ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
அகில கால மீளாய்வு அமர்வுகளில் 99 நாடுகள் இலங்கை குறித்து பேசவுள்ளன 28 அக்டோபர் 2012 அகில கால மீளாய்வு அமர்வுகளில் சுமார் 99 நாடுகள் இலங்கை தொடர்பில் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகள் முன்கூட்டியே இலங்கை தொடர்பான கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. மனித உரிமை மீறல்கள், வட மாகாணசபைத் தேர்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் அமுலாக்கம் போன்ற விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, செக்குடியரசு, கனடா, ஸ்பெய்ன், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. இலங்கை விவகாரம் குறித்த விவாதத்தின் போது ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஒதுக…
-
- 0 replies
- 391 views
-
-
குமார் குணரட்னத்தை விடுவிக்கக்கோரி மட்டுவில் கையெழுத்து வேட்டை (சசி) முன்னிலை சோசலிஷக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஆரயம்பதி சந்தைக்கு அருகாமையில் முன்னிலை சோசலிஷக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று பொதுமக்களினடம் இந்த கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும், அவருக்கு குடியுரிமையை வழங்குமாறும் மற்றும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கை…
-
- 0 replies
- 294 views
-
-
கொரோனா தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்கு உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். தற்பொழுது மிகவும் ஆபத்தாக கொரோனா தொற்று பரவிவருவதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உணவு கையாளும் ஒழுங்கு விதிகளை முற்றாக அமுல்படுத்துவதுடன் மேலதிகமாக கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக கீழ் குறிப்பிடப்ப ட்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். 1 உணவு கையாளும் நிலையத்தில் பின்பற்றவேண்டிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும். 2 இயலுமானவரை உணவு வகைகளை வாங்கிச் சென்று உண்பதை ஊக்குவியுங்கள். 3 உணவு கைய…
-
- 2 replies
- 321 views
-
-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது. இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு! | Virakesari.lk
-
- 0 replies
- 96 views
-
-
விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக நடத்தப்படும் போர் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதி கள் அல்லர் என்ற சரியான கண்ணோட்டத்தில் அதனைப் பார்க்க வேண்டும். இலங்கை மீதும், இங்கு வாழும் தமிழ் மக்கள் மீதும் "கரிசனையுள்ள' சகலரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, இந்தியாவின் கவலை தெரிவிப்புக்கு நேற்றுப் பதிலடி கொடுத்தார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று முன்தினம் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பாலிதகனேகொடவை அழைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். எனவே, இவ்விடயம் குறித்து நேற்று நா…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் (01-11-2012) வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்றேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும், ஜெனீவாவில் முகாமிட்டிருந்து தமிழர்களின் ந…
-
- 10 replies
- 1.5k views
-
-
பசில் ராஜபக்ஸ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த கடந்த கால ஆட்சியின் போது, அவரது விலை மதிப்பான நாய்கள் இரண்டை பராமரிக்கும் பொறுப்பானது 6 இராணுவ சிப்பாய்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய்கள் பசிலின் நாய்களை பராமரித்தல், உணவுகளை வழங்குதல், மருந்து கொடுத்தல் சொல்லும் கட்டளைகளுக்கு கீழ் பணிய வைத்தல் போன்ற பயிற்சிகளை வழங்கி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய்கள் 'நாய் அணி' என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பசில் ராஜபக்ஸ கோல்டன் ரிட்ரிவர் எனும் இனத்திலான நாயை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் இதன் பெறுமதி 7 இலட்சம் ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை Dec 7, 2025 - 07:23 PM 'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தீர்மானித்துள்ளது. இந்த அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழான உதவிகள், இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் வழங்கப்படும் கடன் வசதிக்கு மேலதிகமாக வழங்கப்படும் நிதியிடல் வசதியாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் நாட்டிற்கு கிடைக்கவுள்ள ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தை ஒட்டி கொழும்பு, புதுடில்லி ஆட்சித் தலைமைகள் இடையே எழுந்துள்ள இராஜதந்திர முறுகல் வலுவடைந்;திருப்பாதாக விடயமறிந்த வட்டாரங்களில்; இருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன. இவ்விவிகாரத்தை ஒட்டி மஹிந்த சீற்றத்தோடு வெளியிட்ட சில கருத்துக்கள் புதுடில்லித் தலைமையை அதிருப்திக்குள் அழ்த்தியிருக்கின்றன எனவும் தெரியவருகிறது. ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சி அலை தமிழகத்தில் புதுப் பிரவாகம் எடுக்கத் தொடங்கியுள்ளதன் பின்னணியில் இவ்விடயத்தில் அதிக சிரத்தையும், கரிசனையும் கொண்;டு செயற்பட வேண்டிய அரசில் கட்டாயம் புதுடில்லியில் மத்தி அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் கூட்டியுள்ள சர்வகட்சி மாநாடு இன்று சென்ன…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இணைவதில் மற்றும் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தேசிய தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஜனாதிபதிக்கு ஒரு தார்மீக கடமையிருக்கின்றது. நாங்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து, மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கின்றோம். பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்றவகையில், தொண்டமான் மட்டுமே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போத…
-
- 0 replies
- 179 views
-
-
தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை, புத்தசாசன அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/தேசிய-வெசாக்-வாரம்-அறிவிப்பு/175-249559 வெசாக் பண்டிகையின் போது இவ்வாறு செயற்படவும் வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி விகாரைகளுக்கு சென்று வழிபடும்போது தனிமனித இடைவெளிகளை கடைப்பிடிப்பது கடினம் என்பதால் வீடுகளிலேயே வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,…
-
- 10 replies
- 904 views
-
-
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் Dec 18, 2025 - 04:48 PM 119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். '119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உண்மையான…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
"போரில் எந்தவொரு பிரதேசத்தையும் கைப்பற்றுவதை விட அதைப் பாதுகாப்பதே முக்கியமானது. ஏனென்றால் அந்தப் போரின் வெற்றியை தக்க வைப்பதில் தான் தங்கியிருக் கிறது' என்று போரியல் வல்லுனர்களால் கூறப் படுவதுண்டு. இப்போது வன்னியல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் படைத்தரப்பு பெரும் பிரதேசத்தை கைப்பற்றியிருக்கின்ற போதும் அதைத் தக்கவைப்பதில் வெற்றி பெறுமாஎன்பது முக்கிய கேள்வியாக உள்ளது. காரணம், தக்கவைப்பதென்பது சுலபமான தல்ல. அதற்கென தனியான படைப்பிரிவுகள் தேவை. பாதுகாப்புக் கொள்கைகள் தேவை. தக்கவைத்ததை உறுதிப்படுத்துவதற்கு எதிர்த் தரப்பின் ஊடுருவல்களை முற்றாகக் கட்டுப் படுத்த வேண்டியது அவசியம். இந்தவிடயத்தில் அரசபடைகள் திணறுவதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வன்ன…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]கொழும்பு நகரின் மத்தியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் மற்றொரு மனித இனப்படுகொலை நடைபெற்றிருக்கின்றது. வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரங்களில் 27 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், கொல்லப்பட்டவர்களின் தொகை இதனைவிட அதிகமானது. [/size] [size=4]இதனைவிட விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 100 பேர் வரையில் காயமடைந்திருக்கின்றார்கள். [/size] [size=4]சிறையில் வெடித்த கலவரம் சுமார் 10 மணித்தியாலத்தின் பின்னரே இராணுவக் கொமாண்டோக்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகூடிய பாதுகாப்பான சிறைச்சாலையிலேயே கைதிகளுக்குப் பாதுகாப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டுமென அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். அவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்த…
-
- 0 replies
- 149 views
-
-
குற்றப்பிரேரணையை மறுபரிசீலனை செய்யவும்: ஐ.நா பிரதிநிதி கேப்ரியல் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் தனித்துவத்துக்கான ஐ.நா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியல் க்னவுல் கோரியுள்ளார். அப்படி இல்லாத நிலையில் ஷிரானி பண்டாரநாயக்க மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது தொடர்பான இலங்கை அரசியல் சட்டத்தின் 107ஆவது பிரிவின் மூலம் இலங்கை நாடாளுமன்றம், இலங்கையின் நீதித்துறையின் மீது கணி…
-
- 0 replies
- 368 views
-
-
