Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை – அரசியற் தீர்வு குறித்த கேள்விகளுக்கான முன்நிபந்தனைகள் சில ‐ கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் 20 July 10 01:35 am (BST) தென்னாசியப் பிராந்தியத்தில் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அகதிகமதிகம் உள்நாட்டு நெருக்கடிகளால் சிதிலமடைந்த நாடுகள் இலங்கையும் பாகிஸ்தானுமே. (காரணங்கள், தன்மைகள் எதுவாயினும் இந்த இரண்டு நாடுகளிலும் இந்தியப் படைகள் போர் புரிந்திருக்கின்றன என்ற விசித்திரமான ஒற்றுமையும் உண்டு. இரண்டு நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் வேறு வேறு என்றபோதும் அடிப்படையில் சில ஒத்த பண்புகளும் இந்த நாடுகளுக்கிடையில் இருக்கின்றன. அதாவது, ஆட்சியதிகாரத்தில் படைத்துறையின் செல்வாக்கு பாகிஸ்தானில் ஏற்கனவே வந்து விட்டது. இலங்கையில் இப்போது …

    • 1 reply
    • 801 views
  2. நாட்டை கட்டியெழுப்ப ரணிலிடம் எந்த திட்டமும் இல்லை-சரத் பொன்சேகா. கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா.” அரசாங்கம் மக்களை நிரந்தரமாக ஏமாற்றி வருகின்றது அத்துடன் பிரதமரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியேற்ற ஊழல்வாதிகளை தண்டிக்க விருப்பம் இல்லையா?” என கேள்வியெழுப்பியுள்ளார் நான் பொலிஸ் அமைச்சரானால் முதலில் இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைத்திருப்பேன். ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்பாகவே நான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது எனக்கு எந்த நிபந்தனையும் இருக்கவில்லை. செய்ய வேண்டிய திட்டம் பற்றி பேசினேன்…

  3. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி! - ஜனாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு. [saturday, 2014-04-26 09:37:08] குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று தொழிற்சங்கத் தலைவர்களுடன் நடத்திய மேதினம் தொடர்பான சந்திப்பிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர்- வெற்றி கொண்ட சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் காட்டிக் கொடுக்கும் இந்த சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.மே தினத்தில் உழைக்கும் மக்களின் சக்தியை உலகுக்கு காண்பிப்பதற்கு ஒன்று…

  4. https://www.vikatan.com/news/album/general/8994-272875-quotes-by-prabhakaran-on-his-birthday.album

    • 1 reply
    • 1.4k views
  5. புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த சிப்பாய்க்கு செருப்படி! மே 9, 2014 விடுதலைப் புலிகளின் தாக்குதலொன்றில் படுகாயமடைந்து சேவையில் இருந்து விலகிய சிறீலங்கா இராணுவச் சிப்பாய்க்கு கடந்த வாரம் செருப்படித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறீலங்காவின் மெல்சிறிபுர நகரில், பெண்ணொருவரின் உடம்பில் குறித்த சிப்பாய் உரசியபோது, கடும் சினமடைந்த அப்பெண் தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி சரமாரியாக அடித்ததில் அந்நபரின் தலையில் 11 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்து, மட்டக்களப்பு பிரதேசத்தில் இனப்படுகொலை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இவ…

  6. தமிழ்த் தேசியப் பேரவை – த.தே.பே TamilNational Council –T.N.C. உதயமாகியது…. அகில இலங்கைதமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொதுஅமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முன்னுரை தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது. …

  7. தமிழர்களின் எதிர்ப்பு நிராகரிப்பு: அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! சிறிலங்காவில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால சட்டம் நீட்டிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்ட நீட்டிப்பைத் தடுக்கும் வகையில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டாரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர். இருப்பினும் எதுவித வாக்கெடுப்பும் நடத்தாமலேயே அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அவசரகால சட்ட நீட்டிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "வடக்கு - கிழக்குப் பிர…

  8. கே.பியின் பெரும்தொகைப் பணம் எங்கே? அதனை நாட்டுக்குள் கொண்டு வாருங்கள்! ஐ.தே.கட்சி எம்.பி. அரசுக்குஆலோசனை திகதி:20.08.2010 சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு முன்னர், கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமுள்ள நிதியை இலங்கைக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா அரசை வலியுறுத்தினார். ஐ.தே.கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. ஹர்ஷா டி சில்வா தொடர்ந்து அங்கு கூறியவை வருமாறு: கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் ஏராளமான வங்கிக் கணக்குகளும், பல மில்லியன் டொலர்களும், பல கப்பல்களும் இருக்கின்றன என அரசு தொடர்ந்து தெரிவித்து வருகின…

