Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன். அதேவேளை, முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன் என தமிழர் மகா சபை சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளு…

  2. 9 மாகாண சபைகளை 3 ஆக குறைக்க யோசனை! புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் போது மாகாண சபை முறை தொடர்பாகவும் ஆராய வேண்டுமென அரசாங்கத்திற்கு சில தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது காணப்படும் 9 மாகாண சபைகளையும் 3 ஆக குறைப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்திரத்துள்ள குழுவொன்று மன்னர் காலத்தில் ருகுனு ரட்ட , மாயா ரட்ட மற்றும் பிகிடி ரட்ட என்று மூன்று பிரிவுகளே இருந்தன இதன்படி அந்த மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அந்த மாகாண சபைகளை அமைக்க வேண்டுமென்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய மாகாண சபைகள் முறைமையால் வீண் செலவுகளே அதிகமெனவும் இதனால் இந்த முறைமையில் மாற்றம் ச…

    • 9 replies
    • 1.7k views
  3. விக்கினேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் வாபஸ் பெறவேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை BharatiSeptember 13, 2020 சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் வ…

  4. பௌத்த தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் பௌத்த மக்களுக்கு போன்றே பௌத்த தத்துவம் குறித்து ஆர்வம் கொண்ட பிற மதத்தவர்களுக்கும் அறிவை பெற்றுக்கொள்வதற்கு களனி ரஜமஹா விகாரையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஆதாரமாக விளங்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை), களனி ரஜமஹா விகாரையின் www.kelaniyatemple.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தபோதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். பௌத்த தத்துவம் தொடர்பிலும், பிக்குமார்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும், தீர்வு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு செயற்பா…

  5. வவுனியா தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்! வவுனியா, பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித றுவான் குணவர்த்தன (வயது-36) என்பவர் நேற்றிரவு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், அவர் இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மன்னார் சௌத்பார் ரயில் நிலையப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்தநபரை மீண்டும் வவுனியா பெரியகாடு, இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல இராண…

  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன் உண்ணாவிரதம் காரணமாக உயிரிழக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். நோய் காரணமாகவே திலீபன் உயிரிழந்தார் என கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார். ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து 1987ம் ஆண்டில் திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகள் தொடர்பில் இன்றைய தினம் கண்டியில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… “பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய குற்றவாளிகளாவர். இந்தக் கைதிகளின் கோரிக்…

  7. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் கே.வி.தவராசா கடிதம் மூலம் கோரியுள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவரும் கட்சியின் ஒழுக்காற்றுகுழு தலைவருமான சீ.வீ.கே.சிவஞானத்திற்கு முகவரியிடப்பட்டு, கட்சியின் தலைவர், கூட்டமைப்பின் தலைவர், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களிற்கும் முகவரியிடப்பட்டுள்ளது. அந்த கடிதம் இங்கு முழுமையாக பிரசுரிக்கப்படுகிறது. திரு. சி.வி.கே.சிவஞானம் சிரேஸ்ட துணைத்தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர். நான் தமிழரசுக் கட்சியில் …

  8. மட்டக்களப்பில் வாள்வெட்டுக் குழுவின் தலைவர் தனு உட்பட இருவர் கைது… September 12, 2020 மட்டக்களப்பு வாள்வெட்டு குழுவின் தலைவர் தனு உட்பட இருவரை வாள் மற்றும் கைக்குண்டுடன் நேற்று (11.09.20) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு தலைமையக காவற்துறைப் பிரிவிலுள்ள நாற்கேணி மற்றும் ஊறணி தொடர்ச்சியாக வாள்வெட்டு மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வாள் வெட்டுக்குழு ஒன்று பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் தனிமையில் வீடுகளில் இருக்க முடியாத நிலை மற்றும் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இக் குழுவால் தங்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என மக்கள் காவற்துறையில் முறைப்பாடு செய்வதற்கு பயந்த…

  9. நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி . யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்று (12) காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில், இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். மேலும், யாழ்.மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன் முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன். சந்திப்பில் மிகவும் …

    • 6 replies
    • 1.3k views
  10. எமது உறவுகள் காடுகளில் தொலைந்து போகவில்லை – பற்றார்சன் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, தமிழ் உணர்வாளரும், செயற்பாட்டாளருமான வில்லியம் பற்றார்சன் கனடா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். கனடாவின் நாடாளுமன்றத்தை நோக்கி தமிழர்கள் நடத்தும் நீதி கோரும் நடை பவணியில் பங்கேற்று விடுத்த கோரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை அறிவதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் நானும் நடந்து கொண்டிருக்கிறேன். மேலும், அவர்களின் உறவினர்கள் வீதியில் நின்று இலங்கை அரசிடம் பதில்களைக் கோரி 1280 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது…

  11. பொலிஸாருக்கு தகவல் வழங்கும் மக்களுக்கான சன்மானத் தொகை அதிகரிப்பு. சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் சந்தேகநபர்களை கைதுசெய்யும் பொலிஸாருக்கும் இவை குறித்து தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கும் வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “ரி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்படால் தகவலை வழங்கியவருக்கும் கைதுசெய்த பொலிஸாருக்கும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும். ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் தகவலை வழங்கியவருக்கு இரண்டு இலட்…

  12. கஜேந்திரன் எம்.பி. அம்பாறைக்கு களவிஜயம்; கல்முனையை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் BharatiSeptember 11, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இரண்டு ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில் தேசிய பட்டியல் மூலம் வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எம்.பியாக அவர் சார்ந்த கட்சியினால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அம்பாறை மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை ஆராயும் முகமாக வருகை தந்த அவர் கல்முனை உப பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச செயலகம் திருக்கோவ…

