ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
புலிகள் கொல்லப்பட்டமைக்கு கெலஉறுமயவின் ஒரே ஒரு அமைச்சர் பாட்டாளி சம்பிக ரணவக்க கண்டனம் தெரிவித்துள்ளார்! பிற் குறிப்பு: தீவிர இனவாதியான இவர் நாலு கால் புலிகளை அப்பாவிகளாக இனம் கண்டு கரிசனை செலுத்தும் அதே வேளை இரண்டு கால் புலிகளையும் அவர்கள் சார்பான தமிழர்களையும் கடத்தி காணமற் போகச் செய்தல் என்பவற்றை வெளிப்படையாக ஆதரிப்பவராகவும் விளங்குகிறார்! புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி!
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த, அமெரிக்காவின் தீர்மானம் வழிகோலும் - மன்னிப்புச் சபை இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்ப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் வழிகோலும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. போர் முடிவுற்ற பின்னரும், இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைய வில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலயப் பணிப்பாளர் சாம் சர்ப்பாரி (Sam Zarifi) தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தவறான திசையில் பயணிப்பதாகச் சர்வதேச சமூகம் கருதுகின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான…
-
- 1 reply
- 1.1k views
-
-
சாவகச்சேரியில் பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் – கொலையா தற்கொலையா? August 16, 2019 யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் நேற்று (15.08.19) மீட்டுள்ளனர். சாவகச்சேரி – தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாரம் மற்றும் சேர்ட் ஆகியன கழற்றப்பட்ட நிலையில் உள்ளாடையுடன் சிறிய பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்ட நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் அல்ல என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேறிடத்தில் இர…
-
- 0 replies
- 349 views
-
-
திருமலைக்கு அண்மையாக மையங்கொண்டிருந்த தாழமுக்கம் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் கடும் மழையுடன் கூடிய காற்று வீசும் என்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 கிலோ மீற்றர் முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் இரு நாள்களும் மீனவர்களைக் கடலுக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது. http://malarum.com/article/tam/2015/11/15/12506/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF
-
- 4 replies
- 1.4k views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விடுவிக்கப்பட்டனர். வவுனியா பெரிய புளியாளங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர், மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர். கடந்த 2019 ஆண்டு தை மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் பீ அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதவான் ந…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
உண்மைக்குப் புறம்பாகப் பேசலாமா? -ஜெயராஜ்- * வன்னியை ஐந்து டிவிசன் படையணிகள் சுற்றிவளைத்து விட்டன. * இந்தியா ஒரு தடவை தலையிட்டு எமது முயற்சியைத் தடுத்தது. * தலைவர்களான ரணசிங்க பிரேமதாசவும், சந்திரிகா குமாரதுங்கவும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் அரசியல் அழுத்தங்களால் இம்முயற்சிகளைக் கைவிட்டுவிட்டனர். * கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம். * கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டு கடந்த காலத்தைப் போல் விட்டு விலகமாட்டோம். இவை யாவும் சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ள சில விடயங்களாகும். இதன் அடிப்படையில் பார்க்கையில், சிங்களவர்கள் அனைவரும், இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவைத் தம…
-
- 0 replies
- 1.9k views
-
-
அணுசக்தி பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான ஆவணமொன்றை இந்தியாவிடம் கையளித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல பிரதேசங்களில் அணு ஆலைகள் காணப்படுவதாகவும் இந்த அணு ஆலைகளின் மூலம் இலங்கையின் மன்னார் மற்றும் வடக்கு பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவதனை வரையறுக்கும் வகையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கூடன்குளம் அல்லது வேறு இந்திய அணு ஆலைகளில் விபத்து ஏற்படுமாயின் அதன் கதிர்கள் இலங்கையின் மக்கார் மற்றும் வடக்கு பகுதியை தாக்கக்கூடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கூடன்குளம் அணுமின் நிலையம் மன்னாருக்கு…
-
- 2 replies
- 485 views
-
-
