ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி அரசாங்கம் பௌத்த மதத்தை புறக்கணித்தமை இன்றைய வீழ்ச்சிக்கான பிரதான காரணம். பௌத்த மக்களின் ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதை பொதுஜன பெரமுன நிரூபித்துள்ளது என்று முப்பீட ஐக்கிய பிக்குகள் முன்னணியின் அனுநாயக்க மதுரட தம்மாலங்கார தேரர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நிச்சயம் ஏற்பார். அதற்கான மார்க்கத்தை நன்கு அறிவோம் எனவும் மதுரட தம்மாலங்கார தேரர் தெரிவித்தார். கொழும்பு - லங்காராம விகாரையில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில், அரசியல் ரீதியில் பலம் வாய்ந்த ஐக்கிய தேசிய கட்சி பாரிய வீழ்ச்சி…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கைக்கு 92 பில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் நன்கொடையாக வழங்கிய இந்தியா இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 517 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஒட்டுமொத்த திட்டங்களில் 92 பில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த திட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிப்பதற்கான திட்ட வழிநடத்தல் குழுக் கூட்டடொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிப்பதற்கான திட்ட வழிநடத்தல் குழுவின் கூட்டம், பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் தலைமையில் கடந்த புதன்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. …
-
- 5 replies
- 526 views
-
-
மீனவச் சங்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு மட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் அமைந்திருக்கும் மீன் சந்தை தொகுதியிலுள்ள மீன் கடை நடத்துனர்களின் அமைப்பான அஸ்-ஸபா மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதேச சபை நிருவாகத்திற்குமான விசேட கலந்துரையாடல் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் இன்று (21) இடம்பெற்றது. இதில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அமீர், சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர், மற்றும் மீன் சந்தை தொகுதியில் உள்ள கடை நடத்துனர்களும் கலந்து கொண்டனர். மீன் சந்தை கடைகளுக்கான ஒப்பந்தக்காலம் 30.09.2020ம் திகதியுடன் முடிவடைவதனால், இவற்றுக்கான குத்தகை கேள்வி கோரப்பட்டுள்ளது. மீன் சந்தை கடைத் தொகுதி தொடர்பாக கடந்த 15.08.202…
-
- 0 replies
- 393 views
-
-
யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவன்-மனைவி மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் ஆகியோர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வயோதிபர்கள் வாழும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றன. குறிப்பாக சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள வயோதிபர்களின் வாழும் வீடுகளில் அண்மைய நாட்களாக உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இந்த சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படைய…
-
- 17 replies
- 2.2k views
-
-
கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்றுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை – சுமந்திரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்றுவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போதும் இதுகுறித்து பேசப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்க பணிகளில் …
-
- 3 replies
- 419 views
-
-
நாங்கள் திருடர்களைப் பிடிக்கத் தவறிவிட்டோம் – மங்கள சமரவீர கடந்த 2015ஆம் ஆண்டில் ஊழல்வாதிகளை தண்டிக்க மக்கள் ஒரு ஆணையை வழங்கினர். ஆனால் அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றாததால் மக்களினால் இந்த தேர்தலில் தண்டிக்கப்பட்டுள்ளோம் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தில் சாட்சியமொன்றை வழங்குவதற்காக அவர் முன்னிலையாகி இருந்தாரர் அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஊழல்வாதிகளைத் தண்டிக்க கடந்த 2015 ஆம் மக்கள் தங்களது ஆணையை எங்களுக்கு வழங்கி இருந்தனர். …
-
- 1 reply
- 339 views
-
-
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க முடியாதவர்கள் தற்பொழுது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர் – தினேஸ் குணவர்தன பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு உரிய வகையில் நியமனங்கள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பட்டதாரிகளின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத தரப்பினர் தற்பொழுது அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை விமர்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தெளிவில்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் …
-
- 0 replies
- 298 views