    • 10 replies
    • 1.1k views
  13. மருத்துவக்கழிவுகளை கிடங்கு வெட்டி புதைப்பதற்கு எதிராக, நல்லூர் பிரதேச சபை வழக்கு தொடர தீர்மானித்தால் சட்ட உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் என பதவி விலக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். செம்மணி- சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக வி.மணிவண்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த மயானத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த மயானத்தின் பாதுகாப்பு முழுவதும் நல்லூர் பிரதேச சபையினுடையதே அவ்வாறு இருக்க, இந…

  14. மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு Rajeevan ArasaratnamSeptember 11, 2020 மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கான முயற்சிகளுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்றுஉரையாற்றிய கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் இதனை தெரிவித்துள்ளார். மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானோ அல்லத வேறு எந்த அமைச்சரோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தனது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/67700

  15. ’மாடுகளை ஏற்றிக்கொண்டு அந்த வண்டியிலேயே நானும் வருகிறேன்’ -பா.நிரோஸ் கருத்தாழமிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு, மலையக மக்களுக்குப் பேரிழப்பு எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் தன்னுடன் பகிர்ந்து கொண்ட நகைச்சுவை சம்பவம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால் முன்வைக்கப்பட்டுள்ள அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்…

    • 3 replies
    • 645 views
  16. புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் பாராட்டு! கனடா தமிழ் முதலீட்டாளர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அலரி மாளிகைக்கு இன்று (11) அழைத்திருந்தார். வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர். பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத் திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த 2 முதலீட்டாளர்களும் வடக்கு - கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார். …

  17. தமிழரசு செயலாளர் பதவியைத் துறந்தார் துரைராஜசிங்கம்; சம்பந்தன், மாவைக்கு கடித மூலம் அறிவிப்பு BharatiSeptember 11, 2020 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார். …

  18. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினையும் அதன் தலைவரையும் விமர்சிப்பதற்கு செல்வம் அடைக்கலநாதனுக்கு எந்தவித அருகதையும் இல்லை – பூ.பிரசாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினையும் அதன் தலைவரையும் விமர்சிப்பதற்கு செல்வம் அடைக்கலநாதனுக்கு எந்தவித அருகதையும் இல்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஓருபோது தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து,மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை நடுத்தெருவில் விட்ட கட்சியல்ல.இன்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்புக்காக பாடுபட்டுவரும் கட்சியாகும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பற்ற விமர்சிப்பதற்கு துளியளவும் அருகதையில்லாத நிலை…

  19. மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை நாடாளுமன்றத்துக்கு அப்போதிருந்த சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ, தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பை மீறியுள்ளாரெனத் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றி அவர் கூறியதாவது, “டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், 1982ஆம் ஆண்டு நாடாளுமுன்றத்துக்குத் தெரிவ…

  20. இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள நிலங்கள், தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு திருப்பித் தரப்படாது. ஏனெனில் இது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர நேற்று (10) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். இராணுவ ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் 90 சதவீதம் ஏற்கனவே மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விக்னேஸ்வரன் போன்ற பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட மக்கள் இருக்கும் வரை தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மக்களுக்கு ஒருபோதும் திருப்பித் தரப்படாது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “விக்னேஸ்வரன் எம்.பி கூறுக…

  21. ரஸ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை பெறுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ள இலங்கை ரஸ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அதற்கான பட்டியலொன்றையும் சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை புதிய ஆயுத தளபாடங்களை விரைவில் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளது. நாங்கள் எங்களுக்கு தேவையான ஆயுத தளபாடங்கள் குறித்த பட்டியலொன்றை வைத்துள்ளோம். அவற்றை குறுகிய காலத்துக்குள் பெற விரும்புகின்றோம். முன்னைய உடன்படிக்கையொன்று தற்போதும் நடைமுறையில் உள்ளது. அது முடிவடைந்ததும் ரஸ்யாவு…

  22. கப்பலில் தீப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டார் உயிர் பிழைத்த மாலுமி கப்பலில் தீப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக MT New Diamond கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க பனாமாக்கப்பல் மாலுமியும் பிலிப்பைன்ஸ் பொறியியலாளருமான எல்மோர் பல விடயங்களை தெரிவித்துள்ளார். கடற்படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 மணி நேரம் நிபுணர் டொக்டர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் சத்திர சிகிச்சை, அளிக்கப்பட்டு பின்னர் அதிதீவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். …

  23. தமிழர்களின் பூர்வீக பிரதேசமான குருந்தூர்மலையில், காவலரண் ஒன்றினை அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி முல்லைத்தீவில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான குருந்தூர்மலையில், காவலரண் ஒன்றினை அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் குறித்த பிரதேசத்தில் இன முறுகலை ஏற்படுத்துகின்ற வகையில், மதங்களுடன் தொடர்புடைய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருந்தூர் மலைப் பகுதியில் கட்டுமான வேலை ஒன்றினை முன்னெடுப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். இதனடிப்படையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்ப…

  24. சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றில் இன்று ஆற்றிய உரை

    • 8 replies
    • 708 views
  25. பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்குரானை பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கிவந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நீர்வழங்கல் தொகுதியொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்குரானை பகுதியானது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதோடு பொது போக்குவரத்துகளை காணாத பகுதியாகவும் இருந்துவருகின்றது. இப்பகுதியில் வறட்சி காலங்களில் மக்களும் பாடசாலை மாணவர்களும் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.