ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
-செல்வநாயகம் ரவிசாந் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில், தற்போது கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்களை பலரும் திருநெல்வேலிக்குச் சென்று ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பூத்துக்-குலுங்கும்-கார்த்திகைப்-பூக்கள்/71-242099
-
- 1 reply
- 976 views
-
-
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் தலையில் வாள் வெட்டுக்காயங்களுடன் குற்றுயிராககிடந்தநிலையில் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார் .அஜித் (வயது 26) என்ற இளைஞரே வெட்டுக் காயங்களுடன் கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் நேற்று காலை (04) வீசப்பட்டுள்ளார்.வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் கிடப்பதைக் கண்ட பொது மக்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.அந்த தகவலின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் குற்றுயிராக கிடந்த அந்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து பின் உயிரிழந்துள்ளார். காலை 11.00 மணியளவில் முச்சக்கர…
-
- 3 replies
- 621 views
-
-
14 ஆயிரம் வாகனங்கள் இறக்குமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்! ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 14 ஆயிரம் வாகனங்கள் இறக்குமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் இவை இறக்குமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களிலிருந்து இவ்வாறு வாகனங்கள் இறக்குமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்த மாதமே அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/14-ஆயிரம்-வாகனங்கள்-இறக்கு/
-
- 0 replies
- 379 views
-
-
எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூரி சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். இந் நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தபப்டும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர இதன்கான அனுமதியை இன்று மாலை வழங்கினார். அதன்படி வாழச்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை தொடர்ந…
-
- 10 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த அருளர் எனப்படும் இ.அருள்பிரகாசம் இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் அருளர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அருள்பிரகாசம் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியான அருளர், 77ம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை கொழும்பில் தங்க வைத்து, லங்கா ராணி என்ற கப்பலில் வடக்கிற்கு தமிழ் இளைஞர்கள் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த பின்னணியில் லங்கா ராணி என்ற நாவலை எழுதியிருந்தார். அருளரின் குடும்பத்திற்கு சொந்தமான கன்னாட்டி பண்ணையில் தமிழீழ போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக…
-
- 19 replies
- 2k views
- 1 follower
-
-
புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணி சுவீகரிப்பு! புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன. 14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள உரிமையாளர்களின் விபரம்: குமாரவேலு பொன்னம்மா, சின்னத்தம்பி இராசேந்திரன், சுப்பிரமணியம் மகேஸ்வரி, அண்ணாமலை கங்காசபை, ஐயம்பிள்ளை பாக்கியம், வேலாயுதபிள்ளை செல்ல…
-
- 8 replies
- 1.2k views
-
-
கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… ஜஸ்மின்சூக்கா December 5, 2019 கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தற்காலிகமாக வாபஸ்- ஏன்? இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி என்ற அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ச தனக்குள்ள விடுபாட்டுரிமையை வலியுறுத்துவதை தடுப்பதற்காகவே இந்த தந்திரோபாய நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். கோத்தாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவரிற்கு எதிராக மீள வழக்கு தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களிற்கு உள்ள…
-
- 3 replies
- 740 views
-
-
எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள் நாட்டு பெண் ஊழியர் கடத்தப்பட்டு, சில மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளது. அதன்படி இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணைப் பிரிவினர், முன்னாள் அமைச்சரின் ஊடக சந்திப்பின் காணொளிகளை ஆராய தீர்மனித்துள்ளனர். அதன்படி விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனைசிங்க, இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடையீட்டு மனுவொன்றூடாக…
-
- 0 replies
- 458 views
-
-
“தமிழ் அரசியல் கைதிகள் ஏழு பேர் சத்தமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்”, என்றொரு செய்தி இணைய ஊடகங்களில் வெளியாகியது. இந்தச் செய்தி வெளியானமை அரசியல் கைதிகளின் – அவர்களின் உறவுகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. அதிமுக்கியமாக சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளும் – அவர்களின் உறவுகளும் மேலும் அச்சத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது “அரசியல் கைதிகளை விடுவிப்பேன்”, என உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேணவா தமிழ் மக்களிடம் இருந்தது. இப்போது அது சாத்தியமாகி உள்ளதாகத் தெரிகிறது. 7 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கசிந…
-
- 3 replies
- 806 views
-
-
இலங்கை இறைமையுள்ள நாடு என்பதனை இந்தியாவும் சீனாவும் மதிக்கவேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டரில் அவர் இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார். சர்வதேச வல்லரசுகளான இந்தியாவையும் சீனாவையும் எங்கள் மீது நம்பிக்கைவைத்து எங்கள் எதிர்காலம் மீது முதலீடு செய்யுமாறு வேண்டுகோள்விடுக்கின்றேன், என டுவிட்டரில் பதிவு செய்துள்ள கோத்தாபய ராஜபக்ச இறைமையுள்ள நாடு என்ற எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஒரிரு நாட்களில் இலங்கை ஜனாதிபதி தனது இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/70481
-
- 3 replies
- 710 views
-
-
இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கையிலிருந்து சுவிஸிற்கு கொண்டு செல்வதற்கு சுவிட்சர்லாந்து தூதரகம் அனுமதி கோரியதாகவும் அதனை மறுத்துவிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட பெண் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பெண்ணை மருத்துவசிகிச்சைக்காக அவரது குடும்பத்தினருடன் இலங்கையிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கான அனுமதி கோரப்பட்டது,என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தூதரக பணியாளரை கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் விமானத…
-
- 4 replies
- 562 views
-
-
இலங்கையர்களுக்கு வீசா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியது சுவிஸ் தூதரகம் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதற்காக இலங்கையர்களுக்கு வீசா வழங்குவதை சுவீஸ் தூதரகம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்தில கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. http://www.dailyceylon.com/193357/