  9. யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் டீசல் விநியோகிக்கப்பட்டதால் குழப்பம்! யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள் , லொறி என்பவற்றுக்கு டீசல் விநியோகித்துக்கொண்டிருந்தவேளை சிலர் அங்கு கூடி நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முரண்பட்டமையால் , பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். யாழ் நகரில் நள்ளிரவில் டீசல் விநியோகிக்கப்பட்டதால் குழப்பம்! | உதயன் | UTHAYAN (newuthayan.com)

  10. ஐக்கிய தேசியக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 94 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 151 வாக்குகளும் பெறப்பட்டன. பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்தன. எதிராக அரசாங்கத்தில் கூட்டு சேர்ந்துள்ள தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய தவிர்ந்த ஏனைய கட்சிகள் வாக்களித்தன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=313313032021784996#sthash.Uqvp2gHl.dpuf

  11. போதைப்­பொ­ருள் மைய­மாக மாறி­விட்­டது இலங்கை! போதைப்­பொ­ருள் மைய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ள­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குற்­றஞ் சுமத்­தி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, அன்று தேயிலை கைத்­தொ­ழில் துறை­யில் உலகப் பிர­சித்தி பெற்­றி­ருந்த இலங்கை இன்று போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்­தின் ஊடாக உலகப் பிர­சித்தி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. தற்­பொ­ழுது இலங்­கை­யில் போதைப்­பொ­ருள் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யும் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ளது. சதொச நிறு­வ­னத்துக்குச் சொந்­த­மான லொறி­க­ளி­லும் போதை…

  12. அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டியூப் கணவாய் மீன்களின் சீசன் தொடங்கியதால் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா பகுதிக்கு சென்ற நிலையில் ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் டியூப் கணவாய் மீன்கள் சிக்கியது. சைக்கிள் டியூப் போன்று இருப்பதால் இதை டியூப் கணவாய் என்று மீனவர்கள் அழைக்கின்றனர். இது கனவாய் வகையில் ஒரு வகைப்படும். ஒரு அடி நீளம் வரையில் இருக்கும். இதற்கு ஊசி கணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்…

  13. 12.09.1999 அன்று யாழ். நல்லூர் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் செந்தமிழ் (செந்தமிழ்ச்செல்வன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 12.09.2001 அன்று மட்டக்களப்பு அரணகல்வில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்

  14. நரேந்திர மோடியின் வெளியுறவு ஆலோசகராக ஜெய்சங்கர்? - இலங்கை விவகாரத்தில் பரிச்சயமானவர். [sunday, 2014-06-01 07:49:38] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு என்று தனியே பார்த்தசாரதி என்ற அதிகாரி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதைப் போல பிரதமர் நரேந்திர மோடியும் தமது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கை விவகாரங்களுக்கு என நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இ…

  15. ஜெனிவாக் கூட்டத் தொடரில் மீளவும் இலங்கை விவகாரம் news ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரிலும், இலங்கை நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 26ஆவது கூட்டத்தொடர் நடை பெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் ஆரம்ப உரை நிகழ்த் தும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது பணியகத்தின் செயற்பாடுகளின் நிலை குறித்து விளக்கமளிக்கவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நவநீதம்பிள்ளை, சமர்ப்பிக்கும் கடைசி அறிக்கையாக இது இருக்கும். நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற…

  16. பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழு இன்று வடக்கிற்கு விஜயம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவினர், இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்தித்து, வடக்கின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறியவுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கவனஞ்செலுத்தப்படவுள்ளது.இதேவெளை, நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவி…

  17. வடமாகாண சபையின் பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பு! வடமாகாண சபையின் பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைப்பு! வடக்கு மாகாண திணைக்­க­ளங்­க­ளில் பணி­யாற்­றும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளின் போக்­கு­ வ­ரத்து சேவைக்­காக மாகாண சபை­யின் பேருந்­து­ சேவைகள் தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் 115ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா…

