Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (24.08.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்புாது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்க பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சி இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், இந்த அரசின் காலத்தில் மீண்டும் இவ்வாறான பிரச்சினை எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சினைக்கு துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தீர்வை பெற்றுக்கொடுப்பீர்களா என அவரிடம் ஊடகவியாளல் வினவினார். குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எனக்க யாரும் தெரிவிக்கவில்லை. இவ்விடயம் தொ…

  2. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட கோட்டைகட்டியகுளம் ஐயன்கன்குளம் தென்னியன்குளம் பகுதிகளில் நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த காட்டுமரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவம் பின்தங்கிய பிரதேசங்களாக காணப்படுகின்ற கோட்டைகட்டியகுளம் ஐயன்கன்குளம் தென்னியன்குளம் போன்ற பகுதிகளில் காணப்படும் பெருமளவான இயற்கை வளங்கள் நாளாந்தம் அழிக்கப்பட்டு வருகின்றன என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதாவது இப்பகுதிகளில் உள்ள நூற்றாண்டு காலபழமை வாய்ந்த பெருமளவான காட்டுமரங்கள் கனரக இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்டு அவை சட்டவிரோதமானமுறையில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றித்தெரியாது என்றும் பிர…

  3. (எம்.மனோசித்ரா) சோமாலியாவைப் போன்று மாறவிருந்த இலங்கையை முறையான வேலைத்திட்டங்கள் மூலம் பாதுகாத்துள்ளோம். அரச புலனாய்வுப் பிரிவு , இராணுவ, பொலிஸ் புலனாய்வுப்பிரிவு , விஷேட அதிரடிப்படை என்பவற்றுடன் சிறைச்சாலையையும் ஒன்றிணைத்து நுட்பமாக செயற்பட்டமையால் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுத்திருக்கின்றோம் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறிய அவர் , நாட்டில் பெரிய சிறைச்சாலையாகக் கருதப்படும் வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலை , ரிமான்ட் சிறைச்சாலை உள்ளிட்டவற்றில் தினமும் கைதொலைபேசிகளும் போதைப் பொருள் பொட்டலங்களும் சிம் அட்டைகளும் கைப்பற்றப்படுகின்றன…

  4. (நா.தனுஜா) மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஏதுவான வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு ஆதரவளித்து மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்குத் தடையேற்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், உண்மையில் தேர்தலை நடத்தவேண்டுமெனின், அதுகுறித்து பெரும்பான்மையான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அல்லவா கேட்கவேண்டும்? என்றும் கேள்வியெழுப்பினார். கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீல…

  5. (நா.தனுஜா) மத்திய வங்கி அரசியல் மயமாவதைத் தடுக்கும் நோக்கில் நாணயச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மசோதா தற்போது முழுமையாகக் கைவிடப்பட்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் 'பின்நோக்கிய பெரும் பாய்ச்சலின்' ஊடாகப் புறந்தள்ளப்பட்ட மிகமுக்கியமான சீர்திருத்தம் இதுவென்றும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார். நாணச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கடந்த ஆட்சியில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா கைவிடப்பட்டிருப்பது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறார்: இலங்கை மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், 70 வருடகால…

  6. படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு கொம்மாதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாணவனின் இறுதி ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்…

    • 0 replies
    • 385 views
  7. சுற்றாடல் ஆர்வலரிடம் 500 மி.ரூபாய் நட்டஈடு கோரியுள்ள யோஷித உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலரான, சஜீவ சாம்கரவிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, கட்டளை ஆணை அனுப்பியுள்ளதாக, யோஷித ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். சஜீவ சாம்கர வெளியிட்டுள்ள இந்த போலி கருத்து தொடர்பில், தனது தரப்புவாதியான யோஷித ராஜபக்‌ஷவிடம், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பை கோர வேண்டும் என்றும் குறித்த செய்தியை வெளியிட்டுள்ள ஊடக நிறுவனங்களும் இதனை அகற்ற வேண்டும் என, யோஷித சார்பில், சட்டத்தரணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு நட்டஈடு வழங்காவிடின் 7 நாள்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணிகள் நிறுவன…