-
-
சிறிதரன் மற்றும் டக்ளஸ் பாராளுமன்றில் ஆற்றிய உரை! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற சபை அமர்வு இடம்பெற்றது. இன்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதங்களின் போது, ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்குமான நேர ஒதுக்கீடு தொடர்பில் எதிர்க்கட்சி இன்று சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்த நிலையில், எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல விவாதத்தின் போது, எதிர்க் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை 60 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் இதேவேளை, ஜனாதிபதி நேற்று ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து வௌியிடாமை கவலை அளிப்பதாக த…
-
- 0 replies
- 405 views
-
-
என் மீது கொண்ட நம்பிக்கையால் கிடைத்த மக்கள் ஆணையை வீணடிக்கேன் – கொள்கை விளக்கம் தந்த கோத்தாபய! “ஜனாதிபதித் தேர்தலில் சிறப்பான ஆணையை மக்கள் பெற்று கொடுக்க காரணம் என் மீதான நம்பிக்கையே ஆகும். அதனை ஒருபோதும் வீணடிக்க மாட்டேன்.” இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) கூடிய 9வது நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் தனது கொள்கை விளக்க உரையை ஆற்றிய போது தெரிவித்தார். மேலும் அவரது உரையின் சுருக்க முறையிலான சாராம்சம், “எமது ஆட்சி முறை தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி கொண்டிருப்பதையே எமது நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறிப்பிடுகின்றது. நாட்டின் ஒற்றையாட்சியை, புத்தசானத்தை பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதன்படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங…
-
- 10 replies
- 1.3k views
-
-
19ஐ நீக்குவதில் ஏன் இத்தனை அவசரம்? பா.நிரோஸ் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, ஜனாதிபதி கூறும் ஒரே சட்டம், ஒரே நாடு சாத்தியப்படாத ஒன்று என்றார். மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 2015இல் கையுயர்த்திய தற்போதைய ஆளுங்கட்சியினர், ஏன் இப்போது 19ஐ நீக்க அவசரப்படுகறார் எனவும் கேள்வி எழுப்பினார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான வ…
-
- 0 replies
- 238 views
-
-
பட மூலாதாரம், Getty Images தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன், நாடாளுமன்றத்தில் முதல் நாள் அமர்வில் வெளியிட்ட கருத்து இன்று மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சி.வி. விக்னேஷ்வரனின் கருத்து நேற்றைய தினம் (20) அமைந்திருந்தது. "இலங்கை நாடானது தமிழர் பூமி" எனவும், "இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள்" எனவும், "தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி" எனவும் விக்னேஷ்வரன் நேற்றைய தினம் உரை நிகழ்த்தியிருந்தார். இந்த கருத்து முற்றிலும் தவறானது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று (21) தெரிவி…
-
- 1 reply
- 281 views
-
-
யாழ்ப்பாணத்தில்.. இராணுவத்தினர், திடீர் சுற்றிவளைப்பு யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு, கோண்டாவில் மேற்கு பகுதியிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர். அதாவது, குறித்த பகுதியிலுள்ள அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு இருந்தனர். குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில், இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்ப்பாணத்தில்-இராணுவத/
-
- 4 replies
- 659 views
-
-
அரச ஊழியர்களின்.. ஆடை தொடர்பான, புதிய சட்டம் விரைவில்! அரச ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பத்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கிடைத்த அமைச்சு தொடர்பில் ஊடகவியலாளர்கள் நாடாளுமன்றத்தில் வைத்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பத்திக் கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பத்திக் ஆடை அணிந்தே நாடாளுமன்ற்திற்கு வருகைத்தந்திருந்தார். இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும…
-
- 2 replies
- 447 views
-
-
தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு சி.வி. வேண்டுகோள்! தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். மேலும் இதன்போது புதிதாக நியமிக்கப்பட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் வடக்கு – கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு செயலுக்கும் அதன் எதிர்வினை இருக்கும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். b…
-
- 2 replies
- 1k views
-
-