எண்ணெய் கசிவால் தீப்பற்றி எரிந்த ரோலர் படகு கொழும்பு துறைமுகப் பகுதியில் சம்பவம் 2/26/2008 9:10:59 AM வீரகேசரி நாளேடு - கொழும்பு துறைமுகத்திலுள்ள டோலர் ரக படகொன்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் காரணமாக அப்படகின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் கொழும்பு துறைமுகத்தை அண்டிய பிரதேசம் முழுவதும் கரும் புகையினால் சூழ்ந்திருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. நேற்று முன்தினம் இப்படகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கசிவடையத் தொடங்கியது. இதனால், அது எரியத் தொடங்கியது. எனினும், அது துறைமுக அதிகாரிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றும் இப்படகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதுடன் பகல் 12 மணியளவில் அவ்வெண்ணெய் கசிவு அதிகரித்து ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கக்கூடிய சாத்தியம் இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க கூடிய சாத்தியம் அதிகரித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறிய நாடு ஒன்று ஐ.நா. தீர்மானத்தை கொச்சைப் படுத்தும் வகையில் செயற்படுவது அவ்வளவு நல்லதல்ல என்ற அடிப்படையிலும், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித் தமைக்காக, இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் நெருங்கிய தொடர்பை வலுப்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதையும் அடுத்து, இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெ…
-
- 7 replies
- 1.3k views
-
-
சிங்கள இனத்தவர் அரசாங்க அதிபர்: வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்திற்கு அளித்துவரும் நல்லெண்ண அடிப்படையிலான ஆதரவை கூட்டமைப்பின் தலைமைகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரியிருக்கின்றனர். புதன்கிழமை காலை வவுனியா சுவர்க்கா தங்ககத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அவர்கள், இது தொடர்பில் கூட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகி…
-
- 3 replies
- 876 views
-
-
23 NOV, 2024 | 07:32 PM மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வழமையான வெள்ள பாதிப்புகளை அதிகமாக அனுபவித்து வரும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சாந்திபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அப்பகுதி மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் எழுத்தூர் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
அரசமைப்பு விவகார ஆலோசகர் பதவியிலிருந்து ஜயம்பதி விக்கிரமரட்ண ராஜினாமா. 03.03.2008 / நிருபர் சங்கிலியன் அரசின் போக்குப் பிடிக்காததால் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் அரசு உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா அரசின் அரசமைப்பு விவகார ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரட்ண அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றிய ஜயம்பதி விக்கிரமரட்ண அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதில்லை என அரசு தீர்மானித்த பின்னர், தான் தொடர்ந்தும் அரசமைப்பு ஆலோசகர் பதவியில் இருப்பதில் பயனில்லை எனக் கருதுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜயம்பதி விக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
"அதிகாரம் இல்லாத அதிகாரப் பரவலாக்கம் பயன் தராது" இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எவ்விதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில், இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்தித்து உரையாடிய போதே கூட்டமைப்பினர் இதை வலியிறுத்தியுள்ளனர். வடகிழக்கு பகுதியில் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுவது, இராணுவத்தினர் பிரசன்னம், முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறாமல் உள்ளது ஆகியவை உட்பட பல விஷயங்கள் குறித்து இந்திய…
-
- 0 replies
- 451 views
-
-
மாணவி உயிரைப் பறித்த கடற்படை பேருந்து : வேலணையில் சம்பவம் வேலணை புளியங்கூடல் சரவனை சந்தி பகுதியில் கடற்படையினரின் பேருந்து ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியும், ஊர்காவற்றுறை நாராந்தனைப் பகுதியைச் சேர்ந்த உசாந்தினி உதயகுமார் வயது (15) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த மாணவி பாடசாலை செல்லும் வழியில் கடற்படைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மாணவியை மோதியது. இதில் குறித்த மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் சடலம் யாழ்…
-
- 3 replies
- 1.4k views
-
-
நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலங்கைக்கு கடந்த சில வாரங்களாக இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகள் திருமணத்தில் பங்கேற்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கொழும்பு சென்றிருந்தனர். பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம…
-
- 0 replies
- 405 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியில் தேசியப் பட்டியல் பிரச்சனை தொடர்கிறது! adminDecember 9, 2024 ஐக்கிய மக்கள் சக்தி என நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கியபடி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லையெனின், அந்தக் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியாக சுதந்திர மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் செயற்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த ஐந்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளில் ஒன்றிற்…
-
- 0 replies
- 209 views
-
-
