ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை அச்சிடும் நிதி அமைச்சு அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நிதி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய பணத்தை அச்சிடுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல தெரிவித்துள்ளார். அதிகப்படியான பணம் அச்சிடுவதன் விளைவாக எதிர்காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏதேனும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என்ற கூற்றினை நிராகரித்த அவர் இது இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட பிற நாடுகளிலும் நடைமுறைப்படுத்த படுகின்றது எனக் …
-
- 3 replies
- 434 views
-
-
மிருசுவில் கொலைச் சம்பவம் – மூன்று பேர் கைது by : Jeyachandran Vithushan யாழ். தென்மராட்சி மிருசுவில் மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் மைத்துனர்கள் மூவர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் என்ற 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் சகோதரர்கள் மூவரில் இருவர் படுகாயமடைந்த …
-
- 0 replies
- 527 views
-
-
In இலங்கை May 4, 2020 5:31 am GMT 0 Comments 1052 by : Jeyachandran Vithushan நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டாமல் அரசாங்கம் தன்னிச்சையாக தொடர்ந்தும் முடிவெடுத்தால் இலங்கை சர்வாதிகாரம் கொண்ட நாடாக பார்க்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்றம் மறுசீரமைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுடைய ஆதரவோடு சில விடயங்களை சட்ட பூர்வமாக்கினால் மட்டுமே சர்வதேச சமூகத்தினரிடையே ஒரு சாதகமான பிம்பத்தை உருவாக்க முடியும் என கூறினார். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கம் ஒரு சர்வாதிகாரமாக நிதியை செலவழிக்கிறது. இத்தகைய நடவடிக்கை நாட்டிற்கு சாதகமற்…
-
- 1 reply
- 471 views
-
-
ஊரடங்கு சட்டம் பொருந்தக்கூடிய சட்டவிதிகளின்படி விதிக்கப்படவேண்டும் -மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சுமந்திரன் கடிதம் சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “ஊரடங்கு உத்தரவினை சரிசெய்யுமாறும் ஒழுங்குபடுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஆலோசனை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் ஊரடங்கு உத்தரவினை சரிசெய்யுமாறும் ஒழுங்குபடுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஆலோசனை வழங…
-
- 1 reply
- 346 views
-
-
லண்டனிலிருந்து இன்று கொழும்பு திரும்பும் 260 பேர்: ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர் Bharati May 4, 2020 லண்டனிலிருந்து இன்று கொழும்பு திரும்பும் 260 பேர்: ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர்2020-05-04T06:40:58+00:00உள்ளூர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹோட்டல்களில் தனிமைப் படுத்தப்படவுள்ளனர் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக லண்டனிலிருந்து இன்று நாடு திரும்பும் 260 பேர் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளார்கள். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தப்படுபவர்கள் ஹோட்டல்களிற்கு பணம் செலுத்த வேண்டும…
-
- 8 replies
- 1.1k views
-
-
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி, மருதமுனை, சாய்ந்தமருது பகுதியில் இளைஞர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீதிகளுக்கு தலைக்கவசம் இன்றி உந்துருளிகளில் பயணித்தல், குழுவாக முகக்கவசம் இன்றி உரையாடுதல் போன்ற செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக கரையோர பிரதேசங்களான மருதமுனை, கல்முனை கடற்கரைப் பகுதியை அண்டிய பகுதியில் நோன்பு காலங்களில் முக்கிய வீதிகளில் இந்நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது. இதனைத் தடுப்பதற்கு பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இதேவேளை…
-
- 2 replies
- 704 views
-
-
வட மாகாணம் தொடர்ச்சியாக கல்வியில் வீழ்ச்சியடைவதற்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடே காரணம்- தவராசா (தி.சோபிதன்) வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ச்சியாக வீழ்ச்சியான நிலையில் காணப்படுவதற்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடே காரணம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெளியாகியுள்ள சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது வடக்கு மாகாணசபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடு. இதனை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது கல்வி கொள்கையில் மாற்ற…
-
- 5 replies
- 826 views
-
-
சட்டத்தரனி சுமந்திரனுக்கு சிரேஸ்ட்ட ஊடகவிலாளரும், பிரபல அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் அவர்களே- நீங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறைய ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயமானதாகக் காண்பித்து. அதனைச் சர்வதேசஅரங்கில் ஒப்புவிக்கும் வேலைத் திட்டத்தை நன்றாகவே செய்து வருகின்றீர்கள் என்பது புரிகிறது. அதாவது, தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைகளை இலங்கையிலேயேநடத்த வேண்டும் என்பதுஇலங்கை- இந்திய அரசுகளின்குறிப்பாக இந்தியஅரசின் விருப்பம். கலப்பு நீதிமன்ற விசாரணை என்பதைக் கூட இலங்கை அரசு, குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே விரும்பவில்லை. இந்த நிலையில், 2015 ஆம் ஆ…
-
- 7 replies
- 718 views
-
-