  18. திருகோணமலையில் இன்று வெள்ளிக்கிழமை சிங்களக் காடையர்கள் மீண்டும் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தமிழர் வீடுகள் தீக்கிரையாகின. இருவரை படுகொலை செய்துள்ளனர். திருகோணமலை தெகிவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். திருகோணமலை சிங்களக் குடியேற்றப் பகுதியான தெகிவத்தவில் காலை 8.40 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தெகிவத்த-கிளிவெட்டி வீதியில் தென்னந்தோப்பு வேலியில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபடும் படையினரை இலக்கு வைத்து கிளைமோர் கண்ணிவெடி பொருத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலையடுத்து சிங்களக் காடையர்…

    • 0 replies
    • 938 views
  19. களுத்துறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ். பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா மற்றும் புதிய ஜனநாயக மாக்சிஸ லெனினிசக் கட்சி, முஸ்லிம் அமைப்புக்கள்…

  20. சர்வகட்சி அரசாங்கம்... எந்தளவு காலத்துக்கு, நீடிக்கும்? – எதிர்க்கட்சி கேள்வி. அரசாங்கம் அமைக்கும் சர்வகட்சி எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தொடர்பாக ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை அது வெளிப்படுத்தப்படாமல் இருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக பல கட்சிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ள போதும் கால வரையறை தொடர்பில் எவரிடமும் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டினார். எந்தவொரு கட்சியாலும் அரசாங்கத்துக்காக குறுகிய காலத்துக்கு மட்டுமே ஒத்துழைப்பை வழங்க முடியும் என்றும் லக்…

  21. சம்பூரில் தமிழர்கள் மீது குண்டுவீச்சு நடத்தவில்லை: சிறிலங்கா அரசாங்கம் திருகோணமலை சம்பூர் பகுதியில் தமிழர்கள் மீது குண்டு வீச்சு நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இதற்குப் பதிலளித்து சிறிலங்கா அரசாங்கம் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றில் பேசியதாவது: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது அறிக்கை எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் மீது அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்ட…

  22. செஞ்­சோ­லை படு­கொ­லை­யின்... 16 ஆம் ஆண்டு, நினைவு தினம் இன்று! 2006 ஆம் ஆண்டு முல்­லைத்­தீவு செஞ்­சோலை சிறு­வர் இல்­லத்­தின் மீதான விமானப்படை தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 16ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ஆட்டிகிள் படுகொலை செய்யப்பட்ட 61 மாண­வி­க­ளின் நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபியில் இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி தூவி அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1294668

  23. Oct 18, 2010 / பகுதி: செய்தி / மன்னாரில் சட்ட விரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரிக்கை மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தில் தென்பகுதியில் இருந்து வருகைதந்துள்ள சிங்களவர்களினால் சட்ட விரோதமான முறையில் மணல் மண் அகல்வு இடம் பெற்று வருவதாகவும் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என் அக்கிராம மக்கள விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தில் உள்ள குடும்பம் ஒன்று தங்கலுடைய காணியை சிங்களவருக்கு விற்றுள்ளனர். காணியை இரகசியமாக வாங்கி குறித்த காணியில் சட்ட விறோதமான முறையில் மணல் மண்னை சேமீத்து தென் பகுதிக்கு கொண்டு செல்வதற்காண நடவடடிக்கைகள் இடம் பெற்று வந்த நிலையில் தெரியவந்தள்ளது. இந்த நிலையில் கிராம மக்கள் குறித்த கா…

  24. பொது பல சேனாவுக்கும் கோட்டாவுக்கும் தொடர்பில்லை: இராணுவம் வியாழக்கிழமை, 03 ஜூலை 2014 03:10 0 COMMENTS பொதுபல சேனாவிற்கும் (பி.பி.எஸ்), பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன மற்றும் மதத்தினை அடிப்படையாகக் கொண்ட பல அமைப்புகள் இருக்கின்றன. ஜனநாயக நாட்டில் ஏனையோருக்கு இடையூறு ஏற்படுத்தா…

    • 5 replies
    • 765 views
  25. தன்வினை தன்னைச் சுடும் கட்டம் இது இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டு இப்போது அனைத்துலக ரீதியாக முக்கிய பேசுபொருளாக மாறி யுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்களில் முதலில் முகிழ்த்த இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகள் பலவற் றுக்கும் பரவியது. அதன் முதலாவது விளைவு, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாகும். ஆனால் இலங்கை அரசு ஏதோ வகையில் பல தரப்புகளின் உதவியைப் பெற்று அந்த விடயம் விவாதத்துக்கு வராது தடுத்துவிட்டது. அதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு அத்துறையில் அந்தப் பணியில் கைதேர்ந்த நிபுண…

    • 3 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.