-
- 1 reply
- 806 views
-
-
சஹ்ரானுடன் தொடர்பு – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 64 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதவான் ஏ.சி.ரிஸ்வான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். நுவரெலியாவில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைமையகத்தில் ஆயுத பயிற்சி எடுத்ததாக குறித்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேகநபர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது http://www.…
-
- 0 replies
- 350 views
-
-
19 மாவட்டங்களில் 9,175 குடும்பங்களைச் சேர்ந்த 30,838 பேர் Published by J Anojan on 2019-12-05 15:31:11 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக கடந்த 02 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் வரையான காலப் பகுதியில் உண்டான அனர்த்தங்களினால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 9,175 குடும்பங்களைச் சேர்ந்த 30,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்தும், ஒருவர் காணாமல்போயும் உள்ளனர். அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்குண்டு 11 வீடுகள் முழுமையளவிலும், 358 வீடுகள் காணாமல் போயும் உள்ளனர். இதேவேளை 663 குடும்பங்களைச் சேர்ந்த 2,081 …
-
- 0 replies
- 265 views
-
-
இராணுவ ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன: விந்தன் Published by Loga Dharshini on 2019-12-05 15:09:42 (எம்.நியூட்டன்) வடக்கு, கிழக்கில் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை அரசாங்கம் எங்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் வைக்கும் நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெற்கில் இல்லாத இராணுவம் வடக்கு வீதிகள் முழுக்க குவிக்கப்பட்டுள்ளது. இது இராணுவ ஆட்சியையே எடுத்துக் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரட்ணம் விந்தன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 271 views
-
-
விஜித் விஜயமுனி எம்.பி நீக்கம் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஏ.எச்.எம்.பெளஸி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தது. அதேவேளை வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பிருந்தமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமைகளையும் எதிர்வரும் வாரத்தில் நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீல…
-
- 0 replies
- 386 views
-
-
சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷ வெற்றியடைவார் எனவே வெல்லும் அணியுடன் நாங்கள் பயணிப்போம் அதில் பயணிக்கின்ற போதுதான் நாங்கள் வாதிட்டு எமது உரிமை கேட்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே வாக்களிக்குமாறு மக்களிடம் கே…
-
- 37 replies
- 3.7k views
- 2 followers
-
-
வடக்கு ஆளுநர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவாகவும் மஹிந்தவுக்கு நெருக்கமானவராகவும் இருப்பார் என முன்பே தெரிவித்திருந்தோம். நேற்றைய தினம் அது உறுதியாகியுள்ளது. மூத்த பத்திரிகையாளரும், உதயன், சுடர்ஒளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு பெருமளவு உள்ளது.வடக்கு ஆளுநர் விடயம் தொடர்பில், நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை வித்தியாதரன் சந்தித்துப் பேசியிருக்கிறார் என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள். இந்தச் சந்திப்பு மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சந்திப்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் சந்தித்தாகவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
சூரிய கிரகணத்தை அவதானிக்க யாழில் சிறப்பு முகாம்கள்! வட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளது. சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்குநோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் சூரிய கிரகண அவதானிப்பு முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சூரிய-கிரகணத்தை…
-
- 0 replies
- 314 views
-
-
அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றார் சஜித்! முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச மீண்டும் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளார். இதற்கயை கொழும்பு 2 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சஜித்திற்கு நெருக்கமானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது எதிர்கட்சி தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இன்று முதல், நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதுடன், மக்களை சந்தித்து பேச சஜித் திட்டமிட்டுள்ளதாகவ…
-
- 0 replies
- 333 views
-
-
சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின்போது விடுதலைப்புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்கரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற…
-
- 26 replies
- 2.5k views
- 1 follower
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் விடுத்த ஒற்றுமை அழைப்பின் பின்னாலிருந்த திருகுதாளங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடக செயலாளர் க.அருந்தவபாலன். இதுவரை மக்கள் ஒற்றுமையாக தந்த ஆணையை பயன்படுத்தி, அரசின் சுகபோகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒற்றுமை பற்றி பேச என்ன அருகதையுள்ளது?, புதிய அரசியலமைப்பு வெற்றிபெறாவிட்டால் பதவியை துறப்பதாக சொன்ன சுமந்திரன் அதையெல்லாம் மறந்து விட்டாரா என கேள்வியெழுப்பியுள்ளார் அருந்தவபாலன். நேற்று (28) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒற்றுமையை கோரி நிற்கும் அவர்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். இது…
-
- 6 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மகமூத் குர்ஸ்சி (Mahmood Qureshi) 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக நேற்று (01) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருடன் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார். அத்துடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு கொண்டு வந்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கடதததடன-இலஙககக-வநதளள-பகஸதன-வளவவகர-அமச…
-
- 33 replies
- 3.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது.. 1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. எனினும் 2018 யூன் மாதம் சமஸ்டி நீதிமன்றம் விடுதலைப்புலிகளிற…
-
- 21 replies
- 1.4k views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி புதுக்குடியிருப்பில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றசெய்தியாளர் சந்திப்பில் மக்கள் மாற்று தலைமையை கோரவில்லை த.தே.கூட்டமைப்பின் தலைமையில் சிறு மாற்றம் செய்தால் சரி. என ஜனநாயக போராளிகள் கட்சி செயலாளர் கதிர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது எனவும் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். மாற்றுத் தலைமை என்று கூறுபவர்கள் கடந்த இருபத்தைந்து வருடமாக தமிழ் மக்களின் கொள்கைகளுக்கு எதிராக செயற்ப்பட்டவர்களே. முள்ளிவாய்க்காலிலும் நலன்புரி நிலையங்களிலும் மீள்குடியேறி துன்பப் படும் போதும்…
-
- 4 replies
- 626 views
-