கொரோனா வைரஸ் பரவுவதற்கு குறிப்பிட்ட ஒரு சமூகமே காரணம் என்ற கருத்தை உருவாக்குவதற்கு சிங்கள தேசிய ஊடகங்கள் முயற்சி- சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அறிக்கை Rajeevan Arasaratnam May 3, 2020 கொரோனா வைரஸ் பரவுவதற்கு குறிப்பிட்ட ஒரு சமூகமே காரணம் என்ற கருத்தை உருவாக்குவதற்கு சிங்கள தேசிய ஊடகங்கள் முயற்சி- சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அறிக்கை2020-05-03T10:11:51+00:00உள்ளூர் சிங்கள தேசிய ஊடகங்களும்,சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெருமளவானவர்களும்,குறிப்பிட்ட சமூகமொன்றே நோய் தொற்றிற்கு காரணம் என்ற சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான கருத்தை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. தென்னாசியாவில் ப…
-
- 3 replies
- 446 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் புத்தளம் - கற்பிட்டி, 4 ஆம் குறுக்குத் தெரு பகுதிக்கு சென்ற சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு குறித்த நபரை அவரது வதிவிடத்தில் வைத்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனார…
-
- 3 replies
- 567 views
-
-
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலமைத்துவத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாக கொவிட் 19 வைரசை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு என்று அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார். சுகாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த நோய் தொற்றை தடுப்பதில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் தனிப்பட்டவர்களின் பிரத்தியோக தகவல்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாது. இதற்கான உறுதியை எம்மால் தெரிவிக்க முடியும். எமது பணி நோயை இல்லாதொழிப்பதற்கு சுகாதார பிரிவின் நோயை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகும் என்று அவர் தெரிவித்தார். அரசாங்க தொலைக்காட்சி ஒன்றிற்கு…
-
- 9 replies
- 866 views
-
-
(இரா.செல்வராஜா) குற்றக்கோவை தண்டனைச்சட்டத்திற்குட்பட்ட 33 குற்றச் செயல்களுக்கு புறம்பான குற்றச் செயல்கள் தொடர்பில் தண்டனை அனுபதித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச் செய்வதற்கு சிறைச்சாலைத்திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை 7 ஆம் திகதி வெசக் போயா தினத்தன்று இந்த கைதிகளை விடுதலை செய்ய இருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் எம்.ஜி.டப்லியூ.தென்னகோன் தெரிவித்தார். இதைத்தவிர பிணை செலுத்த முடியாமல் இருக்கும் சிறு குற்றங்களை புரிந்த கைதிகளையும் விடதலை செய்ய இருப்பதுடன்இ இன்னும் சில கைதிகளுக்கு மன்னிப்புக்காலம் வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/81293
-
- 0 replies
- 459 views
-
-
கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவல், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, பளைப் பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு நாட்களாகக் காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்றுவந்த முள்ளியடி, பளையைச்சேர்ந்த ஆர்.அனோச் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயிருந்தார். இதுகுறித்து, பளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 28ஆம் திகதி மாணவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த மாணவன், பளை தர்ம…
-
- 6 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த இருவரினது சடலங்களும் தகனம் ! முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் நேற்று முன்தினம் (01.05.2020) உயிரிழந்த கொழும்பு குணசிங்கபுரவை சேர்ந்த இரண்டு முதியவர்களினதும் சடலம் நேற்று (02.05.2020) இரவு முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முள்ளியவளை குமாரபுரம் பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யபட்ட முதியவர் ஒருவரது சடலம் தகனம் செய்வதற்கு மேற்கொள்ள பட்ட முயற்சி பிரதேச இளைஞர்களின் எதிர்பால் கைவிடப்பட்டு, நீண்ட இடைவெளியின் பின்னர் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் தகனம் செய்ய முள்ளியவளை பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. இந்த நில…
-
- 3 replies
- 622 views
-
-
யாழில் வீடு புகுந்து மூர்க்கத்தனமாக தாக்கிய பொலிஸார்; மூவர் படுகாயம்! யாழ்ப்பாணம் – குடத்தனை, மாளிகை திடல் கிராமத்தில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் நுழைந்து பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பெண் உட்பட மூவர் படுகாயம். கள்ள மணல் அகழ்வு தொடர்பில் நேற்று பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.facebook.com/watch/uthayan.print/ யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை, மாளிகைதிடல் கிராமத்தில் இன்று (01) காலை வீடு ஒன்றுக்குள் நுழைந்த பொலிஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 1990 காவு வண்டி ஊடாக அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் சிறிய காயங்களு…
-
- 8 replies
- 870 views
-
-
In இலங்கை May 3, 2020 6:27 am GMT 0 Comments 1030 by : Litharsan உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான ஊடகப் பணியாளர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. உதயன் பத்திரிக்கை நிறுவனத்தில் கொல்லப்பட்ட ஊடகப் பணியாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை) மாலை 6.10 மணிக்கு நடைபெற்றது. அதன்போது அவர்களது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தினுள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்…