    • 0 replies
    • 330 views
  8. -க. அகரன் வவுனியா மாவட்டச் செயலகத்துடன் இணைந்தப் பகுதியில், 1981ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலைக்கு அருகாமையில் படி அமைக்கப்பட்டமைக்கு, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தேசிய வீரனான பண்டாரவன்னியனுக்கு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிவசிதம்பரத்துடன், இணைந்து ஊர் பிரமுகர்கள் மாவட்ட சபை தலைவரும் தற்போதைய ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிரேஸ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் ஆகியோர் சிலை அமைத்திருந்தனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்தக் காலப்பகுதியில் மாவட்டச் செயலக வளாகத்தில் குறித்த சிலை நிறுவப்பட்டு, பண்டாரவன்னியன் நினைவுதினமும் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் தற்போது வவுனியா நகரசபை, குறித்த சிலையை பராமர…

  9. யாழில் இவ்வருடம் "பியர் "பாவனையில் குறைவு யாழ்ப்பாண மதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் கடந்த 6 மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர் நுகர்வு 27% ஆல் குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு 21 இலட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றதாகவும் எனினும் இவ்வருடம் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின்படி 7 இலட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும…

    • 18 replies
    • 2.2k views
  10. இனங்களுக்கு இடையே புரிந்துணர்வை உருவாக்கக் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும் 9 வது பாராளுமன்றத்தில் சபாநாயகரை வாழ்த்திப் பேசுகையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு, பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் முதன் முதலாக ஆற்றிய கன்னி உரை பாராளுமன்றத்திலும் தென் பகுதியிலும் பலத்த சலசலப்…

  11. 20 ஆவது திருத்தச்சட்டம்: உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு அதிக நீதியரசர்கள் அரசியலமைப்பு திருத்தத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிக நீதியரசர்களை நியமிப்பதற்கான திட்டங்களும் இருக்கும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஹலி-எல பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நடவடிக்கையின் நோக்கம் தாமதப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சரவை உபகுழு,19 ஆவது திருத்தம் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் அமைச்சரவைக்கு அறிக்கை அளிக்கும், எந்த பிரிவுகளை வைத்துக் கொள்ள வேண்ட…

  12. 1.7 டிரில்லியன் ரூபாய்க்கான இடைக்கால கணக்கறிக்கை – பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1.7 டிரில்லியன் ரூபாய்க்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையில் 200 பில்லியன் ரூபாய் மேற்குறிப்பிட்ட அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொதுத் துறை செலவினங்களுக்காக 180 பில்லியனும் ஓய்வூதியத் துறைக்கு 83 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக்கால கணக்கறிக்கையில் இரண்டாவது அதிகபட்ச ஒதுக்கீடு பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறி…

    • 0 replies
    • 289 views
  13. சம்பந்தன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் – விமல் வீரவன்ஸ திருமண வீடொன்றுக்கு ஒருவர் குடித்து விட்டு வந்து சர்ச்சைகளில் ஈடுபட்டால், ஏனையவர்கள் அச்சப்படமாட்டார்கள். அதுபோன்றுதான், சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.அவருக்கு, சம்பந்தனைவிட பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழர்களுக்கு யார் தலைவர் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவிவருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ஸ, அனைத்து இனங்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார…

    • 4 replies
    • 707 views
  14. பிரபாகரனுக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை – தேரர் வெளியிட்ட தகவல்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்காமையினாலேயே துன்பத்தை அனுபவிக்கின்றனர் என சஹ்ரான் கூறியதாக கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னிலையாகியபோதே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் 2017ஆம் ஆண்டு நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலை…

  15. மஹிந்த உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற நடவடிக்கை குறித்த பயிற்சி! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த பயிற்சிநெறி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுதினம் நாடளுமன்றத்தின் முதலாவது குழு அறையில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்துள்ளார். இந்த பயிற்சி நெறியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். நா…

  16. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் ராமநாதன் கலந்துகொண்ட அதிகாரம்

