ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
வீட்டுத்திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டு பொய்! - இந்திய அரசு அறிவிப்பு [Friday 2015-12-04 09:00] இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் போது வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் பெண்களிடம் பாலியல் ரீதியான விருப்பங்களை எதிர்ப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் ராஜசபாவில் இந்த விடயம் நேற்று வெளியிடப்பட்டது. இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் போது வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் பெண்களிடம் பாலியல் ரீதியான விருப்பங்களை எதிர்ப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டு ப…
-
- 1 reply
- 994 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் முதியவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 858 views
-
-
வவுனியா உக்கிளாம் குளம் பகுதியில் அரசசார்பற்ற நிறுவன அதிகாரியொருவரின் ஜீப் வாகனம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் எவ்.எஸ்.டி. எனும் அரசசார்பற்ற நிறுவனத்தின் அதிகாரியான பி.ரொஷான் கிருஷ்டி என்பவரின் வாகனமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வெளியில் வருமாறு கூறியதாகவும் தான் வீட்டிலிருந்து வெளியே செல்லாத நிலையில், ஜீப் வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தீக்கிரையாக்கியதாகவும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://thaaitamil.com/?p=16645
-
- 0 replies
- 810 views
-
-
(ஆர்.யசி) ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசிய கட்சி ஒளிவு மறைவில்லாது நாட்டு மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும் என பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை பொறுத்தே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுப்போம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும் தமிழ…
-
- 1 reply
- 424 views
-
-
மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் - இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி Published By: Vishnu 16 Dec, 2024 | 02:25 AM மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணம் துணைத்தூதுவர் சாய் முரளி இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (14.12.2024 முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெர…
-
-
- 3 replies
- 273 views
-
-
ஈகச்சுடர் அன்னை பூபதியின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 758 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு செயற்படவேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் குழு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய பல சந்திப்புகளை நடத்தவுள்ளது என்றும் இலங்கையின் அரசியல் க…
-
- 1 reply
- 613 views
-
-
சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என தடுத்த யாழ். மாநகர உறுப்பினருக்கு மிரட்டல் – நள்ளிரவில் சம்பவம் தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் ஆதரவாளர்களே இவ்வாறு மிரட்டி நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றுள்ளதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவின் ஆதரவாளர்களே இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் வெள்ளை நிற ஹயஸ் ரக வாகனத்தில் வந்தே சுவரொட்டிகளை ஒட்டி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் …
-
- 0 replies
- 652 views
-
-
முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்! திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (23) காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள் மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் கேப்பாப்பிலவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன்…
-
-
- 2 replies
- 468 views
-
-
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி : தமிழக பா.ஜ.க. கடும் கண்டனம் சென்னை: இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகள் வழங்குவது, அந்நாட்டு தமிழர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கச்சத்தீவு தொடர்பாக 1974ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தை, இலங்கை அரசு கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாகவும், அங்குள்ள கடலில் கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். தமிழக மீனவர்களின் உரிமை கச்சத்தீவு பகுதியில் மறுக்கப்பட்டு வருவதாகவும், எனவே, கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்றும் இல.கணேசன் வலியுறுத்தினார். இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகவும், அந்…
-
- 0 replies
- 787 views
-
-
சிறிலங்காவின் தேசியக் கொடியான வாளுடன் காணப்படும் சிங்கம் சிங்கள பேரினவாதத்தின் அடையாள சின்னமாகும். தமிழ் மக்களை அடக்கி ஆள நினைக்கும் சிங்கள பேரினவாத அடையாள சின்னமான சிங்க கொடியை எரித்ததற்காக எத்தனை இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.எத்தனை இளைஞர்கள் சிறை சென்றனர். முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை கொன்றொழித்த சிங்கள இராணுவம் எந்த சிங்க கொடியை வெற்றிக்கழிப்போடு ஏற்றி வைத்ததோ அதே சிங்கள பேரினவாத சிங்க கொடியை இன்று ரணில் விக்கிரசிங்காவுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உயர்த்தி பிடித்திருப்பது கண்டு சிறிலங்காவில் அடக்குமுறைகளுக்குள் வாழும் தமிழ் மக்களும், கல்லறைகளில் வாழும் மாவீரர்களும் கண்ணீர் வடித்திருப்பா…
-
- 47 replies
- 5.6k views
-
-
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி! இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அது மாத்திரமின்றி புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1414791
-
-
- 12 replies
- 837 views
- 2 followers
-
-