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு! மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். தீபம் ஊடக நிறுவனத்தில் பணியாற்றிவரும் திருகோணமலை காபர் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த, ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்…
-
- 0 replies
- 468 views
-
-
இலங்கை இனப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே 'அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' ஆரம்பித்துள்ளது. இலங்கை வானொலி நிலையத்துக்கென தனி வரலாறு உண்டு. 1925-ல் 'கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்தநிலையத்துக்கு உலகின் இரண்டாவது வானொலி நிலையம் (முதலாவது - 'பிபிசி' - 1922) என்ற பெருமையும் ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையும் உண்டு. காலப்போக்கில் எத்தனையோ மாற்றங்களைக் கண்ட இந்நிலையம், 1972-ம் ஆண்டிலிருந்து 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில் ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டுவருகிறது. இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலைவரிசையில் ஒலிப்பரப்பாகிவந்த 'கொழு…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது! கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துவடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்து வந்த நபரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 16 ஆம் திகதி இரவு ஜிந்துப்பிட்டி 125தோட்ட பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் புர்கா அணிந்திருந்தமை சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தது இந்தத் துப்பாக்கிச் பிரயோகத்தில் படுகாயமடைந்த கொழும்பு 13 பிரதேசத்த…
-
- 1 reply
- 168 views
-
-
வன்னி மக்களுக்கான தமிழக உதவிகளை சுருட்ட பசில் ராஜபக்ஸவுடன் சதி செய்யும் ஒட்டுக்கும்பல் ஆயுததாரி டக்லஸ் கடந்த சில நாட்களாக தமிழக தலைவர் கலைஞர் மு.க.கருணாநிதியின் முயற்சியினால் திரட்டப்படும் நிதியின் மூலம் சிங்களத்தின் கொலை வெறிக்கரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்காக, தமிழக உறவுகளால் அனுப்பி வைக்கப்பட இருக்கும் உணவு, மருத்துவ அத்தியாவசிய பொருட்டகளை தடுத்து, சுருட்டுவதற்கு, சிங்களவர்களினாலும் 10% கொமிஷன் அமைச்சர் என அழைக்கப்படும் பசில் ராஜபக்ஸவுடன் இணைந்து சதி செய்வதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=2][size=4](அழகன் கனகராஜ்)[/size][/size] பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளினால் கடந்த ஒன்பது மாதங்களில் 9414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4414 பேர் சிறுவர்களாவர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். [size=2][size=4]எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பெண்கள்,சிறுவர்களின் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தி மதிப்பிடப்படுகின்றது. பல நாடுகளில் வறுமை 0.1 வீதமே இருக்…
-
- 0 replies
- 673 views
-
-
ஈழத்தில் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும், தமிழ்ப் பெண்களின் மரணத்திற்கும் மன்மோகன் சிங் அரசும், தமிழக அரசும் தான் முழுப் பொறுப்பு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம் என்று பேசிய வைகோவும், தனி ஈழம் போல தனித் தமிழ்நாடும் விரைவில் உருவாகும் என்று பேசிய கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு காவல் நீடிப்பு தேவையில்லை, விசாரணை முடிந்துவிட்டது என தமிழக அரசு கூறிவிட்டதையடுத்து நீதிமன்றம் நேற்று இவர்களை விடுவித்தது. நீதிமன்ற வாசலில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில், நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. ஈழத் தமிழர்களை பாது…
-
- 0 replies
- 793 views
-
-
போதைவஸ்து கடத்தல் குற்றம் புரிவோருக்கு அதிகூடிய தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். 39 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த எச்சரிக்கையை நீதிபதி இளஞ்செழியன் விடுத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- மிகவும் சொற்ப அளவு என்று கருதப்படுகின்ற 2 கிராம் ஹெரோயின், மோபின், கொக்கெயின் போன்ற போதைப் பொருளை ஒருவர் தனது உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயள் தண்டனை விதிக்க…
-
- 0 replies
- 399 views
-
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு Feb 10, 2026 - 06:33 AM பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அந்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு திசை நோக்கிச் சென்றுள்ளது. அந்த நேரத்தில் மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்க…
-
-
- 80 replies
- 3.6k views
- 2 followers
-