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கை பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு குருகுலம் என்னும் தொலைகாட்சி சேவை கல்வி அமைச்சினால் உருவாக்கப்படவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இதன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://newuthayan.com/இலங்கையில்-புதிய-தொலைக்க/
-
- 7 replies
- 2.5k views
-
-
பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் சில பொருட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் பருப்புக்கான விலை 65 ரூபாய் எனவும், 425 கிராம் ரின் மீனின் விலை 100 ரூபாய் எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது. மார்ச் 18 முதல் நடைமுறையில் வருவதாக அறிவிக்கப்பட்ட குறித்த அறிவிப்பு தற்போது நீக்கப்படுவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பரபப-ரன-மன-அதகபடச-சலலற-வல-ந…
-
- 2 replies
- 562 views
-
-
மட்டுவில் “ஆறு கிராமங்களின்” தாகம் தீர்க்க விசேட திட்டம்! மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபையின் எல்லை, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக நிருவாக பகுதிக்கு உட்பட்ட திகிலிவெட்டை, அக்குறானை, முறுத்தானை, மிணுமிணுத்தவெளி, பூலாக்காடு மற்றும் பொண்டுகள்சேனை உள்ளிட்ட கிராமங்கள் வரட்சியான காலங்களில் மட்டுமன்றி, வருடம் முழுவதும் குடிநீர் பிரச்சினையினை அதிகளவில் எதிர்நோக்குகின்ற கிராமங்களாகும். இப்பிரச்சினையினை கடும் சவால்களுக்கு மத்தியில் இயன்றளவேனும் நிவர்த்தி செய்யும் நோக்கில் வாழைச்சேனை பிரதேச சபையால் நாள்தோறும் உழவு இயந்திர இழுவை நீர் பவுசர் மூலம் குடிநீர் விநியோக்கிக்கப்பட்டு வரும் நிலையில், திகிலிவெட்டை, முறுத்தானை, அக்குறானை, மிணுமிணுத்தவெளி ஆகிய கிராமங்களில் சமூக …
-
- 0 replies
- 392 views
-
-
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதான குற்றச்சாட்டின் பேரில், தன்னைக் கைது செய்வதற்கான முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனால், உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் காரணங்காட்டி, தன்னைக் கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், அவர் அந்த மனுவில் கோரியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கதத-தடககமற-ரஷட-மனததககல/175-249489
-
- 14 replies
- 1.3k views
-
-
தராகி சிவராம் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! 2005ம் ஆண்டு இதேநாள் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் எனும் தர்மரத்தினம் சிவராம் (மாமனதர் தராகி) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (29) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா – ஏ9 வீதிக்கு அருகே போராட்டப் பந்தல் அமைத்து சுழற்சி முறையில் 1,167 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த நினைவேந்தலை அனுஷ்டித்தனர். இதன்போது மாமனிதர் தராகியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do…
-
- 14 replies
- 1.5k views
-
-
நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் நிலமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜுன் 20ஆம் திகதி நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. என்ற போதும் மார்ச் மாதம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையரொருவர் அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. என்ற போதும் தற்போது வரையில் இலங்கைய…
-
- 18 replies
- 1.9k views
-
-
யாழில் காய்ச்சலால் அவதியுற்ற இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் வண்டிக்கு அழைத்தபோது பொறுப்புணர்வற்ற முறையில் பதில் வழங்கப்பட்டுள்ளதுடன் அம்புலன்ஸ் வண்டி வழங்கவும் மறுப்பு தெரிவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரிற்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. பொன்னாலை சமூக செயற்பாட்டாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ந.பொன்ராசாவால் எழுதப்பட்ட அந்த பகிரங்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொன்னாலையில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு கடந்த நான்கு நாள்களாக காய்ச்சல். நேற்று முன்தினம் தொல்புரம் மத்திய மருந்தகத்தில் சிகிச்சை பெற்றார். நேற்று பிற்பகல் மாவடியில் உள்ள தனியார் வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இன்று (02) சனிக்கிழமை அவருக…
-
- 0 replies
- 479 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சையின் பின்னர் குணமடைந்த ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே, இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 67 வயதுடைய குறித்த நபருக்கு, கடந்த மார்ச் 17 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சையில் குணமடைந்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அவர் வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்து 14 தினங்கள் தனிமைப்படுத்தலில் இருந்த அவர், கடந்த 30 திகதி நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட திடீர…
-
- 1 reply
- 443 views
-
-
டெங்குவுடன் ஒப்பிடும் போது கொரோனாவில் ஒன்றுமில்லை! – கண்டுபிடித்த பந்துல டெங்குவால் வருடத்துக்கு 500 – 600 பேர் பலியான போதும் தேர்தல்கள் நடைபெற்றன என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்துடன் டெங்கு இறப்புக்களுடன் ஒப்பிடும் போது கொரோனாவில் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். https://newuthayan.com/டெங்குவுடன்-ஒப்பிடும்-ப/ 🤣🤣
-
- 8 replies
- 763 views
-