    • 0 replies
    • 410 views
  17. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்! ஆகஸ்ட் 30ம் திகதியன்று, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கில் கவனயீர்ப்பு முன்னெடுக்கவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சண்முகம் சரோஜினி தெரிவித்தார். வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “வடக்கில், யாழ். பஸ் நிலையத்தில் ஆரம்பமாகும் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு எ ஐ.நாவுக்குக் கையளிப்பதற்கான மகஜரை வழங்கவுள்ளோம். அதேபோன்று கிழக்கில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை சென்று அங்கும் மகஜரொன்று கையள…

  18. வீதியால் சென்ற பெண்ணை அழைத்து தவறாக நடந்துகொண்ட இராணுவச் சிப்பாய்- முல்லைத்தீவில் பதற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த குறித்த இராணுவ சிப்பாய் ஒருவர் மர்ம உறுப்பை காட்டி தவறாக நடந்துகொண்டதாக குறித்த பெண் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு மா…

  19. தேசியப் பட்டியல் தெரிவு குறித்து தயாசிறி ஜெயசேகரவின் விசனம் தேவையற்றது- சுரேன் ராகவன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் தான் நியமிக்கப்பட்டமை குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர விசனமடைவது தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய்பபட்டியலில் தெரிவுசெய்யுமாறு தான் யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே தன்னை தேசியக் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் பரிந்துரையில் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரைப் புறக்கணித்து சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டமை கட்சிக்குள் நெருக்கடி…

    • 3 replies
    • 660 views
  20. காணாமல்போன புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு இழப்பீடே தீர்வு .. அதுவும் கட்டாயமில்லை.! காணாமல்போன புலி உறுப்பினர்களை தேடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் வேண்டுமென்றால் இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். "இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது செல்லுபடியான விடயம். தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் காணாமல்போயிருந்தால் அவை செல்லுபடியற்றதாகும். அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஆனால், மனிதாபிமான ரீதியில் காணாமல்போன புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம். ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது." - இவ்வாறு ஊடகத்…

  21. மாகாண சபைத் தேர்தலில் வடக்கு - கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி.! "எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தென்னிலங்கைக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுமாறு பல அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. அந்த அழைப்புக்களைப் பரிசீலனை செய்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய நேசக் கட் சிகள…

  22. செப்டெம்பர் இறுதிக்குள் பண்டாரநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை Published by J Anojan on 2020-08-23 செப்டெம்பர் இறுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே இந்த முடிவு செயல்படுத்தப்படும். குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வருகை தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக 2020 மார்ச் முதல் மூடப்பட்டன. இதன் விளைவாக இலங்கையில் சிக்கித் தவித்த அனைத்த…

  23. விக்னேஸ்வரன் , கஜேந்திரகுமாருக்கு பாராளுமன்றத்தில் இனவாதம் பேச இடமளியோம் : என்கிறார் சரத் வீரசேகர விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோருக்கு பாராளுமன்றத்திற்குள் இனவாதம் பேசுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரியல் அத்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனும் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமானம் செய்ய முன்னர் முள்ளிவாய்க்காலிலேயே உத்தியோகபூர்வமற்ற சத்தியப்பிரமாணத்தை செய்தனர். பயங்கரவாதிகள் இறுதியாக அழிக்கப்பட்ட இடமே அது, பயங்கரவாதிகள் நாட்டை ப…

    • 1 reply
    • 659 views
  24. எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம்- அங்கஜன் பிரதேச செயலாளருக்கு கடிதம்- சண்டே டைம்ஸ் Post Views: 77 August 23, 2020 எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம் என யாழ்மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன் பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. அங்கஜன் இராமநாதன் செவ்வாய்கிழமை இதனை எழுதியுள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கடிதத்தை பார்த்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்திதிட்டங்கள் குறித்த விபரங்களை தருமாறு அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்விடுத்துள்…

    • 4 replies
    • 639 views
  25. மட்டக்களப்பு வாள்வெட்டுச் சம்பவத்தில் சிறுவன் உயிரிழப்பு மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம் குழு மோதலாக மாறி பின்னர் பழிதீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்த…

    • 4 replies
    • 688 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.