மன்னாரில் 58வது படைப்பிரிவின் கவசவாகன அணியின் தளபதி பலி! மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா படைத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் லெப்.ணேல் கீர்த்தி ரணவக்க எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 58வது படைப்பிரிவின் கவச வாகன அணியின் பொறுப்பதிகாரியாக இருந்த இவர் மன்னார் முன்னரங்க நிலைகளைப் பார்வையிடச் சென்றபோது பொறிவெடியில் சிக்கி படுகாமடைந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிற்சைகள் பலனின்றி பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த படை அதிகாரி கவச வாகன அணிக்குப் பொறுப்பாக இருந்தபோது கப்டன் நிலையில் இருந்து மேஜராக நிலைக்குப் …
-
- 7 replies
- 3.1k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுவூட்டும் வகையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்குரிய நியமன அவை உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 13ம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பட்ட தகமைகளும் நல்ல அனுபவமும் படைத்தவர்கள். இவர்கள் தமிழர்கள் அனுபவித்து வரும் மனித உரிமைப் பிரச்சனைகள் பற்றி நன்கு அறிந்து, அவை தொடர்பான முன்னெடுப்பு களில் ஈடுபாடு கொண்டு தம் பங்களிப்பை வழங்கி வருபவர்களாவர். இந்திய நாட்டுக்குரிய நியமன உறுப்பினர்கள்: (1) பேராசிரியர் திருமதி சரஸ்வதி ராஜேந்திரன் – தமிழ் நாட்டின் ஓர் சிறந்த கல்விமான். பட்டப்படிப்ப…
-
- 1 reply
- 989 views
-
-
(இரா.செல்வராஜா) நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்கு புதிதாக மேலும் ஒரு மின் உற்பத்தி நிலையமொன்றை அமைத்து கொடுப்பதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையங்கள் அடிக்கடி செயலிழந்து வருவதால் மின்சாரம் வழங்குவதில் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலைமையை கருத்திற் கொண்டு நான்காவது மின் உற்பத்தி நிலையமொன்றை இலவசமாக அமைத்து கொடுப்பதற்கு சீன அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. குறித்த மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான பொறுப்பை சீன இயந்திர பொறியில் துறை கூட…
-
- 1 reply
- 421 views
-
-
16 DEC, 2024 | 06:35 AM வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து தொடர்ந்து வருகின்ற இரு தினங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அத்துடன் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
பொது மக்களின் கௌரவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் காவல்துறையினர் உரிய முறையில் கடமையாற்ற வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் முப்படையினர் மக்களுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணி வந்தனர். எனினும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பூரண பொறுப்பு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கும், மக்களுக்கும் இடையில் தெளிவான புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கடமைகளை உரிய முறையில் மேற்கொண்டால் மக்களின் நன்மதிப்பை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவா இதனைக் க…
-
- 0 replies
- 342 views
-
-
எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் adminDecember 24, 2024 யாழ் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளாா். தற்போது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவா் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும் , தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால்தான் எலிக்காய்ச்சல…
-
- 2 replies
- 323 views
-
-
கடிதம் அனுப்பி ஆறுமாதங்களாகியும் முதல்வரிடமிருந்து பதிலில்லை. பழ.நெடுமாறன். 25.03.2008 / நிருபர் எல்லாளன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் முதல்வருடன் பேச அனுமதி கோரி அனுப்பி வைத்த கடிதத்திற்கு 6 மாதங்களாகியும் பதிலில்லை என மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். நாகையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை அலட்சியம் செய்யும் போக்கை தமிழக காவல் துறை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு காரணம் பொலிஸார் சட்டம், ஒழுங்கை பராமரிக்காமல் வேறு வேலைகளி…
-
- 0 replies
- 708 views
-
-
2006 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில், அதாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் சிறிலங்காத் தமிழர்கள் நிலைப்பாட்டில் இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை தட்டிக் கேட்காது அமைதி காத்திருந்தார். இவ்வாறு இந்தியாவின் கல்கத்தாவை தளமாகக்கொண்ட The Telegraph ஆங்கில ஊடகத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் G.C. SHEKHAR எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஈழத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்…
-
- 0 replies
- 426 views
-
-
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு 01 Jan, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) “பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களை நாம் வேட்பாளா்களாகத் தெரிவு செய்வோம்” என்றும் தெரிவித்தாா். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளா்களை சந்தித்த போதே…
-
-
- 8 replies
- 507 views
-