ராமேஸ்வரம் மீனவர்களைப் பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை அடித்தும், நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியும் சித்திரவதை செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் விசைப் படகு என்ஜினை துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தி விட்டுச் சென்ற சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை கச்சத்தீவு அருகே 400க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப் படகுகளில் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 ரோந்துப் படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களின் சில படகுகளை மட்டும் பிடித்துக் கொண்டனர். மற்றவர்கள விரட்டி விட்டனர். பின்னர் பிடிபட்ட படகுகளில் இருந்த மீனவர்களை அடித்த.......................................... தொடர்ந்து வாசி…
-
- 1 reply
- 1.6k views
-
-
பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு பிரதி இணைத் தலைவர்கள் நால்வர். பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உ…
-
-
- 4 replies
- 309 views
-
-
இவர்களில் பலர் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்காகவும் பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு IPS செய்தி நிறுவனத்திற்காக Feizal Samath எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் இறுதியில் காணாமற் போன மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த தமது கணவன்மார்களின் நலம் வேண்டி மே 18 அன்று சிறிலங்காவின் வடக்கில் வாழும் 800 பெண்கள் வரை இந்து மத வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர். "இறுதி யுத்தத்தின் போது காணாமற் போன மற்றும் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்…
-
- 0 replies
- 690 views
-
-
சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை October 26, 2019 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்த மனித எச்சங்கள் முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் முன்னிலையில் மீட்கும் நடவடிக்கைகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 20ம் திகதி சுதந்திரபுரம் கிராம பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதி மண்ணை எடுத்து மறுபகுதியில் கொட்டியபோது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டதனையடுத்து அப்பகுதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்றையதினம் மனித எச்சங்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்கும…
-
- 1 reply
- 360 views
-
-
20 Jan, 2025 | 07:04 PM (எம்.மனோசித்ரா) இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல. அவை உரிமைகளாகும். எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந…
-
- 3 replies
- 345 views
-
-
பதவி விலகுவதாக சிவாஜிலிங்கம் அதிரடி அறிவிப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிகாந்தாவிடம் நேரடியாக கையளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ அமைப்பின் தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் ஐனாதிபதி தேர்தலில் சுயேட்சயாக போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தார். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட கட்சி நிர்வாகம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று ந…
-
- 2 replies
- 339 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். . "விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம்" என்று எம்.பி. ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். Tamilmirror Online || ”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்”
-
-
- 10 replies
- 918 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்காலில் கடற்படை காணி அபகரிப்பு: விக்னேஸ்வரன் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 04:51.39 AM GMT ] முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் கடும் எதிர்ப்புக்களையும் மீறி பொதுமக்களுக்குச் சொந்தமான 626 ஏக்கர் நிலத்தை அபகரிக்க கடற்படை முயற்சிக்கின்றது. இதனைத் தடுத்து நிறுத்த மாகாண காணி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர் அந்த நிலங்களுக்குச் சொந்தமான மக்கள். முள்ளிவாய்க்கால் கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான 626 ஏக்கர் நிலத்தை போருக்குப் பின்னர் ஆக்கிரமித்த கடற்படையினர், அதில் பாரிய முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். எங்கள் நிலத்தை …
-
- 0 replies
- 404 views
-
-
பொதுஜன பெரமுனவிற்கு எதிராக அதிகளவு தேர்தல் முறைப்பாடுகள்…. November 16, 2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுஜனபெரமுனவிற்கு எதிராக தேர்தல் வன்முறைகள் சட்டமீறல்கள் குறித்த அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு எதிராக 130 முறைப்பாடுகளும், புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 45 முறைப்பாடுகளும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராகமூன்று முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று சட்டவிரோத பிரச்சாரமே அதிகளவில் இடம்பெற்றது இது தொடர்பில் 67 முறைப்பாடுகள் கிடைத்துள்…
-
- 0 replies
- 548 views
-
-
25.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக நேரடி முகவரி http://www.yarl.net/video/video_003.html
-
- 0 replies
- 1.7k views
-
-
வலி- வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் வலியுறுத்து! யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிருப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழுகூட்டம் நேற்று நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்; யாழ் - வலி. வடக்கில் 2009ஆண்டு பொலிஸார் மற்றும் முப்படையினர் வசம் 23ஆயிரம் ஏக்கர் காணி …
-
- 2 replies
- 268 views
-
-
அஞ்சலோ மெத்தியூஸ் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலை [ Tuesday,19 January 2016, 06:23:53 ] ஸ்ரீலங்கா அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் சற்று முன்னர் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளை, தம்மை பணத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா அணியின் வீரர்களான குஷல் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் முறைப்பாடு செய்திருந்தனர். இந்த விடயம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே அவர் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியு…
-
- 1 reply
- 331 views
-
-
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவீரர் வாரத்தின் இறுதிநாளான 27ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட …
-
- 5 replies
- 907 views
-