்! பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்று கார்பன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள் சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்ட முதலாவது கொள்களன் கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டம் “நாம் வளம்பெற்று நாட்டை வளப்படுத்துவோம்“ என பெயரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பாடசலைகளில் இருந்து ஒதுக்கப்படும் கார்பன் பேனா குழாய்கள் சுமார் 80 கிலோ கிராம்களாகும். வருடமொ…

  18. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு. October 25, 2020 இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு. ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்ட நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கிவைத்தார். ஞாயிற்றுக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவிருந்த போதிலும் கொவிட் – 19 தொற்று பாதுகாப்பு நடைமுறையினைக் கருத்திற்கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு அரசட…

    • 8 replies
    • 1k views
  19. 20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடை…

    • 7 replies
    • 963 views
  20. பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில்,2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவிருப்பதாக தெரிவித்தார். 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இம்முறை கழங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 270 பேர் பொறியியல் பீடத்திற்கு 405 பேர் என்ற ரீதியில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக…

  21. மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்களின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவத்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137105/covid.jpg குறித்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் கொழும்பு பத்தரமுல்லை பகுதியிலுள்ள…

  22. Share (ஆர்.யசி) நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை விடுத்துள்ளார். கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் பெற்றுள்ளதாக தொடர்சியாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்துகையில் அவர் இவற்றை கூறினார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அதிகளவில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதனால் அது சமூக பரவல் எனவும் கருத வேண்டாம். இது அனைத்துமே பரந்த கொத்தணியாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மினுவாங்கொடை கொத்தணியே பெரிய கொத்தணியாக அடையாளம் கா…

  23. யாழ்ப்பாணம் குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று குருநகர் பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராதவர்கள் மற்றும் வெளியாட்கள் உட் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/93082

  24. -செ.கீதாஞ்சன் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று, பொன்னகர் கிராமத்தில், தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை மீளப்பெற்றுள்ளதாக, பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தெரிவித்தார். பொன்னகர் பகுதியில், சிறிய தொலைத்தொடர்பு கோபுரமொன்றை அமைத்து, தொலைத்தொடர்பு சேவையை விஸ்தரிபதுடன், அதில் கமெரா, மின்குமிழ் என்பன இணைப்பு செய்வதற்காக, டயலக் நிறுவனத்தினர் அனுமதி கோரினர். இதற்கமைய, மக்கள் நன்மை கருதி இதற்கான அனுமதி வழங்கப்பட்ட போதும், இந்தத் தொலைத்தொடர்பு கோபுரத்தால் தீங்கு ஏற்படும் எனத் தெரிவித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அது தொடர்பில் பிரதேச செயலாளரிடமும் முறையிட்டனர். இதையடுத்து, டயலக் ந…

  25. மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 இல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/06/Mike-Pompeo.jpg வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மைக் பொம்பியோவின் வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாட்டின் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு மீண்டும் அறிக்கையினூடாக உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்…

    • 19 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.