முன்னாள் போராளி பங்களாதேஷில் மரணம்; ஐரோப்பா செல்ல முயன்ற வேளையில் பரிதாபம் August 20, 2020 முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் பங்களாதேஷில் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் செல்வதற்காக இலங்கையிலிருந்து வெளியேறி பங்களாதேஷில் தங்கியிருந்த போதே அவர் மரணமானதாக அறிவிக்கப்படுகின்றது. கால் ஒன்றை இழந்த 44 வயதான குமரன், அல்லது சுடர் என்ற இவர் மாரடைப்பினால் மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://thinakkural.lk/article/63618
-
- 0 replies
- 350 views
-
-
தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி | எடுத்துரைப்பார்களா தமிழ் எம்பிக்கள்? 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வழங்கும் திட்டத்தில், தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. இதில் சுமார் 1500 தமிழ் பட்டதாரிகளின் விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கற்கை நெறியை இலங்கையில் பூர்த்தி செய்தமைகாக இவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப…
-
- 8 replies
- 1.3k views
-
-
எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கன்னி உரை
-
- 4 replies
- 564 views
-
-
சிறிசேனாக்கு பதவி கிடைக்குமா? – தயாசிறி பதில்! முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய எம்பியுமான மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் எவ்வாறான பதவி வழங்கப்படும் என்பது தொடர்பில் இந்நாட்களில் பலராலும் பேசப்படுகிறது. இதுவரை அமைச்சரவையில் எந்தவொரு பதவிகளும் கிடைக்கப்பெறாமல் சிறிசே தவித்து வருகின்றார். இந்நிலையில் இது குறித்து சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, “கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. சில காரணங்கள் உள்ளமையால் தௌிவாகக் கூற முடியாது. அதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார். https://newuthayan.com/சிறிசேனாக்கு-பதவி-கிடைக்/
-
- 1 reply
- 394 views
-
-
-
- 0 replies
- 438 views
-
-
ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்தது. எனினும் தற்போது வடக்கு, கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு வழங்குவதனை இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு நேற்று மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம்…
-
- 5 replies
- 847 views
-
-
நான் ஜனநாயகத்தை தழுவியுள்ளேன்- நாடாளுமன்றத்தில் பிள்ளையான் August 20, 2020 நான் ஜனநாயகத்தை தழுவியுள்ளேன் என நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்ற போதிலும் தான் ஜனநாயகத்தை தழுவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதின்மவயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ள அவர் பின்னர் ஜனநாயகத்தை தழுவியதாக தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பிரதமரின் முயற்சிகளுக்கும முழுமையான ஆதரவை வழங்கப்போவதாக பிள்ளையான் தெ…
-
- 5 replies
- 728 views
-
-
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் 9 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/எதரககடசத-தலவரக-சஜத/175-254539
-
- 15 replies
- 1.9k views
-
-
அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தில் பெயர் பலகை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அதில் “இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம்” என்று எழுதப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி செல்வராணி தெரிவிக்கையில், “தம்பிலுவில் மத்திய சந்தை கட்டடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தின் பெயர் பதாதையை, இனந்தெரியாத நபர்கள், நேற்று இரவு அடித்து உடைத்துள்ளதுடன், அதில் ஒரு துண்டுபிரசுரத்தை ஒட்டிவைத்துவிட்டு சென்றுள்ளனர் இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம் என அத்துண்டு பிரசுரத்தில் எழுதப்பட்டு உள்ளது. …
-
- 3 replies
- 494 views
-
-
இலங்கை | மின்சாரம் தடைப்பட்டமைக்கு நாச வேலை காரணம்? ஆகஸ்ட் 20, 2020: ஆகஸ்ட் 17 அன்று இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டமைக்கு நாச வேலை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது நுரைச்சோலை மின்சார நிலையத்தில் நடைபெற்றிருக்கலாம் எனவும், இச் சம்பவத்தின் பின்னணியில் ‘டீசல் மாஃபியா’ எனப்படும் டீசல் மூலம் மின்னுற்பத்தி செய்யும் நிறுவனங்கள் காரணமாகவிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மின்னுற்பத்தி செய்யும் நிலையங்களில் இருந்து வழங்கல் கோபுரங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்போது அதன் பரிமாணங்கள் இரண்டு வகைகளில் கொடுக்…
-
- 0 replies
- 332 views
-
-
யாழ். கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தயசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தது. முன் பகையைத் தீர்க்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.https://www.virakesari.lk/article/88435
-
- 2 replies
- 626 views
-